< எண்ணாகமம் 29 >
1 “‘ஏழாம் மாதம் முதலாம்தேதி பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்நாளில் வழக்கமான வேலை எதையும் செய்யவேண்டாம். அது உங்களுக்கு எக்காளங்களை ஊதும் நாளாயிருக்கிறது.
“‘E odiechiengʼ mokwongo mar dwe mar abiriyo losuru chokruok mowal kendo kik uti tijeu mapile. En odiechiengʼ mugoyoe turumbete.
2 அன்றைய நாளில் ஒரு இளங்காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
Chiwuru misango miwangʼo pep mar nyarwath achiel, im achiel kod nyiimbe abiriyo moromo higa achiel, ma duto onge songa mondo obed kaka misango madungʼ tik mangʼwe ngʼar mamoro Jehova Nyasaye.
3 காளையுடன், பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவுடன் எண்ணெய்விட்டுப் பிசைந்து தானிய காணிக்கையைச் செலுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதம் செலுத்தவேண்டும்.
Rwath ka rwath nyaka chiw gi chiwo mar cham maromo kilo apar mar mogo mayom moru gi mo; im to chiw gi kilo abiriyo;
4 அவ்விதமே ஏழு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்திலொரு எப்பா அளவான சிறந்த மாவைச் செலுத்தவேண்டும்.
nyiimbe abiriyogo moro ka moro uchiw gi kilo adek.
5 உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்வதற்கு பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
Ewi mago meduru nywok achiel kaka chiwo mar pwodhruok e richo.
6 இவை குறிப்பிடப்பட்ட மாதாந்திர தகன காணிக்கையுடனும், அன்றாட தகன காணிக்கையுடனும், அவற்றிற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் இவைகளையும் செலுத்தப்பட வேண்டும். இவை மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படும் காணிக்கைகளாகும்.
Magi imedo ewi misango miwangʼo pep mar dwe ka dwe kod mago michiwo pile ka pile kaachiel gi chiwo mar cham kod misango miolo piny mana kaka owinjore. Gin chiwo miwangʼo pep ne Jehova Nyasaye, madungʼ tik mangʼwe ngʼar mamoro Jehova Nyasaye.
7 “‘இந்த ஏழாம் மாதத்தின் பத்தாம்நாள் பரிசுத்த சபையைக் கூட்டுங்கள். அந்நாளில் நீங்கள் உங்களை தாழ்மைப்படுத்தி உபவாசிக்கவேண்டும். எந்த வேலையையும் செய்யவேண்டாம்.
“‘E odiechiengʼ mar apar mar dwe mar abiriyo beduru gi chokruok mowal. Nyaka utwe chiemo kulamo kendo kik uti tich moro amora.
8 ஒரு இளம்காளையையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் தகன காணிக்கையாகச் செலுத்தவேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
Kelneuru Jehova Nyasaye chiwo madungʼ tik mangʼwe ngʼar mar misango miwangʼo pep mar nyarwath, im achiel kod nyiimbe abiriyo ma jo-higa achiel, mago maonge songa.
9 காளையுடன் பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து, அதைத் தானிய காணிக்கையாக ஆயத்தப்படுத்தவேண்டும். செம்மறியாட்டுக் கடாவுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதமே கொண்டுவர வேண்டும்.
Rwath ka rwath nyaka chiw gi chiwo mar cham maromo kilo apar mar mogo mayom moruw gi mo; im to uchiw gi kilo abiriyo;
10 ஏழு செம்மறியாட்டுக் குட்டிகளில் ஒவ்வொன்றுடனும் பத்திலொரு எப்பா அளவான மாவை அவ்விதமே ஆயத்தப்படுத்தவேண்டும்.
to nyiimbe abiriyo-ka, to uchiw gi kilo adek.
11 பாவநிவாரண காணிக்கையாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அதைப் பாவநிவிர்த்திக்கான பாவநிவாரண காணிக்கையுடனும், வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், அவைகளுக்குரிய பானகாணிக்கைகளோடும் இவைகளையும் செலுத்தவேண்டும்.
Ewi mago meduru nywok achiel kaka chiwo mar pwodhruok e richo, kumedo gi chiwo mar pwodhruok e richo kod misango miwangʼo pep mapile pile mikelo gi chiwo mar cham, kod misango miolo piny.
12 “‘ஏழாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியும் ஒரு பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்நாளில் வழக்கமான வேலை எதையுமே செய்யக்கூடாது. ஏழு நாட்கள் யெகோவாவுக்குப் பண்டிகையைக் கொண்டாடவேண்டும்.
“‘E odiechiengʼ mar apar gabich e dwe mar abiriyo, losuru chokruok mowal kendo kik uti tijeu mapile. Losneuru Jehova Nyasaye sawo kuom ndalo abiriyo.
13 அந்நாளில் யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையைக் கொண்டுவர வேண்டும். பதின்மூன்று இளங்காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் தகன காணிக்கையாகக் கொண்டுவர வேண்டும். இந்த மிருகங்கள் யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
Kelnauru Jehova Nyasaye chiwo madungʼ tik mangʼwe ngʼar mar misango miwangʼo pep mar rwedhi apar gadek, imbe ariyo kod nyiimbe apar gangʼwen mahikgi achiel, maonge songa.
14 அந்த பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றுடனும், பத்தில் மூன்று எப்பா அளவு சிறந்த மாவில் எண்ணெய்விட்டுப் பிசைந்து அதைத் தானிய காணிக்கையாகச் செலுத்தவேண்டும். அந்த இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களில் ஒவ்வொன்றுடனும் பத்தில் இரண்டு எப்பா அளவான மாவை அவ்விதமே ஆயத்தப்படுத்தவேண்டும்.
Kuom rwedhi apar gadekgo kelnauru chiwo mar cham maromo kilo apar mar mogo mayom moru gi mo; kuom imbe ariyogo, chiwuru kilo abiriyo ne moro ka moro;
15 பதினான்கு செம்மறியாட்டுக் குட்டிகள் ஒவ்வொன்றுடனும் பத்தில் ஒரு எப்பா அளவான மாவை அவ்விதமே செலுத்தவேண்டும்.
to kuom nyiimbe apar gangʼwen-ka, to uchiw kilo adek.
16 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் கூடுதலாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
Ewi mago meduru nywok achiel kaka misango mar pwodhruok e richo, kumedo ewi misango miwangʼo pep mapile kod chiwo mar cham gi misango miolo piny.
17 “‘இரண்டாம் நாளில் பன்னிரண்டு இளங்காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாயிருக்க வேண்டும்.
“‘E odiechiengʼ mar ariyo chiwuru nyirwedhi apar gariyo, imbe ariyo kod nyiimbe apar gangʼwen mahikgi achiel, ma duto onge songa.
18 காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
Chiwo mag cham kod misango miolo piny nyaka keti kaka chik dwaro maromre gi rwedhigo, imbego kod nyiimbego.
19 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், அவற்றின் பானகாணிக்கைகளுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Ewi mago meduru nywok achiel kaka chiwo mar pwodhruok e richo, kumedo ewi misango miwangʼo pep mapile kod chiwo mar cham, kaachiel gi misango miolo piny.
20 “‘மூன்றாம் நாளில் பதினோரு காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
“‘E odiechiengʼ mar adek chiwuru rwedhi apar gachiel, imbe ariyo kod nyiimbe apar gangʼwen ma jo-higa achiel, ma duto onge songa.
21 காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
Chiwo mag cham kod misango miolo piny nyaka keti kaka chik dwaro maromre gi rwedhigo, imbego kod nyiimbego.
22 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
Ewi mago meduru nywok achiel kaka chiwo mar pwodhruok e richo, kumedo ewi misango miwangʼo pep mapile kaachiel gi misango miolo piny.
23 “‘நான்காம் நாளில் பத்து காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் செலுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
“‘E odiechiengʼ mar angʼwen chiwuru rwedhi apar, imbe ariyo kod nyiimbe apar gangʼwen ma jo-higa achiel, ma duto onge songa.
24 காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
Chiwo mag cham kod misango miolo piny nyaka keti kaka chik dwaro maromre gi rwedhigo, imbego kod nyiimbego.
25 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
Ewi mago meduru nywok achiel kaka chiwo mar pwodhruok e richo, kumedo ewi misango miwangʼo pep mapile kaachiel gi chiwo mar cham kaachiel gi misango miolo piny.
26 “‘ஐந்தாம் நாளில் ஒன்பது காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை குறைபாடற்றவையாயிருக்க வேண்டும்.
“‘E odiechiengʼ mar abich chiwuru rwedhi ochiko, imbe ariyo kod nyiimbe apar gangʼwen ma jo-higa achiel, ma duto onge songa.
27 காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
Chiwo mag cham kod misango miolo piny nyaka keti kaka chik dwaro maromre gi rwedhigo, imbego kod nyiimbego.
28 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
Ewi mago meduru nywok achiel kaka chiwo mar pwodhruok e richo, kumedo ewi misango miwangʼo pep mapile kaachiel gi chiwo mar cham kaachiel gi misango miolo piny.
29 “‘ஆறாம்நாளில் எட்டுக் காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
“‘E odiechiengʼ mar auchiel chiwuru rwedhi aboro, imbe ariyo kod nyiimbe apar gangʼwen ma jo-higa achiel, ma duto onge songa.
30 காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
Chiwo mag cham kod misango miolo piny nyaka keti kaka chik dwaro maromre gi rwedhigo, imbego kod nyiimbego.
31 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
Ewi mago meduru nywok achiel kaka chiwo mar pwodhruok e richo, kumedo ewi misango miwangʼo pep mapile kaachiel gi chiwo mar cham kaachiel gi misango miolo piny.
32 “‘ஏழாம்நாளில் ஏழு காளைகளையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும், ஒரு வயதுடைய பதினான்கு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
“‘E odiechiengʼ mar abiriyo chiw rwedhi abiriyo, imbe ariyo kod nyiimbe apar gangʼwen ma jo-higa achiel, ma duto onge songa.
33 காளைகளுடனும், செம்மறியாடுகளுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
Chiwo mag cham kod misango miolo piny nyaka keti kaka chik dwaro maromre gi rwedhigo, imbego kod nyiimbego.
34 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
Ewi mago meduru nywok achiel kaka chiwo mar pwodhruok e richo, kumedo ewi misango miwangʼo pep mapile kaachiel gi chiwo mar cham kaachiel gi misango miolo piny.
35 “‘எட்டாம் நாளில் சபையைக் கூட்டுங்கள். அதில் வழக்கமான வேலை எதையும் செய்யவேண்டாம்.
“‘E odiechiengʼ mar aboro chok oganda kanyakla kendo kik uti tije mapile.
36 யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கையைக் கொண்டுவாருங்கள். ஒரு காளை, ஒரு செம்மறியாட்டுக் கடா, ஒரு வயதுடைய ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகள் ஆகியனவற்றை தகன காணிக்கையாக கொண்டுவாருங்கள். இவை யாவும் குறைபாடற்றவையாய் இருக்கவேண்டும்.
Kelneuru Jehova Nyasaye chiwo madungʼ tik mangʼwe ngʼar mar misango miwangʼo pep mar rwath achiel, im achiel kod nyiimbe abiriyo ma jo-higa achiel, ma duto onge songa.
37 காளையுடனும், செம்மறியாட்டுடனும், செம்மறியாட்டுக் குட்டிகளுடனும் குறிக்கப்பட்ட அவற்றின் எண்ணிக்கையின்படியே அவற்றிற்கான தானிய காணிக்கைகளையும், பானகாணிக்கைகளையும் ஆயத்தப்படுத்தவேண்டும்.
Chiwo mag cham kod misango miolo piny nyaka keti kaka chik dwaro maromre gi rwadhno, imno kod nyiimbego.
38 வழக்கமான தகன காணிக்கையுடனும், அதற்குரிய தானிய காணிக்கையுடனும், பானகாணிக்கையுடனும் அதிகமாக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரண காணிக்கையாகச் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
Ewi mago meduru nywok achiel kaka chiwo mar pwodhruok e richo, kumedo ewi misango miwangʼo pep mapile mar cham kaachiel gi misango miolo piny.
39 “‘அத்துடன், நீங்கள் நேர்ந்துகொண்டவைகளுடனும், உங்கள் சுயவிருப்பக் காணிக்கைகளோடும் உங்களுக்கு நியமிக்கப்பட்ட பண்டிகைகளில் இவைகளையும் யெகோவாவுக்கு ஆயத்தப்படுத்தவேண்டிய காணிக்கைகளாவன: தகன காணிக்கைகள், தானிய காணிக்கைகள், பானகாணிக்கைகள், சமாதான காணிக்கைகள் ஆகிய இவையே’” என்றார்.
“‘Kuom chiwo mar kwongʼruok kod chiwo mar hera, losneuru Jehova Nyasaye sewni moyier kaka: misango miwangʼo pep, chiwo mag cham, misango miolo piny kod chiwo mag lalruok.’”
40 யெகோவா தனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் மோசே இஸ்ரயேலருக்குச் சொன்னான்.
Musa nonyiso jo-Israel gigo duto mane Jehova Nyasaye ochike.