< நாகூம் 2 >

1 நினிவே பட்டணமே, உன்னைத் தாக்குகிறவன் உனக்கெதிரே முன்னேறி வருகிறான்; கோட்டையைக் காவல் செய், வீதியை கண்காணி, உன்னைத் திடப்படுத்திக்கொள், உன் முழுப் பெலத்தையும் ஒன்றுதிரட்டு.
ဖျက်ဆီး သောသူသည် သင့် ရှေ့ သို့ ရောက် လာ ပြီ။ သင်၏ရဲတိုက် ကို သတိ ပြုလော့။ လမ်း ကို စောင့် လော့။ ကိုယ်ခါး ကို ခိုင်ခံ့ စေလော့။ ကျပ်ကျပ် အား ယူ လော့။
2 அசீரியர் இஸ்ரயேலைப் பாழாக்கி, அவர்களின் திராட்சைத் தோட்டங்களை அழித்துப்போட்டாலும், யெகோவா இஸ்ரயேலின் மாட்சிமையை, யாக்கோபின் மாட்சிமையைப்போல் திரும்பவும் அமைத்துக்கொடுப்பார்.
အကြောင်း မူကား၊ ထာဝရဘုရား သည် ဣသရေလ ၏ဘုန်း ကဲ့သို့ ယာကုပ် ၏ဘုန်း ကို ပြုပြင် တော်မူ၏။ သုတ်သင် သောသူတို့ သည် ယာကုပ် အမျိုးကို သုတ်သင် ၍ ၊ သူ ၏အခက် အလက်တို့ကို ပယ်ရှင်း ကြပြီ။
3 நினிவேயைத் தாக்குகிற இராணுவவீரர்களின் கேடயங்கள் சிவப்பாய் இருக்கின்றன. போர்வீரர்கள் சிவப்பு உடை உடுத்தியிருக்கிறார்கள். தேர்கள் ஆயத்தப்படும் நாளிலே அவற்றிலுள்ள உலோகம் மினுங்குகிறது. தேவதாரு மரத்தினால் செய்யப்பட்ட ஈட்டிகள் ஆயத்தமாக்கப்படுகின்றன.
သူရဲ တို့သည် နီ သော ဒိုင်း လွှားကို ဆောင်၍၊ နီ သော အဝတ်ကိုဝတ်ကြ၏။ ခင်းကျင်း သောနေ့ ၌ ရထား တို့သည် သံ လက်နက်နှင့် တောက်ပ ၍ ၊ လှံတံ တို့သည် အလွန် လှုပ်ရှားကြ၏။
4 தேர்கள் நகரத்திற்கு வெளியே வீதிகளின் வழியாக சதுக்கங்களில் ஓடி, கடகடவென்றோடி, இங்கும் அங்கும் விரைகின்றன. அவை சுடர் விட்டெரியும் தீப்பந்தம்போல் காணப்படுகின்றன, அவை மின்னலைப்போல் பறக்கின்றன.
ရထား တို့သည် လမ်း ၌ ဟုန်းဟုန်း မြည်၍၊ လမ်းမ တို့၌ တောင်မြောက်ပြေး ကြ၏။ မီးရူး အဆင်း အရောင်ရှိ၍၊ လျှပ်စစ် ကဲ့သို့ ပြေး ကြ၏။
5 நினிவேயின் அரசன் தான் தெரிந்தெடுத்த வீரர்களை அழைப்பிக்கிறான். இருந்தும் அவர்கள் தங்கள் வழியில் இடறுகிறார்கள். அவர்கள் பட்டணத்து சுவரை நோக்கி விரைகிறார்கள். பாதுகாப்புக்கான கேடயம் அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
စစ်သူရဲ တို့ကို နှိုးဆော် တော်မူ၏။ သူ တို့သည် ချီ သွားစဉ် သူတပါးကို တွန်း ချကြ၏။ မြို့ရိုး သို့ အလျင်အမြန် သွား၍ ပြအိုး တို့ကို ပြင်ဆင် ကြ၏။
6 ஆனாலும் தாக்குகிறவன் உட்புகுந்துவிட்டான், ஆற்றின் மதகுகள் திறந்து விடப்படுகின்றன; அரண்மனை சரிந்து விழுகிறது.
မြစ် တံခါး ပွင့် လျှင် ၊ နန်းတော် သည် ကွယ်ပျောက် ၏။ နိနေဝေသတို့သမီးကို အဝတ် ချွတ်၍ ထုတ် ရ၏။
7 இது நினிவே என்று தீர்மானிக்கப்படுகிறது பட்டணத்திலுள்ளவர்களை நாடுகடத்திக் கொண்டுபோக உத்தரவிடப்பட்டது. பட்டணத்துப் பணிப்பெண்கள் தங்கள் மார்பில் அடித்து, புறாக்களைப்போல் புலம்புகிறார்கள்.
အပျို တော်တို့သည် ချိုး ကဲ့သို့ ကူ ၍ ရင်ပတ် ကို တီး လျက် လိုက် ရကြ၏။
8 நினிவே தண்ணீர் நிறைந்த குளம்போல் இருக்கிறது. அதன் தண்ணீரோ வடிந்து ஓடுகிறது. “நில்லுங்கள், நில்லுங்கள்!” என்று அவர்கள் அழுகிறார்கள். ஆனால் ஒருவனும் திரும்பி வருவதில்லை.
ရှေးကာလ မှစ၍ နိနေဝေ မြို့သည် ရေကန် ကဲ့သို့ ဖြစ်၏။ ယခုမူကား၊ ရေ တို့သည် စီး ထွက်ကြ၏။ ရပ် ကြ။ ရပ် ကြဟုဟစ်သော်လည်း အဘယ်သူ မျှပြန် ၍ မကြည့်။
9 வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், தங்கத்தையும் கொள்ளையிடுங்கள்; அதன் கருவூலங்களில் இருக்கும் திரவியங்களுக்குக் குறைவில்லை, என்று தாக்குகிறவர்கள் சொல்கிறார்கள்.
ငွေ ကို လုယူ ကြ။ ရွှေ ကိုလည်း လုယူ ကြ။ နှစ်သက် ဘွယ်သော တန်ဆာ များကို ရွှေတိုက် တော်ထဲက ထုတ်၍ မ ကုန် နိုင်။
10 நினிவே கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, வெறுமையாக்கப்பட்டுள்ளது! உள்ளங்கள் கலங்குகின்றன, முழங்கால்கள் தள்ளாடுகின்றன, உடல்கள் நடுங்குகின்றன, எல்லா முகங்களும் வெளிறிப்போய் இருக்கின்றன.
၁၀မြို့တော်သည် ဟင်းလင်း နေရ၏။ ဥစ္စာ မရှိ၊ လူဆိတ်ညံလျက် ဖြစ်၏။ မြို့သားအပေါင်းတို့သည် စိတ် ပျက် လျက် ၊ ဒူး ချင်းထိခိုက် လျက် ၊ အလွန်ခါး ကိုက် လျက် ၊ မျက်နှာ မည်း လျက် ရှိကြ၏။
11 அசீரியன் ஒரு சிங்கம்போல் இருந்தான். ஆனால் இப்பொழுதோ சிங்கங்களின் குகை எங்கே? அவை தமது குட்டிகளுக்கு இரை கொடுத்த இடம் எங்கே? சிங்கமும், அதன் பெண் சிங்கமும் குட்டிகளுடன் பயமின்றிபோன இடம் எங்கே?
၁၁ခြင်္သေ့ နေရာအရပ်၊ ခြင်္သေ့ ပျို စား ရာအရပ်၊ ခြင်္သေ့ ၊ ခြင်္သေ့ မ၊ ခြင်္သေ့ ကလေး တို့သည် အဘယ်သူမျှမ ကြောက် စေဘဲ၊ ကျင်လည် ရာအရပ်သည် အဘယ်မှာ ရှိသနည်း။
12 சிங்கம் தன் குட்டிகளுக்குப் போதிய அளவு இரையைக் கொன்று. தன் துணைச் சிங்கத்திற்குத் தேவையான இரையைத் பிடித்துக் கொன்று. தான் கொன்றவைகளினால் தன் இடங்களையும், இரையினால் தன் குகையையும் நிரப்பியது.
၁၂ခြင်္သေ့ သည် သား ငယ်များတို့ ကိုက် ဖြတ်လျက် ၊ ခြင်္သေ့ မတို့ လည်ပင်းကို ညှစ် လျက် ၊ လုယူ ဖျက်ဆီးသော အကောင်များကို ဆောင်ခဲ့၍ မိမိ မှီခို ရာတွင်း တို့ကို ပြည့် စေတတ်၏။
13 நினிவேயே, “நான் உனக்கு விரோதமாக இருக்கிறேன்” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “புகை எழும்பும்படி உன் தேர்களை எரிப்பேன், உன் சிங்கக்குட்டிகள் வாளினால் அழியும். பூமியில் உங்களுக்கு இரையில்லாமல் போகச்செய்வேன். உங்கள் தூதுவர்களின் குரல்கள் இனிமேலும் கேட்கப்படுவதில்லை.”
၁၃ကောင်းကင်ဗိုလ်ခြေ အရှင် ထာဝရဘုရား မိန့် တော်မူသည်ကား၊ သင့် တဘက် ၌ ငါ နေ၏။ သင် ၏ရထား တို့ကို မီးခိုး ထဲမှာ မီးရှို့ မည်။ သင် ၏ခြင်္သေ့ ပျိုတို့ကို ထား ဖြင့် ဖျက်ဆီး မည်။ သင် လုယူသော ဥစ္စာ ကို မြေကြီး မှ ပယ်ရှင်း မည်။ သင် ၏သံတမန် တို့ စကား သံကို နောက် တဖန် အဘယ်သူမျှမ ကြား ရ။

< நாகூம் 2 >