< மத்தேயு 8 >
1 இயேசு மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி வந்தார், அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரைப் பின்தொடர்ந்தார்கள்.
୧ଜିସୁ ଡଙ୍ଗ୍ରେ ଅନି ଉତ୍ରି ଆଇଲା ଦାପ୍ରେ, ବେସି ଲକ୍ମନ୍ ତାର୍ ପଚେ ପଚେ ଇଣ୍ଡ୍ଲାଇ ।
2 அப்பொழுது ஒரு குஷ்டவியாதி உள்ளவன் வந்து, அவர்முன் முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும் என்றான்.”
୨ସେବେଲେ ଗଟେକ୍ ବଡ୍ ରଗି ଜିସୁର୍ ମୁଆଟେ ଆସି ମାଣ୍ଡିକୁଟା ଦେଇ କଇଲା, “ଏ ମାପ୍ରୁ, ତମେ ଜଦି ମନ୍ କଲାସ୍ନି ବଇଲେ ମକେ ସୁକଲ୍ କରି ପାରାସ୍ ।”
3 இயேசு தன் கையை நீட்டி அவனைத் தொட்டு. “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்று சொன்னார். உடனே அவன் தனது குஷ்டவியாதியிலிருந்து சுத்தமானான்.
୩ତେଇ ଜିସୁ ଆତ୍ ଲାମାଇ ତାକେ ଚିଇ କଇଲା, “ମୁଇ ମନ୍ କଲିନି, ସୁକଲ୍ ଅ ।” ଜିସୁ ଏତ୍କି କଇଲା ଦାପ୍ରେ ସେ ଲକ୍ ବଡ୍ ରଗେଅନି ନିକ ଅଇଲା ।
4 அப்பொழுது இயேசு அவனிடம், “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து அது அவர்களுக்கு நீ சுகமடைந்ததற்கான ஒரு சாட்சியாய் இருக்கும்” என்றார்.
୪ଜିସୁ ତାକେ କଇଲା, “ସୁନ୍, ତୁଇ କେନ୍ତିଅଇ ନିକ ଅଇଲୁସ୍, ଏ କାତା କାକେ ମିସା କ ନାଇ, ମାତର୍ ସିଦା ପୁଜାରିର୍ ଲଗେ ଜାଇକରି ନିଜ୍କେ ଦେକାଇ ଅ, ଆରି ତୁଇ ନିକ ଅଇ ଆଚୁସ୍ ବଲି ସବୁ ଲକର୍ ଟାନେ ଜାନାଇଅଇବାକେ ମସାର୍ ନିୟମ୍ ଇସାବେ ପର୍ମେସର୍କେ ସର୍ପିଦେସ୍ ।”
5 இயேசு கப்பர்நகூமுக்குப் போனபோது, ஒரு நூற்றுக்குத் தலைவன் உதவிகேட்டு அவரிடம் வந்து,
୫ଜିସୁ କପର୍ନାଉମ୍ ସଅରେ କେଟ୍ଲା । ସେଦାପ୍ରେ ଗଟେକ୍ ରମିୟ ସନିଅମନର୍ ମୁକିଅ ତାକେ ବେଟ୍ ଅଇକରି ବାବୁଜିଆ କରି କଇଲା ।
6 “ஆண்டவரே, வீட்டில் எனது வேலைக்காரன் முடக்குவாதமுடையவனாய், கடும் வேதனையுடன் படுத்திருக்கிறான்” என்றான்.
୬“ଏ ମାପ୍ରୁ, ମର୍ ଗଟେକ୍ ଗତିଦାଙ୍ଗ୍ଡା ଅଚ୍ନାଇ ଡୁଲିକରି ବେସି କସ୍ଟ ପାଇଲାନି ଉଟେ ନାଇ, ବସେ ନାଇ ।”
7 இயேசு அவனிடம், “நான் வந்து அவனைக் குணமாக்குவேன் என்றார்.”
୭ଜିସୁ ତାକେ କଇଲା, “ମୁଇ ଆସି ତାକେ ନିକ କର୍ବି ।”
8 நூற்றுக்குத் தலைவன் அதற்குப் பதிலாக, “ஐயா, நீர் எனது வீட்டிற்குள் வருவதற்கு நான் தகுதியற்றவன். ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், என் வேலைக்காரன் குணமடைவான்.
୮ମାତର୍ ମୁକିଅ କଇଲା, “ନାଇ ମାପ୍ରୁ ତମେ ଜେ ମର୍ଗରେ ପାଦ୍ ପାକାଇସା, ଏଟାର୍ପାଇ ମର୍ ଅଦିକାର୍ ନଇ । ତମେ ପଦେକ୍ କଇଦିଆ, ମର୍ ଗତିଦାଙ୍ଗ୍ଡା ନିକ ଅଇଜାଇସି ।
9 ஏனெனில் நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழேயும் படைவீரர்கள் இருக்கிறார்கள். நான் ஒருவனை, ‘போ’ என்றால், போகிறான்; ஒருவனை, ‘வா’ என்றால், வருகிறான். நான் எனது வேலைக்காரனிடம் இதைச் செய் என்றால், அவன் செய்கிறான்” என்றான்.
୯କାଇକେବଇଲେ ମୁଇ ମର୍ ଉପ୍ରର୍ ଅଦିକାରିର୍ ତଲେ କାମ୍ କଲିନି, ଅଇଲେ ମିସା ମର୍ ତଲେ କେତେ କେତେ ସନିଅମନ୍ ଆଚତ୍ । ସେମନର୍ ବିତ୍ରେଅନି ଜଦି ମୁଇ ଗଟେକ୍ ଲକ୍କେ ଜାଆ ବଲି ଆଦେସ୍ ଦେଲେ, ସେ ଜାଇସି । ବିନ୍ଟାକେ ଆଉ ବଲି କଇଲେ ସେ ଆଇସି । ସେନ୍ତିସେ ମର୍ ଗତି ଦାଙ୍ଗ୍ଡାକେ ଏଟା କର୍ ବଲି କଇଲା ଦାପ୍ରେ ସେ ସେଟା କର୍ସି ।”
10 இயேசு இதைக் கேட்டபோது வியப்படைந்தார். அவர் தம்மைப் பின்தொடர்கிறவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் நான் கண்டதில்லை.
୧୦ଜିସୁ ଏଟା ସୁନି କାବା ଅଇଗାଲା, ଆରି ତାର୍ ସଙ୍ଗ୍ ଆଇବା ଲକ୍ମନ୍କେ କଇଲା, “ମୁଇ ସତ୍ କଇଲିନି, ଇସ୍ରାଏଲ୍ ବିତ୍ରେ କନ୍ ଲକର୍ଟାନେ ମିସା ଏ ଲକର୍ ପାରା ବିସ୍ବାସ୍ ମୁଇ ଦେକିନାଇ ।
11 நான் இதையும் உங்களுக்குச் சொல்கிறேன்: அநேகர் கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் வருவார்கள். அவர்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் இறைவனுடைய அரசிலே பெரும்விருந்தில் அவர்களுக்குரிய இடங்களில் பங்கு பெறுவார்கள்.
୧୧ଏ କାତା ତମର୍ ମନେ ର, ପୁରୁବ୍ ଆରି ପସ୍ଚିମ୍ ବାଟର୍ ଦେସେଅନି କେତେ କେତେ ଲକ୍ ସରଗ୍ ରାଇଜେ ଆସି ଅବ୍ରାଆମ୍ ଇସାକ୍ ଆରି ଜାକୁବର୍ ସଙ୍ଗ୍ ବଜିତେଇ ଗଟେକ୍ଟାନେ କାଇବାକେ ବସ୍ବାଇ ।
12 ஆனால் அந்த அரசுக்குரிய மக்களோ, வெளியே இருளுக்குள்ளே எறியப்படுவார்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்றார்.
୧୨ମାତର୍ ଜନ୍ ଲକ୍ମନ୍ ସରଗ୍ ରାଇଜେ ପୁର୍ବାର୍ ରଇଲାଇ, ସେମନ୍କେ ବାଇରର୍ ଆନ୍ଦାରେ ପିଙ୍ଗା ଅଇସି । ତେଇ ସେମନ୍ ଦାଁତ୍ ମୁଣ୍ଡ୍ କାତ୍ରି ମାରିଚପିଅଇ କାନ୍ଦ୍ବାଇ ।”
13 அதற்குப் பின்பு இயேசு நூற்றுக்குத் தலைவனிடம், “நீ போ, நீ விசுவாசித்தபடியே, உனக்கு ஆகட்டும்” என்றார். அந்த வேளையிலேயே அவனது வேலைக்காரன் குணமடைந்தான்.
୧୩ଜିସୁ ସନିଅମନର୍ ମୁକିଅକେ କଇଲା, “ତୁଇ ଏବେ ଗରେ ଜା । ତୁଇ ଜେନ୍ତି ବିସ୍ବାସ୍ କଲୁସ୍ନି ସେନ୍ତାରିସେ ଅଇସି ।” ସମାନ୍ ସେ ବେଲାଇସେ ତାର୍ ଗତିଦାଙ୍ଗ୍ଡା ପୁରାପୁରୁନ୍ ନିକ ଅଇଗାଲା ।
14 இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்தபோது, பேதுருவின் மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் படுத்திருப்பதை அவர் கண்டார்.
୧୪ଜିସୁ ପିତରର୍ ଗରେ ଜାଇ ତାର୍ ସାତ୍ରି ଜର୍ଅଇକରି ଅଚ୍ନାଇ ଡୁଲି ରଇବାଟା ଦେକ୍ଲା ।
15 இயேசு அவளுடைய கையைத் தொட்டவுடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று. அவள் எழுந்து அவருக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
୧୫ସେ ପିତରର୍ ସାତ୍ରିର୍ ଆତେ ଚିଇଲା ଦାପ୍ରେ ତାର୍ ଜର୍ ଚାଡିଗାଲା । ଆରି ସେ ଉଟିକରି ଜିସୁର୍ ସେବା କର୍ବାର୍ ଦାର୍ଲା ।
16 மாலை நேரமானபோது, பிசாசு பிடித்திருந்த பலரை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்; அவர் வார்த்தையினாலே அந்த தீய ஆவிகளைத் துரத்தி, எல்லா நோயாளிகளையும் குணமாக்கினார்.
୧୬ସଞ୍ଜ୍ ଅଇଲାକେ ଲକ୍ମନ୍, କେତେକ୍ କେତେକ୍ ଡୁମା ଦାରିରଇଲା ଲକ୍ମନ୍କେ ଜିସୁର୍ ଲଗେ ଆନ୍ଲାଇ । ତାର୍ ପଦେକ୍ କାତା କଇଲା ଦାପ୍ରେସେ ଡୁମା ଆତ୍ମାମନ୍କେ ବାର୍କରାଇଦେଲା ଆରି ରଗି ଲକ୍ମନ୍କେ ନିକ କଲା ।
17 “அவர்தாமே நம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நமது நோய்களைச் சுமந்தார்” என்று இறைவாக்கினன் ஏசாயாவினால் கூறப்பட்டது இப்படியாக நிறைவேறியது.
୧୭ଏଟା କଲାର୍ ଲାଗି ଜିସୁ ଜିସାଇୟ ବବିସତ୍ବକ୍ତା ଜାନାଇ ରଇଲାଟା ପୁରାପୁରୁନ୍ ସିଦ୍କଲା । ବବିସତ୍ବକ୍ତା କଇରଇଲା “ଆମର୍ ଦୁକାସୁକା ସବୁ ନିଜେ ନେଲା ଆରି ଆମର୍ ଜର୍ଦୁକା ବଇଲା ।”
18 தன்னைச் சுற்றி நின்ற கூட்டத்தை இயேசு கண்டபோது, அவர் தம்முடைய சீடர்களிடம், மறுகரைக்குப் போகும்படி, கட்டளையிட்டார்.
୧୮ଜିସୁ ତାର୍ ଚାରିବେଟ୍ତି ରଇଲା ବେସି ଲକ୍ମନ୍କେ ଦେକିକରି ତାର୍ ସିସ୍ମନ୍କେ ଗାଡ୍ ସେପାଟ୍ ଜିବାକେ କଇଲା ।
19 அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட ஆசிரியன் அவரிடம் வந்து, “போதகரே, நீர் போகும் இடமெல்லாம் நான் உம்மைப் பின்பற்றுவேன்” என்றான்.
୧୯ତେଇ ଗଟେକ୍ ଜିଉଦିମନର୍ ସାସ୍ତର୍ ସିକାଉ ତାର୍ ଲଗେ ଆସି କଇଲା, “ଏ ଗୁରୁ ତମେ ଜନ୍ ଜାଗାଇ ଗାଲେ ମିସା ମୁଇ ତମର୍ ସଙ୍ଗ୍ ଆଇବି ।”
20 இயேசு அதற்குப் பதிலாக, “நரிகளுக்குக் குழிகளும், ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. ஆனால் மானிடமகனாகிய எனக்கோ தலைசாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.
୨୦ମାତର୍ ଜିସୁ ତାକେ କଇଲା, “କଲିଆ ରଇବାକେ ପାଆର୍ ଆଚେ, ଆରି ଉଡିବୁଲ୍ବା ଚଡଇମନ୍ ରଇବାକେ ଗୁଡା ଆଚେ, ମାତର୍ ନର୍ପିଲା ମୁଇ, ମକେ ରଇବାକେ ଜାଗା ନାଇ ।”
21 இன்னொரு சீடன் அவரிடம், “ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம் செய்துவிட்டு வர எனக்கு அனுமதிகொடும்” என்றான்.
୨୧ଆରି ସିସ୍ମନର୍ ବିତ୍ରେଅନି ଗଟେକ୍ ସିସ୍ କଇଲା, “ଏ ମାପ୍ରୁ, ମକେ ପର୍ତୁମ୍ ମର୍ ବାବାକେ ଜାଇ ତପି ଆଇବାକେ ମେଲାନି ଦିଆ ।”
22 அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைப் பின்பற்று. மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்” என்றார்.
୨୨ମାତର୍ ଜିସୁ ତାକେ କଇଲା, “ମରିଗାଲା ଲକ୍ମନ୍ ମଲା ଲକ୍ମନ୍କେ ତପତ୍, ତୁଇ ମର୍ ପଚେ ପଚେ ଆଉ ।”
23 அதற்குப் பின்பு இயேசு படகில் ஏறினார். அவரது சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.
୨୩ତାର୍ ପଚେ ଜିସୁ ଗଟେକ୍ ଡଙ୍ଗାଇ ଚଗ୍ଲାକେ ତାର୍ ସିସ୍ମନ୍ ମିସା ତାର୍ ସଙ୍ଗ୍ ଗାଲାଇ ।
24 அப்பொழுது திடீரென ஒரு புயல்காற்று கடலின்மேல் வீசியது; அலைகள் படகிற்கு மேலாக மோதியது. இயேசுவோ தூங்கிக்கொண்டிருந்தார்.
୨୪ସେ ବେଲା ଅଟାତ୍ ସମ୍ଦୁରେ ଏନ୍ତି ବାଉପବନ୍ ଆଇଲା ଆରି ଉଲ୍କାର୍ ଲାଗି ଡଙ୍ଗା ପାନିତେଇ ବୁଡିଜିବା ପାରା ଅଇଲା । ମାତର୍ ଜିସୁ ଡଙ୍ଗାଇ ସଇଦେଇ ରଇଲା ।
25 சீடர்கள் இயேசுவிடம் வந்து, அவரை எழுப்பி, “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்! நாங்கள் தண்ணீரில் மூழ்கப்போகிறோம்!” என்று அவரிடம் சொன்னார்கள்.
୨୫ଆରି ସିସ୍ମନ୍ ଜିସୁର୍ ଲଗେ ଜାଇକରି ତାକେ ଉଟାଇ କଇଲାଇ, “ଏ ମାପ୍ରୁ ଆମ୍କେ ରକିଆ କର୍ । ନଇଲେ ଆମେ ବୁଡି ମରିଜିବୁବେ ।”
26 அதற்கு இயேசு, “விசுவாசக் குறைவுள்ளவர்களே! நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்?” எனக் கேட்டார். பின்பு அவர் எழுந்து காற்றையும் அலைகளையும் கடிந்துகொண்டார். அப்பொழுது மிகுந்த அமைதி உண்டாயிற்று.
୨୬ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ଏ ବିସ୍ବାସେ ଡାଟ୍ ନ ରଇଲା ଲକ୍ମନ୍, ତମେ କାଇକେ ଏତେକ୍ ଡରିଗାଲାସ୍ନି?” ଜିସୁ ବାଉପବନ୍କେ ଆରି ଲଅଡିକେ ଦମ୍କାଇଲା । ତେବର୍ପାଇ ବାଉପବନ୍ ଆରି ଲଅଡି ତବିର୍ ଅଇଗାଲା ।
27 அதைக் கண்டவர்கள் வியப்படைந்து, “இவர் எப்படிப்பட்டவரோ? காற்றும் அலைகளுங்கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே!” என்று பேசிக்கொண்டார்கள்.
୨୭ଏଟା ଦେକି ସିସ୍ମନ୍ ବେସି କାବାଅଇଜାଇ ତାକର୍ ତାକର୍ ବିତ୍ରେ କୁଆବଲା ଅଇଲାଇ, “ଏ କେନ୍ତାର୍ ଲକ୍ ଜେ ବାଉପବନ୍ ଆରି ଲଅଡି ମିସା ଆର୍ କାତା ମାନ୍ଲାଇନି ।”
28 இயேசு மறுபக்கத்திலுள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தபோது, பிசாசு பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வந்து அவரைச் சந்தித்தனர். ஒருவரும் அந்த வழியாய்ச் செல்லமுடியாதவாறு, அவர்கள் மிகவும் கொடூரமானவர்களாய் இருந்தார்கள்.
୨୮ଜିସୁ ଆରି ତାର୍ ସିସ୍ମନ୍ ଗାଡ୍ ସେପାଟର୍ ଗଦ୍ରିୟ ନାଉଁର୍ ଜାଗାଇ କେଟ୍ଲା ଦାପ୍ରେ, ଦୁଇଟା ଡୁମା ଡସ୍ଲା ଲକ୍ ତାକେ ବେଟ୍ ଅଇଲାଇ । ସେମନ୍ ମସନ୍ ବିତ୍ରେ ରଇତେରଇଲାଇ । ଆରି ସେମନ୍ ଏନ୍ତି ରଇଲାଇ ଜେ, ସେ ବାଟେ କେ ମିସା ଆସ୍ ଜା ନ ଅଇତେ ରଇଲାଇ ।
29 அவர்கள், “இறைவனின் மகனே, உமக்கு எங்களிடம் என்ன வேண்டும்? நியமிக்கப்பட்ட காலம் வருமுன், எங்களைச் சித்திரவதை செய்யவா நீர் இங்கே வந்தீர்?” என உரத்த சத்தமிட்டார்கள்.
୨୯ସେ ଲକ୍ମନ୍ ବେସି କିର୍କିରି କରି କଇଲାଇ, “ଏ ପର୍ମେସରର୍ ପିଲା ଆମର୍ ଟାନେ ତର୍ କାଇ କାମ୍ ଆଚେ? ବେଲ୍ କାଲ୍ ନ କେଟ୍ତେ ତୁଇ କାଇ ଡଣ୍ଡ୍ ଦେବାକେ ଇତି ଆଇଲୁସ୍ କି?”
30 அவர்களுக்கு கொஞ்சம் தூரத்தில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தது.
୩୦ସେବେଲାଇ ସେ ଜାଗାଇଅନି କଣ୍ଡେକ୍ ଦୁରିକେ ଗଟେକ୍ ବଡ୍ ଗୁସ୍ରି ମାନ୍ଦା ଚାରାଇତେରଇଲାଇ ।
31 பிசாசுகள் இயேசுவிடம், “நீர் எங்களை வெளியே விரட்டுவதானால், பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்பிவிடும்” என்று கெஞ்சிக்கேட்டன.
୩୧କାରାପ୍ ଆତ୍ମାମନ୍ ଜିସୁକେ ଗୁଆରି କରି କଇଲାଇ, “ତୁଇ ଜଦି ଆମ୍କେ ଏ ଲକ୍ମନର୍ତେଇ ଅନି ବାର୍କରାଇ ଦେଇସୁ ବଇଲେ ସେ ଗୁସ୍ରି ମାନ୍ଦା ବିତ୍ରେ ଜିବାକେ, ଆଦେସ୍ ଦେ ।”
32 இயேசு அவைகளிடம், “போங்கள்!” என்றார். எனவே அவைகள் வெளியே வந்து, பன்றிகளுக்குள் புகுந்துகொண்டன. அந்த முழுப்பன்றிக்கூட்டமும், மேட்டிலிருந்து விரைந்தோடி, கடலுக்குள் விழுந்து செத்தன.
୩୨ଜିସୁ ସେମନ୍କେ ଜା! ବଲି କଇଲାକେ କାରାପ୍ ଆତ୍ମାମନ୍ ସେ ଲକ୍ମନର୍ତେଇଅନି ବାରଇକରି ଗୁସ୍ରିମନର୍ ବିତ୍ରେ ପୁର୍ଲାଇ । ତେବର୍ ପାଇ, ଗୁସ୍ରିମନ୍ ଟିପେଅନି ଗସ୍ରି ସମ୍ଦୁରେ ବୁଡି ମଲାଇ ।
33 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பட்டணத்திற்குள் ஓடிப்போய், பிசாசு பிடித்தவர்களுக்கு நிகழ்ந்ததையும், நடந்த எல்லாவற்றையும் அறிவித்தார்கள்.
୩୩ଆରି ତେଇ ଗୁସ୍ରି ଚାରାଇତେ ରଇବା ଲକ୍ମନ୍ ପାଲାଇ କରି ଡୁମା ଡସି ରଇଲା ଲକ୍ମନ୍କେ କାଇକାଇଟା ଅଇଲା ସେଟା ସବୁ କଇଦେଲାଇ ।
34 அப்பொழுது பட்டணத்திலுள்ள யாவரும் இயேசுவை சந்திக்க வெளியே வந்து. அவர்கள் இயேசுவைக் கண்டபோது, தங்களுடைய பகுதியைவிட்டுப் போய்விடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.
୩୪ଆରି ସେ ଗଡର୍ ସବୁ ଲକ୍ମନ୍ ଜିସୁକେ ଦେକ୍ବାକେ ଆଇଲାଇ । ସେମନ୍ ତାକେ ଦେକିକରି ସେ ଜାଗା ଚାଡି ଜା ବଲି ଗୁଆରି କଇଲାଇ ।