< மத்தேயு 4 >
1 அதற்குப் பின்பு இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைவனத்துக்கு வழிநடத்தப்பட்டார்.
តតះ បរំ យីឝុះ ប្រតារកេណ បរីក្ឞិតោ ភវិតុម៑ អាត្មនា ប្រាន្តរម៑ អាក្ឫឞ្ដះ
2 இயேசு இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்தபின், பசியாயிருந்தார்.
សន៑ ចត្វារិំឝទហោរាត្រាន៑ អនាហារស្តិឞ្ឋន៑ ក្ឞុធិតោ ពភូវ។
3 சோதனைக்காரன் இயேசுவினிடத்தில் வந்து, “நீர் இறைவனின் மகன் என்றால், இந்தக் கற்களிடம் அப்பமாகும்படி சொல்லும்” என்றான்.
តទានីំ បរីក្ឞិតា តត្សមីបម៑ អាគត្យ វ្យាហ្ឫតវាន៑, យទិ ត្វមីឝ្វរាត្មជោ ភវេស្តហ៌្យាជ្ញយា បាឞាណានេតាន៑ បូបាន៑ វិធេហិ។
4 அதற்கு இயேசு, “‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது” எனப் பதிலளித்தார்.
តតះ ស ប្រត្យព្រវីត៑, ឥត្ថំ លិខិតមាស្តេ, "មនុជះ កេវលបូបេន ន ជីវិឞ្យតិ, កិន្ត្វីឝ្វរស្យ វទនាទ៑ យានិ យានិ វចាំសិ និះសរន្តិ តៃរេវ ជីវិឞ្យតិ។ "
5 பின்பு சாத்தான் அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், ஆலயத்தின் மிக உயரமான முனையில் நிற்கச் செய்தான்.
តទា ប្រតារកស្តំ បុណ្យនគរំ នីត្វា មន្ទិរស្យ ចូឌោបរិ និធាយ គទិតវាន៑,
6 அவன், “நீர் இறைவனுடைய மகனானால் கீழே குதியும். ஏனெனில்: “‘இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால்கள் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தமது கரங்களில் தாங்கிக்கொள்வார்கள் என்று எழுதியிருக்கிறதே,’” என்றான்.
ត្វំ យទិឝ្វរស្យ តនយោ ភវេស្តហ៌ីតោៜធះ បត, យត ឥត្ថំ លិខិតមាស្តេ, អាទេក្ឞ្យតិ និជាន៑ ទូតាន៑ រក្ឞិតុំ ត្វាំ បរមេឝ្វរះ។ យថា សវ៌្វេឞុ មាគ៌េឞុ ត្វទីយចរណទ្វយេ។ ន លគេត៑ ប្រស្តរាឃាតស្ត្វាំ ឃរិឞ្យន្តិ តេ ករៃះ៕
7 அதற்கு இயேசு, “உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறதே” எனப் பதிலளித்தார்.
តទានីំ យីឝុស្តស្មៃ កថិតវាន៑ ឯតទបិ លិខិតមាស្តេ, "ត្វំ និជប្រភុំ បរមេឝ្វរំ មា បរីក្ឞស្វ។ "
8 மீண்டும், சாத்தான் அவரை மிக உயரமான மலைக்குக் கொண்டுபோனான் அங்கிருந்து உலகத்தின் எல்லா அரசுகளையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான்.
អនន្តរំ ប្រតារកះ បុនរបិ តម៑ អត្យុញ្ចធរាធរោបរិ នីត្វា ជគតះ សកលរាជ្យានិ តទៃឝ្វយ៌្យាណិ ច ទឝ៌យាឝ្ចការ កថយាញ្ចការ ច,
9 “நீர் என்னை விழுந்து வணங்கினால், இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன் என்றான்.”
យទិ ត្វំ ទណ្ឌវទ៑ ភវន៑ មាំ ប្រណមេស្តហ៌្យហម៑ ឯតានិ តុភ្យំ ប្រទាស្យាមិ។
10 இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு அப்பாலே போ! ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’” என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னார்.
តទានីំ យីឝុស្តមវោចត៑, ទូរីភវ ប្រតារក, លិខិតមិទម៑ អាស្តេ, "ត្វយា និជះ ប្រភុះ បរមេឝ្វរះ ប្រណម្យះ កេវលះ ស សេវ្យឝ្ច។ "
11 அப்பொழுது சாத்தான் அவரைவிட்டுச் சென்றான், தூதர்கள் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள்.
តតះ ប្រតារកេណ ស បយ៌្យត្យាជិ, តទា ស្វគ៌ីយទូតៃរាគត្យ ស សិឞេវេ។
12 யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டபோது, அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார்.
តទនន្តរំ យោហន៑ ការាយាំ ពពន្ធេ, តទ្វាត៌្តាំ និឝម្យ យីឝុនា គាលីល៑ ប្រាស្ថីយត។
13 அவர் நாசரேத்தை விட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார், அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடற்கரைக்கு அருகே இருந்தது.
តតះ បរំ ស នាសរន្នគរំ វិហាយ ជលឃេស្តដេ សិពូលូន្នប្តាលី ឯតយោរុវភយោះ ប្រទេឝយោះ សីម្នោម៌ធ្យវត៌្តី យ: កផន៌ាហូម៑ តន្នគរម៑ ឥត្វា ន្យវសត៑។
14 இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்:
តស្មាត៑, អន្យាទេឝីយគាលីលិ យទ៌្ទន្បារេៜព្ធិរោធសិ។ នប្តាលិសិពូលូន្ទេឝៅ យត្រ ស្ថានេ ស្ថិតៅ បុរា។
15 “செபுலோன் நாடே, நப்தலி நாடே, யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே, யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலே,
តត្រត្យា មនុជា យេ យេ បយ៌្យភ្រាម្យន៑ តមិស្រកេ។ តៃជ៌នៃព៌្ឫហទាលោកះ បរិទឝ៌ិឞ្យតេ តទា។ អវសន៑ យេ ជនា ទេឝេ ម្ឫត្យុច្ឆាយាស្វរូបកេ។ តេឞាមុបរិ លោកានាមាលោកះ សំប្រកាឝិតះ៕
16 இருளில் வாழும் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல் வெளிச்சம் பிரகாசித்தது,” என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது.
យទេតទ្វចនំ យិឝយិយភវិឞ្យទ្វាទិនា ប្រោក្តំ, តត៑ តទា សផលម៑ អភូត៑។
17 அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
អនន្តរំ យីឝុះ សុសំវាទំ ប្រចារយន៑ ឯតាំ កថាំ កថយិតុម៑ អារេភេ, មនាំសិ បរាវត៌្តយត, ស្វគ៌ីយរាជត្វំ សវិធមភវត៑។
18 இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய இரண்டு சகோதரரைக் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
តតះ បរំ យីឝុ រ្គាលីលោ ជលធេស្តដេន គច្ឆន៑ គច្ឆន៑ អាន្ទ្រិយស្តស្យ ភ្រាតា ឝិមោន៑ អត៌្ហតោ យំ បិតរំ វទន្តិ ឯតាវុភៅ ជលឃៅ ជាលំ ក្ឞិបន្តៅ ទទឝ៌, យតស្តៅ មីនធារិណាវាស្តាម៑។
19 இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார்.
តទា ស តាវាហូយ វ្យាជហារ, យុវាំ មម បឝ្ចាទ៑ អាគច្ឆតំ, យុវាមហំ មនុជធារិណៅ ករិឞ្យាមិ។
20 உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
តេនៃវ តៅ ជាលំ វិហាយ តស្យ បឝ្ចាត៑ អាគច្ឆតាម៑។
21 இயேசு அங்கேயிருந்து போய்க்கொண்டிருக்கையில், வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் கூப்பிட்டார்.
អនន្តរំ តស្មាត៑ ស្ថានាត៑ វ្រជន៑ វ្រជន៑ សិវទិយស្យ សុតៅ យាកូព៑ យោហន្នាមានៅ ទ្វៅ សហជៅ តាតេន សាទ៌្ធំ នៅកោបរិ ជាលស្យ ជីណ៌ោទ្ធារំ កុវ៌្វន្តៅ វីក្ឞ្យ តាវាហូតវាន៑។
22 உடனே அவர்கள் படகையும், தங்கள் தகப்பனையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
តត្ក្ឞណាត៑ តៅ នាវំ ស្វតាតញ្ច វិហាយ តស្យ បឝ្ចាទ្គាមិនៅ ពភូវតុះ។
23 இயேசு கலிலேயா முழுவதும் சென்று, யூதரின் ஜெப ஆலயங்களில் போதித்து, பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார், மக்களுக்கு இருந்த எல்லா விதமான வியாதிகளையும் நோய்களையும் குணமாக்கினார்.
អនន្តរំ ភជនភវនេ សមុបទិឝន៑ រាជ្យស្យ សុសំវាទំ ប្រចារយន៑ មនុជានាំ សវ៌្វប្រការាន៑ រោគាន៑ សវ៌្វប្រការបីឌាឝ្ច ឝមយន៑ យីឝុះ ក្ឫត្ស្នំ គាលីល្ទេឝំ ភ្រមិតុម៑ អារភត។
24 இயேசுவைப்பற்றிய செய்தி, சீரியா முழுவதும் பரவியது. மக்கள் அவரிடம், பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வேதனையுற்ற நோயாளிகளையும், தீய ஆவி பிடித்தவர்களையும், வலிப்பு உள்ளவர்களையும், முடக்குவாதம் உள்ளவர்களையும் கொண்டுவந்தார்கள்; இயேசு அவர்களைக் குணமாக்கினார்.
តេន ក្ឫត្ស្នសុរិយាទេឝស្យ មធ្យំ តស្យ យឝោ វ្យាប្នោត៑, អបរំ ភូតគ្រស្តា អបស្មារគ៌ីណះ បក្ឞាធាតិប្រភ្ឫតយឝ្ច យាវន្តោ មនុជា នានាវិធវ្យាធិភិះ ក្លិឞ្ដា អាសន៑, តេឞុ សវ៌្វេឞុ តស្យ សមីបម៑ អានីតេឞុ ស តាន៑ ស្វស្ថាន៑ ចការ។
25 கலிலேயா, தெக்கப்போலி எருசலேம், யூதேயா மற்றும் யோர்தானுக்கு மறுபக்கத்திலுமிருந்து பெருந்திரளான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.
ឯតេន គាលីល៑-ទិកាបនិ-យិរូឝាលម៑-យិហូទីយទេឝេភ្យោ យទ៌្ទនះ បារាញ្ច ពហវោ មនុជាស្តស្យ បឝ្ចាទ៑ អាគច្ឆន៑។