< மத்தேயு 4 >
1 அதற்குப் பின்பு இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைவனத்துக்கு வழிநடத்தப்பட்டார்.
১ততঃ পৰং যীশুঃ প্ৰতাৰকেণ পৰীক্ষিতো ভৱিতুম্ আত্মনা প্ৰান্তৰম্ আকৃষ্টঃ
2 இயேசு இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்தபின், பசியாயிருந்தார்.
২সন্ চৎৱাৰিংশদহোৰাত্ৰান্ অনাহাৰস্তিষ্ঠন্ ক্ষুধিতো বভূৱ|
3 சோதனைக்காரன் இயேசுவினிடத்தில் வந்து, “நீர் இறைவனின் மகன் என்றால், இந்தக் கற்களிடம் அப்பமாகும்படி சொல்லும்” என்றான்.
৩তদানীং পৰীক্ষিতা তৎসমীপম্ আগত্য ৱ্যাহৃতৱান্, যদি ৎৱমীশ্ৱৰাত্মজো ভৱেস্তৰ্হ্যাজ্ঞযা পাষাণানেতান্ পূপান্ ৱিধেহি|
4 அதற்கு இயேசு, “‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது” எனப் பதிலளித்தார்.
৪ততঃ স প্ৰত্যব্ৰৱীৎ, ইত্থং লিখিতমাস্তে, "মনুজঃ কেৱলপূপেন ন জীৱিষ্যতি, কিন্ত্ৱীশ্ৱৰস্য ৱদনাদ্ যানি যানি ৱচাংসি নিঃসৰন্তি তৈৰেৱ জীৱিষ্যতি| "
5 பின்பு சாத்தான் அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், ஆலயத்தின் மிக உயரமான முனையில் நிற்கச் செய்தான்.
৫তদা প্ৰতাৰকস্তং পুণ্যনগৰং নীৎৱা মন্দিৰস্য চূডোপৰি নিধায গদিতৱান্,
6 அவன், “நீர் இறைவனுடைய மகனானால் கீழே குதியும். ஏனெனில்: “‘இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால்கள் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தமது கரங்களில் தாங்கிக்கொள்வார்கள் என்று எழுதியிருக்கிறதே,’” என்றான்.
৬ৎৱং যদিশ্ৱৰস্য তনযো ভৱেস্তৰ্হীতোঽধঃ পত, যত ইত্থং লিখিতমাস্তে, আদেক্ষ্যতি নিজান্ দূতান্ ৰক্ষিতুং ৎৱাং পৰমেশ্ৱৰঃ| যথা সৰ্ৱ্ৱেষু মাৰ্গেষু ৎৱদীযচৰণদ্ৱযে| ন লগেৎ প্ৰস্তৰাঘাতস্ত্ৱাং ঘৰিষ্যন্তি তে কৰৈঃ||
7 அதற்கு இயேசு, “உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறதே” எனப் பதிலளித்தார்.
৭তদানীং যীশুস্তস্মৈ কথিতৱান্ এতদপি লিখিতমাস্তে, "ৎৱং নিজপ্ৰভুং পৰমেশ্ৱৰং মা পৰীক্ষস্ৱ| "
8 மீண்டும், சாத்தான் அவரை மிக உயரமான மலைக்குக் கொண்டுபோனான் அங்கிருந்து உலகத்தின் எல்லா அரசுகளையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான்.
৮অনন্তৰং প্ৰতাৰকঃ পুনৰপি তম্ অত্যুঞ্চধৰাধৰোপৰি নীৎৱা জগতঃ সকলৰাজ্যানি তদৈশ্ৱৰ্য্যাণি চ দৰ্শযাশ্চকাৰ কথযাঞ্চকাৰ চ,
9 “நீர் என்னை விழுந்து வணங்கினால், இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன் என்றான்.”
৯যদি ৎৱং দণ্ডৱদ্ ভৱন্ মাং প্ৰণমেস্তৰ্হ্যহম্ এতানি তুভ্যং প্ৰদাস্যামি|
10 இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு அப்பாலே போ! ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’” என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னார்.
১০তদানীং যীশুস্তমৱোচৎ, দূৰীভৱ প্ৰতাৰক, লিখিতমিদম্ আস্তে, "ৎৱযা নিজঃ প্ৰভুঃ পৰমেশ্ৱৰঃ প্ৰণম্যঃ কেৱলঃ স সেৱ্যশ্চ| "
11 அப்பொழுது சாத்தான் அவரைவிட்டுச் சென்றான், தூதர்கள் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள்.
১১ততঃ প্ৰতাৰকেণ স পৰ্য্যত্যাজি, তদা স্ৱৰ্গীযদূতৈৰাগত্য স সিষেৱে|
12 யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டபோது, அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார்.
১২তদনন্তৰং যোহন্ কাৰাযাং ববন্ধে, তদ্ৱাৰ্ত্তাং নিশম্য যীশুনা গালীল্ প্ৰাস্থীযত|
13 அவர் நாசரேத்தை விட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார், அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடற்கரைக்கு அருகே இருந்தது.
১৩ততঃ পৰং স নাসৰন্নগৰং ৱিহায জলঘেস্তটে সিবূলূন্নপ্তালী এতযোৰুৱভযোঃ প্ৰদেশযোঃ সীম্নোৰ্মধ্যৱৰ্ত্তী য: কফৰ্নাহূম্ তন্নগৰম্ ইৎৱা ন্যৱসৎ|
14 இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்:
১৪তস্মাৎ, অন্যাদেশীযগালীলি যৰ্দ্দন্পাৰেঽব্ধিৰোধসি| নপ্তালিসিবূলূন্দেশৌ যত্ৰ স্থানে স্থিতৌ পুৰা|
15 “செபுலோன் நாடே, நப்தலி நாடே, யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே, யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலே,
১৫তত্ৰত্যা মনুজা যে যে পৰ্য্যভ্ৰাম্যন্ তমিস্ৰকে| তৈৰ্জনৈৰ্বৃহদালোকঃ পৰিদৰ্শিষ্যতে তদা| অৱসন্ যে জনা দেশে মৃত্যুচ্ছাযাস্ৱৰূপকে| তেষামুপৰি লোকানামালোকঃ সংপ্ৰকাশিতঃ||
16 இருளில் வாழும் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல் வெளிச்சம் பிரகாசித்தது,” என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது.
১৬যদেতদ্ৱচনং যিশযিযভৱিষ্যদ্ৱাদিনা প্ৰোক্তং, তৎ তদা সফলম্ অভূৎ|
17 அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
১৭অনন্তৰং যীশুঃ সুসংৱাদং প্ৰচাৰযন্ এতাং কথাং কথযিতুম্ আৰেভে, মনাংসি পৰাৱৰ্ত্তযত, স্ৱৰ্গীযৰাজৎৱং সৱিধমভৱৎ|
18 இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய இரண்டு சகோதரரைக் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
১৮ততঃ পৰং যীশু ৰ্গালীলো জলধেস্তটেন গচ্ছন্ গচ্ছন্ আন্দ্ৰিযস্তস্য ভ্ৰাতা শিমোন্ অৰ্থতো যং পিতৰং ৱদন্তি এতাৱুভৌ জলঘৌ জালং ক্ষিপন্তৌ দদৰ্শ, যতস্তৌ মীনধাৰিণাৱাস্তাম্|
19 இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார்.
১৯তদা স তাৱাহূয ৱ্যাজহাৰ, যুৱাং মম পশ্চাদ্ আগচ্ছতং, যুৱামহং মনুজধাৰিণৌ কৰিষ্যামি|
20 உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
২০তেনৈৱ তৌ জালং ৱিহায তস্য পশ্চাৎ আগচ্ছতাম্|
21 இயேசு அங்கேயிருந்து போய்க்கொண்டிருக்கையில், வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் கூப்பிட்டார்.
২১অনন্তৰং তস্মাৎ স্থানাৎ ৱ্ৰজন্ ৱ্ৰজন্ সিৱদিযস্য সুতৌ যাকূব্ যোহন্নামানৌ দ্ৱৌ সহজৌ তাতেন সাৰ্দ্ধং নৌকোপৰি জালস্য জীৰ্ণোদ্ধাৰং কুৰ্ৱ্ৱন্তৌ ৱীক্ষ্য তাৱাহূতৱান্|
22 உடனே அவர்கள் படகையும், தங்கள் தகப்பனையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
২২তৎক্ষণাৎ তৌ নাৱং স্ৱতাতঞ্চ ৱিহায তস্য পশ্চাদ্গামিনৌ বভূৱতুঃ|
23 இயேசு கலிலேயா முழுவதும் சென்று, யூதரின் ஜெப ஆலயங்களில் போதித்து, பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார், மக்களுக்கு இருந்த எல்லா விதமான வியாதிகளையும் நோய்களையும் குணமாக்கினார்.
২৩অনন্তৰং ভজনভৱনে সমুপদিশন্ ৰাজ্যস্য সুসংৱাদং প্ৰচাৰযন্ মনুজানাং সৰ্ৱ্ৱপ্ৰকাৰান্ ৰোগান্ সৰ্ৱ্ৱপ্ৰকাৰপীডাশ্চ শমযন্ যীশুঃ কৃৎস্নং গালীল্দেশং ভ্ৰমিতুম্ আৰভত|
24 இயேசுவைப்பற்றிய செய்தி, சீரியா முழுவதும் பரவியது. மக்கள் அவரிடம், பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வேதனையுற்ற நோயாளிகளையும், தீய ஆவி பிடித்தவர்களையும், வலிப்பு உள்ளவர்களையும், முடக்குவாதம் உள்ளவர்களையும் கொண்டுவந்தார்கள்; இயேசு அவர்களைக் குணமாக்கினார்.
২৪তেন কৃৎস্নসুৰিযাদেশস্য মধ্যং তস্য যশো ৱ্যাপ্নোৎ, অপৰং ভূতগ্ৰস্তা অপস্মাৰৰ্গীণঃ পক্ষাধাতিপ্ৰভৃতযশ্চ যাৱন্তো মনুজা নানাৱিধৱ্যাধিভিঃ ক্লিষ্টা আসন্, তেষু সৰ্ৱ্ৱেষু তস্য সমীপম্ আনীতেষু স তান্ স্ৱস্থান্ চকাৰ|
25 கலிலேயா, தெக்கப்போலி எருசலேம், யூதேயா மற்றும் யோர்தானுக்கு மறுபக்கத்திலுமிருந்து பெருந்திரளான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.
২৫এতেন গালীল্-দিকাপনি-যিৰূশালম্-যিহূদীযদেশেভ্যো যৰ্দ্দনঃ পাৰাঞ্চ বহৱো মনুজাস্তস্য পশ্চাদ্ আগচ্ছন্|