< மத்தேயு 23 >
1 பின்பு இயேசு, மக்கள் கூட்டத்தையும் தமது சீடரையும் பார்த்துச் சொன்னதாவது:
අනන්තරං යීශු ර්ජනනිවහං ශිෂ්යාංශ්චාවදත්,
2 “மோசேயின் சட்ட ஆசிரியர்களும் பரிசேயரும் மோசேயின் இருக்கையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
අධ්යාපකාඃ ඵිරූශිනශ්ච මූසාසනේ උපවිශන්ති,
3 ஆகவே நீங்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்கள் உங்களுக்குச் சொல்லும் ஒவ்வொன்றையும் செய்யுங்கள். ஆனால் அவர்கள் செய்வதை நீங்கள் செய்யவேண்டாம். ஏனெனில் அவர்கள் தாங்கள் பிரசங்கிப்பதைத் தாங்களே செய்வதில்லை.
අතස්තේ යුෂ්මාන් යද්යත් මන්තුම් ආඥාපයන්ති, තත් මන්යධ්වං පාලයධ්වඤ්ච, කින්තු තේෂාං කර්ම්මානුරූපං කර්ම්ම න කුරුධ්වං; යතස්තේෂාං වාක්යමාත්රං සාරං කාර්ය්යේ කිමපි නාස්ති|
4 அவர்கள் பாரமான சுமைகளைக் கட்டி மக்களின் தோள்கள்மேல் வைக்கிறார்கள். ஆனால் அவர்களோ, அவற்றை நகர்த்துவதற்குத் தங்களது ஒரு விரலைக்கூட நீட்டவும் மனதற்றவர்களாக இருக்கிறார்கள்.
තේ දුර්ව්වහාන් ගුරුතරාන් භාරාන් බද්ව්වා මනුෂ්යාණාං ස්කන්ධේපරි සමර්පයන්ති, කින්තු ස්වයමඞ්ගුල්යෛකයාපි න චාලයන්ති|
5 “மோசேயின் சட்ட ஆசிரியர்களும் பரிசேயர்களும் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டுமென்றே செய்யப்படுகின்றன: வேதவசனம் பொறித்த இடைப்பட்டிகளை அகலமாக்கி, தங்கள் உடைகளின் தொங்கல்களை நீளமாக்குகிறார்கள்;
කේවලං ලෝකදර්ශනාය සර්ව්වකර්ම්මාණි කුර්ව්වන්ති; ඵලතඃ පට්ටබන්ධාන් ප්රසාර්ය්ය ධාරයන්ති, ස්වවස්ත්රේෂු ච දීර්ඝග්රන්ථීන් ධාරයන්ති;
6 அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள்.
භෝජනභවන උච්චස්ථානං, භජනභවනේ ප්රධානමාසනං,
7 சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும், மக்கள் தங்களை ‘போதகர்’ என்று அழைப்பதையும் விரும்புகிறார்கள்.
හට්ඨේ නමස්කාරං ගුරුරිති සම්බෝධනඤ්චෛතානි සර්ව්වාණි වාඤ්ඡන්ති|
8 “நீங்களோ ‘போதகர்’ என்று அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு ஒரு போதகர் மட்டுமே இருக்கிறார். நீங்கள் எல்லோரும் சகோதரராய் இருக்கிறீர்கள்.
කින්තු යූයං ගුරව ඉති සම්බෝධනීයා මා භවත, යතෝ යුෂ්මාකම් ඒකඃ ඛ්රීෂ්ටඒව ගුරු
9 பூமியிலுள்ள யாரையும் ‘பிதா’ என்று அழைக்காதிருங்கள். ஏனெனில், உங்களுக்கு ஒரு பிதாவே இருக்கிறார், அவர் பரலோகத்தில் இருக்கிறார்.
ර්යූයං සර්ව්වේ මිථෝ භ්රාතරශ්ච| පුනඃ පෘථිව්යාං කමපි පිතේති මා සම්බුධ්යධ්වං, යතෝ යුෂ්මාකමේකඃ ස්වර්ගස්ථඒව පිතා|
10 நீங்கள் ‘குருக்கள்’ என்றும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு ஒரு குருவே இருக்கிறார், அவர் கிறிஸ்துவே.
යූයං නායකේති සම්භාෂිතා මා භවත, යතෝ යුෂ්මාකමේකඃ ඛ්රීෂ්ටඒව නායකඃ|
11 உங்களில் பெரியவர், உங்களுக்குப் பணிசெய்கிறவராய் இருக்கவேண்டும்.
අපරං යුෂ්මාකං මධ්යේ යඃ පුමාන් ශ්රේෂ්ඨඃ ස යුෂ්මාන් සේවිෂ්යතේ|
12 ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
යතෝ යඃ ස්වමුන්නමති, ස නතඃ කරිෂ්යතේ; කින්තු යඃ කශ්චිත් ස්වමවනතං කරෝති, ස උන්නතඃ කරිෂ්යතේ|
13 “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் பரலோக அரசின் கதவுகளை மனிதரின் முகத்திலடித்தாற்போல் மூடிவிடுகிறீர்கள். நீங்களும் அதற்குள் செல்வதில்லை. செல்ல விரும்புகிறவர்களையும் அனுமதிக்காமல் இருக்கிறீர்கள்.
හන්ත කපටින උපාධ්යායාඃ ඵිරූශිනශ්ච, යූයං මනුජානාං සමක්ෂං ස්වර්ගද්වාරං රුන්ධ, යූයං ස්වයං තේන න ප්රවිශථ, ප්රවිවික්ෂූනපි වාරයථ| වත කපටින උපාධ්යායාඃ ඵිරූශිනශ්ච යූයං ඡලාද් දීර්ඝං ප්රාර්ථ්ය විධවානාං සර්ව්වස්වං ග්රසථ, යුෂ්මාකං ඝෝරතරදණ්ඩෝ භවිෂ්යති|
14 மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, வேஷக்காரர்களாகிய உங்களுக்கு ஐயோ, நீங்கள் விதவைகளின் வீடுகளை அபகரிக்கிறீர்கள். ஆனால் மக்கள் காணவேண்டும் என்பதற்காக நீண்டநேரம் மன்றாடுகிறீர்கள். இதனால் நீங்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவீர்கள்.
හන්ත කපටින උපාධ්යායාඃ ඵිරූශිනශ්ච, යූයමේකං ස්වධර්ම්මාවලම්බිනං කර්ත්තුං සාගරං භූමණ්ඩලඤ්ච ප්රදක්ෂිණීකුරුථ,
15 “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ! ஒருவனை உங்கள் மார்க்கத்திற்கு மாற்றுவதற்கு தரையிலும் கடலிலும் தூரப்பயணம் செய்கிறீர்கள். ஆனால் அவன் உங்கள் மார்க்கத்திற்கு மாறிய பின்போ, உங்களைப் பார்க்கிலும் அவனை இருமடங்காக நரகத்தின் பிள்ளையாக்குகிறீர்கள். (Geenna )
කඤ්චන ප්රාප්ය ස්වතෝ ද්විගුණනරකභාජනං තං කුරුථ| (Geenna )
16 “குருடான வழிகாட்டிகளே, உங்களுக்கு ஐயோ! ‘யாராவது ஆலயத்தின்பேரில் சத்தியம் பண்ணினால், அது பரவாயில்லை என்கிறீர்கள்; ஆனால் யாராவது ஆலயத்திலுள்ள தங்கத்தின்மேல் சத்தியம் பண்ணினால், அதைச் செலுத்தியே தீரவேண்டும்’ என்கிறீர்கள்.
වත අන්ධපථදර්ශකාඃ සර්ව්වේ, යූයං වදථ, මන්දිරස්ය ශපථකරණාත් කිමපි න දේයං; කින්තු මන්දිරස්ථසුවර්ණස්ය ශපථකරණාද් දේයං|
17 குருடான முட்டாள்களே! தங்கமா, தங்கத்தைப் புனிதமாக்கும் ஆலயமா, எது பெரியது?
හේ මූඪා හේ අන්ධාඃ සුවර්ණං තත්සුවර්ණපාවකමන්දිරම් ඒතයෝරුභයෝ ර්මධ්යේ කිං ශ්රේයඃ?
18 மேலும் நீங்கள், ‘யாராவது பலிபீடத்தைக் கொண்டு சத்தியம் செய்தால், அது பரவாயில்லை; ஆனால் யாராவது பலிபீடத்தின் மேலுள்ள காணிக்கையின் பேரில் சத்தியம் பண்ணினால், அவர்கள் அதைச் செலுத்தியே ஆகவேண்டும்’ என்கிறீர்கள்.
අන්යච්ච වදථ, යඥවේද්යාඃ ශපථකරණාත් කිමපි න දේයං, කින්තු තදුපරිස්ථිතස්ය නෛවේද්යස්ය ශපථකරණාද් දේයං|
19 குருட்டு மனிதரே! காணிக்கையா, காணிக்கையைப் புனிதமாக்கும் பலிபீடமா, எது பெரியது?
හේ මූඪා හේ අන්ධාඃ, නෛවේද්යං තන්නෛවේද්යපාවකවේදිරේතයෝරුභයෝ ර්මධ්යේ කිං ශ්රේයඃ?
20 எனவே பலிபீடத்தைக் கொண்டு சத்தியம் செய்பவர்கள் பலிபீடத்தைக் கொண்டு மட்டுமல்ல, அதன்மீதுள்ள எல்லாவற்றையும் கொண்டு சத்தியம் செய்கிறார்கள்.
අතඃ කේනචිද් යඥවේද්යාඃ ශපථේ කෘතේ තදුපරිස්ථස්ය සර්ව්වස්ය ශපථඃ ක්රියතේ|
21 ஆலயத்தின்பேரில் சத்தியம் செய்பவர்கள் ஆலயத்தைக் கொண்டு மட்டுமல்ல, ஆலயத்தில் குடிகொண்டிருப்பவரைக் கொண்டே சத்தியம் செய்கிறார்கள்.
කේනචිත් මන්දිරස්ය ශපථේ කෘතේ මන්දිරතන්නිවාසිනෝඃ ශපථඃ ක්රියතේ|
22 வானத்தின் பேரில் சத்தியம் செய்கிறவர்கள் இறைவனின் அரியணையைக் கொண்டும், அதில் அமர்ந்திருக்கும் அவரைக் கொண்டும் சத்தியம் செய்கிறார்கள்.
කේනචිත් ස්වර්ගස්ය ශපථේ කෘතේ ඊශ්වරීයසිංහාසනතදුපර්ය්යුපවිෂ්ටයෝඃ ශපථඃ ක්රියතේ|
23 “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினா, வெந்தயம், சீரகம் ஆகிய வாசனைச் பொருட்களிலிருந்து பத்திலொன்றை காணிக்கையாகக் கொடுக்கிறீர்கள். ஆனால் மோசேயின் சட்டத்தின் மிக முக்கிய காரியங்களான நீதி, இரக்கம், உண்மைத்தனம் ஆகியவற்றை உதாசீனம் செய்துவிட்டீர்கள். உண்மையாய் இவற்றை நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். அத்துடன் அவற்றையும் கைவிடாதிருக்க வேண்டும்.
හන්ත කපටින උපාධ්යායාඃ ඵිරූශිනශ්ච, යූයං පෝදිනායාඃ සිතච්ඡත්රායා ජීරකස්ය ච දශමාංශාන් දත්ථ, කින්තු ව්යවස්ථායා ගුරුතරාන් න්යායදයාවිශ්වාසාන් පරිත්යජථ; ඉමේ යුෂ්මාභිරාචරණීයා අමී ච න ලංඝනීයාඃ|
24 குருட்டு வழிகாட்டிகளே! நீங்கள் கொசுவை வடிகட்டி எடுக்கிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்குகிறீர்கள்.
හේ අන්ධපථදර්ශකා යූයං මශකාන් අපසාරයථ, කින්තු මහාඞ්ගාන් ග්රසථ|
25 “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, உணவு பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்கிறீர்கள். ஆனால் அவற்றின் உட்புறத்தையோ, நீங்கள் உங்கள் கொள்ளையினாலும் சுய ஆசைகளினாலும் நிரம்பியிருக்கிறீர்கள்.
හන්ත කපටින උපාධ්යායාඃ ඵිරූශිනශ්ච, යූයං පානපාත්රාණාං භෝජනපාත්රාණාඤ්ච බහිඃ පරිෂ්කුරුථ; කින්තු තදභ්යන්තරං දුරාත්මතයා කලුෂේණ ච පරිපූර්ණමාස්තේ|
26 குருடான பரிசேயரே! முதலில் உணவு பாத்திரங்களின் உட்புறத்தைச் சுத்தம் செய்யுங்கள். அப்பொழுது அவற்றின் வெளிப்புறமும் சுத்தமாயிருக்கும்.
හේ අන්ධාඃ ඵිරූශිලෝකා ආදෞ පානපාත්රාණාං භෝජනපාත්රාණාඤ්චාභ්යන්තරං පරිෂ්කුරුත, තේන තේෂාං බහිරපි පරිෂ්කාරිෂ්යතේ|
27 “வேஷக்காரர்களாகிய மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போல் இருக்கிறீர்கள், அவை வெளியே அழகாகக் காணப்படுகின்றன. ஆனால் அவற்றின் உட்புறமோ இறந்தவர்களின் எலும்புகளினாலும், அசுத்தமான எல்லாவற்றினாலும் நிறைந்திருக்கின்றன.
හන්ත කපටින උපාධ්යායාඃ ඵිරූශිනශ්ච, යූයං ශුක්ලීකෘතශ්මශානස්වරූපා භවථ, යථා ශ්මශානභවනස්ය බහිශ්චාරු, කින්ත්වභ්යන්තරං මෘතලෝකානාං කීකශෛඃ සර්ව්වප්රකාරමලේන ච පරිපූර්ණම්;
28 அதுபோலவே, வெளித்தோற்றத்திற்கு மனிதர் பார்வையில் நீங்கள் நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள். ஆனால் உள்ளத்திலோ கபடத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
තථෛව යූයමපි ලෝකානාං සමක්ෂං බහිර්ධාර්ම්මිකාඃ කින්ත්වන්තඃකරණේෂු කේවලකාපට්යාධර්ම්මාභ්යාං පරිපූර්ණාඃ|
29 “மோசேயின் சட்ட ஆசிரியர்களே, பரிசேயர்களே, வேஷக்காரர்களாகிய உங்களுக்கு ஐயோ! நீங்கள் இறைவாக்கினர்களுக்காக, கல்லறைகளைக் கட்டி நீதிமான்களின் நினைவுச் சின்னங்களை அலங்கரிக்கிறீர்கள்.
හා හා කපටින උපාධ්යායාඃ ඵිරූශිනශ්ච, යූයං භවිෂ්යද්වාදිනාං ශ්මශානගේහං නිර්ම්මාථ, සාධූනාං ශ්මශානනිකේතනං ශෝභයථ
30 ‘எங்கள் முற்பிதாக்களின் காலத்தில் நாங்கள் வாழ்ந்திருந்தால், இறைவாக்கினரின் இரத்தத்தைச் சிந்துவதற்கு, நாங்கள் அவர்களுடன் பங்காளிகளாய் இருந்திருக்கமாட்டோம்’ என்றும் சொல்கிறீர்கள்.
වදථ ච යදි වයං ස්වේෂාං පූර්ව්වපුරුෂාණාං කාල අස්ථාස්යාම, තර්හි භවිෂ්යද්වාදිනාං ශෝණිතපාතනේ තේෂාං සහභාගිනෝ නාභවිෂ්යාම|
31 ஆனால் நீங்கள் இறைவாக்கினரைக் கொலைசெய்தவர்களின் தலைமுறையினர் என்பதற்கு நீங்களே சாட்சியாயிருக்கிறீர்கள்.
අතෝ යූයං භවිෂ්යද්වාදිඝාතකානාං සන්තානා ඉති ස්වයමේව ස්වේෂාං සාක්ෂ්යං දත්ථ|
32 ஆகவே, நீங்களும் உங்கள் முற்பிதாக்கள் தொடங்கிய பாவத்தைச் செய்து முடியுங்கள்.
අතෝ යූයං නිජපූර්ව්වපුරුෂාණාං පරිමාණපාත්රං පරිපූරයත|
33 “பாம்புகளே! விரியன் பாம்புக் குட்டிகளே! நரகத் தீர்ப்புக்கு உள்ளாகாமல் எப்படித் தப்புவீர்கள்? (Geenna )
රේ භුජගාඃ කෘෂ්ණභුජගවංශාඃ, යූයං කථං නරකදණ්ඩාද් රක්ෂිෂ්යධ්වේ| (Geenna )
34 ஆகவே நான் இறைவாக்கினரையும், ஞானமுள்ளவர்களையும், ஆசிரியர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். அவர்களில் சிலரை நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்வீர்கள்; மற்றவர்களை உங்கள் ஜெப ஆலயங்களில் சவுக்கினால் அடித்து, பட்டணங்கள்தோறும் துரத்திச்சென்று துன்பப்படுத்துவீர்கள்.
පශ්යත, යුෂ්මාකමන්තිකම් අහං භවිෂ්යද්වාදිනෝ බුද්ධිමත උපාධ්යායාංශ්ච ප්රේෂයිෂ්යාමි, කින්තු තේෂාං කතිපයා යුෂ්මාභි ර්ඝානිෂ්යන්තේ, ක්රුශේ ච ඝානිෂ්යන්තේ, කේචිද් භජනභවනේ කෂාභිරාඝානිෂ්යන්තේ, නගරේ නගරේ තාඩිෂ්යන්තේ ච;
35 அப்படியே பூமியில் சிந்தப்பட்ட நீதிமான்கள் எல்லோரின் இரத்தப்பழியும் உங்கள்மேல் வரும்; நீதிமானான ஆபேலின் இரத்தம் தொடங்கி, ஆலயத்தின் பரிசுத்த இடத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையே நீங்கள் கொலைசெய்த, பரக்கியாவின் மகன் சகரியாவின் இரத்தம் வரைக்கும், எல்லாம் உங்கள்மேல் வரும்.
තේන සත්පුරුෂස්ය හාබිලෝ රක්තපාතමාරභ්ය බේරිඛියඃ පුත්රං යං සිඛරියං යූයං මන්දිරයඥවේද්යෝ ර්මධ්යේ හතවන්තඃ, තදීයශෝණිතපාතං යාවද් අස්මින් දේශේ යාවතාං සාධුපුරුෂාණාං ශෝණිතපාතෝ (අ)භවත් තත් සර්ව්වේෂාමාගසාං දණ්ඩා යුෂ්මාසු වර්ත්තිෂ්යන්තේ|
36 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இவை எல்லாம் இந்தத் தலைமுறையினர்மேல் வந்தே தீரும்.
අහං යුෂ්මාන්ත තථ්යං වදාමි, විද්යමානේ(අ)ස්මින් පුරුෂේ සර්ව්වේ වර්ත්තිෂ්යන්තේ|
37 “எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொலைசெய்து உன்னிடம் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிற பட்டணமே, ஒரு கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழ் கூட்டிச் சேர்ப்பதுபோல் எத்தனையோமுறை நானும் உன் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்ள ஏக்கமாய் இருந்தேன், உனக்கோ விருப்பமில்லாமல் போயிற்றே.
හේ යිරූශාලම් හේ යිරූශාලම් නගරි ත්වං භවිෂ්යද්වාදිනෝ හතවතී, තව සමීපං ප්රේරිතාංශ්ච පාෂාණෛරාහතවතී, යථා කුක්කුටී ශාවකාන් පක්ෂාධඃ සංගෘහ්ලාති, තථා තව සන්තානාන් සංග්රහීතුං අහං බහුවාරම් ඓච්ඡං; කින්තු ත්වං න සමමන්යථාඃ|
38 இதோ பார், உன் வீடு உனக்குப் பாழாய் விடப்பட்டிருக்கிறது.
පශ්යත යෂ්මාකං වාසස්ථානම් උච්ඡින්නං ත්යක්ෂ්යතේ|
39 நான் உனக்குச் சொல்கிறேன், ‘கர்த்தருடைய பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்பட்டவர்’ என்று நீ சொல்லும்வரைக்கும், இனிமேல் என்னைக் காணமாட்டாய்” என்றார்.
අහං යුෂ්මාන් තථ්යං වදාමි, යඃ පරමේශ්වරස්ය නාම්නාගච්ඡති, ස ධන්ය ඉති වාණීං යාවන්න වදිෂ්යථ, තාවත් මාං පුන ර්න ද්රක්ෂ්යථ|