< மத்தேயு 22 >

1 மீண்டும் இயேசு அவர்களோடு உவமைகள் மூலம் பேசி, பரலோக அரசைப் பற்றிச் சொன்னதாவது:
อนนฺตรํ ยีศุ: ปุนรปิ ทฺฤษฺฏานฺเตน ตานฺ อวาทีตฺ,
2 “பரலோக அரசு ஒரு அரசன் தனது மகனின் திருமண விருந்தை ஆயத்தப்படுத்தியதற்கு ஒப்பாயிருக்கிறது.
สฺวรฺคียราชฺยมฺ เอตาทฺฤศสฺย นฺฤปเต: สมํ, โย นิช ปุตฺรํ วิวาหยนฺ สรฺวฺวานฺ นิมนฺตฺริตานฺ อาเนตุํ ทาเสยานฺ ปฺรหิตวานฺ,
3 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை வரும்படி அழைப்பதற்கு, அவன் தன் வேலைக்காரர்களை அவர்களிடம் அனுப்பினான். அவர்களோ வர மறுத்துவிட்டார்கள்.
กินฺตุ เต สมาคนฺตุํ เนษฺฏวนฺต: ฯ
4 “அவன் இன்னும் சில வேலைக்காரர்களை அனுப்பி, ‘அழைக்கப்பட்டவர்களிடம், நான் என்னுடைய விருந்தை ஆயத்தம் செய்திருக்கிறேன்: சிறப்பான விருந்து உங்களுக்கென்று படைக்கப்பட்டு, எல்லாம் ஆயத்தமாய் இருக்கின்றன. திருமண விருந்துக்கு வாருங்கள் என்று சொல்லுங்கள்’ என்றான்.
ตโต ราชา ปุนรปิ ทาสานนฺยานฺ อิตฺยุกฺตฺวา เปฺรษยามาส, นิมนฺตฺริตานฺ วทต, ปศฺยต, มม เภชฺยมาสาทิตมาเสฺต, นิชวฺฏษาทิปุษฺฏชนฺตูนฺ มารยิตฺวา สรฺวฺวํ ขาทฺยทฺรวฺยมาสาทิตวานฺ, ยูยํ วิวาหมาคจฺฉตฯ
5 “ஆனால் அழைக்கப்பட்டவர்களோ, அதைக் கவனிக்காமல் தங்கள் வேலைகளுக்குச் சென்றார்கள்; ஒருவன் வயலுக்கும் வேறொருவன் தனது வியாபாரத்துக்கும் போனான்.
ตถปิ เต ตุจฺฉีกฺฤตฺย เกจิตฺ นิชกฺเษตฺรํ เกจิทฺ วาณิชฺยํ ปฺรติ สฺวสฺวมารฺเคณ จลิตวนฺต: ฯ
6 மற்றவர்களோ, அரசனுடைய வேலைக்காரர்களைப் பிடித்துத் துன்புறுத்தி அவர்களைக் கொன்றார்கள்.
อเนฺย โลกาสฺตสฺย ทาเสยานฺ ธฺฤตฺวา เทาราตฺมฺยํ วฺยวหฺฤตฺย ตานวธิษุ: ฯ
7 அரசன் கடுங்கோபமடைந்தான். அவன் தனது படைகளை அனுப்பி, அந்தக் கொலைகாரர்களை அழித்து, அவர்களுடைய பட்டணத்தை எரித்தான்.
อนนฺตรํ ส นฺฤปติสฺตำ วารฺตฺตำ ศฺรุตฺวา กฺรุธฺยนฺ ไสนฺยานิ ปฺรหิตฺย ตานฺ ฆาตกานฺ หตฺวา เตษำ นครํ ทาหยามาสฯ
8 “பின்பு அரசன் தன் வேலைக்காரர்களிடம், ‘திருமண விருந்து ஆயத்தமாயிருக்கிறது. ஆனால் நான் அழைத்தவர்களோ, அதற்குத் தகுதியற்றவர்களாய்ப் போனார்கள்.
ตต: ส นิชทาเสยานฺ พภาเษ, วิวาหียํ โภชฺยมาสาทิตมาเสฺต, กินฺตุ นิมนฺตฺริตา ชนา อโยคฺยา: ฯ
9 இப்பொழுது வீதிகளின் சந்திகளுக்குப் போங்கள், நீங்கள் காண்கிறவர்கள் யாராயிருந்தாலும் விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றான்.
ตสฺมาทฺ ยูยํ ราชมารฺคํ คตฺวา ยาวโต มนุชานฺ ปศฺยต, ตาวเตอว วิวาหียโภชฺยาย นิมนฺตฺรยตฯ
10 எனவே வேலைக்காரர்கள் வெளியே வீதிகளில் போய், நல்லவர்களும் கெட்டவர்களுமான தாங்கள் கண்ட எல்லா மக்களையும் கூட்டிச் சேர்த்தார்கள். திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிரம்பியது.
ตทา เต ทาเสยา ราชมารฺคํ คตฺวา ภทฺรานฺ อภทฺรานฺ วา ยาวโต ชนานฺ ททฺฤศุ: , ตาวเตอว สํคฺฤหฺยานยนฺ; ตโต'ภฺยาคตมนุไช รฺวิวาหคฺฤหมฺ อปูรฺยฺยตฯ
11 “அரசன் விருந்தினரைப் பார்க்க உள்ளே வந்தபோது, திருமண உடை உடுத்தியிராத ஒருவன் அங்கேயிருப்பதைக் கண்டான்.
ตทานีํ ส ราชา สรฺวฺวานภฺยาคตานฺ ทฺรษฺฏุมฺ อภฺยนฺตรมาคตวานฺ; ตทา ตตฺร วิวาหียวสนหีนเมกํ ชนํ วีกฺษฺย ตํ ชคาทฺ,
12 அரசன், ‘நண்பனே, திருமண உடையின்றி, நீ எப்படி இங்கே வந்தாய்?’ என்று கேட்டான். அவன் பேச்சற்று நின்றான்.
เห มิตฺร, ตฺวํ วิวาหียวสนํ วินา กถมตฺร ปฺรวิษฺฏวานฺ? เตน ส นิรุตฺตโร พภูวฯ
13 “அப்பொழுது அரசன் ஏவலாட்களிடம், ‘அவனுடைய கையையும் காலையும் கட்டி, வெளியே இருளில் தள்ளுங்கள், அங்கே பற்கடிப்பும் அழுகையும் இருக்கும்’ என்றான்.
ตทา ราชา นิชานุจรานฺ อวทตฺ, เอตสฺย กรจรณานฺ พทฺธา ยตฺร โรทนํ ทนฺไตรฺทนฺตฆรฺษณญฺจ ภวติ, ตตฺร วหิรฺภูตตมิเสฺร ตํ นิกฺษิปตฯ
14 “ஏனெனில் அநேகர் அழைக்கப்படுகிறார்கள், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலர்.”
อิตฺถํ พหว อาหูตา อลฺเป มโนภิมตา: ฯ
15 பின்பு பரிசேயர் போய், இயேசுவின் வார்த்தையிலே அவரைக் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் திட்டமிட்டார்கள்.
อนนฺตรํ ผิรูศิน: ปฺรคตฺย ยถา สํลาเปน ตมฺ อุนฺมาเถ ปาตเยยุสฺตถา มนฺตฺรยิตฺวา
16 பரிசேயர்கள் ஏரோதியர்களுடன் தங்கள் சீடரை இயேசுவினிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, நீர் நேர்மையானவரும், இறைவனின் வழியை சத்தியத்தின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். நீர் மனிதருக்கு முகதாட்சண்யம் காட்டாதவராய் இருப்பதால் ஆள்பார்த்து எதையும் செய்யமாட்டீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
เหโรทียมนุไช: สากํ นิชศิษฺยคเณน ตํ ปฺรติ กถยามาสุ: , เห คุโร, ภวานฺ สตฺย: สตฺยมีศฺวรียมารฺคมุปทิศติ, กมปิ มานุษํ นานุรุธฺยเต, กมปิ นาเปกฺษเต จ, ตทฺ วยํ ชานีม: ฯ
17 ஆகவே ரோமப் பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியானதா? இல்லையா? உம்முடைய அபிப்பிராயத்தை எங்களுக்குச் சொல்லும்” என்றார்கள்.
อต: ไกสรภูปาย กโร'สฺมากํ ทาตโวฺย น วา? อตฺร ภวตา กึ พุธฺยเต? ตทฺ อสฺมานฺ วทตุฯ
18 ஆனால் இயேசுவோ, அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்தவராய் அவர்களிடம், “வேஷக்காரர்களே! நீங்கள் ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?
ตโต ยีศุเสฺตษำ ขลตำ วิชฺญาย กถิตวานฺ, เร กปฏิน: ยุยํ กุโต มำ ปริกฺษเธฺว?
19 வரியைச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தும் நாணயத்தை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு வெள்ளிக்காசை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
ตตฺกรทานสฺย มุทฺรำ มำ ทรฺศยตฯ ตทานีํ ไตสฺตสฺย สมีปํ มุทฺราจตุรฺถภาค อานีเต
20 இயேசு அவர்களிடம் அந்த நாணயத்தைக் காட்டி, “இந்த நாணயத்திலுள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையவை?” என்று கேட்டார்.
ส ตานฺ ปปฺรจฺฉ, อตฺร กเสฺยยํ มูรฺตฺติ รฺนาม จาเสฺต? เต ชคทุ: , ไกสรภูปสฺยฯ
21 அதற்கு அவர்கள், “ரோமப் பேரரசன் சீசருடையது” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.
ตต: ส อุกฺตวาน, ไกสรสฺย ยตฺ ตตฺ ไกสราย ทตฺต, อีศฺวรสฺย ยตฺ ตทฺ อีศฺวราย ทตฺตฯ
22 அவர்கள் இதைக் கேட்டவுடன் வியப்படைந்து இயேசுவை விட்டுச் சென்றார்கள்.
อิติ วากฺยํ นิศมฺย เต วิสฺมยํ วิชฺญาย ตํ วิหาย จลิตวนฺต: ฯ
23 அதே நாளில் உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கிற சதுசேயர் அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கும்படி வந்தார்கள்.
ตสฺมินฺนหนิ สิทูกิโน'รฺถาตฺ ศฺมศานาตฺ โนตฺถาสฺยนฺตีติ วากฺยํ เย วทนฺติ, เต ยีเศรนฺติกมฺ อาคตฺย ปปฺรจฺฉุ: ,
24 “போதகரே, ‘ஒருவன் பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் இறந்தவனுடைய மனைவியைத் திருமணம் செய்து, இறந்தவனுக்காகப் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும்’ என்று மோசே எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்.
เห คุโร, กศฺจินฺมนุชศฺเจตฺ นิ: สนฺตาน: สนฺ ปฺราณานฺ ตฺยชติ, ตรฺหิ ตสฺย ภฺราตา ตสฺย ชายำ วฺยุหฺย ภฺราตุ: สนฺตานมฺ อุตฺปาทยิษฺยตีติ มูสา อาทิษฺฏวานฺฯ
25 எங்கள் மத்தியில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். மூத்தவன் திருமணம் செய்து, பின் இறந்துபோனான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லாததால், அவன் தனது மனைவியைத் தனது சகோதரனுக்கு விட்டுப்போனான்.
กินฺตฺวสฺมากมตฺร เก'ปิ ชนา: สปฺตสโหทรา อาสนฺ, เตษำ เชฺยษฺฐ เอกำ กนฺยำ วฺยวหาตฺ, อปรํ ปฺราณตฺยาคกาเล สฺวยํ นิ: สนฺตาน: สนฺ ตำ สฺตฺริยํ สฺวภฺราตริ สมรฺปิตวานฺ,
26 அப்படியே இரண்டாம், மூன்றாம் சகோதரருக்கும் முறையே ஏழாவது சகோதரன்வரை எல்லோருக்கும் அவள் மனைவியானாள்.
ตโต ทฺวิตียาทิสปฺตมานฺตาศฺจ ตไถว จกฺรุ: ฯ
27 கடைசியாக அந்தப் பெண்ணும் இறந்துபோனாள்.
เศเษ สาปี นารี มมารฯ
28 அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
มฺฤตานามฺ อุตฺถานสมเย เตษำ สปฺตานำ มเธฺย สา นารี กสฺย ภารฺยฺยา ภวิษฺยติ? ยสฺมาตฺ สรฺวฺเวอว ตำ วฺยวหนฺฯ
29 இயேசு அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் வேதவசனங்களையும் இறைவனுடைய வல்லமையையும் அறியவில்லை. அதனால்தான் நீங்கள் தவறான எண்ணம் கொண்டவர்களாய் இருக்கிறீர்கள்.
ตโต ยีศุ: ปฺรตฺยวาทีตฺ, ยูยํ ธรฺมฺมปุสฺตกมฺ อีศฺวรียำ ศกฺติญฺจ น วิชฺญาย ภฺรานฺติมนฺต: ฯ
30 உயிர்த்தெழுதலில் மக்கள் திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள தூதரைப் போல் இருப்பார்கள்.
อุตฺถานปฺราปฺตา โลกา น วิวหนฺติ, น จ วาจา ทียนฺเต, กินฺตฺวีศฺวรสฺย สฺวรฺคสฺถทูตานำ สทฺฤศา ภวนฺติฯ
31 இறந்தவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்து, இறைவன் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா?
อปรํ มฺฤตานามุตฺถานมธิ ยุษฺมานฺ ปฺรตียมีศฺวโรกฺติ: ,
32 ‘நானே ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்’ அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவன்” என்றார்.
"อหมิพฺราหีม อีศฺวร อิสฺหาก อีศฺวโร ยากูพ อีศฺวร" อิติ กึ ยุษฺมาภิ รฺนาปาฐิ? กินฺตฺวีศฺวโร ชีวตามฺ อีศฺวร: , ส มฺฤตานามีศฺวโร นหิฯ
33 மக்கள் கூட்டம் இதைக் கேட்டபோது, அவருடைய போதனைகளைக் குறித்து வியப்படைந்தார்கள்.
อิติ ศฺรุตฺวา สรฺเวฺว โลกาสฺตโสฺยปเทศาทฺ วิสฺมยํ คตา: ฯ
34 இயேசு சதுசேயர்களை வாயடைத்துப் போகச் செய்தார் என்று கேள்விப்பட்டபோது, பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தார்கள்.
อนนฺตรํ สิทูกินามฺ นิรุตฺตรตฺววารฺตำ นิศมฺย ผิรูศิน เอกตฺร มิลิตวนฺต: ,
35 அவர்களில் மோசேயின் சட்டத்தில் தேறின ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்டு அவரைச் சோதித்தான்:
เตษาเมโก วฺยวสฺถาปโก ยีศุํ ปรีกฺษิตุํ ปปจฺฉ,
36 “போதகரே, மோசேயின் சட்டத்தில் மிகப்பெரிய கட்டளை எது?” என்றான்.
เห คุโร วฺยวสฺถาศาสฺตฺรมเธฺย กาชฺญา เศฺรษฺฐา?
37 இயேசு அவனுக்குப் பதிலாக, “உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக.
ตโต ยีศุรุวาจ, ตฺวํ สรฺวฺวานฺต: กรไณ: สรฺวฺวปฺราไณ: สรฺวฺวจิตฺไตศฺจ สากํ ปฺรเภา ปรเมศฺวเร ปฺรียสฺว,
38 இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை.
เอษา ปฺรถมมหาชฺญาฯ ตสฺยา: สทฺฤศี ทฺวิตียาชฺไญษา,
39 இரண்டாவதும் இதைப் போன்றதே: நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல, உன் அயலானிலும் அன்பாய் இரு.
ตว สมีปวาสินิ สฺวาตฺมนีว เปฺรม กุรุฯ
40 முழு மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் இந்த இரண்டு கட்டளைகளிலும் அடங்கி இருக்கின்றன” என்றார்.
อนโย รฺทฺวโยราชฺญโย: กฺฤตฺสฺนวฺยวสฺถายา ภวิษฺยทฺวกฺตฺฤคฺรนฺถสฺย จ ภารสฺติษฺฐติฯ
41 பரிசேயர் ஒன்றுகூடியபோது, இயேசு அவர்களிடம்,
อนนฺตรํ ผิรูศินามฺ เอกตฺร สฺถิติกาเล ยีศุสฺตานฺ ปปฺรจฺฉ,
42 “நீங்கள் கிறிஸ்துவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அவர் தாவீதின் மகன்” என்று பதிலளித்தார்கள்.
ขฺรีษฺฏมธิ ยุษฺมากํ กีทฺฤคฺโพโธ ชายเต? ส กสฺย สนฺตาน: ? ตตเสฺต ปฺรตฺยวทนฺ, ทายูท: สนฺตาน: ฯ
43 அதற்கு இயேசு அவர்களிடம், “அப்படியானால் தாவீது பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு பேசுகையில், அவரைக், ‘கர்த்தர்’ என்று அழைத்தது எப்படி?” ஏனெனில் தாவீது,
ตทา ส อุกฺตวานฺ, ตรฺหิ ทายูทฺ กถมฺ อาตฺมาธิษฺฐาเนน ตํ ปฺรภุํ วทติ?
44 “‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது பாதபடியாக்கும்வரை, எனது வலதுபக்கத்தில் உட்காரும்”’ என்று சொல்லியிருக்கிறாரே.
ยถา มม ปฺรภุมิทํ วากฺยมวทตฺ ปรเมศฺวร: ฯ ตวารีนฺ ปาทปีฐํ เต ยาวนฺนหิ กโรมฺยหํฯ ตาวตฺ กาลํ มทีเย ตฺวํ ทกฺษปารฺศฺว อุปาวิศฯ อโต ยทิ ทายูทฺ ตํ ปฺรภุํ วทติ, รฺติห ส กถํ ตสฺย สนฺตาโน ภวติ?
45 தாவீது அவரைக் ‘கர்த்தர்,’ என்று அழைத்தான். அப்படியிருக்க கிறிஸ்து எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்று கேட்டார்.
ตทานีํ เตษำ โกปิ ตทฺวากฺยสฺย กิมปฺยุตฺตรํ ทาตุํ นาศกฺโนตฺ;
46 அவருக்கு யாராலும், ஒரு வார்த்தையும் பதிலாகச் சொல்ல முடியவில்லை. அன்றிலிருந்து, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
ตทฺทินมารภฺย ตํ กิมปิ วากฺยํ ปฺรษฺฏุํ กสฺยาปิ สาหโส นาภวตฺฯ

< மத்தேயு 22 >