< மத்தேயு 19 >

1 இயேசு இவற்றைச் சொல்லி முடித்தபின்பு, அவர் கலிலேயாவைவிட்டுப் புறப்பட்டு, யோர்தானின் மறுபக்கத்திலுள்ள யூதேயா பகுதிக்குச் சென்றார்.
ଜିସୁ ଇସଃବୁ କଃତା କୟ୍‌ ସଃର୍ଲା ହଃଚେ, ଗାଲିଲି ତଃୟ୍‌ହୁଣି ଲେଉଟି ଜର୍ଦନ୍ ଗାଡାର୍‌ ସେହାଟି ରେତା ଜିଉଦା ରାଇଜ୍‌ ହାକ୍‌ ହଚ୍‌ଲା ।
2 மக்கள் பெருங்கூட்டமாக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அங்கே அவர், அவர்களில் வியாதியுள்ளோரைக் குணப்படுத்தினார்.
ଆରେକ୍‌ ଗାଦେକ୍‌ ଲକ୍‌ ତାର୍‌ ହଃଚେ ହଃଚେ ଗଃଳାୟ୍‌, ଆର୍‌ ସେତି ସେ ରଗିମଃନ୍‌କେ ଉଜ୍‌ କଃଲା ।
3 சில பரிசேயர் இயேசுவைச் சோதிக்கும்படி, அவரிடத்தில் வந்து, “ஒருவன் தன் மனைவியை எந்தவொரு காரணத்திற்காகவும் விவாகரத்து செய்வது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள்.
ସଃଡେବଃଳ୍‌ ପାରୁସିମଃନ୍ ଜିସୁର୍‌ ଚଃମେ ଆୟ୍‌ଲାୟ୍‌ ଆର୍‌ ତାକ୍‌ କଃଟ୍‌ହାଳ୍‌ କଃରି ହଃଚାର୍ଲାୟ୍‌, “କାୟ୍‌ତାର୍‌ ଗିନେ ହେଁ ଅଃହ୍‌ଣାର୍‌ ମାୟ୍‌ଜିକେ ମସାର୍‌ ବିଦି ହଃର୍କାରେ କାୟ୍‌ ଚାଡୁକ୍‌ ଅୟ୍‌ଦ୍‌?”
4 அதற்கு அவர், “தொடக்கத்திலே படைப்பில் இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகப் படைத்தார்’ என்பதை நீங்கள் வாசித்ததில்லையா”
ଜିସୁ କୟ୍‌ଲା, “ତୁମିମଃନ୍ କାୟ୍‌ରି ଦଃର୍ମ୍‌ ସାସ୍ତର୍‌ ନଃହଳାସ୍‌? ରାଜି ଉବ୍‌ଜାୟ୍‌ଲା ମାପ୍ରୁ ଆଗେହୁଣି ସେମଃନ୍‌କେ ଅଃଣ୍ଡ୍ରା ଆର୍‌ ଟକି କଃରି ତିଆର୍‌ କଃରିଆଚେ ।
5 இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.
ଆର୍‌ କୟ୍‌ଲା, ‘ଇତାର୍‌ ଗିନେ ମାନାୟ୍‌ ଆୟାଉବାକ୍‌ ଚାଡେଦ୍‌ ଆର୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ ମାୟ୍‌ଜି ଟାଣେ ମଃନ୍ ଦଃୟଃଦ୍‌ ଆର୍‌ ଦୁୟ୍‌ ଲକ୍‌ ଗଟେକ୍‌ ଅଃଉତି ।’
6 எனவே அவர்கள் இருவராய் இல்லாமல் ஒரே உடலாக இருக்கிறார்கள். ஆகையால் “இறைவன் ஒன்றாய் இணைத்தவர்களை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
ଇତାକ୍‌ ସେମଃନ୍ ଆର୍‌ ବିନ୍ ନଃଉତି, ମଃତର୍‌ ଗଟେକ୍‌ ଅଃଉତି; ବଃଲେକ୍‌ ଜାୟ୍‌ରି ଇସ୍ୱର୍‌ ମିସାୟ୍‌ ଆଚେ, ମାନାୟ୍‌ ସେରି ଅଃଲ୍‌ଗା ଅଃଲ୍‌ଗା ନଃକେର ।”
7 அதற்கு அவர்கள், “அப்படியானால் ஒருவன் தனது மனைவிக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுத்து அவளை அனுப்பிவிடலாம் என்று மோசே கட்டளையிட்டிருப்பது ஏன்?” என்று கேட்டார்கள்.
ପାରୁସିମଃନ୍ ତାକ୍‌ ହଃଚାର୍ଲାୟ୍‌, “ତଃବେ ମସା କାୟ୍‌ତାକ୍‌ ଚାଡ୍‌ହଃତାର୍‌ ଲେକି ଦଃୟ୍‌ ମାୟ୍‌ଜିକେ ଚାଡୁକ୍‌ ଆଦେସ୍‌ ଦଃୟ୍‌ ଆଚେ?”
8 இயேசு அதற்குப் பதிலாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே, உங்கள் மனைவியை விவாகரத்து செய்வதற்கு மோசே அனுமதித்தார். ஆனால் இது தொடக்கத்திலிருந்து அப்படியிருக்கவில்லை.
ଜିସୁ ସେମଃନ୍‌କେ କୟ୍‌ଲା, “କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ମସା ତୁମିମଃନାର୍‌ ଅଃଟୁଆ ମଃନ୍ ଦଃକିକଃରି ତୁମିମଃନାର୍‌ ଅଃହ୍‌ଣା ଅଃହ୍‌ଣାର୍‌ ମାୟ୍‌ଜିକେ ଚାଡୁକ୍‌ କୟ୍‌ଲା, ମଃତର୍‌ ଆଗ୍‌ତୁ ହୁଣି ସେନ୍‌କାର୍‌ ନଃରିଲି ।
9 நான் உங்களுக்குச் சொல்கிறேன், தன் மனைவி விபசாரம் செய்ததினாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் ஒருவன் அவளை விவாகரத்து செய்துவிட்டு, அதற்குப் பின்பு வேறு ஒருத்தியைத் திருமணம் செய்தால், அவனும் விபசாரம் செய்கிறான்” என்றார்.
ମଃତର୍‌ ମୁଁୟ୍‌ ତୁମିମଃନ୍‌କେ କଃଉଁଲେ, ଜୁୟ୍‌ ଲକ୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ ମାୟ୍‌ଜିକେ, ଦାରି ଦଃସ୍‌ ଚାଡି ବିନ୍ କଃତାର୍‌ ଗିନେ ଚାଡ୍ ହଃତାର୍‌ ଦଃୟଃଦ୍‌ ଆର୍‌ ଆରେକ୍‌ ଗଟେକ୍‌ ମାୟ୍‌ଜିକେ ସଃଙ୍ଗାୟ୍‌ଦ୍‌ ସେ ଦାରିକାମ୍‌ କଃରେଦ୍‌ ।”
10 சீடர்கள் அவரிடம், “கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் உறவுநிலை இப்படியானால், திருமணம் செய்யாமல் இருப்பதே நல்லது” என்றார்கள்.
ଚେଲାମଃନ୍ ଜିସୁକେ କୟ୍‌ଲାୟ୍‌, “ମାୟ୍‌ଜି ସଃଙ୍ଗ୍ ଅଃଣ୍ଡ୍ରାର୍‌ ଜଦି ଇରଃକମ୍‌ ବିସୟ୍‌ ଆଚେ, ତଃବେ ବିବା କଃଉତାର୍‌ ନିକ ନାୟ୍‌ ।”
11 இயேசு அதற்குப் பதிலாக, “இந்த வார்த்தையை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கான வரம் பெற்றவர்கள் மட்டுமே இதை ஏற்றுக்கொள்வார்கள்.
ମଃତର୍‌ ଜିସୁ ସେମଃନ୍‌କେ କୟ୍‌ଲା, “ସଃବୁ ଲକ୍‌ ଇ କଃତା ମାନୁ ନଃହାର୍‌ତି, ମଃତର୍‌ ଜୁୟ୍‌ ଲକ୍‌ମଃନ୍‌କେ ସଃକ୍ତି ଦିଆ ଅୟ୍‌ଆଚେ, ସେମଃନ୍ ହଃକା କଃରୁ ହାର୍ତି ।
12 சிலர் பிறவியிலேயே திருமண உறவுகொள்ள இயலாதவர்களாக இருக்கிறார்கள்; சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்; சிலர் பரலோக அரசுக்காகத் திருமணத்தைக் கைவிட்டுத் தங்களைத் தாங்களே அப்படி ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவன் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ କେ କେ ଆୟ୍‌ସିର୍‌ ହେଟେହୁଣି ବେଜୁ ଅୟ୍‌ ଜଃଲମ୍‌ ଅୟ୍‌ ଆଚ୍‌ତି, ଆର୍‌ କେ କେ ମାନାୟ୍‌ ତଃୟ୍‌ହୁଣି ବେଜୁ କଃରାଜାୟ୍‌ ଆଚ୍‌ତି, ଆରେକ୍‌ କେ କେ ସଃର୍ଗ୍‌ ରାଇଜ୍‌ ଗିନେ ଅଃହ୍‌ଣା ଅଃହ୍‌ଣାକ୍‌ ବେଜୁ କଃରି ଆଚ୍‌ତି । ଜୁୟ୍‌ ଲକ୍‌ ଇରି କଃରୁ ହାରେ, ସେ କଃର ।”
13 அதற்குப் பின்பு சிறுபிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைத்து ஜெபிக்க வேண்டும் என்று, அவர்கள் சிறுபிள்ளைகளை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடர்களோ, அவர்களைக் கொண்டுவந்தவர்களைக் கண்டித்தார்கள்.
ଜିସୁ ଜଃନ୍‌କଃରି ସାନ୍ ହିଲାମଃନାର୍‌ ଉହ୍ରେ ଆତ୍‌ ସଃଙ୍ଗାୟ୍‌ ପାର୍ତ୍‌ନା କଃରେଦ୍‌, ଇତାର୍‌ ଗିନେ ଲକ୍‌ମଃନ୍ ତାର୍‌ ଚଃମେ ସାନ୍ ସାନ୍ ହିଲାମଃନ୍‌କେ ଆଣ୍‌ଲାୟ୍‌, ମଃତର୍‌ ଚେଲାମଃନ୍ ଆଣ୍‌ତା ଲକ୍‌ମଃନ୍‌କେ ଦଃକାଦିଲାୟ୍‌ ।
14 இயேசு அவர்களிடம், “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில் பரலோக அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது” என்றார்.
ମଃତର୍‌ ଜିସୁ କୟ୍‌ଲା, “ସାନ୍ ହିଲାମଃନ୍‌କେ ଚାଡି ଦିଆସ୍‌, ସେମଃନ୍‌କେ ମର୍‌ ଚଃମେ ଆସୁକ୍‌ ମଃନା କଃରା ନାୟ୍‌, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ସଃର୍ଗ୍‌ ରାଇଜ୍‌ ଇରଃକମ୍‌ ଲକ୍‌ମଃନାର୍‌ ।”
15 அவர் பிள்ளைகள்மேல் தமது கைகளை வைத்து ஆசீர்வதித்த பின்பு, அந்த இடத்தைவிட்டுச் சென்றார்.
ଆର୍‌ ଜିସୁ ସେମଃନାର୍‌ ଉହ୍ରେ ଆତ୍‌ ସଃଙ୍ଗାୟ୍‌ ଆସିର୍ବାଦ୍‌ କଃରି ସେତିହୁଣି ବାରାୟ୍‌ ଗଃଲା ।
16 அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு நான் செய்யவேண்டிய நல்ல செயல் என்ன?” எனக் கேட்டான். (aiōnios g166)
ଆର୍‌ ଗଟ୍‌ ମାଜନ୍ ଦଃଙ୍ଗ୍‌ଳା ଜିସୁର୍‌ ଚଃମେ ଆସି ହଃଚାର୍ଲା, “ଏ ସଃତ୍‌ ଗୁରୁ, ଅଃମ୍ବର୍‌ ଜିବନ୍‌ ହାଉଁକ୍‌ ମୁଁୟ୍‌ କାୟ୍‌ ନିକ କାମ୍‌ କଃରିନ୍ଦ୍‌?” (aiōnios g166)
17 “நல்லது என்ன என்பதைப்பற்றி நீ ஏன் என்னிடம் கேட்கிறாய்? நல்லவர் ஒருவரே இருக்கிறார். நீ வாழ்விற்குள் செல்லவேண்டுமானால் கட்டளைகளுக்குக் கீழ்ப்படி” என்றார்.
ଜିସୁ ତାକ୍‌ କୟ୍‌ଲା, “ନିକ ବିସୟେ ମକ୍‌ କାୟ୍‌ତାକ୍‌ ହଃଚାରୁଲି? ଇସ୍ୱର୍‌ ହଃକା ସଃତ୍‌, ମଃତର୍‌ ତୁୟ୍‌ ଜଦି ଅଃମ୍ବର୍‌ ଜିବନ୍‌ ହାଉଁକେ ମଃନ୍ କଃରୁଲିସ୍‌, ତଃବେ ଇସ୍ୱରାର୍‌ ବିଦି ସଃବୁ ମାନ୍ ।”
18 “எந்தக் கட்டளைகள்?” என அவன் விசாரித்தான். இயேசு அதற்குப் பதிலாக, “கொலை செய்யாதே, விபசாரம் செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே,
ସେ ଜିସୁକେ ହଃଚାର୍ଲା, “କାୟ୍‌ କାୟ୍‌ ରଃକମ୍‌ ବଲ୍‌?” ଜିସୁ ତାକ୍‌ କୟ୍‌ଲା, “ଇରିମଃନ୍‌, ‘ନଃର୍‌ ମାରା ନାୟ୍‌, ଦାରିକାମ୍‌ କଃରା ନାୟ୍‌, ଚରି କଃରାନାୟ୍‌, ମିଚ୍ ସାକି ଦିଆସ୍‌ ନାୟ୍‌ ।
19 உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட, உன்னில் அன்பாய் இருப்பதுபோல், உன் அயலானிடம் அன்பாய் இரு என்பவைகளே” என்றார்.
ଆୟା ଉବାକ୍‌ ମାନ୍‌ତି କଃରା, ଆରେକ୍‌ ତୁମାର୍‌ ହାକିହଃଳ୍‌ସାକେ ଅଃହ୍‌ଣାକ୍‌ ଲାଡ୍‌ କଃଲା ହର୍‌ ଲାଡ୍‌ କଃରା ।’”
20 அதற்கு அந்த வாலிபன், “இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன், இன்னும் எனக்கு என்ன குறைபாடு?” என்றான்.
ସେ ବେଣ୍ଡ୍ୟା ମାନାୟ୍‌ ଜିସୁକେ କୟ୍‌ଲା, “ଇରିମଃନ୍‌ ମୁଁୟ୍‌ ସଃବୁ କଃରି ଆସୁଲେ, ମର୍‌ ଆର୍‌ କାୟ୍‌ରି କଃରୁକେ ବାକି ଆଚେ?”
21 இயேசு அதற்கு பதிலாக, “நீ குறைபாடற்றவனாய் இருக்க விரும்பினால், போய் உனது உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
ଜିସୁ ତାକ୍‌ କୟ୍‌ଲା, “ଜଦି ତୁୟ୍‌ ହୁରୁଣ୍ ଅଃଉଁକେ ମଃନ୍ କଃରୁଲିସ୍‌, ତଃବେ ଜାୟ୍‌କଃରି ଅଃହ୍‌ଣାର୍‌ ସଃର୍ନେ ଦଃନ୍ ବିକିକଃରି କାୟ୍‌ରି ନୟ୍‌ଲା ଲକ୍‌ମଃନ୍‌କେ ଦାନ୍‌ କଃରି ଦେସ୍‌, ଆର୍‌ ତୁୟ୍‌ ସଃର୍ଗେ ଦଃନ୍ ହାଉସି; ତାର୍‌ହଃଚେ, ମର୍‌ ହଃଚେ ହଃଚେ ଆଉ ।”
22 இதை அந்த வாலிபன் கேட்டபோது, துக்கத்துடன் திரும்பிப்போனான். ஏனெனில் அவன் பெரிய செல்வந்தனாய் இருந்தான்.
ମଃତର୍‌ ଇ କଃତା ସେ ବେଣ୍ଡ୍ୟା ସୁଣ୍‌ଲା, ଆର୍‌ ମଃନ୍ ଦୁକ୍‌କଃରି ବାରାୟ୍‌ ଗଃଲା, ବଃଲେକ୍‌ ତାର୍‌ ଜଃବର୍‌ ଦଃନ୍ ରିଲି ।
23 அப்பொழுது இயேசு தமது சீடர்களிடம், “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு செல்வந்தன் பரலோக அரசிற்குள் செல்வது மிகக் கடினமானது.
ସେତାକ୍‌ ଜିସୁ ଅଃହ୍‌ଣାର୍‌ ଚେଲାମଃନ୍‌କେ କୟ୍‌ଲା, “ମୁଁୟ୍‌ ତୁମିମଃନ୍‌କେ ସଃତ୍‌ କଃଉଁଲେ, ମାଜନ୍ ଲକ୍‌ କଃଡେ କଃସ୍ଟେ ସଃର୍ଗ୍‌ ରାଇଜେ ଜାୟ୍‌ଦ୍‌ ।
24 மறுபடியும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு செல்வந்தன் இறைவனின் அரசிற்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதிற்குள் நுழைவது சுலபமாக இருக்கும்” என்றார்.
ଆରେକ୍‌ ଗଟ୍‌ତର୍‌ ମୁଁୟ୍‌ ତୁମିମଃନ୍‌କେ ସଃତ୍‌ କଃଉଁଲେ, ଗଟ୍‌ ମାଜନ୍‌ ଲକ୍‌ ଇସ୍ୱରାର୍‌ ରାଇଜେ ଜାତା ବାଟା, ସୁତ୍‌ଲିର୍‌ କାଣାବାଟ୍‌ ଅୟ୍‌ ଉଟ୍‌ ଚିଙ୍ଗୁଳ୍‌ତାର୍‌ ଉସାସ୍‌ ।”
25 இதைச் சீடர்கள் கேட்டபோது, மிகவும் வியப்புற்று, “அப்படியானால் யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” எனக் கேட்டார்கள்.
ଚେଲାମଃନ୍ ଇରି ସୁଣ୍‌ଲାୟ୍‌ ଆର୍‌ କାବା ଅୟ୍‌ କୟ୍‌ଲାୟ୍‌, “ତଃବେ କେ ହାହେହୁଣି ନିଜ୍‌କେ ବଚାଉ ହାରେ?”
26 இயேசு அவர்களை நோக்கிப்பார்த்து, “மனிதனால் இது முடியாது. ஆனால் இறைவனால் எல்லாவற்றையும் செய்யமுடியும்” என்றார்.
ଜିସୁ ସେମଃନ୍‌କେ ଦଃକି କୟ୍‌ଲା, “ଇରି ମାନାୟ୍‌ କଃରୁ ନଃହାରେ ମଃତର୍‌ ଇସ୍ୱର୍‌ ସଃବୁ କଃରୁହାରେ ।”
27 பேதுரு அவரிடம் மறுமொழியாக, “உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டோமே! அப்படியானால், எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்றான்.
ପିତର୍‌ ଜିସୁକେ କୟ୍‌ଲା, “ଦଃକ୍‌, ଅଃମିମଃନ୍‌ ସଃବୁ ଚାଡିକଃରି ତର୍‌ ହଃଚେ ହଃଚେ ଆସି ଆଚୁ, ଅଃମିମଃନ୍‌ ତଃବେ କାୟ୍‌ରି ହାଉନ୍ଦ୍?”
28 இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எல்லாக் காரியங்களும் புதுப்பிக்கப்படும் நாளில், மானிடமகனாகிய நான் எனது மகிமையின் அரியணையில் உட்கார்ந்திருப்பேன். என்னைப் பின்பற்றிய நீங்களும் பன்னிரண்டு அரியணைகளில் உட்கார்ந்து, இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள்.
ଜିସୁ ସେମଃନ୍‌କେ କୟ୍‌ଲା, “ମୁଁୟ୍‌ ତୁମିମଃନ୍‌କେ ସଃତ୍‌ କଃରି କଃଉଁଲେ, ନଃଉଆଁ ଜୁଗ୍ ଆୟ୍‌ଲେକ୍‌ ଜଃଡେବଃଳ୍‌ ନଃରାର୍‌ ହୟ୍‌ସି ଅଃହ୍‌ଣାର୍‌ ଜଃଜ୍‌ମାନ୍‌ ସିଙ୍ଗାସଣ୍‌ ତଃୟ୍‌ଁ ବଃସେଦ୍‌, ସଃଡେବଃଳ୍‌ ମର୍‌ ହଃଚେ ହଃଚେ ଆସି ଆଚାସ୍‌, ତୁମିମଃନ୍ ହେଁ ବାରଗଟ୍‌ ସିଙ୍ଗାସଣେ ବଃସିକଃରି ଇସ୍ରାଏଲାର୍‌ ବାର ବଃଉଁସ୍‌ ଉହ୍ରେ ରାଜ୍‌ କଃରାସ୍‌ ।
29 என் நிமித்தம் வீடுகளையோ, சகோதரர்களையோ சகோதரிகளையோ, தகப்பனையோ, தாயையோ, மனைவியையோ பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டுவந்த ஒவ்வொருவனும், அதற்கு நூறுமடங்காகப் பெறுவான்; நித்திய வாழ்வையும் உரிமையாக்கிக்கொள்வான். (aiōnios g166)
ଆରେକ୍‌ ଜୁୟ୍‌ ଲକ୍‌ ମର୍‌ ନାଉଁ ଗିନେ ଗଃର୍‌, ବାୟ୍‌, ବେଣି, ଉବା, ଆୟା, ହିଲା, କି ବୁୟ୍‌ଁ ଚାଡେଦ୍‌ ସେ ସଏ ଗୁଣ୍ ଅଃଦିକ୍‌ ଆସିର୍ବାଦ୍‌, ଆର୍‌ ଅଃମ୍ବର୍‌ ଜିବନ୍‌ ହାୟ୍‌ଦ୍‌ । (aiōnios g166)
30 ஆனால் முதலாவதாய் இருக்கும் அநேகர் கடைசியாகவும், கடைசியாய் இருக்கும் அநேகர் முதலாவதாய் இருப்பார்கள்” என்றார்.
ମଃତର୍‌ ହଃର୍ତୁ ରିଲା କଃତେକ୍‌ ଲକ୍‌ ହଃଚେ ଅଃଉତି ଆର୍‌ ହଃଚେ ରିଲା କଃତେକ୍‌ ଲକ୍‌ ହଃର୍ତୁ ଅଃଉତି ।”

< மத்தேயு 19 >