< மத்தேயு 18 >
1 அந்த வேளையில் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பரலோக அரசில் யார் பெரியவன்?” என்று கேட்டார்கள்.
୧ସେ ବେଲେ ସିସ୍ମନ୍ ଜିସୁକେ ପାଚାର୍ଲାଇ, “ସରଗ୍ ରାଇଜେ ସବୁର୍ଟାନେଅନି କେ ବଡ୍?”
2 அவர் ஒரு சிறுபிள்ளையை தன்னிடமாக அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தினார்.
୨ଜିସୁ ଗଟେକ୍ ସାନ୍ ପିଲାକେ ଡାକି ସେମନର୍ ଲଗେ ଟିଆକରାଇ କଇଲା,
3 அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் மனமாற்றம் அடைந்து சிறுபிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் ஒருபோதும் பரலோக அரசிற்குள் செல்லமாட்டீர்கள்.
୩“ମୁଇ ତମ୍କେ ସତ୍ କଇଲିନି, ତମର୍ ମନ୍ ବାଦ୍ଲାଇ ସାନ୍ ପିଲାମନର୍ ପାରା ନ ଅଇଲେ ସରଗ୍ ରାଇଜେ କେବେ ପୁରି ନାପାରାସ୍ ।
4 ஆதலால், இந்தச் சிறுபிள்ளையைப்போல் தன்னைத் தாழ்த்துகிறவனே பரலோக அரசில் பெரியவனாய் இருக்கிறான்” என்றார்.
୪ଜେ ନିଜ୍କେ ସୁଆଲ୍ କରି ସାନ୍ ପିଲାପାରା ଅଇସି, ସେ ସରଗ୍ ରାଇଜେ ସବୁର୍ଟାନେଅନି ବଡ୍,
5 “இப்படி ஒரு சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னையும் ஏற்றுக்கொள்ளுகிறான்.
୫ଆରି, ଜେକି ମର୍ ନାଉଁ ଦାରି ଏ ସାନ୍ ପିଲାକେ ନାମ୍ସି, ସେ ମକେ ମିସା ନାମ୍ସି ।”
6 “என்னில் விசுவாசம் வைத்துள்ள, இந்தச் சிறியவர்களில் எவரையாவது பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும்.
୬“ମର୍ତେଇ ବିସ୍ବାସ୍ କର୍ତେ ରଇବା ଏ ସାନ୍ ପିଲାମନର୍ ବିତ୍ରେଅନି ଗଟେକ୍ ଲକ୍ କେ ଆଲେ ବିସ୍ବାସେ ବାଦା ଗଟାଇସି ବଇଲେ, ତାର୍ ଗାଲାଇ ଜତା ପାକ୍ନା ବାନ୍ଦିକରି ତାକେ ସମ୍ଦୁରେ ବୁଡାଇଦେବାଟା ନିକ ଅଇସି ।
7 மக்களைப் பாவத்தில் விழப்பண்ணும், காரியங்களின் நிமித்தம், உலகத்திற்கு ஐயோ! இப்படிப்பட்ட காரியங்கள் வரவேண்டியதே. ஆனால் யார் மூலம் அது வருகிறதோ அந்த மனிதனுக்கு ஐயோ!
୭ଲକ୍ମନର୍ ବିସ୍ବାସେ ବାଦା ଗଟାଇବାକେ ବେସି ବିସଇ ଆଚେ । ସେଟାର୍ ପାଇ ଏ ଜଗତର୍ ଦସା ବଡେ ଇନସ୍ତା । ସବୁ ବେଲେ ଏନ୍ତି ବାଦା ଆଇସି, ମାତର୍ ଜେ ବାଦା ଗଟାଇସି, ତାର୍ ଦସା କେଡେ ଇନସ୍ତା ଅଇସି!”
8 உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. (aiōnios )
୮“ଜଦି ତମେ ତମର୍ ଆତ୍ ନଇଲେ ପାଦର୍ ଲାଗି ବିସ୍ବାସ୍ ଆରାଇଲାସ୍ନି, ତେବେ ସେଟା କାଟି ପିଙ୍ଗି ଦିଆସ୍ । ଜଡେକ୍ ପାଦ୍ ଆରି ଜଡେକ୍ ଆତ୍ ରଇ ସବୁବେଲେ ଲାଗି ରଇବା ଜଏ ପିଙ୍ଗାଇ ଅଇବା ବାଦୁଲେ ଗଟେକ୍ ପାଦ୍ ନଇଲେ ଗଟେକ୍ ଆତ୍ ନ ରଇ, ନ ସାର୍ବା ଜିବନେ ପୁର୍ବାଟା କେଡେ କରମର୍ କାତା । (aiōnios )
9 உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. இரண்டு கண்களுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் செல்வது சிறந்தது. (Geenna )
୯ଜଦି ତମର୍ ଆଁକିର୍ ଲାଗି ତମେ ବିସ୍ବାସ୍ ଆରାଇଲାସ୍ନି ବଇଲେ ତାକେ ବେଟି ପିଙ୍ଗି ଦିଆସ୍ । ଜଡେକ୍ ଆଁକି ରଇ ନର୍କେ ପିଙ୍ଗାଇଅଇବା ବାଦୁଲେ ଗଟେକ୍ ଆଁକି ରଇ ନ ସାର୍ବା ଜିବନେ ପୁର୍ବାଟା କେଡେ କରମର୍ କାତା ଅଇସି ।” (Geenna )
10 “நீங்கள் இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அலட்சியம் பண்ணாதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பரலோகத்திலுள்ள அவர்களுக்குரிய இறைத்தூதர்கள் எனது பரலோக பிதாவின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
୧୦ଏ ସାନ୍ ପିଲାମନର୍ ବିତ୍ରେ ଅନି ଗଟେକ୍କେ ମିସା ଇନ୍କରା ନାଇ । ମୁଇ ତମ୍କେ କଇଲିନି, ଏ ମନର୍ ଜତନ୍ ନେଇତେ ରଇବା ସରଗର୍ ଦୁତ୍ମନ୍ ସବୁ ବେଲା ମର୍ ବାବାର୍ ଲଗେ ଆଚତ୍ ।
11 ஏனெனில் மானிடமகன் வழிதப்பிப் போனவர்களை இரட்சிக்கவே வந்தார்.
୧୧କାଇକେ ବଇଲେ ବାଟ୍ ବାନା ଅଇଲା ଲକ୍ମନ୍କେ କଜି ରକିଆ କର୍ବାକେ ନର୍ପିଲା ମୁଇ ଆଇଲିଆଚି ।
12 “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருந்தாலும், அவற்றில் ஒன்று வழிதவறிப் போனால், அந்தத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழி தவறியதைத் தேடிப் போகமாட்டானோ?
୧୨ତମେ କାଇଟା ବାବ୍ଲାସ୍ନି, ଜଦି ଗଟେକ୍ ଲକର୍ ସଏଟା ମେଣ୍ଡା ରଇସି ଆରି ସିତିଅନି ଗଟେକ୍ ଆଜି ଜାଇସି, ତେବେ ସେ କାଇଟା କର୍ସି? ନବେ ନଅଟା ମେଣ୍ଡାକେ ଡଙ୍ଗରେ ଚାର୍ବାକେ ଚାଡିଦେଇ ସେ ଆଜ୍ଲା ମେଣ୍ଡାକେ କଜ୍ବାର୍ ବାରଇସି ।
13 நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, வழிதவறிப் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைவிட, அந்த ஒரு ஆட்டைக் குறித்து அதிகமாக சந்தோஷப்படுகிறான்.
୧୩ମୁଇ ତମ୍କେ ସତ୍ କଇଲିନି, ଜେଡେବଲ୍ ସେ ମେଣ୍ଡା ମିଲାଇସି, ଆଜି ନ ରଇଲା ନବେ ନଅଟା ମେଣ୍ଡାର୍ ପାଇ ତାର୍ ଜେତ୍କି ସାର୍ଦା, ଏ ଗଟେକ୍ ମେଣ୍ଡାର୍ ପାଇ ସେ ଅଦିକ୍ ସାର୍ଦା ଅଇସି ।
14 அதுபோலவே இந்தச் சிறியவர்களில் ஒருவனும் வழிதவறிப் போவது உங்கள் பரலோக பிதாவின் விருப்பமல்ல.
୧୪ସମାନ୍ ସେନ୍ତି ସେ, ଏ ସାନ୍ ପିଲାମନର୍ ତେଇ ଅନି ଗଟେକ୍ ଲକ୍ ମିସା ବାଟ୍ ବାନା ଅଅତ୍, ଏଟା ତମର୍ ସରଗର୍ ବାବା ମନ୍ କରେ ନାଇ ।
15 “உன் சகோதர சகோதரிகளுள் ஒருவர் உனக்கு எதிராகப் பாவம்செய்தால், நீ போய் அவருடைய குற்றத்தை அவருக்குச் சுட்டிக்காட்டு. உங்கள் இருவருக்கும் இடையில் மட்டுமே அது செய்யப்படட்டும். அவர் உனக்குச் செவிகொடுத்தால், நீ உனது சகோதரன் அல்லது சகோதரியை இழக்காமல் காத்துக்கொள்வாய்.
୧୫“ଜଦି ତମର୍ ବାଇ ତମର୍ ବିରୁଦେ ପାପ୍ କର୍ସି, ତାର୍ ଲଗେ ଜାଇ ତାର୍ ପାପ୍ ତାକେ ଦେକାଇ ଦିଆସ୍ । ମାତର୍ ତମେ ଦୁଇ ଲକ୍ ରଇଲା ବେଲେ ଏଟା ଲୁଚ୍ତେ କରା । ଜଦି ସେ ତମର୍ କାତା ସୁନ୍ସି, ତମର୍ ବାଇକେ ତମେ ଆରି ତରେକ୍ ପାଇସା ।
16 ஆனால் அவர் உனக்குச் செவிகொடாவிட்டால், ‘எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படும்படி,’ வேறு ஒருவரையோ இருவரையோ உன்னுடன்கூட கூட்டிக்கொண்டுபோ.
୧୬ଆରି ଜଦି ସେ ନ ସୁନ୍ଲେ, ଗଟେକ୍ ଲକ୍କେ ନଇଲେ ଦୁଇ ଲକ୍କେ ଡାକି ନେଇ ତାର୍ ଲଗେ ଜାଆ । ଆମର୍ ସାସ୍ତର୍ ନିୟମ୍ ଇସାବେ, ଦୁଇଟା ନଇଲେ ତିନ୍ଟା ସାକିର୍ ମୁଆଟେ ତମର୍ ଦାବି ସତ୍ ବଲି ଜାନା ପଡ୍ସି ।
17 அவர் அவர்களுக்கும் செவிகொடுக்க மறுத்தால், அதைத் திருச்சபைக்குக் கூறு; அவர் திருச்சபைக்கும் செவிகொடுக்க மறுத்தால், அவரை இறைவனை அறியாதவரைப் போலவும் வரி வசூலிக்கிறவரைப் போலவும் நடத்து.
୧୭ଏଲେ ମିସା ଜଦି ସେ ତମର୍ କାତା ନ ସୁନେ, ମଣ୍ଡଲିତେଇ ଜାନାଇ ଦିଆସ୍ । ସାରାସାରି ଜଦି ମଣ୍ଡଲିର୍ କାତା ମିସା ନ ସୁନେ ବଇଲେ, ତାକେ ଗଟେକ୍ ସିସ୍ତୁମାଙ୍ଗୁ, ବିସ୍ବାସ୍ ନ କର୍ବା ଲକ୍ ବଲି ବାବିକରି, ତାର୍ ସଙ୍ଗ୍ ମିଲାମିସା କର୍ବାଟା ଚାଡି ଦିଆସ୍ ।
18 “மேலும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் எதைப் பூமியில் கட்டுகிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீங்கள் பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்.
୧୮“ମୁଇ ତମ୍କେ ସତ୍ କଇଲିନି, ତମେ ଏ ଜଗତେ ଜାଇଟା ନାଇ ବଲ୍ସା, ସେଟା ସର୍ଗେ ମିସା ନାଇ ଅଇସି । ଆରି ଜନ୍ଟା ପାଇ ତମେ ଜଗତେ ଉଁ କଇସା, ସେଟା ସର୍ଗେ ମିସା ଉଁ ଅଇସି ।
19 “மீண்டும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கேட்கும் எதைக் குறித்தாவது பூமியிலே உங்களில் இருவர் ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது உங்களுக்காகச் செய்யப்படும்.
୧୯କାଲି ସେତ୍କି ନଏଁ, ମୁଇ ତମ୍କେ ସତ୍ କଇଲିନି, ଜେଡେବେଲେ ମିସା ଏ ଜଗତେ ତମେ ଦୁଇ ଲକ୍ ଜନ୍ ବିସଇ ନେଇକରି ଗଟେକ୍ ମନ୍ ଅଇକରି ପାର୍ତନା କଲେ, ମର୍ ସରଗର୍ ବାବା ତମେ ମାଙ୍ଗ୍ଲାଟା ପୁରୁନ୍ କର୍ସି ।
20 ஏனெனில் எங்கே இரண்டு அல்லது மூன்றுபேர் என் பெயரில் ஒன்றாய்கூடி இருக்கிறார்களோ, அங்கே நான் அவர்களுடன் இருக்கிறேன்” என்றார்.
୨୦କାଇକେ ବଇଲେ ଜନ୍ତି ଦୁଇ କି ତିନ୍ ଲକ୍ ରୁଣ୍ଡିକରି ମର୍ ନାଉଁ ଦାର୍ବାଇ, ତେଇ ମୁଇ ଆଚି ।”
21 அதற்குப் பின்பு பேதுரு இயேசுவிடம் வந்து அவரிடம், “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கெதிராகப் பாவம் செய்யும்போது, அவனை நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை வரைக்குமோ?” எனக் கேட்டான்.
୨୧ଦିନେକ୍ ପିତର୍ ଜିସୁର୍ ଲଗେ ଆସି ପାଚାର୍ଲା, “ମାପ୍ରୁ, ଗଟେକ୍ ବାଇ ମର୍ ବିରଦେ ତର୍କେ ତର୍ ଦସ୍ କର୍ତେ ରଇଲେ, ତାକେ ମୁଇ କେତେ ତର୍ କେମା କର୍ବି? କାଇ ସାତ୍ ତର୍ କି?”
22 இயேசு மறுமொழியாக, “ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது முறைக்கும் அதிகமாக” என்று நான் உனக்குச் சொல்கிறேன் என்றார்.
୨୨ଜିସୁ କଇଲା, “ନାଇ ସାତ୍ ତର୍ ନାଇ । ସାତ୍ ତରର୍ ସତୁରି ଗୁନ୍ ।
23 “பரலோக அரசானது ஒரு அரசன் தனது வேலைக்காரர்களுடன் கணக்குப் பார்க்க வந்ததுபோல் இருக்கிறது.
୨୩ସରଗ୍ ରାଇଜର୍ ଆରି ଗଟେକ୍ କାତା ସୁନ୍ । ଗଟେକ୍ ରାଜା ଦିନେକ୍ ତାର୍ଟାନେ କାମ୍କରୁମନ୍ ରୁନ୍ ନେଇରଇବାଟା ଇସାବ୍ କିତାବ୍ କର୍ବାକେ ମନ୍ କଲା ।
24 அவன் கணக்குப் பார்க்கத் தொடங்கியபோது, பத்து கோடி பொற்காசுகள் கடன்பட்ட ஒருவன் கொண்டுவரப்பட்டான்.
୨୪ସେ ଇସାବ୍ କର୍ବାବେଲେ ତାର୍ଟାନେ ଗଟେକ୍ କାମ୍ କରୁ ଲାକ୍ ଲାକ୍ ଟାଙ୍ଗା ରୁନ୍ ନେଇରଇଲା ଲକ୍କେ ରାଜାର୍ ଲଗେ ଆନ୍ଲାଇ ।
25 அவனோ அதைச் செலுத்தமுடியாத நிலையில் இருந்தான். அதனால் அவனையும், அவனது மனைவியையும், பிள்ளைகளையும், அவனிடத்தில் உள்ளவை எல்லாவற்றையும் விற்றுக் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி, அவனுடைய எஜமான் உத்தரவிட்டான்.
୨୫ରୁନ୍ ସୁଜ୍ବାକେ ସେ ଲକର୍ଟାନେ ସେତ୍କି ବପୁ ନ ରଇଲା । ତେବର୍ପାଇ ରୁନ୍ ବାନ୍ଦ୍ବାକେ ବଲି ତାର୍ଟାନେ ଜେତ୍କି ରଇଲାଟା ବିକିକରି ତାକେ, ତାର୍ ମାଇଜିକେ ଆରି ତାର୍ ପିଲାଟକିମନ୍କେ ଗତି ଇସାବେ ବିକିଦେବାକେ ରାଜା ଆଦେସ୍ ଦେଲା ।”
26 “வேலைக்காரனோ அவனுக்கு முன்னால் மண்டியிட்டு, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் எல்லாவற்றையும் திரும்பக் கொடுப்பேன்’ என்று கெஞ்சிக்கேட்டான்.
୨୬କାମ୍ କରୁ ରାଜାର୍ ପାଦ୍ତଲେ ଅଦ୍ରି ଗୁଆରି କରି କଇଲା “ଆଗିଆଁ ଆରି କେତେଦିନ୍ ଜାଗା, ମୁଇ ତମର୍ ସବୁଜାକ ରୁନ୍ ସୁଜିଦେବି ।”
27 வேலைக்காரனின் எஜமான் அவனில் அனுதாபப்பட்டு, அவனுடைய கடனை ரத்து செய்து, அவனைப் போகவிட்டான்.
୨୭ରାଜା ତାକେ ଦୟା କଲା । ତେବର୍ପାଇ ତାକେ କେମା କରି ରୁନ୍ ନ ବାନ୍ଦାଇ ଚାଡିଦେଲା ।
28 “ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே போனபோது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகளை கடன்பட்டிருந்த தன் உடன்வேலைக்காரனைக் கண்டான். அவன் அவனைப் பிடித்து தொண்டையை நெரித்து, ‘நீ என்னிடத்தில் கடன்பட்டதைத் திருப்பிக் கொடு’ என வற்புறுத்திக் கேட்டான்.
୨୮ମାତର୍ ସେ ଗତି ବାରଇ ଜାଇ ତାର୍ତେଇ ଅନି ପଚାସ୍ ଟାଙ୍ଗା ରୁନ୍ କରି ରଇବା ଗଟେକ୍ ମିସ୍ତେ ରଇବା ଗତିଦାଙ୍ଗ୍ଡାକେ ଦାରି ତାର୍ ଟଟ୍ରି ପିଚକ୍ବାର୍ ଦାର୍ଲା, “ମର୍ତେଇଅନି ନେଇ ରଇଲା ସବୁ ଡାବୁ ବାଉଡାଇ ଦେ ।”
29 “அவனுடைய உடன்வேலைக்காரன் காலில் விழுந்து, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் உமக்குத் திருப்பிக் கொடுப்பேன்’ எனக் கெஞ்சிக்கேட்டான்.
୨୯ସେ ଗତି ଦାଙ୍ଗ୍ଡା ତାର୍ ଗଡେଦାରି ବାବୁଜିଆ କରି କଇଲା, “ସାଆସ୍ ଦାରା, ତମର୍ ସବୁ ଡାବୁ ସୁଜି ଦେବି ।”
30 “ஆனால் அவனோ அதற்கு மறுத்து, அந்தக் கடனைக் கட்டித் தீர்க்கும் வரைக்கும், அவனைச் சிறையில் அடைத்தான்.
୩୦ମାତର୍ ପର୍ତୁମ୍ ଲକ୍, ସେ ଗୁଆରି କଲାଟା ସୁନେ ନାଇ, ରୁନ୍ ସୁଜ୍ବା ଜାକ ତାକେ ବନ୍ଦି ଗରେ ପୁରାଇ ସଙ୍ଗଇବାକେ ତିଆର୍ଲା ।
31 நடந்தவற்றைக் கண்ட மற்ற வேலைக்காரர் மிகவும் துக்கப்பட்டு, எல்லாவற்றையும் தங்கள் அரசனிடம் போய்ச் சொன்னார்கள்.
୩୧ଏଟା ଅଇଲାଟା ଦେକି ବିନ୍ କାମ୍ କରୁମନ୍ ଦୁକ୍ କଲାଇ । ସେମନ୍ ରାଜାର୍ ଲଗେ ଜାଇ ଜନ୍ ଜନ୍ଟା ଅଇରଇଲା, ସବୁ ଜାନାଇଲାଇ ।
32 “அப்பொழுது அரசன் அந்த வேலைக்காரனைக் கூப்பிட்டு, அவனைப் பார்த்து, ‘கொடுமையான வேலைக்காரனே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபடியினால், நான் உனது கடனையெல்லாம் மன்னித்தேன்.
୩୨ରାଜା ପର୍ତୁମ୍ କାମ୍ କରୁକେ ଡାକାଇ କଇଲା, “ଅଇରେ ମୁର୍କ ଦାଙ୍ଗ୍ଡା, ତୁଇ ଗୁଆରି କଲୁସ୍ ଜେ ମୁଇ ତର୍ ସବୁ ରୁନ୍ ଚାଡି ଦେଲି ।
33 நான் உனக்கு இரக்கம் காட்டியது போல, நீயும் உனது உடன்வேலைக்காரனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டுமல்லவா?’ என்று கேட்டான்.
୩୩ମୁଇ ଜେନ୍ତି ତକେ ଦୟା କଲି, ତୁଇ ମିସା ତର୍ ସଙ୍ଗର୍ କାମ୍ କରୁକେ ଦୟା କର୍ବାର୍ ରଇଲା ।”
34 அவனுடைய எஜமான் கோபங்கொண்டு, அவனது கடன் முழுவதையும் கொடுத்துத் தீர்க்கும்வரை அவனைச் சித்திரவதை செய்யப்படும்படி சிறைக் காவலரிடம் ஒப்புக்கொடுத்தான்.
୩୪ରାଜା ବେସି ରିସା ଅଇଗାଲା ଆରି ସବୁ ଜାକ ରୁନ୍ ନ ସୁଜ୍ବା ଜାକ ଡଣ୍ଡ୍ ପାଅ ବଲି ତାକେ ବନ୍ଦି ଗରେ ପାଟାଇ ଦେଲା ।
35 “நீங்களும் உங்கள் சகோதரன் அல்லது சகோதரியை மனப்பூர்வமாய் மன்னிக்காவிட்டால், இவ்வாறே எனது பரலோக பிதாவும் உங்களை நடத்துவார்” என்றார்.
୩୫ଜିସୁ ଏ କାତା କଇସାରାଇ କଇଲା, “ତମର୍ ବିରୁଦେ ଦସ୍ କରି ରଇବା ବାଇମନ୍କେ ମନ୍ ବିତ୍ରେଅନି ଜଦି କେମା ନ ଦିଆସ୍, ତେବେ ମର୍ ସରଗର୍ ବାବା ମିସା ତମ୍କେ ଏନ୍ତାରିସେ କର୍ସି ।”