< மத்தேயு 17 >

1 ஆறு நாட்களுக்குப்பின், இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தன்னுடன் தனியாய்க் கூட்டிக்கொண்டு, உயரமான மலைக்கு ஏறிப்போனார்.
ಅನನ್ತರಂ ಷಡ್ದಿನೇಭ್ಯಃ ಪರಂ ಯೀಶುಃ ಪಿತರಂ ಯಾಕೂಬಂ ತತ್ಸಹಜಂ ಯೋಹನಞ್ಚ ಗೃಹ್ಲನ್ ಉಚ್ಚಾದ್ರೇ ರ್ವಿವಿಕ್ತಸ್ಥಾನಮ್ ಆಗತ್ಯ ತೇಷಾಂ ಸಮಕ್ಷಂ ರೂಪಮನ್ಯತ್ ದಧಾರ|
2 அங்கே இயேசு அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார். அவருடைய முகம் சூரியனைப்போல் பிரகாசித்தது. அவருடைய உடைகள் வெளிச்சத்தைப்போல் வெண்மையாக மாறின.
ತೇನ ತದಾಸ್ಯಂ ತೇಜಸ್ವಿ, ತದಾಭರಣಮ್ ಆಲೋಕವತ್ ಪಾಣ್ಡರಮಭವತ್|
3 அப்பொழுது மோசேயும் எலியாவும் அவர்களுக்குமுன் தோன்றி இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
ಅನ್ಯಚ್ಚ ತೇನ ಸಾಕಂ ಸಂಲಪನ್ತೌ ಮೂಸಾ ಏಲಿಯಶ್ಚ ತೇಭ್ಯೋ ದರ್ಶನಂ ದದತುಃ|
4 பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது. நீர் விரும்பினால் நான் மூன்று கூடாரங்களை அமைப்பேன். ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக இருக்கட்டும்!” என்றான்.
ತದಾನೀಂ ಪಿತರೋ ಯೀಶುಂ ಜಗಾದ, ಹೇ ಪ್ರಭೋ ಸ್ಥಿತಿರತ್ರಾಸ್ಮಾಕಂ ಶುಭಾ, ಯದಿ ಭವತಾನುಮನ್ಯತೇ, ತರ್ಹಿ ಭವದರ್ಥಮೇಕಂ ಮೂಸಾರ್ಥಮೇಕಮ್ ಏಲಿಯಾರ್ಥಞ್ಚೈಕಮ್ ಇತಿ ತ್ರೀಣಿ ದೂಷ್ಯಾಣಿ ನಿರ್ಮ್ಮಮ|
5 பேதுரு இன்னமும் பேசிக்கொண்டிருக்கையில், ஒரு பிரகாசமுள்ள மேகம் அவர்களை மூடிக்கொண்டது. மேகத்திலிருந்து ஒரு குரல், “இவர் என் அன்பு மகன், இவரில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இவருக்குச் செவிகொடுங்கள்” என்று ஒலித்தது.
ಏತತ್ಕಥನಕಾಲ ಏಕ ಉಜ್ಜವಲಃ ಪಯೋದಸ್ತೇಷಾಮುಪರಿ ಛಾಯಾಂ ಕೃತವಾನ್, ವಾರಿದಾದ್ ಏಷಾ ನಭಸೀಯಾ ವಾಗ್ ಬಭೂವ, ಮಮಾಯಂ ಪ್ರಿಯಃ ಪುತ್ರಃ, ಅಸ್ಮಿನ್ ಮಮ ಮಹಾಸನ್ತೋಷ ಏತಸ್ಯ ವಾಕ್ಯಂ ಯೂಯಂ ನಿಶಾಮಯತ|
6 சீடர்கள் அதைக் கேட்டபோது, அவர்கள் மிகவும் பயமடைந்து தரையில் முகங்குப்புற விழுந்தார்கள்.
ಕಿನ್ತು ವಾಚಮೇತಾಂ ಶೃಣ್ವನ್ತಏವ ಶಿಷ್ಯಾ ಮೃಶಂ ಶಙ್ಕಮಾನಾ ನ್ಯುಬ್ಜಾ ನ್ಯಪತನ್|
7 ஆனால் இயேசு வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள்! பயப்படாதிருங்கள்” என்றார்.
ತದಾ ಯೀಶುರಾಗತ್ಯ ತೇಷಾಂ ಗಾತ್ರಾಣಿ ಸ್ಪೃಶನ್ ಉವಾಚ, ಉತ್ತಿಷ್ಠತ, ಮಾ ಭೈಷ್ಟ|
8 அவர்கள் மேலே நிமிர்ந்து பார்த்தபோது, இயேசுவைத் தவிர வேறு ஒருவரும் அங்கே இருக்கவில்லை.
ತದಾನೀಂ ನೇತ್ರಾಣ್ಯುನ್ಮೀಲ್ಯ ಯೀಶುಂ ವಿನಾ ಕಮಪಿ ನ ದದೃಶುಃ|
9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும்வரை நீங்கள் பார்த்ததை வேறு ஒருவருக்கும் சொல்லவேண்டாம்” என்று கட்டளையிட்டார்.
ತತಃ ಪರಮ್ ಅದ್ರೇರವರೋಹಣಕಾಲೇ ಯೀಶುಸ್ತಾನ್ ಇತ್ಯಾದಿದೇಶ, ಮನುಜಸುತಸ್ಯ ಮೃತಾನಾಂ ಮಧ್ಯಾದುತ್ಥಾನಂ ಯಾವನ್ನ ಜಾಯತೇ, ತಾವತ್ ಯುಷ್ಮಾಭಿರೇತದ್ದರ್ಶನಂ ಕಸ್ಮೈಚಿದಪಿ ನ ಕಥಯಿತವ್ಯಂ|
10 சீடர்கள் அவரிடம், “அப்படியானால், மோசேயின் சட்ட ஆசிரியர்கள் முதலில் எலியா வரவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்?” எனக் கேட்டார்கள்.
ತದಾ ಶಿಷ್ಯಾಸ್ತಂ ಪಪ್ರಚ್ಛುಃ, ಪ್ರಥಮಮ್ ಏಲಿಯ ಆಯಾಸ್ಯತೀತಿ ಕುತ ಉಪಾಧ್ಯಾಯೈರುಚ್ಯತೇ?
11 இயேசு அதற்குப் பதிலாக, “நிச்சயமாகவே எலியா வந்து எல்லா காரியங்களையும், முந்தைய நிலைக்குக் கொண்டுவருவான்.
ತತೋ ಯೀಶುಃ ಪ್ರತ್ಯವಾದೀತ್, ಏಲಿಯಃ ಪ್ರಾಗೇತ್ಯ ಸರ್ವ್ವಾಣಿ ಸಾಧಯಿಷ್ಯತೀತಿ ಸತ್ಯಂ,
12 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எலியா ஏற்கெனவே வந்துவிட்டான். அவர்கள் அவனை இன்னாரென அறிந்துகொள்ளாமல் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள். அதைப் போலவே, மானிடமகனாகிய நான் அவர்களுடைய கைகளில் துன்பப்படப் போகிறார்” என்று சொன்னார்.
ಕಿನ್ತ್ವಹಂ ಯುಷ್ಮಾನ್ ವಚ್ಮಿ, ಏಲಿಯ ಏತ್ಯ ಗತಃ, ತೇ ತಮಪರಿಚಿತ್ಯ ತಸ್ಮಿನ್ ಯಥೇಚ್ಛಂ ವ್ಯವಜಹುಃ; ಮನುಜಸುತೇನಾಪಿ ತೇಷಾಮನ್ತಿಕೇ ತಾದೃಗ್ ದುಃಖಂ ಭೋಕ್ತವ್ಯಂ|
13 அப்பொழுது சீடர்கள், இவர் யோவான் ஸ்நானகனைப் பற்றிப் பேசுகிறார் என விளங்கிக்கொண்டார்கள்.
ತದಾನೀಂ ಸ ಮಜ್ಜಯಿತಾರಂ ಯೋಹನಮಧಿ ಕಥಾಮೇತಾಂ ವ್ಯಾಹೃತವಾನ್, ಇತ್ಥಂ ತಚ್ಛಿಷ್ಯಾ ಬುಬುಧಿರೇ|
14 மக்கள் கூட்டம் இருந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஒருவன் இயேசுவுக்கு முன்பாக வந்து, முழங்காற்படியிட்டு,
ಪಶ್ಚಾತ್ ತೇಷು ಜನನಿವಹಸ್ಯಾನ್ತಿಕಮಾಗತೇಷು ಕಶ್ಚಿತ್ ಮನುಜಸ್ತದನ್ತಿಕಮೇತ್ಯ ಜಾನೂನೀ ಪಾತಯಿತ್ವಾ ಕಥಿತವಾನ್,
15 “ஆண்டவரே எனது மகன்மேல் இரக்கம் காட்டும். அவன் வலிப்பு வியாதியினால் மிகவும் வேதனைப்படுகிறான். அவன் அடிக்கடி நெருப்பிலும், தண்ணீரிலும் விழுந்துவிடுகிறான்.
ಹೇ ಪ್ರಭೋ, ಮತ್ಪುತ್ರಂ ಪ್ರತಿ ಕೃಪಾಂ ವಿದಧಾತು, ಸೋಪಸ್ಮಾರಾಮಯೇನ ಭೃಶಂ ವ್ಯಥಿತಃ ಸನ್ ಪುನಃ ಪುನ ರ್ವಹ್ನೌ ಮುಹು ರ್ಜಲಮಧ್ಯೇ ಪತತಿ|
16 நான் அவனை உமது சீடர்களிடம் கொண்டுவந்தேன். ஆனால் அவர்களால் அவனைக் குணமாக்க முடியவில்லை” என்றான்.
ತಸ್ಮಾದ್ ಭವತಃ ಶಿಷ್ಯಾಣಾಂ ಸಮೀಪೇ ತಮಾನಯಂ ಕಿನ್ತು ತೇ ತಂ ಸ್ವಾಸ್ಥಂ ಕರ್ತ್ತುಂ ನ ಶಕ್ತಾಃ|
17 “விசுவாசமில்லாத மாறுபாடுள்ள தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? அந்த சிறுவனை இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று இயேசு கூறினார்.
ತದಾ ಯೀಶುಃ ಕಥಿತವಾನ್ ರೇ ಅವಿಶ್ವಾಸಿನಃ, ರೇ ವಿಪಥಗಾಮಿನಃ, ಪುನಃ ಕತಿಕಾಲಾನ್ ಅಹಂ ಯುಷ್ಮಾಕಂ ಸನ್ನಿಧೌ ಸ್ಥಾಸ್ಯಾಮಿ? ಕತಿಕಾಲಾನ್ ವಾ ಯುಷ್ಮಾನ್ ಸಹಿಷ್ಯೇ? ತಮತ್ರ ಮಮಾನ್ತಿಕಮಾನಯತ|
18 இயேசு பிசாசை அதட்டினார். அது அந்தச் சிறுவனைவிட்டு வெளியே வந்தது. அந்நேரமே அவன் குணம் பெற்றான்.
ಪಶ್ಚಾದ್ ಯೀಶುನಾ ತರ್ಜತಏವ ಸ ಭೂತಸ್ತಂ ವಿಹಾಯ ಗತವಾನ್, ತದ್ದಣ್ಡಏವ ಸ ಬಾಲಕೋ ನಿರಾಮಯೋಽಭೂತ್|
19 அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் தனிமையாக வந்து, “எங்களால் ஏன் அதைத் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள்.
ತತಃ ಶಿಷ್ಯಾ ಗುಪ್ತಂ ಯೀಶುಮುಪಾಗತ್ಯ ಬಭಾಷಿರೇ, ಕುತೋ ವಯಂ ತಂ ಭೂತಂ ತ್ಯಾಜಯಿತುಂ ನ ಶಕ್ತಾಃ?
20 இயேசு அதற்குப் பதிலாக, “ஏனெனில் உங்கள் விசுவாச குறைவுதான் காரணம். கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், இந்த மலையைப் பார்த்து, ‘இங்கே இருந்து அங்கே நகர்ந்து போ’ என்று உங்களால் சொல்லமுடியும். அதுவும் அப்படியே நகர்ந்து போகும். உங்களால் செய்ய முடியாதது ஒன்றும் இருக்காது என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
ಯೀಶುನಾ ತೇ ಪ್ರೋಕ್ತಾಃ, ಯುಷ್ಮಾಕಮಪ್ರತ್ಯಯಾತ್;
21 ஆனால் இவ்விதமான பிசாசு, ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி வேறொன்றினாலும் வெளியே போகாது” என்றார்.
ಯುಷ್ಮಾನಹಂ ತಥ್ಯಂ ವಚ್ಮಿ ಯದಿ ಯುಷ್ಮಾಕಂ ಸರ್ಷಪೈಕಮಾತ್ರೋಪಿ ವಿಶ್ವಾಸೋ ಜಾಯತೇ, ತರ್ಹಿ ಯುಷ್ಮಾಭಿರಸ್ಮಿನ್ ಶೈಲೇ ತ್ವಮಿತಃ ಸ್ಥಾನಾತ್ ತತ್ ಸ್ಥಾನಂ ಯಾಹೀತಿ ಬ್ರೂತೇ ಸ ತದೈವ ಚಲಿಷ್ಯತಿ, ಯುಷ್ಮಾಕಂ ಕಿಮಪ್ಯಸಾಧ್ಯಞ್ಚ ಕರ್ಮ್ಮ ನ ಸ್ಥಾಸ್ಯಾತಿ| ಕಿನ್ತು ಪ್ರಾರ್ಥನೋಪವಾಸೌ ವಿನೈತಾದೃಶೋ ಭೂತೋ ನ ತ್ಯಾಜ್ಯೇತ|
22 அவர்கள் ஒன்றாய்கூடி கலிலேயாவுக்கு வந்தபோது, இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன்.
ಅಪರಂ ತೇಷಾಂ ಗಾಲೀಲ್ಪ್ರದೇಶೇ ಭ್ರಮಣಕಾಲೇ ಯೀಶುನಾ ತೇ ಗದಿತಾಃ, ಮನುಜಸುತೋ ಜನಾನಾಂ ಕರೇಷು ಸಮರ್ಪಯಿಷ್ಯತೇ ತೈ ರ್ಹನಿಷ್ಯತೇ ಚ,
23 அவர்கள் மானிடமகனாகிய என்னைக் கொலைசெய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலே நான் உயிரோடே எழுப்பப்படுவேன்” என்றார். அப்பொழுது அவருடைய சீடர்கள் மிகவும் துக்கமடைந்தார்கள்.
ಕಿನ್ತು ತೃತೀಯೇಽಹಿನ ಮ ಉತ್ಥಾಪಿಷ್ಯತೇ, ತೇನ ತೇ ಭೃಶಂ ದುಃಖಿತಾ ಬಭೂವಃ|
24 இயேசுவும், அவரது சீடர்களும் கப்பர்நகூமுக்கு வந்து சேர்ந்தபோது. ஆலய வரியாக பணத்தை வசூலிக்கிறவர்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் ஆலய வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்டார்கள்.
ತದನನ್ತರಂ ತೇಷು ಕಫರ್ನಾಹೂಮ್ನಗರಮಾಗತೇಷು ಕರಸಂಗ್ರಾಹಿಣಃ ಪಿತರಾನ್ತಿಕಮಾಗತ್ಯ ಪಪ್ರಚ್ಛುಃ, ಯುಷ್ಮಾಕಂ ಗುರುಃ ಕಿಂ ಮನ್ದಿರಾರ್ಥಂ ಕರಂ ನ ದದಾತಿ? ತತಃ ಪಿತರಃ ಕಥಿತವಾನ್ ದದಾತಿ|
25 “ஆம் செலுத்துவார்!” என அவன் பதிலளித்தான். பேதுரு இயேசுவினிடத்தில் வீட்டிற்குள் வந்தபோது, இயேசுவே அதைப்பற்றி முதலாவதாகப் பேசத்தொடங்கினார்: “சீமோனே, நீ என்ன நினைக்கிறாய்? பூமியின் அரசர்கள் யாரிடமிருந்து சுங்கத் தீர்வையையும், வரியையும் பெறுகிறார்கள்? தங்கள் சொந்த மக்களிடமிருந்தா அல்லது அந்நிய மக்களிடமிருந்தா?” எனக் கேட்டார்.
ತತಸ್ತಸ್ಮಿನ್ ಗೃಹಮಧ್ಯಮಾಗತೇ ತಸ್ಯ ಕಥಾಕಥನಾತ್ ಪೂರ್ವ್ವಮೇವ ಯೀಶುರುವಾಚ, ಹೇ ಶಿಮೋನ್, ಮೇದಿನ್ಯಾ ರಾಜಾನಃ ಸ್ವಸ್ವಾಪತ್ಯೇಭ್ಯಃ ಕಿಂ ವಿದೇಶಿಭ್ಯಃ ಕೇಭ್ಯಃ ಕರಂ ಗೃಹ್ಲನ್ತಿ? ಅತ್ರ ತ್ವಂ ಕಿಂ ಬುಧ್ಯಸೇ? ತತಃ ಪಿತರ ಉಕ್ತವಾನ್, ವಿದೇಶಿಭ್ಯಃ|
26 “மற்றவர்களிடமிருந்து!” என பேதுரு பதில் சொன்னான். அப்பொழுது இயேசு, “அப்படியானால் பிள்ளைகள் அதற்கு உட்பட்டவர்களல்லவே?
ತದಾ ಯೀಶುರುಕ್ತವಾನ್, ತರ್ಹಿ ಸನ್ತಾನಾ ಮುಕ್ತಾಃ ಸನ್ತಿ|
27 ஆனாலும் நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு கடலுக்குப்போய் தூண்டிலைப்போடு. நீ பிடிக்கும் முதல் மீனை எடுத்து, அதன் வாயைத்திற, அதற்குள் ‘நான்கு திராக்மா’ வெள்ளி நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து எனக்கும், உனக்கும் சேர்த்து வரியாக அவர்களிடம் கொடு!” என்றார்.
ತಥಾಪಿ ಯಥಾಸ್ಮಾಭಿಸ್ತೇಷಾಮನ್ತರಾಯೋ ನ ಜನ್ಯತೇ, ತತ್ಕೃತೇ ಜಲಧೇಸ್ತೀರಂ ಗತ್ವಾ ವಡಿಶಂ ಕ್ಷಿಪ, ತೇನಾದೌ ಯೋ ಮೀನ ಉತ್ಥಾಸ್ಯತಿ, ತಂ ಘೃತ್ವಾ ತನ್ಮುಖೇ ಮೋಚಿತೇ ತೋಲಕೈಕಂ ರೂಪ್ಯಂ ಪ್ರಾಪ್ಸ್ಯಸಿ, ತದ್ ಗೃಹೀತ್ವಾ ತವ ಮಮ ಚ ಕೃತೇ ತೇಭ್ಯೋ ದೇಹಿ|

< மத்தேயு 17 >