< மத்தேயு 17 >
1 ஆறு நாட்களுக்குப்பின், இயேசு பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தன்னுடன் தனியாய்க் கூட்டிக்கொண்டு, உயரமான மலைக்கு ஏறிப்போனார்.
১অনন্তৰং ষড্দিনেভ্যঃ পৰং যীশুঃ পিতৰং যাকূবং তৎসহজং যোহনঞ্চ গৃহ্লন্ উচ্চাদ্ৰে ৰ্ৱিৱিক্তস্থানম্ আগত্য তেষাং সমক্ষং ৰূপমন্যৎ দধাৰ|
2 அங்கே இயேசு அவர்களுக்கு முன்பாக மறுரூபமடைந்தார். அவருடைய முகம் சூரியனைப்போல் பிரகாசித்தது. அவருடைய உடைகள் வெளிச்சத்தைப்போல் வெண்மையாக மாறின.
২তেন তদাস্যং তেজস্ৱি, তদাভৰণম্ আলোকৱৎ পাণ্ডৰমভৱৎ|
3 அப்பொழுது மோசேயும் எலியாவும் அவர்களுக்குமுன் தோன்றி இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
৩অন্যচ্চ তেন সাকং সংলপন্তৌ মূসা এলিযশ্চ তেভ্যো দৰ্শনং দদতুঃ|
4 பேதுரு இயேசுவிடம், “ஆண்டவரே, நாம் இங்கே இருப்பது நல்லது. நீர் விரும்பினால் நான் மூன்று கூடாரங்களை அமைப்பேன். ஒன்று உமக்கும், ஒன்று மோசேக்கும், ஒன்று எலியாவுக்குமாக இருக்கட்டும்!” என்றான்.
৪তদানীং পিতৰো যীশুং জগাদ, হে প্ৰভো স্থিতিৰত্ৰাস্মাকং শুভা, যদি ভৱতানুমন্যতে, তৰ্হি ভৱদৰ্থমেকং মূসাৰ্থমেকম্ এলিযাৰ্থঞ্চৈকম্ ইতি ত্ৰীণি দূষ্যাণি নিৰ্ম্মম|
5 பேதுரு இன்னமும் பேசிக்கொண்டிருக்கையில், ஒரு பிரகாசமுள்ள மேகம் அவர்களை மூடிக்கொண்டது. மேகத்திலிருந்து ஒரு குரல், “இவர் என் அன்பு மகன், இவரில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன். இவருக்குச் செவிகொடுங்கள்” என்று ஒலித்தது.
৫এতৎকথনকাল এক উজ্জৱলঃ পযোদস্তেষামুপৰি ছাযাং কৃতৱান্, ৱাৰিদাদ্ এষা নভসীযা ৱাগ্ বভূৱ, মমাযং প্ৰিযঃ পুত্ৰঃ, অস্মিন্ মম মহাসন্তোষ এতস্য ৱাক্যং যূযং নিশামযত|
6 சீடர்கள் அதைக் கேட்டபோது, அவர்கள் மிகவும் பயமடைந்து தரையில் முகங்குப்புற விழுந்தார்கள்.
৬কিন্তু ৱাচমেতাং শৃণ্ৱন্তএৱ শিষ্যা মৃশং শঙ্কমানা ন্যুব্জা ন্যপতন্|
7 ஆனால் இயேசு வந்து அவர்களைத் தொட்டு, “எழுந்திருங்கள்! பயப்படாதிருங்கள்” என்றார்.
৭তদা যীশুৰাগত্য তেষাং গাত্ৰাণি স্পৃশন্ উৱাচ, উত্তিষ্ঠত, মা ভৈষ্ট|
8 அவர்கள் மேலே நிமிர்ந்து பார்த்தபோது, இயேசுவைத் தவிர வேறு ஒருவரும் அங்கே இருக்கவில்லை.
৮তদানীং নেত্ৰাণ্যুন্মীল্য যীশুং ৱিনা কমপি ন দদৃশুঃ|
9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மரித்தோரிலிருந்து உயிருடன் எழுந்திருக்கும்வரை நீங்கள் பார்த்ததை வேறு ஒருவருக்கும் சொல்லவேண்டாம்” என்று கட்டளையிட்டார்.
৯ততঃ পৰম্ অদ্ৰেৰৱৰোহণকালে যীশুস্তান্ ইত্যাদিদেশ, মনুজসুতস্য মৃতানাং মধ্যাদুত্থানং যাৱন্ন জাযতে, তাৱৎ যুষ্মাভিৰেতদ্দৰ্শনং কস্মৈচিদপি ন কথযিতৱ্যং|
10 சீடர்கள் அவரிடம், “அப்படியானால், மோசேயின் சட்ட ஆசிரியர்கள் முதலில் எலியா வரவேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்?” எனக் கேட்டார்கள்.
১০তদা শিষ্যাস্তং পপ্ৰচ্ছুঃ, প্ৰথমম্ এলিয আযাস্যতীতি কুত উপাধ্যাযৈৰুচ্যতে?
11 இயேசு அதற்குப் பதிலாக, “நிச்சயமாகவே எலியா வந்து எல்லா காரியங்களையும், முந்தைய நிலைக்குக் கொண்டுவருவான்.
১১ততো যীশুঃ প্ৰত্যৱাদীৎ, এলিযঃ প্ৰাগেত্য সৰ্ৱ্ৱাণি সাধযিষ্যতীতি সত্যং,
12 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், எலியா ஏற்கெனவே வந்துவிட்டான். அவர்கள் அவனை இன்னாரென அறிந்துகொள்ளாமல் தாங்கள் விரும்பியபடியெல்லாம் அவனுக்குச் செய்தார்கள். அதைப் போலவே, மானிடமகனாகிய நான் அவர்களுடைய கைகளில் துன்பப்படப் போகிறார்” என்று சொன்னார்.
১২কিন্ত্ৱহং যুষ্মান্ ৱচ্মি, এলিয এত্য গতঃ, তে তমপৰিচিত্য তস্মিন্ যথেচ্ছং ৱ্যৱজহুঃ; মনুজসুতেনাপি তেষামন্তিকে তাদৃগ্ দুঃখং ভোক্তৱ্যং|
13 அப்பொழுது சீடர்கள், இவர் யோவான் ஸ்நானகனைப் பற்றிப் பேசுகிறார் என விளங்கிக்கொண்டார்கள்.
১৩তদানীং স মজ্জযিতাৰং যোহনমধি কথামেতাং ৱ্যাহৃতৱান্, ইত্থং তচ্ছিষ্যা বুবুধিৰে|
14 மக்கள் கூட்டம் இருந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஒருவன் இயேசுவுக்கு முன்பாக வந்து, முழங்காற்படியிட்டு,
১৪পশ্চাৎ তেষু জননিৱহস্যান্তিকমাগতেষু কশ্চিৎ মনুজস্তদন্তিকমেত্য জানূনী পাতযিৎৱা কথিতৱান্,
15 “ஆண்டவரே எனது மகன்மேல் இரக்கம் காட்டும். அவன் வலிப்பு வியாதியினால் மிகவும் வேதனைப்படுகிறான். அவன் அடிக்கடி நெருப்பிலும், தண்ணீரிலும் விழுந்துவிடுகிறான்.
১৫হে প্ৰভো, মৎপুত্ৰং প্ৰতি কৃপাং ৱিদধাতু, সোপস্মাৰামযেন ভৃশং ৱ্যথিতঃ সন্ পুনঃ পুন ৰ্ৱহ্নৌ মুহু ৰ্জলমধ্যে পততি|
16 நான் அவனை உமது சீடர்களிடம் கொண்டுவந்தேன். ஆனால் அவர்களால் அவனைக் குணமாக்க முடியவில்லை” என்றான்.
১৬তস্মাদ্ ভৱতঃ শিষ্যাণাং সমীপে তমানযং কিন্তু তে তং স্ৱাস্থং কৰ্ত্তুং ন শক্তাঃ|
17 “விசுவாசமில்லாத மாறுபாடுள்ள தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? அந்த சிறுவனை இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று இயேசு கூறினார்.
১৭তদা যীশুঃ কথিতৱান্ ৰে অৱিশ্ৱাসিনঃ, ৰে ৱিপথগামিনঃ, পুনঃ কতিকালান্ অহং যুষ্মাকং সন্নিধৌ স্থাস্যামি? কতিকালান্ ৱা যুষ্মান্ সহিষ্যে? তমত্ৰ মমান্তিকমানযত|
18 இயேசு பிசாசை அதட்டினார். அது அந்தச் சிறுவனைவிட்டு வெளியே வந்தது. அந்நேரமே அவன் குணம் பெற்றான்.
১৮পশ্চাদ্ যীশুনা তৰ্জতএৱ স ভূতস্তং ৱিহায গতৱান্, তদ্দণ্ডএৱ স বালকো নিৰামযোঽভূৎ|
19 அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் தனிமையாக வந்து, “எங்களால் ஏன் அதைத் துரத்த முடியவில்லை?” என்று கேட்டார்கள்.
১৯ততঃ শিষ্যা গুপ্তং যীশুমুপাগত্য বভাষিৰে, কুতো ৱযং তং ভূতং ত্যাজযিতুং ন শক্তাঃ?
20 இயேசு அதற்குப் பதிலாக, “ஏனெனில் உங்கள் விசுவாச குறைவுதான் காரணம். கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், இந்த மலையைப் பார்த்து, ‘இங்கே இருந்து அங்கே நகர்ந்து போ’ என்று உங்களால் சொல்லமுடியும். அதுவும் அப்படியே நகர்ந்து போகும். உங்களால் செய்ய முடியாதது ஒன்றும் இருக்காது என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
২০যীশুনা তে প্ৰোক্তাঃ, যুষ্মাকমপ্ৰত্যযাৎ;
21 ஆனால் இவ்விதமான பிசாசு, ஜெபத்தினாலும், உபவாசத்தினாலுமேயன்றி வேறொன்றினாலும் வெளியே போகாது” என்றார்.
২১যুষ্মানহং তথ্যং ৱচ্মি যদি যুষ্মাকং সৰ্ষপৈকমাত্ৰোপি ৱিশ্ৱাসো জাযতে, তৰ্হি যুষ্মাভিৰস্মিন্ শৈলে ৎৱমিতঃ স্থানাৎ তৎ স্থানং যাহীতি ব্ৰূতে স তদৈৱ চলিষ্যতি, যুষ্মাকং কিমপ্যসাধ্যঞ্চ কৰ্ম্ম ন স্থাস্যাতি| কিন্তু প্ৰাৰ্থনোপৱাসৌ ৱিনৈতাদৃশো ভূতো ন ত্যাজ্যেত|
22 அவர்கள் ஒன்றாய்கூடி கலிலேயாவுக்கு வந்தபோது, இயேசு அவர்களிடம், “மானிடமகனாகிய நான் மனிதருடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவேன்.
২২অপৰং তেষাং গালীল্প্ৰদেশে ভ্ৰমণকালে যীশুনা তে গদিতাঃ, মনুজসুতো জনানাং কৰেষু সমৰ্পযিষ্যতে তৈ ৰ্হনিষ্যতে চ,
23 அவர்கள் மானிடமகனாகிய என்னைக் கொலைசெய்வார்கள். ஆனால் மூன்றாம் நாளிலே நான் உயிரோடே எழுப்பப்படுவேன்” என்றார். அப்பொழுது அவருடைய சீடர்கள் மிகவும் துக்கமடைந்தார்கள்.
২৩কিন্তু তৃতীযেঽহিন ম উত্থাপিষ্যতে, তেন তে ভৃশং দুঃখিতা বভূৱঃ|
24 இயேசுவும், அவரது சீடர்களும் கப்பர்நகூமுக்கு வந்து சேர்ந்தபோது. ஆலய வரியாக பணத்தை வசூலிக்கிறவர்கள் பேதுருவிடம் வந்து, “உங்கள் போதகர் ஆலய வரியைச் செலுத்துவதில்லையா?” என்று கேட்டார்கள்.
২৪তদনন্তৰং তেষু কফৰ্নাহূম্নগৰমাগতেষু কৰসংগ্ৰাহিণঃ পিতৰান্তিকমাগত্য পপ্ৰচ্ছুঃ, যুষ্মাকং গুৰুঃ কিং মন্দিৰাৰ্থং কৰং ন দদাতি? ততঃ পিতৰঃ কথিতৱান্ দদাতি|
25 “ஆம் செலுத்துவார்!” என அவன் பதிலளித்தான். பேதுரு இயேசுவினிடத்தில் வீட்டிற்குள் வந்தபோது, இயேசுவே அதைப்பற்றி முதலாவதாகப் பேசத்தொடங்கினார்: “சீமோனே, நீ என்ன நினைக்கிறாய்? பூமியின் அரசர்கள் யாரிடமிருந்து சுங்கத் தீர்வையையும், வரியையும் பெறுகிறார்கள்? தங்கள் சொந்த மக்களிடமிருந்தா அல்லது அந்நிய மக்களிடமிருந்தா?” எனக் கேட்டார்.
২৫ততস্তস্মিন্ গৃহমধ্যমাগতে তস্য কথাকথনাৎ পূৰ্ৱ্ৱমেৱ যীশুৰুৱাচ, হে শিমোন্, মেদিন্যা ৰাজানঃ স্ৱস্ৱাপত্যেভ্যঃ কিং ৱিদেশিভ্যঃ কেভ্যঃ কৰং গৃহ্লন্তি? অত্ৰ ৎৱং কিং বুধ্যসে? ততঃ পিতৰ উক্তৱান্, ৱিদেশিভ্যঃ|
26 “மற்றவர்களிடமிருந்து!” என பேதுரு பதில் சொன்னான். அப்பொழுது இயேசு, “அப்படியானால் பிள்ளைகள் அதற்கு உட்பட்டவர்களல்லவே?
২৬তদা যীশুৰুক্তৱান্, তৰ্হি সন্তানা মুক্তাঃ সন্তি|
27 ஆனாலும் நாம் அவர்களுக்கு இடறலாக இல்லாதபடிக்கு கடலுக்குப்போய் தூண்டிலைப்போடு. நீ பிடிக்கும் முதல் மீனை எடுத்து, அதன் வாயைத்திற, அதற்குள் ‘நான்கு திராக்மா’ வெள்ளி நாணயத்தைக் காண்பாய். அதை எடுத்து எனக்கும், உனக்கும் சேர்த்து வரியாக அவர்களிடம் கொடு!” என்றார்.
২৭তথাপি যথাস্মাভিস্তেষামন্তৰাযো ন জন্যতে, তৎকৃতে জলধেস্তীৰং গৎৱা ৱডিশং ক্ষিপ, তেনাদৌ যো মীন উত্থাস্যতি, তং ঘৃৎৱা তন্মুখে মোচিতে তোলকৈকং ৰূপ্যং প্ৰাপ্স্যসি, তদ্ গৃহীৎৱা তৱ মম চ কৃতে তেভ্যো দেহি|