< மத்தேயு 16 >

1 பரிசேயரும் சதுசேயரும் இயேசுவிடம் வந்து, வானத்திலிருந்து தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்படிக் கேட்டு, அவரைச் சோதித்தார்கள்.
ⲁ̅ⲟⲩⲟϩ ⲁⲩ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⲛⲓⲪⲁⲣⲓⲥⲉⲟⲥ ⲛⲉⲙ ⲛⲓⲤⲁⲇⲇⲟⲩⲕⲉⲟⲥ ⲉⲩⲉⲣⲡⲓⲣⲁⲍⲓⲛ ⳿ⲙⲙⲟϥ ⲛⲁⲩϣⲓⲛⲓ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲉⲧⲁⲙⲱⲟⲩ ⳿ⲉⲟⲩⲙⲏⲓⲛⲓ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⳿ⲧⲫⲉ.
2 இயேசு அதற்கு பதிலாக, “மாலை நேரம் ஆகும்போது ஆகாயம் சிவப்பாயிருந்தால், ‘நல்ல காலநிலை வரப்போகிறது’ என்று சொல்கிறீர்கள்.
ⲃ̅⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲁϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⳿ⲉϣⲱⲡ ⲁϥϣⲁⲛ⳿ⲓ ⳿ⲛϫⲉ ϩⲁⲛ⳿ⲁⲣⲟⲩϩⲓ ⲧⲉⲧⲉⲛϫⲟⲥ ϫⲉ ⳿ⲧⲫⲉ ⲟⲩϫⲁⲙⲏ ⲉⲥ⳿ⲑⲣⲟϣⲣⲉϣ.
3 காலை நேரத்தில் ஆகாயம் சிவப்பாயும் மந்தாரமாயும் இருந்தால், ‘இன்று புயல்காற்று வீசும்’ என்று சொல்கிறீர்கள். ஆகாயத்தின் தோற்றத்தை விளக்கம் அளிக்க அறிந்திருக்கிறீர்களே! ஆனால் காலங்களின் அடையாளங்களை பகுத்தறிய உங்களால் முடியவில்லையே.
ⲅ̅ⲟⲩⲟϩ ϩⲁⲛ⳿ⲁⲧⲟⲟⲩ⳿ⲓ ⲧⲉⲧⲉⲛϫⲟⲥ ϫⲉ ⲫⲟⲟⲩ ⳿ⲧ⳿ⲫⲣⲱ ⲉⲑⲃⲉ ⲡⲓ⳿ⲑⲣⲟϣⲣⲉϣ ⳿ⲛ⳿ⲧⲫⲉ ⲛⲉⲙ ⲟⲩ⳿ⲅⲛⲟⲫⲟⲥ ⲛⲓϣⲟⲃⲓ ⲧⲉⲧⲉⲛⲥⲱⲟⲩⲛ ⳿ⲉⲥⲟⲙⲥ ⳿ⲉ⳿ⲧⲫⲉ ⲟⲩⲟϩ ⳿ⲫⲙⲏⲓⲛⲓ ⳿ⲙⲡⲁⲓⲥⲏⲟⲩ ⲫⲁⲓ ⲧⲉⲧⲉⲛⲥⲱⲟⲩⲛ ⳿ⲙⲙⲟϥ ⲁⲛ.
4 இந்தப் பொல்லாதவரும் விபசாரக்காரருமான இந்தத் தலைமுறையினர் அற்புத அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால் யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை” என்றார். இதற்குப் பின்பு இயேசு அவர்களைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்.
ⲇ̅ϫⲉ ⲡⲓϫⲱⲟⲩ ⲉⲧϩⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ⲛⲛⲱⲓⲕ ⳿ϥⲕⲱϯ ⳿ⲛⲥⲁ ⲟⲩⲙⲏⲓⲛⲓ ⲟⲩⲟϩ ⲟⲩⲙⲏⲓⲛⲓ ⳿ⲛⲛⲟⲩⲧⲏⲓϥ ⲛⲁϥ ⳿ⲉⲃⲏⲗ ⳿ⲉⲡⲓⲙⲏⲓⲛⲓ ⳿ⲛⲧⲉ Ⲓⲱⲛⲁ ⲡⲓ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥⲭⲁⲩ ⲁϥϣⲉⲛⲁϥ.
5 அவர்கள் கடலைக் கடந்து மறுகரைக்குப் போனபோது, சீடர்கள் உணவு எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள்.
ⲉ̅ⲟⲩⲟϩ ⳿ⲉⲧⲁϥ⳿ⲓ ⳿ⲉⲙⲏⲣ ⳿ⲛϫⲉ ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲁⲩⲉⲣⲡⲱⲃϣ ⳿ⲉϣⲉⲡ ⲱⲓⲕ ⲛⲱⲟⲩ.
6 இயேசு அவர்களிடம், “கவனமாயிருங்கள்; பரிசேயர், சதுசேயர் என்பவர்களின் புளிப்புச்சத்தைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று அவர்களிடம் சொன்னார்.
ⲋ̅ⲡⲉϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲇⲉ ⲛⲱⲟⲩ ϫⲉ ⳿ⲁⲛⲁⲩ ⲟⲩⲟϩ ⲙⲁϩⲑⲏⲧⲉⲛ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⳿ⲉⲃⲟⲗϩⲁ ⳿ⲡϣⲉⲙⲏⲣ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲪⲁⲣⲓⲥⲉⲟⲥ ⲛⲉⲙ ⲛⲓⲤⲁⲇⲇⲟⲩⲕⲉⲟⲥ.
7 “இது நாம் அப்பம் கொண்டுவராததினால்” இப்படிச் சொல்லுகிறார் என்று சீடர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
ⲍ̅⳿ⲛⲑⲱⲟⲩ ⲇⲉ ⲛⲁⲩⲙⲟⲕⲙⲉⲕ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ⲙⲡⲉⲛϭⲓ ⲱⲓⲕ ⲛⲉⲙⲁⲛ.
8 அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வதை அறிந்த இயேசு அவர்களிடம், “விசுவாசம் குறைந்தவர்களே, அப்பம் இல்லாததைக் குறித்து நீங்கள் ஏன் உங்களுக்குள்ளே பேசுகிறீர்கள்.
ⲏ̅⳿ⲉⲧⲁϥ⳿ⲉⲙⲓ ⲇⲉ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⲉⲑⲃⲉ ⲟⲩ ⲧⲉⲧⲉⲛⲙⲟⲕⲙⲉⲕ ϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⲛⲁ ⲡⲓⲕⲟⲩϫⲓ ⳿ⲛⲛⲁϩϯ ϫⲉ ⳿ⲙⲙⲟⲛ ⲧⲉⲧⲉⲛ ⲱⲓⲕ ⳿ⲙⲙⲁⲩ.
9 நீங்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லையா? உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்து, மீதியானதை எத்தனை கூடைகள் நிறையச் சேர்த்தீர்கள்?
ⲑ̅⳿ⲙⲡⲁⲧⲉⲧⲉⲛ⳿ⲉⲙⲓ ⲟⲩⲇⲉ ⲧⲉⲧⲉⲛ⳿⳿ⲓⲣⲓ ⳿ⲙ⳿ⲫⲙⲉⲩⲓ ⲁⲛ ⳿ⲙⲡⲓⲉ̅ ⳿ⲛⲱⲓⲕ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲉ̅ ⳿ⲛϣⲟ ϫⲉ ⳿ⲁⲧⲉⲧⲉⲛϭⲓ ⲟⲩⲏⲣ ⳿ⲛⲕⲟⲧ.
10 அல்லது ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குக் கொடுத்து, மீதியானதை எத்தனை கூடைகளில் சேர்த்தீர்கள்?
ⲓ̅ⲟⲩⲇⲉ ⲡⲓⲍ̅ ⳿ⲛⲱⲓⲕ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲇ̅ ⳿ⲛϣⲟ ϫⲉ ⳿ⲁⲧⲉⲧⲉⲛϭⲓ ⲟⲩⲏⲣ ⳿ⲙⲃⲓⲣ.
11 இப்படியிருக்க நான் அப்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை என்று நீங்கள் விளங்கிக்கொள்ளாதது எப்படி? ஆனால், பரிசேயர் சதுசேயரின் புளிப்பூட்டும் பொருளைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்றார்.
ⲓ̅ⲁ̅ⲡⲱⲥ ⲧⲉⲧⲉⲛⲕⲁϯ ⲁⲛ ϫⲉ ⲛⲁⲓϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ⲁⲛ ⲉⲑⲃⲉ ⲡⲓⲱⲓⲕ ⳿ⲁⲣⲉϩ ⲇⲉ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⳿ⲉⲃⲟⲗϩⲁ ⳿ⲡϣⲉⲙⲏⲣ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲪⲁⲣⲓⲥⲉⲟⲥ ⲛⲉⲙ ⲛⲓⲤⲁⲇⲇⲟⲩⲕⲉⲟⲥ.
12 அப்பத்தைப் புளிப்பூட்டும் பொருளைக் குறித்து அல்ல, பரிசேயர், சதுசேயரின் போதனையைக்குறித்து விழிப்பாயிருக்கும்படியே அதைச் சொன்னார் என்று அப்பொழுதுதான் சீடர்கள் விளங்கிக்கொண்டார்கள்.
ⲓ̅ⲃ̅ⲧⲟⲧⲉ ⲁⲩⲕⲁϯ ϫⲉ ⲛⲉⲧⲁϥϫⲟⲥ ⲛⲱⲟⲩ ⲁⲛ ϫⲉ ⳿ⲁⲣⲉϩ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⳿ⲉⲃⲟⲗϩⲁ ⳿ⲡϣⲉⲙⲏⲣ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲱⲓⲕ ⲁⲗⲗⲁ ⳿ⲉⲃⲟⲗϩⲁ ϯ⳿ⲥⲃⲱ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲪⲁⲣⲓⲥⲉⲟⲥ ⲛⲉⲙ ⲛⲓⲤⲁⲇⲇⲟⲩⲕⲉⲟⲥ.
13 இயேசு செசரியா பிலிப்பு பகுதிக்கு வந்தபோது, அவர் தமது சீடர்களிடம், “மக்கள் மானிடமகனாகிய என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
ⲓ̅ⲅ̅⳿ⲉⲧⲁϥ⳿ⲓ ⲇⲉ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲉⲛⲓⲥⲁ ⳿ⲛⲧⲉ ⳿ⲧⲔⲉⲥⲁⲣⲓ⳿ⲁ ⳿ⲛⲧⲉ Ⲫⲓⲗⲓⲡⲡⲟⲥ ⲛⲁϥϣⲓⲛⲓ ⳿ⲛⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ⳿ⲁⲣⲉ ⲛⲓⲣⲱⲙⲓ ϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲛⲓⲙ ⲡⲉ Ⲡ̇ϣⲏⲣⲓ ⳿ⲙⲪ̇ⲣⲱⲙⲓ.
14 அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் எரேமியா, அல்லது இறைவாக்கினர்களில் ஒருவர் என்கிறார்கள்” என்று பதிலளித்தார்கள்.
ⲓ̅ⲇ̅⳿ⲛⲑⲱⲟⲩ ⲇⲉ ⲡⲉϫⲱⲟⲩ ϫⲉ ϩⲁⲛⲟⲩⲟⲛ ⲙⲉⲛ ϫⲉ Ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⲡⲓⲣⲉϥϯⲱⲙⲥ ϩⲁⲛⲕⲉⲭⲱⲟⲩⲛⲓ ⲇⲉ ϫⲉ Ⲏ̇ⲗⲓⲁⲥ ϩⲁⲛⲕⲉⲭⲱⲟⲩⲛⲓ ⲇⲉ ϫⲉ Ⲓⲉⲣⲉⲙⲓⲁⲥ ⲓⲉ ⲟⲩⲁⲓ ⳿ⲉⲃⲟⲗϧⲉⲛ ⲛⲓⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ.
15 அப்பொழுது இயேசு, “நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.
ⲓ̅ⲉ̅ⲡⲉϫⲁϥ ⲛⲱⲟⲩ ϫⲉ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ⲇⲉ ⳿ⲁⲣⲉⲧⲉⲛϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ⲁⲛⲟⲕ ⲛⲓⲙ.
16 அதற்கு சீமோன் பேதுரு, “நீர் கிறிஸ்து, வாழும் இறைவனின் மகன்” என்றான்.
ⲓ̅ⲋ̅ⲁϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⳿ⲛϫⲉ Ⲥⲓⲙⲱⲛ Ⲡⲉⲧⲣⲟⲥ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⳿ⲛⲑⲟⲕ ⲡⲉ Ⲡⲭ̅ⲥ̅ Ⲡ̇ϣⲏⲣⲓ ⳿ⲙⲪϯ ⲉⲧⲟⲛϧ.
17 அதற்கு இயேசு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில், இது உனக்கு மனிதனால் வெளிப்படுத்தப்படவில்லை. பரலோகத்திலிருக்கிற எனது பிதாவினாலேயே வெளிப்படுத்தப்பட்டது.
ⲓ̅ⲍ̅ⲁϥ⳿ⲉⲣⲟⲩ⳿ⲱ ⲇⲉ ⳿ⲛϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⳿ⲱⲟⲩ⳿ⲛⲓⲁⲧⲕ Ⲥⲓⲙⲱⲛ ⲃⲁⲣ Ⲓⲱⲛⲁ ϫⲉ ⲥⲁⲣⲝ ⲛⲉⲙ ⳿ⲥⲛⲟϥ ⲁⲛ ⲁϥϭⲱⲣⲡ ⳿ⲙⲫⲁⲓ ⲛⲁⲕ ⳿ⲉⲃⲟⲗ ⲁⲗⲗⲁ ⲡⲁⲓⲱⲧ ⲡⲉⲧϧⲉⲛ ⲛⲓⲫⲏⲟⲩ⳿ⲓ.
18 எனவே நான் உனக்குச் சொல்கிறேன்: நீ பேதுரு, இந்தப் பாறையின்மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது. (Hadēs g86)
ⲓ̅ⲏ̅⳿ⲁⲛⲟⲕ ⲇⲉ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲁⲕ ϫⲉ ⳿ⲛⲑⲟⲕ ⲡⲉ Ⲡⲉⲧⲣⲟⲥ ⲉⲓ⳿ⲉⲕⲱⲧ ⳿ⲛⲧⲁⲉⲕ⳿ⲕⲗⲏⲥⲓ⳿ⲁ ϩⲓϫⲉⲛ ⲧⲁⲓⲡⲉⲧⲣⲁ ⲟⲩⲟϩ ⲛⲓⲡⲩⲗⲏ ⳿ⲛⲧⲉ ⳿ⲁⲙⲉⲛϯ ⳿ⲛⲛⲟⲩ⳿ϣϫⲉⲙϫⲟⲙ ⳿ⲉⲣⲟⲥ. (Hadēs g86)
19 நான் உனக்கு பரலோக அரசின் திறவுகோல்களைத் தருவேன்; நீ பூமியில் எதைக் கட்டுகிறாயோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீ பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறாயோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்” என்றார்.
ⲓ̅ⲑ̅ⲉⲓ⳿ⲉϯ ⲛⲁⲕ ⳿ⲛⲛⲓϣⲟϣⲧ ⳿ⲛⲧⲉ ⳿ⲑⲙⲉⲧⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲫⲏⲟⲩ⳿ⲓ ⲟⲩⲟϩ ⲫⲏ⳿ⲉⲧⲉⲕⲛⲁⲥⲟⲛϩϥ ϩⲓϫⲉⲛ ⲡⲓⲕⲁϩⲓ ⲉϥ⳿ⲉϣⲱⲡⲓ ⲉϥⲥⲟⲛϩ ϧⲉⲛ ⲛⲓⲫⲏⲟⲩ⳿ⲓ ⲟⲩⲟϩ ⲫⲏ⳿ⲉⲧⲉⲕⲛⲁⲃⲟⲗϥ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓϫⲉⲛ ⲡⲓⲕⲁϩⲓ ⲉϥ⳿ⲉϣⲱⲡⲓ ⲉϥⲃⲏⲗ ϧⲉⲛ ⲛⲓⲫⲏⲟⲩ⳿ⲓ.
20 அதற்குப் பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், தாம் கிறிஸ்து என்பதை யாருக்கும் சொல்லவேண்டாம் என எச்சரித்தார்.
ⲕ̅ⲧⲟⲧⲉ ⲁϥϩⲟⲛϩⲉⲛ ⳿ⲉⲧⲟⲧⲟⲩ ⳿ⲛⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ϩⲓⲛⲁ ⳿ⲛⲥⲉ⳿ϣⲧⲉⲙϫⲟⲥ ⳿ⲛ⳿ϩⲗⲓ ϫⲉ ⳿ⲛⲑⲟϥ ⲡⲉ Ⲓⲏ̅ⲥ̅ Ⲡⲭ̅ⲥ̅.
21 அந்த வேளையிலிருந்து, இயேசு தம்முடைய சீடர்களுக்கு தாம் எருசலேமுக்குப் போகவேண்டும் என்றும், மக்கள் யூதரின் தலைவராலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் அநேக துன்பங்களை அனுபவிக்கவேண்டும் என்றும், அத்துடன் தாம் கொல்லப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும் என்றும் சொல்லத் தொடங்கினார்.
ⲕ̅ⲁ̅
22 அப்பொழுது பேதுரு, இயேசுவை தனியே அழைத்துக் கொண்டுபோய், “ஆண்டவரே, இது ஒருபோதும் நடக்கக்கூடாது! இது ஒருபோதும் உமக்கு நேரிடாது” என்று அவரைக் கண்டிக்கத் தொடங்கினான்.
ⲕ̅ⲃ̅ⲟⲩⲟϩ ϥ⳿ⲁⲙⲟⲛⲓ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲛϫⲉ Ⲡⲉⲧⲣⲟⲥ ⲁϥⲉⲣϩⲏⲧⲥ ⳿ⲛⲉⲣ⳿ⲉⲡⲓⲧⲓⲙⲁⲛ ⲛⲁϥ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ⲉⲗⲉⲱⲥ ⲛⲁⲕ Ⲡⲁ⳪ ⳿ⲛⲛⲉ ⲫⲁⲓ ϣⲱⲡⲓ ⳿ⲙⲙⲟⲕ.
23 ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப்பார்த்து, “சாத்தானே, எனக்குப் பின்னாகப் போ. நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; நீ இறைவனின் காரியங்களை சிந்திக்காமல் மனிதனுக்கு ஏற்றக் காரியங்களையே சிந்திக்கிறாய்” என்றார்.
ⲕ̅ⲅ̅⳿ⲛⲑⲟϥ ⲇⲉ ⲡⲉϫⲁϥ ⳿ⲙⲠⲉⲧⲣⲟⲥ ϫⲉ ⲙⲁϣⲉⲛⲁⲕ ⲥⲁⲙⲉⲛϩⲏⲓ ⳿ⲡⲥⲁⲧⲁⲛⲁⲥ ϫⲉ ⳿ⲛⲑⲟⲕ ⲟⲩ⳿ⲥⲕⲁⲛⲇⲁⲗⲟⲛ ⲛⲏⲓ ϫⲉ ⳿ⲭⲙⲉⲩⲓ ⲁⲛ ⳿ⲉⲛⲁ Ⲫϯ ⲁⲗⲗⲁ ⲛⲁ ⲛⲓⲣⲱⲙⲓ.
24 இதற்குப் பின்பு இயேசு தம்முடைய சீடர்களிடம், “யாராவது என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், அவர்கள் தம்மையே வெறுத்து, தமது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.
ⲕ̅ⲇ̅ⲧⲟⲧⲉ ⲡⲉϫⲉ Ⲓⲏ̅ⲥ̅ ⳿ⲛⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ⲫⲏⲉⲑⲟⲩⲱϣ ⳿ⲉⲙⲟϣⲓ ⳿ⲛⲥⲱⲓ ⲙⲁⲣⲉϥϫⲟⲗϥ ⳿ⲉⲃⲟⲗ ⲟⲩⲟϩ ⲙⲁⲣⲉϥ⳿ⲱⲗⲓ ⳿ⲙⲡⲉϥ⳿ⲥⲧⲁⲩⲣⲟⲥ ⳿ⲛⲧⲉϥⲙⲟϣⲓ ⳿ⲛⲥⲱⲓ.
25 தம் உயிரைக் காத்துக்கொள்கிறவர்கள் அதை இழந்துபோவார்கள். ஆனால் தமது உயிரை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள்.
ⲕ̅ⲉ̅ⲫⲏ ⲅⲁⲣ ⲉⲑⲟⲩⲱϣ ⳿ⲉⲛⲟϩⲉⲙ ⳿ⲛⲧⲉϥⲯⲩⲭⲏ ⲉϥ⳿ⲉⲧⲁⲕⲟⲥ ⲫⲏ ⲇⲉ ⲉⲑⲛⲁⲧⲁⲕⲟ ⳿ⲛⲧⲉϥⲯⲩⲭⲏ ⲉⲑⲃⲏⲧ ⲉϥ⳿ⲉϫⲉⲙⲥ.
26 ஒருவர் உலகம் முழுவதையும் சொந்தமாக்கினாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனால், அதனால் அவருக்குப் பலன் என்ன? அல்லது ஒருவர் தம் ஆத்துமாவுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?
ⲕ̅ⲋ̅ⲟⲩ ⲅⲁⲣ ⳿ⲉⲧⲉ ⲡⲓⲣⲱⲙⲓ ⲛⲁϫⲉⲙϩⲏⲟⲩ ⳿ⲙⲙⲟϥ ⲁϥϣⲁⲛϫⲉⲙϩⲏⲟⲩ ⳿ⲙⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ ⲧⲏⲣϥ ⲧⲉϥⲯⲩⲭⲏ ⲇⲉ ⳿ⲛⲧⲉϥϯ⳿ⲟⲥⲓ ⳿ⲙⲙⲟⲥ ⳿ⲙⲙⲟⲛ ⲟⲩ ⲡⲉⲧⲉ ⲡⲓⲣⲱⲙⲓ ⲛⲁⲧⲏⲓϥ ⳿ⲛ⳿ⲧϣⲉⲃⲓ⳿ⲱ ⳿ⲛⲧⲉϥⲯⲩⲭⲏ.
27 மானிடமகனாகிய நான் எனது தூதர்களுடன் தம்முடைய பிதாவின் மகிமையில் வரப்போகிறேன். அப்பொழுது நான் ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்ததற்கு ஏற்ற வெகுமதியைக் கொடுப்பேன்.
ⲕ̅ⲍ̅Ⲡ̇ϣⲏⲣⲓ ⲅⲁⲣ ⳿ⲙ⳿ⲫⲣⲱⲙⲓ ⲉϥⲛⲏⲟⲩ ϧⲉⲛ ⳿ⲡ⳿ⲱⲟⲩ ⳿ⲛⲧⲉ ⲡⲉϥⲓⲱⲧ ⲛⲉⲙ ⲛⲉϥⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲟⲩⲟϩ ⲧⲟⲧⲉ ⳿ϥⲛⲁϯ ⳿ⲙⲡⲓⲟⲩⲁⲓ ⲡⲓⲟⲩⲁⲓ ⲕⲁⲧⲁ ⲛⲉϥ⳿ϩⲃⲏⲟⲩ⳿ⲓ.
28 “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இங்கே நிற்கிறவர்களில் சிலர் மானிடமகனாகிய நான் என்னுடைய அரசில் வருவதைக் காண்பதற்கு முன்னே மரணமடைய மாட்டார்கள்” என்றார்.
ⲕ̅ⲏ̅⳿ⲁⲙⲏⲛ ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ⲟⲩⲟⲛ ϩⲁⲛⲟⲩⲟⲛ ϧⲉⲛ ⲛⲏⲉⲧ⳿ⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧⲟⲩ ⳿ⲙⲡⲁⲓⲙⲁ ⳿ⲛⲥⲉⲛⲁϫⲉⲙϯⲡⲓ ⳿ⲙ⳿ⲫⲙⲟⲩ ⲁⲛ ϣⲁⲧⲟⲩⲛⲁⲩ ⳿ⲉⲠ̇ϣⲏⲣⲓ ⳿ⲙⲪ̇ⲣⲱⲙⲓ ⲉϥⲛⲏⲟⲩ ϧⲉⲛ ⳿ⲡ⳿ⲱⲟⲩ ⳿ⲛⲧⲉ ⲡⲉϥⲓⲱⲧ

< மத்தேயு 16 >