< மத்தேயு 15 >
1 பின்பு பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் எருசலேமிலிருந்து இயேசுவிடம் வந்து,
అపరం యిరూశాలమ్నగరీయాః కతిపయా అధ్యాపకాః ఫిరూశినశ్చ యీశోః సమీపమాగత్య కథయామాసుః,
2 “உமது சீடர்கள் ஏன் முன்னோரின் பாரம்பரிய முறையை மீறுகிறார்கள்? அவர்கள் தாங்கள் சாப்பிடுவதற்கு முன்பு தங்கள் கைகளைக் கழுவுவதில்லையே!” என்று கேட்டார்கள்.
తవ శిష్యాః కిమర్థమ్ అప్రక్షాలితకరై ర్భక్షిత్వా పరమ్పరాగతం ప్రాచీనానాం వ్యవహారం లఙ్వన్తే?
3 அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களுடைய பாரம்பரிய முறைகளின் நிமித்தம், நீங்கள் ஏன் இறைவனின் கட்டளைகளை மீறுகிறீர்கள்?
తతో యీశుః ప్రత్యువాచ, యూయం పరమ్పరాగతాచారేణ కుత ఈశ్వరాజ్ఞాం లఙ్వధ్వే|
4 ஏனெனில், ‘உனது தகப்பனையும், தாயையும் கனம்பண்ணுவாயாக’ என்றும், ‘தனது தகப்பனையோ, தாயையோ சபித்தால், அவன் கொல்லப்படவேண்டும்’ என்றும், இறைவன் சொன்னாரே.
ఈశ్వర ఇత్యాజ్ఞాపయత్, త్వం నిజపితరౌ సంమన్యేథాః, యేన చ నిజపితరౌ నిన్ద్యేతే, స నిశ్చితం మ్రియేత;
5 ஆனால் நீங்களோ, ஒருவன் தன் தாய் தகப்பனைப் பார்த்து, ‘என்னிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உதவியை காணிக்கையாக இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டேன்’ என்று அவன் சொன்னால்,
కిన్తు యూయం వదథ, యః స్వజనకం స్వజననీం వా వాక్యమిదం వదతి, యువాం మత్తో యల్లభేథే, తత్ న్యవిద్యత,
6 அவன் தன் தாயையோ தகப்பனையோ கனம்பண்ணவேண்டிய அவசியமில்லை என்று சொல்கிறீர்கள். நீங்கள் உங்கள் பாரம்பரியத்தின் நிமித்தம், இறைவனின் வார்த்தைகளை பயனற்றதாக்குகிறீர்கள்.
స నిజపితరౌ పున ర్న సంమంస్యతే| ఇత్థం యూయం పరమ్పరాగతేన స్వేషామాచారేణేశ్వరీయాజ్ఞాం లుమ్పథ|
7 வேஷக்காரர்களே! உங்களைக்குறித்து சரியாகவே இறைவாக்கினன் ஏசாயா இறைவாக்குரைத்தான்:
రే కపటినః సర్వ్వే యిశయియో యుష్మానధి భవిష్యద్వచనాన్యేతాని సమ్యగ్ ఉక్తవాన్|
8 “‘இந்த மக்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; ஆனால் அவர்கள் இருதயமோ என்னைவிட்டுத் தூரமாயிருக்கிறது.
వదనై ర్మనుజా ఏతే సమాయాన్తి మదన్తికం| తథాధరై ర్మదీయఞ్చ మానం కుర్వ్వన్తి తే నరాః|
9 அவர்கள் வீணாகவே என்னை ஆராதிக்கிறார்கள்; அவர்களுடைய போதனைகளோ, மனிதர்களின் ஒழுங்குவிதிகளே’” என்றார்.
కిన్తు తేషాం మనో మత్తో విదూరఏవ తిష్ఠతి| శిక్షయన్తో విధీన్ న్రాజ్ఞా భజన్తే మాం ముధైవ తే|
10 பின்பு இயேசு மக்கள் கூட்டத்தைத் தன்னிடம் அழைத்து சொன்னதாவது: “கேட்டு விளங்கிக்கொள்ளுங்கள்.
తతో యీశు ర్లోకాన్ ఆహూయ ప్రోక్తవాన్, యూయం శ్రుత్వా బుధ్యధ్బం|
11 மனிதனுடைய வாய்க்குள் போவது அவனை அசுத்தப்படுத்தாது. ஆனால் அவனுடைய வாயிலிருந்து வெளியே வருவது எதுவோ, அதுவே அவனை அசுத்தப்படுத்தும்” என்றார்.
యన్ముఖం ప్రవిశతి, తత్ మనుజమ్ అమేధ్యం న కరోతి, కిన్తు యదాస్యాత్ నిర్గచ్ఛతి, తదేవ మానుషమమేధ్యీ కరోతీ|
12 அப்பொழுது சீடர்கள் இயேசுவிடம் வந்து, “இவற்றைப் பரிசேயர்கள் கேட்டு, கோபித்துக்கொண்டார்கள் என்பது உமக்குத் தெரியுமா?” என்றார்கள்.
తదానీం శిష్యా ఆగత్య తస్మై కథయాఞ్చక్రుః, ఏతాం కథాం శ్రుత్వా ఫిరూశినో వ్యరజ్యన్త, తత్ కిం భవతా జ్ఞాయతే?
13 அதற்கு இயேசு, “எனது பரலோக பிதா நடாத எல்லாச் செடிகளும் வேரோடே பிடுங்கிப்போடப்படும்.
స ప్రత్యవదత్, మమ స్వర్గస్థః పితా యం కఞ్చిదఙ్కురం నారోపయత్, స ఉత్పావ్ద్యతే|
14 அவர்களை விட்டுவிடுங்கள்; அவர்கள் குருட்டு வழிகாட்டிகள். குருடன் குருடனுக்கு வழிகாட்டினால், இருவரும் குழியிலே விழுவார்களே” எனப் பதிலளித்தார்.
తే తిష్ఠన్తు, తే అన్ధమనుజానామ్ అన్ధమార్గదర్శకా ఏవ; యద్యన్ధోఽన్ధం పన్థానం దర్శయతి, తర్హ్యుభౌ గర్త్తే పతతః|
15 அப்பொழுது பேதுரு, “இந்த உவமையை எங்களுக்கு விளக்கமாகச் சொல்லும்” என்றான்.
తదా పితరస్తం ప్రత్యవదత్, దృష్టాన్తమిమమస్మాన్ బోధయతు|
16 அதற்கு இயேசு, “நீங்கள் இன்னும் புரிந்துகொள்ளாதவர்களாய் இருக்கிறீர்களா?” என்று அவர்களிடம் கேட்டார்.
యీశునా ప్రోక్తం, యూయమద్య యావత్ కిమబోధాః స్థ?
17 “வாய்க்குள் போவதெல்லாம் வயிற்றுக்குள் போய் உடலைவிட்டு வெளியேறுகிறது என்று தெரியாதா?
కథామిమాం కిం న బుధ్యధ్బే? యదాస్యం ప్రేవిశతి, తద్ ఉదరే పతన్ బహిర్నిర్యాతి,
18 ஆனால் வாயிலிருந்து வெளியே வருகிறவைகள் இருதயத்திலிருந்து வந்து மனிதரை அசுத்தப்படுத்தும்.
కిన్త్వాస్యాద్ యన్నిర్యాతి, తద్ అన్తఃకరణాత్ నిర్యాతత్వాత్ మనుజమమేధ్యం కరోతి|
19 ஏனெனில் இருதயத்திலிருந்தே தீய சிந்தனைகள், கொலை, விபசாரம், முறைகேடான பாலுறவு, களவு, பொய்ச்சாட்சி, அவதூறு ஆகியவை வெளிவருகின்றன.
యతోఽన్తఃకరణాత్ కుచిన్తా బధః పారదారికతా వేశ్యాగమనం చైర్య్యం మిథ్యాసాక్ష్యమ్ ఈశ్వరనిన్దా చైతాని సర్వ్వాణి నిర్య్యాన్తి|
20 இவையே மனிதனை அசுத்தப்படுத்தும்; கை கழுவாமல் சாப்பிடுவது மனிதரை அசுத்தப்படுத்தாது” என்றார்.
ఏతాని మనుష్యమపవిత్రీ కుర్వ్వన్తి కిన్త్వప్రక్షాలితకరేణ భోజనం మనుజమమేధ్యం న కరోతి|
21 இயேசு அவ்விடம் விட்டு தீரு, சீதோன் பகுதிக்குச் சென்றார்.
అనన్తరం యీశుస్తస్మాత్ స్థానాత్ ప్రస్థాయ సోరసీదోన్నగరయోః సీమాముపతస్యౌ|
22 அப்பகுதியிலிருந்த ஒரு கானானியப் பெண் அவரிடத்தில் வந்து, “ஆண்டவரே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்! எனது மகளுக்குப் பிசாசு பிடித்திருப்பதினால் மிகவும் வேதனைப்படுகிறாள்” என்று கதறினாள்.
తదా తత్సీమాతః కాచిత్ కినానీయా యోషిద్ ఆగత్య తముచ్చైరువాచ, హే ప్రభో దాయూదః సన్తాన, మమైకా దుహితాస్తే సా భూతగ్రస్తా సతీ మహాక్లేశం ప్రాప్నోతి మమ దయస్వ|
23 ஆனால் இயேசு அதற்குப் பதிலாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. எனவே அவரது சீடர்கள் அவரிடம் வந்து, “இவளை அனுப்பிவிடும் இவள் நமக்குப் பின்னால் கதறிக் கொண்டே வருகிறாளே!” என வேண்டிக்கொண்டார்கள்.
కిన్తు యీశుస్తాం కిమపి నోక్తవాన్, తతః శిష్యా ఆగత్య తం నివేదయామాసుః, ఏషా యోషిద్ అస్మాకం పశ్చాద్ ఉచ్చైరాహూయాగచ్ఛతి, ఏనాం విసృజతు|
24 அப்பொழுது இயேசு, “நான் இஸ்ரயேலில் வழிதவறிப்போன ஆடுகளுக்காக மட்டுமே அனுப்பப்பட்டேன்” என்று சொன்னார்.
తదా స ప్రత్యవదత్, ఇస్రాయేల్గోత్రస్య హారితమేషాన్ వినా కస్యాప్యన్యస్య సమీపం నాహం ప్రేషితోస్మి|
25 அந்தப் பெண் வந்து, இயேசுவின்முன் முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே எனக்கு உதவிசெய்யும்!” என்றாள்.
తతః సా నారీసమాగత్య తం ప్రణమ్య జగాద, హే ప్రభో మాముపకురు|
26 இயேசு அவளைப் பார்த்து, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்றார்.
స ఉక్తవాన్, బాలకానాం భక్ష్యమాదాయ సారమేయేభ్యో దానం నోచితం|
27 அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, ஆனால் நாய்க்குட்டிகள் எஜமானின் மேஜையில் இருந்து விழும் அப்பத்துண்டுகளைத் தின்னுமே” என்றாள்.
తదా సా బభాషే, హే ప్రభో, తత్ సత్యం, తథాపి ప్రభో ర్భఞ్చాద్ యదుచ్ఛిష్టం పతతి, తత్ సారమేయాః ఖాదన్తి|
28 அப்பொழுது இயேசு, “பெண்ணே, உன் விசுவாசம் பெரியது! நீ வேண்டியது கொடுக்கப்பட்டது” என்றார். அந்நேரமே, அவளுடைய மகள் சுகமடைந்தாள்.
తతో యీశుః ప్రత్యవదత్, హే యోషిత్, తవ విశ్వాసో మహాన్ తస్మాత్ తవ మనోభిలషితం సిద్య్యతు, తేన తస్యాః కన్యా తస్మిన్నేవ దణ్డే నిరామయాభవత్|
29 இயேசு அவ்விடம் விட்டு, கலிலேயா கடலருகே வந்தார். அங்கே அவர் ஒரு மலைப்பகுதிக்கு ஏறிச்சென்று உட்கார்ந்தார்.
అనన్తరం యీశస్తస్మాత్ స్థానాత్ ప్రస్థాయ గాలీల్సాగరస్య సన్నిధిమాగత్య ధరాధరమారుహ్య తత్రోపవివేశ|
30 மக்கள் பெருங்கூட்டமாய் அவரிடத்தில் வந்தார்கள். அவர்கள் முடவரையும், பார்வையற்றோரையும், அங்கவீனரையும், ஊமையரையும், அவர்களுடன் மற்ற அநேக நோயாளிகளையும் கொண்டுவந்து அவருடைய பாதத்தில் கிடத்தினார்கள்; இயேசு அவர்களை குணமாக்கினார்.
పశ్చాత్ జననివహో బహూన్ ఖఞ్చాన్ధమూకశుష్కకరమానుషాన్ ఆదాయ యీశోః సమీపమాగత్య తచ్చరణాన్తికే స్థాపయామాసుః, తతః సా తాన్ నిరామయాన్ అకరోత్|
31 ஊமையர் பேசுவதையும், அங்கவீனர் சுகமடைவதையும், முடவர் நடப்பதையும், பார்வையற்றோர் பார்ப்பதையும் மக்கள் கண்டு வியப்படைந்தார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனைத் துதித்தார்கள்.
ఇత్థం మూకా వాక్యం వదన్తి, శుష్కకరాః స్వాస్థ్యమాయాన్తి, పఙ్గవో గచ్ఛన్తి, అన్ధా వీక్షన్తే, ఇతి విలోక్య లోకా విస్మయం మన్యమానా ఇస్రాయేల ఈశ్వరం ధన్యం బభాషిరే|
32 இயேசு தமது சீடரைத் தம்மிடமாய்க் கூப்பிட்டு, “நான் இந்த மக்களுக்காக இரக்கப்படுகிறேன்; இவர்கள் என்னுடன் ஏற்கெனவே மூன்று நாட்கள் தங்கிவிட்டார்கள். சாப்பிடுவதற்கோ, அவர்களிடம் ஒன்றுமில்லை. நான் இவர்களைப் பசியோடு அனுப்ப விரும்பவில்லை, அனுப்பினால் இவர்கள் வழியில் சோர்ந்து விழுவார்களே” என்றார்.
తదానీం యీశుః స్వశిష్యాన్ ఆహూయ గదితవాన్, ఏతజ్జననివహేషు మమ దయా జాయతే, ఏతే దినత్రయం మయా సాకం సన్తి, ఏషాం భక్ష్యవస్తు చ కఞ్చిదపి నాస్తి, తస్మాదహమేతానకృతాహారాన్ న విస్రక్ష్యామి, తథాత్వే వర్త్మమధ్యే క్లామ్యేషుః|
33 அவரது சீடர்கள் அவரிடம், “இவ்வளவு பெரிய கூட்டத்திற்குக் கொடுக்கத் தேவையான உணவை சற்று தூரமான இந்த இடத்திலே எங்கிருந்து பெறமுடியும்?” என்று கேட்டார்கள்.
తదా శిష్యా ఊచుః, ఏతస్మిన్ ప్రాన్తరమధ్య ఏతావతో మర్త్యాన్ తర్పయితుం వయం కుత్ర పూపాన్ ప్రాప్స్యామః?
34 “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று இயேசு கேட்டார். “ஏழு அப்பங்களும், சில சிறு மீன்களும் இருக்கின்றன” என்று பதிலளித்தார்கள்.
యీశురపృచ్ఛత్, యుష్మాకం నికటే కతి పూపా ఆసతే? త ఊచుః, సప్తపూపా అల్పాః క్షుద్రమీనాశ్చ సన్తి|
35 இயேசு மக்கள் கூட்டத்தைத் தரையில் உட்காரும்படி சொன்னார்.
తదానీం స లోకనివహం భూమావుపవేష్టుమ్ ఆదిశ్య
36 பின்பு அவர் ஏழு அப்பங்களையும், மீன்களையும் எடுத்து இறைவனுக்கு நன்றி செலுத்தியபின், அவற்றைப் பிட்டு சீடர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள்.
తాన్ సప్తపూపాన్ మీనాంశ్చ గృహ్లన్ ఈశ్వరీయగుణాన్ అనూద్య భంక్త్వా శిష్యేభ్యో దదౌ, శిష్యా లోకేభ్యో దదుః|
37 அவர்கள் எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அதற்குப் பின்பு மீதியான அப்பத் துண்டுகளைச் சீடர்கள் ஏழு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.
తతః సర్వ్వే భుక్త్వా తృప్తవన్తః; తదవశిష్టభక్ష్యేణ సప్తడలకాన్ పరిపూర్య్య సంజగృహుః|
38 சாப்பிட்ட ஆண்களின் எண்ணிக்கை நாலாயிரமாயிருந்தது. அவர்களைத்தவிர பெண்களும், பிள்ளைகளுங்கூட இருந்தார்கள்.
తే భోక్తారో యోషితో బాలకాంశ్చ విహాయ ప్రాయేణ చతుఃసహస్రాణి పురుషా ఆసన్|
39 இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டபின், படகில் ஏறி மகதான் நாட்டின் எல்லைகளுக்கு வந்தார்.
తతః పరం స జననివహం విసృజ్య తరిమారుహ్య మగ్దలాప్రదేశం గతవాన్|