< மத்தேயு 11 >

1 இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கு அறிவுரை கூறிமுடித்த பின்பு, அவர் அங்கிருந்து பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் கலிலேயாவிலுள்ள பட்டணங்களுக்குச் சென்றார்.
जत्‌यार ईसु आह़फा ना बारे चेला ने आहयी ह़ीकापण आप चुक्‌यो अने गलील जीला ना ह़ेर-ह़ेर मे ह़ीकापण आपतो, अने परच्‌यार करतो जाय्‌न तां गेथो जत र्‌यो।
2 யோவான் சிறையில் இருக்கையில், கிறிஸ்துவின் கிரியைகளைப்பற்றிக் கேள்விப்பட்டான். அப்போது அவன் தன் சீடர்களை அனுப்பி,
जत्‌यार युहन्‌नो जेल मे रीन ईसु मसीन काम ना बारा मे खबर ह़मळीन अने आह़फा ना चेला ने तीने आहयु पुसवा मोकल्‌यो,
3 “வரப்போகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” என்று அவரிடம் கேட்கும்படி சொன்னான்.
“ह़ु आव्‌वा वाळो तुत से नीता आमु बीजा नी वाट जोवया?”
4 அதற்கு இயேசு, “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும், கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்:
ईसु तीने जपाप आप्‌यो, “जे कंय तमु ह़मळो अने देखो तीहयु आखु जाय्‌न युहन्‌ना ने की देजो,
5 பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
के आंदळा देखे, अने लंगड़ा चाले, कुड़ावा आरगा हये, बेरा ह़मळे मरला जीवता हये, गरीब ने खुस-खबर ह़मळायो।
6 என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார்.
अने जुगाळो से तीहयो, जे मारी कारण सी ठोकर नी खाय?”
7 யோவானின் சீடர்கள் இயேசுவைவிட்டுப் போகும்போது, அவர் கூடியிருந்த மக்களைப் பார்த்து, யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார்: “பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?
जत्‌यार तीहया तां गेथा चाल पड़्‌या, ता ईसु युहन्‌ना ना बारा मे माणहु ने केवा बाज ज्‌यो, “तमु बड़ा मे ह़ु देखवा जेला हता? के वाहळु मे हीलत्‌ला वाहण्‌या ने?
8 இல்லையென்றால் எதைப்பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா? இல்லை, சிறப்பான உடைகளை உடுத்தியிருப்பவர்கள் அரசரின் அரண்மனைகளில் அல்லவா இருக்கிறார்கள்.
अळी तमु ह़ु देखवा जेला हता? के नरम लुगड़ा पेरला माणेह ने? देखो, जे नरम लुगड़ा पेरे, तीहया राजा नी हवेली मे रेय।
9 அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? இறைவாக்கினனையா? ஆம், ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
ता अळी काहा जेला हता? भगवान वगे गेथा केण्‌या माणेह ने देखवा करीन जेला ह़ु? होव, मे तमने केम के भगवान वगे गेथा केण्‌या गेथा बी मोट्‌ला माणेह ने देखवा जेला।
10 “‘உமக்கு முன்பாக நான் என்னுடைய தூதனை அனுப்புவேன்; அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்,’ என்று இவனைப் பற்றியே இது எழுதப்பட்டுள்ளது.
आहयो तीहयोत से, जीना बारा मे लीखलु से; के देख; मे मारा ह़रगदुत ने तार गेथो अगळ मोकलही। तीहयो तार अगळ तार जुगु रोहो तीयार करहे।
11 “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்: மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆனால், பரலோக அரசில் சிறியவனாயிருக்கிறவன், அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான்.
मे तमने ह़ाचलीन केम के, जे आह्‌य सी पयदा हयलो से, तीमनी मे गेथो युहन्‌ना बपतीस्‌मा आपवा वाळा सी कोय मोटो नी हय, पण जे ह़रग राज मे नाना सी नानो से तीहयो बपतीस्‌मा आपण्‌या युहन्‌ना गेथो मोटो से।
12 யோவான் ஸ்நானகனின் நாட்கள் தொடங்கி, இந்நாள்வரையிலும் பரலோக அரசு வன்முறைக்கு உள்ளாகிறது. வன்முறையாளர் அதைக் கைப்பற்றிக்கொள்கின்றனர்.
युहन्‌ना बपतीस्‌मा आपण्‌यो आयो तां गेथात आज तक माणहु ह़रग राज मे ताखत भेळ भरायता रेता हता, अने ताखत वाळा तीने हापकी लेता हता।
13 ஏனெனில் யோவான் வரை எல்லா இறைவாக்கினராலும், மோசேயின் சட்டத்தினாலும் இறைவாக்கு உரைக்கப்பட்டுள்ளது.
भगवान वगे गेथी वात केण्‌यो माणेह अने मुसा नी लारे लीखली सास्‌तर, बपतीस्‌मा आपण्‌या युहन्‌ना ने आव्‌वा नी पेलेत भगवान वगे गेथी वात केता हता।
14 வரவேண்டியிருந்த எலியா இவனே. நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பினால் ஏற்றுக்கொள்ளுங்கள்.
कदीम तमने जोवे ता मानो के एलीया जे आव्‌वा वाळो हतो तीहयो आहयो युहन्‌नो से।”
15 கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்.
जीना कान्‌टा हय, तीहयो ह़मळी लेय।
16 “இந்தத் தலைமுறையை நான் யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தைகூடும் இடங்களில் உட்கார்ந்திருந்து, விளையாடுவதற்கு மற்றவர்களைச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறவர்கள்:
मे आहयी पीड़ी ना माणहु नी बराबरी मे कोय सी करु? तीहया हाट मे बहला तीहया सोराम नी तेवा से, जे एक-बीजा सी आड़ीन केता हता,
17 “‘நாங்கள் உங்களுக்காகப் புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; ஒப்பாரி பாடினோம், நீங்கள் துக்கங்கொண்டாடவில்லை,’ என்று சொல்லுகிற பிள்ளைகளுக்கே ஒப்பிடுவேன்.
के आमु ते तमारी वाटु पीहो वगाड़्‌या, अने तमु नी नाच्‌या; आमु ते दुखी हया, अने तमु छाती नी पीट्‌या।
18 “ஏனெனில் யோவான் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், குடிக்காதவனுமாக வந்தான்; அவர்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறார்கள்.
काहाके बपतीस्‌मा आपण्‌यो युहन्‌नो नी ते रोट्‌ला खातो हतो अने नी पीतो हतो, अने तीहया केता हता के तीनी मे भुत से।
19 மானிடமகனோ விருந்து உணவைச் சாப்பிடுகிறவராகவும், குடிக்கிறவராகவும் வந்தார். அவரைப் பார்த்து, ‘இவனோ உணவுப்பிரியன், மதுபானப்பிரியன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கிறீர்கள். ஆனால் ஞானம் சரியானது என்று அதை ஏற்று நடக்கிறவர்களின் செயல்களாலேதான் அது நிரூபிக்கப்படுகிறது” என்றார்.
माणहु नो सोरो खातो-पीतो आयो, अने तीहयो केतो हतो के देखो, “खादड़्‌यो अने दारकुट्‌टो माणेह, फाळो लेण्‌या अने पापी नो दोस्‌तीदार से। पण जे माणहु ने भगवान नी अक्‌कल ह़ीकाड़े तीहया खरला से।”
20 சில பட்டணங்களில் இயேசு அநேக அற்புதங்களைச் செய்தும், அப்பட்டணத்து மக்கள் மனந்திரும்பவில்லை. அதனால் அவர் அந்தப் பட்டணங்களைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார்.
ता ईसु तीहया ह़ेर ना माणहु ने खीजवाय्‌न वडवा बाज ज्‌यो, तां ह़ारीक ईसु ढेरेत जुदा-काम कर्‌यो पण तीहया आहया काम देखीन बी पाप भणी गेथा मन फीरवीन भगवान वगा नी वळ्‌या।
21 “கோராசினே, உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள்; துக்கவுடை உடுத்தி, சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள்.
ए खराजीन ह़ेर! ए बेतसेदा! तमारी वाटु दुख नी वात से; देख, जे सक्‌ती ना काम तमारी मे कर्‌यो, तीहया सुर अने सेदा मे करतो, ता तीहया ठेला ओडीन अने रोखड़ा मे बहीन पापु भणी गेथा मन फीरवीन भगवान वगा वळ जता।
22 ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே தீருவுக்கும் சீதோனுக்கும் நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும்.
एतरे मे तमने केम नीयाव ना दाड़े तमारी हालत सुर ह़ेर अने सेदा ह़ेर नी हालत सी बी जादा वेठवा जुगु हयहे।
23 கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லவே இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும். (Hadēs g86)
“अने ए कफरनहुम! ह़ु तु ह़रगे लग उचु हयही? नी! तु ते पताळ मे लग हेटो जही; जे सक्‌ती ना काम तारी मे करला से, कदीम तीहया सदोम मे करतो, ता तीहया आज लग बणीन रेता। (Hadēs g86)
24 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே சோதோம் நாட்டுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும்” என்றார்.
एतरे मे तमने केम, नीयाव ना दाड़े तमने सदोम गेथो जादा डंड जड़हे।”
25 அவ்வேளையில் இயேசு சொன்னதாவது: “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, குழந்தைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது.
तीहयी टेमे ईसु केदो, “बाह! ह़रग अने धरती ना मालीक! मे तारा गुण गावु; काहाके तु आहयी आखी वात ने अक्‌कल वाळा अने भणला माणहु गेथी ह़ताड़ीन भोळा सोरा ह़रका माणहु अगळ उजन्‌ती कर्‌यो।
26 ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாயிருந்தது.
होव बाह! तु आनी करते आसम कर्‌यो काहाके तने आहयुत वारु लाग्‌यु।”
27 “என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிதாவைத் தவிர வேறொருவனும் மகனை அறியான், மகனைத் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்; யாருக்கெல்லாம் பிதாவை வெளிப்படுத்த மகன் தெரிந்துகொள்கிறாரோ, அவர்களைத்தவிர, வேறொருவரும் பிதா இன்னாரென்று அறியார்கள்.
“मारो बाह, मने आखु कंय आप देदलो से। बाह ने सोड़ीन कोय बी बेटा ने नी जाणतु। आहयीत रीते बेटा ने सोड़ीन बाह ने कोय नी जाणतु। अने तीहयो एतरोत बाह ने जाणे, जीमनी पोर बेटो बाह ने उजन्‌तो करे।”
28 “வருத்தத்துடன் மனப்பாரங்களை சுமந்து களைப்புற்றிருக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
“ए आखा काम करीन थाकला अने भार मे डबायला माणहु मारीन्‌तां आवो, मे तमने अराम आपही।
29 எனது நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாவிலே ஆறுதல் பெறுவீர்கள். ஏனெனில், நான் தயவும் இருதயத்தில் தாழ்மையும் உடையவராய் இருக்கிறேன்.
मारो वळो आह़फा पोर मेक लेवो अने मार सी ह़ीको, काहाके मे नीचळो अने मन मे गरीब से। अने तमु तमारा मन मे अराम हात करहु,
30 எனது நுகம் இலகுவானது, எனது சுமை எளிதானது.”
काहाके मारो वळो वारु से, अने मारो भार फवरलो से।”

< மத்தேயு 11 >