< மத்தேயு 10 >

1 இயேசு தமது பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் வரவழைத்து, அசுத்த ஆவிகளை விரட்டவும், எல்லா விதமான நோய்களையும், வியாதிகளையும் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார்.
ⲁ̅ⲁϥⲙⲟⲩⲧⲉ ⲇⲉ ⲉⲡⲉϥⲙⲛⲧⲥⲛⲟⲟⲩⲥ ⲙⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲁϥϯ ⲛⲁⲩ ⲛⲧⲉⲝⲟⲩⲥⲓⲁ ⲛⲛⲉⲡⲛⲁ ⲛⲁⲕⲁⲑⲁⲣⲧⲟⲛ ⲉⲛⲟⲩϫ ⲉⲃⲟⲗ ⲁⲩⲱ ⲉⲣⲡⲁϩⲣⲉ ⲉϣⲱⲛⲉ ⲛⲓⲙ ϩⲓⲗⲟϫⲗⲉϫ ⲛⲓⲙ
2 இவை அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள்: முதலாவது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவனுடைய சகோதரன் அந்திரேயா; செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான்;
ⲃ̅ⲛⲁⲓ ⲇⲉ ⲛⲉ ⲛⲣⲁⲛ ⲙⲡⲙⲛⲧⲥⲛⲟⲟⲩⲥ ⲛⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ ⲡϣⲟⲣⲡ ⲡⲉ ⲥⲓⲙⲱⲛ ⲡⲉⲧⲉϣⲁⲩⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟϥ ϫⲉ ⲡⲉⲧⲣⲟⲥ ⲙⲛ ⲁⲛⲇⲣⲉⲁⲥ ⲡⲉϥⲥⲟⲛ ⲓⲁⲕⲱⲃⲟⲥ ⲡϣⲏⲣⲉ ⲛⲍⲉⲃⲉⲇⲁⲓⲟⲥ ⲙⲛ ⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲡⲉϥⲥⲟⲛ
3 பிலிப்பு, பர்தொலொமேயு; தோமா, வரி வசூலிப்பவனான மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,
ⲅ̅ⲫⲓⲗⲓⲡⲡⲟⲥ ⲙⲛ ⲃⲁⲣⲑⲟⲗⲟⲙⲁⲓⲟⲥ ⲑⲱⲙⲁⲥ ⲙⲛ ⲙⲁⲑⲑⲁⲓⲟⲥ ⲡⲧⲉⲗⲱⲛⲏⲥ ⲓⲁⲕⲱⲃⲟⲥ ⲡϣⲏⲣⲉ ⲛⲁⲗⲫⲁⲓⲟⲥ ⲙⲛ ⲑⲁⲇⲇⲁⲓⲟⲥ
4 கானானியனாகிய சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து ஆகியோரே.
ⲇ̅ⲥⲓⲙⲱⲛ ⲡⲕⲁⲛⲁⲛⲓⲧⲏⲥ ⲙⲛ ⲓⲟⲩⲇⲁⲥ ⲡⲓⲥⲕⲁⲣⲓⲱⲧⲏⲥ ⲡⲉⲛⲧⲁϥⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙⲙⲟϥ
5 இயேசு இந்தப் பன்னிரண்டு பேருக்கும் இவ்வழிமுறைகளைச் சொல்லி அனுப்பினார்: “நீங்கள் யூதரல்லாதவர்களிடம் போகவேண்டாம், சமாரியர்களின் எந்த பட்டணத்திற்குள்ளும் செல்லவேண்டாம்.
ⲉ̅ⲡⲉⲓⲙⲛⲧⲥⲛⲟⲟⲩⲥ ⲁϥϫⲟⲟⲩⲥⲉ ⲛϭⲓ ⲓⲏⲥ ⲁϥⲡⲁⲣⲁⲅⲅⲉⲓⲗⲉ ⲛⲁⲩ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲙⲡⲣⲃⲱⲕ ⲉϩⲓⲏ ⲛϩⲉⲑⲛⲟⲥ ⲁⲩⲱ ⲙⲡⲣⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲟⲗⲓⲥ ⲛⲥⲁⲙⲁⲣⲓⲧⲏⲥ
6 இஸ்ரயேலின் வழிதவறிப்போன ஆடுகளிடத்திற்கே போங்கள்.
ⲋ̅ⲃⲱⲕ ⲇⲉ ⲛϩⲟⲩⲟ ϣⲁⲛⲉⲥⲟⲟⲩ ⲛⲧⲁⲩⲥⲱⲣⲙ ⲛⲧⲉⲡⲏⲓ ⲙⲡⲓⲥⲣⲁⲏⲗ
7 நீங்கள் போகும்போது, ‘பரலோக அரசு சமீபித்து வருகிறது’ என்ற செய்தியைப் பிரசங்கியுங்கள்.
ⲍ̅ⲉⲧⲉⲧⲛⲁⲃⲱⲕ ⲇⲉ ⲧⲁϣⲉⲟⲉⲓϣ ⲉⲧⲉⲧⲛϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲙⲉⲧⲁⲛⲟⲓ ⲁⲥϩⲱⲛ ⲅⲁⲣ ⲉϩⲟⲩⲛ ⲛϭⲓ ⲧⲙⲛⲧⲣⲣⲟ ⲛⲙⲡⲏⲩⲉ
8 நோயுற்றோரை குணமாக்குங்கள், இறந்தவர்களை எழுப்புங்கள், குஷ்டவியாதி உள்ளோரைச் சுத்தப்படுத்துங்கள், பிசாசுகளை விரட்டுங்கள். இலவசமாக நீங்கள் பெற்றீர்கள், இலவசமாகவே கொடுங்கள்.
ⲏ̅ⲛⲉⲧϣⲱⲛⲉ ⲁⲣⲓⲡⲁϩⲣⲉ ⲉⲣⲟⲟⲩ ⲛⲉⲧⲥⲟⲃϩ ⲧⲃⲃⲟⲟⲩ ⲛⲇⲁⲓⲙⲱⲛⲓⲟⲛ ⲛⲟϫⲟⲩ ⲉⲃⲟⲗ ⲁⲧⲉⲧⲛϫⲓ ⲛϫⲓⲛϫⲏ ϯⲛϫⲓⲛϫⲏ
9 “நீங்கள் போகும்போது, எவ்வித தங்கம், வெள்ளி, செப்புக் காசுகளை உங்கள் மடிப்பையில் கொண்டுபோக வேண்டாம்;
ⲑ̅ⲙⲡⲣϫⲡⲟ ⲛⲏⲧⲛ ⲛⲟⲩⲛⲟⲩⲃ ⲟⲩⲧⲉ ⲟⲩϩⲁⲧ ⲟⲩⲇⲉ ϩⲟⲙⲛⲧ ϩⲛ ⲛⲉⲧⲛⲙⲟϫϩ
10 பயணத்திற்கென்று பையையோ, மாற்று உடையையோ, பாதரட்சைகளையோ, ஊன்றுகோலையோ கொண்டுபோக வேண்டாம்; ஏனெனில் வேலையாள் தன் உணவுக்குப் பாத்திரவானாயிருக்கிறான்.
ⲓ̅ⲟⲩⲧⲉ ⲡⲏⲣⲁ ⲉⲧⲉϩⲓⲏ ⲟⲩⲧⲉ ϣⲧⲏⲛ ⲥⲛⲧⲉ ⲟⲩⲧⲉ ⲟⲩⲧⲟⲟⲩⲉ ⲟⲩⲧⲉ ⲟⲩϭⲉⲣⲱⲃ ϥⲉⲙⲡϣⲁ ⲅⲁⲣ ⲛϭⲓ ⲡⲉⲣⲅⲁⲧⲏⲥ ⲛⲧⲉϥϩⲣⲉ
11 நீங்கள் எந்தப் பட்டணத்திற்கோ கிராமத்திற்கோ சென்றாலும் அங்கே தகுதியுள்ள ஒருவனைத் தேடி, நீங்கள் அவ்விடத்தைவிட்டுப் புறப்படும்வரை அவனுடைய வீட்டிலேயே தங்கியிருங்கள்.
ⲓ̅ⲁ̅ⲧⲡⲟⲗⲓⲥ ⲇⲉ ⲉⲧⲉⲧⲛⲁⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲣⲟⲥ ⲏ ⲡϯⲙⲉ ϣⲓⲛⲉ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧⲥ ϫⲉ ⲛⲓⲙ ⲡⲉⲧⲙⲡϣⲁ ⲛⲧⲉⲧⲛϭⲱ ϩⲙ ⲡⲙⲁ ⲉⲧⲙⲙⲁⲩ ϣⲁⲛⲧⲉⲧⲛⲉⲓ ⲉⲃⲟⲗ
12 அந்த வீட்டிற்குள் செல்லும்போது, உங்கள் வாழ்த்துக்களை அறிவியுங்கள்.
ⲓ̅ⲃ̅ⲉⲧⲉⲧⲛⲃⲏⲕ ⲇⲉ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲏⲓ ⲁⲥⲡⲁⲍⲉ ⲙⲙⲟϥ
13 அந்த வீடு தகுதியுள்ளதாக இருந்தால், உங்கள் சமாதானம் அவ்வீட்டில் தங்கட்டும்; இல்லையானால், உங்கள் சமாதானம் உங்களிடம் திரும்பிவரும்.
ⲓ̅ⲅ̅ⲁⲩⲱ ⲉϣⲱⲡⲉ ⲡⲏⲓ ⲙⲡϣⲁ ⲙⲁⲣⲉⲧⲉⲧⲛⲉⲓⲣⲏⲛⲏ ⲉⲓ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲱϥ ⲉϣⲱⲡⲉ ⲇⲉ ⲛϥⲙⲡϣⲁ ⲁⲛ ⲙⲁⲣⲉⲧⲉⲧⲛⲉⲓⲣⲏⲛⲏ ⲕⲟⲧⲥ ⲉⲣⲱⲧⲛ
14 யாராவது உங்களை வரவேற்காமலோ, உங்கள் வார்த்தைக்குச் செவிகொடுக்காமலோ இருந்தால், நீங்கள் அந்த வீட்டையோ, பட்டணத்தையோ விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களிலுள்ள தூசியை உதறிவிடுங்கள்.
ⲓ̅ⲇ̅ⲡⲉⲧⲉⲛϥⲛⲁϫⲓⲧⲏⲩⲧⲛ ⲇⲉ ⲁⲛ ⲁⲩⲱ ⲛϥⲧⲙⲥⲱⲧⲙ ⲉⲛⲉⲧⲛϣⲁϫⲉ ⲉⲧⲉⲧⲛⲛⲏⲩ ⲇⲉ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲏⲓ ⲏ ⲧⲡⲟⲗⲓⲥ ⲉⲧⲙⲙⲁⲩ ⲏ ⲡϯⲙⲉ ⲛⲟⲩϩⲉ ⲉⲃⲟⲗ ⲙⲡϣⲟⲉⲓϣ ⲛⲛⲉⲧⲛⲟⲩⲉⲣⲏⲧⲉ
15 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளில் அந்தப் பட்டணத்திற்கு நடக்கப்போவது, சோதோம், கொமோரா பட்டணங்களுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும் கடினமானதாயிருக்கும்.
ⲓ̅ⲉ̅ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲟⲩⲛⲟⲩⲙⲧⲟⲛ ⲛⲁϣⲱⲡⲉ ϩⲙ ⲡⲕⲁϩ ⲛⲥⲟⲇⲟⲙⲁ ⲙⲛ ⲅⲟⲙⲟⲣⲣⲁ ϩⲙ ⲡⲉϩⲟⲟⲩ ⲛⲧⲉⲕⲣⲓⲥⲓⲥ ⲉϩⲟⲩⲉⲧⲡⲟⲗⲓⲥ ⲉⲧⲙⲙⲁⲩ
16 “ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல நான் உங்களை அனுப்புகிறேன். ஆகையால் பாம்புகளைப்போல புத்திக்கூர்மை உள்ளவர்களாயும், புறாக்களைப்போல் கபடற்றவர்களாயும் இருங்கள்.
ⲓ̅ⲋ̅ⲉⲓⲥ ϩⲏⲏⲧⲉ ⲁⲛⲟⲕ ϯϫⲟⲟⲩ ⲙⲙⲱⲧⲛ ⲛⲑⲉ ⲛϩⲉⲛⲉⲥⲟⲟⲩ ϩⲛ ⲧⲙⲏⲧⲉ ⲛϩⲉⲛⲟⲩⲱⲛϣ ϣⲱⲡⲉ ϭⲉ ⲛⲥⲁⲃⲉ ⲛⲑⲉ ⲛⲛϩⲟϥ ⲁⲩⲱ ⲛⲁⲕⲉⲣⲁⲓⲟⲥ ⲛⲑⲉ ⲛⲛⲓϭⲣⲟⲟⲙⲡⲉ
17 மனிதரைக் குறித்து விழிப்பாயிருங்கள்; அவர்கள் உங்களைத் தங்கள் நீதிமன்றங்களில் ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சவுக்கால் அடிப்பார்கள்.
ⲓ̅ⲍ̅ϯϩⲧⲏⲧⲛ ⲇⲉ ⲉⲣⲱⲧⲛ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲛⲉⲣⲱⲙⲉ ⲥⲉⲛⲁⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲅⲁⲣ ⲙⲙⲱⲧⲛ ⲉⲛⲥⲩⲛϩⲉⲇⲣⲓⲟⲛ ⲁⲩⲱ ϩⲣⲁⲓ ϩⲛ ⲛⲉⲩⲥⲩⲛⲁⲅⲱⲅⲏ ⲥⲉⲛⲁⲙⲁⲥⲧⲓⲅⲟⲩ ⲙⲙⲱⲧⲛ
18 என் நிமித்தமாக ஆளுநர்களுக்கும், அரசர்களுக்கும் முன்பாக நீங்கள் கொண்டுபோகப்படுவீர்கள். அவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் முன்னால், நீங்கள் எனக்கு சாட்சிகளாய் இருப்பீர்கள்.
ⲓ̅ⲏ̅ⲛⲥⲉϫⲓⲧⲏⲩⲧⲛ ⲛⲛϩⲏⲅⲉⲙⲱⲛ ⲙⲛ ⲛⲣⲣⲱⲟⲩ ⲉⲧⲃⲏⲏⲧ ⲉⲩⲙⲛⲧⲙⲛⲧⲣⲉ ⲛⲁⲩ ⲙⲛ ⲛϩⲉⲑⲛⲟⲥ
19 அவர்கள் உங்களைக் கைது செய்யும்போது, என்ன சொல்வது, எப்படிச் சொல்வது எனக் கவலைப்படாதிருங்கள். அந்த நேரத்தில், என்ன சொல்லவேண்டும் என்பது உங்களுக்குக் கொடுக்கப்படும்.
ⲓ̅ⲑ̅ϩⲟⲧⲁⲛ ⲇⲉ ⲉⲩϣⲁⲛⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙⲙⲱⲧⲛ ⲙⲡⲣϥⲓⲣⲟⲟⲩϣ ϫⲉ ⲛⲁϣ ⲛϩⲉ ⲏ ⲉⲧⲉⲧⲛⲁϫⲟⲟⲥ ϫⲉ ⲟⲩ ⲥⲉⲛⲁϯ ⲅⲁⲣ ⲛⲏⲧⲛ ϩⲛ ⲧⲉⲩⲛⲟⲩ ⲉⲧⲙⲙⲁⲩ ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧⲉⲧⲛⲛⲁϫⲟⲟϥ
20 ஏனெனில் பேசுவது நீங்களாய் இருக்கமாட்டீர்கள். உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்கள் மூலமாகப் பேசுவார்.
ⲕ̅ⲛⲧⲱⲧⲛ ⲅⲁⲣ ⲁⲛ ⲡⲉⲧϣⲁϫⲉ ⲁⲗⲗⲁ ⲡⲉⲡⲛⲁ ⲙⲡⲉⲧⲛⲉⲓⲱⲧ ⲡⲉⲧϣⲁϫⲉ ⲛϩⲏⲧⲧⲏⲩⲧⲛ
21 “சகோதரன் தன் சகோதரனைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். தகப்பன் தனது பிள்ளையைக் கொல்லும்படி காட்டிக்கொடுப்பான். பிள்ளைகள் அவர்கள் பெற்றோருக்கு எதிராக எழும்பி, அவர்களை கொலைசெய்வார்கள்.
ⲕ̅ⲁ̅ⲟⲩⲛⲟⲩⲥⲟⲛ ⲇⲉ ⲛⲁⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙⲡⲉϥⲥⲟⲛ ⲉⲡⲙⲟⲩ ⲁⲩⲱ ⲟⲩⲉⲓⲱⲧ ⲙⲡⲉϥϣⲏⲣⲉ ⲛⲧⲉⲛϣⲏⲣⲉ ⲧⲱⲟⲩⲛ ⲉϫⲛ ⲛⲉⲩⲉⲓⲟⲧⲉ ⲛⲥⲉⲙⲟⲩⲟⲩⲧ ⲙⲙⲟⲟⲩ
22 என் நிமித்தமாக எல்லோரும் உங்களை வெறுப்பார்கள். ஆனால் முடிவுவரை பொறுமையாய் இருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
ⲕ̅ⲃ̅ⲛⲧⲉⲧⲛϣⲱⲡⲉ ⲉⲩⲙⲟⲥⲧⲉ ⲙⲙⲱⲧⲛ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲛ ⲣⲱⲙⲉ ⲛⲓⲙ ⲉⲧⲃⲉ ⲡⲁⲣⲁⲛ ⲡⲉⲧⲛⲁϩⲩⲡⲟⲙⲉⲓⲛⲉ ⲇⲉ ϣⲁⲃⲟⲗ ⲡⲁⲓ ⲡⲉⲧⲛⲁⲟⲩϫⲁⲓ
23 நீங்கள் ஒரு இடத்தில் துன்புறுத்தப்படுகையில், மற்றொரு இடத்திற்குத் தப்பியோடுங்கள். ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், மானிடமகனாகிய நான் வருவதற்கு முன்னால், நீங்கள் இஸ்ரயேலின் பட்டணங்கள் முழுவதையும் சுற்றி முடிக்கமாட்டீர்கள், என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ⲕ̅ⲅ̅ϩⲟⲧⲁⲛ ⲇⲉ ⲉⲩϣⲁⲛⲡⲱⲧ ⲛⲥⲱⲧⲛ ϩⲛ ⲧⲉⲓⲡⲟⲗⲓⲥ ⲡⲱⲧ ⲉϩⲣⲁⲓ ⲉⲕⲉⲟⲩⲉⲓ ϩⲁⲙⲏⲛ ⲅⲁⲣ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲛⲛⲉⲧⲛϫⲱⲕ ⲉⲃⲟⲗ ⲛⲙⲡⲟⲗⲓⲥ ⲙⲡⲓⲥⲣⲁⲏⲗ ⲙⲡⲉⲡϣⲏⲣⲉ ⲙⲡⲣⲱⲙⲉ ⲉⲓ
24 “ஒரு மாணவன் ஆசிரியரைவிட மேலானவன் அல்ல. ஒரு வேலைக்காரன் தன் எஜமானைவிட மேலானவன் அல்ல.
ⲕ̅ⲇ̅ⲙⲛⲥⲃⲟⲩⲓ ⲅⲁⲣ ⲉϥⲟ ⲛⲛⲟϭ ⲉⲡⲉϥⲥⲁϩ ⲟⲩⲧⲉ ⲙⲛ ϩⲙϩⲁⲗ ⲉϥϫⲟⲥⲉ ⲉϩⲟⲩⲉⲡⲉϥϫⲟⲉⲓⲥ
25 ஒரு மாணவன் தனது ஆசிரியரைப் போலவும், வேலைக்காரன் தனது எஜமானைப் போலவும் இருந்தால், அதுவே போதுமானது. ஒரு வீட்டின் தலைவன் பெயல்செபூல் என அழைக்கப்பட்டால், அவன் குடும்பத்தார் அதைவிட எவ்வளவு அதிகமாக அழைக்கப்படுவார்கள்!
ⲕ̅ⲉ̅ϩⲱ ⲉⲡⲉⲥⲃⲟⲩⲓ ϫⲉ ⲉϥⲉϣⲱⲡⲉ ⲛⲑⲉ ⲙⲡⲉϥⲥⲁϩ ⲁⲩⲱ ⲡϩⲙϩⲁⲗ ϫⲉ ⲉϥⲉϣⲱⲡⲉ ⲛⲑⲉ ⲙⲡⲉϥϫⲟⲉⲓⲥ ⲉϣϫⲉ ⲁⲩⲙⲟⲩⲧⲉ ⲉⲡϫⲟⲉⲓⲥ ϫⲉ ⲃⲉⲉⲗⲍⲉⲃⲟⲩⲗ ⲡⲟⲥⲟ ⲙⲁⲗⲗⲟⲛ ⲛⲉϥⲣⲙⲛⲏⲓ
26 “எனவே, அவ்வாறு பயமுறுத்துகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். மறைத்தது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை, ஒளித்து வைக்கப்படுவது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை.
ⲕ̅ⲋ̅ⲙⲡⲣⲣ ϩⲟⲧⲉ ϭⲉ ϩⲏⲧⲟⲩ ⲙⲛ ⲗⲁⲁⲩ ⲅⲁⲣ ⲉϥϩⲟⲃⲥ ⲛⲥⲉⲛⲁϭⲟⲗⲡϥ ⲁⲛ ⲉⲃⲟⲗ ⲁⲩⲱ ⲉϥϩⲏⲡ ⲉⲛϥⲛⲁⲟⲩⲱⲛϩ ⲁⲛ ⲉⲃⲟⲗ
27 நான் உங்களுக்கு இருளிலே சொன்னவற்றை, பகல் வெளிச்சத்தில் சொல்லுங்கள்; உங்கள் காதில் மெதுவாய் சொன்னதை, வீட்டின் கூரையின் மேலிருந்து அறிவியுங்கள்.
ⲕ̅ⲍ̅ⲡⲉϯϫⲱ ⲙⲙⲟϥ ⲛⲏⲧⲛ ϩⲙ ⲡⲕⲁⲕⲉ ⲁϫⲓϥ ϩⲙ ⲡⲟⲩⲟⲉⲓⲛ ⲁⲩⲱ ⲡⲉⲧⲉⲧⲛⲥⲱⲧⲙ ⲉⲣⲟϥ ϩⲙ ⲡⲉⲧⲛⲙⲁⲁϫⲉ ⲧⲁϣⲉⲟⲉⲓϣ ⲙⲙⲟϥ ϩⲓϫⲛ ⲛϫⲉⲛⲉⲡⲱⲣ
28 உடலைக் கொல்லுகிறவர்களுக்கு பயப்படவேண்டாம். அவர்களால் ஆத்துமாவைக் கொல்ல முடியாதே. உடலையும், ஆத்துமாவையும் நரகத்தில் அழிக்க வல்லமையுள்ள இறைவனுக்கு மட்டுமே பயப்படுங்கள். (Geenna g1067)
ⲕ̅ⲏ̅ⲙⲡⲣⲣ ϩⲟⲧⲉ ϩⲏⲧⲟⲩ ⲛⲛⲉⲧⲛⲁⲙⲟⲩⲟⲩⲧ ⲙⲡⲉⲧⲛⲥⲱⲙⲁ ⲉⲙⲛϭⲟⲙ ⲇⲉ ⲙⲙⲟⲟⲩ ⲉⲙⲟⲩⲟⲩⲧ ⲛⲧⲉⲧⲛⲯⲩⲭⲏ ⲁⲣⲓϩⲟⲧⲉ ⲇⲉ ⲛϩⲟⲩⲟ ϩⲏⲧϥ ⲙⲡⲉⲧⲉⲟⲩⲛϭⲟⲙ ⲙⲙⲟϥ ⲉⲧⲁⲕⲟ ⲛⲧⲉⲧⲛⲯⲩⲭⲏ ⲙⲛ ⲡⲉⲧⲛⲥⲱⲙⲁ ϩⲣⲁⲓ ϩⲛ ⲧⲅⲉϩⲉⲛⲛⲁ (Geenna g1067)
29 இரண்டு சிட்டுக் குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்படுவதில்லையா? ஆனால் அவற்றில் ஒன்றேனும் உங்கள் பிதாவின் அனுமதி இல்லாமல் நிலத்திலே விழுவதில்லை.
ⲕ̅ⲑ̅ⲙⲏ ϫⲁϫ ⲥⲛⲁⲩ ⲛⲥⲉϯ ⲙⲙⲟⲟⲩ ⲁⲛ ⲉⲃⲟⲗ ϩⲁ ⲟⲩϩⲟⲃⲟⲗⲟⲥ ⲁⲩⲱ ⲟⲩⲁ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧⲟⲩ ⲛⲛⲉϥϩⲉ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲙ ⲡⲕⲁϩ ⲁϫⲙⲡⲉⲧⲛⲉⲓⲱⲧ ⲉⲧϩⲛ ⲙⲡⲏⲩⲉ
30 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன.
ⲗ̅ⲛⲕⲉⲃⲱ ⲇⲉ ⲛⲧⲉⲧⲛⲁⲡⲉ ⲏⲡ ⲧⲏⲣⲟⲩ
31 எனவே பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள்.
ⲗ̅ⲁ̅ⲙⲡⲣⲣ ϩⲟⲧⲉ ϭⲉ ϩⲏⲧⲟⲩ ⲛⲧⲱⲧⲛ ⲧⲉⲧⲛϣⲟⲃⲉ ⲉϩⲁϩ ⲛϫⲁϫ
32 “மனிதருக்கு முன்பாக என்னை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ, பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை ஏற்றுக்கொள்வேன்.
ⲗ̅ⲃ̅ⲟⲩⲟⲛ ϭⲉ ⲛⲓⲙ ⲉⲧⲛⲁϩⲟⲙⲟⲗⲟⲅⲉⲓ ⲛϩⲏⲧ ⲙⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲛⲛⲉⲣⲱⲙⲉ ϯⲛⲁϩⲟⲙⲟⲗⲟⲅⲉⲓ ϩⲱ ⲛϩⲏⲧϥ ⲙⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲙⲡⲁⲉⲓⲱⲧ ⲉⲧϩⲛ ⲙⲡⲏⲩⲉ
33 மனிதருக்கு முன்பாக யார் என்னை மறுதலிக்கிறார்களோ, பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக நானும் அவர்களை மறுதலிப்பேன்.
ⲗ̅ⲅ̅ⲡⲉⲧⲛⲁⲁⲡⲁⲣⲛⲁ ⲇⲉ ⲙⲙⲟⲓ ⲙⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲛⲛⲉⲣⲱⲙⲉ ϯⲛⲁⲁⲡⲁⲣⲛⲁ ϩⲱ ⲙⲙⲟϥ ⲙⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲙⲡⲁⲉⲓⲱⲧ ⲉⲧϩⲛ ⲙⲡⲏⲩⲉ
34 “பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என நீங்கள் நினைக்கவேண்டாம். நான் சமாதானத்தை அல்ல, ஒரு போர்வாளைக் கொண்டுவருவதற்காகவே வந்தேன்.
ⲗ̅ⲇ̅ⲙⲡⲣⲱϣ ϫⲉ ⲛⲧⲁⲓⲉⲓ ⲉⲛⲟⲩϫⲉ ⲛⲟⲩⲉⲓⲣⲏⲛⲏ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲙ ⲡⲕⲁϩ ⲛⲧⲁⲓⲉⲓ ⲁⲛ ⲉⲛⲟⲩϫⲉ ⲛⲟⲩⲉⲓⲣⲏⲛⲏ ⲁⲗⲗⲁ ⲉⲛⲟⲩϫⲉ ⲛⲟⲩⲥⲏϥⲉ
35 “எப்படியெனில், ‘மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்;
ⲗ̅ⲉ̅ⲛⲧⲁⲓⲉⲓ ⲅⲁⲣ ⲉⲡⲱⲣϫ ⲛⲟⲩⲣⲱⲙⲉ ⲉⲡⲉϥⲉⲓⲱⲧ ⲁⲩⲱ ⲟⲩϣⲉⲉⲣⲉ ⲉⲧⲉⲥⲙⲁⲁⲩ ⲁⲩⲱ ⲟⲩϣⲉⲗⲉⲉⲧ ⲉⲧⲉⲥϣⲱⲙⲉ
36 ஒருவருடைய எதிரிகள் அவரது வீட்டாரே ஆவர்.’
ⲗ̅ⲋ̅ⲛϫⲁϫⲉ ⲙⲡⲣⲱⲙⲉ ⲛⲉ ⲛⲉϥⲣⲙⲛⲏⲓ
37 “தம் தகப்பனையோ, தாயையோ என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல; தம் மகனையோ மகளையோ, என்னைவிட அதிகமாக நேசிக்கிறவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல;
ⲗ̅ⲍ̅ⲡⲉⲧⲙⲉ ⲛⲉⲓⲱⲧ ⲏ ⲙⲁⲁⲩ ⲉϩⲟⲩⲉⲉⲣⲟⲓ ⲛϥⲙⲡϣⲁ ⲙⲙⲟⲓ ⲁⲛ ⲁⲩⲱ ⲡⲉⲧⲙⲉ ⲛϣⲏⲣⲉ ϩⲓϣⲉⲉⲣⲉ ⲉϩⲟⲩⲉⲉⲣⲟⲓ ⲛϥⲙⲡϣⲁ ⲙⲙⲟⲓ ⲁⲛ
38 தம் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவர் எனக்குத் தகுதியுடையவர் அல்ல.
ⲗ̅ⲏ̅ⲁⲩⲱ ⲡⲉⲧⲉⲛϥⲛⲁϥⲓ ⲁⲛ ⲙⲡⲉϥⲥⲧⲁⲩⲣⲟⲥ ⲛϥⲟⲩⲁϩϥ ⲛⲥⲱⲓ ⲛϥⲙⲡϣⲁ ⲙⲙⲟⲓ ⲁⲛ
39 தம் வாழ்வைக் காக்கிறவர்கள், அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை எனக்காக இழக்கிறவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள்.
ⲗ̅ⲑ̅ⲡⲉⲛⲧⲁϥϩⲉ ⲉⲧⲉϥⲯⲩⲭⲏ ϥⲛⲁⲥⲟⲣⲙⲉⲥ ⲁⲩⲱ ⲡⲉⲛⲧⲁϥⲥⲱⲣⲙ ⲛⲧⲉϥⲯⲩⲭⲏ ⲉⲧⲃⲏⲏⲧ ϥⲛⲁϩⲉ ⲉⲣⲟⲥ
40 “உங்களை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னையும் ஏற்றுக்கொள்கிறார்கள். என்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் என்னை அனுப்பியவரையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
ⲙ̅ⲡⲉⲧϣⲱⲡ ⲙⲙⲱⲧⲛ ⲉⲣⲟϥ ⲉϥϣⲱⲡ ⲙⲙⲟⲓ ⲉⲣⲟϥ ⲁⲩⲱ ⲡⲉⲧϣⲱⲡ ⲙⲙⲟⲓ ⲉⲣⲟϥ ⲉϥϣⲱⲡ ⲉⲣⲟϥ ⲙⲡⲉⲛⲧⲁϥⲧⲛⲛⲟⲟⲩⲧ
41 ஒருவர் இறைவாக்கினராய் இருப்பதனால், அவரை இறைவாக்கினர் என்று யாராவது ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் இறைவாக்கினருக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள். ஒருவர் நீதிமான் என்பதால் யாராவது அவரை ஏற்றுக்கொண்டால், ஏற்றுக்கொண்டவர்கள் நீதிமானுக்குரிய வெகுமதியைப் பெறுவார்கள்.
ⲙ̅ⲁ̅ⲡⲉⲧϣⲱⲡ ⲉⲣⲟϥ ⲛⲟⲩⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲉⲡⲣⲁⲛ ⲛⲟⲩⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ϥⲛⲁϫⲓ ⲙⲡⲃⲉⲕⲉ ⲛⲟⲩⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲁⲩⲱ ⲡⲉⲧϣⲱⲡ ⲉⲣⲟϥ ⲛⲟⲩⲇⲓⲕⲁⲓⲟⲥ ⲉⲡⲣⲁⲛ ⲛⲟⲩⲇⲓⲕⲁⲓⲟⲥ ϥⲛⲁϫⲓ ⲙⲡⲃⲉⲕⲉ ⲙⲡⲇⲓⲕⲁⲓⲟⲥ
42 இந்தச் சிறியவர்களான எனது சீடர்களுக்கு யாராவது ஒரு குவளை குளிர்ந்த நீரைக் கொடுத்தால், கொடுத்தவர்கள் தமக்குரிய வெகுமதியை நிச்சயமாய் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டார்கள் என்று உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
ⲙ̅ⲃ̅ⲁⲩⲱ ⲡⲉⲧⲛⲁⲧⲥⲉⲟⲩⲁ ⲛⲛⲉⲓⲕⲟⲩⲓ ⲛⲟⲩϫⲱ ⲙⲙⲟⲩ ⲛⲱⲣϣ ⲙⲙⲁⲧⲉ ⲉⲡⲣⲁⲛ ⲛⲟⲩⲙⲁⲑⲏⲧⲏⲥ ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲛⲛⲉϥⲥⲱⲣⲙ ⲙⲡⲉϥⲃⲉⲕⲉ

< மத்தேயு 10 >