< மாற்கு 8 >

1 அந்நாட்களில், மக்கள் மீண்டும் ஒரு பெருங்கூட்டமாய் திரண்டிருந்தார்கள். அப்பொழுது சாப்பிட அவர்களிடம் ஒன்றும் இல்லாதிருந்ததினால், இயேசு தமது சீடரைத் தம்மிடமாய்க் கூப்பிட்டு,
ତଦା ତତ୍ସମୀପଂ ବହୱୋ ଲୋକା ଆଯାତା ଅତସ୍ତେଷାଂ ଭୋଜ୍ୟଦ୍ରୱ୍ୟାଭାୱାଦ୍ ଯୀଶୁଃ ଶିଷ୍ୟାନାହୂଯ ଜଗାଦ, |
2 “நான் இந்த மக்களுக்காக பரிதாபப்படுகிறேன்; இவர்கள் என்னுடன் ஏற்கெனவே மூன்று நாட்கள் தங்கிவிட்டார்கள். சாப்பிடுவதற்கோ, அவர்களிடம் ஒன்றுமில்லை.
ଲୋକନିୱହେ ମମ କୃପା ଜାଯତେ ତେ ଦିନତ୍ରଯଂ ମଯା ସାର୍ଦ୍ଧଂ ସନ୍ତି ତେଷାଂ ଭୋଜ୍ୟଂ କିମପି ନାସ୍ତି|
3 பசியோடு நான் அவர்களை வீட்டிற்கு அனுப்பினால், வழியில் சோர்ந்து விழுவார்கள். ஏனெனில், சிலர் தூரத்திலிருந்து வந்திருக்கிறார்களே” என்றார்.
ତେଷାଂ ମଧ୍ୟେଽନେକେ ଦୂରାଦ୍ ଆଗତାଃ, ଅଭୁକ୍ତେଷୁ ତେଷୁ ମଯା ସ୍ୱଗୃହମଭିପ୍ରହିତେଷୁ ତେ ପଥି କ୍ଲମିଷ୍ୟନ୍ତି|
4 அவருடைய சீடர்கள் அதற்குப் பதிலாக, “அவர்களுக்குக் கொடுப்பதற்குப் போதுமான உணவை, சற்று தூரமான இந்த இடத்திலே எங்கே, யாரால் பெறமுடியும்?” என்று கேட்டார்கள்.
ଶିଷ୍ୟା ଅୱାଦିଷୁଃ, ଏତାୱତୋ ଲୋକାନ୍ ତର୍ପଯିତୁମ୍ ଅତ୍ର ପ୍ରନ୍ତରେ ପୂପାନ୍ ପ୍ରାପ୍ତୁଂ କେନ ଶକ୍ୟତେ?
5 அதற்கு இயேசு அவர்களிடம், “உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஏழு அப்பங்கள் இருக்கின்றன” என்று பதிலளித்தார்கள்.
ତତଃ ସ ତାନ୍ ପପ୍ରଚ୍ଛ ଯୁଷ୍ମାକଂ କତି ପୂପାଃ ସନ୍ତି? ତେଽକଥଯନ୍ ସପ୍ତ|
6 இயேசு அங்கிருந்த மக்கள் கூட்டத்தைத் தரையில் உட்காரும்படி சொன்னார். பின்பு அவர் அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து நன்றி செலுத்தியபின், அவற்றைப் பிட்டு, அந்த மக்களுக்குக் கொடுக்கும்படி, தமது சீடர்களிடம் கொடுத்தார். அதை அவர்கள் மக்களுக்குக் கொடுத்தார்கள்.
ତତଃ ସ ତାଲ୍ଲୋକାନ୍ ଭୁୱି ସମୁପୱେଷ୍ଟୁମ୍ ଆଦିଶ୍ୟ ତାନ୍ ସପ୍ତ ପୂପାନ୍ ଧୃତ୍ୱା ଈଶ୍ୱରଗୁଣାନ୍ ଅନୁକୀର୍ତ୍ତଯାମାସ, ଭଂକ୍ତ୍ୱା ପରିୱେଷଯିତୁଂ ଶିଷ୍ୟାନ୍ ପ୍ରତି ଦଦୌ, ତତସ୍ତେ ଲୋକେଭ୍ୟଃ ପରିୱେଷଯାମାସୁଃ|
7 அவர்களிடம் சில மீன்களும் இருந்தன; அவற்றிற்காகவும் இயேசு நன்றி செலுத்தி, அவற்றையும் மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும்படி, சீடர்களுக்குச் சொன்னார்.
ତଥା ତେଷାଂ ସମୀପେ ଯେ କ୍ଷୁଦ୍ରମତ୍ସ୍ୟା ଆସନ୍ ତାନପ୍ୟାଦାଯ ଈଶ୍ୱରଗୁଣାନ୍ ସଂକୀର୍ତ୍ୟ ପରିୱେଷଯିତୁମ୍ ଆଦିଷ୍ଟୱାନ୍|
8 மக்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அதற்குப் பின்பு மீதியான அப்பத் துண்டுகளைச் சீடர்கள் ஏழு கூடைகள் நிறைய சேர்த்து எடுத்தார்கள்.
ତତୋ ଲୋକା ଭୁକ୍ତ୍ୱା ତୃପ୍ତିଂ ଗତା ଅୱଶିଷ୍ଟଖାଦ୍ୟୈଃ ପୂର୍ଣାଃ ସପ୍ତଡଲ୍ଲକା ଗୃହୀତାଶ୍ଚ|
9 கிட்டத்தட்ட நாலாயிரம்பேர் அங்கிருந்தார்கள். இயேசு அவர்களை அனுப்பிவிட்டபின்,
ଏତେ ଭୋକ୍ତାରଃ ପ୍ରାଯଶ୍ଚତୁଃ ସହସ୍ରପୁରୁଷା ଆସନ୍ ତତଃ ସ ତାନ୍ ୱିସସର୍ଜ|
10 தமது சீடர்களுடனேகூட படகில் ஏறி, தல்மனூத்தா பகுதிக்கு வந்தார்.
ଅଥ ସ ଶିଷ୍ୟଃ ସହ ନାୱମାରୁହ୍ୟ ଦଲ୍ମାନୂଥାସୀମାମାଗତଃ|
11 அங்கு பரிசேயர்கள் வந்து இயேசுவிடம் வாதாடத் தொடங்கினார்கள். அவர்கள் அவரைச் சோதிக்கும்படியாக, வானத்திலிருந்து தங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காட்டும்படி கேட்டார்கள்.
ତତଃ ପରଂ ଫିରୂଶିନ ଆଗତ୍ୟ ତେନ ସହ ୱିୱଦମାନାସ୍ତସ୍ୟ ପରୀକ୍ଷାର୍ଥମ୍ ଆକାଶୀଯଚିହ୍ନଂ ଦ୍ରଷ୍ଟୁଂ ଯାଚିତୱନ୍ତଃ|
12 இயேசு ஆழ்ந்த பெருமூச்சுவிட்டு, “இந்தத் தலைமுறையினர் ஏன் அடையாளத்தைத் தேடுகிறார்கள்? நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இவர்களுக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படுவதில்லை” என்றார்.
ତଦା ସୋଽନ୍ତର୍ଦୀର୍ଘଂ ନିଶ୍ୱସ୍ୟାକଥଯତ୍, ଏତେ ୱିଦ୍ୟମାନନରାଃ କୁତଶ୍ଚିନ୍ହଂ ମୃଗଯନ୍ତେ? ଯୁଷ୍ମାନହଂ ଯଥାର୍ଥଂ ବ୍ରୱୀମି ଲୋକାନେତାନ୍ କିମପି ଚିହ୍ନଂ ନ ଦର୍ଶଯିଷ୍ୟତେ|
13 பின்பு இயேசு அவர்களைவிட்டுத் திரும்பவும் படகில் ஏறி, கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார்.
ଅଥ ତାନ୍ ହିତ୍ୱା ପୁନ ର୍ନାୱମ୍ ଆରୁହ୍ୟ ପାରମଗାତ୍|
14 சீடர்கள் அவ்வேளையில், தங்களுக்கு உணவைக் கொண்டுவர மறந்துபோனார்கள். படகிலே அவர்களிடம் ஒரு அப்பம் மட்டுமே இருந்தது.
ଏତର୍ହି ଶିଷ୍ୟୈଃ ପୂପେଷୁ ୱିସ୍ମୃତେଷୁ ନାୱି ତେଷାଂ ସନ୍ନିଧୌ ପୂପ ଏକଏୱ ସ୍ଥିତଃ|
15 இயேசு அவர்களிடம், “கவனமாய் இருங்கள். புளிப்பூட்டும் பொருளாகிய பரிசேயர், ஏரோதியரைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்று அவர்களை எச்சரித்தார்.
ତଦାନୀଂ ଯୀଶୁସ୍ତାନ୍ ଆଦିଷ୍ଟୱାନ୍ ଫିରୂଶିନାଂ ହେରୋଦଶ୍ଚ କିଣ୍ୱଂ ପ୍ରତି ସତର୍କାଃ ସାୱଧାନାଶ୍ଚ ଭୱତ|
16 அதற்கு சீடர்கள், “தங்களிடம் அப்பம் இல்லாததைக் குறித்தே இப்படிச் சொல்லுகிறார்” என்று சீடர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
ତତସ୍ତେଽନ୍ୟୋନ୍ୟଂ ୱିୱେଚନଂ କର୍ତୁମ୍ ଆରେଭିରେ, ଅସ୍ମାକଂ ସନ୍ନିଧୌ ପୂପୋ ନାସ୍ତୀତି ହେତୋରିଦଂ କଥଯତି|
17 அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வதை அறிந்த இயேசு அவர்களிடம்: “உங்களிடம் அப்பம் இல்லாததைக் குறித்து ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? நீங்கள் இன்னும் காணாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறீர்களா? உங்களுடைய இருதயங்கள் கடினமாய் இருக்கின்றனவோ?
ତଦ୍ ବୁଦ୍ୱ୍ୱା ଯୀଶୁସ୍ତେଭ୍ୟୋଽକଥଯତ୍ ଯୁଷ୍ମାକଂ ସ୍ଥାନେ ପୂପାଭାୱାତ୍ କୁତ ଇତ୍ଥଂ ୱିତର୍କଯଥ? ଯୂଯଂ କିମଦ୍ୟାପି କିମପି ନ ଜାନୀଥ? ବୋଦ୍ଧୁଞ୍ଚ ନ ଶକ୍ନୁଥ? ଯାୱଦଦ୍ୟ କିଂ ଯୁଷ୍ମାକଂ ମନାଂସି କଠିନାନି ସନ୍ତି?
18 உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேட்காதிருக்கிறீர்களா? ஏன், உங்களுக்கு ஞாபகம் இல்லையா?
ସତ୍ସୁ ନେତ୍ରେଷୁ କିଂ ନ ପଶ୍ୟଥ? ସତ୍ସୁ କର୍ଣେଷୁ କିଂ ନ ଶୃଣୁଥ? ନ ସ୍ମରଥ ଚ?
19 நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்தபோது, மீதியான அப்பத்துண்டுகளை, எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்றார். அவர்கள், “பன்னிரண்டு” என்றார்கள்.
ଯଦାହଂ ପଞ୍ଚପୂପାନ୍ ପଞ୍ଚସହସ୍ରାଣାଂ ପୁରୁଷାଣାଂ ମଧ୍ୟେ ଭଂକ୍ତ୍ୱା ଦତ୍ତୱାନ୍ ତଦାନୀଂ ଯୂଯମ୍ ଅୱଶିଷ୍ଟପୂପୈଃ ପୂର୍ଣାନ୍ କତି ଡଲ୍ଲକାନ୍ ଗୃହୀତୱନ୍ତଃ? ତେଽକଥଯନ୍ ଦ୍ୱାଦଶଡଲ୍ଲକାନ୍|
20 “நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டுக் கொடுத்தபோது, மீதியான அப்பத்துண்டுகளை, எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள்?” என்றார். அதற்கு அவர்கள், “ஏழு” என்றார்கள்.
ଅପରଞ୍ଚ ଯଦା ଚତୁଃସହସ୍ରାଣାଂ ପୁରୁଷାଣାଂ ମଧ୍ୟେ ପୂପାନ୍ ଭଂକ୍ତ୍ୱାଦଦାଂ ତଦା ଯୂଯମ୍ ଅତିରିକ୍ତପୂପାନାଂ କତି ଡଲ୍ଲକାନ୍ ଗୃହୀତୱନ୍ତଃ? ତେ କଥଯାମାସୁଃ ସପ୍ତଡଲ୍ଲକାନ୍|
21 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இன்னும் நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையா?” என்றார்.
ତଦା ସ କଥିତୱାନ୍ ତର୍ହି ଯୂଯମ୍ ଅଧୁନାପି କୁତୋ ବୋଦ୍ୱ୍ୱୁଂ ନ ଶକ୍ନୁଥ?
22 அவர்கள் பெத்சாயிதாவுக்கு வந்தபோது, சில மனிதர்கள் ஒரு குருடனைக் கொண்டுவந்து, இயேசு அவனைத் தொடவேண்டும் என்று கெஞ்சிக் கேட்டார்கள்.
ଅନନ୍ତରଂ ତସ୍ମିନ୍ ବୈତ୍ସୈଦାନଗରେ ପ୍ରାପ୍ତେ ଲୋକା ଅନ୍ଧମେକଂ ନରଂ ତତ୍ସମୀପମାନୀଯ ତଂ ସ୍ପ୍ରଷ୍ଟୁଂ ତଂ ପ୍ରାର୍ଥଯାଞ୍ଚକ୍ରିରେ|
23 அவர் அந்தக் குருடனுடைய கையைப் பிடித்து, கிராமத்துக்கு வெளியே கொண்டுபோனார். இயேசு அவனுடைய கண்களின்மேல் துப்பி, தமது கைகளை அவன்மேல் வைத்து, “நீ எதையாவது காண்கிறாயா?” என்று கேட்டார்.
ତଦା ତସ୍ୟାନ୍ଧସ୍ୟ କରୌ ଗୃହୀତ୍ୱା ନଗରାଦ୍ ବହିର୍ଦେଶଂ ତଂ ନୀତୱାନ୍; ତନ୍ନେତ୍ରେ ନିଷ୍ଠୀୱଂ ଦତ୍ତ୍ୱା ତଦ୍ଗାତ୍ରେ ହସ୍ତାୱର୍ପଯିତ୍ୱା ତଂ ପପ୍ରଚ୍ଛ, କିମପି ପଶ୍ୟସି?
24 அவன் நிமிர்ந்து பார்த்து, “நான் மனிதரைக் காண்கிறேன்; ஆனால் அவர்களோ நடந்து திரிகிற மரங்களைப்போல் காணப்படுகிறார்கள்” என்றான்.
ସ ନେତ୍ରେ ଉନ୍ମୀଲ୍ୟ ଜଗାଦ, ୱୃକ୍ଷୱତ୍ ମନୁଜାନ୍ ଗଚ୍ଛତୋ ନିରୀକ୍ଷେ|
25 இயேசு மீண்டும் ஒருமுறை தமது கைகளை அவனுடைய கண்களின்மேல் வைத்தார். அப்பொழுது அவனுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவன் திரும்பவும் தன்னுடைய பார்வையைப் பெற்று, எல்லாவற்றையும் தெளிவாய் கண்டான்.
ତତୋ ଯୀଶୁଃ ପୁନସ୍ତସ୍ୟ ନଯନଯୋ ର୍ହସ୍ତାୱର୍ପଯିତ୍ୱା ତସ୍ୟ ନେତ୍ରେ ଉନ୍ମୀଲଯାମାସ; ତସ୍ମାତ୍ ସ ସ୍ୱସ୍ଥୋ ଭୂତ୍ୱା ସ୍ପଷ୍ଟରୂପଂ ସର୍ୱ୍ୱଲୋକାନ୍ ଦଦର୍ଶ|
26 இயேசு அவனிடம், கிராமத்துக்குப் போய் இதைப்பற்றிச் சொல்லவேண்டாம் என்று சொல்லி, அவனை அவனுடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
ତତଃ ପରଂ ତ୍ୱଂ ଗ୍ରାମଂ ମା ଗଚ୍ଛ ଗ୍ରାମସ୍ଥଂ କମପି ଚ କିମପ୍ୟନୁକ୍ତ୍ୱା ନିଜଗୃହଂ ଯାହୀତ୍ୟାଦିଶ୍ୟ ଯୀଶୁସ୍ତଂ ନିଜଗୃହଂ ପ୍ରହିତୱାନ୍|
27 இயேசுவும் அவருடைய சீடர்களும் செசரியா, பிலிப்பி பட்டணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்குச் சென்றார்கள். வழியிலே அவர் அவர்களிடம், “மக்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என்று கேட்டார்.
ଅନନ୍ତରଂ ଶିଷ୍ୟୈଃ ସହିତୋ ଯୀଶୁଃ କୈସରୀଯାଫିଲିପିପୁରଂ ଜଗାମ, ପଥି ଗଚ୍ଛନ୍ ତାନପୃଚ୍ଛତ୍ କୋଽହମ୍ ଅତ୍ର ଲୋକାଃ କିଂ ୱଦନ୍ତି?
28 அதற்கு அவர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், வேறுசிலர் எலியா என்றும், இன்னும் சிலர் இறைவாக்கினரில் ஒருவர் என்றும் சொல்கிறார்கள்” என்றார்கள்.
ତେ ପ୍ରତ୍ୟୂଚୁଃ ତ୍ୱାଂ ଯୋହନଂ ମଜ୍ଜକଂ ୱଦନ୍ତି କିନ୍ତୁ କେପି କେପି ଏଲିଯଂ ୱଦନ୍ତି; ଅପରେ କେପି କେପି ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନାମ୍ ଏକୋ ଜନ ଇତି ୱଦନ୍ତି|
29 ஆனால், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டார். அதற்கு பேதுரு, “நீர் கிறிஸ்து” என்றான்.
ଅଥ ସ ତାନପୃଚ୍ଛତ୍ କିନ୍ତୁ କୋହମ୍? ଇତ୍ୟତ୍ର ଯୂଯଂ କିଂ ୱଦଥ? ତଦା ପିତରଃ ପ୍ରତ୍ୟୱଦତ୍ ଭୱାନ୍ ଅଭିଷିକ୍ତସ୍ତ୍ରାତା|
30 அப்பொழுது இயேசு, “தம்மைக் குறித்து வேறுயாருக்கும் சொல்லவேண்டாம்” என எச்சரித்தார்.
ତତଃ ସ ତାନ୍ ଗାଢମାଦିଶଦ୍ ଯୂଯଂ ମମ କଥା କସ୍ମୈଚିଦପି ମା କଥଯତ|
31 மானிடமகனாகிய நான் அநேக பாடுகள் படவேண்டும் என்றும், யூதரின் தலைவர்களாலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் புறக்கணிக்கப்படுவேன் என்றும், அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார்; அத்துடன் தாம் கொல்லப்படவேண்டும் என்றும், மூன்று நாட்களுக்குபின் உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்றும் சொன்னார்.
ମନୁଷ୍ୟପୁତ୍ରେଣାୱଶ୍ୟଂ ବହୱୋ ଯାତନା ଭୋକ୍ତୱ୍ୟାଃ ପ୍ରାଚୀନଲୋକୈଃ ପ୍ରଧାନଯାଜକୈରଧ୍ୟାପକୈଶ୍ଚ ସ ନିନ୍ଦିତଃ ସନ୍ ଘାତଯିଷ୍ୟତେ ତୃତୀଯଦିନେ ଉତ୍ଥାସ୍ୟତି ଚ, ଯୀଶୁଃ ଶିଷ୍ୟାନୁପଦେଷ୍ଟୁମାରଭ୍ୟ କଥାମିମାଂ ସ୍ପଷ୍ଟମାଚଷ୍ଟ|
32 இயேசு இவற்றை ஒளிவுமறைவின்றி சொன்னபோது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கொண்டுபோய், அவரைக் கண்டிக்கத் தொடங்கினான்.
ତସ୍ମାତ୍ ପିତରସ୍ତସ୍ୟ ହସ୍ତୌ ଧୃତ୍ୱା ତଂ ତର୍ଜ୍ଜିତୱାନ୍|
33 இயேசு திரும்பி தமது சீடர்களை நோக்கிப்பார்த்து, பேதுருவைக் கண்டித்து, “சாத்தானே எனக்குப் பின்னாகப் போ! நீ இறைவனுடைய காரியங்களைச் சிந்திக்காமல் மனிதனுக்கேற்ற காரியங்களையே சிந்திக்கிறாய்” என்றார்.
କିନ୍ତୁ ସ ମୁଖଂ ପରାୱର୍ତ୍ୟ ଶିଷ୍ୟଗଣଂ ନିରୀକ୍ଷ୍ୟ ପିତରଂ ତର୍ଜଯିତ୍ୱାୱାଦୀଦ୍ ଦୂରୀଭୱ ୱିଘ୍ନକାରିନ୍ ଈଶ୍ୱରୀଯକାର୍ୟ୍ୟାଦପି ମନୁଷ୍ୟକାର୍ୟ୍ୟଂ ତୁଭ୍ୟଂ ରୋଚତତରାଂ|
34 அதற்குப் பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும், தமது சீடர்களையும் அழைத்துச் சொன்னதாவது: “யாராவது என்னைப் பின்பற்றி வரவிரும்பினால், தம்மையே வெறுத்து, தமது சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.
ଅଥ ସ ଲୋକାନ୍ ଶିଷ୍ୟାଂଶ୍ଚାହୂଯ ଜଗାଦ ଯଃ କଶ୍ଚିନ୍ ମାମନୁଗନ୍ତୁମ୍ ଇଚ୍ଛତି ସ ଆତ୍ମାନଂ ଦାମ୍ୟତୁ, ସ୍ୱକ୍ରୁଶଂ ଗୃହୀତ୍ୱା ମତ୍ପଶ୍ଚାଦ୍ ଆଯାତୁ|
35 ஏனெனில், தம் உயிரைக் காப்பாற்ற விரும்புகிறவர்கள், அதை இழந்துபோவார்கள். எனக்காகவோ, நற்செய்திக்காகவோ தம் உயிரை இழக்கிறவர்கள், அதைக் காத்துக்கொள்வார்கள்.
ଯତୋ ଯଃ କଶ୍ଚିତ୍ ସ୍ୱପ୍ରାଣଂ ରକ୍ଷିତୁମିଚ୍ଛତି ସ ତଂ ହାରଯିଷ୍ୟତି, କିନ୍ତୁ ଯଃ କଶ୍ଚିନ୍ ମଦର୍ଥଂ ସୁସଂୱାଦାର୍ଥଞ୍ଚ ପ୍ରାଣଂ ହାରଯତି ସ ତଂ ରକ୍ଷିଷ୍ୟତି|
36 யாராவது முழு உலகத்தையும் தமக்கு உரிமையாக்கிக் கொண்டாலும், தம் ஆத்துமாவை இழந்துபோனால், அதனால் அவர்களுக்குப் பலன் என்ன?
ଅପରଞ୍ଚ ମନୁଜଃ ସର୍ୱ୍ୱଂ ଜଗତ୍ ପ୍ରାପ୍ୟ ଯଦି ସ୍ୱପ୍ରାଣଂ ହାରଯତି ତର୍ହି ତସ୍ୟ କୋ ଲାଭଃ?
37 யாராவது தங்கள் ஆத்துமாவுக்கு ஈடாக எதைக் கொடுக்கமுடியும்?
ନରଃ ସ୍ୱପ୍ରାଣୱିନିମଯେନ କିଂ ଦାତୁଂ ଶକ୍ନୋତି?
38 விபசாரமும் பாவமும் நிறைந்த இந்தத் தலைமுறையினர் மத்தியில், யாராவது என்னைக்குறித்தும், என் வார்த்தைகளைக்குறித்தும் வெட்கப்பட்டால், மானிடமகனாகிய நானும் பரிசுத்த தூதர்களுடன் என் பிதாவின் மகிமையில் வரும்போது, அவர்களைக்குறித்து வெட்கப்படுவேன்” என்றார்.
ଏତେଷାଂ ୱ୍ୟଭିଚାରିଣାଂ ପାପିନାଞ୍ଚ ଲୋକାନାଂ ସାକ୍ଷାଦ୍ ଯଦି କୋପି ମାଂ ମତ୍କଥାଞ୍ଚ ଲଜ୍ଜାସ୍ପଦଂ ଜାନାତି ତର୍ହି ମନୁଜପୁତ୍ରୋ ଯଦା ଧର୍ମ୍ମଦୂତୈଃ ସହ ପିତୁଃ ପ୍ରଭାୱେଣାଗମିଷ୍ୟତି ତଦା ସୋପି ତଂ ଲଜ୍ଜାସ୍ପଦଂ ଜ୍ଞାସ୍ୟତି|

< மாற்கு 8 >