< மாற்கு 2 >
1 சில நாட்களுக்குப்பின், இயேசு மீண்டும் கப்பர்நகூமுக்குச் சென்றபோது, அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டார்கள்.
थोडा दिन नंतर येशु कफर्णहुम गावमा परत वना, अनी तो घर शे, हाई लोकसनी ऐकं.
2 எனவே மக்கள் அங்கு திரளாய் கூடிவந்தார்கள்; இதனால் வீட்டின் வாசலுக்கு வெளியேயும் இடம் இல்லாமல் போயிற்று. இயேசு மக்களுக்கு வார்த்தையைப் போதித்தார்.
तवय त्याना घरमा ईतला लोकसनी गर्दी करी की, दारमाईन घुसाले सुध्दा जागा नव्हती, तठे जमेल लोकसले त्यानी संदेश दिधा.
3 அப்பொழுது சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவர்களில் நாலுபேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள்.
तवय लखवा व्हयेल माणुसले चारजण त्यानाकडे उचलीसन लई वनात.
4 ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் அவனை இயேசுவினிடத்தில் கொண்டு வரமுடியவில்லை; எனவே அவர்கள் இயேசு இருந்த இடத்துக்கு மேலாக உள்ள கூரையைப் பிரித்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதக்காரனைப் படுத்திருந்த படுக்கையோடு கீழே இறக்கினார்கள்.
गर्दी इतली व्हयेल व्हती की, त्यानाजोडे जावाले जागाच नव्हती, म्हणीन त्या घरवर चढनात. येशु जठे उभा व्हता तठला कौले त्यासनी काढी लिधात अनी जी खाटवर तो लखवा व्हयेल माणुस झोपेल व्हता त्यासनी ती खाट तठे खाल उतारी दिधी.
5 இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
मी त्याले बरं करसु हाऊ त्यासना ईश्वास दखीसन येशुनी लखवा व्हयेल माणुसले सांगं, “हे पोऱ्या, तुना पापसनी क्षमा व्हयेल शे.”
6 அங்கிருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், தங்கள் இருதயங்களில்,
काही शास्त्री लोके तठे बशेल व्हतात. त्या आपला-आपला मनमा ईचार कराले लागनात की,
7 “இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் இறைவனை நிந்திக்கிறானே! இறைவனால் மாத்திரமேயன்றி, வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
“हाऊ असा कसा काय बोलस? हाऊ तर देवनी निंदा करी राहीना! कोणीच देवना शिवाय पापनी क्षमा करू शकस नही!”
8 உடனே இயேசு தமது ஆவியில் அவர்கள் தங்களுடைய இருதயங்களில் இவ்வாறு சிந்திக்கிறார்கள் என அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்?
येशुले त्याना आत्मिक दृष्टीघाई लगेच दखायनं की, शास्त्रीसना मनमा काय ईचार चाली राहिनात. तो त्यासले बोलना, “तुम्हीन आपला मनमा हाऊ ईचार कसाले करी राहिनात?
9 நான் இந்த முடக்குவாதக்காரனிடம், ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது, ‘நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வதா, எது எளிது?” என்று கேட்டார்.
‘तुना पापनी क्षमा व्हई गई,’ अस लखवा व्हयेल माणुसले बोलानं की, ‘ऊठ, तुनी खाट उचलीन, चालाले लाग’ हाई बोलनं, कोणतं सोपं शे?
10 ஆனால், “பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன்.
मनुष्यना पोऱ्याले जगना पापनी क्षमा कराना अधिकार शे,” हाई तुमले समजाले पाहिजे अस बोलीन येशुनी लखवा व्हयेल माणुसले सांगं,
11 பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார்.
“मी तुले सांगस की, ऊठ, तुनी खाट उचलीन घर जाय!”
12 உடனே அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக நடந்துபோனான். இதனால் எல்லோரும் வியப்படைந்து, “இப்படிப்பட்ட காரியத்தை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்று சொல்லி, இறைவனைத் துதித்தார்கள்.
मंग तो ऊठना अनी लगेच त्यानी खाट उचलीन सर्व लोकस समोरतीन गया, हाई दखीन सर्व लोके चमकाई गयात, त्या देवना गौरव करीसन बोलनात, “आम्हीन अस कधीच दखेल नव्हतं!”
13 மீண்டும் இயேசு புறப்பட்டு, கடற்கரை அருகே சென்றார். மக்கள் கூட்டமாகத் திரண்டு அவரிடம் வந்தார்கள்; இயேசு அவர்களுக்குப் போதித்தார்.
मंग येशु परत गालील समुद्रना काठवर गया अनी सर्व लोकसनी गर्दी त्यानाजोडे वनी. तवय तो त्यासले शिकाडू लागना.
14 பின்பு அவர் தொடர்ந்து நடந்துபோகையில் அல்பேயுவின் மகனான லேவி, வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அப்பொழுது லேவி எழுந்து, அவரைப் பின்பற்றிச் சென்றான்.
मंग समुद्रना काठवरतीन तो जाई राहिंता, तवय त्यानी अल्फिना पोऱ्या लेवीले जकात नाकावर बशेल दखं, अनी त्याले सांगं, “चल मनामांगे ये,” तवय लेवी ऊठीसन त्यानामांगे गया.
15 இயேசு லேவியின் வீட்டில் விருந்து சாப்பிடுகையில், வரி வசூலிக்கிறவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் பந்தியில் இருந்தார்கள்; ஏனெனில் இவர்களில் அநேகர் இயேசுவைப் பின்பற்றினார்கள்.
मंग येशु लेवीना घर जेवाले गया. तठे येशु अनी त्याना शिष्य यासना पंगतमा बराच जकातदार अनी पापी लोके जेवाले बशेल व्हतात. कारण असा बराच लोके त्याना मांगे येल व्हतात.
16 பாவிகளோடும் வரி வசூலிக்கிறவர்களோடும் இயேசு சாப்பிட்டுக் கொண்டிருப்பதை மோசேயின் சட்ட ஆசிரியர்களான பரிசேயர் கண்டபோது, அவர்கள் இயேசுவின் சீடர்களிடம், “அவர் ஏன் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறார்?” என்று கேட்டார்கள்.
तवय परूशी पंथमधला शास्त्री लोकसनी दखं की, येशु जकातदार अनं पापी लोकससंगे जेवण करी राहीना, त्या त्याना शिष्यले बोलनात, “हाऊ असा लोकससंगे का बर जेवण करस?”
17 இதைக் கேட்டபோது, இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே அழைக்கவந்தேன்” என்றார்.
हाई ऐकीसन येशु त्यासले बोलना, “निरोगी माणुसले वैद्यनी गरज ऱ्हास नही, तर आजारी माणुसले ऱ्हास, मी धार्मीक माणससले नही, तर पापी माणससले बोलावाले येल शे.”
18 அந்நாட்களில் யோவானின் சீடர்களும் பரிசேயரும் உபவாசித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிலர் இயேசுவினிடத்தில் வந்து, “யோவானின் சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும் உபவாசிக்கிறார்கள், ஆனால் உம்முடைய சீடர்கள் ஏன், உபவாசிப்பதில்லை?” என்று கேட்டார்கள்.
बाप्तिस्मा देणारा योहानना शिष्य अनी परूशी ह्या उपास करतस, म्हणीन काही लोके ईसन येशुले ईचारु लागनात, “योहानना शिष्य अनी परुशीसना शिष्य उपास करतस मंग तुमना शिष्य उपास का बर करतस नही?”
19 அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, மணமகனின் விருந்தினர் எப்படி உபவாசிப்பார்கள்? மணமகன் தங்களோடு இருக்கும்வரைக்கும், அவர்களால் உபவாசிக்கமுடியாது.
येशुनी त्यासले सांगं, “जोपावत वऱ्हाडीसनासंगे नवरदेव शे, तोपावत त्या उपाशी राहतीन काय? जोपावत नवरदेव त्यासनासंगे शे तोपावत त्या उपाशी राहूच शकत नही.”
20 ஆனால், மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்த நாளில், அவர்கள் உபவாசிப்பார்கள்.
पण असा दिन येवाव शे की, नवरदेव त्यासनापाईन येगळा व्हई, तवय त्या उपास करतीन.
21 “யாரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் இன்னும் அதிகமாகும்.”
कोणी नवा कपडाना तुकडा ठिगळं पडेल जुना कपडाले लावस नही, लाव तर ठिगळाकरता लायल कपडा जुना कपडाले अजुन फाडी टाकी अनी ठिगळं अजुन मोठं व्हई जाई.
22 யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. இல்லையென்றால், அந்த திராட்சை இரசம் தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசம், தோல் பை ஆகிய இரண்டுமே பாழாய்ப்போகும். அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும்.
कोणी नवा द्राक्षरस कातडापाईन बनाडेल जुनी थैलीमा भरीन ठेवस नही. जर तसं करं तर थैली फाटी जाई, अनी सर्व द्राक्षरस सांडाई जाई. म्हणीसन नवा द्राक्षरस नवा थैलीमा भरीन ठेवतस.
23 ஒரு ஓய்வுநாளில் இயேசுவும் அவருடைய சீடர்களும் தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறிக்கத் தொடங்கினார்கள்.
एकदाव अस व्हयनं की, शब्बाथ दिनले येशु त्याना शिष्यससंगे वावरमाईन जाई राहींता. जाता जाता शिष्य ओंब्या तोडीन खाई राहींतात.
24 பரிசேயர்கள் இயேசுவிடம், “ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தை அவர்கள் ஏன் செய்கிறார்கள்?” என்று கேட்டார்கள்.
हाई दखीसन परूशी येशुले बोलनात, “दख, तुना शिष्य अस कामकरी राहीनात जे शब्बाथ दिनले नियमप्रमाणे करतस नही!”
25 இயேசு அதற்குப் பதிலாக அவர்களிடம், “தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும், பசியாயிருந்தபோது என்ன செய்தார்கள் என்பதைப்பற்றி நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா?
येशुनी त्यासले उत्तर दिधं, “तुम्हीन कधी हाई वाचं नही का? की, जवय दावीद राजा अनी त्यानासंगे ज्या व्हतात, त्यासले भूक लागनी अनं त्यासनाजोडे खावाले काहीच नव्हतं तवय दावीद राजाने काय करं,
26 அபியத்தார் பிரதான ஆசாரியனாக இருந்த நாட்களில், தாவீது இறைவனுடைய வீட்டிற்குள் போய், மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தை அவன் சாப்பிட்டு அதில் சிலவற்றைத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே” என்றார்.
कशा तो देवना मंदिरमा गया अनी देवले अर्पण करेल भाकरी ज्या याजकशिवाय कोणीच खातस नही. त्या त्यानीपण खाद्यात अनी त्यानासंगे ज्या व्हतात, त्यासले पण खावाड्यात, हाई अब्याथार हाऊ जवय महायाजक व्हता, तवय हाई घडनं की नही?”
27 பின்பு இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளுக்காக மனிதன் அல்ல; மனிதனுக்காக ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டது.
आखो तो त्यासले बोलना, “शब्बाथ दिन हाऊ माणसंसना चांगला करता बनाडेल शे; माणुस शब्बाथ दिनकरता नही.”
28 அந்தப்படியே மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார்.
यामुये मनुष्यना पोऱ्या शब्बाथ दिनना धनी शे.