< மாற்கு 15 >

1 அதிகாலையிலேயே தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், முழு ஆலோசனைச் சங்கத்தினரும் சேர்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அதன்படி அவர்கள் இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்படைத்தார்கள்.
ଅଥ ପ୍ରଭାତେ ସତି ପ୍ରଧାନଯାଜକାଃ ପ୍ରାଞ୍ଚ ଉପାଧ୍ୟାଯାଃ ସର୍ୱ୍ୱେ ମନ୍ତ୍ରିଣଶ୍ଚ ସଭାଂ କୃତ୍ୱା ଯୀଶୁଂ ବନ୍ଧଯିତ୍ୱ ପୀଲାତାଖ୍ୟସ୍ୟ ଦେଶାଧିପତେଃ ସୱିଧଂ ନୀତ୍ୱା ସମର୍ପଯାମାସୁଃ|
2 பிலாத்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கிறபடியேதான்” என்றார்.
ତଦା ପୀଲାତସ୍ତଂ ପୃଷ୍ଟୱାନ୍ ତ୍ୱଂ କିଂ ଯିହୂଦୀଯଲୋକାନାଂ ରାଜା? ତତଃ ସ ପ୍ରତ୍ୟୁକ୍ତୱାନ୍ ସତ୍ୟଂ ୱଦସି|
3 தலைமை ஆசாரியர்கள், அநேக குற்றச்சாட்டுகளை அவர்மேல் சுமத்தினார்கள்.
ଅପରଂ ପ୍ରଧାନଯାଜକାସ୍ତସ୍ୟ ବହୁଷୁ ୱାକ୍ୟେଷୁ ଦୋଷମାରୋପଯାଞ୍ଚକ୍ରୁଃ କିନ୍ତୁ ସ କିମପି ନ ପ୍ରତ୍ୟୁୱାଚ|
4 அப்பொழுது பிலாத்து மீண்டும் இயேசுவிடம், “நீ பதில் சொல்லமாட்டாயோ? பார், எத்தனை குற்றச்சாட்டுகளை அவர்கள் உன்மேல் சுமத்துகிறார்கள்” என்று கேட்டான்.
ତଦାନୀଂ ପୀଲାତସ୍ତଂ ପୁନଃ ପପ୍ରଚ୍ଛ ତ୍ୱଂ କିଂ ନୋତ୍ତରଯସି? ପଶ୍ୟୈତେ ତ୍ୱଦ୍ୱିରୁଦ୍ଧଂ କତିଷୁ ସାଧ୍ୟେଷୁ ସାକ୍ଷଂ ଦଦତି|
5 இயேசுவோ பதில் எதுவும் சொல்லவில்லை. அதனால் பிலாத்து வியப்படைந்தான்.
କନ୍ତୁ ଯୀଶୁସ୍ତଦାପି ନୋତ୍ତରଂ ଦଦୌ ତତଃ ପୀଲାତ ଆଶ୍ଚର୍ୟ୍ୟଂ ଜଗାମ|
6 பண்டிகைக் காலத்தில், மக்கள் விடுதலை செய்யும்படி கேட்கும் ஒரு கைதியை ஆளுநர்கள் விடுதலை செய்வது வழக்கமாயிருந்தது.
ଅପରଞ୍ଚ କାରାବଦ୍ଧେ କସ୍ତିଂଶ୍ଚିତ୍ ଜନେ ତନ୍ମହୋତ୍ସୱକାଲେ ଲୋକୈ ର୍ୟାଚିତେ ଦେଶାଧିପତିସ୍ତଂ ମୋଚଯତି|
7 அந்நாட்களில் சில கிளர்ச்சிக்காரர்களுடன், பரபாஸ் என்னும் பெயருடைய ஒருவனும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். இவன் கிளர்ச்சி ஏற்படுத்தி கொலையும் செய்திருந்தவன்.
ଯେ ଚ ପୂର୍ୱ୍ୱମୁପପ୍ଲୱମକାର୍ଷୁରୁପପ୍ଲୱେ ୱଧମପି କୃତୱନ୍ତସ୍ତେଷାଂ ମଧ୍ୟେ ତଦାନୋଂ ବରବ୍ବାନାମକ ଏକୋ ବଦ୍ଧ ଆସୀତ୍|
8 மக்கள் கூடிவந்து, பிலாத்துவிடம் வழக்கமாக செய்துவந்ததுபோல், இம்முறையும் தங்களுக்கு ஒருவனை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.
ଅତୋ ହେତୋଃ ପୂର୍ୱ୍ୱାପରୀଯାଂ ରୀତିକଥାଂ କଥଯିତ୍ୱା ଲୋକା ଉଚ୍ଚୈରୁୱନ୍ତଃ ପୀଲାତସ୍ୟ ସମକ୍ଷଂ ନିୱେଦଯାମାସୁଃ|
9 அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து, “யூதருடைய அரசனை நான் விடுதலையாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.
ତଦା ପୀଲାତସ୍ତାନାଚଖ୍ୟୌ ତର୍ହି କିଂ ଯିହୂଦୀଯାନାଂ ରାଜାନଂ ମୋଚଯିଷ୍ୟାମି? ଯୁଷ୍ମାଭିଃ କିମିଷ୍ୟତେ?
10 தலைமை ஆசாரியர்கள் பொறாமையின் காரணமாக இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான்.
ଯତଃ ପ୍ରଧାନଯାଜକା ଈର୍ଷ୍ୟାତ ଏୱ ଯୀଶୁଂ ସମାର୍ପଯନ୍ନିତି ସ ୱିୱେଦ|
11 ஆனால் தலைமை ஆசாரியர்களோ, பரபாஸையே பிலாத்து விடுதலை செய்யவேண்டும் என்று அவனைக் கேட்கச்சொல்லி, கூடியிருந்த மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
କିନ୍ତୁ ଯଥା ବରବ୍ବାଂ ମୋଚଯତି ତଥା ପ୍ରାର୍ଥଯିତୁଂ ପ୍ରଧାନଯାଜକା ଲୋକାନ୍ ପ୍ରୱର୍ତ୍ତଯାମାସୁଃ|
12 எனவே பிலாத்து அவர்களிடம், “அப்படியானால், நீங்கள் யூதருடைய அரசன் என்று சொல்லுகிற இவனுக்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
ଅଥ ପୀଲାତଃ ପୁନଃ ପୃଷ୍ଟୱାନ୍ ତର୍ହି ଯଂ ଯିହୂଦୀଯାନାଂ ରାଜେତି ୱଦଥ ତସ୍ୟ କିଂ କରିଷ୍ୟାମି ଯୁଷ୍ମାଭିଃ କିମିଷ୍ୟତେ?
13 அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
ତଦା ତେ ପୁନରପି ପ୍ରୋଚ୍ଚୈଃ ପ୍ରୋଚୁସ୍ତଂ କ୍ରୁଶେ ୱେଧଯ|
14 “ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என பிலாத்து கேட்டான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாகச் சத்தமிட்டார்கள்.
ତସ୍ମାତ୍ ପୀଲାତଃ କଥିତୱାନ୍ କୁତଃ? ସ କିଂ କୁକର୍ମ୍ମ କୃତୱାନ୍? କିନ୍ତୁ ତେ ପୁନଶ୍ଚ ରୁୱନ୍ତୋ ୱ୍ୟାଜହ୍ରୁସ୍ତଂ କ୍ରୁଶେ ୱେଧଯ|
15 பிலாத்து கூடியிருந்த மக்களை திருப்திப்படுத்த விரும்பி, பரபாஸை அவர்களுக்கு விடுதலை செய்தான். இயேசுவையோ சவுக்கினால் அடித்து சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான்.
ତଦା ପୀଲାତଃ ସର୍ୱ୍ୱାଲ୍ଲୋକାନ୍ ତୋଷଯିତୁମିଚ୍ଛନ୍ ବରବ୍ବାଂ ମୋଚଯିତ୍ୱା ଯୀଶୁଂ କଶାଭିଃ ପ୍ରହୃତ୍ୟ କ୍ରୁଶେ ୱେଦ୍ଧୁଂ ତଂ ସମର୍ପଯାମ୍ବଭୂୱ|
16 போர்வீரர்கள் இயேசுவை அரண்மனை முற்றத்திலுள்ள ஆளுநர் தலைமையகத்திற்குக் கொண்டுசென்று, மற்ற எல்லா படைவீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள்.
ଅନନ୍ତରଂ ସୈନ୍ୟଗଣୋଽଟ୍ଟାଲିକାମ୍ ଅର୍ଥାଦ୍ ଅଧିପତେ ର୍ଗୃହଂ ଯୀଶୁଂ ନୀତ୍ୱା ସେନାନିୱହଂ ସମାହୁଯତ୍|
17 அவர்கள் இயேசுவுக்கு கருஞ்சிவப்பு உடையை உடுத்தி, முட்களினால் ஒரு கிரீடத்தைப் பின்னி, அதை அவருடைய தலையின்மேல் வைத்தார்கள்.
ପଶ୍ଚାତ୍ ତେ ତଂ ଧୂମଲୱର୍ଣୱସ୍ତ୍ରଂ ପରିଧାପ୍ୟ କଣ୍ଟକମୁକୁଟଂ ରଚଯିତ୍ୱା ଶିରସି ସମାରୋପ୍ୟ
18 பின்பு அவர்கள், “யூதருடைய அரசனே வாழ்க!” என்று சொல்லி இயேசுவை ஏளனம் செய்தார்கள்.
ହେ ଯିହୂଦୀଯାନାଂ ରାଜନ୍ ନମସ୍କାର ଇତ୍ୟୁକ୍ତ୍ୱା ତଂ ନମସ୍କର୍ତ୍ତାମାରେଭିରେ|
19 அவர்கள் ஒரு தடியினால் திரும்பத்திரும்ப அவரைத் தலையில் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்காற்படியிட்டு, அவரை வணங்கினார்கள்.
ତସ୍ୟୋତ୍ତମାଙ୍ଗେ ୱେତ୍ରାଘାତଂ ଚକ୍ରୁସ୍ତଦ୍ଗାତ୍ରେ ନିଷ୍ଠୀୱଞ୍ଚ ନିଚିକ୍ଷିପୁଃ, ତଥା ତସ୍ୟ ସମ୍ମୁଖେ ଜାନୁପାତଂ ପ୍ରଣୋମୁଃ
20 இவ்வாறு அவரை ஏளனம் செய்தபின்பு, அந்தக் கருஞ்சிவப்பு உடையைக் கழற்றிவிட்டு, அவரது உடையையே அவருக்கு உடுத்தினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
ଇତ୍ଥମୁପହସ୍ୟ ଧୂମ୍ରୱର୍ଣୱସ୍ତ୍ରମ୍ ଉତ୍ତାର୍ୟ୍ୟ ତସ୍ୟ ୱସ୍ତ୍ରଂ ତଂ ପର୍ୟ୍ୟଧାପଯନ୍ କ୍ରୁଶେ ୱେଦ୍ଧୁଂ ବହିର୍ନିନ୍ୟୁଶ୍ଚ|
21 போகும் வழியில், சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் என்னும் ஒரு மனிதன் நாட்டுப் புறத்திலிருந்து வந்து, அவனும் அவ்வழியாய்ப் போய்க்கொண்டிருந்தான். இந்த சீமோன் அலெக்சாந்தருக்கும், ரூபுவுக்கும் தகப்பன். அவனைச் சிலுவையைத் தூக்கிச்செல்லும்படி படைவீரர் வற்புறுத்தினார்கள்.
ତତଃ ପରଂ ସେକନ୍ଦରସ୍ୟ ରୁଫସ୍ୟ ଚ ପିତା ଶିମୋନ୍ନାମା କୁରୀଣୀଯଲୋକ ଏକଃ କୁତଶ୍ଚିଦ୍ ଗ୍ରାମାଦେତ୍ୟ ପଥି ଯାତି ତଂ ତେ ଯୀଶୋଃ କ୍ରୁଶଂ ୱୋଢୁଂ ବଲାଦ୍ ଦଧ୍ନୁଃ|
22 பின்பு அவர்கள் இயேசுவை கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். கொல்கொதா என்பதன் அர்த்தம், “மண்டையோட்டின் இடம்” என்பதாகும்.
ଅଥ ଗୁଲ୍ଗଲ୍ତା ଅର୍ଥାତ୍ ଶିରଃକପାଲନାମକଂ ସ୍ଥାନଂ ଯୀଶୁମାନୀଯ
23 அப்பொழுது அவர்கள், வெள்ளைப்போளம் கலந்த திராட்சை இரசத்தை, அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் இயேசுவோ அதைக் குடிக்க மறுத்தார்.
ତେ ଗନ୍ଧରସମିଶ୍ରିତଂ ଦ୍ରାକ୍ଷାରସଂ ପାତୁଂ ତସ୍ମୈ ଦଦୁଃ କିନ୍ତୁ ସ ନ ଜଗ୍ରାହ|
24 பின்பு அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள். உடையில் எதை யார் எடுத்துக்கொள்வது என்று தீர்மானிப்பதற்காகச் சீட்டுப்போட்டார்கள்.
ତସ୍ମିନ୍ କ୍ରୁଶେ ୱିଦ୍ଧେ ସତି ତେଷାମେକୈକଶଃ କିଂ ପ୍ରାପ୍ସ୍ୟତୀତି ନିର୍ଣଯାଯ
25 அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோது, காலை ஒன்பது மணியாய் இருந்தது.
ତସ୍ୟ ପରିଧେଯାନାଂ ୱିଭାଗାର୍ଥଂ ଗୁଟିକାପାତଂ ଚକ୍ରୁଃ|
26 அவருக்கு எதிராக சிலுவையில் குற்றச்சாட்டு இப்படியாக எழுதப்பட்டிருந்தது. யூதரின் அரசன்.
ଅପରମ୍ ଏଷ ଯିହୂଦୀଯାନାଂ ରାଜେତି ଲିଖିତଂ ଦୋଷପତ୍ରଂ ତସ୍ୟ ଶିରଊର୍ଦ୍ୱ୍ୱମ୍ ଆରୋପଯାଞ୍ଚକ୍ରୁଃ|
27 அவர்கள் இயேசுவுடன் இரண்டு கள்வர்களை, ஒருவனை வலதுபக்கத்திலும், மற்றவனை இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள்.
ତସ୍ୟ ୱାମଦକ୍ଷିଣଯୋ ର୍ଦ୍ୱୌ ଚୌରୌ କ୍ରୁଶଯୋ ର୍ୱିୱିଧାତେ|
28 அவர் குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற வேதவசனம் இதன் மூலமாய் நிறைவேறிற்று.
ତେନୈୱ "ଅପରାଧିଜନୈଃ ସାର୍ଦ୍ଧଂ ସ ଗଣିତୋ ଭୱିଷ୍ୟତି," ଇତି ଶାସ୍ତ୍ରୋକ୍ତଂ ୱଚନଂ ସିଦ୍ଧମଭୂତ|
29 அவ்வழியாகக் கடந்து போனவர்கள் ஏளனமாய் தங்கள் தலைகளை அசைத்து, “ஆலயத்தை அழித்து, அதை மூன்று நாளில் கட்டுவேன் என்று சொன்னவனே,
ଅନନ୍ତରଂ ମାର୍ଗେ ଯେ ଯେ ଲୋକା ଗମନାଗମନେ ଚକ୍ରୁସ୍ତେ ସର୍ୱ୍ୱ ଏୱ ଶିରାଂସ୍ୟାନ୍ଦୋଲ୍ୟ ନିନ୍ଦନ୍ତୋ ଜଗଦୁଃ, ରେ ମନ୍ଦିରନାଶକ ରେ ଦିନତ୍ରଯମଧ୍ୟେ ତନ୍ନିର୍ମ୍ମାଯକ,
30 நீ சிலுவையிலிருந்து இறங்கிவந்து உன்னை நீயே விடுவித்துக்கொள்!” என்று பழித்துரைத்தார்கள்.
ଅଧୁନାତ୍ମାନମ୍ ଅୱିତ୍ୱା କ୍ରୁଶାଦୱରୋହ|
31 அவ்விதமாகவே தலைமை ஆசாரியர்களும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், ஒருவரோடொருவர் அவரைக்குறித்து ஏளனமாய் பேசினார்கள். அவர்கள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான், ஆனால் தன்னையோ இரட்சித்துக்கொள்ள முடியாதிருக்கிறான்!
କିଞ୍ଚ ପ୍ରଧାନଯାଜକା ଅଧ୍ୟାପକାଶ୍ଚ ତଦ୍ୱତ୍ ତିରସ୍କୃତ୍ୟ ପରସ୍ପରଂ ଚଚକ୍ଷିରେ ଏଷ ପରାନାୱତ୍ କିନ୍ତୁ ସ୍ୱମୱିତୁଂ ନ ଶକ୍ନୋତି|
32 இஸ்ரயேலின் அரசனான இந்த கிறிஸ்து, இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது அதைக்கண்டு, நாங்கள் விசுவாசிப்போம்” என்றார்கள். இயேசுவுடனே சிலுவையில் அறையப்பட்டவர்களுங்கூட அவரை ஏளனம் செய்தார்கள்.
ଯଦୀସ୍ରାଯେଲୋ ରାଜାଭିଷିକ୍ତସ୍ତ୍ରାତା ଭୱତି ତର୍ହ୍ୟଧୁନୈନ କ୍ରୁଶାଦୱରୋହତୁ ୱଯଂ ତଦ୍ ଦୃଷ୍ଟ୍ୱା ୱିଶ୍ୱସିଷ୍ୟାମଃ; କିଞ୍ଚ ଯୌ ଲୋକୌ ତେନ ସାର୍ଦ୍ଧଂ କ୍ରୁଶେ ଽୱିଧ୍ୟେତାଂ ତାୱପି ତଂ ନିର୍ଭର୍ତ୍ସଯାମାସତୁଃ|
33 மத்தியான வேளையில், பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது.
ଅଥ ଦ୍ୱିତୀଯଯାମାତ୍ ତୃତୀଯଯାମଂ ଯାୱତ୍ ସର୍ୱ୍ୱୋ ଦେଶଃ ସାନ୍ଧକାରୋଭୂତ୍|
34 மாலை மூன்றுமணியானபோது, இயேசு உரத்த குரலில், “ஏலோயீ, ஏலோயீ, லாமா சபக்தானி?” என்று அதிக சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதன் அர்த்தம், “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதாகும்.
ତତସ୍ତୃତୀଯପ୍ରହରେ ଯୀଶୁରୁଚ୍ଚୈରୱଦତ୍ ଏଲୀ ଏଲୀ ଲାମା ଶିୱକ୍ତନୀ ଅର୍ଥାଦ୍ "ହେ ମଦୀଶ ମଦୀଶ ତ୍ୱଂ ପର୍ୟ୍ୟତ୍ୟାକ୍ଷୀଃ କୁତୋ ହି ମାଂ?"
35 அருகே நின்றவர்களில் சிலர், இதைக் கேட்டபோது, “கேளுங்கள், இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றார்கள்.
ତଦା ସମୀପସ୍ଥଲୋକାନାଂ କେଚିତ୍ ତଦ୍ୱାକ୍ୟଂ ନିଶମ୍ୟାଚଖ୍ୟୁଃ ପଶ୍ୟୈଷ ଏଲିଯମ୍ ଆହୂଯତି|
36 அப்பொழுது ஒருவன் ஓடிப்போய், கடற்காளானை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, ஒரு தடியில் கட்டி, அதை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். அவன், “இப்பொழுது அவனை அப்படியே விடுங்கள். அவனைக் கீழே இறக்குவதற்கு எலியா வருகிறானோ என்று பார்ப்போம்” என்றான்.
ତତ ଏକୋ ଜନୋ ଧାୱିତ୍ୱାଗତ୍ୟ ସ୍ପଞ୍ଜେ ଽମ୍ଲରସଂ ପୂରଯିତ୍ୱା ତଂ ନଡାଗ୍ରେ ନିଧାଯ ପାତୁଂ ତସ୍ମୈ ଦତ୍ତ୍ୱାୱଦତ୍ ତିଷ୍ଠ ଏଲିଯ ଏନମୱରୋହଯିତୁମ୍ ଏତି ନ ୱେତି ପଶ୍ୟାମି|
37 அப்பொழுது இயேசு சத்தமிட்டுக் கதறி, தமது கடைசி மூச்சைவிட்டார்.
ଅଥ ଯୀଶୁରୁଚ୍ଚୈଃ ସମାହୂଯ ପ୍ରାଣାନ୍ ଜହୌ|
38 அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
ତଦା ମନ୍ଦିରସ୍ୟ ଜୱନିକୋର୍ଦ୍ୱ୍ୱାଦଧଃର୍ୟ୍ୟନ୍ତା ୱିଦୀର୍ଣା ଦ୍ୱିଖଣ୍ଡାଭୂତ୍|
39 இயேசுவுக்கு முன்பாக அங்கு நின்றுகொண்டிருந்த நூற்றுக்குத் தலைவன் அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டான். அப்பொழுது அவன், “நிச்சயமாகவே இந்த மனிதன் இறைவனுடைய மகனே தான்” என்றான்.
କିଞ୍ଚ ଇତ୍ଥମୁଚ୍ଚୈରାହୂଯ ପ୍ରାଣାନ୍ ତ୍ୟଜନ୍ତଂ ତଂ ଦୃଷ୍ଦ୍ୱା ତଦ୍ରକ୍ଷଣାଯ ନିଯୁକ୍ତୋ ଯଃ ସେନାପତିରାସୀତ୍ ସୋୱଦତ୍ ନରୋଯମ୍ ଈଶ୍ୱରପୁତ୍ର ଇତି ସତ୍ୟମ୍|
40 சில பெண்கள் தூரத்தில் நின்று, அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபு, யோசே என்பவர்களின் தாயாகிய மரியாளும், சலோமியும் இருந்தார்கள்.
ତଦାନୀଂ ମଗ୍ଦଲୀନୀ ମରିସମ୍ କନିଷ୍ଠଯାକୂବୋ ଯୋସେଶ୍ଚ ମାତାନ୍ୟମରିଯମ୍ ଶାଲୋମୀ ଚ ଯାଃ ସ୍ତ୍ରିଯୋ
41 இந்தப் பெண்கள் இயேசுவின் தேவைகளை கவனிப்பதற்கு கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்தார்கள். அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த வேறு அநேகம் பெண்களுங்கூட அங்கிருந்தார்கள்.
ଗାଲୀଲ୍ପ୍ରଦେଶେ ଯୀଶୁଂ ସେୱିତ୍ୱା ତଦନୁଗାମିନ୍ୟୋ ଜାତା ଇମାସ୍ତଦନ୍ୟାଶ୍ଚ ଯା ଅନେକା ନାର୍ୟୋ ଯୀଶୁନା ସାର୍ଦ୍ଧଂ ଯିରୂଶାଲମମାଯାତାସ୍ତାଶ୍ଚ ଦୂରାତ୍ ତାନି ଦଦୃଶୁଃ|
42 அந்த நாள் ஓய்வுநாளுக்கு முந்தின நாளான, ஆயத்த நாளாயிருந்தது. மாலை வேளையானபோது,
ଅଥାସାଦନଦିନସ୍ୟାର୍ଥାଦ୍ ୱିଶ୍ରାମୱାରାତ୍ ପୂର୍ୱ୍ୱଦିନସ୍ୟ ସାଯଂକାଲ ଆଗତ
43 அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவனும், நீதிமன்றத்தின் முக்கிய உறுப்பினருமான யோசேப்பு துணிச்சலுடன் பிலாத்துவிடம் போய், இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான். இவன் இறைவனின் அரசுக்காகக் காத்துக்கொண்டிருந்த ஒருவன்.
ଈଶ୍ୱରରାଜ୍ୟାପେକ୍ଷ୍ୟରିମଥୀଯଯୂଷଫନାମା ମାନ୍ୟମନ୍ତ୍ରୀ ସମେତ୍ୟ ପୀଲାତସୱିଧଂ ନିର୍ଭଯୋ ଗତ୍ୱା ଯୀଶୋର୍ଦେହଂ ଯଯାଚେ|
44 இயேசு அதற்குள்ளாகவே இறந்துவிட்டார் எனக்கேட்ட பிலாத்து வியப்படைந்தான். அவன் நூற்றுக்குத் தலைவனை கூப்பிட்டு, “இயேசு இறந்து விட்டாரா?” என்று கேட்டான்.
କିନ୍ତୁ ସ ଇଦାନୀଂ ମୃତଃ ପୀଲାତ ଇତ୍ୟସମ୍ଭୱଂ ମତ୍ୱା ଶତସେନାପତିମାହୂଯ ସ କଦା ମୃତ ଇତି ପପ୍ରଚ୍ଛ|
45 நூற்றுக்குத் தலைவனிடமிருந்து அதை உறுதி செய்துகொண்ட பின்பு, அவன் இயேசுவின் உடலை யோசேப்பிடம் கொடுத்தான்.
ଶତସେମନାପତିମୁଖାତ୍ ତଜ୍ଜ୍ଞାତ୍ୱା ଯୂଷଫେ ଯୀଶୋର୍ଦେହଂ ଦଦୌ|
46 எனவே யோசேப்பு மென்பட்டுத் துணியைக் கொண்டுவந்து, அவரது உடலைக் கீழே இறக்கி, அதை அந்தத் துணியினால் சுற்றினான். பின்பு, அதை கற்பாறையில் வெட்டியிருந்த ஒரு கல்லறையில் வைத்து, அதன் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி மூடினான்.
ପଶ୍ଚାତ୍ ସ ସୂକ୍ଷ୍ମଂ ୱାସଃ କ୍ରୀତ୍ୱା ଯୀଶୋଃ କାଯମୱରୋହ୍ୟ ତେନ ୱାସସା ୱେଷ୍ଟାଯିତ୍ୱା ଗିରୌ ଖାତଶ୍ମଶାନେ ସ୍ଥାପିତୱାନ୍ ପାଷାଣଂ ଲୋଠଯିତ୍ୱା ଦ୍ୱାରି ନିଦଧେ|
47 மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும், இயேசு எங்கு கிடத்தப்பட்டார் என்று பார்த்தார்கள்.
କିନ୍ତୁ ଯତ୍ର ସୋସ୍ଥାପ୍ୟତ ତତ ମଗ୍ଦଲୀନୀ ମରିଯମ୍ ଯୋସିମାତୃମରିଯମ୍ ଚ ଦଦୃଶତୃଃ|

< மாற்கு 15 >