< மாற்கு 15 >

1 அதிகாலையிலேயே தலைமை ஆசாரியர்களும், யூதரின் தலைவர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், முழு ஆலோசனைச் சங்கத்தினரும் சேர்ந்து ஒரு தீர்மானத்திற்கு வந்தார்கள். அதன்படி அவர்கள் இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவிடம் ஒப்படைத்தார்கள்.
atha prabhAtE sati pradhAnayAjakAH prAnjca upAdhyAyAH sarvvE mantriNazca sabhAM kRtvA yIzuM bandhayitva pIlAtAkhyasya dEzAdhipatEH savidhaM nItvA samarpayAmAsuH|
2 பிலாத்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான். அதற்கு இயேசு, “ஆம், நீர் சொல்கிறபடியேதான்” என்றார்.
tadA pIlAtastaM pRSTavAn tvaM kiM yihUdIyalOkAnAM rAjA? tataH sa pratyuktavAn satyaM vadasi|
3 தலைமை ஆசாரியர்கள், அநேக குற்றச்சாட்டுகளை அவர்மேல் சுமத்தினார்கள்.
aparaM pradhAnayAjakAstasya bahuSu vAkyESu dOSamArOpayAnjcakruH kintu sa kimapi na pratyuvAca|
4 அப்பொழுது பிலாத்து மீண்டும் இயேசுவிடம், “நீ பதில் சொல்லமாட்டாயோ? பார், எத்தனை குற்றச்சாட்டுகளை அவர்கள் உன்மேல் சுமத்துகிறார்கள்” என்று கேட்டான்.
tadAnIM pIlAtastaM punaH papraccha tvaM kiM nOttarayasi? pazyaitE tvadviruddhaM katiSu sAdhyESu sAkSaM dadati|
5 இயேசுவோ பதில் எதுவும் சொல்லவில்லை. அதனால் பிலாத்து வியப்படைந்தான்.
kantu yIzustadApi nOttaraM dadau tataH pIlAta AzcaryyaM jagAma|
6 பண்டிகைக் காலத்தில், மக்கள் விடுதலை செய்யும்படி கேட்கும் ஒரு கைதியை ஆளுநர்கள் விடுதலை செய்வது வழக்கமாயிருந்தது.
aparanjca kArAbaddhE kastiMzcit janE tanmahOtsavakAlE lOkai ryAcitE dEzAdhipatistaM mOcayati|
7 அந்நாட்களில் சில கிளர்ச்சிக்காரர்களுடன், பரபாஸ் என்னும் பெயருடைய ஒருவனும் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தான். இவன் கிளர்ச்சி ஏற்படுத்தி கொலையும் செய்திருந்தவன்.
yE ca pUrvvamupaplavamakArSurupaplavE vadhamapi kRtavantastESAM madhyE tadAnOM barabbAnAmaka EkO baddha AsIt|
8 மக்கள் கூடிவந்து, பிலாத்துவிடம் வழக்கமாக செய்துவந்ததுபோல், இம்முறையும் தங்களுக்கு ஒருவனை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.
atO hEtOH pUrvvAparIyAM rItikathAM kathayitvA lOkA uccairuvantaH pIlAtasya samakSaM nivEdayAmAsuH|
9 அப்பொழுது பிலாத்து அவர்களைப் பார்த்து, “யூதருடைய அரசனை நான் விடுதலையாக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.
tadA pIlAtastAnAcakhyau tarhi kiM yihUdIyAnAM rAjAnaM mOcayiSyAmi? yuSmAbhiH kimiSyatE?
10 தலைமை ஆசாரியர்கள் பொறாமையின் காரணமாக இயேசுவைத் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள் என்பதை அவன் அறிந்திருந்தான்.
yataH pradhAnayAjakA IrSyAta Eva yIzuM samArpayanniti sa vivEda|
11 ஆனால் தலைமை ஆசாரியர்களோ, பரபாஸையே பிலாத்து விடுதலை செய்யவேண்டும் என்று அவனைக் கேட்கச்சொல்லி, கூடியிருந்த மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
kintu yathA barabbAM mOcayati tathA prArthayituM pradhAnayAjakA lOkAn pravarttayAmAsuH|
12 எனவே பிலாத்து அவர்களிடம், “அப்படியானால், நீங்கள் யூதருடைய அரசன் என்று சொல்லுகிற இவனுக்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
atha pIlAtaH punaH pRSTavAn tarhi yaM yihUdIyAnAM rAjEti vadatha tasya kiM kariSyAmi yuSmAbhiH kimiSyatE?
13 அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள்.
tadA tE punarapi prOccaiH prOcustaM kruzE vEdhaya|
14 “ஏன்? அவன் என்ன குற்றம் செய்தான்?” என பிலாத்து கேட்டான். ஆனால் அவர்களோ, “அவனைச் சிலுவையில் அறையும்!” என்று இன்னும் அதிகமாகச் சத்தமிட்டார்கள்.
tasmAt pIlAtaH kathitavAn kutaH? sa kiM kukarmma kRtavAn? kintu tE punazca ruvantO vyAjahrustaM kruzE vEdhaya|
15 பிலாத்து கூடியிருந்த மக்களை திருப்திப்படுத்த விரும்பி, பரபாஸை அவர்களுக்கு விடுதலை செய்தான். இயேசுவையோ சவுக்கினால் அடித்து சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான்.
tadA pIlAtaH sarvvAllOkAn tOSayitumicchan barabbAM mOcayitvA yIzuM kazAbhiH prahRtya kruzE vEddhuM taM samarpayAmbabhUva|
16 போர்வீரர்கள் இயேசுவை அரண்மனை முற்றத்திலுள்ள ஆளுநர் தலைமையகத்திற்குக் கொண்டுசென்று, மற்ற எல்லா படைவீரர்களையும் ஒன்றுகூட்டினார்கள்.
anantaraM sainyagaNO'TTAlikAm arthAd adhipatE rgRhaM yIzuM nItvA sEnAnivahaM samAhuyat|
17 அவர்கள் இயேசுவுக்கு கருஞ்சிவப்பு உடையை உடுத்தி, முட்களினால் ஒரு கிரீடத்தைப் பின்னி, அதை அவருடைய தலையின்மேல் வைத்தார்கள்.
pazcAt tE taM dhUmalavarNavastraM paridhApya kaNTakamukuTaM racayitvA zirasi samArOpya
18 பின்பு அவர்கள், “யூதருடைய அரசனே வாழ்க!” என்று சொல்லி இயேசுவை ஏளனம் செய்தார்கள்.
hE yihUdIyAnAM rAjan namaskAra ityuktvA taM namaskarttAmArEbhirE|
19 அவர்கள் ஒரு தடியினால் திரும்பத்திரும்ப அவரைத் தலையில் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்காற்படியிட்டு, அவரை வணங்கினார்கள்.
tasyOttamAggE vEtrAghAtaM cakrustadgAtrE niSThIvanjca nicikSipuH, tathA tasya sammukhE jAnupAtaM praNOmuH
20 இவ்வாறு அவரை ஏளனம் செய்தபின்பு, அந்தக் கருஞ்சிவப்பு உடையைக் கழற்றிவிட்டு, அவரது உடையையே அவருக்கு உடுத்தினார்கள். அதற்குப் பின்பு அவர்கள் இயேசுவை சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள்.
itthamupahasya dhUmravarNavastram uttAryya tasya vastraM taM paryyadhApayan kruzE vEddhuM bahirninyuzca|
21 போகும் வழியில், சிரேனே ஊரைச்சேர்ந்த சீமோன் என்னும் ஒரு மனிதன் நாட்டுப் புறத்திலிருந்து வந்து, அவனும் அவ்வழியாய்ப் போய்க்கொண்டிருந்தான். இந்த சீமோன் அலெக்சாந்தருக்கும், ரூபுவுக்கும் தகப்பன். அவனைச் சிலுவையைத் தூக்கிச்செல்லும்படி படைவீரர் வற்புறுத்தினார்கள்.
tataH paraM sEkandarasya ruphasya ca pitA zimOnnAmA kurINIyalOka EkaH kutazcid grAmAdEtya pathi yAti taM tE yIzOH kruzaM vOPhuM balAd dadhnuH|
22 பின்பு அவர்கள் இயேசுவை கொல்கொதா எனப்பட்ட ஒரு இடத்திற்குக் கொண்டுவந்தார்கள். கொல்கொதா என்பதன் அர்த்தம், “மண்டையோட்டின் இடம்” என்பதாகும்.
atha gulgaltA arthAt ziraHkapAlanAmakaM sthAnaM yIzumAnIya
23 அப்பொழுது அவர்கள், வெள்ளைப்போளம் கலந்த திராட்சை இரசத்தை, அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் இயேசுவோ அதைக் குடிக்க மறுத்தார்.
tE gandharasamizritaM drAkSArasaM pAtuM tasmai daduH kintu sa na jagrAha|
24 பின்பு அவர்கள் அவரை சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய உடைகளைப் பங்கிட்டுக்கொண்டார்கள். உடையில் எதை யார் எடுத்துக்கொள்வது என்று தீர்மானிப்பதற்காகச் சீட்டுப்போட்டார்கள்.
tasmin kruzE viddhE sati tESAmEkaikazaH kiM prApsyatIti nirNayAya
25 அவர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபோது, காலை ஒன்பது மணியாய் இருந்தது.
tasya paridhEyAnAM vibhAgArthaM guTikApAtaM cakruH|
26 அவருக்கு எதிராக சிலுவையில் குற்றச்சாட்டு இப்படியாக எழுதப்பட்டிருந்தது. யூதரின் அரசன்.
aparam ESa yihUdIyAnAM rAjEti likhitaM dOSapatraM tasya ziraUrdvvam ArOpayAnjcakruH|
27 அவர்கள் இயேசுவுடன் இரண்டு கள்வர்களை, ஒருவனை வலதுபக்கத்திலும், மற்றவனை இடது பக்கத்திலுமாக சிலுவைகளில் அறைந்தார்கள்.
tasya vAmadakSiNayO rdvau caurau kruzayO rvividhAtE|
28 அவர் குற்றவாளிகளில் ஒருவராக எண்ணப்பட்டார் என்ற வேதவசனம் இதன் மூலமாய் நிறைவேறிற்று.
tEnaiva "aparAdhijanaiH sArddhaM sa gaNitO bhaviSyati," iti zAstrOktaM vacanaM siddhamabhUta|
29 அவ்வழியாகக் கடந்து போனவர்கள் ஏளனமாய் தங்கள் தலைகளை அசைத்து, “ஆலயத்தை அழித்து, அதை மூன்று நாளில் கட்டுவேன் என்று சொன்னவனே,
anantaraM mArgE yE yE lOkA gamanAgamanE cakrustE sarvva Eva zirAMsyAndOlya nindantO jagaduH, rE mandiranAzaka rE dinatrayamadhyE tannirmmAyaka,
30 நீ சிலுவையிலிருந்து இறங்கிவந்து உன்னை நீயே விடுவித்துக்கொள்!” என்று பழித்துரைத்தார்கள்.
adhunAtmAnam avitvA kruzAdavarOha|
31 அவ்விதமாகவே தலைமை ஆசாரியர்களும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், ஒருவரோடொருவர் அவரைக்குறித்து ஏளனமாய் பேசினார்கள். அவர்கள், “இவன் மற்றவர்களை இரட்சித்தான், ஆனால் தன்னையோ இரட்சித்துக்கொள்ள முடியாதிருக்கிறான்!
kinjca pradhAnayAjakA adhyApakAzca tadvat tiraskRtya parasparaM cacakSirE ESa parAnAvat kintu svamavituM na zaknOti|
32 இஸ்ரயேலின் அரசனான இந்த கிறிஸ்து, இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும். அப்பொழுது அதைக்கண்டு, நாங்கள் விசுவாசிப்போம்” என்றார்கள். இயேசுவுடனே சிலுவையில் அறையப்பட்டவர்களுங்கூட அவரை ஏளனம் செய்தார்கள்.
yadIsrAyElO rAjAbhiSiktastrAtA bhavati tarhyadhunaina kruzAdavarOhatu vayaM tad dRSTvA vizvasiSyAmaH; kinjca yau lOkau tEna sArddhaM kruzE 'vidhyEtAM tAvapi taM nirbhartsayAmAsatuH|
33 மத்தியான வேளையில், பூமியெங்கும் இருள் சூழ்ந்து பிற்பகல் மூன்று மணிவரை நீடித்திருந்தது.
atha dvitIyayAmAt tRtIyayAmaM yAvat sarvvO dEzaH sAndhakArObhUt|
34 மாலை மூன்றுமணியானபோது, இயேசு உரத்த குரலில், “ஏலோயீ, ஏலோயீ, லாமா சபக்தானி?” என்று அதிக சத்தமிட்டுக் கூப்பிட்டார். அதன் அர்த்தம், “என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதாகும்.
tatastRtIyapraharE yIzuruccairavadat ElI ElI lAmA zivaktanI arthAd "hE madIza madIza tvaM paryyatyAkSIH kutO hi mAM?"
35 அருகே நின்றவர்களில் சிலர், இதைக் கேட்டபோது, “கேளுங்கள், இவன் எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றார்கள்.
tadA samIpasthalOkAnAM kEcit tadvAkyaM nizamyAcakhyuH pazyaiSa Eliyam AhUyati|
36 அப்பொழுது ஒருவன் ஓடிப்போய், கடற்காளானை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, ஒரு தடியில் கட்டி, அதை இயேசுவுக்குக் குடிக்கக் கொடுத்தான். அவன், “இப்பொழுது அவனை அப்படியே விடுங்கள். அவனைக் கீழே இறக்குவதற்கு எலியா வருகிறானோ என்று பார்ப்போம்” என்றான்.
tata EkO janO dhAvitvAgatya spanjjE 'mlarasaM pUrayitvA taM naPAgrE nidhAya pAtuM tasmai dattvAvadat tiSTha Eliya EnamavarOhayitum Eti na vEti pazyAmi|
37 அப்பொழுது இயேசு சத்தமிட்டுக் கதறி, தமது கடைசி மூச்சைவிட்டார்.
atha yIzuruccaiH samAhUya prANAn jahau|
38 அவ்வேளையில் ஆலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது.
tadA mandirasya javanikOrdvvAdadhaHryyantA vidIrNA dvikhaNPAbhUt|
39 இயேசுவுக்கு முன்பாக அங்கு நின்றுகொண்டிருந்த நூற்றுக்குத் தலைவன் அவர் எப்படி இறந்தார் என்பதை கண்டான். அப்பொழுது அவன், “நிச்சயமாகவே இந்த மனிதன் இறைவனுடைய மகனே தான்” என்றான்.
kinjca itthamuccairAhUya prANAn tyajantaM taM dRSdvA tadrakSaNAya niyuktO yaH sEnApatirAsIt sOvadat narOyam Izvaraputra iti satyam|
40 சில பெண்கள் தூரத்தில் நின்று, அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபு, யோசே என்பவர்களின் தாயாகிய மரியாளும், சலோமியும் இருந்தார்கள்.
tadAnIM magdalInI marisam kaniSThayAkUbO yOsEzca mAtAnyamariyam zAlOmI ca yAH striyO
41 இந்தப் பெண்கள் இயேசுவின் தேவைகளை கவனிப்பதற்கு கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்தார்கள். அவரோடு எருசலேமுக்கு வந்திருந்த வேறு அநேகம் பெண்களுங்கூட அங்கிருந்தார்கள்.
gAlIlpradEzE yIzuM sEvitvA tadanugAminyO jAtA imAstadanyAzca yA anEkA nAryO yIzunA sArddhaM yirUzAlamamAyAtAstAzca dUrAt tAni dadRzuH|
42 அந்த நாள் ஓய்வுநாளுக்கு முந்தின நாளான, ஆயத்த நாளாயிருந்தது. மாலை வேளையானபோது,
athAsAdanadinasyArthAd vizrAmavArAt pUrvvadinasya sAyaMkAla Agata
43 அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவனும், நீதிமன்றத்தின் முக்கிய உறுப்பினருமான யோசேப்பு துணிச்சலுடன் பிலாத்துவிடம் போய், இயேசுவின் உடலைத் தரும்படி கேட்டான். இவன் இறைவனின் அரசுக்காகக் காத்துக்கொண்டிருந்த ஒருவன்.
IzvararAjyApEkSyarimathIyayUSaphanAmA mAnyamantrI samEtya pIlAtasavidhaM nirbhayO gatvA yIzOrdEhaM yayAcE|
44 இயேசு அதற்குள்ளாகவே இறந்துவிட்டார் எனக்கேட்ட பிலாத்து வியப்படைந்தான். அவன் நூற்றுக்குத் தலைவனை கூப்பிட்டு, “இயேசு இறந்து விட்டாரா?” என்று கேட்டான்.
kintu sa idAnIM mRtaH pIlAta ityasambhavaM matvA zatasEnApatimAhUya sa kadA mRta iti papraccha|
45 நூற்றுக்குத் தலைவனிடமிருந்து அதை உறுதி செய்துகொண்ட பின்பு, அவன் இயேசுவின் உடலை யோசேப்பிடம் கொடுத்தான்.
zatasEmanApatimukhAt tajjnjAtvA yUSaphE yIzOrdEhaM dadau|
46 எனவே யோசேப்பு மென்பட்டுத் துணியைக் கொண்டுவந்து, அவரது உடலைக் கீழே இறக்கி, அதை அந்தத் துணியினால் சுற்றினான். பின்பு, அதை கற்பாறையில் வெட்டியிருந்த ஒரு கல்லறையில் வைத்து, அதன் வாசலில் ஒரு கல்லைப் புரட்டி மூடினான்.
pazcAt sa sUkSmaM vAsaH krItvA yIzOH kAyamavarOhya tEna vAsasA vESTAyitvA girau khAtazmazAnE sthApitavAn pASANaM lOThayitvA dvAri nidadhE|
47 மகதலேனா மரியாளும், யோசேயின் தாயாகிய மரியாளும், இயேசு எங்கு கிடத்தப்பட்டார் என்று பார்த்தார்கள்.
kintu yatra sOsthApyata tata magdalInI mariyam yOsimAtRmariyam ca dadRzatRH|

< மாற்கு 15 >