< மாற்கு 12 >

1 பின்பு இயேசு அவர்களுடனே உவமைகள் மூலம் பேசினார்: “ஒருவன் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கினான். அவன் அதைச் சுற்றி வேலியடைத்து, ஒரு திராட்சை ஆலையைக் கட்டி, அங்கு ஒரு காவல் கோபுரத்தையும் அமைத்தான். அதற்குப் பின்பு, அவன் அந்தத் திராட்சை தோட்டத்தைச் சில விவசாயிகளுக்கு குத்தகையாகக் கொடுத்துவிட்டு, வேறொரு இடத்திற்குச் சென்றுவிட்டான்.
ထိုအခါ ဥပမာ အားဖြင့် မိန့် တော်မူသည်ကား၊ လူ တစ်ဦးသည် စပျစ် ဥယျာဉ်ကိုစိုက်ပျိုး ၍ ၊ စောင်ရန်း ကို လုပ် ပြီးမှ စပျစ်သီး နယ်ရာကျင်းကိုတူး လေ၏။ မှီခိုရာလင့်စင် ကိုလည်း ဆောက် လေ၏။ လုပ်ဆောင် သောသူတို့ အား ဥယျာဉ် ကိုငှား ၍ ၊ အခြားသောပြည်သို့သွား လေ၏။”
2 அறுவடைக்காலம் வந்தபோது, அந்த விவசாயிகளிடமிருந்து திராட்சைத் தோட்டத்தின் பழங்களின் பங்கைப் பெற்றுக்கொண்டு வரும்படி, அவன் ஒரு வேலைக்காரனை அனுப்பினான்.
ကာလ အချိန်တန်လျှင် ၊ လုပ်ဆောင် သောသူတို့ လက်မှ စပျစ် သီး ကိုခံ စေခြင်းငှာ သူ တို့ရှိရာ သို့ ငယ်သား ကို စေလွှတ် လေ၏။”
3 அந்த விவசாயிகளோ அவனைப் பிடித்து அடித்து வெறுங்கையுடன் அனுப்பிவிட்டார்கள்.
ထိုသူတို့သည် ငယ်သား ကိုဘမ်းဆီး ၍ ရိုက် ပြီးမှ လက်ချည်း လွှတ် လိုက်ကြ၏။”
4 அப்பொழுது அவன், வேறொரு வேலைக்காரனையும் அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் இவனையும் அடித்து தலையைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.
နောက်တစ်ဖန် အခြား သော ငယ်သား ကိုသူ တို့ရှိရာသို့ စေလွှတ် ပြန်လျှင် ၊ ဥယျာဉ်စောင့်တို့သည် ခဲနှင့်ပစ် သဖြင့်၊ သူ ၏ခေါင်း ကိုမှန်၍ အရှက်ခွဲ ပြီးမှလွှတ်လိုက်ကြ၏။”
5 அவன் மறுபடியும் வேறொரு வேலைக்காரனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொன்றுபோட்டார்கள். அவன் இன்னும் பலரை அனுப்பினான்; அவர்களில் சிலரை அவர்கள் அடித்தார்கள். மற்றவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
အခြား သောသူငယ်သားကို စေလွှတ် ပြန်လျှင် ၊ သူ့ ကိုသတ် ကြ၏။ အခြား သောငယ်သားများ တို့တွင် အချို့ ကိုရိုက် ကြ၏။ အချို့ တို့ကိုသတ် ကြ၏။”
6 “இனிமேல் அனுப்புவதற்கு, அவனுடைய அன்பு மகன் மட்டுமே இருந்தான். ‘எனது மகனுக்கு அவர்கள் மதிப்புக் கொடுப்பார்கள்’ என்று சொல்லி, கடைசியாக அவன் தன் மகனை அனுப்பினான்.
ထိုကြောင့်ဥယျာဉ်ရှင်သည် မိမိ၌ချစ် သား တစ်ယောက်တည်း ရှိ သေး သည်ဖြစ်၍၊ ထိုသူတို့သည် ငါ့ သား ကို အားနာ ကြလိမ့်မည်ဟုဆို ၍ မိမိသား ကို နောက်ဆုံး ၌ စေလွှတ် လေ၏။”
7 “ஆனால் அந்த விவசாயிகளோ, ‘இவனே உரிமையாளன். வாருங்கள் நாம் இவனைக் கொன்றுபோடுவோம். அப்பொழுது இந்த உரிமைச்சொத்து நம்முடையதாகும்’ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.
ဥယျာဉ်စောင့် တို့ကလည်း ၊ ဤသူ သည်အမွေခံ ဖြစ် ၏။ လာ ကြ၊ သူ့ ကို သတ် ကြကုန်အံ့။ ထိုသို့ သူ ၏ အမွေ ဥစ္စာကို ငါ တို့ရ ကြလိမ့်မည်ဟု အချင်းချင်း တိုင်ပင် ၍၊”
8 அப்படியே அவர்கள் அவனைப் பிடித்து திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளி, அவனைக் கொலைசெய்தார்கள்.”
ဥယျာဉ်ရှင်၏သားကို ဘမ်းယူ ပြီးမှ သတ် ၍ ဥယျာဉ် ပြင် သို့ ထုတ်ပစ် ကြ၏။”
9 அப்படியானால், “அந்தத் திராட்சைத் தோட்டத்தின் சொந்தக்காரன் என்ன செய்வான்?” என்று கேட்டார். “நான் சொல்கிறேன், அவன் வந்து, அந்த விவசாயிகளைக் கொலைசெய்துவிட்டு, அந்தத் திராட்சைத் தோட்டத்தை வேறு ஆட்களுக்குக் கொடுப்பான்.
သို့ဖြစ်လျှင် ၊ ဥယျာဉ် ရှင် သည် အဘယ်သို့ ပြု မည်နည်း၊ သူသည်လာ ၍ ဥယျာဉ်စောင့် တို့ကို သုတ်သင် ပယ်ရှင်းပြီးမှ ထိုဥယျာဉ် ကို အခြား သောသူတို့အား ပေး လိမ့်မည်။”
10 நீங்கள் இந்த வேதவசனத்தை வாசிக்கவில்லையா: “‘வீடு கட்டுகிறவர்கள் புறக்கணித்துத் தள்ளிவிட்ட கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று;
၁၀တိုက်ကိုတည်လုပ် သောသူ များပယ် ထားသောကျောက် သည် နောက်တစ်ဖန်တိုက် ထောင့် အထွဋ် အဖျား သို့ ရောက် ပြန်၏။ ထို အမှုသည် ထာဝရ ဘုရားပြုတော်မူသောအမှုဖြစ် ၏။”
11 கர்த்தரே இதைச் செய்தார். இது நமது கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது’” என்றார்.
၁၁ငါ တို့မျက်မှောက် ၌ လည်း ၊ အံ့ဩဘွယ် ဖြစ် ၏ဟူသောစကားကိုကျမ်းစာ ၌ သင်တို့သည် မ ဘတ် ဘူး သလော ဟု မိန့်တော်မူ၏။
12 அப்பொழுது அவர்கள், இயேசுவைக் கைதுசெய்ய வழிதேடினார்கள். ஏனெனில் அவர் தங்களுக்கு எதிராகவே அந்த உவமையைச் சொன்னார் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவர்கள் அங்கு கூடியிருந்த மக்களுக்குப் பயந்ததினால், அவரைவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.
၁၂ထိုသူတို့သည် မိမိ တို့ကိုရည်ဆောင် ၍ ထို ဥပမာ စကားကို ဟောပြော တော်မူသည်ကို သိ သောကြောင့် ၊ ကိုယ်တော် ကို ဘမ်းဆီး ခြင်းငှာရှာကြံ ကြ၏။ သို့သော်လည်း စုဝေး သောသူ တို့ကို ကြောက် သောကြောင့် အထံ တော်မှ ထွက်သွား ကြ၏။
13 பின்பு அவர்கள் இயேசுவை அவருடைய வார்த்தையைக் கொண்டே குற்றம் பிடிக்கும்படி, பரிசேயரில் சிலரையும், ஏரோதியரில் சிலரையும் அவரிடம் அனுப்பினார்கள்.
၁၃တစ်ဖန် စကား ကို ချောင်းမြောင်း ၍ အပြစ်ပြုခွင့်ကိုရခြင်းငှာ ဖာရိရှဲ တို့နှင့် ဟေရုဒ် တပည့်အချို့ တို့ကို အထံ တော်သို့ စေလွှတ် ကြ၏။
14 அவர்கள் இயேசுவிடம் வந்து, “போதகரே, நீர் நேர்மையானவரும், இறைவனின் வழியை சத்தியத்தின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். நீர் மனிதருக்கு முகதாட்சண்யம் காட்டாதவராய் இருப்பதால் ஆள்பார்த்து எதையும் செய்யமாட்டீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆகவே ரோமப் பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியானதா? இல்லையா?
၁၄ထိုသူတို့သည် ချဉ်းကပ် ၍ ၊ အရှင် ဘုရား၊ ကိုယ်တော်သည်သစ္စာ ရှိ ပါ၏။ အဘယ်သူ ကိုမျှမ ကြောက် ၊ လူ မျက်နှာ ကို မ ထောက် ဘဲ ဘုရားသခင် ၏တရား လမ်း ကို ဟုတ်မှန်စွာပြ တော်မူသည်ကို အကျွန်ုပ်တို့သိ ကြပါ၏။ ကဲသာ ဘုရင်အား အခွန် ဆက် အပ် သလော၊ မ ဆက်အပ်သလော။
15 நாங்கள் அதைச் செலுத்த வேண்டுமா? செலுத்த வேண்டியதில்லையா?” என்று கேட்டார்கள். ஆனால் இயேசுவுக்கு அவர்களின் தந்திரம் தெரிந்திருந்தது. அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னை சோதிக்கிறீர்கள்? ஒரு வெள்ளிக்காசை நான் பார்ப்பதற்கு என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார்.
၁၅အကျွန်ုပ်တို့သည် ဆက် ရမည်လော၊ မ ဆက် ရမည်လောဟု မေးလျှောက် ကြ၏။ ကိုယ်တော် သည် ထို သူ တို့၏လျှို့ဝှက် ခြင်းကို သိ တော်မူလျှင် ၊ သင်တို့သည် ငါ့ ကိုအဘယ်ကြောင့် စုံစမ်း နှောင့်ယှက်ကြသနည်း။ ဒေနာရိ တစ်ပြားကို ငါကြည့် ဘို့ ယူခဲ့ ကြ” ဟု မိန့် တော်မူ၍၊
16 அவர்கள் அந்த நாணயத்தைக் கொண்டுவந்தபோது, அவர் அவர்களிடம், “இந்த நாணயத்திலுள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையவை?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ரோமப் பேரரசன் சீசருடையது” என்றார்கள்.
၁၆သူတို့သည်ယူခဲ့ ကြ၏။ ဤ ပုံ ၊ ဤ လိပ်စာ ကားအဘယ်သူ ၏ပုံ၊ အဘယ်သူ၏လိပ်စာဖြစ်သနည်းဟု မေး တော်မူလျှင် ၊ ကဲသာ ဘုရင်၏ပုံ၊ လိပ်စာဖြစ်ပါသည်ဟု လျှောက် ကြသော် ၊
17 அப்பொழுது இயேசு அவர்களிடம், அப்படியானால், “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார். அவர் சொன்னதைக் கேட்டு அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.
၁၇ယေရှု ကလည်း ၊ ကဲသာ ဘုရင်၏ဥစ္စာ ကို ကဲသာ ဘုရင်အား ဆက်ပေး ကြလော့။ ဘုရားသခင် ၏ဥစ္စာ ကို ကား ၊ ဘုရားသခင် အားဆက်ပေးကြလော့ ဟု မိန့် တော်မူသည်ကို သူတို့သည် အံ့ဩ ခြင်းရှိကြ၏။
18 அப்பொழுது, இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்று கூறுகிற சதுசேயர், இயேசுவிடம் ஒரு கேள்வியுடன் வந்தார்கள்.
၁၈ထမြောက် ရှင်ပြန်ခြင်းမ ရှိ ဟူ၍အယူ ရှိသောဇဒ္ဒုကဲ တို့သည်လည်းအထံ တော်သို့ ချည်းကပ် ၍ ၊
19 அவர்கள் அவரிடம், “போதகரே, ஒருவன் பிள்ளைகள் அற்றவனாய் தனது மனைவியை விட்டு இறந்துபோனால், இறந்தவனுடைய சகோதரன் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்யவேண்டும் என்றும், இறந்துபோன தன் சகோதரனுக்காக சந்ததியைப் பெறவேண்டும் என்றும் எங்களுக்கு மோசே எழுதிக் கொடுத்திருக்கிறார்.
၁၉အရှင် ဘုရား၊ လူမည်သည်ကား သား မ ရှိ ဘဲ သေ သွား၍ မယား ကျန်ရစ် လျှင် ၊ သူ့ ညီ သည် ထို မိန်းမ ကိုသိမ်းယူ ၍ အစ်ကို အမျိုး မပြတ်ဆက်နွှယ် စေဟု အကျွန်ုပ် တို့အား မောရှေ စီရင်ရေး ထားပါပြီ။
20 இங்கே ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் மூத்தவன் திருமணம் செய்து, பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனான்.
၂၀ညီအစ်ကို ခုနှစ် ယောက်ရှိ ပါ၏။ အစ်ကိုအကြီး သည် မိန်းမ နှင့်စုံဘက် ၍ သား မ ရှိ ဘဲသေ လျှင် ၊
21 அந்த விதவையை இரண்டாவது சகோதரன் திருமணம் செய்தான். ஆனால் அவனும் பிள்ளைகள் இல்லாமலே இறந்துபோனான். மூன்றாவது சகோதரனுக்கும் இதுவே நடந்தது.
၂၁သူ ၏မယား ကိုသူ့ညီ အကြီးသိမ်းယူ ၍ သား မ ရှိဘဲသေ ပြန်လေ၏။
22 அந்த ஏழு பேருமே பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனார்கள். கடைசியாக, அந்தப் பெண்ணும் இறந்துபோனாள்.
၂၂ထို့အတူ တတိယ သူ မှစ၍ တစ်ယောက်နောက်တစ်ယောက် ခုနစ် ယောက်သောညီအစ်ကိုတို့သည် ထိုမိန်းမ ကိုသိမ်းယူ၍ သား ကိုမ ကျန်ရစ် စေကြ။ နောက်ဆုံး ၌ မိန်းမ သည်လည်း သေ လေ၏။
23 இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
၂၃သို့ဖြစ်၍ထမြောက် ရာကာလ၌ သူတို့သည်ထမြောက် ကြသောအခါ ထိုမိန်းမသည်အဘယ်သူ ၏မယား ဖြစ် ပါမည်နည်း။ ထို ခုနစ် ယောက်တို့သည် ထိုမိန်းမ နှင့်စုံဘက် ခြင်းကို ပြုကြပြီဟု မေးလျှောက် ကြ၏။
24 அதற்கு இயேசு, “நீங்கள் வேதவசனங்களையும், இறைவனுடைய வல்லமையையும் அறியாததினால் தவறுசெய்கிறீர்கள் அல்லவா?
၂၄ယေရှု ကလည်း၊ သင်တို့သည်ကျမ်းစာ ကို နား မ လည်၊ ဘုရားသခင် ၏တန်ခိုး တော်ကို မ သိသောကြောင့် မှား သောအယူကိုယူကြ၏။”
25 இறந்தவர்கள் உயிர்த்தெழும்போது, திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள இறைவனுடைய தூதர்களைப்போல் இருப்பார்கள்.
၂၅သေ ခြင်းမှ ထမြောက် သောအခါ စုံဘက် ခြင်းကိုမ ပြု၊ ထိမ်းမြား ပေးစားခြင်းကိုမ ပြု၊ ကောင်းကင် တမန် ကဲ့သို့ ဖြစ် ကြ၏။”
26 இறந்தோர் உயிர்த்தெழுவதைக் குறித்து நீங்கள் மோசேயின் புத்தகத்தில் வாசிக்கவில்லையா? முட்புதரில் தோன்றிய இறைவன் அவனிடம், ‘நான் ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்’ என்று சொன்னாரே.
၂၆ထိုမှတစ်ပါးသေ လွန်သောသူ တို့သည် ထမြောက် ခြင်းအရာမှာ၊ ဘုရားသခင် ကငါ သည် အာဗြဟံ ၏ ဘုရား ၊ ဣဇာက် ၏ဘုရား ၊ ယာကုပ် ၏ဘုရား ဖြစ်သည်ဟု မောရှေ အား မိန့် တော်မူကြောင်းကို မောရှေ ၏ကျမ်း ၊ ချုံ ခဏ်း၌ သင်တို့သည်မ ဘတ် ဘူးသလော။”
27 அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவனாய் இருக்கிறார். நீங்கள் இதைப்பற்றி மிகவும் தவறுசெய்கிறீர்கள்” என்றார்.
၂၇ဘုရားသခင်သည် သေ နေသောသူတို့၏ဘုရား မ ဟုတ် ၊ အသက် ရှင်သောသူတို့၏ ဘုရားဖြစ်တော်မူ၏။ ထိုကြောင့် သင်တို့သည် အလွန် မှား ကြသည်” ဟု မိန့် တော်မူ၏။
28 மோசேயின் சட்ட ஆசிரியரில் ஒருவன் வந்து, அவர்கள் விவாதித்ததைக் கேட்டுக்கொண்டிருந்தான். இயேசு அவர்களுக்கு நல்ல பதில் கொடுத்தார் என்று அவன் கண்டபோது, அவன் அவரிடம், “கட்டளைகள் எல்லாவற்றிலும் மிக முக்கியமான கட்டளை எது?” என்று கேட்டான்.
၂၈ထိုသို့ ဆွေးနွေး ငြင်းခုံကြသည်ကို ကျမ်းပြု ဆရာတစ် ယောက်သည်ကြား ၍၊ ကိုယ်တော်သည် လျောက်ပတ် စွာ ပြန်ပြော တော်မူသည်ကို သိမြင် လျှင် အထံတော်သို့ချဉ်းကပ် ၍ ၊ ပညတ်တကာ တို့တွင် အဘယ် မည် သော ပညတ် သည်သာ၍ မြတ်သနည်းဟု မေးလျှောက် သော်၊
29 அதற்கு இயேசு அவனிடம், “மிக முக்கியமான கட்டளை எது என்றால்: ‘இஸ்ரயேலே கேள், நம்முடைய இறைவனாகிய கர்த்தர், ஒருவரே கர்த்தர்.
၂၉ယေရှု က၊ ပညတ်တကာတို့တွင် အမြတ်ဆုံး သောပညတ်ဟူမူကား၊ အိုဣသရေလ အမျိုး၊ နားထောင် လော့။ ငါ တို့၏ဘုရားသခင် ထာဝရ ဘုရားသည် တစ်ဆူတည်း သောထာဝရ ဘုရားဖြစ် တော်မူ၏။ ထာဝရဘုရား သည် တစ်ပါးတည်းဖြစ်တော်မူ၏။”
30 உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பெலத்தோடும் அன்பு செலுத்து’ என்பதே.
၃၀သင် ၏ဘုရားသခင် ထာဝရ ဘုရားကို စိတ် နှလုံး အကြွင်းမဲ့ ၊ ဉာဏ် ရှိသမျှ ၊ အစွမ်း သတ္တိရှိသမျှ နှင့် ချစ် လော့။ ဤပညတ်သည် ပဌမပညတ်ဖြစ်၏။”
31 இரண்டாம் கட்டளை என்னவென்றால், ‘நீ உன்னில் அன்பு செலுத்துவது போலவே, உன் அயலானிடத்திலும் அன்பு செலுத்து.’ இவற்றைவிட, பெரிதான கட்டளை ஒன்றும் இல்லை” என்றார்.
၃၁ထိုမှတပါးကိုယ် နှင့်စပ်ဆိုင် သောသူ ကို ကိုယ် နှင့်အမျှ ချစ် လော့ဟူသော ဒုတိယ ပညတ်သည် ပဌမ ပညတ် နှင့်သဘောတူ၏။ ဤ ပညတ်တို့ထက် သာ၍ကြီးမြတ်သော ပညတ် မ ရှိ “ဟုပြန်၍ မိန့် တော်မူ၏။
32 அதற்கு அந்த மோசேயின் சட்ட ஆசிரியன், “போதகரே, நன்றாய்ச் சொன்னீர். இறைவன் ஒருவரே, அவரைத்தவிர வேறு இறைவனும் இல்லை என்று நீர் சொன்னது சரி.
၃၂ကျမ်းပြု ဆရာကလည်း ၊ အရှင် ဘုရား၊ အကယ်စင်စစ် ကိုယ်တော်သည် လျောက်ပတ် စွာမိန့် တော်မူပြီ။ ဘုရားသခင်တဆူတည်း ရှိ တော်မူ၏။
33 அவரை உன் முழு இருதயத்தோடும், உன் முழு மனதோடும், உன் முழு பெலத்தோடும் அன்பு செலுத்துவதும், தன்னில் தான் அன்பாயிருப்பதுபோல் தன் அயலானில் அன்பாய் இருப்பதுமே, எல்லா தகன காணிக்கைகளையும், பலிகளையும்விட மிக முக்கியமானது” என்றான்.
၃၃ထို ဘုရားသခင် မှတပါး အခြား သောဘုရားသခင်မ ရှိ ။ ထို ဘုရားသခင် ကို စိတ် နှလုံးအကြွင်းမဲ့ ၊ ဉာဏ် ရှိသမျှ ၊ အစွမ်း သတ္တိရှိသမျှ နှင့် ချစ် ခြင်း၊ ကိုယ် နှင့်စပ်ဆိုင်သောသူကိုလည်း ၊ ကိုယ် နှင့်အမျှ ချစ် ခြင်းအကျင့်သည် မီးရှို့သောယဇ်ကောင် မှစ၍ ယဇ်အမျိုးမျိုး တို့ကို ပူဇော် ခြင်းအကျင့်ထက် သာ၍မြတ်ပါသည်ဟု လျှောက် လေ၏။
34 அவன் ஞானத்துடன் பதில் சொல்லியதை இயேசு கண்டபோது, அவர் அவனிடம், “நீ இறைவனுடைய அரசுக்குத் தூரமாக இல்லை” என்றார். அவ்வேளையிலிருந்து ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.
၃၄ထိုသို့ ပညာ သတိနှင့် ပြန်လျှောက် သည်ကို ယေရှု သည်သိမြင် လျှင် ၊ သင်သည်ဘုရားသခင် ၏ နိုင်ငံ တော်နှင့် မ ဝေး “ဟု မိန့် တော်မူ၏။ နောက်တစ်ဖန် အဘယ်သူ မျှ မ မေး မလျှောက်ဝံ့ ကြ။
35 இயேசு ஆலய முற்றத்தில் போதித்துக் கொண்டிருக்கையில், அவர் அவர்களிடம், “கிறிஸ்துவே தாவீதின் மகன் என்று மோசேயின் சட்ட ஆசிரியர்கள் சொல்கிறார்களே, அது எப்படி?
၃၅ထိုအခါ ယေရှု သည် ဗိမာန် တော်၌ ဆုံးမ ဩဝါဒပေးတော်မူစဉ်တွင်၊ “ခရစ်တော် သည် ဒါဝိဒ် ၏သား ဖြစ် သည်ဟု ကျမ်းပြု ဆရာတို့သည် အဘယ်ကြောင့် ဆို ကြသနည်း။”
36 தாவீது, தான் பரிசுத்த ஆவியானவராலே பேசுகையில், அறிவித்ததாவது: “‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது, “உமது பகைவர்களை உமது பாதபடியாக்கும்வரை, எனது வலதுபக்கத்தில் உட்காரும்.”’
၃၆ဒါဝိဒ်၏စကားမှာ၊ ထာဝရ ဘုရားက၊ သင် ၏ ရန်သူ တို့ကို သင် ၏ခြေ တင် ရာငါမချ မ ထားမှီတိုင်အောင်ငါ့ လက်ျာ ဘက်၌ ထိုင် နေလော့ဟု ငါ ၏သခင် အား မိန့် တော်မူသည်ဟု သန့်ရှင်း သောဝိညာဉ် တော်အားဖြင့် ဒါဝိဒ် ဆို သတည်း။”
37 தாவீது தானே அவரை ‘கர்த்தர்’ என்று சொல்லுகையில், அவர் எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்றார். கூடியிருந்த மக்கள் அவர் சொல்வதை மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
၃၇ထိုသို့ ဒါဝိဒ် သည် ခရစ်တော် ကိုသခင် ဟူ၍ခေါ် လျှင် အဘယ်သို့ သူ ၏သား ဖြစ် သနည်းဟု မေးတော်မူ၏။ လူ များ အပေါင်းတို့သည် အားရဝမ်းမြောက် သောစိတ်နှင့် စကား တော်ကို နားထောင် ကြ၏။”
38 இயேசு தொடர்ந்து போதிக்கையில் அவர் அவர்களிடம், “மோசேயின் சட்ட ஆசிரியர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் நீண்ட அங்கிகளை அணிந்துகொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வாழ்த்துக்களைப் பெறவும் விரும்புகிறார்கள்.
၃၈ထိုသို့ဆုံးမဩဝါဒ ပေးစဉ်တွင်တစ်ဖန် မိန့် တော်မူသည်ကား၊ ကျမ်းပြု ဆရာတို့ကို ရှောင် ကြလော့။ သူ တို့သည်ရှည်သောအင်္ကျီ ကိုဝတ်လျက် လည် ခြင်းငှာအလိုရှိ ကြ၏။ ဈေး ၌ ရိုသေစွာနှုတ်ဆက် ခြင်းကို၎င်း ၊”
39 அவர்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், விருந்துகளில் மதிப்புக்குரிய இடங்களையும் பெற விரும்புகிறார்கள்.
၃၉ပွဲ သဘင်။ တရားစရပ် တို့၌ မြင့်မြတ် သောနေရာထိုင်ရာကို၎င်း နှစ်သက်ကြ၏။”
40 அவர்கள் விதவைகளின் வீடுகளை அபகரித்துக் கொண்டு, பிறர் காணவேண்டும் என்பதற்காக நெடுநேரம் மன்றாடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகக்கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.
၄၀သူ တို့သည် မုတ်ဆိုးမ အိမ် ကို လုယူ သိမ်းစား၍ အပြစ်မပေါ်စေခြင်းငှာရှည် စွာသော ပဌနာ စကားကို ရွတ်တတ်ကြ၏။ သူ တို့သည် သာ၍ကြီးစွာ သောဒဏ် ကို ခံရ ကြမည် ဟု မိန့်တော်မူ၏။
41 இயேசு காணிக்கைகள் போடும் இடத்துக்கு எதிராக உட்கார்ந்து, திரண்டிருந்த மக்கள் ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியிலே பணத்தைப் போடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். பல செல்வந்தர்கள் அதிக பணத்தைப் போட்டார்கள்.
၄၁ထိုနောက် ယေရှုသည် ဘဏ္ဍာတိုက် ရှေ့ မှာ ထိုင် တော်မူစဉ်တွင်၊ လူ များတို့သည် ကြေး ငွေကိုဘဏ္ဍာတိုက် ထဲသို့ သွင်းချ သည်ကို ကြည့်ရှု တော်မူ၏။ ငွေရတတ် သောသူအများ တို့သည် များစွာ သွင်းချ ကြ၏။
42 ஆனால் ஒரு ஏழை விதவையோ மிகவும் குறைவான மதிப்புடைய இரண்டு சிறிய காசுகளைப் போட்டாள்.
၄၂ဆင်းရဲ သောမုဆိုးမ တစ် ယောက်သည်လာ ၍ တစ်ပဲ လောက်တန် သောကြေးနီ ဒင်္ဂါးနှစ် ပြားကို သွင်းချ ၏။
43 அப்பொழுது இயேசு, தமது சீடர்களைத் தம்மிடம் அழைத்து அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்த ஏழை விதவை மற்ற எல்லோரையும்விட, அந்தக் காணிக்கைப் பெட்டியிலே அதிகமாய்ப் போட்டிருக்கிறாள்.
၄၃ကိုယ်တော်သည် တပည့် တော်တို့ကိုခေါ် ၍ ငါအမှန် ဆို သည်ကား၊ ဘဏ္ဍာတိုက် ထဲသို့ သွင်းချ သောသူ အပေါင်း တို့ထက် ထို ဆင်းရဲသား မုဆိုးမ သည်သာ၍ သွင်းချ ခဲ့ပြီ။”
44 அவர்கள் அனைவரும் தங்கள் செல்வத்திலிருந்தே எடுத்துக் கொடுத்தார்கள்; ஆனால் இவளோ, தனது ஏழ்மையிலிருந்தே கொடுத்தாள், தனது பிழைப்பிற்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே அவள் போட்டிருக்கிறாள்” என்றார்.
၄၄အကြောင်းမူကား ၊ ထိုသူအပေါင်း တို့သည် မိမိ တို့ကြွယ်ဝ သော စည်းစိမ်ထဲက နှုတ်၍သွင်းချ ကြ၏။ ထို မိန်းမ မူကား အလွန်ဆင်းရဲ လျက်ပင်၊ မိမိ အသက် မွေးစရာဥစ္စာရှိသမျှ ကို သွင်းချ လေပြီ ဟုမိန့် တော်မူ၏။

< மாற்கு 12 >