< மாற்கு 11 >
1 அவர்கள் எருசலேமுக்கு அருகில் வந்தார்கள். ஒலிவமலையில் உள்ள பெத்பகே மற்றும் பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது, அவர் தமது சீடர்கள் இரண்டுபேரை அனுப்பி,
Кынд с-ау апропият де Иерусалим ши ау фост лынгэ Бетфаге ши Бетания, ынспре Мунтеле Мэслинилор, Исус а тримис пе дой дин ученичий Сэй
2 “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்திற்குப் போங்கள். நீங்கள் அதற்குள்ளேப் போகையில், ஒருவரும் ஏறிச் சென்றிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள்; அதை அவிழ்த்து இங்கே கொண்டுவாருங்கள்.
ши ле-а зис: „Дучеци-вэ ын сатул динаинтя воастрэ. Ындатэ че вець интра ын ел, вець гэси ун мэгэруш легат, пе каре н-а ынкэлекат ынкэ ничун ом; дезлегаци-л ши адучеци-Ми-л.
3 யாராவது உங்களிடம், ‘ஏன் அதை அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘கர்த்தருக்கு இது வேண்டும், அவர் சீக்கிரமாய் இதைத் திரும்பவும் இங்கே அனுப்பி வைப்பார்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
Дакэ вэ ва ынтреба чинева: ‘Пентру че фачець лукрул ачеста?’ сэ рэспундець: ‘Домнул аре требуинцэ де ел.’ Ши ындатэ ыл ва тримите ынапой аич.”
4 அவர்கள் போய் வெளிவீதியில், ஒரு வீட்டின் வாசலின் அருகே கழுதைக்குட்டி ஒன்று கட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். அவர்கள் அதை அவிழ்க்கும்போது,
Ученичий с-ау дус, ау гэсит мэгэрушул легат афарэ, лынгэ о ушэ, ла котитура друмулуй, ши л-ау дезлегат.
5 அங்கே நின்றுகொண்டிருந்த சிலர், “நீங்கள் என்ன செய்கிறீர்கள்? ஏன் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
Уний дин чей че стэтяу аколо ле-ау зис: „Че фачець? Де че дезлегаць мэгэрушул ачеста?”
6 அதற்கு சீடர்கள், இயேசு தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே பதிலளித்தார்கள். அவர்களும் சீடர்கள் அதை அவிழ்த்துக் கொண்டுபோக அனுமதித்தார்கள்.
Ей ау рэспунс кум ле порунчисе Исус. Ши й-ау лэсат сэ плече.
7 அவர்கள் கழுதைக்குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தமது மேலுடைகளை அதன்மேல் போட்டார்கள். அவர் அதின்மேல் உட்கார்ந்தார்.
Ау адус мэгэрушул ла Исус, шь-ау арункат хайнеле пе ел ши Исус а ынкэлекат пе ел.
8 அநேகர் தங்களுடைய மேலுடைகளை வழியிலே விரித்தார்கள். மற்றவர்கள் வயல்வெளியில் இருந்த மரக்கிளைகளை வெட்டிப் பரப்பினார்கள்.
Мулць оамень ышь аштерняу хайнеле пе друм, яр алций пресэрау рамурь пе каре ле тэясерэ де пе кымп.
9 அவருக்கு முன்னாக சென்றவர்களும், பின்னாகச் சென்றவர்களும் சத்தமிட்டு: “ஓசன்னா!” “கர்த்தரின் பெயரில் வருகிறவர் ஆசீர்வதிக்கப்படுவாராக!”
Чей че мерӂяу ынаинте ши чей че веняу дупэ Исус стригау: „Осана! Бинекувынтат есте Чел че вине ын Нумеле Домнулуй!
10 “வரப்போகும் நமது தந்தை தாவீதின் அரசு ஆசீர்வதிக்கப்படுவதாக!” “உன்னதங்களில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தார்கள்.
Бинекувынтатэ есте Ымпэрэция каре вине, Ымпэрэция пэринтелуй ностру Давид! Осана ын черуриле пряыналте!”
11 இயேசு எருசலேமுக்குள் சென்று, ஆலயத்தில் நுழைந்தார். அவர் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்துவிட்டு, நேரமாகி விட்டதால், பன்னிரண்டு பேர்களுடன் அங்கிருந்து பெத்தானியாவுக்குச் சென்றார்.
Исус а интрат ын Иерусалим ши С-а дус ын Темплу. Дупэ че С-а уйтат ла тоате лукруриле де жур ымпрежур, фииндкэ ера пе ынсерате, а плекат ла Бетания ку чей дойспрезече.
12 மறுநாள் அவர்கள் பெத்தானியாவை விட்டுப் புறப்படுகையில், இயேசு பசியாயிருந்தார்.
А доуа зи, дупэ че ау ешит дин Бетания, Исус а флэмынзит.
13 தூரத்திலே இலைகளுள்ள ஒரு அத்திமரத்தை அவர் கண்டு, அதில் பழங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று பார்க்கும்படிச் சென்றார். அவர் அதன் அருகே வந்தபோது, அதிலே இலைகளைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது. ஏனெனில், அது அத்திப்பழக் காலம் அல்ல.
А зэрит де департе ун смокин каре авя фрунзе ши а венит сэ вадэ поате ва гэси чева ын ел. С-а апропият де смокин, дар н-а гэсит декыт фрунзе, кэч ну ера ынкэ время смокинелор.
14 அப்பொழுது இயேசு அந்த மரத்தைப்பார்த்து, “இனி ஒருவரும், ஒருபோதும் உன்னிலிருந்து பழம் பறித்துச் சாப்பிடக்கூடாது” என்றார். அவர் அப்படிச் சொன்னதைச் சீடர்கள் கேட்டனர். (aiōn )
Атунч а луат кувынтул ши а зис смокинулуй: „Ын вяк сэ ну май мэнынче нимень род дин тине!” Ши ученичий ау аузит ачесте ворбе. (aiōn )
15 பிறகு அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்கள் விற்பவர்களையும், வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார். காசு மாற்றம் செய்பவர்களின் மேஜைகளையும், புறாக்கள் விற்பவர்களின் இருக்கைகளையும் புரட்டித்தள்ளினார்.
Ау ажунс ын Иерусалим ши Исус а интрат ын Темплу. А ынчепут сэ скоатэ афарэ пе чей че виндяу ши кумпэрау ын Темплу; а рэстурнат меселе скимбэторилор де бань ши скаунеле челор че виндяу порумбей.
16 ஆலய முற்றத்தின் வழியாக வியாபாரப் பொருட்களைக் கொண்டுசெல்வதற்கு அவர் ஒருவரையும் அனுமதிக்கவில்லை.
Ши ну лэса пе нимень сэ поарте вреун вас прин Темплу.
17 இயேசு அவர்களுக்கு போதித்து, “என்னுடைய வீடு, எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்று அழைக்கப்படும் என எழுதப்பட்டிருக்கிறதல்லவா? ஆனால், நீங்களோ அதைக் கள்வர்களின் குகையாக்குகிறீர்களே” என்று சொன்னார்.
Ши-й ынвэца ши зичя: „Оаре ну есте скрис: ‘КасаМя се ва кема о касэ де ругэчуне пентру тоате нямуриле’? Дар войаць фэкут дин еа о пештерэ де тылхарь.”
18 தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இதைக் கேட்டபோது, அவரைக் கொல்வதற்கு வழிதேடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்கள் அவருக்குப் பயந்தார்கள். ஏனெனில் கூடியிருந்த மக்கள் கூட்டம் அவருடைய போதனையை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தது.
Преоций чей май де сямэ ши кэртурарий, кынд ау аузит кувинтеле ачестя, кэутау кум сэ-Л омоаре, кэч се темяу де Ел, пентру кэ тот нородул ера уймит де ынвэцэтура Луй.
19 மாலை வேளையானபோது, இயேசுவும் சீடர்களும் நகரத்தைவிட்டு வெளியே சென்றார்கள்.
Орь де кыте орь се ынсера, Исус ешя дин четате.
20 மறுநாள் காலையில் அவர்கள் திரும்பி வரும்போது, அந்த அத்திமரம் வேரிலிருந்து காய்ந்து இருப்பதைச் சீடர்கள் கண்டார்கள்.
Диминяца, кынд тречяу пе лынгэ смокин, ученичий л-ау вэзут ускат дин рэдэчинь.
21 பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து இயேசுவிடம், “போதகரே, பாரும்! நீர் சபித்த அந்த அத்திமரம் பட்டுப்போயிற்று!” என்றான்.
Петру шь-а адус аминте де челе петрекуте ши а зис луй Исус: „Ынвэцэторуле, уйте кэ смокинул пе каре л-ай блестемат с-а ускат.”
22 அதற்கு இயேசு, “இறைவனில் விசுவாசம் கொண்டிருங்கள்.
Исус а луат кувынтул ши ле-а зис: „Авець крединцэ ын Думнезеу!
23 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இந்த மலையைப் பார்த்து, ‘நீ போய் கடலில் விழு’ என்று சொல்லி, தமது இருதயத்தில் சந்தேகப்படாமல், தாம் சொல்வது நடக்கும் என்று விசுவாசித்தால், அது அவர்களுக்குச் செய்யப்படும்.
Адевэратвэ спун кэ, дакэ ва зиче чинева мунтелуй ачестуя: ‘Ридикэ-те ши арункэ-те ын маре’ ши дакэ ну се ва ындои ын инима луй, чи ва креде кэ че зиче се ва фаче, ва авя лукрул черут.
24 ஆகையால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் மன்றாட்டில் நீங்கள் எதைக் கேட்கிறீர்களோ, அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள்; அப்பொழுது அது உங்களுடையதாகும்.
Де ачея вэ спун кэ, орьчелукру вець чере, кынд вэ ругаць, сэ кредець кэ л-аць ши примит, ши-л вець авя.
25 நீங்கள் நின்று மன்றாடும்போது, யாராவது உங்களுக்குப் பிழை செய்ததினால், அவருக்கு விரோதமாக உங்கள் மனதில் ஏதாவது கசப்பு வைத்திருந்தால், அவரை மன்னியுங்கள்; அப்பொழுது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுங்கூட உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பார்.
Ши, кынд стаць ын пичоаре де вэ ругаць, сэ ертацьорьче авець ымпотрива куйва, пентру ка ши Татэл востру, каре есте ын черурь, сэ вэ ерте грешелиле воастре.
26 அப்படி நீங்கள் மன்னியாவிட்டால், உங்கள் பரலோகப் பிதாவும் உங்கள் பாவங்களை மன்னிக்கமாட்டார்” என்றார்.
Дар дакэну ертаць, нич Татэл востру, каре есте ын черурь, ну вэ ва ерта грешелиле воастре.”
27 அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்து சேர்ந்தார்கள். இயேசு ஆலய முற்றங்களில் நடந்துகொண்டிருக்கையில், தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும், யூதரின் தலைவர்களும் அவரிடம் வந்தார்கள்.
С-ау дус дин ноу ын Иерусалим. Ши, пе кынд Се плимба Исус прин Темплу, ау венит ла Ел преоций чей май де сямэ, кэртурарий ши бэтрыний
28 அவர்கள் அவரிடம், “நீர் எந்த அதிகாரத்தினால் இந்தக் காரியங்களைச் செய்கிறீர்? இதைச் செய்வதற்கு உமக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” என்றார்கள்.
ши Й-ау зис: „Ку че путере фачь Ту ачесте лукрурь? Ши чине Ць-а дат путеря ачаста ка сэ ле фачь?”
29 அதற்கு இயேசு அவர்களிடம், “நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதிலை எனக்குச் சொல்லுங்கள். அப்பொழுது எந்த அதிகாரத்தைக் கொண்டு நான் இவற்றைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்வேன்.
Исус ле-а рэспунс: „Ам сэ вэ пун ши Еу о ынтребаре. Рэспундеци-Мь ла еа ши апой вэ вой спуне ши Еу ку че путере фак ачесте лукрурь.
30 யோவானின் திருமுழுக்கு பரலோகத்திலிருந்து வந்ததா அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? அதை எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.
Ботезул луй Иоан веня дин чер орь де ла оамень? Рэспундеци-Мь!”
31 அவர்கள் அதைக்குறித்து தங்களுக்குள்ளே கலந்து பேசிக்கொண்டார்கள், “அது பரலோகத்திலிருந்து வந்தது என்று நாம் சொல்வோமானால், ‘ஏன் நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை?’ என்று நம்மைக் கேட்பார்.
Ей ынсэ ворбяу астфел ынтре ей: „Дакэ рэспундем: ‘Дин чер’, ва зиче: ‘Дар де че ну л-аць крезут?’
32 அது மனிதரிடமிருந்து வந்தது என்று சொல்லவும், நமக்குப் பயமாயிருக்கிறது” என்றார்கள். ஏனெனில் எல்லோரும் யோவான் ஒரு இறைவாக்கினன் என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
Ши дакэ вом рэспунде: ‘Де ла оамень…’”, се темяу де нород, кэч тоць сокотяу кэ Иоан а фост ын адевэр ун пророк.
33 எனவே அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். இயேசு அதற்கு அவர்களிடம், “அப்படியானால், இந்த காரியங்களை எந்த அதிகாரத்தினால் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
Атунч ау рэспунс луй Исус: „Ну штим.” Ши Исус ле-а зис: „Нич Еу н-ам сэ вэ спун ку че путере фак ачесте лукрурь.”