< மாற்கு 10 >

1 பின்பு இயேசு அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, யூதேயா பகுதிக்கும், யோர்தானின் மறுபக்கத்திலுள்ள பகுதிகளுக்கும் சென்றார். மீண்டும் மக்கள் அவரிடம் பெருங்கூட்டமாய் வந்தார்கள். வழக்கம்போல் அவர் அவர்களுக்கு போதித்தார்.
ଜିସୁ ହେ ବାହାତାଂ ହାଲ୍‌ଜି ପା ଜିହୁଦାନିପ ଆରି ଜର୍ଦନ୍‌ ନାଗୁଡ଼୍‌ ନାସି ୱାତାନ୍‌, ଆରେ ମାନାୟ୍‌ ତାକେ ଆରେ ରଗ ହେଦାଂ ମେହା ଆତାନ୍‌, ହେୱାନ୍‌ ନିଜେ ନି ନିତି ତାଙ୍ଗ୍‌ ହେୱାରିଂ ହିକାଇ କିଦେଙ୍ଗ୍‌ ଲାଗାତାନ୍‌ ।
2 சில பரிசேயர் இயேசுவைச் சோதிக்கும்படி, அவரிடத்தில் வந்து, “ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்வது மோசேயின் சட்டத்திற்கு உகந்ததோ?” என்று கேட்டார்கள்.
ଇବେଣ୍ଡାଂ ପାରୁସିର୍‌ ତା ତାକେ ୱାଜ଼ି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ପରିକ୍ୟା କିଜ଼ି ୱେନ୍‌ବାତାର୍, ମା “ବିଦି ହିଦ୍‍ନାତା କି ରୱାନ୍‌ ତା ଡକ୍ରୁହିଂ ପିସ୍‌ସି ହେଦାଂ ଇନାକା ଆଣ୍ଡ୍ରେନ୍‌ ତାକେ ନ୍ୟାୟ୍‌ ମାନାତ୍‍କି?”
3 அதற்கு இயேசு, “உங்களுக்கு மோசே என்ன கட்டளை கொடுத்திருக்கிறார்?” என்று கேட்டார்.
ଜିସୁ ହେୱାରିଂ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ମସା ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇନା ବଲ୍‌ ହିତ୍‌ତାନ୍ନା?”
4 அதற்கு அவர்கள், “ஒருவன் விவாகரத்துப் பத்திரத்தை எழுதி அவளை விவாகரத்து செய்ய மோசே அனுமதி கொடுத்திருக்கிறார்” என்றார்கள்.
ହେୱାର୍‌ ଇଚାର୍‌, “ହେଲ ଆକି ଲେକି କିଜ଼ି କଗ୍‌ଲେଂ ପିହ୍‌ନି କାଜିଂ ମସା, ହେଲ ହିତାନ୍‌ନା ।”
5 அதற்கு இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உங்கள் இருதயம் கடினமாய் இருந்ததாலேயே, மோசே இந்தச் சட்டத்தை உங்களுக்கு எழுதிக்கொடுத்திருக்கிறான்” என்றார்.
ହେବେ ଜିସୁ ହେୱାରିଂ ଇଚାନ୍‌, “ମି ମାନ୍‌ ଆଟ୍‌ୱା ହୁଡ଼୍‌ଜି ମସା ମି କାଜିଂ ଇ ବଲ୍‌ ଲେକି କିତାନ୍‌ନ୍ନା ।
6 “ஆனால் படைப்பின் தொடக்கத்திலே இறைவன் அவர்களை ‘ஆணும் பெண்ணுமாகவே’ படைத்தார்.
ମାତର୍‌ ଉବ୍‌ଜାଣ୍‌ ଆତି ଆରମ୍‌ତାଂ ଇସ୍ୱର୍‌ ହେ ଲାକେ ହେୱାରିଂ ଆଣ୍ଡ୍ରେନ୍‌ ଆରେ କଗ୍‌ଲେ କିଜ଼ି ଉବ୍‌ଜାଣ୍‌ କିତାନ୍‌ ।”
7 ‘இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்;
“ଇଦାଂ କାଜିଂ ଆଣ୍ଡ୍ରେନ୍‌ ଜାର୍‌ ଆବା ଆୟାଂ ପିିହିନାନ୍, ଆରି ହେୱାର୍‌ ଏକ୍‌ ଆନାର୍‌,
8 இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.’ எனவே அவர்கள் இருவராய் இல்லாமல், இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.
ଆରେ ହେୱାର୍‌ ରିକାର୍‌ ଆକାୟ୍‌, ମାତର୍‌ ର ଗାଗାଡ଼୍‌ ଆନାର୍‌ ।
9 ஆகையால், இறைவன் ஒன்றிணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
ଲାଗିଂ ଇସ୍ୱର୍‌ ଇମ୍‌ଣାକାରିଂ ମେହାୟ୍‌ କିତାନ୍‌ନ୍ନା, ମାନାୟ୍‌ ହେଦାଂ ଏଡ଼ାୟ୍‍ କିମେର୍ ।”
10 மீண்டும் அவர்கள் வீட்டில் இருந்தபோது, சீடர்கள் இதைப்பற்றி இயேசுவிடம் கேட்டார்கள்.
ପାଚେ ଚେଲାର୍‌ ଇଞ୍ଜ ହେୱାନିଂ ଇ ବିସ୍ରେ ଆରେ ରଗ ୱେନ୍‌ବେଦେଂ ଲାଗାତାର୍‌ ।
11 அதற்கு அவர், “தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்கிற ஒருவன், அவளுக்கு விரோதமாக விபசாரம் செய்கிறான்.
ହେବେଣ୍ଡାଂ ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଇଚାନ୍‌, “ଇନେର୍‌ ଜାର୍‌ ଡକ୍ରିଂ ପିସ୍ତି ବିନ୍‌ନିକାତିଂ ବିବାଆତିସ୍, ହେୱାନ୍‌ ତା ବିରୁଦ୍‌ତ ଦାରି ଆନାନ୍‌ ।
12 ஒரு பெண் தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொருவனைத் திருமணம் செய்தால், அவள் விபசாரம் செய்கிறாள்” என்றார்.
ଆରେ, ଜଦି କଗ୍‌ଲେ ଜାର୍‌ ଡକ୍ରାଙ୍ଗ୍ ପିସ୍ତି ବିନ୍‍ଲୁଗାଂ ବିବା ଆତିସ୍‌, ଲାଗିଂ ହେଦେଲ୍‌ ଦାରି ।”
13 பிறகு சிலர் சிறுபிள்ளைகளின்மேல் இயேசு கைகளை வைக்கவேண்டும் என்று அவர்களை அவரிடம் கொண்டுவந்தார்கள். ஆனால் சீடரோ அவர்களைக் கண்டித்தார்கள்.
ହେୱାନ୍‌ ଇନେସ୍‌ ହିମ୍‌ଣାକାଂ ଡୁଜ଼ି ଆସିର୍ବାଦ୍‌ କିନାନ୍‌, ଇଦାଂ କାଜିଂ ହେୱାରିଂ ହେୱାନ୍‌ ତାକେ ତାତେଙ୍ଗ୍‌ ଲାଗାତାର୍‌, ମାତର୍‌ ଚେଲାର୍‌ ହେୱାରିଂ ଦାକା କିତାର୍‌ ।
14 இயேசு இதைக் கண்டபோது, கோபமடைந்தார். அவர் அவர்களிடம், “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது.
ଜିସୁ ହେଦାଂ ହୁଡ଼୍‌ଜି ରିସା ଆଜ଼ି ହେୱାରିଂ ଇଚାନ୍‌, “ହିମ୍‌ଣାକାଂ ନା ତାକେ ୱାଦେଙ୍ଗ୍ ହିଆଟ୍, ହେୱାରିଂ ମୁନାକିମାଟ୍, ଇଦାଂ କାଜିଂ ଇସ୍ୱର୍‌ତି ରାଜି ଇ ଲାକେ ମାନାୟାର୍‌ତି ।
15 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், சிறுபிள்ளையைப்போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன், அதற்குள் ஒருபோதும் செல்லமாட்டான்” என்றார்.
ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହାତ୍‌ପା ଇଞ୍ଜ୍‌ନାଙ୍ଗା, ଇନେର୍‌ ହିମ୍‌ଣାଂ ଲାକେ ଇସ୍ୱର୍‌ ରାଜିତ ଆୱିତିସ୍‌, ହେୱାନ୍‌ ଇନେସ୍‌ କିଜ଼ି ପା ସାର୍ଗେ ରାଜିନିପ ହେବେ ହଣ୍ଡେଙ୍ଗ୍‍ ଆଡୁନ୍‌ ।”
16 இயேசு அந்தப் பிள்ளைகளைத் தமது கைகளால் அணைத்துக்கொண்டு, தமது கைகளை அவர்கள்மேல் வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.
ଆରେ, ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଡ୍ରକ୍‌ଚି କେଇ ଇଡ଼୍‌ଜି ଆର୍ସିବାଦ୍‌ କିତାନ୍‌ ।
17 இயேசு அங்கிருந்து போய்க்கொண்டிருக்கையில், ஒருவன் அவரிடத்தில் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, “நல்ல போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios g166)
ଜିସୁ ହାନିହିଂ ହାଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଆରାମ୍‌ କିନି ୱେଡ଼ାଲିଂ ରକାନ୍‌ ହନ୍‍ଚି ୱାଜ଼ି ହେୱାନ୍‌ ଲାଗାଂ ମେଣ୍ଡାକୁନ୍ଦି କିଜ଼ି ହେୱାନିଂ ୱେନ୍‌ବାତାନ୍‌, “ଏ ସତ୍‌ ଗୁରୁ, ୱିଜ଼୍‌ୱି ଜିବୁନ୍‌ ପାୟା ଆଦେଂ ଆନ୍‌ ଇନାକା କିନାଙ୍ଗ୍‌?” (aiōnios g166)
18 அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கிறாய்? இறைவனைத்தவிர நல்லவர் ஒருவரும் இல்லை.
ହେବେଣ୍ଡାଂ ଜିସୁ ହେୱାନିଂ ଇଚାନ୍‌, “ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହାର୍‌ ଇଞ୍ଜି ଇନେକିଦେଂ ଇଞ୍ଜ୍‌ନାୟା?” ରୱାନ୍‌ ପିସ୍ତି, ଇଚିସ୍‌ “ଇସ୍ୱର୍‌ ତାଙ୍ଗ୍‌ ଇନେର୍‌ ହାର୍ଦାକାର୍‌ ହିଲୁର୍ ।”
19 ‘விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, மோசடி செய்யாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார்.
ବଲ୍‌କୁ ତ ଏନ୍‌ ପୁଚାୟ୍‍ନା, ନାର୍‌ତିଂ ଅହ୍‌ମାଟ୍‌, ଦାରି କିମାଟ୍, କୁଟ୍‌ କିମାଟ୍‌, ଜାର୍‌ ଆବା ଆୟାକାଂ ୱାରି କିୟାଟ୍‌ ।
20 அதற்கு அவன், “போதகரே, நான் சிறுவனாயிருந்த காலம் முதல் இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்” என்றான்.
ହେୱାନ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାନ୍‌, “ଏ ଗୁରୁ, ଇଦାଂ ୱିଜ଼ୁ ନିୟମ୍‌ ହାରୁୱେଡ଼ାଙ୍ଗ୍‌ତାଂ ଆନ୍‌ ବେଣ୍ଡିୟା ୱେଡ଼ାତାଙ୍ଗ୍ ମାନି କିଜ଼ି ୱାନାଙ୍ଗା ।”
21 இயேசு அவனை நோக்கிப்பார்த்து, அவனிடத்தில் அன்புகொண்டு, “ஒரு காரியம் மட்டும் உன்னிடத்தில் குறைவுபடுகிறது. நீ போய், உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
ଜିସୁ ହେୱାନ୍‌ କାଜିଂ ରବେ ହୁଡ଼୍‌ଜି ହେୱାନିଂ ଜିଉନଜ଼ି ଆରେ ଇଚାନ୍‌, “ନିନ୍ଦାଂ ର ବିସ୍ରେ ଉଣା ମାନାତ୍‌, ଏନ୍‌ ହାଲ୍‌ଜି ନିଜେତି ସବୁ ପ୍ରସି ଅର୍କିତ୍‌ ତାରିଙ୍ଗ୍‌ ଦାନ୍‌ ହିୟା, ଆରେ ଏନ୍‌ ସାର୍ଗେନି ଦାନ୍‌ ପାୟା ଆନାୟ୍‌; ଆରେ ୱାଜ଼ି ନା ପାଚେ ପାଚେ ୱା ।”
22 அப்பொழுது அவனுடைய முகம் வாடியது. அவன் துக்கத்துடன் திரும்பிப்போனான், ஏனெனில் அவன் மிகுந்த செல்வமுடையவனாக இருந்தான்.
ମାତର୍‌ ଇ କାତାତ ତା ମୁମ୍‌ ରାତ୍‌ତାନ୍ ଆରେ ହେୱାନ୍‌ ଦୁକ୍‌ ଆଜ଼ି ହାଚାନ୍‌, ଇଚିସ୍‌ ହେୱାନ୍ତି ବେସି ଦାନ୍‌ ମାଚାତ୍‌ ।
23 இயேசு சுற்றிப்பார்த்து, தமது சீடர்களிடம், “ஒரு செல்வந்தன் இறைவனின் அரசுக்குள் போவது எவ்வளவு கடினமானது!” என்றார்.
ପାଚେ ଜିସୁ ଚାରିବେଣ୍‌ତାଂ ହୁଡ଼୍‌ଜି ନିଜେତି ଚେଲାରିଂ ଇଚାନ୍‌, “ଇନେର୍‌ତି ଦାନ୍‌ ମାନାତ୍‌, ହେୱାର୍‌ କେତେକ୍‌ କସ୍ଟତାଂ ଇସ୍ୱର୍‌ ରାଜିତ ହାନାର୍‌ ।”
24 அவருடைய வார்த்தைகளைக்குறித்து சீடர்கள் வியப்படைந்தார்கள். ஆனால் இயேசு மீண்டும் அவர்களிடம், “பிள்ளைகளே, செல்வந்தர்கள் இறைவனுடைய அரசிற்குள் போவது எவ்வளவு கடினமானது!
ଜିସୁତି କାତା ୱେନ୍‌ଞ୍ଜି ଚେଲାର୍‌ କାବା ଆତାର୍‌, ମାତର୍‌ ଜିସୁ ଆରେ ରଗ ହେୱେରିଂ ଇଚାନ୍‌, “ବପାର୍‌ ଇସ୍ୱର୍‌ ରାଜିତ ହାନାକା କେତେକ୍‌ କସ୍ଟ!”
25 ஒரு செல்வந்தன் இறைவனுடைய அரசிற்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது எளிதாயிருக்கும்” என்றார்.
ଇସ୍ୱର୍‌ ରାଜିତ ମାଜାନିଂ ହାଣାକା ଇଚିସ୍‌ ହୁଜା କାଣାତ ଉଟ୍‌ ହାଣାକା ଆଡ଼୍‌ୱା, ର ମାଜାନ୍‌ ସାର୍ଗେ ରାଜିତ ହାଣାକା ବେସି କସ୍ଟ ।
26 சீடர்களோ, மேலும் அதிக வியப்படைந்து, “அப்படியானால், யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
ଇଦାଂ ହେୱାର୍‌ ବେସି କାବା ଆଜ଼ି ହେୱାର୍‌ ହେୱାର୍‌ନେ ଇନ୍‌ବା ଆତାର୍‌, “ଇଚିସ୍‌ ଇନେର୍‌ ମୁକ୍ତି ପାୟା ଆନାନ୍‌?”
27 இயேசு அவர்களை நோக்கிப்பார்த்து, “மனிதனால் இது முடியாததுதான்; ஆனால் இறைவனால் இது முடியாதது அல்ல. இறைவனால் எல்லாவற்றையும் செய்யமுடியும்” என்றார்.
ଜିସୁ ହେୱାରିଂ ସିଦା ହୁଡ଼୍‌ଜି ଇଚାନ୍‌, “ଇଦାଂ ମାନାୟ୍‌ତିଂ କିୟା ଆୱାକା, ମାତର୍‌ ଇସ୍ୱର୍‌ତି ଆକାୟ୍‌; ଇଚିସ୍‌ ଇସ୍ୱର୍‌ତି ୱିଜ଼ୁ ଆନାତ୍‌ ।”
28 அப்பொழுது பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவந்தோமே” என்றான்.
ପିତର୍‌ ହେୱାନିଂ ଇଚାନ୍‌, “ହୁଡ଼ାଟ୍‌, ଆପେଂ ୱିଜ଼େ ପିସ୍‌ସି ନି ପାଚେ ପାଚେ ୱାନାପା ।”
29 அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எனக்காகவும் நற்செய்திக்காகவும் யாராவது தனது வீட்டையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தகப்பனையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால்,
ଜିସୁ ଇଚାନ୍‌, “ଆନ୍‌ ମିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ହାତ୍‌ପା ୱେଚ୍‌ଚାନାଙ୍ଗା, ଇମ୍‌ଣାକାନ୍‌ ନା ନେକ୍ରିକାବୁର୍‌ କାଜିଂ ଇଲ୍‌ କି ଟଣ୍ଡେନ୍‌ କି ତଣ୍‌ଦେଲ୍‌ କି ଆୟା କି ଆବା କି ହିମ୍‌ଣାୱାକ୍‌ଡ଼ା କି ବୁମି ପିସ୍ତାନ୍‍ନା ।
30 அவன் இவ்வாழ்வில் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, பிள்ளைகளையோ, வயல்களையோ விட்டிருந்தால் நூறுமடங்காகப் பெற்றுக்கொள்ளாமல் போகமாட்டான். அத்துடன் துன்புறுத்தல்களும் அவனுக்கு ஏற்படும் வரப்போகும் வாழ்விலோ அவன் நித்திய வாழ்வைப் பெறுவான். (aiōn g165, aiōnios g166)
ଆରେ ଅଙ୍ଗୟ୍‌ ଇ କାଡ଼୍‌ଦ ଦୁକ୍‌ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ପାଞ୍ଚକଡ଼ି ଗୁଣ୍‌ତ ଇଲ୍‌, ଟଣ୍ଡେନ୍‌, ତଣ୍‌ଦେଲ୍‌, ଆୟା, ହିମ୍‌ଣାୱାକ୍‌ଡ଼ା ଆରେ ବୁମି, ଆରେ ପାଚେନି ଜୁଗ୍‌ତ ୱିଜ଼୍‌ୱି ଜିବୁନ୍‌ ପାୟା ଆଉନ୍‌, ଏଲେଙ୍ଗ୍‌ ବାର୍ତି ମାନାୟ୍‌ ଇନେର୍‌ ହିଲୁର୍‌ । (aiōn g165, aiōnios g166)
31 ஆனால் முதலாவதாய் இருக்கும் அநேகர், கடைசியாகவும். கடைசியாய் இருக்கும் அநேகர் முதலாவதாய் இருப்பார்கள்” என்றார்.
ମାତର୍‌ ଆଗେ ମାନି ହେନି ମାନାୟାର୍‌ ପାଚେ ଆନାର୍‌ ଆରି ପାଚେ ମାନି ହେନି ମାନାୟାର୍‌ ହିଗ୍‌ଦ ଆନାର୍‌ ।”
32 அவர்கள் எருசலேமுக்குப் போய்க்கொண்டிருக்கும் வழியில், இயேசு அவர்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தார்; சீடர்கள் வியப்படைந்தார்கள். அவரைப் பின்பற்றிச் சென்ற மற்றவர்களோ பயமடைந்திருந்தார்கள். மீண்டும் அவர் பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய், தமக்கு நிகழவிருப்பதைக் குறித்து அவர்களுக்குச் சொன்னார்.
ହେୱାର୍‌ ଜିରୁସାଲମ୍‌ ତାକେ ହାନିୱାଡ଼ାଂ ହାସ୍‌ଦ ମାଚାର୍‌ ଆରି ଜିସୁ ହେୱାର୍‌ ଆଗେ ଆଗେ ହାଲ୍‌ଜି ମାଚାନ୍‌, ଆରି, ଚେଲାର୍‌ କାବା ଆରି ପାଚେ ମାଚି ଲଗାଂ ପାଣ୍ଡ୍ରୁ ଆଜ଼ି ମାଚାର୍‌ । ଇଦାଂ କାଜିଂ ହେୱାନ୍‌ ଆରେ ବାରଜାଣାତିଂ ବିନେ କିଜ଼ି, ହେୱାନ୍‌ ବିସ୍ରେ ଇନା ଇନାକା ଜିରୁସାଲମ୍‌ ଗିଟା ଆଦେଂ ହାନାତା, ହେ ୱିଜ଼େ ହେୱେରିଂ ଜାଣାଇ କିଦେଙ୍ଗ୍‌ ଲାଗାଆତାନ୍‌ ।
33 “இதோ, நாம் எருசலேமுக்குப் போகிறோம். அங்கே மானிடமகனாகிய நான், தலைமை ஆசாரியரிடத்திலும் மோசேயின் சட்ட ஆசிரியர்களிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவேன். அவர்கள் என்னை மரண தண்டனைக்கு உட்படுத்துவார்கள்.
ହେୱେନ୍‌ ଇଚାନ୍‌, “ହୁଡ଼ାଟ୍‌, ଆପେଂ ଜିରୁସାଲମ୍‌ତ ହାନାପା; ମାନାୟ୍‌ ମାଜ଼ି ମୁଡ଼୍‌ ମାପ୍ରୁ ହେବା କିନାକାନ୍‌ ଆରେ ଦରମ୍‌ ଗୁରୁର୍‌ କେଇଦ ହେଲାୟ୍‌ ଆନାନ୍‌, ଆରେ ହେୱାର୍‌ ହେୱେନିଂ ହାକିଦଣ୍ଡ ହିଜ଼ି ପାର୍ତିକିୱି ଜିହୁଦିର୍‌ କେଇଦ ହିନାର୍‌ ।
34 என்னை ஏளனம் செய்து, என்மேல் துப்பி, சவுக்கால் அடித்து, கொலை செய்யும்படி, யூதரல்லாதவர்களிடம் ஒப்புக்கொடுப்பார்கள். ஆகிலும், மூன்று நாட்களுக்குப்பின்பு, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்றார்.
ଆରେ ହେୱାର୍‌ ହେୱେନିଂ କିଜାୟ୍‌ କିନାର୍‌, ହେୱାନ୍‌ ଜପି ଏୱିଡ଼ିଂ ଚୁପ୍‌ନାର୍‌, ହେୱେନିଂ କରଡା ଇଡ଼ିନାର୍‌ ଆରି ପାଗ୍‍ନାର୍‌, ଆରେ ତିନି ଦିନ୍‌ ପାଚେ ହେୱାନ୍‌ ଆରେ ଜିବୁନ୍‌ ଆଜ଼ି ନିଙ୍ଗ୍‌ନାନ୍‌ ।”
35 அப்பொழுது செபெதேயுவின் மகன்களான யாக்கோபும், யோவானும் இயேசுவினிடம் வந்து, “போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம்” என்றார்கள்.
ପାଚେ ଜେବ୍‌ଦିତି ମାଜ଼ି ଜାକୁବ୍‌ ଆରି ଜହନ୍‌ ଜିସୁ ତାକେ ୱାଜ଼ି ଇଚାର୍‌, “ଏ ଗୁରୁ, ମା ଇଚା ଜେ, ଆପେଂ ନିବେଣ୍ଡାଂ ଇନାକାପା ଏନ୍ତାନାପ୍‌, ହେଦାଂ ମା କାଜିଂ ଏନ୍‌ କିୟା ।”
36 அதற்கு இயேசு, “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்” என்று கேட்டார்.
ହେବେଣ୍ଡାଂ ହେୱାନ୍‌ ହେୱେରିଂ ୱେନ୍‌ବାତାନ୍‌, “ଆନ୍‌ ମି କାଜିଂ ଇନାକା କିନାଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜି ଏପେଙ୍ଗ୍‌ ମାନ୍‌ କିନାଦେରା?”
37 அவர்கள் அதற்குப் பதிலாக, “உமது மகிமையில் எங்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதியும். அதையே விரும்புகிறோம்” என்றார்கள்.
ହେୱେର୍‌ ହେୱେନିଂ ଇଚାର୍‌, “ଜାର୍‌ ଜାଜ୍‌ମାଲ୍‌ ପାୟା ଆତିସ୍‌ ଇନେସ୍‌ ମା ତାଙ୍ଗ୍‌ ରକାନ୍‌ ନିଙ୍ଗ୍‌ ତିନି କଚଣ୍‌ତ ରକାନ୍‌ ଡେବା କଚଣ୍‌ କୁଚ୍‌ଚାନ୍‌ ମାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇ ବର୍‌ ହିଦା ।”
38 அதற்கு இயேசு, “நீங்கள் கேட்பது என்ன என்று நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து உங்களால் குடிக்க முடியுமா? அல்லது எனக்கிருக்கும் திருமுழுக்கில் உங்களால் பங்குகொள்ள முடியுமா?” என்று கேட்டார்.
ମାତର୍‌ ଜିସୁ ହେୱେରିଂ ଇଚାନ୍‌, “ଏପେଙ୍ଗ୍‌ ଇନାକା ଏନ୍‌ନାଦେରା, ହେଦାଂ ପୁନୁଦେରା । ଆନ୍‌ ଇମ୍‌ଣି ଗିଲାସ୍‌ତ ଉଣ୍‌ଜି ମାନାଙ୍ଗ୍‌, ହେବେ କି ଏପେଙ୍ଗ୍‌ ଉଣ୍ଡେଙ୍ଗ୍‌ ଆଡ୍‌ନାଦେର୍‌ କି? ଇଚିସ୍‌ ଆନ୍‌ ଇମ୍‌ଣି ବାପ୍ତିସିମ୍‌ତ ବାପ୍ତିସିମ୍‌ ଆନାଙ୍ଗା, ହେବେ କି ଏପେଙ୍ଗ୍‌ ବାପ୍ତିସିମ୍‌ ଆଦେଂ ଆଡ୍‌ନାଦେର୍‌ କି?”
39 அதற்கு அவர்கள், “எங்களால் முடியும்” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களிடம், “உண்மையாய் நான் குடிக்கும் பாத்திரத்திலிருந்து நீங்கள் குடிப்பீர்கள், எனக்கிருக்கும் திருமுழுக்கை நீங்களும் பெறுவீர்கள்.
ହେୱାର୍‌ ହେୱେନିଂ ଇଚାର୍‌, “ଆଡ୍‌ନାପ୍‌ ।” ଜିସୁ ହେୱେରିଂ ଇଚାନ୍‌, ଆନ୍‌ ଇମ୍‌ଣି ଗିଲାସ୍‌ତ ଉଣାଙ୍ଗା, ଏପେଙ୍ଗ୍‌ ହେ ଗିଲାସ୍‌ତ ଉଣାଦେର୍‌, ଆରେ ଆନ୍‌ ଇମ୍‌ଣି ବାପ୍ତିସିମ୍‌ତ ବାପ୍ତିସିମ୍‌ ଅନାଙ୍ଗ୍‌, ଏପେଙ୍ଗ୍‌ ହେବେ ବାପ୍ତିସିମ୍‌ ଆନାଦେର୍‌;
40 ஆனால் எனது வலதுபக்கத்தில் உட்காருவதையோ, இடதுபக்கத்தில் உட்காருவதையோ அனுமதிப்பது எனக்குரியது அல்ல. இந்த இடங்கள் எவர்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ, அவர்களுக்கே உரியவை” என்றார்.
ମାତର୍‌ ବୁଜ୍‌ଣି ବାଗାଙ୍ଗ୍‌ କି ଡେବାବାଗାଙ୍ଗ୍ କୁଚ୍‌ଚେଂ ହିନାକା ନା ଆଦିକାର୍‌ ବିସ୍ରେ ହିଲୁତ୍‌, ଇସ୍ୱର୍‌ ଆବା ଇମ୍‌ଣାକାର୍‌ କାଜିଂ ବାହା ରଚି କିତାନ୍‌ନ୍ନା, ହେୱାର୍‌ କୁଚ୍‌ନାର୍‌ ।
41 இதைக் கேட்ட மற்ற பத்துப்பேரும், யாக்கோபின்மேலும் யோவானின்மேலும் கோபமடைந்தார்கள்.
ବିନ୍‌ ଦାସ୍‌ ଜାଣ୍‌ ଇଦାଂ ୱେନ୍‌ଞ୍ଜି ଜାକୁବ୍‌ ଆରେ ଜହନ୍‌ ଜପି ରିସା ଆଦେଂ ଲାଗାତାର୍‌ ।
42 இயேசு சீடர்களை ஒன்றாய்க் கூப்பிட்டு, “யூதரல்லாதவர்களின் ஆளுநர்களாய் கருதப்படுகிறவர்கள், அவர்களை அடக்கி ஆளுகிறார்கள் என்றும், அவர்களுடைய உயர் அதிகாரிகள் அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
ହେବେତାଂ ଜିସୁ ହେୱେରିଂ ରବେ କୁକ୍‌ଚି ଇଚାନ୍‌, “ଇମ୍‌ଣାକାର୍‌ ପାର୍ତିକିୱି ଜିହୁଦିରିଂ ରାଜ୍‌ କିନାକାର୍‌ ଲାକେ, ହେୱେର୍‌ ହେୱାର୍‌ ଜପି ରାଜି କିନାନ୍‌ ଆରି ପାର୍ତିକିୱି ଜିହୁଦିରିଂ ଗାଜାଲଗୁ ହେୱାର୍‌ ଜପି କାମାୟ୍‌କି କିତାର୍‌, ଇଦାଂ ଏପେଙ୍ଗ୍‌ ପୁନାଟ୍‌ ।
43 ஆனால் உங்களுக்குள் அப்படியிருக்கக் கூடாது. உங்கள் மத்தியில் பெரியவனாய் இருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் உங்களுக்குப் பணிவிடை செய்கிறவனாக இருக்கவேண்டும்.
ମାତର୍‌ ମି ବିତ୍ରେ ହେ ଲାକେ ଆକାୟ୍‌, ମାତର୍‌ ମି ବିତ୍ରେ ଇନେର୍‌ ଗାଜାକାର୍‌ ଆଦେଂ ଇଚା କିତାର୍‌, ହେୱାନ୍‌ ମି କାଜିଂ ହେବା କିନାକାନ୍‌ ଆୟେନ୍‌;
44 முதன்மையாயிருக்க விரும்புகிறவன் யாரோ, அவன் எல்லோருக்கும் அடிமையாயிருக்க வேண்டும்.
ଆରେ ମି ବିତ୍ରେ ଇନେର୍‌ ଗାଜାକାନ୍‌ ଆଦେଂ ଇଚା କିନାନ୍‌, ହେୱାନ୍‌ ୱିଜ଼ାରିଂ ହଲ୍ୟା ଆୟେନ୍‌ ।
45 மானிடமகனாகிய நானும் பணிவிடையைப் பெற்றுக்கொள்ள அல்ல, பணிவிடை செய்யவே வந்தேன்; அநேகரை மீட்கும்படி என் உயிரைக் கொடுக்கவும் வந்தேன்” என்றார்.
ଇନେକିଦେଂକି ମାନାୟ୍‌ ମାଜ଼ି ପା ହେବା ପାୟା ଆଦେଂ ୱାୱାତାଂନା, ମତର୍‌ ହେବା କିଦେଙ୍ଗ୍‌ ଆରି ହେନି କାଜିଂ ମୁକ୍‌ଡ଼ାୟ୍‌ କିନି ମୁଲ୍‌ଲାକେ ଜିବୁନ୍‌ ହିଦେଂ ୱାତାନ୍‌ନା ।”
46 அதற்குப் பின்பு இயேசுவும், அவருடைய சீடர்களும் எரிகோவுக்கு வந்துசேர்ந்ததும், அவர்களும், பெருங்கூட்டமாய் இருந்த மக்களும், பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது திமேயுவின் மகனான பர்த்திமேயு என்னும் ஒரு குருடன், வீதியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
ପାଚେ ହେୱାର୍‌ ଜିରିହ ତାକେ ଏକାତାର୍‌, ଆରେ ଜିସୁ ଚେଲାହିର୍‌ ଲାହାଙ୍ଗ୍‌ ଆରି ବେସି ମାନାୟ୍‌ ଲାହାଙ୍ଗ୍‌ ଜିରିହତ ପିସ୍ତି ହାନିୱାଡ଼ାଂ ଟିମାୟର୍‌ ମେହି ବାର୍‌ର୍ଟିମୟ୍‌ ତର୍‌ ରକାନ୍‌ କାଣା ବିକାରି ହାଜ଼ି ଗୁଟିତ କୁଚ୍‌ଚି ମାଚାନ୍‌ ।
47 நாசரேத்தைச் சேர்ந்த இயேசு வருகிறார் என அவன் கேள்விப்பட்டபோது, “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று சத்தமாய்க் கூப்பிடத் தொடங்கினான்.
ହେୱାନ୍‌ ଜେ ନାଜରିତିୟନି ଜିସୁ, ଇଦାଂ ୱେନ୍‌ଞ୍ଜି ହେୱାନ୍‌ ଗାଜା ୱେଇଦାଂ ଇଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଲାଗାତାନ୍‌, “ଏ ଦାଉଦ୍‌ ମାଜ଼ି ଜିସୁ, ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଦୟା କିଦା ।”
48 பலர் அவனைக் கண்டித்து, சத்தமிட வேண்டாம் என அவனுக்குச் சொன்னார்கள். ஆனால் அவனோ, “தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்!” என்று இன்னும் அதிகமாய் சத்தமிட்டுக் கூப்பிட்டான்.
ଇବେତାଂ ବେସି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଆଲା ଆମା ଇଞ୍ଜି ଗଡ଼୍‌କିଦେଂ ଲାଗାତାର୍‌, “ମାତର୍‌ ହେୱାନ୍‌ ଆରି ଆଦିକ୍‌ ଗାଜା ୱେଇଦାଂ ଇଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଲାଗାତାନ୍‌, ଏ ଦାଉଦ୍‌ ମେହି, ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଦୟା କିଦା ।”
49 இயேசு அவ்விடத்தில் நின்று, “அவனைக் கூப்பிடுங்கள்” என்றார். அவர்கள் அந்தக் குருடனைக் கூப்பிட்டு, “தைரியமாய் இரு! எழுந்து நில்! இயேசு உன்னைக் கூப்பிடுகிறார்” என்றார்கள்.
ହେବେତାଂ ଜିସୁ ନିଲ୍‌ଚି ୱେଚ୍‌ଚାନ୍‌, “ହେୱାନିଂ ହିର୍‌ବାଟ୍ ।” ହେୱାର୍‌ ହେ କାଣ୍‌କୁ ହୁଡ଼୍‌ୱି ମାନାୟ୍‌ତିଂ ହିର୍‌ବିସ୍ ଇଚାନ୍‌, “ସାସ୍‌ ଆ, ନିଲା, ନିଙ୍ଗେଙ୍ଗ୍‌ କୁକ୍ତାନାନା ।”
50 அவன் தனது மேலுடையை எறிந்துவிட்டு, துள்ளி எழுந்து இயேசுவிடம் வந்தான்.
ହେବେତାଂ ହେୱାନ୍‌ ନିଲ୍‌ଚି ପା ହେନ୍ଦ୍ରା ତୁହିଜି ଜିସୁ ତାକେ ୱାତାନ୍ ।
51 இயேசு அவனிடம், “நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று விரும்புகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அந்தக் குருடன், “ஆண்டவரே, நான் பார்க்க விரும்புகிறேன்” என்றான்.
ଜିସୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଉତର୍‌ ହିତାନ୍‌, “ଆନ୍‌ ନି କାଜିଂ ଇନାକା କିନାଙ୍ଗ୍‌ ଇଞ୍ଜି ଏନ୍‌ ଇନାକା ଇଚା କିନାୟା?” ହେ କାଣା ମାନାୟ୍‌ ହେୱାନିଂ ଇଚାନ୍‌, “ଏ ଗୁରୁ, ଆନ୍‌ ଇନେସ୍‌ ହୁଡ଼୍‌ଦେଂ ଆଡ୍‌ନାଂ ।”
52 அப்பொழுது இயேசு, “நீ போ. உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியது” என்றார். உடனே அவன் பார்வையைப் பெற்று, அவ்வழியிலேயே இயேசுவைப் பின்பற்றிச் சென்றான்.
ଜିସୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଚାନ୍‌, “ହାଲା,” ନି ପାର୍ତି କିନାକା ନିଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଉଜ୍‌ କିତ୍‌ତାତ୍‌ନ୍ନା । ହେ ଦାପ୍ରେ ହେୱାନ୍‌ ହୁଡ଼୍‌ତାନ୍ ଆରେ ହାଜ଼ିତିଂ ହେୱାନ୍‌ ପାଚେ ପାଚେ ହାଚାନ୍‌ ।

< மாற்கு 10 >