< மாற்கு 1 >
1 இறைவனுடைய மகன் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.
ઈશ્વરપુત્રસ્ય યીશુખ્રીષ્ટસ્ય સુસંવાદારમ્ભઃ|
2 இது ஏசாயா என்ற இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது: “நான் என்னுடைய தூதனை உமக்கு முன்பாக அனுப்புவேன்; அவன் உமது வழியை ஆயத்தப்படுத்துவான்”
ભવિષ્યદ્વાદિનાં ગ્રન્થેષુ લિપિરિત્થમાસ્તે, પશ્ય સ્વકીયદૂતન્તુ તવાગ્રે પ્રેષયામ્યહમ્| ગત્વા ત્વદીયપન્થાનં સ હિ પરિષ્કરિષ્યતિ|
3 “‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்காகப் பாதைகளை நேராக்குங்கள்’ என்று ஒருவனுடைய குரல் பாலைவனத்திலே சத்தமிட்டது.”
"પરમેશસ્ય પન્થાનં પરિષ્કુરુત સર્વ્વતઃ| તસ્ય રાજપથઞ્ચૈવ સમાનં કુરુતાધુના| " ઇત્યેતત્ પ્રાન્તરે વાક્યં વદતઃ કસ્યચિદ્રવઃ||
4 அவ்வாறே யோவான் ஸ்நானகன் பாலைவனப் பகுதியில் வந்து, திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான்.
સએવ યોહન્ પ્રાન્તરે મજ્જિતવાન્ તથા પાપમાર્જનનિમિત્તં મનોવ્યાવર્ત્તકમજ્જનસ્ય કથાઞ્ચ પ્રચારિતવાન્|
5 யூதேயா மாகாணத்தின் எல்லா நாட்டுப்புறங்களிலும் எருசலேம் நகரத்திலுமிருந்து எல்லாரும் அவனிடம் சென்றார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்குப் பெற்றார்கள்.
તતો યિહૂદાદેશયિરૂશાલમ્નગરનિવાસિનઃ સર્વ્વે લોકા બહિ ર્ભૂત્વા તસ્ય સમીપમાગત્ય સ્વાનિ સ્વાનિ પાપાન્યઙ્ગીકૃત્ય યર્દ્દનનદ્યાં તેન મજ્જિતા બભૂવુઃ|
6 யோவானின் உடைகள் ஒட்டக முடியினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது.
અસ્ય યોહનઃ પરિધેયાનિ ક્રમેલકલોમજાનિ, તસ્ય કટિબન્ધનં ચર્મ્મજાતમ્, તસ્ય ભક્ષ્યાણિ ચ શૂકકીટા વન્યમધૂનિ ચાસન્|
7 அவன் அறிவித்த செய்தி என்னவென்றால், “என்னைப் பார்க்கிலும் அதிக வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். நானோ அவருடைய பாதரட்சைகளின் வாரையும் குனிந்து அவிழ்ப்பதற்குத் தகுதியற்றவன்.
સ પ્રચારયન્ કથયાઞ્ચક્રે, અહં નમ્રીભૂય યસ્ય પાદુકાબન્ધનં મોચયિતુમપિ ન યોગ્યોસ્મિ, તાદૃશો મત્તો ગુરુતર એકઃ પુરુષો મત્પશ્ચાદાગચ્છતિ|
8 நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுப்பார்.”
અહં યુષ્માન્ જલે મજ્જિતવાન્ કિન્તુ સ પવિત્ર આત્માનિ સંમજ્જયિષ્યતિ|
9 அக்காலத்தில் இயேசு கலிலேயா மாகாணத்தின் நாசரேத் பட்டணத்திலிருந்து வந்து, யோர்தான் ஆற்றிலே யோவானால் திருமுழுக்கு பெற்றார்.
અપરઞ્ચ તસ્મિન્નેવ કાલે ગાલીલ્પ્રદેશસ્ય નાસરદ્ગ્રામાદ્ યીશુરાગત્ય યોહના યર્દ્દનનદ્યાં મજ્જિતોઽભૂત્|
10 இயேசு தண்ணீரிலிருந்து கரையேறிய உடனே, வானம் திறக்கப்பட்டதையும் பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் அவர் கண்டார்.
સ જલાદુત્થિતમાત્રો મેઘદ્વારં મુક્તં કપોતવત્ સ્વસ્યોપરિ અવરોહન્તમાત્માનઞ્ચ દૃષ્ટવાન્|
11 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு குரல்: “நீர் என்னுடைய அன்பு மகன்; நான் உம்மில் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்” என்று ஒலித்தது.
ત્વં મમ પ્રિયઃ પુત્રસ્ત્વય્યેવ મમમહાસન્તોષ ઇયમાકાશીયા વાણી બભૂવ|
12 உடனே ஆவியானவர் இயேசுவைப் பாலைவனத்துக்கு அனுப்பினார்.
તસ્મિન્ કાલે આત્મા તં પ્રાન્તરમધ્યં નિનાય|
13 இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்கள் இருந்து சாத்தானால் சோதிக்கப்பட்டார். அங்கு அவர் காட்டு மிருகங்களுடன் இருந்தார்; இறைவனுடைய தூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
અથ સ ચત્વારિંશદ્દિનાનિ તસ્મિન્ સ્થાને વન્યપશુભિઃ સહ તિષ્ઠન્ શૈતાના પરીક્ષિતઃ; પશ્ચાત્ સ્વર્ગીયદૂતાસ્તં સિષેવિરે|
14 யோவான் சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, இயேசு இறைவனுடைய நற்செய்தியை அறிவித்துக்கொண்டு கலிலேயாவுக்கு வந்து,
અનન્તરં યોહનિ બન્ધનાલયે બદ્ધે સતિ યીશુ ર્ગાલીલ્પ્રદેશમાગત્ય ઈશ્વરરાજ્યસ્ય સુસંવાદં પ્રચારયન્ કથયામાસ,
15 “காலம் நிறைவேறிவிட்டது, இறைவனுடைய அரசு சமீபித்திருக்கிறது. மனந்திரும்பி நற்செய்தியை விசுவாசியுங்கள்” என்றார்.
કાલઃ સમ્પૂર્ણ ઈશ્વરરાજ્યઞ્ચ સમીપમાગતં; અતોહેતો ર્યૂયં મનાંસિ વ્યાવર્ત્તયધ્વં સુસંવાદે ચ વિશ્વાસિત|
16 இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது சீமோனையும் அவனது சகோதரன் அந்திரேயாவையும் கண்டார்; மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
તદનન્તરં સ ગાલીલીયસમુદ્રસ્ય તીરે ગચ્છન્ શિમોન્ તસ્ય ભ્રાતા અન્દ્રિયનામા ચ ઇમૌ દ્વૌ જનૌ મત્સ્યધારિણૌ સાગરમધ્યે જાલં પ્રક્ષિપન્તૌ દૃષ્ટ્વા તાવવદત્,
17 இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார்.
યુવાં મમ પશ્ચાદાગચ્છતં, યુવામહં મનુષ્યધારિણૌ કરિષ્યામિ|
18 உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள்.
તતસ્તૌ તત્ક્ષણમેવ જાલાનિ પરિત્યજ્ય તસ્ય પશ્ચાત્ જગ્મતુઃ|
19 இயேசு சற்று தூரம் போனபின்பு, செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார்; அவர்கள் ஒரு படகிலிருந்து தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
તતઃ પરં તત્સ્થાનાત્ કિઞ્ચિદ્ દૂરં ગત્વા સ સિવદીપુત્રયાકૂબ્ તદ્ભ્રાતૃયોહન્ ચ ઇમૌ નૌકાયાં જાલાનાં જીર્ણમુદ્ધારયન્તૌ દૃષ્ટ્વા તાવાહૂયત્|
20 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார்; அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள்.
તતસ્તૌ નૌકાયાં વેતનભુગ્ભિઃ સહિતં સ્વપિતરં વિહાય તત્પશ્ચાદીયતુઃ|
21 பின்பு அவர்கள் கப்பர்நகூம் நகரத்திற்குச் சென்றார்கள்; ஓய்வுநாளில் இயேசு யூத ஜெப ஆலயத்திற்குச் சென்று, அங்கு போதித்தார்.
તતઃ પરં કફર્નાહૂમ્નામકં નગરમુપસ્થાય સ વિશ્રામદિવસે ભજનગ્રહં પ્રવિશ્ય સમુપદિદેશ|
22 அங்கிருந்த மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார்.
તસ્યોપદેશાલ્લોકા આશ્ચર્ય્યં મેનિરે યતઃ સોધ્યાપકાઇવ નોપદિશન્ પ્રભાવવાનિવ પ્રોપદિદેશ|
23 அப்பொழுது, அந்த ஜெப ஆலயத்தில் தீய ஆவி பிடித்தவனாயிருந்த ஒருவன் சத்தமிட்டு,
અપરઞ્ચ તસ્મિન્ ભજનગૃહે અપવિત્રભૂતેન ગ્રસ્ત એકો માનુષ આસીત્| સ ચીત્શબ્દં કૃત્વા કથયાઞ્ચકે
24 “நசரேயனாகிய இயேசுவே, எங்களிடம் உமக்கு என்ன? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்பது எனக்குத் தெரியும், நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான்.
ભો નાસરતીય યીશો ત્વમસ્માન્ ત્યજ, ત્વયા સહાસ્માકં કઃ સમ્બન્ધઃ? ત્વં કિમસ્માન્ નાશયિતું સમાગતઃ? ત્વમીશ્વરસ્ય પવિત્રલોક ઇત્યહં જાનામિ|
25 “அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார்.
તદા યીશુસ્તં તર્જયિત્વા જગાદ તૂષ્ણીં ભવ ઇતો બહિર્ભવ ચ|
26 அப்பொழுது தீய ஆவி, அந்த மனிதனை வலிப்புடன் வீழ்த்தி, பெருங்கூச்சலிட்டுக் கொண்டு, அவனைவிட்டு வெளியேறியது.
તતઃ સોઽપવિત્રભૂતસ્તં સમ્પીડ્ય અત્યુચૈશ્ચીત્કૃત્ય નિર્જગામ|
27 எல்லோரும் வியப்படைந்து ஒருவரோடொருவர், “இது என்ன? இது அதிகாரமுடைய ஒரு புதிய போதனையாக இருக்கிறதே! இயேசு தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார்; அவைகளும் அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே” என்று பேசிக்கொண்டார்கள்.
તેનૈવ સર્વ્વે ચમત્કૃત્ય પરસ્પરં કથયાઞ્ચક્રિરે, અહો કિમિદં? કીદૃશોઽયં નવ્ય ઉપદેશઃ? અનેન પ્રભાવેનાપવિત્રભૂતેષ્વાજ્ઞાપિતેષુ તે તદાજ્ઞાનુવર્ત્તિનો ભવન્તિ|
28 இயேசுவைப்பற்றிய இச்செய்தி கலிலேயா பகுதிகள் முழுவதும் விரைவாய் பரவியது.
તદા તસ્ય યશો ગાલીલશ્ચતુર્દિક્સ્થસર્વ્વદેશાન્ વ્યાપ્નોત્|
29 ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்ட உடனே அவர்கள், யாக்கோபு மற்றும் யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
અપરઞ્ચ તે ભજનગૃહાદ્ બહિ ર્ભૂત્વા યાકૂબ્યોહન્ભ્યાં સહ શિમોન આન્દ્રિયસ્ય ચ નિવેશનં પ્રવિવિશુઃ|
30 அங்கே சீமோனுடைய மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் கிடந்தாள். உடனே அவர்கள் அவளைப்பற்றி இயேசுவுக்குச் சொன்னார்கள்.
તદા પિતરસ્ય શ્વશ્રૂર્જ્વરપીડિતા શય્યાયામાસ્ત ઇતિ તે તં ઝટિતિ વિજ્ઞાપયાઞ્ચક્રુઃ|
31 எனவே இயேசு அவளிடத்தில் சென்று, அவளுடைய கையைப் பிடித்து, அவள் எழுந்துகொள்ள உதவினார். உடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று; அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
તતઃ સ આગત્ય તસ્યા હસ્તં ધૃત્વા તામુદસ્થાપયત્; તદૈવ તાં જ્વરોઽત્યાક્ષીત્ તતઃ પરં સા તાન્ સિષેવે|
32 அன்று மாலை கதிரவன் மறைந்தபின்பு, வியாதிப்பட்டவர்கள், பிசாசு பிடித்தவர்கள் எல்லோரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
અથાસ્તં ગતે રવૌ સન્ધ્યાકાલે સતિ લોકાસ્તત્સમીપં સર્વ્વાન્ રોગિણો ભૂતધૃતાંશ્ચ સમાનિન્યુઃ|
33 பட்டணத்திலுள்ள அனைவரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடியிருந்தார்கள்.
સર્વ્વે નાગરિકા લોકા દ્વારિ સંમિલિતાશ્ચ|
34 பலவித வியாதி உடையவர்களாயிருந்த அநேகரை, இயேசு குணமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்தினார். அந்தப் பிசாசுகள் தம்மை யாரென்று அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு இயேசு அனுமதிக்கவில்லை.
તતઃ સ નાનાવિધરોગિણો બહૂન્ મનુજાનરોગિણશ્ચકાર તથા બહૂન્ ભૂતાન્ ત્યાજયાઞ્ચકાર તાન્ ભૂતાન્ કિમપિ વાક્યં વક્તું નિષિષેધ ચ યતોહેતોસ્તે તમજાનન્|
35 விடியுமுன் இருட்டாய் இருக்கையிலேயே இயேசு எழுந்து புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போய், அங்கே மன்றாடினார்.
અપરઞ્ચ સોઽતિપ્રત્યૂષે વસ્તુતસ્તુ રાત્રિશેષે સમુત્થાય બહિર્ભૂય નિર્જનં સ્થાનં ગત્વા તત્ર પ્રાર્થયાઞ્ચક્રે|
36 சீமோனும் அவனுடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச்சென்றார்கள்.
અનન્તરં શિમોન્ તત્સઙ્ગિનશ્ચ તસ્ય પશ્ચાદ્ ગતવન્તઃ|
37 அவர்கள் இயேசுவைக் கண்டபோது, “எல்லோரும் உம்மைத் தேடிக்கொண்டு இருக்கிறார்களே” என்றார்கள்.
તદુદ્દેશં પ્રાપ્ય તમવદન્ સર્વ્વે લોકાસ્ત્વાં મૃગયન્તે|
38 இயேசு அவர்களிடம், “நாம் வேறுசில கிராமங்களுக்குப் போவோம்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார்.
તદા સોઽકથયત્ આગચ્છત વયં સમીપસ્થાનિ નગરાણિ યામઃ, યતોઽહં તત્ર કથાં પ્રચારયિતું બહિરાગમમ્|
39 எனவே, இயேசு கலிலேயா முழுவதிலும் பயணம் செய்து, ஜெப ஆலயங்களில் நற்செய்தியை அறிவித்து, பிசாசுகளையும் துரத்தினார்.
અથ સ તેષાં ગાલીલ્પ્રદેશસ્ય સર્વ્વેષુ ભજનગૃહેષુ કથાઃ પ્રચારયાઞ્ચક્રે ભૂતાનત્યાજયઞ્ચ|
40 குஷ்டவியாதி உள்ளவன் இயேசுவினிடத்தில் வந்து முழங்காற்படியிட்டு, நீர் விரும்பினால், “என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்று கெஞ்சி வேண்டிக்கொண்டான்.
અનન્તરમેકઃ કુષ્ઠી સમાગત્ય તત્સમ્મુખે જાનુપાતં વિનયઞ્ચ કૃત્વા કથિતવાન્ યદિ ભવાન્ ઇચ્છતિ તર્હિ માં પરિષ્કર્ત્તું શક્નોતિ|
41 இயேசு மனதுருகினவராய் தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார்.
તતઃ કૃપાલુ ર્યીશુઃ કરૌ પ્રસાર્ય્ય તં સ્પષ્ટ્વા કથયામાસ
42 உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கியது, அவன் குணமடைந்தான்.
મમેચ્છા વિદ્યતે ત્વં પરિષ્કૃતો ભવ| એતત્કથાયાઃ કથનમાત્રાત્ સ કુષ્ઠી રોગાન્મુક્તઃ પરિષ્કૃતોઽભવત્|
43 இயேசு அவனுக்கு ஒரு கண்டிப்பான எச்சரிப்பைக் கொடுத்து:
તદા સ તં વિસૃજન્ ગાઢમાદિશ્ય જગાદ
44 “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து. அது அவர்களுக்கு நீ சுகமடைந்ததற்கான ஒரு சாட்சியாய் இருக்கும்” என்று சொல்லி அவனை உடனே அனுப்பிவிட்டார்.
સાવધાનો ભવ કથામિમાં કમપિ મા વદ; સ્વાત્માનં યાજકં દર્શય, લોકેભ્યઃ સ્વપરિષ્કૃતેઃ પ્રમાણદાનાય મૂસાનિર્ણીતં યદ્દાનં તદુત્સૃજસ્વ ચ|
45 ஆனால் அவன் புறப்பட்டுப்போய் தாராளமாய் பேசத்தொடங்கி, தனக்கு நடந்த செய்தியை எங்கும் பரப்பினான். இதன் காரணமாக, இயேசுவினால் ஒரு பட்டணத்திற்குள்ளும் வெளிப்படையாக செல்லமுடியாமல், வெளியே தனிமையான இடங்களிலேயே தங்கினார். ஆனால் எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
કિન્તુ સ ગત્વા તત્ કર્મ્મ ઇત્થં વિસ્તાર્ય્ય પ્રચારયિતું પ્રારેભે તેનૈવ યીશુઃ પુનઃ સપ્રકાશં નગરં પ્રવેષ્ટું નાશક્નોત્ તતોહેતોર્બહિઃ કાનનસ્થાને તસ્યૌ; તથાપિ ચતુર્દ્દિગ્ભ્યો લોકાસ્તસ્ય સમીપમાયયુઃ|