< மாற்கு 1 >
1 இறைவனுடைய மகன் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.
୧ଏଟା ଅଇଲାନି ପର୍ମେସରର୍ ପଅ ଜିସୁ କିରିସ୍ଟର୍ ନିମାନ୍ କବରର୍ ଆରାମ୍ ।
2 இது ஏசாயா என்ற இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது: “நான் என்னுடைய தூதனை உமக்கு முன்பாக அனுப்புவேன்; அவன் உமது வழியை ஆயத்தப்படுத்துவான்”
୨ଏଟା ଏନ୍ତାରି ଆରାମ୍ ଅଇଲା । ଜିସାୟ ବବିସତ୍ବକ୍ତାର୍ ସାସ୍ତରେ ଜେନ୍ତାର୍ ଲେକାଅଇଲା ଆଚେ, ପର୍ମେସର୍ କଇଲା, ଦେକା ମୁଇ ମର୍ କବର୍ ଜାନାଉକେ ତମର୍ ଆଗେ ପାଟାଇଲିନି, ସେ ତମର୍ ବାଟ୍ ତିଆର୍ କର୍ସି ।
3 “‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்காகப் பாதைகளை நேராக்குங்கள்’ என்று ஒருவனுடைய குரல் பாலைவனத்திலே சத்தமிட்டது.”
୩ତାର୍ ସର୍ ମରୁବାଲି ବୁଏଁ ଆଉଲିଅଇକରି ସୁନାଇଲାନି ମାପ୍ରୁର୍ ବାଟ୍ ତିଆର୍ କରା, ତାର୍ପାଇ ବାଟ୍ ସଲ୍କାଆ ।
4 அவ்வாறே யோவான் ஸ்நானகன் பாலைவனப் பகுதியில் வந்து, திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான்.
୪ତାର୍ପଚେ ଏ ସବୁ କାତା ପୁରାପୁରୁନ୍ ଅଇଲା, ଜେଡେବେଲେ, ଡୁବନ୍ ଦେଉ ଜଅନ୍ ମରୁବାଲିବୁଏଁ ଆସି ପାପ୍ କେମାର୍ ଲାଗି ବଲି ପାପ୍ଟାନେଅନି ବାଉଡାଇବା ବିସଇ କଇବାର୍ ଦାର୍ଲା । “ତମର୍ ପାପ୍ କେମା ଅଇବାକେ ପାପ୍ଟାନେ ମନ୍ ବାଦ୍ଲାଇ ଡୁବନ୍ ନିଆ । ପର୍ମେସର୍ ତମର୍ ପାପ୍ କେମା କର୍ସି ।”
5 யூதேயா மாகாணத்தின் எல்லா நாட்டுப்புறங்களிலும் எருசலேம் நகரத்திலுமிருந்து எல்லாரும் அவனிடம் சென்றார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்குப் பெற்றார்கள்.
୫ସେଡ୍କିବେଲେ ଜିଉଦାଦେସର୍ କେତେକ୍ ଲକ୍ ଆରି ଜିରୁସାଲାମ୍ ରାଇଜର୍ ସବୁ ଲକ୍ମନ୍ ବାରଇକରି ଜଅନର୍ କାତା ସୁନୁ ବଲି ଆଇବାର୍ ଦାର୍ଲାଇ । ଆରି ନିଜର୍ ନିଜର୍ ପାପ୍କଲାଟା ମାନିକରି ଜର୍ଦନ୍ ଗାଡେ ତାର୍ତେଇଅନି ଡୁବନ୍ ନେଲାଇ ।
6 யோவானின் உடைகள் ஒட்டக முடியினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது.
୬ଜଅନ୍ ଉଟର୍ ଚେଣ୍ଡିସଙ୍ଗ୍ ତିଆର୍ ଅଇଲା ଲୁଗା ପିନ୍ଦି, ପସୁ ଚାମର୍ ଆଁଟାବେଡା ଆଁଟାଇ ବାନ୍ଦି ଅଇତେରଇଲା । ତାର୍ କାଦି ଅଇଲା ଚିଟ୍କା ଆରି ବନର୍ ମୁ ।
7 அவன் அறிவித்த செய்தி என்னவென்றால், “என்னைப் பார்க்கிலும் அதிக வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். நானோ அவருடைய பாதரட்சைகளின் வாரையும் குனிந்து அவிழ்ப்பதற்குத் தகுதியற்றவன்.
୭ସେ ଜାନାଇକରି କଇବାର୍ ମୁଲିଆଇଲା, “ମର୍ ପଚେ ଗଟେକ୍ ବେସି ବପୁର୍ ଲକ୍ ଆଇସି, ତାର୍ ଗତିଦାଙ୍ଗ୍ଡା ଅଇକରି ତାର୍ ଗଡର୍ ପାଣ୍ଡଇ ବେଟ୍ବାର୍ ମିସା ମର୍ ଅଦିକାର୍ ନାଇ ।
8 நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுப்பார்.”
୮ମୁଇ ତମ୍କେ ପାନିତେଇ ଡୁବନ୍ ଦେଲିନି, ମାତର୍ ସେ ତମ୍କେ ସୁକଲ୍ଆତ୍ମାଇ ଡୁବନ୍ ଦେଇସି ।”
9 அக்காலத்தில் இயேசு கலிலேயா மாகாணத்தின் நாசரேத் பட்டணத்திலிருந்து வந்து, யோர்தான் ஆற்றிலே யோவானால் திருமுழுக்கு பெற்றார்.
୯ସେଡ୍କିବେଲେ ଜିସୁ ଗାଲିଲି ଜାଗାର୍ ନାଜରିତ୍ ଗଡେ ଅନି ଆସି ଜର୍ଦନ୍ ଗାଡେ ଡୁବନ୍ ଦେଉ ଜଅନର୍ ଟାନେ ଡୁବନ୍ ନେଲା ।
10 இயேசு தண்ணீரிலிருந்து கரையேறிய உடனே, வானம் திறக்கப்பட்டதையும் பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் அவர் கண்டார்.
୧୦ସେ ପାନିତେଇ ଅନି ବାରଇ ଆଇବାବେଲେ, ସରଗ୍ ଉଗାଡି ଅଇ ପର୍ମେସରର୍ ଆତ୍ମା ପରୁଆ ପାରା ଅଇ ଜିସୁର୍ ଉପ୍ରେ ଉତ୍ରି ଆଇବାଟା ସେ ଦେକ୍ଲା ।
11 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு குரல்: “நீர் என்னுடைய அன்பு மகன்; நான் உம்மில் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்” என்று ஒலித்தது.
୧୧ଆରି ସର୍ଗେଅନି ଗଟେକ୍ ସର୍ ସୁନିଅଇଲା, “ତୁଇ ମର୍ ଆଲାଦର୍ ପିଲା, ତର୍ଟାନେ ମୁଇ ବେସି ସାର୍ଦା ।”
12 உடனே ஆவியானவர் இயேசுவைப் பாலைவனத்துக்கு அனுப்பினார்.
୧୨ସେଦାପ୍ରେ ସୁକଲ୍ ଆତ୍ମା ଜିସୁକେ ମରୁବାଲି ବୁଏଁ ପାଟାଇଲା ।
13 இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்கள் இருந்து சாத்தானால் சோதிக்கப்பட்டார். அங்கு அவர் காட்டு மிருகங்களுடன் இருந்தார்; இறைவனுடைய தூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
୧୩ମରୁବାଲି ବୁଏଁ ଚାଲିସ୍ ଦିନ୍ ରଇଲାବେଲେ, ସଇତାନ୍ ତାକେ ପାପ୍କରାଇବାକେ ଚେସ୍ଟା କର୍ତେରଇଲା । ସେ ଜାଗାଇ ବନର୍ ଜଁତ୍ମନ୍ ରଇଲାଇ, ଆରି ସରଗର୍ ଦୁତ୍ମନ୍ ଆସି ତାର୍ ସେବା କର୍ତେରଇଲାଇ ।
14 யோவான் சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, இயேசு இறைவனுடைய நற்செய்தியை அறிவித்துக்கொண்டு கலிலேயாவுக்கு வந்து,
୧୪କେତେଦିନ୍ ଗାଲାପଚେ ଏରଦ୍ରାଜା ଡୁବନ୍ ଦେଉ ଜଅନ୍କେ ବନ୍ଦି ଗରେ ସଙ୍ଗଇଲା ପଚେ ଜିସୁ ଗାଲିଲି ଗାଏଁ ବାଉଡିଆସି, ପର୍ମେସରର୍ ନିମାନ୍ କବର୍ ସୁନାଇବାର୍ ଦାର୍ଲା ।
15 “காலம் நிறைவேறிவிட்டது, இறைவனுடைய அரசு சமீபித்திருக்கிறது. மனந்திரும்பி நற்செய்தியை விசுவாசியுங்கள்” என்றார்.
୧୫“ସମାନ୍ ବେଲା ଆଇଲା, ପର୍ମେସରର୍ ରାଇଜ୍ ଲଗେ କେଟ୍ଲା ଆଚେ । ତମେ ପାପେ ଅନି ମନ୍ ବାଉଡାଇକରି ନିମାନ୍ କାତାଇ ବିସ୍ବାସ୍ କରା ।”
16 இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது சீமோனையும் அவனது சகோதரன் அந்திரேயாவையும் கண்டார்; மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
୧୬ଜିସୁ ଗାଲିଲି ସମ୍ଦୁର୍ କଣ୍ଡିବାଟେ ଜିବା ବେଲେ ସିମନ୍ ଆରି ତାର୍ ବାଇ ଆନ୍ଦ୍ରିଅକେ ସମ୍ଦୁରେ ବଇଜାଲ୍ ପାକାଇବାଟା ଦେକ୍ଲା, ସେମନ୍ ମାଚ୍ ଦାରୁ କେଉଟ୍ମନ୍ ରଇଲାଇ ।
17 இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார்.
୧୭ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ମର୍ ସଙ୍ଗ୍ ଆସା, ମୁଇ ତମ୍କେ ଲକ୍ମନ୍କେ ପର୍ମେସରର୍ ବାଟେ ଆନ୍ବା ବିସଇ ସିକାଇବି ।”
18 உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள்.
୧୮ସେଦାପ୍ରେ ସେମନ୍ ଜାଲ୍ ଚାଡି ଜିସୁର୍ ପଚେ ପଚେ ଗାଲାଇ ।
19 இயேசு சற்று தூரம் போனபின்பு, செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார்; அவர்கள் ஒரு படகிலிருந்து தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
୧୯ପଚେ କଣ୍ଡେକ୍ ଦୁର୍ ଜାଇ ଜେବଦିର୍ ପଅମନ୍ ଜାକୁବ୍ ଆରି ତାର୍ ବାଇ ଜଅନ୍କେ ଡଙ୍ଗାଇ ଜାଲ୍ ସାଜାଡ୍ବାଟା ଦେକ୍ଲା ।
20 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார்; அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள்.
୨୦ଜିସୁ ସେମନ୍କେ ଦେକ୍ଲା ଦାପ୍ରେ ଡାକ୍ଲା, ଆରି ସେମନ୍ ତାକର୍ ବାବା ଜେବଦିକେ ଆରି କୁଲିଆର୍ମନ୍କେ ଡଙ୍ଗାଇ ଚାଡି ତାର୍ ସଙ୍ଗ୍ ଗାଲାଇ ।
21 பின்பு அவர்கள் கப்பர்நகூம் நகரத்திற்குச் சென்றார்கள்; ஓய்வுநாளில் இயேசு யூத ஜெப ஆலயத்திற்குச் சென்று, அங்கு போதித்தார்.
୨୧ପଚେ ଜିସୁ ଆରି ତାର୍ ସିସ୍ମନ୍ କପର୍ନାଉମେ ଗାଲାଇ, ଆରି ବିସ୍ରାମ୍ବାର୍ କେଟ୍ଲାକେ ସେ ଜିଉଦିମନର୍ ପାର୍ତନା ଗରେ ପୁରି, ଲକ୍ମନ୍କେ ସିକାଇବାର୍ ଦାର୍ଲା ।
22 அங்கிருந்த மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார்.
୨୨ଲକ୍ମନ୍ ତାର୍ ସିକିଆ ସୁନି କାବା ଅଇଗାଲାଇ, ସେ ସାସ୍ତର୍ ସିକାଉପାରା ନ ସିକାଇ, ନିଜର୍ ଅଦିକାର୍ ସଙ୍ଗ୍ ସିକିଆ ଦେଇତେ ରଇଲା ।
23 அப்பொழுது, அந்த ஜெப ஆலயத்தில் தீய ஆவி பிடித்தவனாயிருந்த ஒருவன் சத்தமிட்டு,
୨୩ସେ ଦାପ୍ରେ ସେମନର୍ ପାର୍ତନା ଗରେ ଗଟେକ୍ ଡୁମା ଦାର୍ଲା ଲକ୍ କିର୍କିରି କରି ଜିସୁକେ କଇଲା,
24 “நசரேயனாகிய இயேசுவே, எங்களிடம் உமக்கு என்ன? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்பது எனக்குத் தெரியும், நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான்.
୨୪“ଏ ନାଜରିତ୍ ଗଡର୍ ଜିସୁ, ତୁଇ କାଇକେ ଆମ୍କେ ଅରିଆନ୍ କଲୁସ୍ନି? ତୁଇ କାଇ ଆମ୍କେ ବିନାସ୍ କର୍ବାକେ ଆଇଲୁସ୍ କି? ତୁଇ କେ, ସେଟା ମୁଇ ଜାନି, ତୁଇ ଅଇଲୁସ୍ନି ପର୍ମେସରର୍ ସୁକଲ୍ ଲକ୍ ।”
25 “அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார்.
୨୫ଜିସୁ ଡୁମାକେ ଦମ୍କାଇ କରି କଇଲା, “ଚୁପ୍ ଅ, ଆରି ଏ ଲକର୍ତେଇ ଅନି ବାର୍ଇ ଜା ।”
26 அப்பொழுது தீய ஆவி, அந்த மனிதனை வலிப்புடன் வீழ்த்தி, பெருங்கூச்சலிட்டுக் கொண்டு, அவனைவிட்டு வெளியேறியது.
୨୬ସେଡ୍କି ବେଲେ ଡୁମା ତାକେ ମଡିପିଙ୍ଗି ବେସି କିର୍କିରି କରି ତାର୍ଲଗେ ଅନି ବାରଇଗାଲା ।
27 எல்லோரும் வியப்படைந்து ஒருவரோடொருவர், “இது என்ன? இது அதிகாரமுடைய ஒரு புதிய போதனையாக இருக்கிறதே! இயேசு தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார்; அவைகளும் அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே” என்று பேசிக்கொண்டார்கள்.
୨୭ତେବର୍ପାଇ ପାର୍ତନା ଗରେ ରଇବା ସବୁ ଲକ୍ କାବା ଅଇଗାଲାଇ ଆରି ତାକର୍ ତାକର୍ ବିତ୍ରେ କୁଆବଲା ଅଇଲାଇ । “ଏଟା କେନ୍ତାର୍? ଏଟାତା ଅଦିକାର୍ ସଙ୍ଗର୍ ନୁଆ ସିକିଆ । ଡୁମା ଆତ୍ମାମନ୍ ମିସା, ସେ ତିଆର୍ଲାଟା ମାନ୍ଲାଇନି ।”
28 இயேசுவைப்பற்றிய இச்செய்தி கலிலேயா பகுதிகள் முழுவதும் விரைவாய் பரவியது.
୨୮ସେଡ୍କିବେଲେ ଜିସୁର୍ କାତା ଗାଲିଲିର୍ ଚାରିବେଡ୍ତିର୍ ଗାଉଁମନ୍କେ କେଟିଗାଲା ।
29 ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்ட உடனே அவர்கள், யாக்கோபு மற்றும் யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
୨୯ତାର୍ ପଚେ ଜିସୁ ଆରି ତାର୍ ସିସ୍ମନ୍ ପାର୍ତନା ଗରେ ଅନି ବାରଇ ଜାକୁବ୍ ଆରି ଜଅନର୍ ସଙ୍ଗ୍ ସିମନ୍ ଆରି ଆନ୍ଦ୍ରିୟର୍ ଗରେ ଗାଲାଇ ।
30 அங்கே சீமோனுடைய மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் கிடந்தாள். உடனே அவர்கள் அவளைப்பற்றி இயேசுவுக்குச் சொன்னார்கள்.
୩୦ତେଇ ରଇଲା ଲକ୍ମନ୍ ସିମନର୍ ସାତ୍ରି ଜର୍କେ ସଇରଇଲା ବିସଇ ଜିସୁକେ କଇଲାଇ ।
31 எனவே இயேசு அவளிடத்தில் சென்று, அவளுடைய கையைப் பிடித்து, அவள் எழுந்துகொள்ள உதவினார். உடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று; அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
୩୧ସେଟାର୍ପାଇ ଜିସୁ ଜାଇ ସିମନର୍ ସାତ୍ରିର୍ ଆତେ ଦାରି ଉଟାଇଲା, ସେଦାପ୍ରେ ତାର୍ ଜର୍ ଚାଡିଗାଲା, ଆରି ସେ ଜାଇ ସେମନ୍କେ ସେବା କର୍ବାର୍ ଦାର୍ଲା ।
32 அன்று மாலை கதிரவன் மறைந்தபின்பு, வியாதிப்பட்டவர்கள், பிசாசு பிடித்தவர்கள் எல்லோரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
୩୨ସଞ୍ଜ୍ ବେଲାଇ ବେଲ୍ ବୁଡିଗାଲା ପଚେ, ଲକ୍ମନ୍ ଜରର୍ ଲକ୍ମନ୍କେ ଆରି ଡୁମାଦାରି ରଇବା ସବୁଲକ୍ମନ୍କେ ଜିସୁର୍ ଲଗେ ଆନ୍ବାର୍ ଦାର୍ଲାଇ,
33 பட்டணத்திலுள்ள அனைவரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடியிருந்தார்கள்.
୩୩ଆରି ଗାଉଁର୍ ଲକ୍ମନ୍ ସେ ଗରର୍ ଦୁଆରେ ରୁଣ୍ଡ୍ଲାଇ ।
34 பலவித வியாதி உடையவர்களாயிருந்த அநேகரை, இயேசு குணமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்தினார். அந்தப் பிசாசுகள் தம்மை யாரென்று அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு இயேசு அனுமதிக்கவில்லை.
୩୪ସେଡ୍କିବେଲେ ସେ ବିନ୍ ବିନ୍ ରକାମର୍ ରଗ୍ ଅଇରଇବା ଜବର୍ ରଗି ଲକ୍ମନ୍କେ ନିମାନ୍ କଲା ଆରି ଜବର୍ ଡୁମାମନ୍କେ ଚାଡାଇଲା, ମାତର୍ ସେ ଡୁମାମନ୍କେ କାତା କଇବାକେ ଦେଏନାଇ । କାଇକେବଇଲେ ଡୁମାମନ୍ ଜିସୁ ପର୍ମେସରର୍ ଟାନେଅନି ଆଇଲାଆଚେ ବଲିକରି ଜାନି ରଇଲାଇ ।
35 விடியுமுன் இருட்டாய் இருக்கையிலேயே இயேசு எழுந்து புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போய், அங்கே மன்றாடினார்.
୩୫ଆର୍କର୍ ସାକାଲେ କୁକ୍ଡା ଡାକ୍ ବେଲାଇ ଜିସୁ ଉଟି ଗରେଅନି ବାରଇ ଜାଇ ଗଟେକ୍ କିନରା ରଇବା ଚିମ୍ରା ଜାଗାଇ, ଜାଇ ପାର୍ତନା କର୍ବାର୍ ଦାର୍ଲା ।
36 சீமோனும் அவனுடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச்சென்றார்கள்.
୩୬ସେଡ୍କିବେଲେ ସିମନ୍ ଆରି ତାର୍ ସଙ୍ଗର୍ଲକ୍ ତାକେ କଜ୍ବାର୍ ଗାଲାଇ,
37 அவர்கள் இயேசுவைக் கண்டபோது, “எல்லோரும் உம்மைத் தேடிக்கொண்டு இருக்கிறார்களே” என்றார்கள்.
୩୭ଜେଡେବଲ୍ ସେମନ୍ ଜିସୁକେ ବେଟ୍ ଅଇଲାଇ, ଆରି କାବାଅଇ ତାକେ କଇଲାଇ, “ସବୁ ଲକ୍ ତମ୍କେ କଜ୍ଲାଇନି ।”
38 இயேசு அவர்களிடம், “நாம் வேறுசில கிராமங்களுக்குப் போவோம்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார்.
୩୮ସେଡ୍କିବେଲେ ଜିସୁ ସେମନ୍କେ କଇଲା, “ଆସା, ଆମେ ରଇବା ବିନ୍ ବିନ୍ ଗାଉଁମନ୍କେ ଜୁ, କାଇକେବଇଲେ ସେ ଜାଗାମନ୍କେ ମିସା ମୁଇ ପର୍ମେସରର୍ କାତା କଇବି । କାଇକେବଇଲେ ସେଟାର୍ପାଇସେ ମୁଇ ଆଇଲିଆଚି ।”
39 எனவே, இயேசு கலிலேயா முழுவதிலும் பயணம் செய்து, ஜெப ஆலயங்களில் நற்செய்தியை அறிவித்து, பிசாசுகளையும் துரத்தினார்.
୩୯ଆରି ଗାଲିଲିର୍ ସବୁଟାନେ ବୁଲି ବୁଲି ସେମନର୍ ସବୁ ପାର୍ତନା ଗରେ, ମାପ୍ରୁର୍ କାତା ସୁନାଇଲା, ଆରି ଡୁମା ଦାର୍ଲା ଲକ୍ମନ୍କେ ଚାଡାଇଲା ।
40 குஷ்டவியாதி உள்ளவன் இயேசுவினிடத்தில் வந்து முழங்காற்படியிட்டு, நீர் விரும்பினால், “என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்று கெஞ்சி வேண்டிக்கொண்டான்.
୪୦ସେଡ୍କି ବେଲେ ଗଟେକ୍ ବଡ୍ ରଗି ତାର୍ ଲଗେ ଆସି ମାଣ୍ଡିକଟା ଦେଇ ତାକେ ବାବୁଜିଆ କରି କଇଲା, “ତମେ ଜଦି ମନ୍କଲେ ମକେ ସୁକଲ୍ କରି ପାର୍ସା ।”
41 இயேசு மனதுருகினவராய் தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார்.
୪୧ତେଇ ସେ ତାକେ ଜିବନ୍ ଦୁକାଇଲା ଆରି ଆତ୍ ଲାମାଇ କରି ତାକେ ଚିଇକରି କଇଲା, “ମୁଇ ମନ୍ କଲିନି, ତୁଇ ସୁକଲ୍ ଅ ।”
42 உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கியது, அவன் குணமடைந்தான்.
୪୨ସେଦାପ୍ରେ ବଡ୍ ରଗ୍ ତାର୍ ଲଗେ ଅନି ଦୁର୍ଅଇଲା ଆରି ସେ ସୁକଲ୍ ଅଇଗାଲା ।
43 இயேசு அவனுக்கு ஒரு கண்டிப்பான எச்சரிப்பைக் கொடுத்து:
୪୩ଆରି, ଜିସୁ ସେ ଲକ୍କେ ଡାଟ୍ସଙ୍ଗ୍ ଆଦେସ୍ ଦେଇ ସେଦାପ୍ରେ କଇ ପାଟାଇଲା ।
44 “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து. அது அவர்களுக்கு நீ சுகமடைந்ததற்கான ஒரு சாட்சியாய் இருக்கும்” என்று சொல்லி அவனை உடனே அனுப்பிவிட்டார்.
୪୪“ଜାଗ୍ରତ୍, ମୁଇ ତକେ ସୁକଲ୍ କଲି ବଲି କାକେ ମିସା କ ନାଇ, ମାତର୍ ଜା ଆରି ନିଜେ ପୁଜାରିକେ ଦେକାଇ ଅ ଆରି ମସା ଜନ୍ ଜନ୍ ବିରୁ ପର୍ମେସର୍କେ ଦେବାକେ ଆଦେସ୍ ଦେଲାଆଚେ, ସେ ଇସାବେ ଦେସ୍ । ଏଟାର୍ ଲାଗି ତୁଇ ସୁକଲ୍ ଅଇଜାଇଆଚୁସ୍ ବଲିକରି ପୁଜାରି ସବୁଲକର୍ ମୁଆଟେ ସାକି ଦେଅ ।”
45 ஆனால் அவன் புறப்பட்டுப்போய் தாராளமாய் பேசத்தொடங்கி, தனக்கு நடந்த செய்தியை எங்கும் பரப்பினான். இதன் காரணமாக, இயேசுவினால் ஒரு பட்டணத்திற்குள்ளும் வெளிப்படையாக செல்லமுடியாமல், வெளியே தனிமையான இடங்களிலேயே தங்கினார். ஆனால் எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
୪୫ମାତର୍ ସେଲକ୍ ବାରଇ ଜାଇ ଜିସୁ ସୁକଲ୍ କରିରଇବା କବର୍ ଏତେକ୍ ରାଟୁକରି କଇବୁଲ୍ଲାଇ ଜେ, ଜିସୁ ଲକ୍ମନର୍ ଦେକ୍ତେ ଦେକ୍ତେ କନ୍ ଗାଉଁମନ୍କେ ମିସା ଜାଇ ପୁରି ନାପାର୍ଲା । ମାତର୍ ବାଇରେ ଜାଇ ଚିମ୍ରା ଜାଗାମନ୍କେ ରଇଲା । ଅଇଲେ ମିସା ଲକ୍ମନ୍ ଚାରିଦିଗେ ଅନି ତାର୍ ଲଗେ ଆଇବାର୍ଦାର୍ଲାଇ ।