< மாற்கு 1 >
1 இறைவனுடைய மகன் இயேசுகிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.
ଇରି ଅଃଉଁଲି ଇସ୍ୱରାର୍ ହୟ୍ସି ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍ ନିକ କବୁର୍ ଆରୁମ୍ ।
2 இது ஏசாயா என்ற இறைவாக்கினரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது: “நான் என்னுடைய தூதனை உமக்கு முன்பாக அனுப்புவேன்; அவன் உமது வழியை ஆயத்தப்படுத்துவான்”
ଜଃନ୍କଃରି ଜିସାୟ୍ ବାବ୍ବାଦିର୍ ସାସ୍ତରେ ଲେକାଆଚେ, “ଇସ୍ୱର୍ ମାପ୍ରୁ କୟ୍ଲା, ‘ସୁଣା ମୁୟ୍ ମର୍ କବୁର୍ କାରିଆକ୍ ତର୍ ଆଗ୍ତୁ ହଃଟାଉଁନ୍ଦ୍, ସେ ତର୍ ଗିନେ ବାଟ ତିଆର୍ କଃରେଦ୍ ।’
3 “‘கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்காகப் பாதைகளை நேராக்குங்கள்’ என்று ஒருவனுடைய குரல் பாலைவனத்திலே சத்தமிட்டது.”
ଗଟ୍ ମାନାୟ୍ ସୁକ୍ଲା ବଃଟାୟ୍ ହୁଣି ଉଲ୍ଗାଟ୍ ଅୟ୍ କଃଉଁଲା, ‘ମାପ୍ରୁର୍ ଗିନେ ବାଟ୍ ତିଆର୍ କଃରା; ଆର୍ ରଃଜାର୍ ଗିନେ ବାଟ୍ ସଃଳ୍କ୍ କଃରା ।’”
4 அவ்வாறே யோவான் ஸ்நானகன் பாலைவனப் பகுதியில் வந்து, திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். அவன் மக்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்கு, அவர்கள் மனந்திரும்பிப் பெறவேண்டிய திருமுழுக்கைக் குறித்துப் பிரசங்கித்தான்.
ବାପ୍ତିସମ୍ ଦେତା ଜହନ୍ ସୁକ୍ଲା ବଃଟାୟ୍ ଆୟ୍ଲା ଆର୍ ପର୍ଚାର୍ କଃରି କୟ୍ଲା, “ହାହେ ହୁଣି ମଃନ୍ ବାଦ୍ଲାୟ୍ ଆସା ଆର୍ ବାପ୍ତିସମ୍ ନିଆ, ଇସ୍ୱର୍ ତୁମାର୍ ହାହ୍ କେମା କଃରେଦ୍ ।”
5 யூதேயா மாகாணத்தின் எல்லா நாட்டுப்புறங்களிலும் எருசலேம் நகரத்திலுமிருந்து எல்லாரும் அவனிடம் சென்றார்கள். அங்கே அவர்கள் தங்களுடைய பாவங்களை அறிக்கைசெய்து, யோர்தான் ஆற்றிலே அவனால் திருமுழுக்குப் பெற்றார்கள்.
ଜିଉଦା ରାଜିର୍ ଆର୍ ଜିରୁସାଲମ୍ ଗଃଳାର୍ ଆରେକ୍ ଜର୍ଦନ୍ ଗାଡ୍ ଚଃମେ ରିଲା ସଃବୁ ଲକ୍ମଃନ୍ ଜହନ୍ ଲଃଗେ ଆସୁକ୍ ଦଃର୍ଲାୟ୍ ଆର୍ ସେମଃନ୍ ନିଜେ ନିଜେ କଃରିରିଲା ହାହ୍ ଆର୍ ଦସ୍ ସଃବୁ ମାନ୍ଲାୟ୍, ଆର୍ ଜହନ୍ ତଃୟ୍ହୁଣି ଜର୍ଦନ୍ ଗାଡେ ବାପ୍ତିସମ୍ ନିଲାୟ୍ ।
6 யோவானின் உடைகள் ஒட்டக முடியினால் செய்யப்பட்டிருந்தன. அவன் இடுப்பைச் சுற்றி தோல் பட்டியையும் கட்டியிருந்தான். அவனது உணவு வெட்டுக்கிளியும், காட்டுத்தேனுமாய் இருந்தது.
ଜହନ୍ ଉଟ୍ ରମେ ବୁଣ୍ଲା ବଃସ୍ତର୍ ହିନ୍ଦ୍ତି ରିଲା ଆର୍ ଚାମାର୍ ଅଃଟାବାନ୍ଦୁଣ୍ ବାନ୍ଦ୍ତି ରିଲା, ସେ ଜିଟ୍କା ଆର୍ ବଃନାର୍ ମଃଉଁ କାତିରିଲା ।
7 அவன் அறிவித்த செய்தி என்னவென்றால், “என்னைப் பார்க்கிலும் அதிக வல்லமையுள்ளவர் எனக்குப்பின் வருகிறார். நானோ அவருடைய பாதரட்சைகளின் வாரையும் குனிந்து அவிழ்ப்பதற்குத் தகுதியற்றவன்.
ସେ ପର୍ଚାର୍ କଃରୁକେ ଦଃର୍ଲା, “ମର୍ ହଃଚେ ଜେ ଆସୁଲା ସେ ମର୍ ତଃୟ୍ହୁଣି ଅଃଦିକ୍ ବଃଡ୍, ମୁଁୟ୍ ତାର୍ ହାଦାର୍ ହାଣ୍ଡାୟ୍ର୍ ବାନ୍ଦୁଣ୍ ଇଟାଉତା ଜୟ୍ଗ୍ ନାୟ୍ ।
8 நான் உங்களுக்குத் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன்; ஆனால் அவர் உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுப்பார்.”
ମୁଁୟ୍ ତୁମିମଃନ୍କେ ହାଣାୟ୍ ବାପ୍ତିସମ୍ ଦିଲେ, ମଃତର୍ ସେ ତୁମିମଃନ୍କେ ପବିତ୍ର ଆତ୍ମାୟ୍ ବାପ୍ତିସମ୍ ଦଃୟ୍ଦ୍ ।”
9 அக்காலத்தில் இயேசு கலிலேயா மாகாணத்தின் நாசரேத் பட்டணத்திலிருந்து வந்து, யோர்தான் ஆற்றிலே யோவானால் திருமுழுக்கு பெற்றார்.
ସଃଡେବଃଳ୍ ଜିସୁ ଗାଲିଲି ରାଜିର୍ ନାଜରିତ୍ ଗାଉଁଏ ହୁଣି ଆୟ୍ଲା ଆର୍, ଜର୍ଦନ୍ ଗାଡେ ଜହନ୍ ତଃୟ୍ହୁଣି ବାପ୍ତିସମ୍ ହାୟ୍ଲା ।
10 இயேசு தண்ணீரிலிருந்து கரையேறிய உடனே, வானம் திறக்கப்பட்டதையும் பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் அவர் கண்டார்.
ଜିସୁ ବାପ୍ତିସମ୍ ନଃୟ୍ ହାଣାୟ୍ ହୁଣି ବାରାୟ୍ଲା, ଆର୍ ସଃର୍ଗ୍ ଉଗାଳି ଅୟ୍ଲି ଆର୍ ପବିତ୍ର ଆତ୍ମା ହାଣ୍ଡ୍କା ହର୍ ଅୟ୍ ତାର୍ ଉହ୍ରେ ଉତ୍ରି ଆସ୍ତାର୍ ସେ ଦଃକ୍ଲା ।
11 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு குரல்: “நீர் என்னுடைய அன்பு மகன்; நான் உம்மில் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்” என்று ஒலித்தது.
ଆର୍ ସଃଡେବଃଳ୍ ସଃର୍ଗେ ହୁଣି ଗଟେକ୍ କଃତା ସୁଣା ଅୟ୍ଲି, “ତୁୟ୍ ଅଃମାର୍ ଲାଡାର୍ ହଅ, ତର୍ ତଃୟ୍ ଅଃମାର୍ ବଃଡେ ସଃନ୍ମତ୍ ।”
12 உடனே ஆவியானவர் இயேசுவைப் பாலைவனத்துக்கு அனுப்பினார்.
ତଃତ୍କାଣ୍ ପବିତ୍ର ଆତ୍ମା ଜିସୁକେ ଗଟେକ୍ ସୁକ୍ଲା ବଃଟାୟ୍ ନିଲି,
13 இயேசு பாலைவனத்தில் நாற்பது நாட்கள் இருந்து சாத்தானால் சோதிக்கப்பட்டார். அங்கு அவர் காட்டு மிருகங்களுடன் இருந்தார்; இறைவனுடைய தூதர்கள் அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.
ଜିସୁ ସୁକ୍ଲା ବଃଟାୟ୍ ଚାଲିସ୍ ଦିନ୍ ହଃତେକ୍ ରିଲା, ଆର୍ ସେତି ଜିସୁକେ ସୟ୍ତାନ୍ ପରିକ୍ୟା କଃଲି । ସେ ବଃନାର୍ ଜଃତୁମଃନାର୍ ସଃଙ୍ଗ୍ ରେତିରିଲା ଆର୍ ସଃର୍ଗ୍ ଦୁତ୍ମଃନ୍ ତାର୍ ସେବା କଃର୍ତି ରିଲାୟ୍ ।
14 யோவான் சிறையில் அடைக்கப்பட்ட பின்பு, இயேசு இறைவனுடைய நற்செய்தியை அறிவித்துக்கொண்டு கலிலேயாவுக்கு வந்து,
ଜହନ୍କେ ବାନ୍ଦି ଜଃଇଲେ ହୁରାୟ୍ଲା ହଃଚେ, ଜିସୁ ଗାଲିଲିକେ ଆୟ୍ଲା ଆର୍ ଇସ୍ୱରାର୍ ନିକ କବୁର୍ ପର୍ଚାର୍ କଃରୁକେ ଦଃର୍ଲା ।
15 “காலம் நிறைவேறிவிட்டது, இறைவனுடைய அரசு சமீபித்திருக்கிறது. மனந்திரும்பி நற்செய்தியை விசுவாசியுங்கள்” என்றார்.
ଜିସୁ ପର୍ଚାର୍ କଃରି କଃଉଁକେ ଦଃର୍ଲା, “ଟିକ୍ ବେଳା ଆୟ୍ଲି ଆଚେ, ଇସ୍ୱରାର୍ ରାଇଜ୍ ଲଃଗେ ଅୟ୍ଲିନି! ତୁମାର୍ ହାହ୍ ଚାଡା ଆର୍ ନିକ କବୁର୍କେ ବିସ୍ୱାସ୍ କଃରା ।”
16 இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது சீமோனையும் அவனது சகோதரன் அந்திரேயாவையும் கண்டார்; மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
ଜିସୁ ଗାଲିଲି ସଃମ୍ନ୍ଦ୍ କଃଣ୍ଡିବାଟ୍ ଜାତିରିଲା ବଃଳ୍, ସେ ସିମନ୍ ଆର୍ ତାର୍ ବାୟ୍ସି ଆନ୍ଦ୍ରିଅକ୍ ମାଚ୍ ଦଃରୁକେ ସଃମ୍ନ୍ଦେ ବୟ୍ଜାଲ୍ ହଃକାଉତି ରିଲାର୍ ଦଃକ୍ଲା । ବଃଲେକ୍ ସେମଃନ୍ ମାଚୁଆ ରିଲାୟ୍ ।
17 இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார்.
ଜିସୁ ସେମଃନ୍କେ କୟ୍ଲା, “ମର୍ ହଃଚେ ଆସା, ମୁଁୟ୍ ତୁମିମଃନ୍କେ ନଃର୍ମଃନ୍କେ ମାପ୍ରୁର୍ ଲଃଗେ ଆଣୁକେ ସିକାୟ୍ନ୍ଦ୍ ।”
18 உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள்.
ସେଦାହ୍ରେ ସେମଃନ୍ ତାକାର୍ ଜାଲ୍ ଚାଡ୍ଲାୟ୍ ଆର୍ ଜିସୁର୍ ହଃଚେ ଗଃଲାୟ୍ ।
19 இயேசு சற்று தூரம் போனபின்பு, செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார்; அவர்கள் ஒரு படகிலிருந்து தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ଜିସୁ କଃଣ୍ଡେକ୍ ଦୁରିକ୍ ଗଃଲା ହଃଚେ, ସେ ଜେବଦିର୍ ହୟ୍ସି ଜାକୁବ ଆର୍ ତାର୍ ବାୟ୍ସି ଜହନ୍କେ ଦଃକ୍ଲା । ସେମଃନ୍ ଡଙ୍ଗାୟ୍ ଜାଲ୍ ହଃଜାଳ୍ତି ରିଲାୟ୍ ।
20 உடனே இயேசு அவர்களையும் அழைத்தார்; அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவை படகிலே கூலியாட்களோடு விட்டுவிட்டு, இயேசுவைப் பின்பற்றினார்கள்.
ସେଦାହ୍ରେ ଜିସୁ ସେମଃନ୍କେ କୁଦ୍ଲା, ଆର୍ ସେମଃନ୍ ତାକାର୍ ଉବାସି ଜେବଦିକ୍ ବୁତ୍ୟାର୍ ଲକାର୍ ସଃଙ୍ଗ୍ ଡଙ୍ଗାୟ୍ ଚାଡ୍ଲାୟ୍ ଆର୍ ତାର୍ ହଃଚେ ହଃଚେ ଗଃଲାୟ୍ ।
21 பின்பு அவர்கள் கப்பர்நகூம் நகரத்திற்குச் சென்றார்கள்; ஓய்வுநாளில் இயேசு யூத ஜெப ஆலயத்திற்குச் சென்று, அங்கு போதித்தார்.
ତାର୍ହଃଚେ ଜିସୁ ଆର୍ ଚେଲାମଃନ୍ କପୁର୍ନାହୁମ୍ ଗଃଳେ ଗଃଳାୟ୍, ଆର୍ ଜିସୁ ଜିଉଦିମଃନାର୍ ବିସାଉଁଣିବାର୍ ଦିନ୍ ତାକାର୍ ପାର୍ତ୍ନା ଗଃରେ ହୁର୍ଲା ଆର୍ ସିକ୍ୟା ଦେଉଁକେ ଦଃର୍ଲା ।
22 அங்கிருந்த மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள். ஏனெனில், அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார்.
ଜିସୁର୍ ସିକ୍ୟା ସୁଣିକଃରି ସେତିର୍ ଲକ୍ମଃନ୍ କାବା ଅୟ୍ଲାୟ୍, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଜିସୁ ଦଃର୍ମ୍ ଗୁରୁମଃନାର୍ ହର୍ ସିକ୍ୟା ନଃଦେୟ୍ କଃରି ଅଃଦିକାର୍ ହାୟ୍ଲା ଲକାର୍ ହର୍ ସିକ୍ୟା ଦେତିରିଲା ।
23 அப்பொழுது, அந்த ஜெப ஆலயத்தில் தீய ஆவி பிடித்தவனாயிருந்த ஒருவன் சத்தமிட்டு,
ସଃଡେବଃଳ୍ ଜିଉଦିମଃନାର୍ ପାର୍ତ୍ନା ଗଃରେ ବିଟାଳ୍ ଆତ୍ମା ଡସି ରିଲା ଲକ୍ ରିଲା, ସେ ଆଉଲି ଅୟ୍କଃରି କୟ୍ଲା,
24 “நசரேயனாகிய இயேசுவே, எங்களிடம் உமக்கு என்ன? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்பது எனக்குத் தெரியும், நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான்.
“ଏ ନାଜରିତ୍ ବଃସ୍ତିର୍ ଜିସୁ ତୁୟ୍ ଅଃମାର୍ ତଃୟ୍ ହୁଣି କାୟ୍ରି ମଃନ୍କଃରୁଲିସ୍? ତୁୟ୍ କାୟ୍ ଅଃମିକ୍ ନାସ୍ କଃରୁକେ ଆସି ଆଚ୍ସି? ତୁୟ୍ କେ ମୁଁୟ୍ ଜାଣି ଆଚି, ତୁୟ୍ ଇସ୍ୱରାର୍ ଗଟେକ୍ ପବିତ୍ର ମାନାୟ୍ ।”
25 “அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார்.
ଜିସୁ ତାକ୍ ଦଃକା ଦଃୟ୍କଃରି କୟ୍ଲା, “ତୁନ୍ହାଳ୍, ଆର୍ ଇମାନାୟ୍ ତଃୟ୍ହୁଣି ବାରାୟ୍ ଜାଆ ।”
26 அப்பொழுது தீய ஆவி, அந்த மனிதனை வலிப்புடன் வீழ்த்தி, பெருங்கூச்சலிட்டுக் கொண்டு, அவனைவிட்டு வெளியேறியது.
ତାର୍ହଃଚେ ସେ ବୁତ୍ ସେମାନାୟ୍କେ ମଳିକଃରି ତଃଳେ ଅଦ୍ରାୟ୍ଲି ଆର୍ ଆଉଲି ଅୟ୍ ତାର୍ ତଃୟ୍ହୁଣି ବିଟାଳ୍ ଆତ୍ମା ବାରାୟ୍ ଗଃଲି ।
27 எல்லோரும் வியப்படைந்து ஒருவரோடொருவர், “இது என்ன? இது அதிகாரமுடைய ஒரு புதிய போதனையாக இருக்கிறதே! இயேசு தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார்; அவைகளும் அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே” என்று பேசிக்கொண்டார்கள்.
ଇରି ଦଃକିକଃରି ସେତିର୍ ଲକ୍ମଃନ୍ ବଃଡେ କାବା ଅୟ୍ଲାୟ୍ ଆର୍ ତାକାର୍ ବିତ୍ରେ କଃଉଆକଇ ଅଃଉଁକେ ଦଃର୍ଲାୟ୍, “ଇରି କାୟ୍ରି? ଇରି ତ ଅଃଦିକାର୍ ହାୟ୍ଲା ନଃଉଆଁ ସିକ୍ୟା ଦେଉଁଲା ଆର୍ ସେ ବୁତ୍ମଃନ୍କେ ହେଁ ଆଦେସ୍ ଦେଉଁଲା, ଆର୍ ସେମଃନ୍ ତାର୍ ବଲ୍ ମାନୁଲାୟ୍ ।”
28 இயேசுவைப்பற்றிய இச்செய்தி கலிலேயா பகுதிகள் முழுவதும் விரைவாய் பரவியது.
ତାର୍ହଃଚେ ଜିସୁର୍ କଃତା ଗାଲିଲି ରାଜିର୍ ଚାରିହାକ୍ ଉର୍ଜି ଅୟ୍ଲି ।
29 ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்ட உடனே அவர்கள், யாக்கோபு மற்றும் யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
ତାର୍ହଃଚେ ଜିସୁ ଆର୍ ତାର୍ ଚେଲାମଃନ୍ ପାର୍ତ୍ନା ଗଃରେ ହୁଣି ବାରାୟ୍ ଜାକୁବକ୍ ଆର୍ ଜହନ୍ ସଃଙ୍ଗ୍ ମିସି ସଃଳ୍କେ ସିମନ୍ ଆର୍ ଆନ୍ଦ୍ରିଅର୍ ଗଃରେ ଗଃଲାୟ୍ ।
30 அங்கே சீமோனுடைய மாமியார் காய்ச்சலுடன் படுக்கையில் கிடந்தாள். உடனே அவர்கள் அவளைப்பற்றி இயேசுவுக்குச் சொன்னார்கள்.
ସେ ଗଃରେ ସିମନାର୍ ସଃତୁର୍ସି ଜଃରାର୍ ଗିନେ ଟାଟାୟ୍ ଡୁଳି ରିଲି, ସେତାର୍ଗିନେ ଚେଲାମଃନ୍ ସିମନାର୍ ସଃତୁର୍ସି ଜଃରୁଲି ବଃଲି ଜିସୁକେ ସେଦାହ୍ରେ କୟ୍ଲାୟ୍ ।
31 எனவே இயேசு அவளிடத்தில் சென்று, அவளுடைய கையைப் பிடித்து, அவள் எழுந்துகொள்ள உதவினார். உடனே காய்ச்சல் அவளைவிட்டுப் போயிற்று; அவள் அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினாள்.
ଜିସୁ ତାର୍ ଲଃଗେ ଗଃଲା ଆର୍ ତାର୍ ଆତେ ଦଃରି ତାକ୍ ଉଟାୟ୍ଲା, ସେଦାହ୍ରେ ତାର୍ ଜଃର୍ ଚାଡ୍ଲି ଆର୍ ସେ ସେମଃନ୍କେ କାଉଁକେ ହିଉଁକ୍ ଦଃୟ୍କଃରି, ତାକାର୍ ସେବା କଃରୁକେ ଦଃର୍ଲି ।
32 அன்று மாலை கதிரவன் மறைந்தபின்பு, வியாதிப்பட்டவர்கள், பிசாசு பிடித்தவர்கள் எல்லோரையும் மக்கள் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.
ବେଳ୍ ବୁଡି ସଃଞ୍ଜ୍ ଅୟ୍ଲାକ୍, ଲକ୍ମଃନ୍ ଜଃର୍ଦୁକାର୍ ଆର୍ ବୁତ୍ ଡଃସ୍ଲାର୍ ସଃବୁ ଲକ୍ମଃନ୍କେ ଜିସୁର୍ ଲଃଗେ ଆଣୁକେ ଦଃର୍ଲାୟ୍ ।
33 பட்டணத்திலுள்ள அனைவரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடியிருந்தார்கள்.
ସେ ଗଃଳାର୍ ସଃବୁ ଲକ୍ମଃନ୍ ଜିସୁ ରିଲା ଗଃରାର୍ ଦୁଆର୍ ଚଃମେ ରୁଣ୍ଡ୍ଲାୟ୍ ।
34 பலவித வியாதி உடையவர்களாயிருந்த அநேகரை, இயேசு குணமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்தினார். அந்தப் பிசாசுகள் தம்மை யாரென்று அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு இயேசு அனுமதிக்கவில்லை.
ସଃଡେବଃଳ୍ ଜିସୁ ବିନ୍ବିନ୍ ଜଃର୍ ଦୁକାୟ୍ ହଃଳିରିଲା ଲକ୍ମଃନ୍କେ ଉଜ୍ କଃଲା । ଜିସୁ ବୁତ୍ ଡଃସିରିଲା ଗାଦେକ୍ ଲକ୍ମଃନ୍କେ ହେଁ ଉଜ୍ କଃଲା, ଜିସୁ କେ ବଃଲି ଦୁତ୍ମଃନ୍ ଚିନ୍ତି ରିଲାୟ୍ ସେତାର୍ଗିନେ ଜିସୁ ସେ ବୁତ୍ମଃନ୍କେ କାୟ୍ରି ହେଁ କଃଉଁକେ ନଃଦିଲା ।
35 விடியுமுன் இருட்டாய் இருக்கையிலேயே இயேசு எழுந்து புறப்பட்டு ஒரு தனிமையான இடத்திற்குப் போய், அங்கே மன்றாடினார்.
ତାର୍ ଆର୍କ ଦିନାର୍ ଉଟ୍ଲା ସଃକାଳ୍ ଜିସୁ ଅଃନ୍ଦାର୍ ଅଃନ୍ଦାର୍ ଉଟି, ଗଟେକ୍ ସିଣିନ୍ଦ୍ ଟାଣେ ଗଃଲା ଆର୍ ସେତି ପାର୍ତ୍ନା କଃରୁକେ ଦଃର୍ଲା ।
36 சீமோனும் அவனுடன் இருந்தவர்களும் அவரைத் தேடிச்சென்றார்கள்.
ସଃଡେବଃଳ୍ ସିମନ୍ ଆର୍ ତାର୍ ସଃଙ୍ଗୁଆଳିମଃନ୍ ତାକ୍ ଲଳୁକ୍ ଦଃର୍ଲାୟ୍ ।
37 அவர்கள் இயேசுவைக் கண்டபோது, “எல்லோரும் உம்மைத் தேடிக்கொண்டு இருக்கிறார்களே” என்றார்கள்.
ଜଃଡେବଃଳ୍ ସେମଃନ୍ ଜିସୁକେ ବେଟ୍ ହାୟ୍ଲାୟ୍, ସେମଃନ୍ କୟ୍ଲାୟ୍, “ସଃବୁ ଲକ୍ମଃନ୍ ତକେ ଲଳୁଲାୟ୍ ।”
38 இயேசு அவர்களிடம், “நாம் வேறுசில கிராமங்களுக்குப் போவோம்; அங்கேயும் நான் பிரசங்கிக்க வேண்டும். அதற்காகவே நான் வந்திருக்கிறேன்” என்றார்.
ମଃତର୍ ଜିସୁ ସେମଃନ୍କେ କୟ୍ଲା, “ଅଃମିମଃନ୍ ଇ ଚଃମାର୍ ବିନ୍ବିନ୍ ଗାଉଁଏମଃନ୍ ଜୁଆଁ, ଜଃନ୍କଃରି ସେ ଗାଉଁଏ ହେଁ ମୁଁୟ୍ ସିକ୍ୟା ଦେଉଁ ହାରି, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ମୁଁୟ୍ ଇତାର୍ ଗିନେ ଆସି ଆଚି ।”
39 எனவே, இயேசு கலிலேயா முழுவதிலும் பயணம் செய்து, ஜெப ஆலயங்களில் நற்செய்தியை அறிவித்து, பிசாசுகளையும் துரத்தினார்.
ତାର୍ହଃଚେ ସେ ଗାଲିଲି ଗଃଳାର୍ ସଃବୁହାକ୍ ବୁଲ୍ଲା ଆର୍ ପାର୍ତ୍ନା ଗଃରେମଃନ୍ ସିକ୍ୟା ଦିଲା ଆର୍ ବୁତ୍ମଃନ୍କେ ଚାଡାୟ୍ଲା ।
40 குஷ்டவியாதி உள்ளவன் இயேசுவினிடத்தில் வந்து முழங்காற்படியிட்டு, நீர் விரும்பினால், “என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்று கெஞ்சி வேண்டிக்கொண்டான்.
ଗଟେକ୍ ବଃଡ୍ ରଗି ଆୟ୍ଲା, ଆର୍ ଜିସୁର୍ ମୁଏଁ ମାଣ୍ଡିକୁଟା ଟେସି ହାଦେଡୁଳି ଗଃଉଆରି କଃରି କୟ୍ଲା, “ତୁୟ୍ ମଃନ୍ କଃଲେକ୍ ମକ୍ ଉଜ୍ କଃରୁ ହାର୍ସି ।”
41 இயேசு மனதுருகினவராய் தன் கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார்.
ଜିସୁ ତାର୍ ଉହ୍ରେ ଦଃୟା ଦଃକାୟ୍ଲା ଆର୍ ଆତ୍ ଲାମାୟ୍ ତାକ୍ ଚୁୟ୍କଃରି କୟ୍ଲା, “ମୁଁୟ୍ ମଃନ୍ କଃରୁଲେ ତୁୟ୍ ଉଜ୍ ଅଃଉ!”
42 உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கியது, அவன் குணமடைந்தான்.
ଆର୍ ସେଦାହ୍ରେ ସେମାନାୟ୍ର୍ ବଃଡ୍ ରଗ୍ ଚାଡ୍ଲି, ଆର୍ ସେ ଉଜ୍ ଅୟ୍ଲା ।
43 இயேசு அவனுக்கு ஒரு கண்டிப்பான எச்சரிப்பைக் கொடுத்து:
ଜିସୁ ସେମାନାୟ୍କେ ଜଃଉଁକେ କୟ୍ଲା, ମଃତର୍ ତାକ୍ ଜଃଗ୍ରାତ୍ କଃରାୟ୍ କୟ୍ଲା,
44 “நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடி பார்த்துக்கொள். ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து. அது அவர்களுக்கு நீ சுகமடைந்ததற்கான ஒரு சாட்சியாய் இருக்கும்” என்று சொல்லி அவனை உடனே அனுப்பிவிட்டார்.
“ମୁଁୟ୍ ତର୍ ଗିନେ ଜାୟ୍ରି କଃଲେ, ସେ କଃତା କାକେ ହେଁ କଃଉନାୟ୍, ମଃତର୍ ଜାଆ ଆର୍ ଜାଜକ୍କେ ଦଃକାଉ, ଆର୍ ତକେ ନିର୍ମୁଳ୍ କଃରା ଅୟ୍ଆଚେ ବଃଲି ଲକ୍ମଃନାର୍ ଚଃମେ ସାକି ଦେଉଁକେ, ମସାର୍ ବିଦି ହଃର୍କାରେ ଦାନ୍ ଦେସ୍ ।”
45 ஆனால் அவன் புறப்பட்டுப்போய் தாராளமாய் பேசத்தொடங்கி, தனக்கு நடந்த செய்தியை எங்கும் பரப்பினான். இதன் காரணமாக, இயேசுவினால் ஒரு பட்டணத்திற்குள்ளும் வெளிப்படையாக செல்லமுடியாமல், வெளியே தனிமையான இடங்களிலேயே தங்கினார். ஆனால் எல்லா இடங்களிலும் இருந்து மக்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
ମଃତର୍ ସେମାନାୟ୍ ବାରାୟ୍ ଗଃଲା ଆର୍ ସେକଃତା ସଃବୁ ହାକ୍ କଃଉଁକେ ଦଃର୍ଲା, ସେ ଇବାନ୍ୟା ପର୍ଚାର୍ କଃଲା ଜେ, ଜିସୁ କୁୟ୍ ଗଃଳେ ହେଁ ଦଃକ୍ଣେ ଜଃଉଁକେ ନଃହାର୍ଲା; ମଃତର୍ ସେ ଲକ୍ବାକ୍ ନୟ୍ଲା ଟାଣେ ରେଉଁକ୍ ଦଃର୍ଲା, ମଃତର୍ ଚାରିହାକାର୍ ଲକ୍ମଃନ୍ ତାର୍ ଟାଣେ ଆସୁକ୍ ଦଃର୍ଲାୟ୍ ।