< லூக்கா 1 >

1 மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின் விவரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் முன்வந்தார்கள்.
ⲁ̅ⲉⲡⲓⲇⲏ ⲟⲩⲙⲏϣ ⲩϩⲓⲧⲟⲧⲟⲩ ⲉ⳿ⲥϧⲉ ϩⲁⲛⲥⲁϫⲓ ⲉⲑⲃⲉ ⲛⲓ⳿ϩⲃⲏⲟⲩⲓ ⲉⲧⲁⲩϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ⳿ⲛϧⲏⲧⲉⲛ.
2 துவக்கத்திலிருந்து கண்கண்ட சாட்சிகளாகவும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியர்களாகவும் இருந்த அவர்கள், எங்களுக்குக் கொடுக்கப்பட்டபடியே எழுதினார்கள்.
ⲃ̅ⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲏϯ ⲉⲧⲁⲩϯ ⳿ⲉⲧⲟⲧⲉⲛ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲛϫⲉ ⲛⲓϣⲟⲣⲡ ⲉⲧⲁⲩⲛⲁⲩ ⲩⲟϩ ⲁⲩϣⲱⲡⲓ ⲉⲩⲟⲓ ⳿ⲛⲣⲉϥϣⲉⲙϣⲓ ⳿ⲙⲡⲓⲥⲁϫⲓ.
3 நானும் உமக்கு அவற்றை ஒழுங்காக எழுதுவதற்குத் தீர்மானித்தேன். துவக்கத்திலிருந்து நடந்த எல்லாவற்றையும் கவனமாய் விசாரித்தறிந்து, இதை எழுதுகிறேன்.
ⲅ̅ⲁⲥⲣⲁⲛⲏⲓ ϩⲱ ⳿ⲉⲁⲓⲙⲟϣⲓ ⳿ⲛⲥⲁ ϩⲱⲃ ⲛⲓⲃⲉⲛ ϧⲉⲛ ⲟⲩⲧⲁϫⲣⲟ ⳿ⲉ⳿ⲥϧⲁⲓ ⲛⲁⲕ ⳿ⲉ⳿ⲫⲣⲏϯ ⳿ⲕⲣⲁⲧⲓⲥⲧⲉ ⲉⲟⲫⲓⲗⲉ.
4 இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விஷயங்கள் நிச்சயமாக உண்மையானவை என்பதை நீர் அறிந்துகொள்ளலாம்.
ⲇ̅ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉⲕⲥⲟⲩⲉⲛ ⲡⲓⲧⲁϫⲣⲟ ⳿ⲛⲧⲉ ⲛⲓⲥⲁϫⲓ ⲛⲏⲉⲧⲁⲩⲉⲣⲕⲁⲑⲏⲭⲓⲛ ⳿ⲙⲙⲟⲕ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ⳿ⲛϧⲏⲧⲟⲩ.
5 ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், சகரியா என்னும் பெயருடைய ஒரு ஆசாரியன் இருந்தான். இவன் அபியாவின் ஆசாரியப் பிரிவைச் சேர்ந்தவன். இவனுடைய மனைவி எலிசபெத்தும், ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியைச் சேர்ந்தவள்.
ⲉ̅ⲁⲥϣⲱⲡⲓ ϧⲉⲛ ⲛⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⲛⲧⲉ ⲏⲣⲱⲇⲏⲥ ⳿ⲡⲟⲩⲣⲟ ⳿ⲛⲧⲉ ϯⲓⲟⲩⲇⲉ⳿ⲁ ⲛⲉ ⲟⲩⲟⲛ ⲟⲩⲟⲩⲏⲃ ⳿ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲍⲁⲭⲁⲣⲓⲁⲥ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲛϣⲉⲙϣⲓ ⳿ⲛⲧⲉ ⲁⲃⲓ⳿ⲁ ⲟⲩⲟϩ ⲧⲉϥ⳿ⲥϩⲓⲙⲓ ⲉ ⲟⲩ⳿ⲉⲃⲟⲗ ⲧⲉ ϧⲉⲛ ⲛⲓϣⲉⲣⲓ ⳿ⲛⲧⲉ ⳿ⲁ⳿ⲁⲣⲱⲛ ⲟⲩⲟϩ ⲡⲉⲥⲣⲁⲛ ⲡⲉ ⳿ⲉⲗⲓⲥⲁⲃⲉⲧ.
6 அவர்கள் இருவரும் இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள். மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டார்கள்.
ⲋ̅ⲛⲉ ϩⲁⲛ⳿ⲑⲙⲏⲓ ⲇⲉ ⳿ⲙ⳿ⲡⲃ̅ ⲛⲉ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲫϯ ⲉⲩⲙⲟϣⲓ ϧⲉⲛ ⲓ⳿ⲉⲛⲧⲟⲗⲏ ⲧⲏⲣⲟⲩ ⲛⲉⲙ ⲛⲓⲙⲉⲑⲙⲏⲓ ⳿ⲛⲧⲉ Ⲡ⳪ ⲉⲩⲟⲓ ⳿ⲛⲁⲧⲁⲣⲓⲕⲓ.
7 ஆனாலும் எலிசபெத் மலடியாக இருந்ததினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; அவர்கள் இருவரும், இப்பொழுது வயது சென்றவர்களாய் இருந்தார்கள்.
ⲍ̅ⲟⲩⲟϩ ⲛⲉ ⳿ⲙⲙⲟⲛⲧⲟⲩ ϣⲏⲣⲓ ⳿ⲙⲙⲁⲩ ⲡⲉ ϫⲉ ⲟⲩⲏⲓ ⲛⲉ ⲟⲩⲁⲧϭⲣⲏⲛ ⲧⲉ ⲉⲗⲓⲥⲁⲃⲉⲧ ⲟⲩⲟϩ ⲛⲉ ⲁⲩⲁⲓⲁⲓ ⳿ⲙ⳿ⲡⲃ̅ ⲡⲉ ϧⲉⲛ ⲛⲟⲩ⳿ⲉϩⲟⲟⲩ.
8 ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் பணிபுரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக ஆசாரியப் பணியைச் செய்தான்.
ⲏ̅ⲁⲥϣⲱⲡⲓ ⲇⲉ ⲉϥ⳿ⲓⲣⲓ ⳿ⲛⲧⲉϥⲙⲉⲧⲟⲩⲏⲃ ϧⲉⲛ ϯⲧⲁⲝⲓⲥ ⳿ⲛⲧⲉ ⲛⲉϥ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲛϣⲉⲙϣⲓ ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲫϯ.
9 ஒரு நாள் ஆசாரியர்களின் வழக்கத்தின்படி கடமைகளைச் செய்வதற்கு சீட்டு போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் போய் தூபங்காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டான்.
ⲑ̅ⲕⲁⲧⲁ ϯⲕⲁϩⲥ ⳿ⲛⲧⲉ ϯⲙⲉⲧⲟⲩⲏⲃ ⲁ ⲡⲓⲱⲡ ⳿ⲓ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲉ⳿ⲉⲛ ⳿ⲥⲑⲟⲓⲛⲟⲩϥⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⲟⲩⲟϩ ⲁϥϣⲉ ⲛⲁϥ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉⲡⲓⲉⲣⲫⲉⲓ ⳿ⲛⲧⲉ Ⲡ⳪.
10 தூபங்காட்டும் வேளை வந்தபோது வழிபாட்டிற்கு கூடிவந்த மக்கள் வெளியே மன்றாடிக்கொண்டிருந்தார்கள்.
ⲓ̅ⲟⲩⲟϩ ⲛⲁⲣⲉ ⲡⲓⲙⲏϣ ⲧⲏⲣϥ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲗⲁⲟⲥ ⲛⲁⲩⲧⲱⲃϩ ⲥⲁⲃⲟⲗ ⳿ⲙ⳿ⲫⲛⲁⲩ ⳿ⲙⲡⲓ⳿ⲥⲑⲟⲓⲛⲟⲩϥⲓ.
11 அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான்.
ⲓ̅ⲁ̅ⲁϥⲟⲩⲱⲛϩ ⲇⲉ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲛϫⲉ ⲟⲩⲁⲅⲅⲉⲗⲟⲥ ⳿ⲛⲧⲉ Ⲡ⳪ ⲉϥⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧϥ ⲥⲁⲟⲩ⳿ⲓⲛⲁⲙ ⳿ⲙⲡⲓⲙⲁ⳿ⲛⲉⲣϣⲱⲟⲩϣⲓ ⳿ⲛⲧⲉ ⲡⲓ⳿ⲥⲑⲟⲓⲛⲟⲩϥⲓ.
12 சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான்.
ⲓ̅ⲃ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥⲛⲁⲩ ⳿ⲛϫⲉ ⲍⲁⲭⲁⲣⲓⲁⲥ ϥ⳿ϣⲑⲟⲣⲧⲉⲣ ⲟⲩⲟϩ ⲩϩⲟϯ ⲁⲥ⳿ⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲱϥ.
13 அந்தத் தூதனோ அவனைப் பார்த்து: “சகரியாவே, பயப்படாதே; உனது மன்றாட்டு கேட்கப்பட்டது. உனது மனைவி எலிசபெத் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், நீ அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்.
ⲓ̅ⲅ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁϥ ⳿ⲛϫⲉ ⲡⲓⲁⲅⲅⲉⲗⲟⲥ ϫⲉ ⳿ⲙⲡⲉⲣⲉⲣϩⲟϯ ⲍⲁⲭⲁⲣⲓⲁⲥ ϫⲉ ⲟⲩⲏⲓ ⲁⲩⲥⲱⲧⲉⲙ ⲉⲡⲉⲕⲧⲱⲃϩ ⲟⲩⲟϩ ⲧⲉⲕ⳿ⲥϩⲓⲙⲓ ⳿ⲉⲗⲓⲥⲁⲃⲉⲧ ⲉⲥ⳿ⲉⲙⲓⲥⲓ ⲛⲁⲕ ⳿ⲛⲟⲩϣⲏⲣⲓ ⲟⲩⲟϩ ⲉⲕ⳿ⲉⲙⲟⲩϯ ⳿ⲉⲡⲉϥⲣⲁⲛ ϫⲉ ⲓⲱⲁⲛⲛⲏⲥ.
14 அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்;
ⲓ̅ⲇ̅ⲟⲩⲟϩ ⲉⲣⲉ ⲟⲩⲣⲁϣⲓ ⲱⲡⲓ ⲁⲕ ⲛⲉⲙ ⲟⲩⲑⲉⲗⲏⲗ ⲟⲩⲟϩ ⲉⲣⲉ ⲟⲩⲙⲏϣ ⲣⲁϣⲓ ⳿ⲉϫⲉⲛ ⲡⲉϥϫⲓⲛⲙⲓⲥⲓ.
15 அவன் கர்த்தருடைய பார்வையில் பெரியவனாயிருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை இரசத்தையோ, மதுபானத்தையோ அருந்த மாட்டான், அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவான்.
ⲓ̅ⲉ̅⳿ϥⲛⲁϣⲱⲡⲓ ⲅⲁⲣ ⲉϥⲟⲓ ⳿ⲛⲛⲓϣϯ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲠ⳪ ⲟⲩⲟϩ ⲟⲩⲏⲣⲡ ⲛⲉⲙ ⲩⲥⲓⲕⲉⲣⲁ ⳿ⲛⲛⲉϥⲥⲱⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ϥⲛⲁⲙⲟϩ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲟⲩⲡ͞ⲛⲁ̅ ⲉϥⲟⲩⲁⲃ ⲓⲥϫⲉⲛ ⲉϥϧⲉⲛ ⳿ⲑⲛⲉϫⲓ ⳿ⲛⲧⲉ ⲧⲉϥⲙⲁⲩ.
16 அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பவும் கொண்டுவருவான்.
ⲓ̅ⲋ̅ⲟⲩⲟϩ ⲉϥ⳿ⲉ⳿ⲑⲣⲉ ⲟⲩⲙⲏϣ ⳿ⲛⲧⲉ ⲉⲛϣⲏⲣⲓ ⳿ⲙⲡⲓⲥ̅ⲗ̅ ⲕⲟⲧⲟⲩ ⳿ⲉⲠ⳪ ⲡⲟⲩⲛⲟⲩϯ.
17 அவன் எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் கர்த்தருக்கு முன்பாகப் போவான்; தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகள் பக்கமாகத் திருப்புவான், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக முன்னேற்பாடு செய்திருக்கிற மக்களை அவன் ஆயத்தம் செய்வான்” என்றான்.
ⲓ̅ⲍ̅ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲟϥ ⳿ϥⲛⲁⲉⲣϣⲟⲣⲡ ⳿ⲛ⳿ⲓ ϧⲁϫⲱϥ ⳿ⲙⲡⲉϥ⳿ⲙⲑⲟ ϧⲉⲛ ⲟⲩⲡ͞ⲛⲁ̅ ⲛⲉⲙ ⲟⲩϫⲟⲙ ⳿ⲛⲧⲉ ⲏⲗⲓⲁⲥ ⲉⲧⲁⲥⲑⲉ ⳿ⲡϩⲏⲧ ⳿ⲛϩⲁⲛⲓⲟϯ ⳿ⲉⲛⲟⲩϣⲏⲣⲓ ⲛⲉⲙ ⲛⲏⲉⲧⲟⲓ ⳿ⲛⲁⲧⲑⲱⲧ ⳿ⲛϩⲏⲧ ϧⲉⲛ ⳿ⲫⲙⲉⲩⲓ ⳿ⲛⲧⲉ ⲛⲓ⳿ⲑⲙⲏⲓ ⳿ⲉⲥⲉⲃⲧⲉ ⲟⲩⲗⲁⲟⲥ ⳿ⲙⲠ⳪ ⳿ⲉⲁⲩ⳿ⲑⲙⲁⲓⲟϥ.
18 அப்பொழுது சகரியா அந்தத் தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் கிழவனாய் இருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாய் இருக்கிறாளே” என்றான்.
ⲓ̅ⲏ̅ⲩⲟϩ ⲡⲉϫⲉ ⲍⲁⲭⲁⲣⲓⲁⲥ ⳿ⲙⲡⲓⲁⲅⲅⲉⲗⲟⲥ ϫⲉ ⳿ⲛ⳿ϧⲣⲏⲓ ϧⲉⲛ ⲟⲩ ϯⲛⲁ⳿ⲉⲙⲓ ⳿ⲉⲫⲁⲓ ⳿ⲁⲛⲟⲕ ⲅⲁⲣ ⲟⲩϧⲉⲗⲗⲟ ⲟⲩⲟϩ ⲧⲁ⳿ⲥϩⲓⲙⲓ ⲁⲥⲁⲓⲁⲓ ϧⲉⲛ ⲛⲉⲥ⳿ⲉϩⲟⲟⲩ.
19 அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் சமுகத்தில் நிற்கின்ற காபிரியேல்; உன்னுடன் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உனக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்.
ⲓ̅ⲑ̅ⲟⲩⲟϩ ⲁϥⲉⲣⲟⲩⲱ ⳿ⲛϫⲉ ⲡⲓⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⳿ⲁⲛⲟⲕ ⲡⲉ ⲅⲁⲃⲣⲓⲏⲗ ⲫⲏⲉⲧⲟϩⲓ ⳿ⲉⲣⲁⲧϥ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲫϯ ⲟⲩⲟϩ ⲁⲩⲧⲁⲟⲩⲟⲓ ⳿ⲉⲥⲁϫⲓ ⲉⲙⲁⲕ ⲟⲩⲟϩ ⳿ⲉϩⲓϣⲉⲛⲛⲟⲩϥⲓ ⲛⲁⲕ ⳿ⲛⲛⲁⲓ.
20 நீயோ எனது வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இவை நிகழும் நாள்வரைக்கும் நீ பேச முடியாமல் ஊமையாயிருப்பாய்; நான் சொன்னவையோ நியமித்த காலத்தில் நிறைவேறும்” என்றான்.
ⲕ̅ⲟⲩⲟϩ ϩⲏⲡⲡⲉ ⲉⲕ⳿ⲉϣⲱⲡⲓ ⲉⲕⲭⲱ ⳿ⲛⲣⲱⲕ ⲟⲩⲟϩ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϣϫⲟⲙ ⳿ⲙⲙⲟⲕ ⳿ⲉⲥⲁϫⲓ ϣⲁ ⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⲉⲧⲉ ⲁⲓ ⲛⲁϣⲱⲡⲓ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲙ⳿ⲫⲙⲁ ϫⲉ ⳿ⲙⲡⲉⲕⲛⲁϩϯ ⳿ⲉⲛⲁⲥⲁϫⲓ ⲛⲁⲓ ⲉⲑⲛⲁϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲡⲟⲩⲥⲏⲟⲩ.
21 அதேவேளையில், சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள், அவன் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கிறான் என யோசிக்கத் தொடங்கினார்கள்.
ⲕ̅ⲁ̅ⲟⲩⲟϩ ⲛⲁⲣⲉ ⲡⲓⲗⲁⲟⲥ ⲧⲏⲣϥ ϫⲟⲩϣⲧ ⳿ⲉⲃⲟⲗ ϧⲁϫⲱϥ ⳿ⲛⲍⲁⲭⲁⲣⲓⲁⲥ ⲟⲩⲟϩ ⲛⲁⲩⲉⲣ⳿ϣⲫⲏ ⲣⲓ ⲡⲉ ⲉⲑⲃⲉϫⲉ ⲁϥⲱⲥⲕ ⳿ⲛϧⲟⲩⲛ ϧⲉⲛ ⲡⲓⲉⲣⲫⲉⲓ.
22 அவன் வெளியே வந்தபோது, அவர்களோடு பேச அவனால் முடியவில்லை. அவன் அவர்களுக்கு சைகை காட்டியதால், அவன் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறான் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவன் பேசமுடியாதவனாகவே இருந்தான்.
ⲕ̅ⲃ̅ⲉⲧⲁϥ⳿ⲓ ⲇⲉ ⳿ⲉⲃⲟⲗ ⲛⲁϥ⳿ϣϫⲉⲙϫⲟⲙ ⲛⲥⲁϫⲓ ⲛⲉⲙⲱⲟⲩ ⲁⲛ ⲡⲉ ⲟⲩⲟϩ ⲁⲩ⳿ⲉⲙⲓ ϫⲉ ⲟⲩⲟⲩⲱⲛϩ ⲡⲉⲧⲁϥⲛⲁⲩ ⳿ⲉⲣⲟϥ ⳿ⲛϧⲟⲩⲛ ϧⲉⲛ ⲡⲓⲉⲣⲫⲉⲓ ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲟϥ ⲛⲁϥϭⲱⲣⲉⲙ ⳿ⲉⲣⲱⲟⲩ ⲡⲉ ⲟⲩⲟϩ ϥⲟϩⲓ ϥⲟⲓ ⳿ⲛ⳿ⲉⲃⲟ.
23 அவனது பணிசெய்யும் காலம் முடிவடைந்தபோது, அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
ⲕ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲁⲥϣⲱⲡⲓ ⲉⲧⲁⲩⲙⲟϩ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛϫⲉ ⲛⲉϥ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲛϣⲉⲙϣⲓ ⲁϥϣⲉ ⲛⲁϥ ⳿ⲉⲡⲉϥⲏⲓ.
24 இந்த நாட்களுக்குப்பின் அவன் மனைவி எலிசபெத் கருத்தரித்தாள், அவள் ஐந்து மாதங்களாக பிறர் கண்களில் படாதிருந்தாள்.
ⲕ̅ⲇ̅ⲙⲉⲛⲉⲛⲥⲁ ⲛⲁⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⲇⲉ ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲁⲥⲉⲣⲃⲟⲕⲓ ⳿ⲛϫⲉ ⳿ⲉⲗⲓⲥⲁⲃⲉⲧ ⲧⲉϥ⳿ⲥϩⲓⲙⲓ ⲟⲩⲟϩ ⲛⲁⲥϩⲱⲡ ⳿ⲙⲙⲟⲥ ⲡⲉ ⳿ⲛⲉ̅ ⳿ⲛ⳿ⲁⲃⲟⲧ ⲉⲥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ.
25 அப்பொழுது அவள், “கர்த்தரே இதைச் செய்தார், இந்த நாட்களில் அவர் எனக்குத் தயவுகாட்டி, என் மக்களிடையே எனக்கிருந்த அவமானத்தை நீக்கிவிட்டார்” என்றாள்.
ⲕ̅ⲉ̅ϫⲉ ⲡⲁⲓⲣⲏϯ ⲡⲉⲧⲁ Ⲡ⳪ ⲁⲓϥ ⲏⲓ ⲉⲛ ⲛⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⲉⲧⲁϥϫⲟⲩϣⲧ ⳿ⲉⲣⲟⲓ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ⳿ⲉⲱⲗⲓ ⳿ⲙⲡⲁϣⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲓⲣⲱⲙⲓ.
26 ஆறாம் மாதத்தில், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஒரு பட்டணத்திற்கு இறைவன் காபிரியேல் தூதனை,
ⲕ̅ⲋ̅ϧⲉⲛ ⲡⲓⲁⲃⲟⲧ ⲇⲉ ⳿ⲙⲙⲁϩⲋ̅ ⲁⲩⲟⲩⲱⲣⲡ ⳿ⲛⲅⲁⲃⲣⲓⲏⲗ ⲓⲁⲅⲅⲉⲗⲟⲥ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ ⲫϯ ⳿ⲉⲟⲩⲃⲁⲕⲓ ⳿ⲛⲧⲉ ϯⲅⲁⲗⲓⲗⲉ⳿ⲁ ⳿ⲉⲡⲉⲥⲣⲁⲛ ⲡⲉ ⲛⲁⲍⲁⲣⲉⲑ.
27 ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்; அவள் தாவீதின் சந்ததியானாகிய யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள்.
ⲕ̅ⲍ̅ϩⲁ ⲟⲩⲡⲁⲣⲑⲉⲛⲟⲥ ⳿ⲉⲁⲩⲱⲡ ⳿ⲛⲥⲱⲥ ⳿ⲛⲟⲩⲣⲱⲙⲓ ⳿ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲓⲱⲥⲏⲫ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲡⲏⲓ ⳿ⲛⲇⲁⲩⲓⲇ ⲟⲩⲟϩ ⳿ⲫⲣⲁⲛ ⳿ⲛϯⲡⲁⲣⲑⲉⲛⲟⲥ ⲡⲉ ⲙⲁⲣⲓⲁⲙ.
28 கர்த்தருடைய தூதன் அவளிடம் போய், “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்” என்றான்.
ⲕ̅ⲏ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥϣⲉ ⲛⲁϥ ⳿ⲉϧⲟⲩⲛ ϣⲁⲣⲟⲥ ⲡⲉϫⲁϥ ⲁⲥ ϫⲉ ⲭⲉⲣⲉ ⲑⲏ ⲉⲑⲙⲉϩ ⳿ⲛ⳿ϩⲙⲟⲧ Ⲡ⳪ ⲛⲉⲙⲉ.
29 தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்து, இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள்.
ⲕ̅ⲑ̅⳿ⲛⲑⲟⲥ ⲇⲉ ⲁⲥ⳿ϣⲑⲟⲣⲧⲉⲣ ⳿ⲉϫⲉⲛ ⲡⲁⲓⲥⲁϫⲓ ⲟⲩⲟϩ ⲛⲁⲥⲙⲟⲕⲙⲉⲕ ⲡⲉ ϫⲉ ⲟⲩ ⲁϣ ⳿ⲛⲣⲏϯ ⲡⲉ ⲡⲁⲓⲁⲥⲡⲁⲥⲙⲟⲥ.
30 ஆனால் அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய்.
ⲗ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲉ ⲡⲓⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲛⲁⲥ ϫⲉ ⳿ⲙⲡⲉⲣⲉⲣϩⲟϯ ⲙⲁⲣⲓⲁⲙ ⲁⲣⲉϫⲓⲙⲓ ⲅⲁⲣ ⳿ⲛⲟⲩ⳿ϩⲙⲟⲧ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲫϯ.
31 நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும்.
ⲗ̅ⲁ̅ⲟⲩⲟϩ ⲏⲡⲡⲉ ⲧⲉⲣⲁⲉⲣⲃⲟⲕⲓ ⲟⲩⲟϩ ⳿ⲛⲧⲉⲙⲓⲥⲓ ⳿ⲛⲟⲩϣⲏⲣⲓ ⲟⲩⲟϩ ⲉⲣ⳿ⲉⲙⲟⲩϯ ⳿ⲉⲡⲉϥⲣⲁⲛ ϫⲉ Ⲓⲏ̅ⲥ̅.
32 அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார்.
ⲗ̅ⲃ̅ⲫⲁⲓ ⲉϥ⳿ⲉⲉⲣⲟⲩⲛⲓϣϯ ⲟⲩⲟϩ ⲉⲩ⳿ⲉⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲡϣⲏⲣⲓ ⳿ⲙⲡⲉⲧϭⲟⲥⲓ ⲟⲩⲟϩ ⲉϥ⳿ⲉϯ ⲛⲁϥ ⳿ⲛϫⲉ Ⲡ⳪ ⲫϯ ⳿ⲙ⳿ⲡ⳿ⲑⲣⲟⲛⲟⲥ ⳿ⲛⲇⲁⲩⲓⲇ ⲡⲉϥⲓⲱⲧ.
33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். (aiōn g165)
ⲗ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⳿ϥⲛⲁⲉⲣⲟⲩⲣⲟ ⳿ⲉϫⲉⲛ ⳿ⲡⲏⲓ ⳿ⲛⲓⲁⲕⲱⲃ ϣⲁ ⳿ⲉⲛⲉϩ ⲩⲟϩ ⳿ⲛⲛⲉ ϧⲁ⳿ⲉ ϣⲱⲡⲓ ⳿ⲛⲧⲉϥⲙⲉⲧⲟⲩⲣⲟ. (aiōn g165)
34 அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள்.
ⲗ̅ⲇ̅ⲡⲉϫⲉ ⲙⲁⲣⲓⲁⲙ ⲇⲉ ⳿ⲙⲡⲓⲁⲅⲅⲉⲗⲟⲥ ϫⲉ ⲡⲱⲥ ⲫⲁⲓ ⲛⲁϣⲱⲡⲓ ⳿ⲙⲙⲟⲓ ⲉⲡⲓⲇⲏ ϯⲥⲱⲟⲩⲛ ⳿ⲛϩⲁⲓ ⲁⲛ.
35 அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார்.
ⲗ̅ⲉ̅ⲟⲩⲟϩ ⲁϥⲉⲣⲟⲩⲱ ⳿ⲛϫⲉ ⲡⲓⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲥ ϫⲉ ⲟⲩⲡ͞ⲛⲁ̅ ⲉϥⲟⲩⲁⲃ ⳿ϥⲛⲁ⳿ⲓ ⳿ⲉ⳿ϩⲣⲏⲓ ⳿ⲉϫⲱ ⲟⲩⲟϩ ⲟⲩϫⲟⲙ ⳿ⲛⲧⲉ ⲡⲉⲧϭⲟⲥⲓ ⲉⲑⲛⲁⲉⲣϧⲏ ⲓⲃⲓ ⲉⲣⲟ ⲉⲑⲃⲉⲫⲁⲓ ⲫⲏⲉⲧⲟⲩⲛⲁⲙⲁⲥϥ ⳿ϥⲟⲩⲁⲃ ⲉⲩ⳿ⲉⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⳿ⲡϣⲏⲣⲓ ⳿ⲙⲫϯ.
36 உனது உறவினராகிய எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கிறாள். மலடி எனப்பட்டவள் இப்பொழுது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன.
ⲗ̅ⲋ̅ⲟⲩⲟϩ ϩⲏⲡⲡⲉ ⲓⲥ ⲉⲗⲓⲥⲁⲃⲉⲧ ⲧⲉⲥⲥⲩⲅⲅⲉⲛⲏ ⲥ ⲁⲥⲉⲣⲃⲟⲕⲓ ⲱⲥ ⳿ⲛⲟⲩϣⲏⲣⲓ ϧⲉⲛ ⲧⲉⲥⲙⲉⲧϧⲉⲗⲗⲱ ⲟⲩⲟϩ ⲫⲁⲓ ⲡⲉⲥⲙⲁϩⲋ̅ ⳿ⲛ⳿ⲁⲃⲟⲧ ⲡⲉ ⲑⲏ ⲉⲧⲟⲩⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟⲥ ϫⲉ ϯⲁⲧϭⲣⲏⲛ.
37 இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை” என்றான்.
ⲗ̅ⲍ̅ϫⲉ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϩⲗⲓ ⳿ⲛⲥⲁϫⲓ ⲓ ⲛⲁⲧϫⲟⲙ ϧⲁⲧⲉⲛ ⲫϯ.
38 அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான்.
ⲗ̅ⲏ̅ⲡⲉϫⲉ ⲙⲁⲣⲓⲁⲙ ⲇⲉ ϫⲉ ⲓⲥ ϯⲃⲱⲕⲓ ⳿ⲛⲧⲉ Ⲡ⳪ ⲉⲥ⳿ⲉϣⲱⲡⲓ ⲛⲏⲓ ⲕⲁⲧⲁ ⲡⲉⲕⲥⲁϫⲓ ⲟⲩⲟϩ ⲁϥϣⲉ ⲛⲁϥ ⳿ⲉⲃⲟⲗ ϩⲁⲣⲟⲥ ⲛϫⲉ ⲡⲓⲁⲅⲅⲉⲗⲟⲥ.
39 அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு விரைவாகப் போனாள்;
ⲗ̅ⲑ̅ⲁⲥⲧⲱⲛⲥ ⲇⲉ ⳿ⲛϫⲉ ⲙⲁⲣⲓⲁⲙ ϧⲉⲛ ⲛⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⲁⲥϣⲉ ⲛⲁⲥ ϧⲉⲛ ⲟⲩⲓⲏⲥ ⳿ⲉⲡⲓⲓⲁⲛⲧⲱⲟⲩ ⳿ⲉⲟⲩⲃⲁⲕⲓ ⳿ⲛⲧⲉ ⲓⲟⲩⲇⲁ.
40 அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் போய், எலிசபெத்தை வாழ்த்தினாள்.
ⲙ̅ⲟⲩⲟϩ ⲁⲥϣⲉ ⳿ⲉϧⲟⲩⲛ ⳿ⲉ⳿ⲡⲏⲓ ⳿ⲛⲍⲁⲭⲁⲣⲓⲁⲥ ⲟⲩⲟϩ ⲁⲥⲉⲣⲁⲥⲡⲁⲍⲉⲥⲑⲉ ⳿ⲛ⳿ⲉⲗⲓⲥⲁⲃⲉⲧ.
41 மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய கருப்பையில் இருந்த குழந்தை துள்ளியது. அப்பொழுது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
ⲙ̅ⲁ̅ⲟⲩⲟϩ ⲁⲥϣⲱⲡⲓ ⲉⲧⲁⲥⲥⲱⲧⲉⲙ ⳿ⲛϫⲉ ⳿ⲉⲗⲓⲥⲁⲃⲉⲧ ⳿ⲉ⳿ⲡⲁⲥⲡⲁⲥⲙⲟⲥ ⳿ⲙⲙⲁⲣⲓⲁⲙ ⲁϥⲕⲓⲙ ⳿ⲛϫⲉ ⲡⲓⲙⲁⲥ ϧⲉⲛ ⲧⲉⲥⲛⲉϫⲓ ⲟⲩⲟϩ ⲁⲥⲙⲟϩ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲟⲩⲡ͞ⲛⲁ̅ ⲉϥⲟⲩⲁⲃ ⳿ⲛϫⲉ ⳿ⲉⲗⲓⲥⲁⲃⲉⲧ.
42 உரத்த குரலில் சொன்னதாவது: “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப்போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது!
ⲙ̅ⲃ̅ⲩⲟϩ ⲁⲥⲱϣ ⳿ⲉ⳿ⲡϣⲱⲓ ϧⲉⲛ ⲟⲩⲛⲓϣϯ ⳿ⲛ⳿ⲥⲙⲏ ⲟⲩⲟϩ ⲡⲉϫⲁⲥ ⲧⲉ⳿ⲥⲙⲁⲣⲱⲟⲩⲧ ⳿ⲛⲑⲟ ϧⲉⲛ ⲛⲓϩⲓ⳿ⲟⲙⲓ ⲟⲩⲟϩ ⳿ϥ⳿ⲥⲙⲁⲣⲱⲟⲩⲧ ⳿ⲛϫⲉ ⳿ⲡⲟⲩⲧⲁϩ ⳿ⲛⲧⲉ ⲧⲉⲛⲉϫⲓ.
43 என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன்.
ⲙ̅ⲅ̅ⲫⲁⲓ ⲟⲩ⳿ⲉⲃⲟⲗ ⲑⲱⲛ ⲛⲏⲓ ⲡⲉ ϫⲉ ⳿ⲛⲧⲉ ⳿ⲑⲙⲁⲩ ⳿ⲙⲡⲁϫ̅ⲥ̅ ⳿ⲓ ϩⲁⲣⲟⲓ.
44 உனது வாழ்த்துதலின் சத்தம் எனது காதில்பட்டதுமே, எனது கருப்பையில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று.
ⲙ̅ⲇ̅ϩⲏⲡⲡⲉ ⲅⲁⲣ ⲓⲥϫⲉⲛ ⲉⲧⲁⲥϣⲱⲡⲓ ⳿ⲛϫⲉ ⳿ⲧ⳿ⲥⲙⲏ ⳿ⲛⲧⲉ ⲉⲁⲥⲡⲁⲥⲙⲟⲥ ⲉⲛ ⲛⲁⲙⲁϣϫ ⲁϥⲕⲓⲙ ⳿ⲛϫⲉ ⲡⲓⲙⲁⲥ ϧⲉⲛ ⲟⲩⲑⲉⲗⲏⲗ ϧⲉⲛ ⲧⲁⲛⲉϫⲓ.
45 கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள்.
ⲙ̅ⲉ̅ⲟⲩⲟϩ ⲱⲟⲩ⳿ⲛⲓⲁⲧⲥ ⳿ⲛⲑⲏ ⲉⲧⲁⲥⲛⲁϩϯ ϫⲉ ⳿ⲡϫⲱⲕ ⳿ⲉⲃⲟⲗ ⲛⲁϣⲱⲡⲓ ⳿ⲛⲛⲏ ⲧⲁⲩⲥⲁϫⲓ ⳿ⲙⲙⲱⲟⲩ ⲛⲁⲥ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ Ⲡ⳪.
46 அப்பொழுது மரியாள் சொன்னதாவது: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
ⲙ̅ⲋ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲉ ⲙⲁⲣⲓⲁⲙ ⲁ ⲧⲁⲯⲩⲭⲏ ϭⲓⲥⲓ ⳿ⲙⲠ⳪.
47 என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.
ⲙ̅ⲍ̅ⲟⲩⲟϩ ⲁ ⲡⲁⲡ͞ⲛⲁ̅ ⲑⲉⲗⲏⲗ ⳿ⲉϫⲉⲛ ϯ ⲡⲁⲥⲱⲧⲏⲣ.
48 ஏனெனில், அவர் தமது அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார். இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்;
ⲙ̅ⲏ̅ϫⲉ ⲁϥϫⲟⲩϣⲧ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ⳿ⲉϫⲉⲛ ⳿ⲡⲑⲉⲃⲓⲟ ⳿ⲛⲧⲉ ⲧⲉϥⲃⲱⲕⲓ ϩⲏⲡⲡⲉ ⲅⲁⲣ ⲓⲥϫⲉⲛ ϯⲛⲟⲩ ⲥⲉⲛⲁⲉⲣⲙⲁⲕⲁⲣⲓⲍⲓⲛ ⳿ⲙⲙⲟⲓ ⳿ⲛϫⲉ ⲓⲅⲉⲛⲉ⳿ⲁ ⲏⲣⲟⲩ.
49 வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்; பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.
ⲙ̅ⲑ̅ϫⲉ ⲁϥ⳿ⲓⲣⲓ ⲛⲏⲓ ⳿ⲛϩⲁⲛⲙⲉⲑⲛⲓϣϯ ⳿ⲛϫⲉ ⲫⲏⲉⲧϫⲟⲣ ⲟⲩⲟϩ ⳿ϥⲟⲩⲁⲃ ⳿ⲛϫⲉ ⲡⲉϥⲣⲁⲛ.
50 அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காண்பிக்கிறார்.
ⲛ̅ⲟⲩⲟϩ ⲡⲉϥⲛⲁⲓ ϣⲱⲡⲓ ϣⲁ ϩⲁⲛϫⲱⲟⲩ ⲛⲉⲙ ϩⲁⲛϫⲱⲟⲩ ⳿ⲛⲛⲏⲉⲧⲉⲣϩⲟϯ ϧⲁⲧⲉϥϩⲏ.
51 அவர் தமது புயத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்; தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை அவர் சிதறடித்தார்.
ⲛ̅ⲁ̅ⲁϥ⳿ⲓⲣⲓ ⳿ⲛⲟⲩⲁⲙⲁϩⲓ ϧⲉⲛ ⲡⲉϥ⳿ϫⲫⲟⲓ ⲁϥϫⲱⲣ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛⲛⲓϭⲁⲥⲓϩⲏⲧ ϧⲉⲛ ⳿ⲫⲙⲉⲩⲓ ⳿ⲛⲧⲉ ⲡⲟⲩϩⲏⲧ.
52 ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார். ஆனால், தாழ்மையானவர்களையோ அவர் உயர்த்தினார்.
ⲛ̅ⲃ̅ⲁϥⲣⲱϧⲧ ⳿ⲛϩⲁⲛϫⲱⲣⲓ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓ ϩⲁⲛ⳿ⲑⲣⲟⲛⲟⲥ ⲟⲩⲟϩ ⲁϥϭⲓⲥⲓ ⳿ⲛⲛⲏⲉⲧⲑⲉⲃⲓⲏⲟⲩⲧ.
53 அவர் பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார். ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார்.
ⲛ̅ⲅ̅ⲛⲏⲉⲧϩⲟⲕⲉⲣ ⲁϥ⳿ⲑⲣⲟⲩⲥⲓ ⲛⲁⲅⲁⲑⲟⲛ ⲟⲩⲟϩ ⲛⲏⲉⲧⲟⲓ ⳿ⲛⲣⲁⲙⲁⲟ ⲁϥⲟⲩⲟⲣⲡⲟⲩ ⳿ⲉⲃⲟⲗ ⲉⲩϣⲟⲩⲓⲧ.
54 அவர் தமது வேலைக்காரனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார்.
ⲛ̅ⲇ̅ⲁϥϯ ⲧⲟⲧϥ ⳿ⲙⲡⲓⲥ̅ⲗ̅ ⲡⲉϥ⳿ⲁⲗⲟⲩ ⳿ⲉⲉⲣ⳿ⲫⲙⲉⲩⲓ ⳿ⲙⲡⲉϥⲛⲁⲓ.
55 நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். (aiōn g165)
ⲛ̅ⲉ̅ⲁⲧⲁ ⳿ⲫⲣⲏϯ ⲉⲧⲁϥⲥⲁϫⲓ ⲛⲉⲙ ⲛⲉⲛⲓⲟϯ ⲁⲃⲣⲁⲁⲙ ⲛⲉⲙ ⲡⲉϥ⳿ϫⲣⲟϫ ϣⲁ ⳿ⲉⲛⲉϩ. (aiōn g165)
56 மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதற்குப் பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள்.
ⲛ̅ⲋ̅ⲁⲥϣⲱⲡⲓ ⲇⲉ ⲛⲉⲙⲁⲥ ⳿ⲛϫⲉ ⲙⲁⲣⲓⲁⲙ ⳿ⲛⲅ̅ ⳿ⲛⲁⲃⲟⲧ ⲟⲩⲟϩ ⲥⲕⲟⲧⲥ ⳿ⲉⲡⲉⲥⲏⲓ.
57 எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள்.
ⲛ̅ⲍ̅ⲁ ⲡⲓⲥⲏⲟⲩ ⲇⲉ ⲙⲟϩ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛⲧⲉ ⳿ⲉⲗⲓⲥⲁⲃⲉⲧ ⳿ⲉ⳿ⲑⲣⲉⲥⲙⲓⲥⲓ ⲟⲩⲟϩ ⲁⲥⲙⲓⲥⲓ ⳿ⲛⲟⲩϣⲏⲣⲓ.
58 அவளுடைய அயலவர்களும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன்கூட மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ⲛ̅ⲏ̅ⲟⲩⲟϩ ⲁⲩⲥⲱⲧⲉⲙ ⳿ⲛϫⲉ ⲛⲏ ⲧⲉ⳿ⲙ⳿ⲡⲕⲱϯ ⳿ⲙⲡⲉⲥⲏⲓ ⲛⲉⲙ ⲛⲉⲥⲥⲩⲅⲅⲉⲛⲏⲥ ϫⲉ ⲁ Ⲡ⳪ ⲉⲣ ⲡⲉϥⲛⲁⲓ ⳿ⲛⲟⲩⲛⲓϣϯ ⲛⲉⲙⲁⲥ ⲟⲩⲟϩ ⲛⲁⲩⲣⲁϣⲓ ⲛⲉⲙⲁⲥ ⲡⲉ.
59 அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள்.
ⲛ̅ⲑ̅ⲁⲥϣⲱⲡⲓ ⲇⲉ ϧⲉⲛ ⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲙⲙⲁϩⲏ̅ ⲁⲩ⳿ⲓ ϫⲉ ⳿ⲛⲧⲟⲩⲥⲟⲩⲃⲉ ⲡⲓ⳿ⲁⲗⲟⲩ ⲟⲩⲟϩ ⲛⲁⲩⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ⲡⲉ ⳿ⲉ⳿ⲫⲣⲁⲛ ⳿ⲙⲡⲉϥⲓⲱⲧ ⲍⲁ ⲭⲁⲣⲓⲁⲥ.
60 ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள்.
ⲝ̅ⲟⲩⲟϩ ⲁⲥⲉⲣⲟⲩⲱ ⳿ⲛϫⲉ ⲉϥⲙⲁⲩ ⲡⲉϫⲁⲥ ϫⲉ ⳿ⲙⲙⲟⲛ ⲁⲗⲗⲁ ⲙⲟⲩϯ ⳿ⲉⲡⲉϥⲣⲁⲛ ϫⲉ ⲓⲱⲁⲛⲛⲏⲥ.
61 அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள்.
ⲝ̅ⲁ̅ⲟⲩⲟϩ ⲡⲉϫⲱⲟⲩ ⲛⲁⲥ ϫⲉ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϩⲗⲓ ϧⲉⲛ ⲧⲉⲥⲩⲅⲅⲉⲛⲓⲁ ⲉⲩⲙⲟⲩϯ ⲉⲣⲟϥ ⳿ⲙⲡⲁⲓⲣⲁⲛ.
62 அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள்.
ⲝ̅ⲃ̅ⲁⲩϭⲱⲣⲉⲙ ⲇⲉ ⳿ⲉⲡⲉϥⲓⲱⲧ ϫⲉ ⲁⲭ ⲟⲩⲱϣ ⳿ⲉⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟϥ ϫⲉ ⲛⲓⲙ.
63 அவன் ஒரு கற்பலகையைக் கேட்டுவாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினான்.
ⲝ̅ⲅ̅ⲟⲩⲟϩ ⲉⲧⲁϥⲉⲣ⳿ⲉⲧⲓⲛ ⳿ⲛⲟⲩⲡⲓⲛⲁⲕⲓⲥ ⲁϥ⳿ⲥϧⲁⲓ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲓⲱⲁⲛⲛⲏⲥ ⲡⲉ ⲡⲉϥⲣⲁⲛ ⲟⲩⲟϩ ⲛⲁⲩⲉⲣ⳿ϣⲫⲏⲣⲓ ⲧⲏⲣⲟⲩ ⲡⲉ.
64 உடனே அவனது வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் இறைவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான்.
ⲝ̅ⲇ̅ⲁ ⲣⲱϥ ⲇⲉ ⲟⲩⲱⲛ ⳿ⲛϯϩⲟϯ ϧⲉⲛ ⲟⲩϩⲟϯ ⲛⲉⲙ ⲡⲉϥⲗⲁⲥ ⲩⲟϩ ⲁϥⲥⲁϫⲓ ⲡⲉ ⲉϥ⳿ⲥⲙⲟⲩ ⳿ⲉⲫϯ.
65 அயலவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தக் காரியங்களைக்குறித்து, யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள்.
ⲝ̅ⲉ̅ⲟⲩⲟϩ ⲁⲥϣⲱⲡⲓ ⳿ⲛϫⲉ ⲟⲩϩⲟϯ ⳿ⲉϫⲉⲛ ⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲧϣⲟⲡ ⳿ⲙⲡⲟⲩⲕⲱϯ ⲟⲩⲟϩ ⲛⲁⲩⲥⲁϫⲓ ⳿ⲛⲛⲁⲓ ⲧⲏⲣⲟⲩ ϩⲓ ⲓⲓⲁⲛⲧⲱⲟⲩ ⳿ⲛⲧⲉ ⲓⲟⲩⲇⲁ.
66 இதைக் கேள்விப்பட்ட எல்லோரும் வியப்படைந்து, “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்றார்கள் கர்த்தருடைய கரம் அந்த பிள்ளையோடு இருந்தது.
ⲝ̅ⲋ̅ⲟⲩⲟϩ ⲛⲁⲩⲙⲟⲕⲙⲉⲕ ⲧⲏⲣⲟⲩ ϧⲉⲛ ⲡⲟⲩϩⲏⲧ ⳿ⲛϫⲉ ⲛⲏⲉⲧⲥⲱⲧⲉⲙ ⲉⲩϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⲟⲩ ϩⲁⲣⲁ ⲡⲉⲑⲛⲁϣⲱⲡⲓ ⲙⲡⲁⲓ⳿ⲁⲗⲟⲩ ⲕⲉ ⲅⲁⲣ ⲛⲁⲣⲉ ⳿ⲧϫⲓϫ ⳿ⲙⲠ⳪ ⲭⲏ ⲛⲉⲙⲁϥ.
67 அந்தப் பிள்ளையின் தகப்பனான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது:
ⲝ̅ⲍ̅ⲟⲩⲟϩ ⲍⲁⲭⲁⲣⲓⲁⲥ ⲡⲉϥⲓⲱⲧ ⲁϥⲙⲟϩ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲟⲩⲡ͞ⲛⲁ̅ ⲉϥⲟⲩⲁⲃ ⲟⲩⲟϩ ϥⲉⲣ⳿ⲡⲣⲟⲫⲏ ⲧⲉⲩⲓⲛ ⲉϥϫⲱ ⳿ⲙⲙⲟⲥ.
68 “இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக, அவர் வந்து தம்முடைய மக்களை மீட்டுக்கொண்டார்.
ⲝ̅ⲏ̅⳿ϥ⳿ⲥⲙⲁⲣⲱⲟⲩⲧ ⳿ⲛϫⲉ Ⲡ⳪ ⲫϯ ⳿ⲙⲡⲓⲥ̅ⲗ̅ ϫⲉ ⲁϥϫⲉⲙ⳿ⲡϣⲓⲛⲓ ⲟⲩⲟϩ ⲁϥ⳿ⲓⲣⲓ ⳿ⲛⲟⲩⲥⲱϯ ⳿ⲙⲡⲉϥⲗⲁⲟⲥ.
69 அவர் தமது தாசனாகிய தாவீதின் வம்சத்திலிருந்து, நாம் இரட்சிப்பு அடைவதற்கான இரட்சணியக்கொம்பை எழுப்பியிருக்கிறார்.
ⲝ̅ⲑ̅ⲩⲟϩ ⲁϥⲧⲟⲩⲛⲟⲥ ⲟⲩⲧⲁⲡ ⳿ⲛⲛⲟϩⲉⲙ ⲛⲁⲛ ϧⲉⲛ ⳿ⲡⲏⲓ ⳿ⲛⲇⲁⲩⲓⲇ ⲡⲉϥ⳿ⲁⲗⲟⲩ.
70 அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். (aiōn g165)
ⲟ̅ⲕⲁⲧⲁ⳿ⲫⲣⲏϯ ⲉⲧⲁϥⲥⲁϫⲓ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲣⲱⲟⲩ ⳿ⲛⲛⲉϥ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲑⲟⲩⲁⲃ ⲓⲥϫⲉⲛ ⳿ⲡ⳿ⲉⲛⲉϩ. (aiōn g165)
71 நம்முடைய பகைவரிடமிருந்தும், நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும் நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும்,
ⲟ̅ⲁ̅ⲟⲩⲛⲟϩⲉⲙ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲉⲛϫⲁϫⲓ ⲛⲉⲙ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲉⲛϫⲓϫ ⳿ⲛⲟⲩⲟⲛ ⲛⲓⲃⲉⲛ ⲉⲑⲙⲟⲥϯ ⳿ⲙⲙⲟⲛ.
72 அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நம்முடைய தந்தையருக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருந்தார்.
ⲟ̅ⲃ̅⳿ⲉ⳿ⲓⲣⲓ ⳿ⲛⲟⲩⲛⲁⲓ ⲉⲙ ⲛⲉⲛⲓⲟϯ ⲟⲩⲟϩ ⳿ⲉⲉⲣ⳿ⲫⲙⲉⲩⲓ ⳿ⲛⲧⲉϥⲇⲓ⳿ⲁⲑⲏⲕⲏ ⲉⲑⲟⲩⲁⲃ.
73 அவர் நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டு:
ⲟ̅ⲅ̅ⲡⲓⲁⲛⲁϣ ⲉⲧⲁϥⲱⲣⲕ ⳿ⲙⲙⲟϥ ⳿ⲛⲁⲃⲣⲁⲁⲙ ⲡⲉⲛⲓⲱⲧ.
74 நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, நமது நாட்களெல்லாம் பயமின்றிப் பணிசெய்யும்படி,
ⲟ̅ⲇ̅⳿ⲉ⳿ⲡϫⲓⲛⲧⲏⲓⲥ ⲛⲁⲛ ⲛⲁⲧⲉⲣϩⲟϯ ⳿ⲉⲁⲛⲛⲟϩⲉⲙ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲛⲉⲛϫⲓϫ ⳿ⲛⲛⲉⲛϫⲁϫⲓ ⳿ⲉϣⲉⲙϣⲓ ⳿ⲙⲙⲟϥ.
75 பரிசுத்தத்திலும் நீதியிலும் அவருக்கு முன்பாக என்றும் வாக்குக் கொடுத்திருந்தார்.
ⲟ̅ⲉ̅ϧⲉⲛ ⲟⲩⲧⲟⲩⲃⲟ ⲛⲉⲙ ⲟⲩⲙⲉⲑⲙⲏⲓ ⳿ⲙⲡⲉϥ⳿ⲙⲑⲟ ⲛⲛⲉⲛ⳿ⲉϩⲟⲟⲩ ⲏⲣⲟⲩ.
76 “என் பிள்ளையே, நீயோ, உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, அவருக்கு முன்பாகப் போவாய்.
ⲟ̅ⲋ̅ⲟⲩⲟϩ ⳿ⲛⲑⲟⲕ ⲇⲉ ⲡⲓ⳿ⲁⲗⲟⲩ ⲉⲩ⳿ⲉⲙⲟⲩϯ ⳿ⲉⲣⲟⲕ ϫⲉ ⲡⲓ⳿ⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⳿ⲛⲧⲉ ⲡⲉⲧϭⲟⲥⲓ ⳿ⲭⲛⲁⲉⲣϣⲟⲣⲡ ⲅⲁⲣ ⳿ⲙⲙⲟϣⲓ ⳿ⲙⲡⲉ⳿ⲙⲑⲟ ⳿ⲙⲠ⳪ ⲉⲥⲉⲃⲧⲉ ⲛⲉϥⲙⲱⲓⲧ.
77 நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தின் நிமித்தம் அவருடைய மக்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலமாய், இரட்சிப்பின் அறிவைக் கொடுப்பாய்.
ⲟ̅ⲍ̅⳿ⲉϯ ⳿ⲛⲟⲩ⳿ⲉⲙⲓ ⳿ⲛⲧⲉ ⳿ⲫⲛⲟϩⲉⲙ ⳿ⲙⲡⲉϥⲗⲁⲟⲥ ϧⲉⲛ ⲟⲩⲭⲱ ⳿ⲉⲃⲟⲗ ⳿ⲛⲧⲉ ϩⲁⲛⲛⲟⲃⲓ.
78 இருளில் வாழ்கிறவர்களுக்கும் மரண இருளில் இருக்கிறவர்களுக்கும் ஒளியைத் தருவதற்கும்,
ⲟ̅ⲏ̅ⲉⲑⲃⲉ ⲛⲓⲙⲉⲧϣⲉⲛϩⲏⲧ ⳿ⲛⲧⲉ ⲫⲛⲁⲓ ⳿ⲙⲡⲉⲛⲛⲟⲩϯ ϧⲉⲛ ⲛⲁⲓ ⲉⲧⲁϥⲛⲁϣⲓⲛⲓ ⳿ⲉⲣⲟⲛ ⳿ⲛϧⲏⲧⲟⲩ ϫⲉ ⲁⲛⲁⲧⲟⲗⲏ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲡϭⲓⲥⲓ.
79 நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்துவதற்கும், பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.”
ⲟ̅ⲑ̅⳿ⲉⲉⲣⲟⲩⲱⲓⲛⲓ ⳿ⲛⲛⲏⲉⲧϩⲉⲙⲥⲓ ϧⲉⲛ ⳿ⲡⲭⲁⲕⲓ ⲛⲉⲙ ⳿ⲧϧⲏⲓⲃⲓ ⳿ⲙ⳿ⲫⲙⲟⲩ ⳿ⲉ⳿ⲡϫⲓⲛⲥⲟⲩⲧⲉⲛ ⲛⲉⲛ ϭⲁⲗⲁⲩϫ ⳿ⲉ⳿ⲫⲙⲱⲓⲧ ⳿ⲛⲧⲉ ϯϩⲓⲣⲏⲛⲏ.
80 அந்தப் பிள்ளை வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தது; அவன் வெளியரங்கமாக இஸ்ரயேலரின்முன் வரும் காலம்வரைக்கும் பாலைவனத்தில் வாழ்ந்தான்.
ⲡ̅ⲡⲓ⳿ⲁⲗⲟⲩ ⲇⲉ ⲁϥⲁⲓⲁⲓ ⲟⲩⲟϩ ⲛⲁϥ⳿ⲁⲙⲁϩⲓ ϧⲉⲛ ⲡⲓⲡ͞ⲛⲁ̅ ⲩⲟϩ ⲛⲁϥⲭⲏ ⲡⲉ ϩⲓ ⲛⲓϣⲁϥⲉⲩ ϣⲁ ⲡⲓ⳿ⲉϩⲟⲟⲩ ⳿ⲛⲧⲉ ⲡⲉϥⲟⲩⲱⲛϩ ⳿ⲉⲃⲟⲗ ϣⲁ ⲡⲓⲥ̅ⲗ̅

< லூக்கா 1 >