< லூக்கா 8 >
1 அதற்குப் பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும், கிராமங்கள்தோறும் பிரயாணம் செய்து, இறைவனுடைய அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அந்தப் பன்னிரண்டு பேர்களும் அவருடனே சென்றார்கள்.
ଇବେଣ୍ଡାଂ ଅଲପ୍ ସମୁ ପାଚେ ଜିସୁ ଗାଡ଼୍ଦ ଗାଡ଼୍ଦ ଆରେ ନାସ୍କୁ ନାସ୍କୁକାଂ ସୁଣାୟ୍ କିଜ଼ି ମାପ୍ରୁ ରାଜିନି ନେକ୍ରିକାବୁର୍ ସୁଣାୟ୍ କିଜ଼ି ପ୍ଡାଞ୍ଜେଙ୍ଗ୍ ଲାଗାତାର୍, ଆରେ ବାରଜାଣ୍ ଚେଲାହିର୍ ତା ଲାହାଙ୍ଗ୍ ମାଚାର୍,
2 தீய ஆவிகளின் பிடிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் குணமாக்கப்பட்ட சில பெண்களுங்கூட அவருடனே சென்றார்கள். மகதலேனா என அழைக்கப்பட்ட மரியாளும் அவர்களுடன் இருந்தாள். அவளிலிருந்து ஏழு பிசாசுகள் துரத்தப்பட்டிருந்தன.
ଆରେ କେତେ ଜାଣ୍ କଗ୍ଲେହିମ୍ଣା ପା ତା ଲାହାଙ୍ଗ୍ ହାଲ୍ଜି ମାଚିକ୍, ଇମ୍ଣି କଗ୍ଲେ ହିମ୍ଣାକାଂ ବାନ୍ୟାପୁଦାତାଂ ଉଜ୍ ଆଜ଼ି ମାଚିକ୍ ହେୱେକ୍ପା ତା ଲାହାଙ୍ଗ୍ ମାଚିକ୍, ମରିୟମ୍ ଇମ୍ଣାକା କି ତର୍ ମଗ୍ଦଲିନି ଇନାର୍ ତା ତାକେଣ୍ଡାଂ ସାତ୍ଗଟା ପୁଦାଂ ହପ୍ଚି ମାଚାର୍ ।
3 ஏரோதுவின் வீட்டு நிர்வாகியான கூசாவின் மனைவி யோவன்னாளும் அவர்களுடன் இருந்தாள். அத்துடன் சூசன்னாளும் வேறு பலரும் இருந்தார்கள். இந்தப் பெண்கள் தங்களுடைய வருமானத்திலிருந்து இயேசுவுக்கு ஆதரவளித்து உதவி செய்தார்கள்.
ହେରଦ୍ତି ଗୁମୁସ୍ତା କୁଜାତି ୱାଣି ଜହନା, ସସ୍ନ୍ନା, ଆରେ ଆଦିକ୍ ହେନି କଗ୍ଲେକ୍ ତା ଲାହାଙ୍ଗ୍ ମାନ୍ଞ୍ଜି ଜାର୍ ଜାର୍ ଦାନ୍ ହିଜ଼ି ହେୱାର୍ତି ହେବା କିଜ଼ି ମାଚିକ୍ ।
4 பல்வேறு பட்டணங்களிலிருந்து, மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவிடம் வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:
ବେସିହେନି ମାନାୟ୍ ରୁଣ୍ଡା ଆନିହିଙ୍ଗ୍ ଆରି ଗାଡ଼୍ ଗାଡ଼୍ଦାଂ ମାନାୟ୍ ତା ଲାଗେ ୱାତିହିଙ୍ଗ୍, ଜିସୁ ଇ ଉତର୍ମୁଡ଼୍ ହିଜ଼ି ୱେଚ୍ଚାନ୍,
5 “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான். அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; அவை மிதிபட்டன; ஆகாயத்துப் பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன.
“ରୱାନ୍ ୱିତ୍ନାକାନ୍ ନିଜାର୍ ବିୟାନ୍ ୱିତ୍ଦେଙ୍ଗ୍ ହତ୍ତାନ୍ । ହେୱାନ୍ ୱିତୁ ୱିତୁ କେତେକ୍ ହାଜ଼ି କଚଣ୍ତ ଆର୍ତାତ୍ ଆରେ କାଲ୍ ତାରେନ୍ ଦୁଡ଼ି ଆଜ଼ି ହାତାତ୍, ଆରେ ଆକାସ୍ନି ପଟିଂ ହେଦାଂ ଚିଚିକ୍ ।
6 சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தன, அவை முளைத்தபோது ஈரம் இல்லாததினால், அப்பயிர்கள் வாடிப்போயின.
ଆରେ କେତେକ୍ କାଲ୍କୁକୁଡ଼ି ଜପି ଆର୍ତାତ୍, ପାଚେ ନେସ୍ଇ ଚିକ୍ଲା ଅଦା ହିଲ୍ୱିତିଲେ ୱାଚ୍ଚାତ୍ ।
7 வேறுசில விதைகளோ முட்செடிகளின் இடையே விழுந்தன, அவை முளைத்து வளர்ந்தபோது, முட்களும்கூட வளர்ந்து பயிர்களை மூடி நெருக்கிப்போட்டன.
ଆରେ କେତେକ୍ ୱାଡ଼ି ମାର୍ ବିତ୍ରେ ଆର୍ତାତ୍, ଆରେ ୱାଡ଼ିଙ୍ଗ୍ ମାର୍କୁ ହେଦାଂ ହାଙ୍ଗେ ହାଙ୍ଗେ ଗାଜା ଆଜ଼ି ହେୱାକାଂ ଡାବାୟ୍ କିତିକ୍ ।
8 இன்னும் சில விதைகளோ நல்ல மண்ணில் விழுந்தன. அவை முளைத்து நூறுமடங்கு விளைச்சலைக் கொடுத்தன.” இயேசு இதைச் சொல்லி முடித்தபின்பு, சத்தமாய்க் கூப்பிட்டு, “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
ଆଦେକ୍ କେତେକ୍ ହାର୍ଦି ମେଦ୍ନିତ ଆର୍ତାତ୍, ଆରେ ପାନ୍ଚି ପାଞ୍ଚ୍କଡ଼ି ଗୁଣ୍ ପାଡ଼୍ ଆସ୍ତାତ୍ ।” ଜିସୁ ଏଲେଙ୍ଗ୍ ଇଞ୍ଜି ଇଞ୍ଜି ଗାଜା କାଟ୍ତାଂ ଇଚାନ୍, “ଇନେରିଂ ୱେଞ୍ଜେଙ୍ଗ୍ କିତୁଲିଂ ମାନିକ୍, ହେୱାନ୍ ୱେନେନ୍ ।”
9 பின்பு அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “இந்த உவமையின் அர்த்தம் என்ன?” என்று கேட்டார்கள்.
ଜିସୁ ଚେଲାହିର୍ ଇ ଉତର୍ମୁଡ଼୍ ଅରତ୍ ଇନାକା ଇଞ୍ଜି ୱେନ୍ବେଦେଂ ଲାଗାତାର୍ ।
10 அதற்கு அவர், “இறைவனுடைய அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கோ, நான் உவமைகள் மூலமாகவே பேசுகிறேன். இதனால் அவர்கள், “‘கண்டும் காணாதவர்களாகவும்; கேட்டும் விளங்கிக்கொள்ளதவர்களாகவும் இருப்பார்கள்.’
ହେବେତାଂ ହେୱାନ୍ ଇଚାନ୍, “ଇସ୍ୱର୍ତି ରାଜି ବିତ୍ରେନି ବିସ୍ରେ ପୁଞ୍ଜେଙ୍ଗ୍ ଇଞ୍ଜି ମିଙ୍ଗେଙ୍ଗ୍ ସାକ୍ତି ହିଦ୍ୟା ଆତାତ୍ନ୍ନା, ମାତର୍ ବିନେ ନିକାରିଂ ଉତର୍ମୁଡ଼୍ଦାଂ ୱେଚ୍ୟାନାତ୍, ଇନେସ୍କି ହେୱାର୍ ହୁଡ଼୍ଜି ହୁଡ଼୍ଜି ହୁଡ଼୍ଦେଂ ଆଡୁର୍ ଆରି ୱେନୁ ୱେନୁ ବୁଜାଆଉର୍ ।”
11 “இந்த உவமையின் பொருள் இதுவே: விதை இறைவனுடைய வார்த்தை.
“ଉତର୍ମୁଡ଼୍ନି ଅରତ୍ ଇଦାଂ । ବିୟାନ୍ ଇସ୍ୱର୍ ମାପ୍ରୁତି ବଚନ୍,
12 பாதை ஓரத்தில் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்கும் சிலரைக் குறிக்கிறது. அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடி சாத்தான் வந்து, அவ்வார்த்தையை அவர்களுடைய இருதயத்திலிருந்து எடுத்துப் போடுகிறான்.
ଆରେ ହାଜ଼ି କଚଣ୍ତ ମାନି ବିୟାନ୍ ଲାକେ ବୁଜାଆନାର୍, କଚଣ୍ତ ମାନି ବିୟାନ୍ ବୁଜାଆନାର୍, ହେୱାର୍ ବଚନ୍ ୱେନାର୍; ତା ପାଚେ ସୟ୍ତାନ୍ ୱାଜ଼ି, ଇନେସ୍କି ହେୱାର୍ ପାର୍ତି କିଜ଼ି ମୁକ୍ତି ଆଉର୍ ଇଦାଂ କାଜିଂ ହେୱାର୍ ମାନ୍ତିନି ବଚନ୍ ଉନ୍ଦି ଅନାତ୍ ।
13 கற்பாறையின்மேல் விழுந்த விதைகள் வார்த்தையைக் கேட்ட வேறுசிலரைக் குறிக்கிறது. அவர்கள் அதைக் கேட்கும்போது, சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டாலும், வேரில்லாதவர்களாய் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே விசுவாசிக்கிறார்கள்; சோதிக்கப்படும் காலத்திலே, விழுந்து போகிறார்கள்.
ଆରେ କାଲ୍କୁକୁଡ଼ି ବୁଇଁନି ବିୟାନ୍ ଆର୍ତି ଲାଗ୍ଦି ମାନାୟାରିଂ ବୁଜାଆନାତ୍, ହେୱାର୍ ବଚନ୍ ୱେନ୍ଞ୍ଜି ୱାରିତାଂ ଇଟ୍ନାର୍; ମାତର୍ ହେୱାର୍ତି ଚିରାହିଲ୍ୱିତିଲେ ହେୱାର୍ ଅଲପ୍ ସମୁ ପାର୍ତି କିତାର୍ ଆରି ପରିକ୍ୟା ସମୁତ ଦରମ୍ ପିହ୍ନାର୍ ।
14 ஆனால் முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள் வார்த்தையைக் கேட்ட வேறுசிலரைக் குறிக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையைக் குறித்த கவலைகளினாலும், செல்வங்களினாலும், சிற்றின்பங்களினாலும், மூழ்கி நெருக்கப்பட்டு, முதிர்ச்சி அடையாதிருக்கிறார்கள்.
ଆରି ୱାଡ଼ି ମାର୍କୁ ବିତ୍ରେ ଆର୍ତାକା ବିୟାନ୍, ଏଲେଙ୍ଗ୍ ବୁଜାଆନାତ୍, ଇମ୍ଣାକାର୍ ବଚନ୍ ୱେନ୍ଞ୍ଜି ରାଜିନି ଚିନ୍ତା, ଦାନ୍ ଆରି ସୁକ୍ବଗ୍ତାଙ୍ଗ୍ ମାନ୍ଞ୍ଜି ଜିବୁନ୍ ବିତାୟ୍ କିଜ଼ି କିଜ଼ି ଡାବାୟ୍ କିୟା ଆନାର୍, ପାଚେ ହାର୍ଦି ପାଡ଼୍ ଆହୁର୍ ।
15 நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ உண்மையும் நன்மையுமுள்ள இருதயம் கொண்டவர்களைக் குறிக்கிறது. அவர்கள் வார்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டு, பலன் கொடுக்கிறார்கள்.
ଆରି, ହାର୍ଦି ମେଦ୍ନିତ ଆର୍ଜି ମାଚି ବିୟାନ୍ ଏଲେଙ୍ଗ୍ ବୁଜାଆନାତ୍, ଇମ୍ଣାକାର୍ ହାର୍ ଆରି ଦାର୍ମି ମାନ୍ତ ବଚନ୍ ୱେନ୍ଞ୍ଜି ହେଦାଂ ଆସ୍ତି ଇଟ୍ନାର୍ ଆରି ବାଡ଼୍କାସ୍ତାଂ ପାଡ଼୍ ଆନାର୍ ।”
16 “யாரும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பானைக்குள்ளோ அல்லது கட்டிலின் கீழோ மறைத்து வைப்பதில்லை. அதை உள்ளே வருகிறவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி ஒரு விளக்குத்தண்டின் மேலேயே வைப்பார்கள்.
“ଇନେର୍ ବଇଟା କାଚାୟ୍ କିଜ଼ି ମାଣ୍ ପ୍ଡାକ୍ଚି ଇଟୁନ୍, କି କାଟେଲ୍ ତାରେନ୍ ଇଟୁନ୍, ମାତର୍ ବଇଟା ଇଟ୍ନି ଜପି ଇଟ୍ନାନ୍, ଇନେସ୍କି ହଣ୍ଗା ୱାନି ମାନାୟ୍ ର ଅଜଡ଼୍ ହୁଡ଼୍ଦେଂ ଆଡ୍ନାର୍ ।”
17 எனவே, மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை.
“ଇନାକିଦେଂକି ଇନାକା ହତ୍ୱାକା, ଇ ଲାକେ ଡ଼ୁଗ୍ତି ବିସ୍ରେ ଇନାକା ହିଲୁତ୍, ଆୱିତିସ୍ ଇନାକା ପୁନ୍ୱାଦାଂ ହୱାକାହିଲୁତ୍, ଇ ଲାକେ ଡ଼ୁଗ୍ତି ବିସ୍ରେ ଇନାକା ହିଲୁତ୍ ।”
18 ஆகையால், நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனமாய் இருங்கள். இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும்; இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.”
“ଏପେଙ୍ଗ୍, ଇନେସ୍ ୱେନାଦେରା ହେ ବିସ୍ରେ ଜାଗ୍ରତ୍; ଇନାକିଦେଂକି ଇନେରିଂ ମାନାତ୍, ହେୱାନିଂ ହିୟାନାତ୍, ଆରେ ଇନେରିଂ ହିଲୁତ୍, ହେୱାନ୍ ଇନାକା ଜାର୍ତି ମାନାତ୍ ଇଞ୍ଜି ବାବି କିନାନ୍, ହେଦାଂ ପା ହେୱାନ୍ ତାଂ ଅୟାନାତ୍ ।”
19 ஒருமுறை இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைப் பார்க்கும்படி வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாய்க் கூடியிருந்தபடியால், அவர்களால் அவருக்கு அருகே செல்ல முடியவில்லை.
ଜିସୁ ତେହି ଆରି ଟଣ୍ଡାହିର୍ ତା ଲାଗେ ୱାତାର୍, ମାତର୍ ମାନାୟାର୍ ଗହଲି ଲାଗିଂ ତା ଲାହାଙ୍ଗ୍ ମେହାଆଦେଂ ଆଡ୍ୱାଦାଂ ମାଚାର୍ ।
20 அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்றான்.
ଇନେର୍ ରୱାନ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇ କାବୁର୍ ହିତାର୍, “ମିଞ୍ଜିୟା ଆରି ଟଣ୍ଡାର୍ ନି ହୁକେ ବେଟାଆଦେଂ ଇଚା କିଜ଼ି ବାର୍ତ ନିଲ୍ତାର୍ଣ୍ଣା ।”
21 அதற்கு இயேசு, “இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கிறவர்களே என் தாயும், என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள்” என்றார்.
ମାତର୍ ହେୱାନ୍ ହେୱାରିଂ ଉତର୍ ହିତାନ୍, “ଇମ୍ଣାକାର୍ ଇସ୍ୱର୍ତି ବଚନ୍ ୱେନାର୍ ଆରି ମାନିକିନାର୍, ହେୱାର୍ ନା ଆୟା ଆରି ଟଣ୍ଡାର୍ ।”
22 ஒரு நாள் இயேசு தம்முடைய சீடர்களிடம், “ஏரியின் மறுகரைக்குப் போவோம் வாருங்கள்” என்றார். அப்படியே அவர்கள், ஒரு படகில் ஏறிப் புறப்பட்டார்கள்.
ଦିନେକ୍ ଜିସୁ ତା ଚେଲାହିର୍ ର ଡଙ୍ଗାତ ଦୁମ୍ତାର୍, “ଆରେ ହେୱାନ୍ ହେୱାରିଂ ଇଚାନ୍, ୱାଡୁ, ହାମ୍ଦୁର୍ନି ଆନ୍ଟି ପାଡ଼୍କା ହାନାସ୍ ।” ହେବେତାଂ ହେୱାର୍ ଡଙ୍ଗା ରିକ୍ତାର୍ ।
23 அவர்கள் போய்க்கொண்டிருக்கையில், இயேசு தூங்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது புயல்காற்று ஏரியின்மேல் வீசியது. படகில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியதால், அவர்கள் பெரிய ஆபத்துக்கு உள்ளானார்கள்.
ମାତର୍ ହେୱାର୍ ଡଙ୍ଗା ଗାଟିକିଜ଼ି ହାନି ସମୁତ ଜିସୁ ହୁନ୍ଚାନ୍ । ହେୱାଡ଼ାଂ ହାମ୍ଦୁର୍ତ ତ୍ରିପ୍କୁ ହୁଜ଼ାୱାଣି ଆତାତ୍, ଆରେ ହେୱାର୍ତି ଡଙ୍ଗା ଏଜ଼ୁକାଂ ବାର୍ତି ଆଦେଂ ଲାଗାତାତ୍ ଆରି ହେୱାର୍ ସନିତ ପଡ଼ାତାର୍ ।
24 அப்போது சீடர்கள் இயேசுவிடம் வந்து, அவரை எழுப்பி, “ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் தண்ணீரில் மூழ்கப்போகிறோம்!” என்றார்கள். அவர் எழுந்து காற்றையும், கொந்தளிக்கும் தண்ணீரையும் கடிந்துகொண்டார்; புயல் தணிந்து, எல்லாம் அமைதியாயிற்று.
ହେବେତାଂ ଚେଲାର୍ ଲାଗେ ୱାଜ଼ି ହେୱାନିଂ ନିକ୍ଚି ଇଚାର୍, “ଏ ଗୁରୁ, ଏ ଗୁରୁ, ଆପେଂ ହାତାପ୍ ।” ଇବେତାଂ ଜିସୁ ନିଙ୍ଗ୍ଜି ଦୁକା ଆରି ଜବର୍ ଲଡ଼ିତିଂ ଦାକା ହିତାନ୍, ଆରି ହେ ସବୁ ଚିମ୍ରା ଆଜ଼ି ତିର୍ ଆତାତ୍ ।
25 அப்பொழுது அவர் தமது சீடர்களிடம், “உங்கள் விசுவாசம் எங்கே?” என்று கேட்டார். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “இவர் யாரோ? காற்றுக்கும், கடலுக்கும் கட்டளையிடுகிறார். அவையும் அவருக்குக் கீழ்ப்படிகின்றன” என்று பயத்துடனும், வியப்புடனும் பேசிக்கொண்டார்கள்.
ଆରେ, ହେୱାନ୍ ହେୱାରିଂ ଇଚାନ୍, “ମିଦାଙ୍ଗ୍ ପାର୍ତି ଇମେତ୍?” ମାତର୍ ହେୱାର୍ ପାଣ୍ଡ୍ରା ଆତାର୍ ଆରି କାବା ଆଜ଼ି ହେୱାର୍ ହେୱେର୍ ଇଞ୍ଜେଙ୍ଗ୍ ଲାଗାତାର୍, ଇୱାନ୍ ଇନେନ୍ ଜେ, ହେୱାନ୍ ଦୁକା ଆରି ଏଜ଼ୁକାଂ ପା ବଲ୍ ହିତିସ୍, ହେୱାଙ୍ଗ୍ ହେ ବଲ୍ ମାନିକିନିଙ୍ଗ୍ ।
26 அவர்கள் கலிலேயா கடலின் மறுகரையிலுள்ள கதரேனருடைய நாட்டிற்குப் படகில் சென்றார்கள்.
ପାଚେ ଜିସୁ ଆରି ତା ଚେଲାହିର୍ ଗାଲିଲିନି ଲାଗେ ହେ ପାଡ଼ାକାନି ଗରାସିୟର୍ ରାଜି ନିପ ଏକାତାର୍ ।
27 இயேசு கரையில் இறங்கியபோது, அந்தப் பட்டணத்திலிருந்து பிசாசு பிடித்த ஒருவன் அவருக்கு எதிர்ப்பட்டான். அவன் நீண்டகாலமாக உடைகள் உடுத்தாதவனும், வீட்டில் வாழாதவனுமாய், கல்லறைகளிலேயே தங்கியிருந்தான்.
ହେୱାନ୍ ଡଙ୍ଗାତାଙ୍ଗ୍ ହସି ଗୁଟିତ ଜୁଜ଼ି, ହେ ଗାଡ଼୍ନି ରକାନ୍ ପୁଦାଂ ଆହ୍ୟାତାକାନ୍ ହେୱାନିଂ ଗିଟାତାନ୍; ହେୱାନ୍ ବେସି ବାର୍ହୁ ପାତେକ୍ ହେନ୍ଦ୍ରା ଉସ୍ପାୱାଦାଂ ଆରି ଇଞ୍ଜ ମାନ୍ୱାଦାଂ ଦୁଗେର୍ତ ମାଚାନ୍ ।
28 அவன் இயேசுவைக் கண்டபோது, கூச்சலிட்டு, அவருடைய பாதத்தில் விழுந்தான். அவன் அவரிடம், “இயேசுவே, மகா உன்னதமான இறைவனின் மகனே, என்னிடம் உமக்கு என்ன வேண்டும்? நான் உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன், என்னைத் துன்புறுத்தவேண்டாம்” என்று உரத்த குரலில் சத்தமிட்டுச் சொன்னான்.
ହେୱାନ୍ ଜିସୁଙ୍ଗ୍ ହୁଡ଼୍ଜି କିକିରାଡିଂ କିଜ଼ି ହେୱାନ୍ ସାରାଣ୍ ତାରେନ୍ ଆର୍ଜି ଗାଜା କାଟ୍ତାଂ ଇଚାନ୍, “ଏ ଗାଜା ଇସ୍ୱର୍ ମାପ୍ରୁ ମାଜ଼ି ଜିସୁ, ନି ହୁକେ ନାଦାଂ ଇନାକା ମାନାତ୍? ଆନ୍ ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ଗୱାରି କିଦ୍ନାଙ୍ଗା, ନାଙ୍ଗେଙ୍ଗ୍ କସ୍ଟହିଦ୍ମା ।”
29 ஏனெனில், அவனைவிட்டு வெளியே வரும்படி, இயேசு அந்தத் தீய ஆவிக்குக் கட்டளையிட்டிருந்தார். பலமுறை அது அவனைப் பிடித்திருந்தது. அதனால் அவனுடைய கையையும், காலையும் சங்கிலியால் கட்டி, காவலில் வைத்திருந்த போதுங்கூட, அவன் சங்கிலிகளை உடைத்து எறிந்து விடுவான். அந்த தீய ஆவியினால் அவன் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
ଇନାକିଦେଂକି ଜିସୁ ବାନ୍ୟା ଜିବୁନ୍ତିଂ ହେ ମାନାୟ୍ତିଂ ହସି ହାଞ୍ଜେଙ୍ଗ୍ ଇଞ୍ଜି ବଲ୍ ହିଜ଼ି ମାଚାନ୍ । ହେ ଜିବୁନ୍ ବେସିହଟ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଆସ୍ତି ମାଚାତ୍, ଆରେ ମାନାୟାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ହିକ୍ଡ଼ିଂ ଆରି କାଲ୍ଦ କାଗଡ଼ା ଲାହାଙ୍ଗ୍ ଗାଚ୍ଚି ଇଡ଼୍ଜି ମାଚାର୍, ମାତର୍ ହେୱାନ୍ ଗାଚ୍ଚା କାଦ୍ଲିଂ ନାଡ଼୍ଚି ପୁଦା ହୁଦାଂ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ବାଟାତ ଅଜ଼ି ମାଚାତ୍ ।
30 இயேசு பிசாசு பிடித்தருந்தவனை, “உனது பெயர் என்ன?” என்று கேட்டார். அவன் அதற்குப் பதிலாக, “லேகியோன்” என்றான். ஏனெனில், பல தீய ஆவிகள் அவனுக்குள் புகுந்திருந்தன.
ଜିସୁ ହେୱାନିଂ ୱେନ୍ବାତାନ୍ “ନି ତର୍ ଇନାକା?” ହେୱାନ୍ ଇଚାନ୍, ବାହିନି; ଇନାକିଦେଂକି ଆଦିକ୍ ପୁଦାଂ ହେୱାନ୍ ତାକେ ହଣ୍ଜି ମାଚିକ୍ ।
31 தீய ஆவிகள் இயேசுவிடம், தங்களை பாதாளத்திற்குப் போகக் கட்டளையிடாதபடி கெஞ்சிக்கேட்டன. (Abyssos )
ଆରେ, ହେୱାନ୍ ଇନେସ୍ ହେୱାକାଂ ଜମ୍ପୁର୍ ହାଞ୍ଜେଙ୍ଗ୍ ବଲ୍ ହିଉନ୍, ଇଦାଂ କାଜିଂ ହେୱାଙ୍ଗ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଗୱାରି କିଦେଙ୍ଗ୍ ଲାଗିତିକ୍ । (Abyssos )
32 அங்கிருந்த மலைப்பகுதியில், பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. பிசாசுகள் தாங்கள் அந்தப் பன்றிகளுக்குள்ளே போவதற்கு, இயேசு அனுமதிக்கவேண்டும் என்று, அவரைக் கெஞ்சிக்கேட்டன. அப்படியே அவர் அவைகளுக்கு அனுமதி கொடுத்தார்.
ହେବେ ମାଡ଼ି ଲାଗେ ର ଗାଜା ପାଞ୍ଜିଙ୍ଗ୍ ମାନ୍ଦା ହାରାଆଜ଼ି ମାଚିକ୍, ଆରେ ହେୱାନ୍ ଇନେସ୍ ହେୱାକାଂ ହେ ପାଞ୍ଜିଙ୍ଗ୍ ବିତ୍ରେ ହଣ୍ଡେଙ୍ଗ୍ ବଲ୍ ହିନାନ୍, ଇଦାଂ କାଜିଂ ହେୱାଙ୍ଗ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଗୱାରି କିତିକ୍ ।
33 பிசாசுகள், அவனைவிட்டுப் புறப்பட்டுப் பன்றிகளுக்குள்ளே புகுந்தன. அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கீழே பாய்ந்து, ஏரியில் விழுந்து மூழ்கியது.
ଜିସୁ ହେୱାରିଂ ବଲ୍ ହିତିଲେ, ପୁଦାଂ ହେ ମାନାୟ୍ ତାକେଣ୍ଡାଂ ହସି ପାଞ୍ଜିଙ୍ଗ୍ ବିତ୍ରେ ହଟିକ୍; ହେବେ ହେ ମାଦାଂ ବେସିତାଦ୍ରାତାଂ ହଞ୍ଚି ହାଲ୍ଜି ହାମ୍ଦୁର୍ ଗୁଟିତାଂ ଆର୍ଜି ମୁନ୍ଞ୍ଜି ହାତିକ୍ ।
34 பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பன்றிகளுக்கு நடந்ததைக் கண்டபோது, ஓடிப்போய் பட்டணத்தில் உள்ளவர்களுக்கும், நாட்டுப்புறத்தில் உள்ளவர்களுக்கும் அதை அறிவித்தார்கள்.
ହାରାଇ କିଜ଼ି ମାଚି ମାନାୟାର୍ ହେ ଗଟ୍ଣା ହୁଡ଼୍ଜି ହଞ୍ଚି ହାଲ୍ଜି ଗାଡ଼୍ଦ ଆରେ ନାସ୍କୁକାଂ ହେଦାଂ ୱେଚ୍ଚାର୍ ।
35 என்ன நடந்தது என அறியும்படி, மக்கள் புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பிசாசுகளிலிருந்து விடுதலை பெற்றவன், உடை உடுத்தி மனத்தெளிவடைந்தவனாய், இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்திருப்பதைக் கண்டு பயந்தார்கள்.
ହେବେ ମାନାୟାର୍ ହେ ଗଟ୍ଣା ହୁଡ଼୍ଦେଂ ହସି ୱାତାର୍; ଆରେ ହେୱାର୍ ଜିସୁ କଚଣ୍ତ ୱାଜ଼ି, ଇମ୍ଣି ମାନାୟ୍ ତାକେଣ୍ଡାଂ ପୁଦାଂ ହସି ମାଚିକ୍, ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ହେନ୍ଦ୍ରା ଉସ୍ପିସ୍ ହାର୍ ମାନ୍ତାଙ୍ଗ୍ ଜିସୁ କାଲ୍କୁ ତାରେନ୍ କୁଚ୍ଚି ମାନାକା ହୁଡ଼୍ଜି ପାଣ୍ଡ୍ରା ଆତାର୍ ।
36 சம்பவித்ததைக் கண்டவர்கள், பிசாசு பிடித்திருந்தவன் எவ்விதமாய் குணமடைந்தான் என்று அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள்.
ଆରି ଇନେର୍ ହୁଡ଼୍ଜି ମାଚାର୍, ହେୱାର୍ ହେ ପୁଦାଆହ୍ୟା ଆଜ଼ି ମାଚି ମାନାୟ୍ ଇନେସ୍ ଆଜ଼ି ଉଜ୍ ଆତାନ୍, ହେଦାଂ ହେୱାରିଂ ୱେଚ୍ପାତାର୍ ।
37 அப்பொழுது கதரேனர் நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும் பயமடைந்ததினால், தங்களைவிட்டுப் போய்விடும்படி இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். எனவே, அவர் படகில் ஏறி புறப்பட்டுப் போனார்.
ହେବେ ଗରାସିୟାର୍ ଦେସ୍ନି ଚାରିବେଣ୍ତି ମାନାୟ୍ ୱିଜ଼ାର୍ ହେୱାର୍ ହାନ୍ଦିତାଂ ହାଞ୍ଜେଙ୍ଗ୍ ଜିସୁଙ୍ଗ୍ ଗୱାରି କିତାର୍, ହେୱାର୍ ବେସି ପାଣ୍ଡ୍ରା ଆଜ଼ି ମାଚାର୍; ଆରେ, ହେୱାନ୍ ର ଡଙ୍ଗାତ ଦୁମ୍ଜି ମାସ୍ଦି ୱାତାର୍ ।
38 பிசாசுகளிலிருந்து விடுதலை பெற்றவன், தானும் இயேசுவுடனேகூடப் போகும்படி அவரைக் கெஞ்சிக்கேட்டான். ஆனால் இயேசு
ମାତର୍ ଇମ୍ଣି ମାନାୟ୍ ତାକେଣ୍ଡାଂ ପୁଦାଂ ହସି ହାଲ୍ଜି ମାଚିକ୍, “ହେୱାନ୍ ଜିସୁ ଲାଗାଂ ମାଞ୍ଜେଙ୍ଗ୍ ଗୱାରି କିତାନ୍ ।”
39 அவனிடம், “நீ உன் வீட்டிற்குத் திரும்பிப்போய், இறைவன் உனக்கு செய்ததையெல்லாம் அறிவி” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார். அப்படியே அவன் புறப்பட்டுப், பட்டணத்திலுள்ள எல்லோருக்கும் இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்பதைக் குறித்துச் சொன்னான்.
“ମାତର୍ ହେୱାନ୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ପକ୍ଚି ଇଚାନ୍, ମିଞ୍ଜ ମାସ୍ଦି ହାଲା, ଆରେ ଇସ୍ୱର୍ତି କାଜିଂ ଇମ୍ଣି କାମାୟ୍ କିତାନ୍ନ୍ନା, ହେଦାଂ ୱିଜ଼ୁ ମାନାୟ୍ତିଂ ୱେଚା ।” ହେବେ ହେୱାନ୍ ତାଙ୍ଗ୍ଜି ହାଲ୍ଜି, ଜିସୁ ହେୱାନ୍ କାଜିଂ ଇମ୍ଣି କାମାୟ୍ କିଜ଼ି ମାଚାନ୍, ହେଦାଂ ୱିଜ଼ୁ ଗାଡ଼୍ଦ ସୁଣାୟ୍ କିଦେଙ୍ଗ୍ ଲାଗାତାନ୍ ।
40 இயேசு திரும்பிவந்தபோது, அவருக்காக காத்துக்கொண்டிருந்த மக்கள் அவரை வரவேற்றனர்.
ଆରେ ଜିସୁ ମାସ୍ଦି ୱାତିଲେ ମାନାୟାର୍ ଗହଲିତାଂ ତାଙ୍ଗେଙ୍ଗ୍, ୱାରିତାଂ ଇଟ୍ତାର୍, ଇନାକିଦେଂକି ୱିଜ଼ାର୍ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ କାସି ମାଚାର୍ ।
41 அப்பொழுது ஜெப ஆலயத் தலைவனான யவீரு என்னும் பெயருடைய ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவரைத் தன்னுடைய வீட்டிற்கு வரும்படி கெஞ்சினான்.
ଆରେ, ହୁଡ଼ାଟ୍; ଜାଇରସ୍ ତର୍ଦାକାନ୍ ରୱାନ୍ ୱାତାନ୍; ହେୱାନ୍ ରୱାନ୍ କୁଟୁମ୍ ଇଞ୍ଜ ମୁଡ଼୍ଦାକାନ୍ ମାଚାନ୍ । ହେୱାନ୍ ଜିସୁତି କାଲ୍ତାରେନ୍ ଗୁର୍ଜି ଜାର୍ ଇଞ୍ଜ ୱାନି କାଜିଂ ଗୱାରି କିତାନ୍ ।
42 ஏனெனில், அவனுடைய ஒரே மகளான பன்னிரண்டு வயதுடைய சிறுமி மரணத் தருவாயில் இருந்தாள். இயேசு வழியே அவனுடன் போய்க்கொண்டிருக்கையில், மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருந்தது.
ଇନାକିଦେଂକି ତାତି ବାର ବାର୍ହୁ ବୟସ୍ନି ରଞ୍ଜେଲ୍ ମତର୍ ଗାଡ଼୍ଚେ ମାଚାତ୍, ଆରେ ହେଦେଲ୍ ହାନି ଲାକେ ଆଜ଼ି ମାଚାତ୍ । ମାତର୍ ହେୱାନ୍ ହାନି ସମୁତ ମାନାୟାର୍ ତା ଜପି କୁସ୍ପିସ୍ ମାଚାର୍ ।
43 அக்கூட்டத்தில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் தன் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் அவளை எவராலும் குணமாக்க முடியவில்லை.
ହେ ପାଦ୍ନା ବାର ବାର୍ହୁ ପାତେକ୍ ନେତେର୍ ନାଡ୍ୱାକା ରଗ୍ୟାଣି ର କଗ୍ଲେ, ମାଚାତ୍ ଇନେସ୍କି ତା ଜିବୁନ୍ତ ସବୁ ଦାନ୍ ୱିସ୍ତି ମାଚାତ୍ ପା ଉଜ୍ ଆଡ୍ୱାଦାଂ ମାଚାତ୍,
44 அவள் இயேசுவுக்குப் பின்னால் வந்து, அவருடைய மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது.
ହେଦେଲ୍ ପାଚ୍ ବାଗାଙ୍ଗ୍ ୱାଜ଼ି ହେୱାନ୍ତି ହେନ୍ଦ୍ରାନି ଚେଲିଂ ଡୁତାତ୍, ଆରେ ହେ ସାଙ୍ଗେ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଗାଗାଡ଼୍ ଟେବା ଆତାତ୍ ।
45 அப்பொழுது இயேசு, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். அனைவரும் மறுத்தனர். அப்போது, பேதுரு அவரிடம், “ஐயா, மக்கள் கூட்டமாய்க் கூடி உம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே” என்றான்.
ହେବେଣ୍ଡାଂ ଜିସୁ ଇଚାନ୍, “ଇନେର୍ ନାଙ୍ଗେଙ୍ଗ୍ ଡୁତ୍ତାର୍?” ମାତର୍ ୱିଜ଼ାର୍ ପାର୍ତିକିୱିହିଙ୍ଗ୍, ପିତର୍ ଇଚାନ୍, “ଏ ଗୁରୁ, ମାନାୟାର୍ ମେଲ୍ ମେଲ୍ ଆଜ଼ି ନି ଜପି କୁସ୍ପା ଆଦ୍ନାରା ।”
46 ஆனால் இயேசுவோ, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டிருக்கிறார்; என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை நான் அறிவேன்” என்றார்.
ମାତର୍ ଜିସୁ ଇଚାନ୍, “ଇନେର୍ ରୱାନ୍ ନାଙ୍ଗେଙ୍ଗ୍ ଡୁତ୍ତାନ୍, ଇନାକିଦେଂକି ନାଙ୍ଗ୍ତାଂ ସାକ୍ତି ହସି ହାଚି ଲାକେ ଆନ୍ ପୁଚାଙ୍ଗ୍ ।”
47 அப்பொழுது அந்தப் பெண், தான் மறைந்திருக்க முடியாதென்று கண்டு, நடுங்கிக்கொண்டுவந்து, அவருடைய பாதத்தில் விழுந்தாள். அவள் எல்லா மக்களுக்கு முன்பாகவும், தான் அவரைத் தொட்ட காரணத்தையும், தான் உடனே குணமடைந்ததையும் அறிவித்தாள்.
ଏଚେକାଡ଼୍ଦ କଗ୍ଲେ ହୁଡ଼୍ତାତ୍ ଜେ, ହେଦେଲ୍ ଡ଼ୁଗ୍ଜି ମାଞ୍ଜେଙ୍ଗ୍ ଆଡ୍ୱାତାତ୍, ହେ ଏଚେକାଡ଼୍ଦ ହେଦେଲ୍ ତ୍ରିଗ୍ଜି ତ୍ରିଗ୍ଜି ୱାଜ଼ି ହେୱାନିଂ ଡାଣ୍ଡାହାଡ଼୍ ମାଗ୍ଜି, ଇନାକିଦେଂ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଡୁତାତ୍ ଆରି ଇନେସ୍ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଉଜ୍ ଆତାତ୍ ହେଦାଂ ୱିଜ଼ାର୍ ମାନାୟ୍ ମୁମ୍ଦ ୱେଚ୍ଚାତ୍ ।
48 அப்பொழுது இயேசு அவளிடம், “மகளே, உன் விசுவாசம் உன்னை குணப்படுத்தியது. சமாதானத்தோடே போ” என்றார்.
ହେବେଣ୍ଡାଂ ହେଦେଲିଂ ଇଚାନ୍, “ଏ ଗାଡ଼୍ଚେ ନି ପାର୍ତି ନିଙ୍ଗେଙ୍ଗ୍ ଉଜ୍ କିତ୍ତାତ୍ନ୍ନା, ସୁସ୍ତାତାଂ ତାଙ୍ଗ୍ଜି ହାଲା ।”
49 இயேசு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் யவீருவின் வீட்டில் இருந்து ஒருவன் வந்தான். அவன் யவீருவிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். இனிமேலும் போதகரைத் தொந்தரவு செய்யவேண்டாம்” என்றான்.
ହେୱାନ୍ ଇ ବେରଣ୍ ଇଞ୍ଜିମାନିହିଂ କୁଟୁମ୍ ଇଞ୍ଜ୍ନି ମୁଡ଼୍ଦାକାନ୍ ରୱାନ୍ ୱାଜ଼ି ଇଚାନ୍, “ନି ଗାଡ଼୍ ହାତାତେ, ଗୁରୁଙ୍ଗ୍ ଆରେ କସ୍ଟ ହିମାଟ୍ ।”
50 இயேசு இதைக் கேட்டதும் யவீருவிடம், “பயப்படாதே; விசுவாசமுள்ளவனாய் மட்டும் இரு. அவள் பிழைப்பாள்” என்றார்.
ମାତର୍ ଜିସୁ ଇଦାଂ ୱେନ୍ଞ୍ଜି ଜାଇରସ୍ତିଂ ଉତର୍ ହିତାନ୍, “ପାଣ୍ଡ୍ରା ଆମା, କେବଲ୍ ପାର୍ତି କିୟା, ଆରେ ହେଦେଲ୍ ଉଜ୍ ଆନାତ୍ ।”
51 அவர் யவீருவினுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோருடன், அந்தப் பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தவிர, வேறு ஒருவரையும் தன்னுடன் உள்ளே போக அவர் அனுமதிக்கவில்லை.
ଆରେ, ହେୱାନ୍ ଇଞ୍ଜ ୱାଜ଼ି ପିତର୍, ଜହନ୍ ଆରି ଜାକୁବ୍, ଆରେ ଗାଡ଼୍ଚେ ଲାତ୍ରାହି ତେହିଙ୍ଗ୍ ପିସ୍ତି ଆରେ ଇନେରିଂ ତା ଲାହାଙ୍ଗ୍ ବିତ୍ରେ ହଣ୍ତେଙ୍ଗ୍ କାଜିଂ ହିୱାତାର୍ ।
52 இதற்கிடையில், அங்கிருந்த மக்களெல்லாரும் இறந்த சிறுமிக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “அழாதீர்கள். இவள் இறந்து போகவில்லை, தூங்குகிறாள்” என்றார்.
ମାତର୍ ୱିଜ଼ାକାର୍ ହେ କାଜିଂ ଆଡ଼୍ଜି ଆଡ଼୍ଜି ନେଞ୍ଜେଡାକିତ ଇଡ଼ିୟା ଆଜ଼ି ମାଚାର୍ । ହେବେଣ୍ଡାଂ ହେୱାନ୍ ଇଚାନ୍, “ଆଡ଼୍ବାମାଡୁ; ହେଦେଲ୍ ହାୱାତାତ୍ନ୍ନା, ମାତର୍ ହୁଞ୍ଜୁନାତା ।”
53 அவள் இறந்துபோனதை அறிந்திருந்த மக்கள், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
ମାତର୍ ହେଦେଲ୍ ହାତାତେ ଇଞ୍ଜି ପୁନ୍ଞ୍ଜି ମାଚିଲେ ହେୱାର୍ ଜିସୁଙ୍ଗ୍ ଗ୍ରେଚ୍ଚେଂ ଲାଗାତାର୍ ।
54 ஆனால் இயேசு அவளுடைய கையைப் பிடித்து, “பிள்ளையே, எழுந்திரு!” என்றார்.
ମାତର୍ ଜିସୁ ତା କେଇ ଆସ୍ତି ହିର୍ବିସ୍ ଇଚାନ୍, “ଏ ଗାଡ଼୍ଚେ ନିଙ୍ଗା ।”
55 அப்பொழுது, அவளுடைய உயிர் திரும்பவும் வந்தது. உடனே அவள் எழுந்து உட்கார்ந்தாள். இயேசு அவர்களிடம், அவளுக்குச் சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி சொன்னார்.
ହେବେ ତା ଜିବୁନ୍ ୱାତାତ୍, ଆରେ ହେଦେଲ୍ ହେ ଦାପ୍ରେ ନିଙ୍ଗ୍ତାତ୍, ଆରେ ଜିସୁ ତାଙ୍ଗେଙ୍ଗ୍ ଇଚୁଟିଂ ତିଞ୍ଜେଙ୍ଗ୍ ହିଦେଙ୍ଗ୍ ଇଞ୍ଜି ବଲ୍ ହିତାନ୍ ।
56 அவளுடைய பெற்றோர்கள் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களிடம், “நடந்த சம்பவத்தை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று கட்டளையிட்டார்.
ଇବେ ହେ ଲାତ୍ରାହି ତେହି ଟାଟ୍କା ଆତାର୍; ମାତର୍ ହେ ଗଟ୍ଣାନି କାତା ଇନେରିଂ ୱେଚ୍ପାମାଡୁ ଇଞ୍ଜି ବଲ୍ ହିତାନ୍ ।