< லூக்கா 7 >

1 கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இவற்றையெல்லாம் இயேசு சொல்லி முடித்தபின்பு, அவர் கப்பர்நகூமுக்கு சென்றார்.
Сар пэрэашыля тэ дэл дума кай мануша, Исусо жыля андо Капернаумо.
2 அங்கே நூற்றுக்குத் தலைவனின் வேலைக்காரன் ஒருவன் வியாதியுற்று மரணத் தருவாயில் இருந்தான்; இந்த வேலைக்காரன் தன்னுடைய எஜமானுக்கு மதிப்புக்குரியவனாய் இருந்தான்.
Котэ, кав екх халавдо, пхурэдэр англай шэл халавдэ, сас бутярно, вов лэс фартэ танголас. Вов сас фартэ насвало и мэрэлас.
3 நூற்றுக்குத் தலைவன் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். எனவே அவன் யூதர்களின் தலைவர்கள் சிலரை அவரிடம் அனுப்பி, அவர் வந்து தனது வேலைக்காரனைக் குணமாக்க வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொண்டான்.
Кала халавдо ашундя палав Исусо, бишалдя Лэстэ иудеёндирэн пхурэдэрэн тэ мангэн Лэс, кай тэ авэл и тэ састярэл лэстирэ бутярнэс.
4 அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவரை மிகவும் வேண்டிக்கொண்டு, “நீர் இதை அந்த அதிபதிக்குச் செய்வதற்கு அவன் தகுதியுடையவன்.
Пхурэдэра авиле кав Исусо и линэ тэ мангэн Лэс: — Кадва мануш ашэл, кай Ту тэ терэс када важ лэсти.
5 ஏனெனில், அவன் நமது மக்களை நேசிக்கிறான்; நமக்கொரு ஜெப ஆலயத்தையும் கட்டிக் கொடுத்திருக்கிறான்” என்றார்கள்.
Вов камэл амарэн манушэн и тердя амэнди синагога.
6 எனவே இயேசு அவர்களுடன் சென்றார். அவனுடைய வீட்டிற்குச் சமீபமாய் அவர் வந்துகொண்டிருக்கையில் அந்த நூற்றுக்குத் தலைவன் தனது நண்பர்களை அவரிடத்தில் அனுப்பிச் சொல்லும்படி சொன்னதாவது: “ஆண்டவரே, சிரமம் வேண்டாம், நீர் என் வீட்டிற்கு வருவதற்கு நான் தகுதியற்றவன்.
Исусо жыля лэнца. Кала Вов поджалас кав чер, пхурэдэр шэлэнго бишалдя Лэстэ пэстирэ амалэн тэ пхэнэн: — Рай, на лэ пэр пэстэ пхаримос. Мэ на ашав, кай ту тэ зажас талай ушарди мэрнэ черэстирэ.
7 ஆகையால் உம்மிடம் வருவதற்கும் நான் என்னைத் தகுதியுள்ளவனாகக் கருதவில்லை. ஆனால் நீர் ஒரு வார்த்தை சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் குணமடைவான்.
Мэ ежэно на ашав тэ авав Тутэ. Нэ пхэн качи лав, и мэрно бутярно састёла.
8 நானும் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழேயும் படைவீரர்கள் இருக்கிறார்கள். நான் ஒருவனை, ‘போ’ என்றால், போகிறான்; ஒருவனை, ‘வா’ என்றால், வருகிறான். நான் எனது வேலைக்காரனிடம் இதைச் செய் என்றால், அவன் செய்கிறான்” என்றான்.
Мэ ежэно кандав, со припхэнэн манди мэрнэ пхурэдэра. И мандэ исин майцэкнэ мандар халавдэ, савэ кандэн ман. Мэ пхэнав екхэсти: «Жа!» — и жал, аврэсти: «Ав кардэ!» — и кодва авэл. Бутярнэсти пэстирэсти пхэнав: «Стер када!» — и вов терэл.
9 இயேசு இதைக் கேட்டபோது, அந்த நூற்றுக்கு அதிபதியைக் குறித்து வியப்படைந்தார். அவர் தம்மைப் பின்பற்றி வந்த மக்கள் கூட்டத்தினரைத் திரும்பிப்பார்த்து, “நான் உங்களுக்குச் சொல்கிறேன், இப்படிப்பட்ட பெரிதான விசுவாசத்தை இஸ்ரயேலரிடத்திலும் நான் கண்டதில்லை” என்றார்.
Исусо шундя када, дивосайля, обрисайля кай мануша, савэ жанас пала Лэстэ, пхэндя: — Пхэнав тумэнди, со и андэ Израилё Мэ на аракхлем кацаво патимос.
10 அப்பொழுது இயேசுவிடம் அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பி சென்றபோது, அந்த வேலைக்காரன் சுகமடைந்திருப்பதைக் கண்டார்கள்.
Кола, савэн бишалдэ, рисайле андо чер, аракхле бутярнэс састярдэса.
11 இதற்குப் பின்பு, இயேசு நாயீன் என்னும் பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும் பெருங்கூட்டமாயிருந்த மக்களும் அவருடன் சென்றார்கள்.
На прожыля бут вряма, тунчи Исусо жыля андо форо, саво акхарэлпэ Наино. Лэса жанас Лэстирэ сытярнэ и бут авэр мануша.
12 அவர் பட்டணத்து வாசலுக்கு சமீபமாய் வந்தபோது, இறந்துபோன ஒருவனை அடக்கம்பண்ணும்படி சிலர் சுமந்துகொண்டு வந்தார்கள். இவன் தன் தாய்க்கு ஒரே மகன், அவளோ ஒரு விதவை. பட்டணத்திலிருந்தும் மக்கள் பெருங்கூட்டமாய் அவளுடன் வந்தார்கள்.
Кала Вов поджыля кай форости удар, котар выандярэнас мулэс. Вов сас екх шаво кай дэй, ай вой сас пхивли. Екхэтанэ ласа андав форо выжанас бут мануша.
13 கர்த்தர் அவளைக் கண்டபோது, அவள்மேல் மனதுருகி, “அழாதே” என்று சொன்னார்.
Кала Рай удикхля кала жувля, Вов тангосардя ла. — На ров, — пхэндя Вов лати.
14 பின்பு அவர் போய் பாடையைத் தொட்டார். அதை சுமந்து சென்றவர்கள் நின்றார்கள். அவர், “வாலிபனே, எழுந்திரு என்று உனக்கு சொல்லுகிறேன்!” என்றார்.
Тунчи Вов поджыля, ляпэ кав сикрио. Кола, ко андярэлас лэс, ашыле. Исусо пхэндя: — Шаворо, пхэнав тути: вщи!
15 இறந்தவன் எழுந்து பேசத் தொடங்கினான்; இயேசு அவனைத் திரும்பவும் அவனுடைய தாயிடம் ஒப்படைத்தார்.
Муло бэшля и ля тэ дэл дума. Исусо отдя лэс лэстиря дати.
16 அவர்கள் எல்லோரும் பயபக்தியுடன் இறைவனைத் துதித்தார்கள். “ஒரு பெரிய இறைவாக்கினர் நம்மிடையே தோன்றியிருக்கிறார். தம்முடைய மக்களுக்கு உதவிசெய்யும்படி இறைவன் வந்திருக்கிறார்” என்றார்கள்.
Пэ всаворэ, ко сас котэ, авиля бари дар, и мануша линэ тэ лашарэн Дэвлэс и тэ пхэнэн: — Баро пророко авиля амэндэ! Дэл авиля кай Пэстирэ мануш!
17 இயேசு செய்ததைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா முழுவதிலும், அதைச் சுற்றியுள்ள நாட்டுப்புறத்திலும் பரவியது.
Кацави дума розжыляпэ пала Лэстэ пай всавори Иудея и всавори пхув.
18 யோவானின் சீடர்கள் இவை எல்லாவற்றையும் யோவானுக்குச் சொன்னார்கள். யோவான் தன்னுடைய சீடர்களில் இருவரைக் கூப்பிட்டு,
Сытярнэ Иоаностирэ роспхэндэ лэсти пала вся кода. Тунчи Иоано акхардя пэстэ дуен андар лэндэ.
19 “வரப்போகிற கிறிஸ்து நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” என்று கேட்கும்படி, கர்த்தரிடம் அவர்களை அனுப்பினான்.
И бишалдя лэн кав Рай тэ пушэн: — Ту кодва, Ко трэбуй тэ авэл, или амэнди тэ ажутярас аврэс?
20 அவர்கள் இயேசுவிடம் வந்து, “வரப்போகிறவர் நீர்தானா அல்லது நாங்கள் வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று கேட்கும்படி, யோவான் ஸ்நானகன் எங்களை உம்மிடம் அனுப்பியிருக்கிறார்” என்றார்கள்.
Кала мурша авиле кав Исусо и пхэндэ: — Иоано Болдэмарё бишалдя амэн Тутэ тэ пушас: «Ту Кодва, Ко трэбуй тэ авэл, или амэнди тэ ажутярас аврэс?»
21 அதே வேளையிலே வியாதிப்பட்டவர்கள், நோயுற்றிருந்தவர்கள், தீய ஆவியால் பிடிக்கப்பட்டிருந்தவர்கள் ஆகிய பலரை இயேசு குணமாக்கினார்; பார்வையற்றோராய் இருந்த பலருக்கும் அவர் பார்வையைக் கொடுத்தார்.
Андэ кодья вряма Исусо састярдя бутэн манушэн насвалимастар, дукхатар и холятирэ духондар, и бутэнди корэнди отпхэрнадя якха.
22 எனவே அவர் யோவானின் சீடர்களிடம், “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும் கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்: பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
Исусо пхэндя бишалдэнди: — Жантэ, роспхэнэнтэ Иоаности, со тумэ дикхле и шундэ: корэ дикхэн, бангэ пхирэн, насвалэ проказаса жужарэнпэ латар, кашукэ ашунэн, мулэ жундён, и чёрэнди роспхэнэлпэ Радосаво Лав.
23 என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார்.
Бахтало кодва, ко на хасарэла патимо андэ Мандэ!
24 யோவானின் தூதர்கள் புறப்பட்டுப் போனதும், கூடியிருந்த மக்களுடன் இயேசு யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார்: “பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?
Кала бишалдэ сытярнэ Иоаностирэ ужыле, Исусо ля тэ дэл дума манушэнди палав Иоано: — Со тумэ пхирдэ тэ дикхэн андэ мал? Чяр, сави тинолпэ балвалятар?
25 இல்லையானால், எதைப்பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா? இல்லை, விலை உயர்ந்த உடையை உடுத்தி, ஆடம்பரமாக வாழ்பவர்கள் மாளிகைகளிலே இருக்கிறார்கள்.
Тунчи, со тумэ пхирдэ тэ дикхэн? Манушэс, урявдэс андэ барвали йида? Най! Кола, савэ урявдэ андэ ковли йида, жувэн барвалэс андэ тхагарэндирэ чера.
26 அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? இறைவாக்கினனையா? ஆம், ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
Тунчи, со тумэ пхирдэ тэ дикхэн? Пророкос? Кадя, пхэнав тумэнди, со майбарэс, сар пророко.
27 “‘உமக்கு முன்பாக என்னுடைய தூதனை அனுப்புவேன், அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்.’
Вов кодва, пала кастэ пистросардо: «Акэ, Мэ бишалав англав Тутэ Мэрнэс ангелос, саво гытола англав Тутэ Тиро дром».
28 நான் உங்களுக்குச் சொல்கிறேன், பெண்களிடத்தில் மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவானைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆனால் இறைவனுடைய அரசில் சிறியவனாயிருக்கிறவன், அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான்” என்றார்.
Пхэнав тумэнди: колэндар, савэн бэяндэ жувля, нинай майбарэс пророкос, сар Иоано. Но майцэкно андэ Тхагаримос Дэвлэско — майбаро лэстар.
29 வரி வசூலிப்போர் உட்பட, எல்லா மக்களும் இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டபோது, இறைவன் நீதியுள்ளவர் என்று அங்கீகரித்தார்கள்; ஏனெனில், அவர்கள் யோவானிடம் திருமுழுக்கு பெற்றிருந்தார்கள்.
Всаворэ мануша тай стидэмаря налогонэндирэ, ашундэ и прижангле Дэвлэско дром чячюно и прилинэ болдимос Иоаноско.
30 ஆனால் பரிசேயரும் மோசேயின் சட்ட வல்லுநர்களும் யோவானிடம் திருமுழுக்கு பெறாததினால், தங்களுக்கான இறைவனுடைய நோக்கத்தைப் புறக்கணித்தார்கள்.
А фарисеёря и сытяримаря Законостирэ отпхэндэпэ тэ терэ, со пхэндя о Дэл, и на болдэпэ Иоаностар.
31 பின்னும் கர்த்தர் சொன்னது, “இந்தத் தலைமுறையைச் சேர்ந்த இந்த மக்களை நான் எதற்கு ஒப்பிடுவேன்? அவர்கள் யாரைப்போல் இருக்கிறார்கள்?
Исусо пхэндя: — Пэр кастэ тунчи шонпэ мануша кала родостар? Пэр кастэ онэ мэзимэ?
32 அவர்கள் சந்தைகூடும் இடங்களில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் கூப்பிட்டு, “‘நாங்கள் உங்களுக்காகப் புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; நாங்கள் ஒப்பாரி பாடினோம், நீங்கள் அழவில்லை,’ என்று சொல்கிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.
Онэ — сар бэяцэ, савэ бэшэн пэ тарго и цыписавэн ек екхэсти: «Амэ дилабасас тумэнди пэ дудка, и тумэ на цэлэнас. Амэ дилабасас тумэнди ровиканэ диля, и тумэ на ровэнас».
33 யோவான் ஸ்நானகன் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், திராட்சை இரசம் குடிக்காதவனுமாக வந்தான். நீங்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறீர்கள்.
Акэ, авиля Иоано Болдэмарё, на хал марно и на пэл мол, и тумэ пхэнэн: «Андэр лэстэ бэнг».
34 மானிடமகனோ விருந்து உணவைச் சாப்பிடுகிறவராகவும், குடிக்கிறவராகவும் வந்தார். நீங்களோ, ‘இவனோ உணவுப்பிரியன், மதுபானப்பிரியன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கிறீர்கள்.
Авиля Шаво Манушыкано, хал и пэл, и тумэ пхэнэн: «Акэ мануш, саво обхалпэ, и матимари, амал стидэмаренго налогонэндиро и бэзэхалэ манушэнго».
35 ஆனால் ஞானம் சரியானது என்று அதை ஏற்று நடக்கிறவர்களின் செயல்களாலேதான் அது நிரூபிக்கப்படுகிறது” என்றார்.
Нэ допхэнэлпэ годи рындонца всаворэ бэяцэнца.
36 பரிசேயரில் ஒருவன் தன்னுடன் விருந்து சாப்பிடும்படி இயேசுவை அழைத்திருந்தான். எனவே இயேசு பரிசேயனுடைய வீட்டிற்குப்போய் பந்தியில் உட்கார்ந்திருந்தார்.
Екх андай фарисеёря акхардя Исусос пэстэ черэ тэ хал. Исусо авиля лэстэ черэ и бэшля палай мэсаля.
37 அந்தப் பட்டணத்தில் பாவியாகிய ஒரு பெண் இருந்தாள். இயேசு அந்தப் பரிசேயனுடைய வீட்டில் விருந்து சாப்பிடுகிறார் என்று அவள் கேள்விப்பட்டு, விலை உயர்ந்த நறுமணத்தைலம் உள்ள, வெள்ளைக்கல் குடுவையுடன் அங்கு வந்தாள்.
Андэ кадья вряма екх жувли колэ форостар, савя жанэнас сар бэзэхаля, ужангля, кай Исусо хал андо чер фарисеёско, андя кордэ кхоро андай алебастро лэ духонэнца.
38 இயேசுவுக்குப் பின்னால் வந்து அவள் அழுதுகொண்டே நின்றாள். மேலும் அவருடைய பாதங்களை தன் கண்ணீரால் நனைத்து, தனது தலைமுடியினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தமிட்டு, பரிமளதைலத்தை ஊற்றினாள்.
Жувли тэрдиля палал паша пэрнэ кав Исусо, фартэ ровэлас, и ясва прастэнас Лэсти пэ пэрнэ. Вой ля тэ выкхосэл Лэсти пэрнэ пэсти балэнца, чюминдэлас лэн и макхэлас духонэнца.
39 இயேசுவை விருந்துக்கு அழைத்த பரிசேயன் இதைக் கண்டபோது, “இவர் ஒரு இறைவாக்கினராய் இருந்தால், தன்னைத் தொடுவது யார் என்றும், இவள் எப்படிப்பட்ட பெண் என்றும், இவள் ஒரு பாவி என்பதையும் அறிந்திருப்பாரே” என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
Кала фарисеё, саво акхардя Исусос, дикхля када, вов гындосардя: «Сар Кадва Мануш чячес тэ авэл пророкоса, то Вов жанэлас бы, со манушни, сави Лэстэ лэлпэ, — бэзэхали».
40 இயேசு அவனைப் பார்த்து, “சீமோனே, நான் உனக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்” என்றார். அவன், “போதகரே சொல்லும்” என்றான்.
Тунчи Исусо пхэндя лэсти: — Симоно, Мэ камав тути варисо тэ пхэнав. Кодва пхэндя: — Пхэн, Сытяримари.
41 அப்பொழுது இயேசு, “வட்டிக்குக் கடன்கொடுக்கும் ஒருவனிடம் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள். ஒருவன் அவனுக்கு ஐந்நூறு வெள்ளிக்காசும் மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்க வேண்டியிருந்தது.
— Дуй мануша сас ужылэ екхэ и колэсти манушэсти. Екх ужыло сас панч шэл динария, а авэр — пандэша.
42 இரண்டு பேரிடமும் திருப்பிக் கொடுக்க பணம் இருக்கவில்லை. எனவே அவன், அவர்கள் இருவருடைய கடன்களையுமே தள்ளுபடி செய்துவிட்டான். அப்படியானால், அவர்களில் யார் அவனிடம் அதிக அன்பாயிருப்பான்?” என்று கேட்டார்.
И екхэсти, и аврэсти на сас, соса тэ рисарэн ужылимос. Колэстар вов эртисардя дуенди. Ко лэндар авэла майфартэ тэ камэл лэс?
43 அதற்கு சீமோன், “அதிக கடன் தள்ளுபடி செய்யப்பட்டவனே என்று எண்ணுகிறேன்” என்றான். இயேசு அவனிடம், “நீ சரியாகச் சொன்னாய்” என்றார்.
Симоно пхэндя: — Гындосарав, кодва, касти сас будэр ужылимос эртисардо. — Ту чячес полэс, — пхэндя Исусо.
44 பின்பு அவர், அந்தப் பெண்ணின் பக்கமாகத் திரும்பி, சீமோனுக்குச் சொன்னதாவது: “நீ இந்தப் பெண்ணைப் பார்க்கிறாய் அல்லவா? நான் உனது வீட்டிற்குள் வந்தேன், நீ என் கால்களைக் கழுவ தண்ணீர் தரவில்லை. ஆனால் இவள் தன்னுடைய கண்ணீரினால் என் பாதங்களை நனைத்து, தன் தலைமுடியினால் அவற்றைத் துடைத்தாள்.
Обрисайля кай жувли, пхэндя Симоности: — Ту дикхэс акала жувля? Мэ авилем адо чер тиро. Ту паи манди на дян, кай тэ выхалавав пэрнэ, а вой выхаладя Мэрнэ пэрнэ ясвэнца и выкхосля пэстирэ балэнца!
45 நீ எனக்கு முத்தம் கொடுக்கவில்லை, ஆனால் இந்தப் பெண் நான் இங்கு உள்ளே வந்ததிலிருந்து, என் பாதங்களை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறாள்.
Ту на чюминдян Ман, сар авилем тутэ, а кадья жувли кола вряматар, сар Мэ зажылем тутэ, на пэрэашэл тэ чюминдэл Манди пэрнэ.
46 நீ என்னுடைய தலைக்கு எண்ணெய் வைக்கவில்லை, ஆனால் இவள் என் பாதங்களில் நறுமண தைலத்தை ஊற்றினாள்.
Ту на дян Манди оливково дзэто тэ макхав шэро, а вой кучютнэ духонэнца помакхля Манди пэрнэ.
47 எனவே நான் உனக்குச் சொல்கிறேன், இவளுடைய அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவள் என்னிடத்தில் அதிகமாக அன்பு கூர்ந்தாளே. ஆனால் சிறிதளவாய் மன்னிப்பைப் பெற்றவன், சிறிதளவாகவே அன்பு காட்டுகிறான்” என்றார்.
Важ кода Мэ пхэнав тути: лати эртисардэпэ бут бэзэха, пала кода вой покамля кадя бут. А кодва, касти цыра эртисардо, и камэл майцыра.
48 அதற்குப் பின்பு இயேசு அவளிடம், “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
Тунчи Иисусо пхэндя жувляти: — Тирэ бэзэха эртисардэ.
49 அங்கு இருந்த மற்ற விருந்தாளிகள், “பாவங்களை மன்னிக்கின்ற இவன் யார்?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
Нэ авэр мануша, савэ сас паша мэсали, гындонас: «Ко Вов кацаво, со и бэзэха эртисарэл?»
50 இயேசு அந்தப் பெண்ணிடம், “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது; சமாதானத்தோடே போ” என்றார்.
Исусо пхэндя жувляти: — Тиро патимос фэрисардя тут. Жа лэ мироса.

< லூக்கா 7 >