< லூக்கா 5 >
1 ஒரு நாள் இயேசு கெனேசரேத் ஏரியருகே நின்றுகொண்டிருந்தபோது, இறைவனின் வார்த்தையைக் கேட்பதற்கு மக்கள் அவரைச் சுற்றிலும் கூடிவந்தார்கள்.
एक्की दिहाड़े यीशु गन्नेसरतेरे समुन्देरे बन्ने पुड़ खेड़ोरो थियो, ते बड़े लोक तैस कां करां परमेशरेरू वचन शुन्नेरे लेइ तै उन्ढे बिछ़ड़ी गाते थिये।
2 அவர் கரையோரம் இரண்டு படகுகளைக் கண்டார், மீனவர் அவற்றை அங்கு விட்டுவிட்டுத் தங்களது வலைகளை அலசிக் கொண்டிருந்தார்கள்.
तैनी दूई किश्ती बन्ने लेगोरी लेई, ते मेछ़ली ट्लानेबाले किश्ती ड्लेखी छ़ेडतां अपना ज़ालां धोने लग्गोरो थिये।
3 அவர் சீமோனுக்குச் சொந்தமான படகில் ஏறினார். அவர் அந்தப் படகை கரையிலிருந்து கொஞ்சம் தள்ளிவிடும்படி சீமோனிடம் கேட்டுக்கொண்டு, படகில் உட்கார்ந்து மக்களுக்கு போதனை செய்தார்.
यीशु एक्की किश्ती मां च़ढ़ो ते किश्तरे मालिके शमौने सेइं ज़ोने लगो, तुस किश्ती इट्ठां बन्ने पुड़ेरां नेइतां थोड़ी दूर लाथ। फिरी यीशु किश्ती मां बिश्तां तैन लोकन उपदेश देने लगो।
4 அவர் பேசி முடித்தபின்பு, சீமோனை நோக்கி, “படகை ஆழமான தண்ணீர் பகுதிக்குக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார்.
ज़ैखन तैनी लोकन शिक्षा दित्ती त तै शमौने सेइं ज़ोने लगो, “तुस किश्ती डुग्घी ठैरी च़लाथ ते मेछ़ली ट्लानेरे लेइ ज़ाल छ़डा।”
5 அதற்குச் சீமோன், “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றுமே கிடைக்கவில்லை. ஆனால் உம்முடைய வார்த்தையின்படியே நான் வலைகளைப் போடுகிறேன்” என்றான்.
शमौने जुवाब दित्तो, “हे गुरू, असेईं सैरी राती तरले कियोरेन ते अक मछ़ली भी नईं ट्लेइयोरी, पन असां तेरे ज़ोने सेइं ज़ाल छ़डतम।”
6 அவர்கள் அப்படிச் செய்தபோது, திரளான மீன்களைப் பிடித்தார்கள். அவர்களுடைய வலைகள் பாரத்தால் கிழியத்தொடங்கின.
आखर्कार पतरस ते तैसेरे सैथेईं ज़ालां छैडी दित्तां ते एत्री मेछ़ली लेगि, कि ज़ालां छ़िन्दोइतां मेछ़ली बेइरोवं निस्सने लेगि।
7 அப்பொழுது மற்றப் படகில் இருந்த தங்கள் பங்காளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படி, அவர்களுக்குச் சைகை காட்டினார்கள். அவர்கள் வந்து இரண்டு படகுகளையும் மீன்களினால் நிரப்பினார்கள்; அவை மூழ்கத் தொடங்கின.
तैखन तैनेईं अपने सैथन जो ज़ैना होरि किश्ती पुड़ थिए, इशारो कियो कि एज्जा इश्शी मद्दत केरा, ते तैना भी आए ते किश्ती मेछ़लेईं सेइं एत्री भेरोई जेई कि किश्ती डुबने लगी।
8 சீமோன் பேதுரு இதைக் கண்டபோது, இயேசுவின் பாதத்தில் விழுந்து, “ஆண்டவரே, என்னைவிட்டுப் போய்விடும்; நான் பாவியான மனிதன்!” என்றான்.
शमौन पतरस एन हेरतां यीशुएरे पावन पुड़ पेइतां ज़ोने लगे, “हे प्रभु, अवं पापी मैन्हु आईं तू मीं करां दूर भो!”
9 அவனும் அவனுடன் இருந்தவர்கள் எல்லோரும் தாங்கள் பிடித்த மீன்களைக் கண்டு வியப்படைந்தார்கள்.
गल ए थी कि तै त तैसेरे साथी एत्री मेछ़ली लेइतां हैरान भोइ जोरे थिये।
10 சீமோனின் பங்காளிகளான செபெதேயுவின் மகன்களான யாக்கோபும் யோவானும்கூட வியப்படைந்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனிடம், “பயப்படாதே; இதுமுதல் நீ இறைவனுக்காக மனிதரைப் பிடிப்பவனாவாய்” என்றார்.
तेरहो हाल जेब्देरे मट्ठां केरो यानी याकूब त कने यूहन्नारो भी थियो, ज़ैना शमौने सेइं साथी थिये, यीशुए शमौने सेइं ज़ोवं, “डर नन्ना अज़्ज़ेरे बाद तू मेछ़ली ट्लाने बालो नईं, बल्के मैनन् अकोट्ठे केरतां मेरे चेले बनानेबालो भोलो।”
11 எனவே அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் சேர்த்தபின், எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றிச் சென்றார்கள்.
तैनेईं किश्ती ड्लेखी एन्तां लेई, ते अपनू सब किछ छ़ेडतां यीशु पत्ती च़ले जे।
12 இயேசு ஒரு பட்டணத்தில் இருக்கையில், ஒரு குஷ்டவியாதி உள்ளவன் வந்தான். அவன் இயேசுவைக் கண்டபோது, தரையில் முகங்குப்புற விழுந்து, “ஆண்டவரே, நீர் விரும்பினால், என்னைச் சுத்தமாக்க உம்மால் முடியும்” என்றான்.
ज़ैखन यीशु एक्की नगर मां थियो, ते एरू भोवं कि तैड़ी अक मैन्हु थियो, ज़ेसेरे सैरी जानी कोढ़ थियूं, तैनी यीशु लाव, ते तै ज़ैन्धु केरे भारे बिश्तां तैस कां मिन्नत केरतां ज़ोने लगो, “हे प्रभु तू चास त मेरू कोढ़ बज़्झ़ेई सकतस।”
13 இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு, “எனக்கு சித்தமுண்டு, நீ சுத்தமடைவாயாக!” என்றார். உடனே குஷ்டவியாதி அவனைவிட்டு நீங்கிற்று.
यीशुए अपनो हथ तैस पुड़ रख्खो ते ज़ोवं, “अवं चाताईं, तू बज़्झ़ोस।” ते तैखने तैसेरू कोढ़ साफ भोइ जेवं।
14 அப்பொழுது இயேசு அவனிடம், “இதைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம்; ஆனால், நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, உன்னுடைய சுத்திகரிப்புக்காக மோசே கட்டளையிட்ட பலிகளைச் செலுத்து; அது அவர்களுக்கு சாட்சியாய் இருக்கும்” என்று கட்டளையிட்டார்.
तैखन यीशुए तैस मैन्हु हुक्म दित्तो, “हेर, एसेरे बारे मां केन्ची सेइं किछ न ज़ोइयां। बल्के अपनो आपे याजके हिरा। तैल्ला पत्ती, तू अपने बेज़्झ़ोनेरे वजाई सेइं च़ढ़तल च़ाढ़, ज़ेसेरे बारे मां मूसा नेबे कानूने मां हुक्म दित्तोरोए। ताके लोकन पतो च़ले कि तू बेज्झ़ोरोस।”
15 ஆனால் அவரைப்பற்றிய செய்தி இன்னும் அதிகமாய் பரவிற்று, இதனால் அவர் சொல்வதைக் கேட்பதற்கும் தங்கள் நோய்களிலிருந்து சுகமடைவதற்கும், மக்கள் கூட்டம் கூட்டமாய் அவரிடம் வந்தார்கள்.
पन यीशुएरे बारे मां सेब्भन पतो लगो ते लोक दूरेरां देंते एजने लगे ताके यीशुएरी गल्लां शुन्न कने अपनि बिमैरन करां बेझ़ोन।
16 ஆனால் இயேசுவோ அவர்களைவிட்டுத் தனிமையான இடத்திற்கு விலகிப்போய், அங்கே மன்றாடினார்.
पन यीशु जादे केरतां सुनसान ठैरी च़लो गातो थियो, ते प्रार्थना केरतो रातो थियो।
17 ஒரு நாள் இயேசு போதித்துக் கொண்டிருந்தார், கலிலேயாவிலுள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் யூதேயாவிலும் எருசலேமிலுமிருந்து வந்த பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். நோயாளிகளை குணமாக்கும்படியான கர்த்தருடைய வல்லமை இயேசுவோடு இருந்தது.
एक्की दिहैड़ी एरू भोवं कि यीशु शिक्षा देने लग्गोरो थियो, ते तैखन किछ फरीसी ते शास्त्री लोक ज़ोते थिये, तैना गलील इलाके ते यहूदियारे सैरी इलाकन मरां यरूशलेम नगरे मां ओरे थिये; ते परमेशरेरी शक्ति यीशु सेइं साथी थी, ते बिमार बेज़्झ़ोइतां गाते थिये।
18 அப்பொழுது படுக்கையில் இருந்த முடக்குவாதக்காரன் ஒருவனை சிலர் தூக்கிக்கொண்டு வந்தார்கள்; அவனை வீட்டிற்குள் கொண்டுபோய் இயேசுவுக்கு முன்பாகக் கிடத்துவதற்கு அவர்கள் முயற்சிசெய்தார்கள்.
किछ मैनेईं अक अधरंगी मैन्हु खट्टी पुड़ छ़ुइतां आनोरोए थियो, ते तैना कोशिश लगे केरने कि एस अन्तर नेइतां यीशु कां पुज़ाम।
19 மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால் அப்படிச் செய்வதற்கான வழி அவர்களுக்குக் கிடைக்கவில்லை; எனவே அவர்கள் வீட்டின்மேல் ஏறி கூரையின் ஓடுகளைப் பிரித்து, அதன் வழியாக படுக்கையில் கிடந்த அவனைக் கூடியிருந்த மக்கள் நடுவே இயேசுவுக்குமுன் இறக்கினார்கள்.
पन अन्तर एत्री तंगी थी कि तैना अन्तर न गेइ सके फिरी तैनेईं तैस घरेरी छत पुट्टी ज़ैस घरे मां यीशु थियो, ते खट्टां सने तै अधरंगी मैन्हु अन्तर यीशुएरे तुतरे अगर ओसालो।
20 இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
यीशु तैन केरो विश्वास हेरतां ज़ोवं, “हे दोस्त तेरे पाप माफ़ भोए।”
21 பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியர்களும், “இறைவனை நிந்தித்துப் பேசுகிற இவன் யார்? இறைவனாலன்றி யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று தங்களுக்குள்ளே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
शास्त्री ते फरीसी लोक सोचने लगे, “ए कौन मैन्हु आए, ज़ै परमेशरेरी तुहीन केरते, परमेशरेरे अलावा कौन पाप माफ़ केरि सकते?”
22 அவர்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இயேசு அறிந்து, “உங்கள் மனதில் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்?
यीशुए तैन केरि गल्लां बुझ़ी ते तैन जुवाब दित्तो, “तुस अपने-अपने मने मां एन्च़रां किजो सोचने लग्गोरेथ?
23 ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதா, எது எளிது?
कुन ज़ोनू सुखतुए, ‘तेरे पाप माफ़ भोए,’ या एन ज़ोनू ‘उठ, ते च़ल फिर?’
24 ஆனால் பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன். பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார்.
पन तुसन पतो लग्गे, मैनेरे मट्ठे ज़मीनी पुड़ पाप माफ़ केरनेरो अधिकारे,” फिरी यीशुए तैस बिमारे जो ज़ोवं, “अपनि खट सल्ल ते घरजो च़लो गा।”
25 உடனே அவர்களுக்கு முன்பாக அவன் எழுந்து நின்று, தான் படுத்திருந்த படுக்கையை எடுத்துக்கொண்டு இறைவனைத் துதித்தபடி தன் வீட்டிற்குப் போனான்.
तै अधरंगी बिमार मैन्हु सेब्भी केरे सामने ते खड़े उठो ते ज़ैस खट्टी पुड़ तै झ़ुलतो थियो, अपने दोग्गे पुड़ छ़ुइतां परमेशरेरी बड़याई केरतो-केरतो घरजो च़लो जेव।
26 எல்லோரும் வியப்படைந்து இறைவனைத் துதித்தார்கள். அவர்கள் திகிலடைந்து, “நாங்கள் இன்று ஆச்சரியமானவற்றைக் கண்டோம்” என்றார்கள்.
तैना सारे लोक हैरान राए ते परमेशरेरी तारीफ़ केरने लगे ते कने ज़ोने लगे, “ए त असेईं अज़ नव्वीं गल लाई।”
27 இதற்குப் பின்பு, இயேசு வெளியே சென்று வரி வசூலிக்கும் அலுவலகத்தில் வரி வசூலிக்கிறவனான லேவி என்பவன் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார்.
एना गल्लां बीतनेरां बाद यीशु तैट्ठां निस्सो, ते एक्की चुंगी घिन्ने बाले कां च़ले जेव, तैसेरू नवं लेवी थियूं। ते तै चुंगी नेनेबाले दफ़तरे मां बिश्शोरो लाव, ते यीशुए तैस जो ज़ोवं, “तू मीं पत्ती च़ल ते मेरो चेलो बन।”
28 லேவி எழுந்து எல்லாவற்றையும் விட்டுவிட்டு, அவரைப் பின்பற்றிச் சென்றான்.
तै तैखने यीशु पत्ती च़लो जेव।
29 பின்பு லேவி தன்னுடைய வீட்டிலே இயேசுவுக்கு ஒரு பெரிய விருந்து கொடுத்தான்; வரி வசூலிக்கிறவர்களும் வேறு பலரும் பெருங்கூட்டமாக வந்து, அவர்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
ते फिरी लेवी यीशुएरे लेइ अपने घरे अक बड़ी धाम दित्ती। ते तैड़ी चुंगी नेनेबाले ते होरे भी बड़े लोक थिये ज़ैना तैस सेइं साथी रोट्टी खाने बिश्शे।
30 ஆனால் பரிசேயரும் அவர்களுடைய குழுவைச் சேர்ந்த மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இயேசுவின் சீடர்களிடம், “நீங்கள் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறது ஏன்?” என்று கேட்டார்கள்.
फरीसी लोक ते शास्त्री यीशुएरे चेलन सेइं ज़ोने लग्गे, “तुस चुंगी नेनेबालन ते पापी लोकन सेइं साथी किजो खातथ पीतथ?”
31 அதற்கு இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை.
यीशुए तैन सेइं ज़ोवं, “बिमारन डाक्टरेरी ज़रूरत भोचे, न कि सझ़र लोकन।
32 நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே மனந்திரும்பும்படி அழைக்கவந்தேன்” என்றார்.
अवं धर्मी लोकन नईं, पन पापी लोकन कुजाने ओरोईं कि, तैना अपने पापन करां मन फिरान।”
33 சிலர் இயேசுவிடம், “யோவானின் சீடர்கள் அடிக்கடி உபவாசித்து மன்றாடுகிறார்கள், பரிசேயருடைய சீடர்களும் அப்படியே செய்கிறார்கள்; ஆனால் உம்முடைய சீடரோ சாப்பிடுவதும் குடிப்பதுமாக இருக்கிறார்களே” என்றார்கள்.
तैना लोक यीशु सेइं ज़ोने लगे, “यूहन्नारे चेले त बरत रखतन ते प्रार्थना भी केरतन ते एन्च़रे फरीसी लोक भी केरतन, पन तेरे चेले त खातन पीतन?”
34 அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது அவனுடைய நண்பர்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா?
यीशुए तैनन् जुवाब दित्तो, “ड्लाएरे दिहाड़े, कुन लाड़ो साथी भोंते सांते जन बरत रेखी सकतथ?
35 ஆனால் மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்நாட்களில் அவர்கள் உபவாசிப்பார்கள்” என்றார்.
पन तैना दिहाड़े एज्जले, ज़ैखन लाड़ो तैन केरां अलग कियो गालो (यानी मारो गालो)। तैन दिहैड़न मां तैना (अपने दुख्खेरे वजाई सेइं) बरत रख्खेले।”
36 பின்பு இயேசு அவர்களுக்கு ஒரு உதாரணத்தைக் கூறினார்: “ஒருவனும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால் புதிய ஆடையும் கிழியும். புதிய துண்டும் பழைய ஆடைக்குப் பொருந்தாது.
फिरी यीशु तैन अक होरि मसाल दित्ती, “पुराने लिगड़े पुड़ नंव्वे लिगड़ेरी टलोई कोई न लाए, नता तै टलोई तैस मरां होरू भी छ़िंदेली, ते कने पुराने सेइं तै मिले भी नन्ना।
37 யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. அப்படிச் செய்தால், புதிய திராட்சை இரசம் அந்த தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் பாழாய்ப்போகும்.
नंव्वो दाछ़ारो रस पुरैनी मसकी मां कोई न छ़ड्डे, नन्ना त नंव्वे दाछ़ारो रस सेइं मसक भी फैट्टी गाचे, ते दाछ़ारो रस भी डुल्ली गाते, ते तै मसक भी बरबाद भोचे।
38 புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில்தான் ஊற்றி வைக்கவேண்டும்.
किजोकि नंव्वो दाछ़ारो रस नव्वीं मसकन मां भरोरो लोड़ते।
39 யாரும் பழைய திராட்சை இரசத்தைக் குடித்த பின்பு புதியதை விரும்பமாட்டார்கள். ஏனெனில், ‘பழையதே நல்லது’ என்பார்கள்.”
कोई मैन्हु पुरानो दाछ़ारो रस पीतां नव्वों न पीनो चाए, किजोकि तै ज़ोते कि पुरानो दाछ़ारो रस जादे रोड़ोए।”