< லூக்கா 24 >

1 வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையிலேயே, அந்தப் பெண்கள் தாங்கள் ஆயத்தம் செய்திருந்த நறுமணப் பொருட்களை எடுத்துக்கொண்டு, கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
ⲁ̅ⲛⲥⲟⲩⲁ ⲇⲉ ⲙⲡⲥⲁⲃⲃⲁⲧⲟⲛ ⲉϩⲧⲟⲟⲩⲉ ⲛϣⲱⲣⲡ ⲁⲩⲉⲓ ⲉⲡⲉⲙϩⲁⲟⲩ ⲉⲣⲉⲛ ϩⲏⲛⲉ ⲛⲧⲟⲟⲧⲟⲩ ⲉⲛⲧⲁⲩⲥⲃⲧⲱⲧⲟⲩ ⲙⲛ ϩⲉⲛⲕⲟⲟⲩⲉ ⲛⲙⲙⲁⲩ ⲛⲉⲩⲙⲉⲩⲉ ⲇⲉ ⲡⲉ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧⲟⲩ ϫⲉ ⲛⲓⲙ ⲁⲣⲁ ⲡⲉⲧⲛⲁⲥⲕⲟⲣⲕⲣ ⲛⲁⲛ ⲙⲡⲱⲛⲉ
2 அங்கே கல்லறை வாசலில் வைக்கப்பட்டிருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருப்பதைக் கண்டார்கள்.
ⲃ̅ⲛⲧⲉⲣⲟⲩⲉⲓ ⲇⲉ ⲁⲩϩⲉ ⲉⲡⲱⲛⲉ ⲉⲁⲩⲥⲕⲣⲕⲱⲣϥ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲉⲙϩⲁⲟⲩ
3 அவர்கள் உள்ளே நுழைந்தபோது, கர்த்தராகிய இயேசுவினுடைய உடலைக் காணாமல்,
ⲅ̅ⲁⲩⲃⲱⲕ ⲇⲉ ⲉϩⲟⲩⲛ ⲙⲡⲟⲩϩⲉ ⲉⲡⲥⲱⲙⲁ ⲙⲡϫⲟⲉⲓⲥ ⲓⲏⲥ
4 அவர்கள் அதைக்குறித்து யோசிக்கையில், திடீரென்று மின்னலைப் போல மின்னுகின்ற உடைகளை அணிந்திருந்த இரண்டுபேர் அவர்களின் அருகே நின்றார்கள்.
ⲇ̅ⲁⲥϣⲱⲡⲉ ⲇⲉ ϩⲙ ⲡⲧⲣⲉⲩϣⲧⲟⲣⲧⲣ ⲉⲧⲃⲉ ⲡⲁⲓ ⲉⲓⲥ ⲣⲱⲙⲉ ⲥⲛⲁⲩ ⲁⲩⲉⲓ ⲉϫⲱⲟⲩ ϩⲛ ϩⲉⲛϩⲃⲥⲱ ⲉⲩⲣⲟⲩⲟⲓⲛ
5 அந்தப் பெண்களோ பயந்துபோய், தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு பேரும் அவர்களிடம், “உயிருடன் இருக்கிறவரை, நீங்கள் ஏன் இறந்தவர்களிடையே தேடுகிறீர்கள்?
ⲉ̅ⲛⲧⲉⲣⲟⲩⲣ ϩⲟⲧⲉ ⲇⲉ ⲁⲩⲡⲁϩⲧ ϫⲱⲟⲩ ⲉⲡⲉⲥⲏⲧ ⲉϫⲙ ⲡⲕⲁϩ ⲡⲉϫⲁⲩ ⲛⲁⲩ ϫⲉ ⲁϩⲣⲱⲧⲛ ⲧⲉⲧⲛϣⲓⲛⲉ ⲛⲥⲁ ⲡⲉⲧⲟⲛϩ ⲙⲛ ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ
6 அவர் இங்கே இல்லை; அவர் உயிருடன் எழுந்துவிட்டார்! அவர் உங்களுடன் கலிலேயாவில் இருக்கையிலே, உங்களுக்குச் சொன்னது ஞாபகமில்லையா:
ⲋ̅ⲛϥⲙⲡⲉⲓⲙⲁ ⲁⲛ ⲁⲗⲗⲁ ⲁϥⲧⲱⲟⲩⲛ ⲁⲣⲓⲡⲙⲉⲩⲉ ⲛⲑⲉ ⲉⲛⲧⲁϥϣⲁϫⲉ ⲛⲙⲙⲏⲧⲛ ϫⲓⲛ ⲉϥϩⲛ ⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ
7 ‘மானிடமகனாகிய நான் பாவிகளின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படவேண்டும்; மூன்றாம் நாளிலே, திரும்பவும் உயிருடன் எழுந்திருக்க வேண்டும்’ என்று அவர் உங்களுக்குச் சொல்லியிருந்தாரே” என்றார்கள்.
ⲍ̅ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ϩⲁⲡⲥ ⲉⲧⲣⲉⲩⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙⲡϣⲏⲣⲉ ⲙⲡⲣⲱⲙⲉ ⲉⲧⲟⲟⲧⲟⲩ ⲛϩⲉⲛⲣⲱⲙⲉ ⲣⲣⲉϥⲣⲛⲟⲃⲉ ⲛⲥⲉⲥⲧⲁⲩⲣⲟⲩ ⲙⲙⲟϥ ⲛϥⲧⲱⲟⲩⲛ ϩⲙ ⲡⲙⲉϩ ϣⲟⲙⲛⲧ ⲛϩⲟⲟⲩ
8 அப்பொழுது இயேசுவினுடைய வார்த்தைகள் அந்த பெண்களின் நினைவிற்கு வந்தன.
ⲏ̅ⲁⲩⲱ ⲁⲩⲣⲡⲙⲉⲉⲩⲉ ⲛⲛⲉϥϣⲁϫⲉ
9 அவர்கள் கல்லறையில் இருந்து திரும்பிவந்தபோது, இவை எல்லாவற்றையும் பதினொரு அப்போஸ்தலரிடமும், மற்றெல்லோரிடமும் சொன்னார்கள்.
ⲑ̅ⲁⲩⲕⲟⲧⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲉⲙϩⲁⲟⲩ ⲁⲩϫⲉ ⲛⲁⲓ ⲉⲡⲙⲛⲧⲟⲩⲉ ⲙⲛ ⲡⲕⲉⲥⲉⲉⲡⲉ ⲧⲏⲣϥ
10 மகதலேனா மரியாள், யோவன்னாள், யாக்கோபின் தாயாகிய மரியாள் ஆகியோரும், அவர்களுடன் இருந்த மற்ற பெண்களும், அப்போஸ்தலருக்கு இதைச் சொன்னார்கள்.
ⲓ̅ⲛⲉ ⲙⲁⲣⲓⲁ ⲇⲉ ⲧⲉ ⲧⲙⲁⲅⲇⲁⲗⲏⲛⲏ ⲙⲛ ⲓⲱϩⲁⲛⲛⲁ ⲙⲛ ⲙⲁⲣⲓⲁ ⲧⲁ ⲓⲁⲕⲱⲃⲟⲥ ⲁⲩⲱ ⲡⲕⲉⲥⲉⲉⲡⲉ ⲉⲧⲛⲙⲙⲁⲩ ⲛⲉⲩϫⲱ ⲇⲉ ⲛⲛⲁⲓ ⲡⲉ ⲉⲛⲁⲡⲟⲥⲧⲟⲗⲟⲥ
11 அவர்களோ, இந்தப் பெண்கள் சொன்னதை நம்பவில்லை. இவர்கள் சொன்னது அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றியது.
ⲓ̅ⲁ̅ⲁⲩⲣⲑⲉ ⲛⲛⲓϩⲱⲃ ⲛⲥⲱⲃⲉ ⲙⲡⲉⲩⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲛϭⲓ ⲛⲉⲓϣⲁϫⲉ ⲁⲩⲱ ⲙⲡⲟⲩⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲛⲁⲩ
12 ஆனால், பேதுரு எழுந்து கல்லறையை நோக்கி ஓடினான். அவன் அங்கு எட்டிப் பார்த்தபோது, அவரைச் சுற்றியிருந்த மெல்லிய துணிகள் மட்டும் கிடப்பதைக் கண்டான். அப்பொழுது அவன், என்ன நடந்ததோ என்று தனக்குள்ளே யோசித்துக் கொண்டு திரும்பிப்போனான்.
ⲓ̅ⲃ̅ⲁⲡⲉⲧⲣⲟⲥ ⲇⲉ ⲧⲱⲟⲩⲛ ⲁϥⲃⲱⲕ ⲉⲡⲉⲙϩⲁⲟⲩ ⲁϥϭⲱϣⲧ ⲉϩⲟⲩⲛ ⲁϥⲛⲁⲩ ⲉⲛⲉϩⲃⲱⲱⲥ ⲛⲥⲁ ⲟⲩⲥⲁ ⲁϥⲃⲱⲕ ⲇⲉ ⲉϥⲣⲙⲟⲓϩⲉ ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧϥ ⲙⲡⲉⲛⲧⲁϥϣⲱⲡⲉ
13 இதே நாளிலே, சீடர்களில் இரண்டுபேர் எம்மாவூ எனப்பட்ட கிராமத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். இது எருசலேமில் இருந்து 11 கிலோமீட்டர் தூரம் இருந்தது.
ⲓ̅ⲅ̅ⲁⲩⲱ ⲉⲓⲥ ⲣⲱⲙⲉ ⲥⲛⲁⲩ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧⲟⲩ ⲉⲩⲙⲟⲟϣⲉ ⲉⲩϯⲙⲉ ⲙⲡⲉⲓϩⲟⲟⲩ ⲛⲟⲩⲱⲧ ⲉϥⲟⲩⲏⲟⲩ ⲛⲑⲓⲉⲣⲟⲥⲟⲗⲩⲙⲁ ⲛⲥⲉ ⲛⲥⲧⲁⲇⲓⲟⲛ ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲉⲙⲙⲁⲟⲩⲥ
14 அவர்கள் இருவரும், நடந்த எல்லாவற்றையும் குறித்து பேசிக்கொண்டே சென்றார்கள்.
ⲓ̅ⲇ̅ⲛⲧⲟⲟⲩ ⲇⲉ ⲛⲉⲩϣⲁϫⲉ ⲙⲛ ⲛⲉⲩⲉⲣⲏ ⲟⲩ ⲉⲧⲃⲉ ⲛⲁⲓ ⲧⲏⲣⲟⲩ ⲉⲛⲧⲁⲩϣⲱⲡⲉ
15 அவர்கள், இப்படி இந்தக் காரியங்களைக்குறித்து கலந்துரையாடிக்கொண்டு போகையில், இயேசு தாமே அவர்களுக்கு அருகே வந்து, அவர்களோடு கூடப்போனார்;
ⲓ̅ⲉ̅ⲁⲥϣⲱⲡⲉ ⲇⲉ ϩⲙ ⲡⲧⲣⲉⲩϣⲁϫⲉ ⲁⲩⲱ ⲛⲥⲉⲥⲩⲛⲍⲏⲧⲓ ⲁⲓⲏⲥ ϩⲱⲛ ⲉϩⲟⲩⲛ ⲉⲣⲟⲟⲩ ⲁϥⲙⲟⲟϣⲉ ⲛⲙⲙⲁⲩ
16 ஆனால், அவர் யார் என்று அறியாமலிருக்க அவர்களின் கண்கள் மூடப்பட்டிருந்தது.
ⲓ̅ⲋ̅ⲛⲉⲩⲁⲙⲁϩⲧⲉ ⲇⲉ ⲛⲛⲉⲩⲃⲁⲗ ⲉⲧⲙⲥⲟⲩⲱⲛϥ
17 இயேசு அவர்களிடம், “நீங்கள் வழிநெடுகிலும் ஒருவரோடொருவர் எதைக் குறித்து பேசிக்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அவர்கள் துக்கம் தோய்ந்த முகத்துடன் அந்த இடத்திலே நின்றார்கள்.
ⲓ̅ⲍ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲟⲩ ⲛⲉ ⲛⲉⲓϣⲁϫⲉ ⲉⲧⲉⲧⲛϫⲱ ⲙⲙⲟⲟⲩ ⲙⲛ ⲛⲉⲧⲛⲉⲣⲏⲟⲩ ⲉⲧⲉⲧⲛⲙⲟⲟϣⲉ ⲁⲩⲱ ⲁⲩⲁϩⲉⲣⲁⲧⲟⲩ ⲉⲩⲟⲕⲙ
18 அவர்களில் ஒருவனான கிலெயோப்பா என்பவன் அவரிடம், “அப்படியானால் இந்நாட்களில் எருசலேமில் நடந்த காரியங்களை அறியாதபடிக்கு நீர் அந்நியரோ?” என்று கேட்டான்.
ⲓ̅ⲏ̅ⲁⲟⲩⲁ ⲇⲉ ⲛϩⲏⲧⲟⲩ ⲟⲩⲱϣⲃ ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲕⲗⲉⲟⲡⲁⲥ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲛⲧⲟⲕ ⲙⲁⲩⲁⲁⲕ ⲉⲕⲟ ⲛϣⲙⲙⲟ ⲉⲑⲓⲉⲣⲟⲥⲟⲗⲩⲙⲁ ⲁⲩⲱ ⲙⲡⲕⲓⲙⲉ ⲉⲛⲉⲛⲧⲁⲩϣⲱⲡⲉ ⲛϩⲏⲧⲥ ⲛⲛⲉⲓϩⲟⲟⲩ
19 அதற்கு அவர், “என்ன காரியங்கள்?” என்று கேட்டார். அவர்கள் இயேசுவுக்குப் பதிலாக: “நசரேயனாகிய இயேசுவைக்குறித்தவைகளே! அவர் இறைவனுக்கு முன்பாகவும், எல்லா மக்களுக்கு முன்பாகவும் வார்த்தையிலும், செயலிலும் வல்லமையுள்ள இறைவாக்கினராக இருந்தார்.
ⲓ̅ⲑ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁⲩ ϫⲉ ⲁϣ ⲛⲉ ⲛⲧⲟⲟⲩ ⲇⲉ ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ ϫⲉ ⲉⲧⲃⲉ ⲓⲏⲥ ⲡⲛⲁⲍⲱⲣⲁⲓⲟⲥ ⲡⲁⲓ ⲉⲛⲧⲁϥϣⲱⲡⲉ ⲛⲟⲩⲣⲱⲙⲉ ⲙⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲛⲇⲩⲛⲁⲧⲟⲥ ϩⲙ ⲫⲱⲃ ⲙⲛ ⲡϣⲁϫⲉ ⲙⲡⲉⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲙⲛ ⲡⲗⲁⲟⲥ ⲧⲏⲣϥ
20 தலைமை ஆசாரியர்களும், எங்கள் ஆட்சியர்களும் அவரை மரண தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுத்தி, அவரை சிலுவையில் அறைந்தார்கள்;
ⲕ̅ⲉⲁⲩⲡⲁⲣⲁⲇⲓⲇⲟⲩ ⲙⲙⲟϥ ⲛϭⲓ ⲛⲁⲣⲭⲓⲉⲣⲉⲩⲥ ⲙⲛ ⲛⲛⲁⲣⲭⲱⲛ ⲉⲩϩⲁⲡ ⲛⲧⲉ ⲡⲙⲟⲩ ⲁⲩⲥⲧⲁⲩⲣⲟⲩ ⲙⲙⲟϥ
21 நாங்களோ, இஸ்ரயேலை மீட்கப் போகிறவர் அவரே என்று நம்பிக்கைக் கொண்டிருந்தோம். இவையெல்லாம் நடந்தேறி மூன்று நாட்கள் ஆகின்றன.
ⲕ̅ⲁ̅ⲁⲛⲟⲛ ⲇⲉ ⲉⲛϩⲉⲗⲡⲓⲍⲉ ϫⲉ ⲛⲧⲟϥ ⲡⲉⲧⲛⲁⲥⲱⲧⲉ ⲙⲡⲓⲥⲣⲁⲏⲗ ⲁⲗⲗⲁ ⲃⲃⲗⲗ ⲛⲛⲁⲓ ⲧⲏⲣⲟⲩ ⲡⲙⲉϩ ϣⲟⲙⲛⲧ ⲛϩⲟⲟⲩ ⲡⲟⲟⲩ ϫⲓⲛⲧⲁⲛⲁⲓ ϣⲱⲡⲉ
22 அதுவுமல்லாமல், எங்களைச் சேர்ந்த சில பெண்கள் இன்று அதிகாலையில் கல்லறைக்குச் சென்றார்கள். அவர்கள் எங்களுக்குத் திகைப்பூட்டும் செய்தியைக் கொண்டுவந்திருக்கிறார்கள்.
ⲕ̅ⲃ̅ⲁϩⲉⲛⲕⲉⲥϩⲓⲙⲉ ⲇⲉ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧⲛ ⲡⲉϣⲥ ⲡⲉⲛϩⲏⲧ ⲉⲁⲩⲃⲱⲕ ⲉϩⲧⲟⲟⲩⲉ ⲉⲡⲉⲙϩⲁⲟⲩ
23 அவர்கள், அவருடைய உடலைக் காணவில்லை. அத்துடன் அந்தப் பெண்கள், இறைத்தூதர்களை கண்டதாகவும், இயேசு உயிரோடு இருப்பதாக இறைத்தூதர்கள் தங்களுக்குச் சொன்னதாகவும் எங்களிடம் வந்து சொன்னார்கள்.
ⲕ̅ⲅ̅ⲙⲡⲟⲩϩⲉ ⲉⲡⲉϥⲥⲱⲙⲁ ⲁⲩⲉⲓ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁⲛⲛⲁⲩ ⲉⲩⲟⲡⲧⲁⲥⲓⲁ ⲛⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲛⲁⲓ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ
24 அப்பொழுது, எங்களுடைய கூட்டாளிகளில் சிலர் கல்லறைக்குப் போய், பெண்கள் சொன்னபடியே அதைக் கண்டார்கள். இயேசுவையோ அவர்கள் காணவில்லை” என்றார்கள்.
ⲕ̅ⲇ̅ϫⲉ ⲁϥⲧⲱⲟⲩⲛ ⲁⲩⲱ ⲁϩⲟⲓⲛⲉ ⲛⲛⲉⲧⲛⲙⲙⲁⲛ ⲃⲱⲕ ⲉⲡⲉⲙϩⲁⲟⲩ ⲁⲩϩⲉ ⲉⲣⲟϥ ϩⲓⲛⲁⲓ ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲉⲛⲧⲁ ⲛⲉϩⲓⲟⲙⲉ ϫⲟⲟⲥ ⲛⲧⲟϥ ⲇⲉ ⲙⲡⲟⲩⲛⲁⲩ ⲉⲣⲟϥ
25 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவாக்கினர் சொன்னதை எல்லாம் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே!
ⲕ̅ⲉ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁⲩ ϫⲉ ⲱ ⲛⲁⲛⲟⲏⲧⲟⲥ ⲁⲩⲱ ⲛⲉⲧⲟⲥⲕ ϩⲙ ⲡⲉⲩϩⲏⲧ ⲉⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉϩⲱⲃ ⲛⲓⲙ ⲉⲛⲧⲁ ⲛⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ϫⲟⲟⲩ
26 கிறிஸ்து இந்த வேதனைகளை எல்லாம் அனுபவித்தபின் மகிமைக்குள் பிரவேசிக்க வேண்டுமல்லவா?”
ⲕ̅ⲋ̅ⲙⲏ ϩⲁⲡⲥ ⲁⲛ ⲉⲧⲣⲉ ⲡⲉⲭⲥ ϣⲉⲡⲛⲁⲓ ⲁⲩⲱ ⲛϥⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲉϥⲉⲟⲟⲩ
27 என்று சொல்லி, மோசே தொடங்கி எல்லா இறைவாக்கினரும், தம்மைக் குறித்துச் சொல்லியிருந்த வேதவசனங்களை எல்லாம் எடுத்து, இயேசு அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார்.
ⲕ̅ⲍ̅ⲁϥⲁⲣⲭⲓ ⲇⲉ ϫⲓⲛ ⲙⲱⲩⲥⲏⲥ ⲙⲛ ⲛⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲧⲏⲣⲟⲩ ⲉⲃⲱⲗ ⲉⲣⲟⲟⲩ ϩⲛ ⲛⲉⲅⲣⲁⲫⲏ ⲧⲏⲣⲟⲩ ⲉⲧⲃⲏⲏⲧϥ
28 அவர்கள் போய்க்கொண்டிருந்த கிராமத்துக்கு அருகில் வந்ததும், இயேசு தாம் தொடர்ந்து அதற்கு அப்பால் போகிறவர்போல காட்டிக்கொண்டார்.
ⲕ̅ⲏ̅ⲁⲩⲱ ⲁⲩⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲡϯⲙⲉ ⲉⲧⲟⲩⲛⲁⲃⲱⲕ ⲉⲣⲟϥ ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥϩⲓⲧⲟⲟⲧϥ ⲉⲟⲩⲉ ⲙⲙⲟⲟⲩ ⲉϥⲙⲟⲟϣⲉ
29 அவர்கள் அவரிடம், “நீர் எங்களுடன் தங்கும், மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று” என்று அவரை வற்புறுத்திக் கேட்டார்கள். எனவே, இயேசு அவர்களுடன் தங்கும்படி சென்றார்.
ⲕ̅ⲑ̅ⲁⲩⲁⲙⲁϩⲧⲉ ⲙⲙⲟϥ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ϭⲱ ⲛⲙⲙⲁⲛ ϫⲉ ⲡⲛⲁⲩ ⲣⲣⲟⲩϩⲉ ⲡⲉ ⲁⲩⲱ ⲁⲡⲉϩⲟⲟⲩ ⲣⲓⲕⲉ ⲁϥⲃⲱⲕ ⲇⲉ ⲉϩⲟⲩⲛ ⲁϥϭⲱ ⲛⲙⲙⲁⲩ
30 இயேசு அவர்களோடு சாப்பாட்டுப் பந்தியில் இருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தியபின், அதைப் பிட்டு அவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினார்.
ⲗ̅ⲁⲥϣⲱⲡⲉ ⲇⲉ ϩⲙ ⲡⲧⲣⲉϥⲛⲟϫϥ ⲛⲙⲙⲁⲩ ⲁϥϫⲓ ⲛⲟⲩⲟⲓⲕ ⲁϥⲥⲙⲟⲩ ⲉⲣⲟϥ ⲁϥⲡⲟϣϥ ⲁϥⲧⲁⲁϥ ⲛⲁⲩ
31 அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவர்கள் அவரை இன்னார் என்று அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே, இயேசு அவர்களுடைய பார்வையில் இருந்து மறைந்து போய்விட்டார்.
ⲗ̅ⲁ̅ⲛⲧⲟⲟⲩ ⲇⲉ ⲁⲛⲉⲩⲃⲁⲗ ⲟⲩⲱⲛ ⲁⲩⲥⲟⲩⲱⲛϥ ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥϩⲟⲡϥ ⲉⲣⲟⲟⲩ
32 அப்பொழுது அவர்கள், “வழியிலே அவர் நம்மோடு பேசியபோதும், வேதவசனங்களை நமக்கு விளக்கும்போதும், நம்முடைய இருதயங்கள் நமக்குள்ளே பற்றி எரிந்ததல்லவா?” என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
ⲗ̅ⲃ̅ⲡⲉϫⲁⲩ ⲇⲉ ⲛⲛⲉⲩⲉⲣⲏⲩ ϫⲉ ⲉⲓⲉ ⲛⲉⲣⲉⲡⲉⲛϩⲏⲧ ϩⲟⲃⲥ ⲉⲣⲟⲛ ⲁⲛ ⲡⲉ ⲛⲑⲉ ⲉⲛⲧⲁϥϣⲁϫⲉ ⲛⲙⲙⲁⲛ ϩⲓ ⲧⲉϩⲓⲏ ⲉϥⲃⲱⲗ ⲉⲣⲟⲛ ⲛⲛⲉⲅⲣⲁⲫⲏ
33 அவர்கள் எழுந்து, உடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். அங்கே பதினொருவரும், அவர்களுடன் இருந்தவர்களும் ஒன்றுகூடியிருப்பதைக் கண்டார்கள்.
ⲗ̅ⲅ̅ⲁⲩⲱ ⲁⲩⲧⲱⲟⲩⲛ ⲉⲩⲗⲩⲡⲓ ϩⲛ ⲧⲉⲩⲛⲟⲩ ⲉⲧⲙⲙⲁⲩ ⲁⲩⲕⲟⲧⲟⲩ ⲉⲑⲓⲉⲣⲟⲥⲟⲗⲩⲙⲁ ⲁⲩϩⲉ ⲉⲡⲙⲛⲧⲟⲩⲉ ⲉⲩⲥⲱⲟⲩϩ ⲉϩⲟⲩⲛ ⲙⲛ ⲛⲉⲧⲛⲙⲙⲁⲩ
34 அவர்கள் எல்லோரும், “கர்த்தர் உயிரோடு எழுந்திருக்கிறார். அவர் சீமோனுக்குக் காட்சியளித்தது உண்மைதான்!” என்று சொல்லிக்கொண்டார்கள்.
ⲗ̅ⲇ̅ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲟⲛⲧⲱⲥ ⲁⲡϫⲟⲉⲓⲥ ⲧⲱⲟⲩⲛ ⲁⲩⲱ ⲁϥⲟⲩⲱⲛϩ ⲉⲥⲓⲙⲱⲛ
35 அப்பொழுது, இந்த இருவரும் தங்களுக்கு வழியிலே நடந்ததையும், இயேசு அப்பத்தைப் பிட்டுக் கொடுத்தபோது, தாங்கள் அவரை எப்படி அறிந்துகொண்டார்கள் என்பதையும் அவர்களுக்குச் சொன்னார்கள்.
ⲗ̅ⲉ̅ⲁⲩϫⲱ ϩⲱⲟⲩ ⲛⲛⲉⲧⲁⲩϣⲱⲡⲉ ϩⲓ ⲧⲉϩⲓⲏ ⲁⲩⲱ ⲛⲑⲉ ⲉⲛⲧⲁϥⲟⲩⲱⲛϩ ⲉⲣⲟⲟⲩ ϩⲙ ⲡⲡⲱϣ ⲙⲡⲟⲓⲕ
36 சீடர்கள் இதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, இயேசு தாமே அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக” என்று சொன்னார்.
ⲗ̅ⲋ̅ⲉⲩϫⲱ ⲇⲉ ⲛⲛⲁⲓ ⲁϥⲁϩⲉⲣⲁⲧϥ ϩⲛ ⲧⲉⲩⲙⲏⲧⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ϯⲣⲏⲛⲏ ⲛⲏⲧⲛ
37 அவர்கள் திடுக்கிட்டு பயமடைந்து, தாங்கள் இறந்துபோனவரின் ஆவியைக் காண்கிறதாக நினைத்துக் கொண்டார்கள்.
ⲗ̅ⲍ̅ⲛⲧⲉⲣⲟⲩϣⲧⲟⲣⲧⲣ ⲇⲉ ⲁⲩⲱ ⲁⲩⲣ ϩⲟⲧⲉ ⲉⲩⲙⲉⲩⲉ ϫⲉ ⲛⲉⲩⲛⲁⲩ ⲉⲩⲡⲛⲁ
38 இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் குழப்பம் அடைந்திருக்கிறீர்கள்? உங்கள் உள்ளங்களில் ஏன் சந்தேகம் எழும்புகிறது?
ⲗ̅ⲏ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲁϩⲣⲱⲧⲛ ⲧⲉⲧⲛϣⲧⲣⲧⲱⲣ ⲁⲩⲱ ⲉⲧⲃⲉ ⲟⲩ ⲟⲩⲛ ϩⲉⲛⲙⲉⲩⲉ ⲁⲗⲉ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲛ ⲡⲉⲧⲛϩⲏⲧ
39 என்னுடைய கைகளையும், கால்களையும் பாருங்கள். இது நான், நானேதான்! என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் என்னில் காண்கிறதுபோல, சதையும் எலும்புகளும் ஒரு ஆவிக்கு இருப்பதில்லையே?” என்றார்.
ⲗ̅ⲑ̅ⲁⲛⲁⲩ ⲉⲛⲁϭⲓϫ ⲙⲛ ⲛⲁⲩⲉⲣⲏⲧⲉ ϫⲉ ⲁⲛⲟⲕ ⲡⲉ ϭⲟⲙϭⲙ ⲉⲣⲟⲓ ⲛⲧⲉⲧⲛⲛⲁⲩ ϫⲉ ⲙⲙⲛⲧⲉ ⲡⲛⲁ ⲕⲁⲥ ϩⲓ ⲥⲁⲣⲝ ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲉⲧⲉⲧⲛⲛⲁⲩ ⲉⲣⲟⲓ ⲉⲩⲛ ⲟⲩⲟⲛ ⲙⲙⲟⲓ
40 இயேசு இதைச் சொல்லி முடித்தபோது, தமது கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார்.
ⲙ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲣⲉϥϫⲉ ⲡⲁⲓ ⲁⲩⲧⲟⲩⲟⲟⲩ ⲉⲛⲉϥϭⲓϫ ⲙⲛ ⲛⲉϥⲟⲩⲉⲣⲏⲧⲉ
41 அவர்களோ சந்தோஷத்தாலும், வியப்பாலும் நிறைந்தார்கள். அதை அவர்களால் இன்னும் நம்பமுடியவில்லை. அப்பொழுது இயேசு அவர்களிடம், “சாப்பிடுகிறதற்கு ஏதாவது இங்கே உங்களிடம் இருக்கிறதா?” என்று கேட்டார்.
ⲙ̅ⲁ̅ⲉⲧⲓ ⲇⲉ ⲉⲩⲁⲡⲓⲥⲧⲓ ⲉⲃⲟⲗ ⲙⲡⲣⲁϣⲉ ⲁⲩⲱ ⲉⲩⲣϣⲡⲏⲣⲉ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲟⲩⲛⲧⲏⲧⲛ ⲗⲁⲁⲩ ⲛϭⲓ ⲛⲟⲩⲱⲙ ⲙⲡⲉⲓⲙⲁ
42 அவர்கள் நெருப்பில் சுட்ட ஒரு மீன் துண்டை அவருக்குக் கொடுத்தார்கள்.
ⲙ̅ⲃ̅ⲛⲧⲟⲟⲩ ⲇⲉ ⲁⲩϯ ⲛⲁϥ ⲛⲟⲩϣⲁⲁⲧⲉ ⲛⲧⲃⲧ ⲉⲥϭⲏϭ
43 அவர் அதை எடுத்து, அவர்கள் முன்பாகவே சாப்பிட்டார்.
ⲙ̅ⲅ̅ⲁϥϫⲓⲧⲥ ⲁϥⲟⲩⲟⲙⲥ ⲙⲡⲉⲩⲙⲧⲟ ⲉⲃⲟⲗ
44 “நான் உங்களோடு இருக்கையில், உங்களுக்கு இதைச் சொல்லியிருந்தேனே: மோசேயினுடைய சட்டத்திலும், இறைவாக்குகளிலும், சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவை யாவும் நிறைவேற வேண்டியதாயிருந்தது” என்றார்.
ⲙ̅ⲇ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁⲩ ϫⲉ ⲛⲁⲓ ⲛⲉ ⲛⲁϣⲁϫⲉ ⲉⲛⲧⲁⲓϫⲟⲟⲩ ⲛⲏⲧⲛ ϫⲓⲛ ⲉⲓϣⲟⲟⲡ ⲛⲙⲙⲏⲧⲛ ϫⲉ ϩⲁⲡⲥ ⲉⲧⲣⲉⲩϫⲱⲕ ⲉⲃⲟⲗ ⲛϭⲓ ⲛⲉⲧⲥⲏϩ ⲧⲏⲣⲟⲩ ϩⲙ ⲡⲛⲟⲙⲟⲥ ⲙⲙⲱⲩⲥⲏⲥ ⲙⲛ ⲛⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲁⲩⲱ ⲛⲉⲯⲁⲗⲙⲟⲥ ⲉⲧⲃⲏⲏⲧ
45 பின்பு அவர்கள், வேதவசனங்களை விளங்கிக்கொள்ளத்தக்கதாக, இயேசு அவர்களுடைய மனதைத் திறந்தார்.
ⲙ̅ⲉ̅ⲧⲟⲧⲉ ⲁϥⲟⲩⲱⲛ ⲙⲡⲉⲩϩⲏⲧ ⲉⲧⲣⲉⲩⲥⲟⲩⲱⲛϥ ⲁⲩⲱ ⲉⲧⲣⲉⲩⲓⲙⲉ ⲉⲛⲉⲅⲣⲁⲫⲏ
46 இயேசு அவர்களிடம், “எழுதப்பட்டிருப்பது இதுவே: கிறிஸ்து வேதனை அனுபவிப்பார், மூன்றாம் நாளிலோ உயிருடன் எழுந்திருப்பார்.
ⲙ̅ⲋ̅ⲡⲉϫⲁϥ ⲇⲉ ⲛⲁⲩ ϫⲉ ⲧⲁⲓ ⲧⲉ ⲑⲉ ⲉⲧⲥⲏϩ ⲉⲧⲣⲉ ⲡⲉⲭⲥ ⲁⲁⲥ ⲁⲩⲱ ⲛϥⲧⲱⲟⲩⲛ ϩⲙ ⲡⲙⲉϩ ϣⲟⲙⲛⲧ ⲛϩⲟⲟⲩ
47 மனந்திரும்புதலைக் குறித்ததும், பாவமன்னிப்பைக் குறித்ததுமான நற்செய்தியை, எருசலேம் தொடங்கி எல்லா ஜனங்களுக்கும், அவருடைய பெயரில் அறிவிக்கவேண்டும்.
ⲙ̅ⲍ̅ⲛⲥⲉⲧⲁϣⲉⲟⲓϣ ⲛⲟⲩⲙⲉⲧⲁⲛⲟⲓⲁ ⲙⲡⲉϥⲣⲁⲛ ⲉⲩⲕⲁ ⲛⲟⲃⲉ ⲉⲃⲟⲗ ⲛⲛϩⲉⲑⲛⲟⲥ ⲧⲏⲣⲟⲩ ⲉⲧⲉⲧⲛⲁⲣⲭⲓ ϫⲓⲛ ⲑⲓⲉⲣⲟⲥⲟⲗⲩⲙⲁ
48 இவைகளுக்கெல்லாம் நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்.
ⲙ̅ⲏ̅ⲛⲧⲱⲧⲛ ⲛⲉⲧⲟ ⲙⲙⲛⲧⲣⲉ ⲛⲁⲓ
49 என் பிதா உங்களுக்குத் தருவதாக வாக்களித்த பரிசுத்த ஆவியானவரை, நான் உங்களுக்கு அனுப்புகிறேன்; உன்னதத்தில் இருக்கும் அந்த வல்லமையினால் நீங்கள் உடுத்துவிக்கப்படும்வரை, இந்தப் பட்டணத்திலே தங்கியிருங்கள்” என்றார்.
ⲙ̅ⲑ̅ⲁⲛⲟⲕ ϩⲱ ϯⲛⲁⲧⲛⲛⲟⲟⲩ ⲙⲡⲉⲣⲏⲧ ⲙⲡⲓⲱⲧ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲱⲧⲛ ⲛⲧⲱⲧⲛ ⲇⲉ ϩⲙ ⲟⲟⲥ ϩⲛ ⲧⲉⲓⲡⲟⲗⲓⲥ ϣⲁⲛⲧⲉⲧⲛϯ ϩⲓⲱⲧ ⲧⲏⲟⲩⲧⲛ ⲛⲟⲩϭⲟⲙ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲧⲡⲉ
50 இயேசு பெத்தானியாவரை அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர் தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார்.
ⲛ̅ⲁϥⲛⲧⲟⲩ ⲇⲉ ⲉⲃⲟⲗ ϣⲁ ⲃⲏⲑⲁⲛⲓⲁ ⲁϥϥⲓ ⲛⲉϥϭⲓϫ ⲉϩⲣⲁⲓ ⲁϥⲥⲙⲟⲩ ⲉⲣⲟⲟⲩ
51 இயேசு அவர்களை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தபோதே, அவர்களைவிட்டுப் பரலோகத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டார்.
ⲛ̅ⲁ̅ⲁⲥϣⲱⲡⲉ ⲇⲉ ϩⲙ ⲡⲧⲣⲉϥⲥⲙⲟⲩ ⲉⲣⲟⲟⲩ ⲁϥⲟⲩⲉ ⲙⲙⲟⲟⲩ ⲁⲩⲱ ⲁϥⲃⲱⲕ ⲉϩⲣⲁⲓ ⲉⲧⲡⲉ
52 அப்பொழுது அவர்கள் இயேசுவை வழிபட்டு, மிகுந்த மகிழ்ச்சியுடனே எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
ⲛ̅ⲃ̅ⲁⲩⲟⲩⲱϣⲧ ϩⲱⲟⲩ ⲙⲙⲟϥ ⲁⲩⲕⲟⲧⲟⲩ ⲉⲑⲓⲉⲣⲟⲥⲟⲗⲩⲙⲁ ϩⲛ ⲟⲩⲛⲟϭ ⲣⲣⲁϣⲉ
53 அவர்கள் இறைவனைத் துதித்துக்கொண்டு, ஆலயத்திலேயே தொடர்ந்து தங்கியிருந்தார்கள்.
ⲛ̅ⲅ̅ⲁⲩⲱ ⲛⲉⲩϣⲟⲟⲡ ⲡⲉ ϩⲙ ⲡⲉⲣⲡⲉ ⲛⲟⲩⲟⲓϣ ⲛⲓⲙ ⲉⲩⲥⲙⲟⲩ ⲉⲡⲛⲟⲩⲧⲉ

< லூக்கா 24 >