< லூக்கா 18 >
1 அதற்குப் பின்பு இயேசு, தமது சீடர்கள் மனந்தளர்ந்து போகாமல், எப்போதும் மன்றாடுகிறவர்களாய் இருக்கவேண்டும் என்பதைக்குறித்து காண்பிப்பதற்காக, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
อปรญฺจ โลไกรกฺลานฺไต รฺนิรนฺตรํ ปฺรารฺถยิตวฺยมฺ อิตฺยาศเยน ยีศุนา ทฺฤษฺฏานฺต เอก: กถิต: ฯ
2 “ஒரு பட்டணத்திலே ஒரு நீதிபதி இருந்தான். அவன் இறைவனுக்குப் பயப்படாதவன். மக்களையும் மதியாதவன்.
กุตฺรจินฺนคเร กศฺจิตฺ ปฺราฑฺวิวาก อาสีตฺ ส อีศฺวรานฺนาพิเภตฺ มานุษำศฺจ นามนฺยตฯ
3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள். அவள் தொடர்ந்து அவனிடம் வந்து, ‘எனது விரோதிக்கு எதிராக எனக்கு நீதி வழங்குங்கள்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டாள்.
อถ ตตฺปุรวาสินี กาจิทฺวิธวา ตตฺสมีปเมตฺย วิวาทินา สห มม วิวาทํ ปริษฺกุรฺวฺวิติ นิเวทยามาสฯ
4 “கொஞ்சக்காலம் அவன் அப்படிச் செய்ய மறுத்தான். இறுதியாக அவன், ‘நான் இறைவனுக்குப் பயப்படாதவனாகவும், மனிதனை மதிக்காதவனாகவும் இருந்துங்கூட,
ตต: ส ปฺราฑฺวิวาก: กิยทฺทินานิ น ตทงฺคีกฺฤตวานฺ ปศฺจาจฺจิตฺเต จินฺตยามาส, ยทฺยปีศฺวรานฺน พิเภมิ มนุษฺยานปิ น มเนฺย
5 இந்த விதவை தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுக்கிறாள்; அதனால், நான் அவளுக்கு நீதி வழங்குவேன். அப்பொழுது அவள் இப்படித் தொடர்ந்து வந்து, என்னைத் தொந்தரவு செய்யமாட்டாள்’ என்று, தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்” என்றார்.
ตถาเปฺยษา วิธวา มำ กฺลิศฺนาติ ตสฺมาทสฺยา วิวาทํ ปริษฺกริษฺยามิ โนเจตฺ สา สทาคตฺย มำ วฺยคฺรํ กริษฺยติฯ
6 பின்பு கர்த்தர், “அந்த அநீதியுள்ள நீதிபதி சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள்!
ปศฺจาตฺ ปฺรภุรวททฺ อสาวนฺยายปฺราฑฺวิวาโก ยทาห ตตฺร มโน นิธธฺวํฯ
7 அந்தப்படியே, தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு, இறைவன் நீதியை வழங்காதிருப்பாரோ? அவர் நீதி வழங்கத் தாமதிப்பாரோ?
อีศฺวรสฺย เย 'ภิรุจิตโลกา ทิวานิศํ ปฺรารฺถยนฺเต ส พหุทินานิ วิลมฺพฺยาปิ เตษำ วิวาทานฺ กึ น ปริษฺกริษฺยติ?
8 நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களுக்கு இறைவன் சீக்கிரமாகவே நீதி வழங்குவார். ஆனால் மானிடமகனாகிய நான் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பேனோ?” என்றார்.
ยุษฺมานหํ วทามิ ตฺวรยา ปริษฺกริษฺยติ, กินฺตุ ยทา มนุษฺยปุตฺร อาคมิษฺยติ ตทา ปฺฤถิวฺยำ กิมีทฺฤศํ วิศฺวาสํ ปฺราปฺสฺยติ?
9 தாங்கள் நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு, மற்றவர்கள் எல்லோரையும் கீழ்த்தரமாய் எண்ணிய சிலரைக் குறித்து, இயேசு இந்த உவமையைச் சொன்னார்:
เย สฺวานฺ ธารฺมฺมิกานฺ ชฺญาตฺวา ปรานฺ ตุจฺฉีกุรฺวฺวนฺติ เอตาทฺฤคฺภฺย: , กิยทฺภฺย อิมํ ทฺฤษฺฏานฺตํ กถยามาสฯ
10 “இரண்டுபேர் மன்றாடும்படி ஆலயத்திற்குச் சென்றார்கள். அதில் ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன்.
เอก: ผิรูศฺยปร: กรสญฺจายี ทฺวาวิเมา ปฺรารฺถยิตุํ มนฺทิรํ คเตาฯ
11 அந்தப் பரிசேயன் நின்றுகொண்டு: ‘இறைவனே, நான் மற்றவர்களைப்போல் இராதபடியினால், உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் கள்வர்களையோ, தீமை செய்கிறவர்களையோ, விபசாரக்காரரையோ அல்லது இந்த வரி வசூலிக்கிறவனைப் போன்றவன் அல்ல.
ตโต'เสา ผิรูเศฺยกปารฺเศฺว ติษฺฐนฺ เห อีศฺวร อหมนฺยโลกวตฺ โลฐยิตานฺยายี ปารทาริกศฺจ น ภวามิ อสฺย กรสญฺจายินสฺตุลฺยศฺจ น, ตสฺมาตฺตฺวำ ธนฺยํ วทามิฯ
12 நான் வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன், எனது வருமானத்திலெல்லாம் பத்திலொன்றை கொடுக்கிறேன்’ என்று, தனக்குத்தானே சொல்லி மன்றாடினான்.
สปฺตสุ ทิเนษุ ทินทฺวยมุปวสามิ สรฺวฺวสมฺปตฺเต รฺทศมำศํ ททามิ จ, เอตตฺกถำ กถยนฺ ปฺรารฺถยามาสฯ
13 “ஆனால், வரி வசூலிப்பவனோ தூரமாய் நின்று வானத்தை நோக்கிப் பார்க்கவும் துணியாமல், அவன் தன் மார்பில் அடித்துக்கொண்டு, ‘இறைவனே, பாவியாகிய என்மேல் இரக்கம் காட்டும்’ என மன்றாடினான்.
กินฺตุ ส กรสญฺจายิ ทูเร ติษฺฐนฺ สฺวรฺคํ ทฺรษฺฏุํ เนจฺฉนฺ วกฺษสิ กราฆาตํ กุรฺวฺวนฺ เห อีศฺวร ปาปิษฺฐํ มำ ทยสฺว, อิตฺถํ ปฺรารฺถยามาสฯ
14 “நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அல்ல, இவனே இறைவனுடைய பார்வையில் நீதிமானாகத் தீர்க்கப்பட்டு, தன் வீட்டிற்குத் திரும்பிச்சென்றான். ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”
ยุษฺมานหํ วทามิ, ตโยรฺทฺวโย รฺมเธฺย เกวล: กรสญฺจายี ปุณฺยวตฺเตฺวน คณิโต นิชคฺฤหํ ชคาม, ยโต ย: กศฺจิตฺ สฺวมุนฺนมยติ ส นามยิษฺยเต กินฺตุ ย: กศฺจิตฺ สฺวํ นมยติ ส อุนฺนมยิษฺยเตฯ
15 குழந்தைகள்மேல் இயேசு கைகளை வைக்கவேண்டும் என்பதற்காக, மக்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். இதைச் சீடர்கள் கண்டபோது, அவர்கள் மக்களைக் கண்டித்தார்கள்.
อถ ศิศูนำ คาตฺรสฺปรฺศารฺถํ โลกาสฺตานฺ ตสฺย สมีปมานินฺยุ: ศิษฺยาสฺตทฺ ทฺฤษฺฏฺวาเนตฺฤนฺ ตรฺชยามาสุ: ,
16 இயேசுவோ, பிள்ளைகளைத் தம்மிடம் வரவேற்று சீடர்களுக்கு, “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது.
กินฺตุ ยีศุสฺตานาหูย ชคาท, มนฺนิกฏมฺ อาคนฺตุํ ศิศูนฺ อนุชานีธฺวํ ตำศฺจ มา วารยต; ยต อีศฺวรราชฺยาธิการิณ เอษำ สทฺฤศา: ฯ
17 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், சிறுபிள்ளையைப்போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன், அதற்குள் ஒருபோதும் செல்லமாட்டான்” என்றார்.
อหํ ยุษฺมานฺ ยถารฺถํ วทามิ, โย ชน: ศิโศ: สทฺฤโศ ภูตฺวา อีศฺวรราชฺยํ น คฺฤหฺลาติ ส เกนาปิ ปฺรกาเรณ ตตฺ ปฺรเวษฺฏุํ น ศกฺโนติฯ
18 அப்பொழுது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வை உரிமையாகப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
อปรมฺ เอโกธิปติสฺตํ ปปฺรจฺฉ, เห ปรมคุโร, อนนฺตายุษ: ปฺราปฺตเย มยา กึ กรฺตฺตวฺยํ? (aiōnios )
19 அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கிறாய்? இறைவன் ஒருவரைத் தவிர, வேறு யாரும் நல்லவர் இல்லையே.
ยีศุรุวาจ, มำ กุต: ปรมํ วทสิ? อีศฺวรํ วินา โกปิ ปรโม น ภวติฯ
20 ‘விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார்.
ปรทารานฺ มา คจฺฉ, นรํ มา ชหิ, มา โจรย, มิถฺยาสากฺษฺยํ มา เทหิ, มาตรํ ปิตรญฺจ สํมนฺยสฺว, เอตา ยา อาชฺญา: สนฺติ ตาสฺตฺวํ ชานาสิฯ
21 அதற்கு அவன், “என் சிறுவயதுமுதல், இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்” என்றான்.
ตทา ส อุวาจ, พาลฺยกาลาตฺ สรฺวฺวา เอตา อาจรามิฯ
22 இயேசு இதைக் கேட்டபோது, “உன்னிடம் இன்னும் ஒரு குறைபாடு இருக்கிறது. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
อิติ กถำ ศฺรุตฺวา ยีศุสฺตมวทตฺ, ตถาปิ ตไวกํ กรฺมฺม นฺยูนมาเสฺต, นิชํ สรฺวฺวสฺวํ วิกฺรีย ทริเทฺรโภฺย วิตร, ตสฺมาตฺ สฺวรฺเค ธนํ ปฺราปฺสฺยสิ; ตต อาคตฺย มมานุคามี ภวฯ
23 அவன் இதைக் கேட்டபோது மிகவும் துக்கமடைந்தான். ஏனெனில், அவன் மிகுந்த செல்வமுடையவனாய் இருந்தான்.
กินฺเตฺวตำ กถำ ศฺรุตฺวา โสธิปติ: ศุโศจ, ยตสฺตสฺย พหุธนมาสีตฺฯ
24 இயேசு அவனைப் பார்த்து, “பணக்காரன் இறைவனுடைய அரசிற்குள் போவது எவ்வளவு கடினமானது!
ตทา ยีศุสฺตมติโศกานฺวิตํ ทฺฤษฺฏฺวา ชคาท, ธนวตามฺ อีศฺวรราชฺยปฺรเวศ: กีทฺฤคฺ ทุษฺกร: ฯ
25 பணக்காரன் ஒருவன் இறைவனுடைய அரசுக்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார்.
อีศฺวรราเชฺย ธนิน: ปฺรเวศาตฺ สูเจศฺฉิเทฺรณ มหางฺคสฺย คมนาคมเน สุกเรฯ
26 இதைக் கேட்டவர்களோ, “அப்படியானால், யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று கேட்டார்கள்.
โศฺรตาร: ปปฺรจฺฉุสฺตรฺหิ เกน ปริตฺราณํ ปฺราปฺสฺยเต?
27 அதற்கு இயேசு, “மனிதரால் செய்ய முடியாதவற்றை, இறைவனால் செய்யமுடியும்” என்றார்.
ส อุกฺตวานฺ, ยนฺ มานุเษณาศกฺยํ ตทฺ อีศฺวเรณ ศกฺยํฯ
28 அப்பொழுது பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக, எங்களிடம் உள்ளதையெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் வந்தோமே” என்றான்.
ตทา ปิตร อุวาจ, ปศฺย วยํ สรฺวฺวสฺวํ ปริตฺยชฺย ตว ปศฺจาทฺคามิโน'ภวามฯ
29 அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இறைவனுடைய அரசின் நிமித்தம் வீட்டையோ, மனைவியையோ, சகோதரர்களையோ, பெற்றோரையோ, பிள்ளைகளையோ விட்டுவிட்டிருந்தால்,
ตต: ส อุวาจ, ยุษฺมานหํ ยถารฺถํ วทามิ, อีศฺวรราชฺยารฺถํ คฺฤหํ ปิตเรา ภฺราตฺฤคณํ ชายำ สนฺตานำศฺจ ตฺยกฺตวา
30 அவர்கள் இந்த வாழ்வில் அதிகமானவைகளைப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார். (aiōn , aiōnios )
อิห กาเล ตโต'ธิกํ ปรกาเล 'นนฺตายุศฺจ น ปฺราปฺสฺยติ โลก อีทฺฤศ: โกปิ นาสฺติฯ (aiōn , aiōnios )
31 இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய் அவர்களிடம், “நாம் எருசலேமுக்குப் போகிறோம், மானிடமகனாகிய என்னைப்பற்றி இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாம் நிறைவேறும்.
อนนฺตรํ ส ทฺวาทศศิษฺยานาหูย พภาเษ, ปศฺยต วยํ ยิรูศาลมฺนครํ ยาม: , ตสฺมาตฺ มนุษฺยปุเตฺร ภวิษฺยทฺวาทิภิรุกฺตํ ยทสฺติ ตทนุรูปํ ตํ ปฺรติ ฆฏิษฺยเต;
32 மானிடமகனாகிய நான் யூதரல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்படுவேன். அவர்கள் என்னை ஏளனம் செய்து, அவமதித்து, என்மேல் துப்புவார்கள். என்னைச் சவுக்கால் அடித்து, என்னைக் கொலைசெய்வார்கள்.
วสฺตุตสฺตุ โส'นฺยเทศียานำ หเสฺตษุ สมรฺปยิษฺยเต, เต ตมุปหสิษฺยนฺติ, อนฺยายมาจริษฺยนฺติ ตทฺวปุษิ นิษฺฐีวํ นิกฺเษปฺสฺยนฺติ, กศาภิ: ปฺรหฺฤตฺย ตํ หนิษฺยนฺติ จ,
33 ஆனால் மூன்றாம் நாளிலே, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்று சொன்னார்.
กินฺตุ ตฺฤตียทิเน ส ศฺมศานาทฺ อุตฺถาสฺยติฯ
34 சீடர்களோ, இவைகளில் ஒன்றையுமே விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு சொன்னதின் அர்த்தம் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது. அவர் எதைக்குறித்துப் பேசுகிறாரென்றுகூட அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
เอตสฺยา: กถายา อภิปฺรายํ กิญฺจิทปิ เต โพทฺธุํ น เศกุ: เตษำ นิกเฏ'สฺปษฺฏตวาตฺ ตไสฺยตาสำ กถานามฺ อาศยํ เต ชฺญาตุํ น เศกุศฺจฯ
35 இயேசு எரிகோவுக்கு அருகில் வந்துகொண்டிருக்கையில், பார்வையற்ற ஒருவன் வீதி ஓரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
อถ ตสฺมินฺ ยิรีโห: ปุรสฺยานฺติกํ ปฺราปฺเต กศฺจิทนฺธ: ปถ: ปารฺศฺว อุปวิศฺย ภิกฺษามฺ อกโรตฺ
36 மக்கள் கூட்டமாக செல்லுகின்ற சத்தத்தை அவன் கேட்டு, என்ன நிகழ்கிறது என்று விசாரித்தான்.
ส โลกสมูหสฺย คมนศพฺทํ ศฺรุตฺวา ตตฺการณํ ปฺฤษฺฏวานฺฯ
37 நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, அவ்வழியாய் போகிறாரென்று அவனுக்குச் சொன்னார்கள்.
นาสรตียยีศุรฺยาตีติ โลไกรุกฺเต ส อุจฺไจรฺวกฺตุมาเรเภ,
38 உடனே அவன், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று சத்தமாய் கூப்பிட்டான்.
เห ทายูท: สนฺตาน ยีโศ มำ ทยสฺวฯ
39 முன்னே சென்றுக் கொண்டிருந்தவர்கள் அவன் சத்தமிடாதிருக்கும்படி அவனை அதட்டினார்கள். ஆனால் அவனோ, இன்னும் அதிக சத்தமாய், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று, கூப்பிட்டான்.
ตโตคฺรคามินสฺตํ เมานี ติษฺเฐติ ตรฺชยามาสุ: กินฺตุ ส ปุนารุวนฺ อุวาจ, เห ทายูท: สนฺตาน มำ ทยสฺวฯ
40 இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். அவன் அருகில் வந்தபொழுது, இயேசு அவனிடம்,
ตทา ยีศุ: สฺถคิโต ภูตฺวา สฺวานฺติเก ตมาเนตุมฺ อาทิเทศฯ
41 “நான் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ விரும்புகிறாய்?” என்று, கேட்டார். அதற்கு அவன், “ஆண்டவரே, நான் பார்வை பெறவிரும்புகிறேன்” என்றான்.
ตต: ส ตสฺยานฺติกมฺ อาคมตฺ, ตทา ส ตํ ปปฺรจฺฉ, ตฺวํ กิมิจฺฉสิ? ตฺวทรฺถมหํ กึ กริษฺยามิ? ส อุกฺตวานฺ, เห ปฺรโภ'หํ ทฺรษฺฏุํ ลไภฯ
42 இயேசு அவனிடம், “நீ பார்வையைப் பெற்றுக்கொள்; உன் விசுவாசம் உன்னை நலமாக்கிற்று” என்றார்.
ตทา ยีศุรุวาจ, ทฺฤษฺฏิศกฺตึ คฺฤหาณ ตว ปฺรตฺยยสฺตฺวำ สฺวสฺถํ กฺฤตวานฺฯ
43 உடனே, அவன் பார்வை பெற்று இறைவனைத் துதித்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றான். இதைக் கண்ட எல்லா மக்களும் இறைவனைத் துதித்தார்கள்.
ตตสฺตตฺกฺษณาตฺ ตสฺย จกฺษุษี ปฺรสนฺเน; ตสฺมาตฺ ส อีศฺวรํ ธนฺยํ วทนฺ ตตฺปศฺจาทฺ ยเยา, ตทาโลกฺย สรฺเวฺว โลกา อีศฺวรํ ปฺรศํสิตุมฺ อาเรภิเรฯ