< லூக்கா 18 >
1 அதற்குப் பின்பு இயேசு, தமது சீடர்கள் மனந்தளர்ந்து போகாமல், எப்போதும் மன்றாடுகிறவர்களாய் இருக்கவேண்டும் என்பதைக்குறித்து காண்பிப்பதற்காக, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
ਅਪਰਞ੍ਚ ਲੋਕੈਰਕ੍ਲਾਨ੍ਤੈ ਰ੍ਨਿਰਨ੍ਤਰੰ ਪ੍ਰਾਰ੍ਥਯਿਤਵ੍ਯਮ੍ ਇਤ੍ਯਾਸ਼ਯੇਨ ਯੀਸ਼ੁਨਾ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਨ੍ਤ ਏਕਃ ਕਥਿਤਃ|
2 “ஒரு பட்டணத்திலே ஒரு நீதிபதி இருந்தான். அவன் இறைவனுக்குப் பயப்படாதவன். மக்களையும் மதியாதவன்.
ਕੁਤ੍ਰਚਿੰਨਗਰੇ ਕਸ਼੍ਚਿਤ੍ ਪ੍ਰਾਡ੍ਵਿਵਾਕ ਆਸੀਤ੍ ਸ ਈਸ਼੍ਵਰਾੰਨਾਬਿਭੇਤ੍ ਮਾਨੁਸ਼਼ਾਂਸ਼੍ਚ ਨਾਮਨ੍ਯਤ|
3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள். அவள் தொடர்ந்து அவனிடம் வந்து, ‘எனது விரோதிக்கு எதிராக எனக்கு நீதி வழங்குங்கள்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டாள்.
ਅਥ ਤਤ੍ਪੁਰਵਾਸਿਨੀ ਕਾਚਿਦ੍ਵਿਧਵਾ ਤਤ੍ਸਮੀਪਮੇਤ੍ਯ ਵਿਵਾਦਿਨਾ ਸਹ ਮਮ ਵਿਵਾਦੰ ਪਰਿਸ਼਼੍ਕੁਰ੍ੱਵਿਤਿ ਨਿਵੇਦਯਾਮਾਸ|
4 “கொஞ்சக்காலம் அவன் அப்படிச் செய்ய மறுத்தான். இறுதியாக அவன், ‘நான் இறைவனுக்குப் பயப்படாதவனாகவும், மனிதனை மதிக்காதவனாகவும் இருந்துங்கூட,
ਤਤਃ ਸ ਪ੍ਰਾਡ੍ਵਿਵਾਕਃ ਕਿਯੱਦਿਨਾਨਿ ਨ ਤਦਙ੍ਗੀਕ੍ਰੁʼਤਵਾਨ੍ ਪਸ਼੍ਚਾੱਚਿੱਤੇ ਚਿਨ੍ਤਯਾਮਾਸ, ਯਦ੍ਯਪੀਸ਼੍ਵਰਾੰਨ ਬਿਭੇਮਿ ਮਨੁਸ਼਼੍ਯਾਨਪਿ ਨ ਮਨ੍ਯੇ
5 இந்த விதவை தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுக்கிறாள்; அதனால், நான் அவளுக்கு நீதி வழங்குவேன். அப்பொழுது அவள் இப்படித் தொடர்ந்து வந்து, என்னைத் தொந்தரவு செய்யமாட்டாள்’ என்று, தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்” என்றார்.
ਤਥਾਪ੍ਯੇਸ਼਼ਾ ਵਿਧਵਾ ਮਾਂ ਕ੍ਲਿਸ਼੍ਨਾਤਿ ਤਸ੍ਮਾਦਸ੍ਯਾ ਵਿਵਾਦੰ ਪਰਿਸ਼਼੍ਕਰਿਸ਼਼੍ਯਾਮਿ ਨੋਚੇਤ੍ ਸਾ ਸਦਾਗਤ੍ਯ ਮਾਂ ਵ੍ਯਗ੍ਰੰ ਕਰਿਸ਼਼੍ਯਤਿ|
6 பின்பு கர்த்தர், “அந்த அநீதியுள்ள நீதிபதி சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள்!
ਪਸ਼੍ਚਾਤ੍ ਪ੍ਰਭੁਰਵਦਦ੍ ਅਸਾਵਨ੍ਯਾਯਪ੍ਰਾਡ੍ਵਿਵਾਕੋ ਯਦਾਹ ਤਤ੍ਰ ਮਨੋ ਨਿਧਧ੍ਵੰ|
7 அந்தப்படியே, தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு, இறைவன் நீதியை வழங்காதிருப்பாரோ? அவர் நீதி வழங்கத் தாமதிப்பாரோ?
ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਯੇ (ਅ)ਭਿਰੁਚਿਤਲੋਕਾ ਦਿਵਾਨਿਸ਼ੰ ਪ੍ਰਾਰ੍ਥਯਨ੍ਤੇ ਸ ਬਹੁਦਿਨਾਨਿ ਵਿਲਮ੍ਬ੍ਯਾਪਿ ਤੇਸ਼਼ਾਂ ਵਿਵਾਦਾਨ੍ ਕਿੰ ਨ ਪਰਿਸ਼਼੍ਕਰਿਸ਼਼੍ਯਤਿ?
8 நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களுக்கு இறைவன் சீக்கிரமாகவே நீதி வழங்குவார். ஆனால் மானிடமகனாகிய நான் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பேனோ?” என்றார்.
ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਵਦਾਮਿ ਤ੍ਵਰਯਾ ਪਰਿਸ਼਼੍ਕਰਿਸ਼਼੍ਯਤਿ, ਕਿਨ੍ਤੁ ਯਦਾ ਮਨੁਸ਼਼੍ਯਪੁਤ੍ਰ ਆਗਮਿਸ਼਼੍ਯਤਿ ਤਦਾ ਪ੍ਰੁʼਥਿਵ੍ਯਾਂ ਕਿਮੀਦ੍ਰੁʼਸ਼ੰ ਵਿਸ਼੍ਵਾਸੰ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਤਿ?
9 தாங்கள் நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு, மற்றவர்கள் எல்லோரையும் கீழ்த்தரமாய் எண்ணிய சிலரைக் குறித்து, இயேசு இந்த உவமையைச் சொன்னார்:
ਯੇ ਸ੍ਵਾਨ੍ ਧਾਰ੍ੰਮਿਕਾਨ੍ ਜ੍ਞਾਤ੍ਵਾ ਪਰਾਨ੍ ਤੁੱਛੀਕੁਰ੍ੱਵਨ੍ਤਿ ਏਤਾਦ੍ਰੁʼਗ੍ਭ੍ਯਃ, ਕਿਯਦ੍ਭ੍ਯ ਇਮੰ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਾਨ੍ਤੰ ਕਥਯਾਮਾਸ|
10 “இரண்டுபேர் மன்றாடும்படி ஆலயத்திற்குச் சென்றார்கள். அதில் ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன்.
ਏਕਃ ਫਿਰੂਸ਼੍ਯਪਰਃ ਕਰਸਞ੍ਚਾਯੀ ਦ੍ਵਾਵਿਮੌ ਪ੍ਰਾਰ੍ਥਯਿਤੁੰ ਮਨ੍ਦਿਰੰ ਗਤੌ|
11 அந்தப் பரிசேயன் நின்றுகொண்டு: ‘இறைவனே, நான் மற்றவர்களைப்போல் இராதபடியினால், உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் கள்வர்களையோ, தீமை செய்கிறவர்களையோ, விபசாரக்காரரையோ அல்லது இந்த வரி வசூலிக்கிறவனைப் போன்றவன் அல்ல.
ਤਤੋ(ਅ)ਸੌ ਫਿਰੂਸ਼੍ਯੇਕਪਾਰ੍ਸ਼੍ਵੇ ਤਿਸ਼਼੍ਠਨ੍ ਹੇ ਈਸ਼੍ਵਰ ਅਹਮਨ੍ਯਲੋਕਵਤ੍ ਲੋਠਯਿਤਾਨ੍ਯਾਯੀ ਪਾਰਦਾਰਿਕਸ਼੍ਚ ਨ ਭਵਾਮਿ ਅਸ੍ਯ ਕਰਸਞ੍ਚਾਯਿਨਸ੍ਤੁਲ੍ਯਸ਼੍ਚ ਨ, ਤਸ੍ਮਾੱਤ੍ਵਾਂ ਧਨ੍ਯੰ ਵਦਾਮਿ|
12 நான் வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன், எனது வருமானத்திலெல்லாம் பத்திலொன்றை கொடுக்கிறேன்’ என்று, தனக்குத்தானே சொல்லி மன்றாடினான்.
ਸਪ੍ਤਸੁ ਦਿਨੇਸ਼਼ੁ ਦਿਨਦ੍ਵਯਮੁਪਵਸਾਮਿ ਸਰ੍ੱਵਸਮ੍ਪੱਤੇ ਰ੍ਦਸ਼ਮਾਂਸ਼ੰ ਦਦਾਮਿ ਚ, ਏਤਤ੍ਕਥਾਂ ਕਥਯਨ੍ ਪ੍ਰਾਰ੍ਥਯਾਮਾਸ|
13 “ஆனால், வரி வசூலிப்பவனோ தூரமாய் நின்று வானத்தை நோக்கிப் பார்க்கவும் துணியாமல், அவன் தன் மார்பில் அடித்துக்கொண்டு, ‘இறைவனே, பாவியாகிய என்மேல் இரக்கம் காட்டும்’ என மன்றாடினான்.
ਕਿਨ੍ਤੁ ਸ ਕਰਸਞ੍ਚਾਯਿ ਦੂਰੇ ਤਿਸ਼਼੍ਠਨ੍ ਸ੍ਵਰ੍ਗੰ ਦ੍ਰਸ਼਼੍ਟੁੰ ਨੇੱਛਨ੍ ਵਕ੍ਸ਼਼ਸਿ ਕਰਾਘਾਤੰ ਕੁਰ੍ੱਵਨ੍ ਹੇ ਈਸ਼੍ਵਰ ਪਾਪਿਸ਼਼੍ਠੰ ਮਾਂ ਦਯਸ੍ਵ, ਇੱਥੰ ਪ੍ਰਾਰ੍ਥਯਾਮਾਸ|
14 “நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அல்ல, இவனே இறைவனுடைய பார்வையில் நீதிமானாகத் தீர்க்கப்பட்டு, தன் வீட்டிற்குத் திரும்பிச்சென்றான். ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”
ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਵਦਾਮਿ, ਤਯੋਰ੍ਦ੍ਵਯੋ ਰ੍ਮਧ੍ਯੇ ਕੇਵਲਃ ਕਰਸਞ੍ਚਾਯੀ ਪੁਣ੍ਯਵੱਤ੍ਵੇਨ ਗਣਿਤੋ ਨਿਜਗ੍ਰੁʼਹੰ ਜਗਾਮ, ਯਤੋ ਯਃ ਕਸ਼੍ਚਿਤ੍ ਸ੍ਵਮੁੰਨਮਯਤਿ ਸ ਨਾਮਯਿਸ਼਼੍ਯਤੇ ਕਿਨ੍ਤੁ ਯਃ ਕਸ਼੍ਚਿਤ੍ ਸ੍ਵੰ ਨਮਯਤਿ ਸ ਉੰਨਮਯਿਸ਼਼੍ਯਤੇ|
15 குழந்தைகள்மேல் இயேசு கைகளை வைக்கவேண்டும் என்பதற்காக, மக்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். இதைச் சீடர்கள் கண்டபோது, அவர்கள் மக்களைக் கண்டித்தார்கள்.
ਅਥ ਸ਼ਿਸ਼ੂਨਾਂ ਗਾਤ੍ਰਸ੍ਪਰ੍ਸ਼ਾਰ੍ਥੰ ਲੋਕਾਸ੍ਤਾਨ੍ ਤਸ੍ਯ ਸਮੀਪਮਾਨਿਨ੍ਯੁਃ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਸ੍ਤਦ੍ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾਨੇਤ੍ਰੁʼਨ੍ ਤਰ੍ਜਯਾਮਾਸੁਃ,
16 இயேசுவோ, பிள்ளைகளைத் தம்மிடம் வரவேற்று சீடர்களுக்கு, “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது.
ਕਿਨ੍ਤੁ ਯੀਸ਼ੁਸ੍ਤਾਨਾਹੂਯ ਜਗਾਦ, ਮੰਨਿਕਟਮ੍ ਆਗਨ੍ਤੁੰ ਸ਼ਿਸ਼ੂਨ੍ ਅਨੁਜਾਨੀਧ੍ਵੰ ਤਾਂਸ਼੍ਚ ਮਾ ਵਾਰਯਤ; ਯਤ ਈਸ਼੍ਵਰਰਾਜ੍ਯਾਧਿਕਾਰਿਣ ਏਸ਼਼ਾਂ ਸਦ੍ਰੁʼਸ਼ਾਃ|
17 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், சிறுபிள்ளையைப்போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன், அதற்குள் ஒருபோதும் செல்லமாட்டான்” என்றார்.
ਅਹੰ ਯੁਸ਼਼੍ਮਾਨ੍ ਯਥਾਰ੍ਥੰ ਵਦਾਮਿ, ਯੋ ਜਨਃ ਸ਼ਿਸ਼ੋਃ ਸਦ੍ਰੁʼਸ਼ੋ ਭੂਤ੍ਵਾ ਈਸ਼੍ਵਰਰਾਜ੍ਯੰ ਨ ਗ੍ਰੁʼਹ੍ਲਾਤਿ ਸ ਕੇਨਾਪਿ ਪ੍ਰਕਾਰੇਣ ਤਤ੍ ਪ੍ਰਵੇਸ਼਼੍ਟੁੰ ਨ ਸ਼ਕ੍ਨੋਤਿ|
18 அப்பொழுது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வை உரிமையாகப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
ਅਪਰਮ੍ ਏਕੋਧਿਪਤਿਸ੍ਤੰ ਪਪ੍ਰੱਛ, ਹੇ ਪਰਮਗੁਰੋ, ਅਨਨ੍ਤਾਯੁਸ਼਼ਃ ਪ੍ਰਾਪ੍ਤਯੇ ਮਯਾ ਕਿੰ ਕਰ੍ੱਤਵ੍ਯੰ? (aiōnios )
19 அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கிறாய்? இறைவன் ஒருவரைத் தவிர, வேறு யாரும் நல்லவர் இல்லையே.
ਯੀਸ਼ੁਰੁਵਾਚ, ਮਾਂ ਕੁਤਃ ਪਰਮੰ ਵਦਸਿ? ਈਸ਼੍ਵਰੰ ਵਿਨਾ ਕੋਪਿ ਪਰਮੋ ਨ ਭਵਤਿ|
20 ‘விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார்.
ਪਰਦਾਰਾਨ੍ ਮਾ ਗੱਛ, ਨਰੰ ਮਾ ਜਹਿ, ਮਾ ਚੋਰਯ, ਮਿਥ੍ਯਾਸਾਕ੍ਸ਼਼੍ਯੰ ਮਾ ਦੇਹਿ, ਮਾਤਰੰ ਪਿਤਰਞ੍ਚ ਸੰਮਨ੍ਯਸ੍ਵ, ਏਤਾ ਯਾ ਆਜ੍ਞਾਃ ਸਨ੍ਤਿ ਤਾਸ੍ਤ੍ਵੰ ਜਾਨਾਸਿ|
21 அதற்கு அவன், “என் சிறுவயதுமுதல், இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்” என்றான்.
ਤਦਾ ਸ ਉਵਾਚ, ਬਾਲ੍ਯਕਾਲਾਤ੍ ਸਰ੍ੱਵਾ ਏਤਾ ਆਚਰਾਮਿ|
22 இயேசு இதைக் கேட்டபோது, “உன்னிடம் இன்னும் ஒரு குறைபாடு இருக்கிறது. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
ਇਤਿ ਕਥਾਂ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਯੀਸ਼ੁਸ੍ਤਮਵਦਤ੍, ਤਥਾਪਿ ਤਵੈਕੰ ਕਰ੍ੰਮ ਨ੍ਯੂਨਮਾਸ੍ਤੇ, ਨਿਜੰ ਸਰ੍ੱਵਸ੍ਵੰ ਵਿਕ੍ਰੀਯ ਦਰਿਦ੍ਰੇਭ੍ਯੋ ਵਿਤਰ, ਤਸ੍ਮਾਤ੍ ਸ੍ਵਰ੍ਗੇ ਧਨੰ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਸਿ; ਤਤ ਆਗਤ੍ਯ ਮਮਾਨੁਗਾਮੀ ਭਵ|
23 அவன் இதைக் கேட்டபோது மிகவும் துக்கமடைந்தான். ஏனெனில், அவன் மிகுந்த செல்வமுடையவனாய் இருந்தான்.
ਕਿਨ੍ਤ੍ਵੇਤਾਂ ਕਥਾਂ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਸੋਧਿਪਤਿਃ ਸ਼ੁਸ਼ੋਚ, ਯਤਸ੍ਤਸ੍ਯ ਬਹੁਧਨਮਾਸੀਤ੍|
24 இயேசு அவனைப் பார்த்து, “பணக்காரன் இறைவனுடைய அரசிற்குள் போவது எவ்வளவு கடினமானது!
ਤਦਾ ਯੀਸ਼ੁਸ੍ਤਮਤਿਸ਼ੋਕਾਨ੍ਵਿਤੰ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟ੍ਵਾ ਜਗਾਦ, ਧਨਵਤਾਮ੍ ਈਸ਼੍ਵਰਰਾਜ੍ਯਪ੍ਰਵੇਸ਼ਃ ਕੀਦ੍ਰੁʼਗ੍ ਦੁਸ਼਼੍ਕਰਃ|
25 பணக்காரன் ஒருவன் இறைவனுடைய அரசுக்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார்.
ਈਸ਼੍ਵਰਰਾਜ੍ਯੇ ਧਨਿਨਃ ਪ੍ਰਵੇਸ਼ਾਤ੍ ਸੂਚੇਸ਼੍ਛਿਦ੍ਰੇਣ ਮਹਾਙ੍ਗਸ੍ਯ ਗਮਨਾਗਮਨੇ ਸੁਕਰੇ|
26 இதைக் கேட்டவர்களோ, “அப்படியானால், யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று கேட்டார்கள்.
ਸ਼੍ਰੋਤਾਰਃ ਪਪ੍ਰੱਛੁਸ੍ਤਰ੍ਹਿ ਕੇਨ ਪਰਿਤ੍ਰਾਣੰ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਤੇ?
27 அதற்கு இயேசு, “மனிதரால் செய்ய முடியாதவற்றை, இறைவனால் செய்யமுடியும்” என்றார்.
ਸ ਉਕ੍ਤਵਾਨ੍, ਯਨ੍ ਮਾਨੁਸ਼਼ੇਣਾਸ਼ਕ੍ਯੰ ਤਦ੍ ਈਸ਼੍ਵਰੇਣ ਸ਼ਕ੍ਯੰ|
28 அப்பொழுது பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக, எங்களிடம் உள்ளதையெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் வந்தோமே” என்றான்.
ਤਦਾ ਪਿਤਰ ਉਵਾਚ, ਪਸ਼੍ਯ ਵਯੰ ਸਰ੍ੱਵਸ੍ਵੰ ਪਰਿਤ੍ਯਜ੍ਯ ਤਵ ਪਸ਼੍ਚਾਦ੍ਗਾਮਿਨੋ(ਅ)ਭਵਾਮ|
29 அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இறைவனுடைய அரசின் நிமித்தம் வீட்டையோ, மனைவியையோ, சகோதரர்களையோ, பெற்றோரையோ, பிள்ளைகளையோ விட்டுவிட்டிருந்தால்,
ਤਤਃ ਸ ਉਵਾਚ, ਯੁਸ਼਼੍ਮਾਨਹੰ ਯਥਾਰ੍ਥੰ ਵਦਾਮਿ, ਈਸ਼੍ਵਰਰਾਜ੍ਯਾਰ੍ਥੰ ਗ੍ਰੁʼਹੰ ਪਿਤਰੌ ਭ੍ਰਾਤ੍ਰੁʼਗਣੰ ਜਾਯਾਂ ਸਨ੍ਤਾਨਾਂਸ਼੍ਚ ਤ੍ਯਕ੍ਤਵਾ
30 அவர்கள் இந்த வாழ்வில் அதிகமானவைகளைப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார். (aiōn , aiōnios )
ਇਹ ਕਾਲੇ ਤਤੋ(ਅ)ਧਿਕੰ ਪਰਕਾਲੇ (ਅ)ਨਨ੍ਤਾਯੁਸ਼੍ਚ ਨ ਪ੍ਰਾਪ੍ਸ੍ਯਤਿ ਲੋਕ ਈਦ੍ਰੁʼਸ਼ਃ ਕੋਪਿ ਨਾਸ੍ਤਿ| (aiōn , aiōnios )
31 இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய் அவர்களிடம், “நாம் எருசலேமுக்குப் போகிறோம், மானிடமகனாகிய என்னைப்பற்றி இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாம் நிறைவேறும்.
ਅਨਨ੍ਤਰੰ ਸ ਦ੍ਵਾਦਸ਼ਸ਼ਿਸ਼਼੍ਯਾਨਾਹੂਯ ਬਭਾਸ਼਼ੇ, ਪਸ਼੍ਯਤ ਵਯੰ ਯਿਰੂਸ਼ਾਲਮ੍ਨਗਰੰ ਯਾਮਃ, ਤਸ੍ਮਾਤ੍ ਮਨੁਸ਼਼੍ਯਪੁਤ੍ਰੇ ਭਵਿਸ਼਼੍ਯਦ੍ਵਾਦਿਭਿਰੁਕ੍ਤੰ ਯਦਸ੍ਤਿ ਤਦਨੁਰੂਪੰ ਤੰ ਪ੍ਰਤਿ ਘਟਿਸ਼਼੍ਯਤੇ;
32 மானிடமகனாகிய நான் யூதரல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்படுவேன். அவர்கள் என்னை ஏளனம் செய்து, அவமதித்து, என்மேல் துப்புவார்கள். என்னைச் சவுக்கால் அடித்து, என்னைக் கொலைசெய்வார்கள்.
ਵਸ੍ਤੁਤਸ੍ਤੁ ਸੋ(ਅ)ਨ੍ਯਦੇਸ਼ੀਯਾਨਾਂ ਹਸ੍ਤੇਸ਼਼ੁ ਸਮਰ੍ਪਯਿਸ਼਼੍ਯਤੇ, ਤੇ ਤਮੁਪਹਸਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ, ਅਨ੍ਯਾਯਮਾਚਰਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ ਤਦ੍ਵਪੁਸ਼਼ਿ ਨਿਸ਼਼੍ਠੀਵੰ ਨਿਕ੍ਸ਼਼ੇਪ੍ਸ੍ਯਨ੍ਤਿ, ਕਸ਼ਾਭਿਃ ਪ੍ਰਹ੍ਰੁʼਤ੍ਯ ਤੰ ਹਨਿਸ਼਼੍ਯਨ੍ਤਿ ਚ,
33 ஆனால் மூன்றாம் நாளிலே, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்று சொன்னார்.
ਕਿਨ੍ਤੁ ਤ੍ਰੁʼਤੀਯਦਿਨੇ ਸ ਸ਼੍ਮਸ਼ਾਨਾਦ੍ ਉੱਥਾਸ੍ਯਤਿ|
34 சீடர்களோ, இவைகளில் ஒன்றையுமே விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு சொன்னதின் அர்த்தம் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது. அவர் எதைக்குறித்துப் பேசுகிறாரென்றுகூட அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
ਏਤਸ੍ਯਾਃ ਕਥਾਯਾ ਅਭਿਪ੍ਰਾਯੰ ਕਿਞ੍ਚਿਦਪਿ ਤੇ ਬੋੱਧੁੰ ਨ ਸ਼ੇਕੁਃ ਤੇਸ਼਼ਾਂ ਨਿਕਟੇ(ਅ)ਸ੍ਪਸ਼਼੍ਟਤਵਾਤ੍ ਤਸ੍ਯੈਤਾਸਾਂ ਕਥਾਨਾਮ੍ ਆਸ਼ਯੰ ਤੇ ਜ੍ਞਾਤੁੰ ਨ ਸ਼ੇਕੁਸ਼੍ਚ|
35 இயேசு எரிகோவுக்கு அருகில் வந்துகொண்டிருக்கையில், பார்வையற்ற ஒருவன் வீதி ஓரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
ਅਥ ਤਸ੍ਮਿਨ੍ ਯਿਰੀਹੋਃ ਪੁਰਸ੍ਯਾਨ੍ਤਿਕੰ ਪ੍ਰਾਪ੍ਤੇ ਕਸ਼੍ਚਿਦਨ੍ਧਃ ਪਥਃ ਪਾਰ੍ਸ਼੍ਵ ਉਪਵਿਸ਼੍ਯ ਭਿਕ੍ਸ਼਼ਾਮ੍ ਅਕਰੋਤ੍
36 மக்கள் கூட்டமாக செல்லுகின்ற சத்தத்தை அவன் கேட்டு, என்ன நிகழ்கிறது என்று விசாரித்தான்.
ਸ ਲੋਕਸਮੂਹਸ੍ਯ ਗਮਨਸ਼ਬ੍ਦੰ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਤਤ੍ਕਾਰਣੰ ਪ੍ਰੁʼਸ਼਼੍ਟਵਾਨ੍|
37 நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, அவ்வழியாய் போகிறாரென்று அவனுக்குச் சொன்னார்கள்.
ਨਾਸਰਤੀਯਯੀਸ਼ੁਰ੍ਯਾਤੀਤਿ ਲੋਕੈਰੁਕ੍ਤੇ ਸ ਉੱਚੈਰ੍ਵਕ੍ਤੁਮਾਰੇਭੇ,
38 உடனே அவன், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று சத்தமாய் கூப்பிட்டான்.
ਹੇ ਦਾਯੂਦਃ ਸਨ੍ਤਾਨ ਯੀਸ਼ੋ ਮਾਂ ਦਯਸ੍ਵ|
39 முன்னே சென்றுக் கொண்டிருந்தவர்கள் அவன் சத்தமிடாதிருக்கும்படி அவனை அதட்டினார்கள். ஆனால் அவனோ, இன்னும் அதிக சத்தமாய், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று, கூப்பிட்டான்.
ਤਤੋਗ੍ਰਗਾਮਿਨਸ੍ਤੰ ਮੌਨੀ ਤਿਸ਼਼੍ਠੇਤਿ ਤਰ੍ਜਯਾਮਾਸੁਃ ਕਿਨ੍ਤੁ ਸ ਪੁਨਾਰੁਵਨ੍ ਉਵਾਚ, ਹੇ ਦਾਯੂਦਃ ਸਨ੍ਤਾਨ ਮਾਂ ਦਯਸ੍ਵ|
40 இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். அவன் அருகில் வந்தபொழுது, இயேசு அவனிடம்,
ਤਦਾ ਯੀਸ਼ੁਃ ਸ੍ਥਗਿਤੋ ਭੂਤ੍ਵਾ ਸ੍ਵਾਨ੍ਤਿਕੇ ਤਮਾਨੇਤੁਮ੍ ਆਦਿਦੇਸ਼|
41 “நான் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ விரும்புகிறாய்?” என்று, கேட்டார். அதற்கு அவன், “ஆண்டவரே, நான் பார்வை பெறவிரும்புகிறேன்” என்றான்.
ਤਤਃ ਸ ਤਸ੍ਯਾਨ੍ਤਿਕਮ੍ ਆਗਮਤ੍, ਤਦਾ ਸ ਤੰ ਪਪ੍ਰੱਛ, ਤ੍ਵੰ ਕਿਮਿੱਛਸਿ? ਤ੍ਵਦਰ੍ਥਮਹੰ ਕਿੰ ਕਰਿਸ਼਼੍ਯਾਮਿ? ਸ ਉਕ੍ਤਵਾਨ੍, ਹੇ ਪ੍ਰਭੋ(ਅ)ਹੰ ਦ੍ਰਸ਼਼੍ਟੁੰ ਲਭੈ|
42 இயேசு அவனிடம், “நீ பார்வையைப் பெற்றுக்கொள்; உன் விசுவாசம் உன்னை நலமாக்கிற்று” என்றார்.
ਤਦਾ ਯੀਸ਼ੁਰੁਵਾਚ, ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿਸ਼ਕ੍ਤਿੰ ਗ੍ਰੁʼਹਾਣ ਤਵ ਪ੍ਰਤ੍ਯਯਸ੍ਤ੍ਵਾਂ ਸ੍ਵਸ੍ਥੰ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍|
43 உடனே, அவன் பார்வை பெற்று இறைவனைத் துதித்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றான். இதைக் கண்ட எல்லா மக்களும் இறைவனைத் துதித்தார்கள்.
ਤਤਸ੍ਤਤ੍ਕ੍ਸ਼਼ਣਾਤ੍ ਤਸ੍ਯ ਚਕ੍ਸ਼਼ੁਸ਼਼ੀ ਪ੍ਰਸੰਨੇ; ਤਸ੍ਮਾਤ੍ ਸ ਈਸ਼੍ਵਰੰ ਧਨ੍ਯੰ ਵਦਨ੍ ਤਤ੍ਪਸ਼੍ਚਾਦ੍ ਯਯੌ, ਤਦਾਲੋਕ੍ਯ ਸਰ੍ੱਵੇ ਲੋਕਾ ਈਸ਼੍ਵਰੰ ਪ੍ਰਸ਼ੰਸਿਤੁਮ੍ ਆਰੇਭਿਰੇ|