< லூக்கா 17 >
1 இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “மக்களுக்குப் பாவச்சோதனை வருவதை தவிர்க்க முடியாது.” ஆனால், அவை யாரால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ.
Isus u zăs alu učenici aluj: “Napadajur dă relji trăbă să vijă ali jao alu ala om pă kari vinji.
2 இந்தச் சிறியவர்களில் ஒருவனை யாராவது பாவத்தில் விழப்பண்ணினால், அவ்வாறு செய்பவர்களின் கழுத்திலே திரிகைக்கல் கட்டி கடலிலே தள்ளப்படுவது, அவனுக்கு நலமாய் இருக்கும்.
Aluj jar fi maj benji să ajvi petră dăm mlin ljigată la găt šă să să vărljaskă ăm apă, dă kit să puji pă grehur pă hej mišj.
3 எனவே, நீங்கள் கவனமாய் இருங்கள். “உன் சகோதரனோ அல்லது சகோதரியோ பாவம்செய்தால் அவர்களைக் கடிந்துகொள். அவர்கள் மனந்திரும்பினால், அவர்களை மன்னித்து விடு.
Fijec ăm samă! Dakă fračitu ac vitešći ămpurišešćil; atunšje dakă su ănkăji, jartăj.
4 அவர்கள் ஒரே நாளில், ஏழுமுறை உனக்கு எதிராகப் பாவம் செய்தாலும், அந்த ஏழுமுறையும் அவர்கள் உன்னிடம் வந்து, ‘நான் மனந்திரும்பி விட்டேன்’ என்றால், நீ அவர்களை மன்னிக்க வேண்டும்” என்றார்.
Makar să zgrešilaskă protiv dă činji šapči (7) răndur ăm una ză, dakă vinji la činji šapči (7) răndur să priznalaskă dă aje šje u făkut, jartăj.”
5 அப்போஸ்தலர் கர்த்தரிடம், “எங்கள் விசுவாசத்தை அதிகரிக்கப்பண்ணும்!” என்றார்கள்.
Apostolu u zăs alu Domnu: “Dănji maj mult ănkriđală!”
6 அதற்கு இயேசு, “கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் இந்த காட்டத்தி மரத்தைப்பார்த்து, ‘நீ வேரோடே பிடுங்குண்டு, கடலிலே நடப்படுவாயாக’ என்று சொன்னால், அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.
Domnu anostru u ăntors vorba: “Să vi avut ănkriđală makar aša dă mikă ka sămănca dă gorušičino zrno voj ac puće zăšji alu ljemnusta: ‘Skočići dăm vănj šă sămănăći ăm more!’, šă voj vic punji ureći.
7 “உங்களுக்கு ஒரு வேலைக்காரன் இருந்தால், அவன் வயலை உழுது அல்லது ஆடுகளை மேய்த்து திரும்பி வரும்போது, எஜமான் வேலைக்காரனிடம், ‘இங்கு, வந்து உட்கார்ந்து சாப்பிடு’ என்று சொல்லுவானா?
Šjinji dăm voj zăšji alu sluga aluj, dă pă šje u lukra ăm telek ili păze pă biršj, să ac zăkă kănd vinji dăm lukru: ‘Hajd jec lok?’
8 மாறாக அவனிடம், ‘எனது சாப்பாட்டைத் தயாராக்கி, நீயும் ஆயத்தமாகி நான் சாப்பிட்டு குடித்து முடிக்கும்வரை, எனக்குப் பணிசெய்; அதற்குப் பின்பு, நீ சாப்பிடலாம்’ என்று சொல்லுவான் அல்லவா?
Mar ju zăšji am lok dă aje: ‘Dući šă fă šjeva dă mănkat, ščimbăc coljilje, šă ašćaptămă să mănănk šă să bjov, dă pă aje poc tu să šăs šă să mănăšj!’
9 கட்டளையிட்டதைச் செய்ததற்காக, அந்த வேலைக்காரனுக்கு அவன் நன்றி செலுத்துவானா?
Šă ar kăpăta sluga šjeva ka posebnă zaslugă dă aje dă šje u făkut? Ju gănđesk kă nu.
10 எனவே நீங்களும், உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்துமுடித்த பின்பு, ‘நாங்கள் தகுதியற்ற வேலைக்காரர்; நாங்கள் எங்களுடைய கடமையை மட்டுமே செய்தோம்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
Šă voj isto făšjec kutotu šje am zapovjedalit, trăbă să zăšjec: ‘Noj šćenj numa obični slugur. Noj numa anj făkut lukru anostru!’”
11 இயேசு எருசலேமுக்குப் போகும்போது, சமாரியா மற்றும் கலிலேயா பகுதிகள் இடையே இருக்கும், எல்லை கிராமங்கள் வழியாகப் பயணம் செய்தார்.
Aša pă kalje dă Jeruzalem, Isus u mers pă kalje kari sljedile granicurlje ăntri Samarija šă Galileja.
12 அவர் ஒரு கிராமத்திற்கு வந்தபோது, குஷ்ட வியாதியுடைய பத்துப்பேர் அவருக்கு எதிர்ப்பட்டார்கள். அவர்கள் தூரத்தில் நின்று கொண்டே,
Are aje să tunji ăm unu dăm saturljelje šă jăl u aflat pă drik zešji (10) ominj ku gubă. Jej ur stat pă dăparči
13 “ஐயா, இயேசுவே, எங்களுக்கு இரக்கம் காட்டும்!” என்று சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள்.
šă ur mužjit la jăl: “O Isuse Domnu! Fijăc milă dă noj!”
14 இயேசு அவர்களைக் கண்டபோது, “நீங்கள் போய் ஆசாரியர்களிடம் உங்களைக் காண்பியுங்கள்” என்றார். அப்படியே அவர்கள் போகும்போதே, சுகமடைந்தார்கள்.
Kănd u văzut pă jej, Isus u zăs: “Dušjec šă arătăcăvă la pop să vadă dakă ščec sănătoš.” Jej lur pus ureći, šă pă kalji jej ur fost čistilic.
15 அவர்களில் ஒருவன் தான் சுகமடைந்ததைக் கண்டபோது, உரத்த சத்தமாய் இறைவனைத் துதித்துக்கொண்டு திரும்பிவந்தான்.
Atunšje unu dăm jej kănd u văzut kă u fost čistilit su ăntors ăm napoj šă dăm tot graju slavale pă Dimizov.
16 அவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவருக்கு நன்றி செலுத்தினான். அவனோ ஒரு சமாரியனாயிருந்தான்.
Jăl u kăzut žjos pă ubrazu la pišjorilje alu Isus šă ju zahvalalit. Ali omula are Samaritanac.
17 அப்பொழுது இயேசு, “பத்துப்பேரும் சுகமடைந்தார்கள் அல்லவா? மற்ற ஒன்பது பேர் எங்கே?
Isus u ăntribat: “Nas re zešji (10) ominj kari as re čistilic? Hunđi ăs hešćelanc novă (9) ominj?
18 இந்த வெளிநாட்டானைத் தவிர, இறைவனுக்குத் துதி செலுத்துவதற்கு வேறு யாரும் திரும்பிவரக் காணோமே?” என்று கேட்டார்.
Nu su ăntors njime ăm napoj să đe slavalala alu Dimizov, čar strancusta?”
19 பின்பு இயேசு அவனிடம், “நீ எழுந்து போ; உன் விசுவாசம் உன்னைச் சுகப்படுத்தியது” என்று சொன்னார்.
Atunšje jăl u zăs: “Skolăći šă dući pă kaljec. Ănkriđala ata ću spasalit!”
20 ஒரு நாள், இறைவனின் அரசு எப்போது வருமென்று, பரிசேயர் இயேசுவைக் கேட்டார்கள். அதற்கு இயேசு, “இறைவனின் அரசு, நீங்கள் கவனமாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது வருவதில்லை.
Kum u fost ăntribat dă la farizeji kănd u vinji Kraljevstvo alu Dimizov, Isus u ăntors vorba: “Kraljevstvo alu Dimizov nu vinji, aša să potă ominji să promatralaskă dă pă znakovur.
21 ‘இதோ இங்கே வந்துவிட்டது!’ என்றும், ‘அதோ அங்கே வந்துவிட்டது’ என்றும், மக்களால் சொல்லவும் முடியாது. ஏனெனில், இறைவனின் அரசு உங்கள் மத்தியிலே இருக்கிறது” என்றார்.
Aša lume să nu potă să zăkă: ‘Ujtăći! Ajiše ăj.’ Ili: ‘Akulo ăj!’ Nu! Kraljevstvo alu Dimizov ăj ăntri voj!”
22 பின்பு அவர் சீடர்களிடம், “மானிடமகனாகிய என்னுடைய நாட்களில் ஒன்றையாவது காண்பதற்கு நீங்கள் ஆவல்கொள்ளும் காலம் வரும். ஆனாலும், நீங்கள் அதைக் காணமாட்டீர்கள்.
Jăl u zăs lu učenici aluj: “U vinji vremi kănd vic kivinji să viđec una dăm zăljiljelje kănd ju, Fišjoru Omuluj, uj vladali ka kralju, ali kivinjala avostră no fi ispunulită.
23 ‘அங்கே அவர் இருக்கிறார்’ என்றும் ‘இங்கே அவர் இருக்கிறார்’ என்றும் சிலர் சொல்வார்கள். நீங்களோ அவர்கள் பின்னால் ஓட வேண்டாம்.
Orikic ur zăšji: ‘Ujtăći akulo ăj! Ajišje ăj!’ Nu fužjec ăm njikere nu vă maknalec!
24 வானத்தின் ஒரு முனையிலிருந்து, மறுமுனைவரை பிரகாசித்து மின்னும் மின்னலைப்போல் மானிடமகனாகிய நான் என்னுடைய நாளில் காணப்படுவேன்.
Kănd ju uj vinji Fišjoru alu Omuluj, ju uj vinji ka skripala pljin dă svetlă svitlăzănt dăm unu kap dă nor păn la altu kap dă nor. Aša u fi šă ku Fišjoru Omuluj ăm zua aluj.
25 ஆனால் முதலாவது, நான் பல வேதனைகளை அனுபவித்து, இந்தத் தலைமுறையினரால் புறக்கணிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது.
Ali majnti dă aje, ju trăbujesk să patalaskă mult šă ju uj fi odbacalit dă la asta generacijă.
26 “நோவாவின் நாட்களில் இருந்ததுபோலவே, மானிடமகனாகிய எனது நாட்களிலும் இருக்கும்.
Kum are ăm zăljilje kănd Noa kusta, aša u fi ăm zăljilje kănd ju Fišjoru Omuluj uj vinji.
27 நோவா பேழைக்குள் போகும்வரைக்கும், மக்கள் சாப்பிட்டுக்கொண்டும் குடித்துக்கொண்டும், திருமணம் செய்துகொண்டும், திருமணம் செய்துகொடுத்துக்கொண்டும் இருந்தார்கள். அப்போது, வெள்ளம் வந்து மக்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது.
Atunšje jej mănka šă bije, să ănsura šă să ămirita pănă ăm zuve kănd Noa u tunat ăm arkă. Šă poplava u vinjit šă u uništilit pă toc kari nas re ăm arkă.
28 “லோத்தின் நாட்களிலும் அப்படித்தான் நடந்தது. அந்த மக்களும் சாப்பிட்டு, குடித்து, வாங்கி, விற்று, பயிரிட்டுக்கொண்டும், கட்டிக்கொண்டும் இருந்தார்கள்.
Isto aša are ăm zăljilje kănd Lot kusta. Jej mănka šă bije, kumpăra šă vinđe, šă sămăna šă gradale.
29 ஆனால், லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே, நெருப்பும் கந்தகமும் வானத்திலிருந்து மழையாகப் பெய்து, அவர்கள் எல்லோரையும் அழித்துப்போட்டது.
Ali pă zuva šje Lot u fužjit dăm Sodoma u kăzut fok šă sumpor dăm nor šă u uništilit pă jej toc.
30 “மானிடமகனாகிய நான் வெளிப்படும் நாளிலும், இதைப்போலவே இருக்கும்.
Isto aša u fi dăm turdată pă zuve kănd ju, Fišjoru alu Omuluj muj ăntoršji.
31 அந்த நாளிலே, தமது வீட்டின்மேல் இருப்பவர்கள், தமது வீட்டிலுள்ள பொருட்களை எடுக்கும்படி, கீழே இறங்கிப் போகக்கூடாது. அப்படியே வயலில் இருக்கிறவர்கள், எதற்காகவும் திரும்பிப் போகக்கூடாது.
Dakă ăj ăm aje zuva omu pă krovuš dă kasa a stvarurlje aluj ăs ăm kasa, nu mergă žjos dă pă jelji să ăš je ku jăl. Isto aša dakă ăj om ăm telek, nu mergă akasă.
32 லோத்தின் மனைவியை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.
Ăngănđecavă dă băšăca alu Lot šje ju su dogodulit!
33 தம் வாழ்வைக் காத்துக்கொள்ள முயற்சிக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதை இழந்துபோவார்கள். தம் வாழ்வை இழக்கிறவர்கள் எவர்களோ, அவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள்.
Šinji gođe ănšjarkă să ăš spasalaskă kustuš ala lu perđi a kari lu perđi ala u ave kust.
34 நான் உங்களுக்குச் சொல்கிறேன், அந்த இரவிலே இரண்டுபேர் ஒரு படுக்கையில் படுத்திருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான்.
Ăm aje nopći ju vă spuj ur fi doj ominj ăm ista pat šă unu dăm jej u fi lot, halalănt u fi lăsat.
35 இரண்டு பெண்கள் ஒன்றாகத் தானியம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி எடுத்துக்கொள்ளப்படுவாள், மற்றவள் விட்டுவிடப்படுவாள்.
Dovă mujer una ur meljali făn, šă una u fi lotă, hajelantă u rămănje.”
36 இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் எடுத்துக்கொள்ளப்படுவான், மற்றவன் விட்டுவிடப்படுவான்.” என்றார்.
37 அதற்கு சீடர்கள், “எங்கே ஆண்டவரே?” என்றார்கள். இயேசு அதற்குப் பதிலாக, “பிணம் எங்கே கிடக்கிறதோ, அங்கே கழுகுகள் ஒன்றுகூடும்” என்றார்.
Učenici ur ăntribat pă Isus: “Hunđi u fi aje Domnu.” Jăl u odgovorulit: “Hunđi ăs ominj morc akulo u vinji lešinari.”