< லூக்கா 16 >

1 இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஒரு செல்வந்தன் இருந்தான். அவனது உடைமைகளையெல்லாம், அவனது நிர்வாகி வீண்செலவு செய்வதாக, அவன்மேல் குற்றம் சுமத்தப்பட்டது.
অপৰঞ্চ যীশুঃ শিষ্যেভ্যোন্যামেকাং কথাং কথযামাস কস্যচিদ্ ধনৱতো মনুষ্যস্য গৃহকাৰ্য্যাধীশে সম্পত্তেৰপৱ্যযেঽপৱাদিতে সতি
2 எனவே அந்த செல்வந்தன் அவனைக் கூப்பிட்டு அவனிடம், ‘உன்னைப்பற்றி நான் கேள்விப்படுகிறது என்ன? நீ வந்து, உனது நிர்வாகத்தைக் குறித்த கணக்கை என்னிடம் ஒப்படைத்துவிடு. இனிமேலும் நீ எனது நிர்வாகியாக இருக்கமுடியாது’ என்றான்.
তস্য প্ৰভুস্তম্ আহূয জগাদ, ৎৱযি যামিমাং কথাং শৃণোমি সা কীদৃশী? ৎৱং গৃহকাৰ্য্যাধীশকৰ্ম্মণো গণনাং দৰ্শয গৃহকাৰ্য্যাধীশপদে ৎৱং ন স্থাস্যসি|
3 “அதைக்கேட்ட அந்த நிர்வாகி, ‘இப்போது நான் என்ன செய்வேன்? எனது எஜமான் என்னை வேலையில் இருந்து நீக்கி விடப்போகிறாரே. நிலத்தைக் கொத்தவோ எனக்குப் பெலன் இல்லை. பிச்சை எடுக்கவும் எனக்கு வெட்கமாய் இருக்கிறது.
তদা স গৃহকাৰ্য্যাধীশো মনসা চিন্তযামাস, প্ৰভু ৰ্যদি মাং গৃহকাৰ্য্যাধীশপদাদ্ ভ্ৰংশযতি তৰ্হি কিং কৰিষ্যেঽহং? মৃদং খনিতুং মম শক্তি ৰ্নাস্তি ভিক্ষিতুঞ্চ লজ্জিষ্যেঽহং|
4 இங்கு நான் எனது வேலையை இழந்து விடும்போது, மக்கள் தங்களுடைய வீடுகளிலே என்னை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக, நான் என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும்,’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
অতএৱ মযি গৃহকাৰ্য্যাধীশপদাৎ চ্যুতে সতি যথা লোকা মহ্যম্ আশ্ৰযং দাস্যন্তি তদৰ্থং যৎকৰ্ম্ম মযা কৰণীযং তন্ নিৰ্ণীযতে|
5 “தன்னுடைய எஜமானிடம் கடன்பட்டிருந்த எல்லோரையும் கூப்பிட்டான். வந்தவர்களில், முதலாவது ஆளிடம், ‘எனது எஜமானுக்கு நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்றான்.
পশ্চাৎ স স্ৱপ্ৰভোৰেকৈকম্ অধমৰ্ণম্ আহূয প্ৰথমং পপ্ৰচ্ছ, ৎৱত্তো মে প্ৰভুণা কতি প্ৰাপ্যম্?
6 “அதற்கு அவன், ‘மூன்று ஆயிரம் லிட்டர் எண்ணெய் கொடுக்க வேண்டியுள்ளது’ என்றான். “அந்த நிர்வாகி அவனிடம், ‘சீக்கிரமாய் உட்கார்ந்து, உனது கணக்கு சீட்டை எடுத்து, அதில் ஆயிரத்து ஐந்நூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
ততঃ স উৱাচ, একশতাঢকতৈলানি; তদা গৃহকাৰ্য্যাধীশঃ প্ৰোৱাচ, তৱ পত্ৰমানীয শীঘ্ৰমুপৱিশ্য তত্ৰ পঞ্চাশতং লিখ|
7 “பின்பு அவன் இரண்டாவது ஆளிடம், ‘நீ எவ்வளவு கொடுக்க வேண்டியுள்ளது?’ என்று கேட்டான். “‘ஆயிரம் மூட்டை கோதுமை’ என்று அவன் பதிலளித்தான். “அப்பொழுது அவன் அவனிடம், ‘உனது கணக்குச் சீட்டை எடுத்து, அதை எண்ணூறு என்று எழுதிக்கொள்’ என்றான்.
পশ্চাদন্যমেকং পপ্ৰচ্ছ, ৎৱত্তো মে প্ৰভুণা কতি প্ৰাপ্যম্? ততঃ সোৱাদীদ্ একশতাঢকগোধূমাঃ; তদা স কথযামাস, তৱ পত্ৰমানীয অশীতিং লিখ|
8 “அநீதியுள்ள அந்த நிர்வாகி, இப்படித் தந்திரமாக செயல்பட்டதை, அந்த எஜமான் பாராட்டினான். ஏனெனில் ஒளியின் மக்களைவிட, இந்த உலகத்தின் மக்கள் தங்களுடன் வாழ்கிறவர்களோடு, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதில் புத்தியுள்ளவர்களாய் இருக்கிறார்கள். (aiōn g165)
তেনৈৱ প্ৰভুস্তমযথাৰ্থকৃতম্ অধীশং তদ্বুদ্ধিনৈপুণ্যাৎ প্ৰশশংস; ইত্থং দীপ্তিৰূপসন্তানেভ্য এতৎসংসাৰস্য সন্তানা ৱৰ্ত্তমানকালেঽধিকবুদ্ধিমন্তো ভৱন্তি| (aiōn g165)
9 உங்களுக்கு நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்ளும்படி, உலகத்தின் செல்வத்தை உபயோகப்படுத்துங்கள். அது உங்களைவிட்டு எடுபடும் போது, நீங்கள் நித்தியமான குடியிருப்புகளில் வரவேற்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். (aiōnios g166)
অতো ৱদামি যূযমপ্যযথাৰ্থেন ধনেন মিত্ৰাণি লভধ্ৱং ততো যুষ্মাসু পদভ্ৰষ্টেষ্ৱপি তানি চিৰকালম্ আশ্ৰযং দাস্যন্তি| (aiōnios g166)
10 “மிகச் சிறியவற்றில் உண்மையுள்ளவன், பெரியவற்றிலும் உண்மையுள்ளவனாய் இருப்பான். சிறியவற்றில் அநீதியுள்ளவனாய் இருக்கிறவன், பெரியவற்றிலும் அநீதியுள்ளவனாய் இருப்பான்.
১০যঃ কশ্চিৎ ক্ষুদ্ৰে কাৰ্য্যে ৱিশ্ৱাস্যো ভৱতি স মহতি কাৰ্য্যেপি ৱিশ্ৱাস্যো ভৱতি, কিন্তু যঃ কশ্চিৎ ক্ষুদ্ৰে কাৰ্য্যেঽৱিশ্ৱাস্যো ভৱতি স মহতি কাৰ্য্যেপ্যৱিশ্ৱাস্যো ভৱতি|
11 எனவே, இந்த உலகத்தின் செல்வத்தைப் பயன்படுத்துவதில், நீங்கள் உண்மையற்றவர்களாய் இருந்தால், உண்மையான செல்வத்தை, யார் உங்களை நம்பி, உங்கள் கையில் கொடுப்பான்?
১১অতএৱ অযথাৰ্থেন ধনেন যদি যূযমৱিশ্ৱাস্যা জাতাস্তৰ্হি সত্যং ধনং যুষ্মাকং কৰেষু কঃ সমৰ্পযিষ্যতি?
12 இன்னொருவனுடைய சொத்தைக் கையாள்வதில் நீங்கள் நம்பகமாக நடக்கவில்லையென்றால், யார் தன் சொத்தை உங்களுக்கு சொந்தமாய் இருக்கும்படி கொடுப்பான்?
১২যদি চ পৰধনেন যূযম্ অৱিশ্ৱাস্যা ভৱথ তৰ্হি যুষ্মাকং স্ৱকীযধনং যুষ্মভ্যং কো দাস্যতি?
13 “எந்த வேலைக்காரனும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும், பணத்துக்கும் பணிசெய்ய முடியாது” என்றார்.
১৩কোপি দাস উভৌ প্ৰভূ সেৱিতুং ন শক্নোতি, যত একস্মিন্ প্ৰীযমাণোঽন্যস্মিন্নপ্ৰীযতে যদ্ৱা একং জনং সমাদৃত্য তদন্যং তুচ্ছীকৰোতি তদ্ৱদ্ যূযমপি ধনেশ্ৱৰৌ সেৱিতুং ন শক্নুথ|
14 பண ஆசை பிடித்தவர்களான பரிசேயர் இதைக் கேட்டபோது, இயேசுவை ஏளனம் செய்தார்கள்.
১৪তদৈতাঃ সৰ্ৱ্ৱাঃ কথাঃ শ্ৰুৎৱা লোভিফিৰূশিনস্তমুপজহসুঃ|
15 இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் மனிதருடைய பார்வையில், உங்களை நீதிமான்கள் எனக் காண்பிக்கிறீர்கள். ஆனால் இறைவனோ, உங்கள் இருதயங்களை அறிவார். மனிதரிடையே உயர்வாய் மதிக்கப்படும் காரியங்கள், இறைவனுடைய பார்வையில் அருவருப்பாய் இருக்கிறது.
১৫ততঃ স উৱাচ, যূযং মনুষ্যাণাং নিকটে স্ৱান্ নিৰ্দোষান্ দৰ্শযথ কিন্তু যুষ্মাকম্ অন্তঃকৰণানীশ্ৱৰো জানাতি, যৎ মনুষ্যাণাম্ অতি প্ৰশংস্যং তদ্ ঈশ্ৱৰস্য ঘৃণ্যং|
16 “மோசேயின் சட்டமும், இறைவாக்கினரின் வார்த்தைகளும், யோவான் ஸ்நானகனுடைய காலம்வரைக்கும் அறிவிக்கப்பட்டன. ஆனால் அந்தக் காலத்திலிருந்தே, இறைவனுடைய அரசைப்பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது. எல்லோரும் பலவந்தமாய் அதற்குள் செல்வதற்கு முயற்சிக்கிறார்கள்.
১৬যোহন আগমনপৰ্য্যনতং যুষ্মাকং সমীপে ৱ্যৱস্থাভৱিষ্যদ্ৱাদিনাং লেখনানি চাসন্ ততঃ প্ৰভৃতি ঈশ্ৱৰৰাজ্যস্য সুসংৱাদঃ প্ৰচৰতি, একৈকো লোকস্তন্মধ্যং যত্নেন প্ৰৱিশতি চ|
17 வானமும், பூமியும் மறைந்து போகலாம், மோசேயின் சட்டத்தில் இருக்கிற எழுத்தின் சிறிய புள்ளிகூட மறைந்துபோகாது.
১৭ৱৰং নভসঃ পৃথিৱ্যাশ্চ লোপো ভৱিষ্যতি তথাপি ৱ্যৱস্থাযা একবিন্দোৰপি লোপো ন ভৱিষ্যতি|
18 “தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்பவன், விபசாரம் செய்கிறான். விவாகரத்து செய்யப்பட்ட ஒரு பெண்ணை யாராவது திருமணம் செய்தால், அவனும் விபசாரம் செய்கிறான்.
১৮যঃ কশ্চিৎ স্ৱীযাং ভাৰ্য্যাং ৱিহায স্ত্ৰিযমন্যাং ৱিৱহতি স পৰদাৰান্ গচ্ছতি, যশ্চ তা ত্যক্তাং নাৰীং ৱিৱহতি সোপি পৰদাৰান গচ্ছতি|
19 “ஒரு பணக்காரன் இருந்தான். அவன் கருஞ்சிவப்பும் மென்பட்டுமான உடை உடுத்தி, ஒவ்வொரு நாளும் சுகபோகமாய் வாழ்ந்து கொண்டிருந்தான்.
১৯একো ধনী মনুষ্যঃ শুক্লানি সূক্ষ্মাণি ৱস্ত্ৰাণি পৰ্য্যদধাৎ প্ৰতিদিনং পৰিতোষৰূপেণাভুংক্তাপিৱচ্চ|
20 அவனுடைய வாசலருகே, லாசரு என்னும் ஒரு பிச்சைக்காரன் படுத்திருந்தான். அவன் புண்கள் நிறைந்தவனாய்,
২০সৰ্ৱ্ৱাঙ্গে ক্ষতযুক্ত ইলিযাসৰনামা কশ্চিদ্ দৰিদ্ৰস্তস্য ধনৱতো ভোজনপাত্ৰাৎ পতিতম্ উচ্ছিষ্টং ভোক্তুং ৱাঞ্ছন্ তস্য দ্ৱাৰে পতিৎৱাতিষ্ঠৎ;
21 பணக்காரனின் மேஜையில் இருந்து விழுவதைச் சாப்பிடுவதற்கு ஆசையாயிருந்தான். நாய்களுங்கூட வந்து, அவன் புண்களை நக்கின.
২১অথ শ্ৱান আগত্য তস্য ক্ষতান্যলিহন্|
22 “காலப்போக்கில் அந்தப் பிச்சைக்காரன் இறந்தான். தேவதூதர்கள் அவனைத் தூக்கிக்கொண்டுபோய், ஆபிரகாமின் மடியிலே அமர்த்தினார்கள். அந்தப் பணக்காரனும் இறந்து அடக்கம்பண்ணப்பட்டான்.
২২কিযৎকালাৎপৰং স দৰিদ্ৰঃ প্ৰাণান্ জহৌ; ততঃ স্ৱৰ্গীযদূতাস্তং নীৎৱা ইব্ৰাহীমঃ ক্ৰোড উপৱেশযামাসুঃ|
23 அவன் நரகத்திலே வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான். அவன் மேலே நோக்கிப் பார்த்தபோது, தூரத்திலே ஆபிரகாமையும், அவனுடைய மார்பில் சாய்ந்திருந்த லாசருவையும் கண்டான். (Hadēs g86)
২৩পশ্চাৎ স ধনৱানপি মমাৰ, তং শ্মশানে স্থাপযামাসুশ্চ; কিন্তু পৰলোকে স ৱেদনাকুলঃ সন্ ঊৰ্দ্ধ্ৱাং নিৰীক্ষ্য বহুদূৰাদ্ ইব্ৰাহীমং তৎক্ৰোড ইলিযাসৰঞ্চ ৱিলোক্য ৰুৱন্নুৱাচ; (Hadēs g86)
24 எனவே அவன், ‘தந்தை ஆபிரகாமே’ என்று அவனைக் கூப்பிட்டு, ‘என்னில் இரக்கம் கொண்டு, லாசரு தனது விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி, அவனை அனுப்பும். நான் இந்த நெருப்பில் கிடந்து வேதனைப்படுகிறேனே’ என்றான்.
২৪হে পিতৰ্ ইব্ৰাহীম্ অনুগৃহ্য অঙ্গুল্যগ্ৰভাগং জলে মজ্জযিৎৱা মম জিহ্ৱাং শীতলাং কৰ্ত্তুম্ ইলিযাসৰং প্ৰেৰয, যতো ৱহ্নিশিখাতোহং ৱ্যথিতোস্মি|
25 “அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மகனே, நீ உன் வாழ்நாட்களில் நலன்களையே அனுபவித்தாய் என்பதை நினைவிற்கொள். லாசருவோ, இன்னல்களையே அனுபவித்தான். இப்பொழுது அவன், இங்கு ஆறுதல் பெறுகிறான். நீயோ வேதனைப்படுகிறாய்.
২৫তদা ইব্ৰাহীম্ বভাষে, হে পুত্ৰ ৎৱং জীৱন্ সম্পদং প্ৰাপ্তৱান্ ইলিযাসৰস্তু ৱিপদং প্ৰাপ্তৱান্ এতৎ স্মৰ, কিন্তু সম্প্ৰতি তস্য সুখং তৱ চ দুঃখং ভৱতি|
26 இவை எல்லாவற்றையும் தவிர, உங்களுக்கும் எங்களுக்கும் இடையே ஒரு பெரும் பிளவு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால், இங்கிருந்து உங்களிடத்திற்குக் கடந்துவர விரும்பினாலும் அப்படி வரமுடியாது. அங்கிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும், ஒருவராலும் முடியாது’ என்றான்.
২৬অপৰমপি যুষ্মাকম্ অস্মাকঞ্চ স্থানযো ৰ্মধ্যে মহদ্ৱিচ্ছেদোঽস্তি তত এতৎস্থানস্য লোকাস্তৎ স্থানং যাতুং যদ্ৱা তৎস্থানস্য লোকা এতৎ স্থানমাযাতুং ন শক্নুৱন্তি|
27 “அதற்கு அவன், ‘அப்படியானால் தகப்பனே, நான் உம்மிடம் கெஞ்சிக்கேட்கிறேன். லாசருவை என்னுடைய தகப்பன் வீட்டிற்கு அனுப்பும்.
২৭তদা স উক্তৱান্, হে পিতস্তৰ্হি ৎৱাং নিৱেদযামি মম পিতু ৰ্গেহে যে মম পঞ্চ ভ্ৰাতৰঃ সন্তি
28 ஏனெனில், எனக்கு ஐந்து சகோதரர் இருக்கிறார்கள். அவன் போய், அவர்களுக்கு எச்சரிக்கை செய்யட்டும். இந்த வேதனை நிறைந்த இடத்திற்கு, அவர்களும் வராமல் இருக்கட்டும்’ என்றான்.
২৮তে যথৈতদ্ যাতনাস্থানং নাযাস্যন্তি তথা মন্ত্ৰণাং দাতুং তেষাং সমীপম্ ইলিযাসৰং প্ৰেৰয|
29 “அதற்கு ஆபிரகாம் அவனிடம், ‘மோசேயும், இறைவாக்கினர்களும் எழுதிக் கொடுத்தவை அவர்களிடம் உண்டு; அவர்கள் அவற்றிற்கு செவிகொடுக்கட்டும்’ என்றான்.
২৯তত ইব্ৰাহীম্ উৱাচ, মূসাভৱিষ্যদ্ৱাদিনাঞ্চ পুস্তকানি তেষাং নিকটে সন্তি তে তদ্ৱচনানি মন্যন্তাং|
30 “அதற்கு அவன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே, இறந்தவர்களிலிருந்து ஒருவன் அவர்களிடம் போனால், அவர்கள் மனந்திரும்புவார்கள்’ என்றான்.
৩০তদা স নিৱেদযামাস, হে পিতৰ্ ইব্ৰাহীম্ ন তথা, কিন্তু যদি মৃতলোকানাং কশ্চিৎ তেষাং সমীপং যাতি তৰ্হি তে মনাংসি ৱ্যাঘোটযিষ্যন্তি|
31 “அப்பொழுது ஆபிரகாம் அவனிடம், ‘மோசேக்கும், இறைவாக்கினர்களுக்கும் அவர்கள் செவிகொடாவிட்டால், இறந்தவர்களிலிருந்து ஒருவன் உயிரோடு எழுந்து போனாலும், அவர்கள் நம்பமாட்டார்கள்’ என்று சொன்னான்.”
৩১তত ইব্ৰাহীম্ জগাদ, তে যদি মূসাভৱিষ্যদ্ৱাদিনাঞ্চ ৱচনানি ন মন্যন্তে তৰ্হি মৃতলোকানাং কস্মিংশ্চিদ্ উত্থিতেপি তে তস্য মন্ত্ৰণাং ন মংস্যন্তে|

< லூக்கா 16 >