< லூக்கா 14 >

1 ஒரு ஓய்வுநாளிலே, பரிசேயரின் தலைவன் ஒருவனுடைய வீட்டிலே, சாப்பிடுவதற்கு இயேசு போயிருந்தார். எல்லோரும் இயேசுவைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
అనన్తరం విశ్రామవారే యీశౌ ప్రధానస్య ఫిరూశినో గృహే భోక్తుం గతవతి తే తం వీక్షితుమ్ ఆరేభిరే|
2 அங்கே அவருக்கு முன்பாக, நீர்க்கோவை வியாதியினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த ஒருவன் இருந்தான்.
తదా జలోదరీ తస్య సమ్ముఖే స్థితః|
3 இயேசு பரிசேயரையும் மோசேயின் சட்ட அறிஞரையும் பார்த்து, “ஓய்வுநாளில் குணப்படுத்துவது மோசேயின் சட்டத்திற்கு ஏற்றதா, இல்லையா?” என்று கேட்டார்.
తతః స వ్యవస్థాపకాన్ ఫిరూశినశ్చ పప్రచ్ఛ, విశ్రామవారే స్వాస్థ్యం కర్త్తవ్యం న వా? తతస్తే కిమపి న ప్రత్యూచుః|
4 அவர்களோ ஒன்றும் பேசாதிருந்தார்கள். எனவே, இயேசு அவன் கையை பிடித்து குணமாக்கி அனுப்பிவிட்டார்.
తదా స తం రోగిణం స్వస్థం కృత్వా విససర్జ;
5 அப்பொழுது இயேசு அவர்களிடம், “உங்களில் ஒருவனுடைய மகனோ, மாடோ ஓய்வுநாளிலே கிணற்றில் விழுந்தால், உடனே நீங்கள் அவனையோ, மாட்டையோ வெளியே தூக்கிவிடமாட்டீர்களா?” என்று கேட்டார்.
తానువాచ చ యుష్మాకం కస్యచిద్ గర్ద్దభో వృషభో వా చేద్ గర్త్తే పతతి తర్హి విశ్రామవారే తత్క్షణం స కిం తం నోత్థాపయిష్యతి?
6 அவர்களோ ஒன்றும் பேசாமல் இருந்தார்கள்.
తతస్తే కథాయా ఏతస్యాః కిమపి ప్రతివక్తుం న శేకుః|
7 சாப்பாட்டு பந்தியிலே விருந்தாளிகள் முதன்மையான இடங்களைத் தேடியதை இயேசு கவனித்து, அவர்களிடம் இந்த உவமையைச் சொன்னார்:
అపరఞ్చ ప్రధానస్థానమనోనీతత్వకరణం విలోక్య స నిమన్త్రితాన్ ఏతదుపదేశకథాం జగాద,
8 “யாராவது உங்களை திருமண விருந்துக்கு அழைக்கும்போது, முதன்மையான இடத்தில் போய் உட்கார வேண்டாம். ஏனெனில், உங்களைவிட மதிப்புக்குரிய வேறொருவரும் அழைக்கப்பட்டிருக்கலாம்.
త్వం వివాహాదిభోజ్యేషు నిమన్త్రితః సన్ ప్రధానస్థానే మోపావేక్షీః| త్వత్తో గౌరవాన్వితనిమన్త్రితజన ఆయాతే
9 எனவே, உங்கள் இருவரையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து, ‘நீ உட்கார்ந்திருக்கும் இடத்தை, இவருக்குக் கொடு’ என்று உனக்குச் சொல்லக்கூடும். அப்பொழுது நீ வெட்கமடைந்தவனாய், கடைசி இடத்திற்கு போய் உட்கார நேரிடும்.
నిమన్త్రయితాగత్య మనుష్యాయైతస్మై స్థానం దేహీతి వాక్యం చేద్ వక్ష్యతి తర్హి త్వం సఙ్కుచితో భూత్వా స్థాన ఇతరస్మిన్ ఉపవేష్టుమ్ ఉద్యంస్యసి|
10 ஆகவே, உங்களை யாராவது அழைக்கும்போது, கடைசி இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவன் உன்னிடம் வந்து, ‘நண்பனே, உயர்வான இடத்தில் வந்து உட்கார்ந்துகொள்’ என்று சொல்வான். அப்பொழுது உன்னுடன்கூட வந்திருக்கும் எல்லா விருந்தாளிகளின் முன்னிலையிலும் நீ மதிப்பைப் பெறுவாய்.
అస్మాత్ కారణాదేవ త్వం నిమన్త్రితో గత్వాఽప్రధానస్థాన ఉపవిశ, తతో నిమన్త్రయితాగత్య వదిష్యతి, హే బన్ధో ప్రోచ్చస్థానం గత్వోపవిశ, తథా సతి భోజనోపవిష్టానాం సకలానాం సాక్షాత్ త్వం మాన్యో భవిష్యసి|
11 ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்” என்றார்.
యః కశ్చిత్ స్వమున్నమయతి స నమయిష్యతే, కిన్తు యః కశ్చిత్ స్వం నమయతి స ఉన్నమయిష్యతే|
12 பின்பு இயேசு தம்மை அழைத்தவனிடம், “நீ ஒரு மத்தியான உணவையோ, இரவு உணவையோ கொடுக்கும்போது, உனது நண்பர்களையோ, சகோதரர்களையோ, உறவினர்களையோ, அல்லது செல்வந்தர்களான உன் அயலவரையோ அழைக்கவேண்டாம்; அப்படி நீ அழைத்தால், அவர்களும் உன்னைத் திரும்ப அழைப்பார்கள். இவ்விதமாய், அவர்கள் உனக்குப் பதில் உதவி செய்துவிடுவார்கள்.
తదా స నిమన్త్రయితారం జనమపి జగాద, మధ్యాహ్నే రాత్రౌ వా భోజ్యే కృతే నిజబన్ధుగణో వా భ్రాతృగణో వా జ్ఞాతిగణో వా ధనిగణో వా సమీపవాసిగణో వా ఏతాన్ న నిమన్త్రయ, తథా కృతే చేత్ తే త్వాం నిమన్త్రయిష్యన్తి, తర్హి పరిశోధో భవిష్యతి|
13 எனவே, நீ ஒரு விருந்தைக் கொடுக்கும்போது, ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், கால் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும் அழைப்பாயாக;
కిన్తు యదా భేజ్యం కరోషి తదా దరిద్రశుష్కకరఖఞ్జాన్ధాన్ నిమన్త్రయ,
14 அப்பொழுது நீ ஆசீர்வதிக்கப்படுவாய். அவர்களால், அதற்கான பதில் உதவி எதையும் உனக்குச் செய்யமுடியாது. ஆனால், நீ நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் அதற்கான பதில் உதவியைப் பெற்றுக்கொள்வாய்” என்றார்.
తత ఆశిషం లప్స్యసే, తేషు పరిశోధం కర్త్తుమశక్నువత్సు శ్మశానాద్ధార్మ్మికానాముత్థానకాలే త్వం ఫలాం లప్స్యసే|
15 இதைக் கேட்டபோது, இயேசுவோடு பந்தியில் உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவன் இயேசுவிடம், “இறைவனுடைய அரசின் விருந்தில் சாப்பிடுகிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றான்.
అనన్తరం తాం కథాం నిశమ్య భోజనోపవిష్టః కశ్చిత్ కథయామాస, యో జన ఈశ్వరస్య రాజ్యే భోక్తుం లప్స్యతే సఏవ ధన్యః|
16 இயேசு அதற்கு மறுமொழியாக சொன்னதாவது: “ஒருவன் பெரிய விருந்து ஒன்றை ஆயத்தப்படுத்தி, பல விருந்தினர்களை அழைத்திருந்தான்.
తతః స ఉవాచ, కశ్చిత్ జనో రాత్రౌ భేజ్యం కృత్వా బహూన్ నిమన్త్రయామాస|
17 விருந்துக்கான வேளை வந்தபோது, அழைக்கப்பட்டவர்களிடம், ‘வாருங்கள் விருந்து ஆயத்தமாகிவிட்டது’ என்று சொல்லும்படி தனது வேலைக்காரனை அனுப்பினான்.
తతో భోజనసమయే నిమన్త్రితలోకాన్ ఆహ్వాతుం దాసద్వారా కథయామాస, ఖద్యద్రవ్యాణి సర్వ్వాణి సమాసాదితాని సన్తి, యూయమాగచ్ఛత|
18 “ஆனால் அவர்கள் எல்லோரும் ஒருமித்து சாக்குப்போக்கு சொல்லத் தொடங்கினார்கள். முதலாவது ஆள், ‘இப்பொழுதுதான் நான் ஒரு வயலை வாங்கியிருக்கிறேன். நான் அதைப் போய்ப் பார்க்க வேண்டியிருக்கிறது. தயவுசெய்து என்னை மன்னியும்’ என்றான்.
కిన్తు తే సర్వ్వ ఏకైకం ఛలం కృత్వా క్షమాం ప్రార్థయాఞ్చక్రిరే| ప్రథమో జనః కథయామాస, క్షేత్రమేకం క్రీతవానహం తదేవ ద్రష్టుం మయా గన్తవ్యమ్, అతఏవ మాం క్షన్తుం తం నివేదయ|
19 “வேறொருவன், ‘நான் இப்பொழுதுதான், ஐந்து ஜோடி எருதுகளை வாங்கியிருக்கிறேன். நான் வேலையில் அவற்றை ஈடுபடுத்திப் பார்க்கப் போகிறேன். தயவுசெய்து என்னை மன்னியும்’ என்றான்.
అన్యో జనః కథయామాస, దశవృషానహం క్రీతవాన్ తాన్ పరీక్షితుం యామి తస్మాదేవ మాం క్షన్తుం తం నివేదయ|
20 “மற்றவனோ, ‘நான் இப்பொழுதுதான் திருமணம் செய்துகொண்டேன். எனவே, என்னால் வரமுடியாது’ என்றான்.
అపరః కథయామాస, వ్యూఢవానహం తస్మాత్ కారణాద్ యాతుం న శక్నోమి|
21 “அந்த வேலைக்காரன் திரும்பிவந்து, தனது எஜமானுக்கு நடந்தவற்றைச் சொன்னான். அப்பொழுது, அந்த வீட்டுச் சொந்தக்காரன் கோபமடைந்தான். அவன் தனது வேலைக்காரனிடம், ‘நீ விரைவாய் புறப்பட்டுப்போய், பட்டணத்து வீதிகளிலிருந்தும், சந்துகளிலிருந்தும் ஏழைகளையும், உடல் ஊனமுற்றோரையும், பார்வையற்றோரையும், கால் ஊனமுற்றோரையும் கூட்டிக்கொண்டு வா’ என உத்தரவிட்டான்.
పశ్చాత్ స దాసో గత్వా నిజప్రభోః సాక్షాత్ సర్వ్వవృత్తాన్తం నివేదయామాస, తతోసౌ గృహపతిః కుపిత్వా స్వదాసం వ్యాజహార, త్వం సత్వరం నగరస్య సన్నివేశాన్ మార్గాంశ్చ గత్వా దరిద్రశుష్కకరఖఞ్జాన్ధాన్ అత్రానయ|
22 “அந்த வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீர் உத்தரவிட்டபடியே செய்தாயிற்று. ஆனால், இன்னும் இடம் இருக்கிறது’ என்றான்.
తతో దాసోఽవదత్, హే ప్రభో భవత ఆజ్ఞానుసారేణాక్రియత తథాపి స్థానమస్తి|
23 “அப்பொழுது அந்த எஜமான் தன் வேலைக்காரனிடம், ‘நீ புறப்பட்டுப்போய் நாட்டுப்புறத்தின் தெருக்களிலிருந்தும், சேரிகளிலிருந்தும் ஆட்களை வற்புறுத்தி உள்ளே கொண்டுவா. அவ்விதமாகவே என் வீடு நிறையட்டும்.
తదా ప్రభుః పున ర్దాసాయాకథయత్, రాజపథాన్ వృక్షమూలాని చ యాత్వా మదీయగృహపూరణార్థం లోకానాగన్తుం ప్రవర్త్తయ|
24 நான் உனக்குச் சொல்கிறேன், அழைக்கப்பட்டவர்களில் ஒருவனும் எனது விருந்தை சுவைக்கமாட்டான்’ என்றான்.”
అహం యుష్మభ్యం కథయామి, పూర్వ్వనిమన్త్రితానమేకోపి మమాస్య రాత్రిభోజ్యస్యాస్వాదం న ప్రాప్స్యతి|
25 மக்கள் பெரும் கூட்டமாய் இயேசுவுடன் போய்க்கொண்டிருந்தார்கள். இயேசு திரும்பி, அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது:
అనన్తరం బహుషు లోకేషు యీశోః పశ్చాద్ వ్రజితేషు సత్సు స వ్యాఘుట్య తేభ్యః కథయామాస,
26 “யாராவது என்னிடம் வந்து, தன் தகப்பனையும், தாயையும், மனைவியையும், பிள்ளைகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தன் உயிரையும் வெறுக்காவிட்டால், அவர்கள் என் சீடராய் இருக்கமுடியாது.
యః కశ్చిన్ మమ సమీపమ్ ఆగత్య స్వస్య మాతా పితా పత్నీ సన్తానా భ్రాతరో భగిమ్యో నిజప్రాణాశ్చ, ఏతేభ్యః సర్వ్వేభ్యో మయ్యధికం ప్రేమ న కరోతి, స మమ శిష్యో భవితుం న శక్ష్యతి|
27 யாராவது தன் சிலுவையைச் சுமந்துகொண்டு என்னைப் பின்பற்றாவிட்டால் எனக்குச் சீடராயிருக்க முடியாது.
యః కశ్చిత్ స్వీయం క్రుశం వహన్ మమ పశ్చాన్న గచ్ఛతి, సోపి మమ శిష్యో భవితుం న శక్ష్యతి|
28 “உங்களில் யாராவது ஒரு கோபுரத்தைக் கட்ட விரும்பினால், முதலில் அவர்கள் உட்கார்ந்து, அதைக் கட்டி முடிப்பதற்குப் போதுமான பணம் தம்மிடம் இருக்கிறதா என்று கணக்குப் பார்க்காமல் இருப்பார்களோ?
దుర్గనిర్మ్మాణే కతివ్యయో భవిష్యతి, తథా తస్య సమాప్తికరణార్థం సమ్పత్తిరస్తి న వా, ప్రథమముపవిశ్య ఏతన్న గణయతి, యుష్మాకం మధ్య ఏతాదృశః కోస్తి?
29 அஸ்திபாரத்தைப் போட்டு விட்டு, அதைக் கட்டிமுடிக்க அவர்களால் முடியாவிட்டால், அதைப் பார்க்கின்ற எல்லோரும், அவர்களை கேலி செய்வார்கள்.
నోచేద్ భిత్తిం కృత్వా శేషే యది సమాపయితుం న శక్ష్యతి,
30 ‘இவன் கட்டத் தொடங்கினான். ஆனாலும், அதைக் கட்டிமுடிக்க அவனால் முடியவில்லை’ என்பார்கள்.
తర్హి మానుషోయం నిచేతుమ్ ఆరభత సమాపయితుం నాశక్నోత్, ఇతి వ్యాహృత్య సర్వ్వే తముపహసిష్యన్తి|
31 “அல்லது ஒரு அரசன் இன்னொரு அரசனுக்கு எதிராக யுத்தம் செய்ய முற்பட்டால், முதலில் உட்கார்ந்து அவன், இருபதாயிரம் வீரர்களோடுத் தன்னை எதிர்த்து வருபவனை, தான் தன்னிடம் உள்ள பத்தாயிரம் வீரர்களோடு எதிர்த்து நிற்கமுடியுமா என்று யோசித்துப்பார்க்க மாட்டானோ?
అపరఞ్చ భిన్నభూపతినా సహ యుద్ధం కర్త్తుమ్ ఉద్యమ్య దశసహస్రాణి సైన్యాని గృహీత్వా వింశతిసహస్రేః సైన్యైః సహితస్య సమీపవాసినః సమ్ముఖం యాతుం శక్ష్యామి న వేతి ప్రథమం ఉపవిశ్య న విచారయతి ఏతాదృశో భూమిపతిః కః?
32 அவனால் அப்படி நிற்கமுடியாவிட்டால், எதிரி தூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவன் பிரதிநிதிகளை அனுப்பி, சமாதான உடன்பாட்டிற்கு வரும்படி கேட்டுக்கொள்வான்.
యది న శక్నోతి తర్హి రిపావతిదూరే తిష్ఠతి సతి నిజదూతం ప్రేష్య సన్ధిం కర్త్తుం ప్రార్థయేత|
33 அவ்விதமாகவே, உங்களில் யாராவது தம்மிடமுள்ள எல்லாவற்றையும் விட்டுவிடாவிட்டால், எனக்கு சீடராக இருக்கமுடியாது.
తద్వద్ యుష్మాకం మధ్యే యః కశ్చిన్ మదర్థం సర్వ్వస్వం హాతుం న శక్నోతి స మమ శిష్యో భవితుం న శక్ష్యతి|
34 “உப்பு நல்லதே. ஆனால், அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால், மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்?
లవణమ్ ఉత్తమమ్ ఇతి సత్యం, కిన్తు యది లవణస్య లవణత్వమ్ అపగచ్ఛతి తర్హి తత్ కథం స్వాదుయుక్తం భవిష్యతి?
35 அது மண்ணிற்கும் பயனற்றது. அதை உரமாகவும் பயன்படுத்த முடியாது; அதை வெளியேதான் கொட்டிவிடவேண்டும். “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.
తద భూమ్యర్థమ్ ఆలవాలరాశ్యర్థమపి భద్రం న భవతి; లోకాస్తద్ బహిః క్షిపన్తి| యస్య శ్రోతుం శ్రోత్రే స్తః స శృణోతు|

< லூக்கா 14 >