< லூக்கா 12 >
1 அப்பொழுது ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடி, ஒருவரையொருவர் நெருக்கிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு, முதலாவதாக தமது சீடர்களுடன் பேசிச் சொல்லியதாவது: “பரிசேயரின் வெளிவேஷமாகிய புளித்தமாவைக் குறித்துக் கவனமாயிருங்கள்.
ତିଆଡିଡ୍ ଗୋଗୋୟ୍ଡମ୍ ମନ୍ରାଞ୍ଜି ରୁକ୍କୁଡାଲନ୍ ତର୍ଡମ୍ ଆ ତୋଣ୍ଡୋଲୋଙ୍ ଅଲ୍ରାବେଞ୍ଜି; ତିଆଡିଡ୍ ଜିସୁନ୍, ଆମ୍ମୁଙ୍ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ପାରୁସିଞ୍ଜି ଆ କମିର ଅନ୍ତମ୍ ଆ ଇସ୍କତ୍ତାଞ୍ଜି ସିଲଡ୍ ଗିୟ୍ଡମ୍ନାବା ।
2 மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை.
ବନ୍ଡ ଅଙ୍ଗାତେ ଆୟୁମ୍ୟୁମ୍ ତିଆତେ ଗିୟ୍ତାଆୟ୍ତେ, ଆରି ଅଙ୍ଗାତେ ଆସସ ତିଆତେ ଜନାଲଙ୍ତନେ ।
3 நீங்கள் இருளிலே சொன்னது, பகல் வெளிச்சத்தில் கேட்கப்படும். நீங்கள் உள் அறைகளிலிருந்து இரகசியமாய் பேசியது, வீட்டின் கூரையின்மேல் அறிவிக்கப்படும்.
ତିଆସନ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ଅଙ୍ଗା ଅଙ୍ଗାତେ ଆ ଲୋଙଡ୍ଲୋଙନ୍ ଏବର୍ରନେ, ତିଆତେଜି ଅଡ଼୍କୋନ୍ ଆ ସାଆର୍ଲୋଙନ୍ ଅନମ୍ଡଙନ୍ ଡେତେ, ଆରି ଅଙ୍ଗାତେ ଆସସସିଂଲୋଙନ୍ ଏବର୍ରନେ, ତିଆତେଜି ଅସିଙନ୍ ଆ ତୋଣ୍ଡୋ ବିଲେଙ୍ଲୋଙନ୍ ବର୍ନେନ୍ ଡେତେ ।”
4 “என் நண்பர்களே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், உடலைக் கொல்லுகிறவர்களுக்குப் பயப்படவேண்டாம். அதற்குப் பிறகு, அவர்களால் உங்களை ஒன்றுமே செய்யமுடியாது.
“ଏ ଗଡ଼ିଞେଞ୍ଜି, ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଆନାଜି ଡଅଙନ୍ ସମ୍ୱବ୍ତଜି, ବନ୍ଡ ତି ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆରି ଇନ୍ନିଙ୍ ଅଃର୍ରପ୍ତିଲୁମେଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବତଙ୍ଡଙ୍ବେନ୍ ।
5 ஆனால், நீங்கள் யாருக்குப் பயப்படவேண்டும் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்: உடலைக் கொன்றபின், உங்களை நரகத்தில் தள்ளுவதற்கு வல்லமை உள்ள இறைவனுக்கே பயப்படுங்கள். ஆம், நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவருக்கே பயப்படுங்கள். (Geenna )
ବନ୍ଡ ଆନାଆଡଙ୍ ଏବତଙ୍ତେ, ତିଆତେ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ଜନାତବେନ୍; ସନମ୍ୱବନ୍ ଆ ତିକ୍କି ତଗୋସିଂଲୋଙନ୍ ପନିଡନ୍ ଆସନ୍ ଅଙ୍ଗା ଇସ୍ୱର ଆସିଲୋଙ୍ ଅବ୍ସୋଡ଼ାନେନ୍ ଡକୋ, ଆନିନ୍ଆଡଙ୍ ବତଙ୍ବା; ଓଓ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ବର୍ତବେନ୍, ଆନିନ୍ଆଡଙ୍ ବତଙ୍ବା ।” (Geenna )
6 ஐந்து சிட்டுக் குருவிகளை இரண்டு காசுக்கு விற்பதில்லையா? ஆனால், அவற்றில் ஒன்றேனும் இறைவனால் மறக்கப்படுவதில்லை.
“ଇନି ମନ୍ଲୟ୍ ସୟ୍ସିଂତିଡନ୍ ବାଗୁ ତଙ୍କା ବାତ୍ତେ ଅଃତ୍ତମ୍ନେ ପଙ୍? ଡେଲୋଜନଙ୍ଡେନ୍ ଆନିଞ୍ଜିଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ ଜାକିଁୟ୍ ଇସ୍ୱରନ୍ ଅଃକ୍କରୋଡାଏ ।
7 உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. நீங்கள் பயப்படவேண்டாம்; நீங்கள் அநேக சிட்டுக் குருவிகளைப் பார்க்கிலும் அதிக மதிப்புடையவர்கள்.
ବନ୍ଡ ଅବବ୍ଲୋଙ୍ବେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆ ଉଉ ଜାକିଁୟ୍ ଆଡିଡି, ବତଙ୍ଡଙ୍ବେନ୍; ସୟ୍ସିଂତିଡଞ୍ଜି ସିଲଡ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଗୋଗୋୟ୍ ମଡ଼ଗା ।”
8 “நான் உங்களுக்குச் சொல்கிறேன், மனிதருக்கு முன்பாக என்னை ஏற்றுக்கொள்கிறவன் எவனோ, அவனை இறைவனுடைய தூதருக்கு முன்பாக மானிடமகனாகிய நான் ஏற்றுக்கொள்வேன்.
“ଆରି, ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଆନା ମନ୍ରାଞ୍ଜି ଆ ତେମଡ୍ଲୋଙ୍ ଞେନ୍ଆଡଙ୍ ଅଃମ୍ମୁର୍ସେଇଁୟ୍, ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ନିୟ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ପାଙ୍ଲଙ୍ବର୍ମର୍ଜି ଆ ତେମଡ୍ଲୋଙ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଅଃମ୍ମୁର୍ସେଏ;
9 ஆனால், மனிதருக்கு முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவன் இறைவனுடைய தூதருக்கு முன்பாக மறுதலிக்கப்படுவான்.
ବନ୍ଡ ଆନା, ମନ୍ରାଞ୍ଜି ଆ ତେମଡ୍ଲୋଙ୍ ଞେନ୍ଆଡଙ୍ ମୁର୍ସେତିଁୟ୍, ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ନିୟ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ପାଙ୍ଲଙ୍ବର୍ମର୍ଜି ଆ ତେମଡ୍ଲୋଙ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ମୁର୍ସେତେ ।”
10 யாராவது மானிடமகனாகிய எனக்கு எதிராய்ப் பேசுகிற வார்த்தை, அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். ஆனால், பரிசுத்த ஆவியானவருக்கு எதிராக அவரை நிந்தித்துப் பேசினால், அது அவர்களுக்கு மன்னிக்கப்பட மாட்டாது.
“ଆରି ଆନା, ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍ ବର୍ତନେ, ଆନିନ୍ଆଡଙ୍ କେମାନ୍ ତନିୟନ୍ ଡେତେ; ବନ୍ଡ ଆନା, ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍ ନିଣ୍ଡୟ୍ବରନ୍ ବର୍ତନେ, ଆନିନ୍ଆଡଙ୍ କେମାନ୍ ତନିୟନ୍ ଅଃଡ୍ଡେଏ ।”
11 “நீங்கள் ஜெப ஆலயத்திற்கும், ஆளுநர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் முன்பாக கொண்டுவரப்படும்போது, உங்கள் சார்பாக எவ்விதம் வாதாடுவது என்றோ, என்னத்தைச் சொல்வது என்றோ கவலைப்படாதிருங்கள்.
“ଆରି, ଅଙ୍ଗା ଆଡିଡ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ରନୁକ୍କୁସିଙନ୍, ରାଜ୍ୟପାଡ଼ନ୍ ଡ ସୋଡ଼ାମରଞ୍ଜି ଆମଙ୍ବା ଓରୋଙ୍ତବେଞ୍ଜି, ତିଆଡିଡ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଡନେଲୋଙ୍ବେନ୍ ଏଙ୍ଗାଡାଲେ ଇନି ଗାମ୍ଲେ ଏଜାଲଙ୍ତେ ଆରି ଇନି ଏଗାମ୍ତେ ତିଆସନ୍ ଏଇଃୟମ୍ଡଙ୍ ।
12 ஏனெனில், அந்த வேளையில் என்ன சொல்லவேண்டும் என்பதை, உங்களுக்குப் பரிசுத்த ஆவியானவரே போதிப்பார்” என்றார்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଇନି ଗନାମନ୍ ଡେତେ, ତି ଆ ବନେଡ଼ା ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଞଙ୍ଞଙ୍ତବେନ୍ ।”
13 கூடியிருந்த மக்களில் ஒருவன் இயேசுவிடம், “போதகரே, எங்கள் உரிமைச்சொத்தை என்னுடன் பிரித்துக்கொடுக்கும்படி, என் சகோதரனுக்குச் சொல்லும்” என்றான்.
ମନ୍ରାଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ସିଲଡ୍ ଅବୟ୍ନେ ଜିସୁନ୍ଆଡଙ୍ ବରେନ୍, “ଏ ଞନଙ୍ତିୟ୍ମର୍, ଆପେୟ୍ଞେନ୍ ଆନର୍ଜେଜି ଞେନ୍ ବୟନ୍ ବନ୍ତାନେନ୍ ଆସନ୍ ବୋଞାଙ୍ଞେନ୍ଆଡଙ୍ ବରା ।”
14 அதற்கு இயேசு அவனிடம், “நண்பனே, உங்களுக்கு இடையில் என்னை நீதிபதியாகவும், நடுவராகவும் நியமித்தது யார்?” என்று கேட்டார்.
ବନ୍ଡ ଜିସୁନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ଜାଲଙେନ୍, “ଏ ଗଡ଼ି, ଅମଙ୍ଲୋଙ୍ବେନ୍ ପନ୍ସୁଆତିନ୍ ଆସନ୍ ଡ ବନ୍ତାଡିଞନ୍ ଆସନ୍ ଆନା ଞେନ୍ଆଡଙ୍ ତବ୍ନଙ୍ଲିଁୟ୍?”
15 பின்பு இயேசு அவர்களிடம், “எச்சரிக்கையாயிருங்கள்! எல்லா விதமான பேராசைகளைக் குறித்தும் கவனமாய் இருங்கள்; ஒரு மனிதனின் வாழ்க்கை, அவனிடம் இருக்கும் உடைமைகளின் நிறைவில் தங்கியிருப்பதில்லை” என்றார்.
ଆରି, ଜିସୁନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ଗିୟ୍ଡମ୍ନାବା, ଅଡ଼୍କୋନ୍ ଆ ଗନିୟ୍ମଡ୍ ସିଲଡ୍ ଆମ୍ୱେନ୍ଡମ୍ ସବ୍ଙାୟ୍ନାବା, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅବୟ୍ ମନ୍ରାନ୍ ଆମଙ୍ ଡିଅଙ୍ଗା ଜାକିଁୟ୍ ଅନର୍ଜେନ୍ ଡକୋଏନ୍ ଡେନ୍, ତି ବାତ୍ତେ ଆନିନ୍ ପରାନ୍ନାନ୍ ଅଃଞାଙେ ।”
16 மேலும் அவர், அவர்களுக்கு இந்த கதையைச் சொன்னார்: “ஒரு செல்வந்தனுக்குச் சொந்தமான நிலம் நல்ல விளைச்சலைக் கொடுத்தது.
ଆରି, ଜିସୁନ୍, ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ଅବୟ୍ ଅନବ୍ଜଙ୍ବରନ୍ ବରେଞ୍ଜି, “ଅବୟ୍ ଗମାଙ୍ମରନ୍ ଆ ବସେଙ୍ଲୋଙ୍ ଗୋଗୋୟ୍ ଜନ୍ରୋମନ୍ ଏଲେନ୍ ।
17 அவன், ‘நான் என்ன செய்வேன்? விளைந்த தானியத்தை பத்திரப்படுத்த இடம் போதாதே’ என்று தனக்குள்ளே நினைத்துக் கொண்டான்.
ସିଲତ୍ତେ ତି ମନ୍ରାନ୍ ଇୟମେନ୍ ‘ଞେନ୍ ଇନି ଏଙ୍ଗାଆୟ୍? ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଜନ୍ରୋମ୍ଞେନ୍ ତର୍ତୁମ୍ଲେ ଡନକ୍କୋନ୍ ଆସନ୍ ଜାଗା ତଡ୍ ।’
18 “பின்பு அவன், ‘நான் ஒன்றுசெய்வேன்; என்னுடைய களஞ்சியங்களை இடித்து, அவற்றைப் பெரிதாகக் கட்டுவேன். அங்கே என்னுடைய எல்லாத் தானியங்களையும், பொருட்களையும் சேமித்து வைத்து.
ଆରି, ଆନିନ୍ ଗାମେନ୍, ‘ଞେନ୍ ଏନ୍ନେଲେ ଲୁମ୍ତାୟ୍; ମରଁୟ୍ଞେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ପୁପ୍ପୁଃଡାଲେ ସୋଡ଼ାରାଡମ୍ ଅମ୍ମେଲେ ଗୁତାୟ୍, ଆରି ତେତ୍ତେ ଜନ୍ରୋମ୍ଞେଞ୍ଜି ଡ ଜନବ୍ଞେଞ୍ଜି ତର୍ତୁମ୍ଡାଲେ ଡକ୍କୋତାୟ୍,
19 பின்பு நான், என் ஆத்துமாவிடம், உனக்கென்று பல வருடங்களுக்குப் போதுமான நல்ல பொருட்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. நீ வாழ்வை அனுபவி; சாப்பிட்டு, குடித்து மகிழ்ந்திரு என்று சொல்வேன்’ என்றான்.
ଆରି ଞେନ୍ ପରାନ୍ନାଞେନ୍ଆଡଙ୍ ବର୍ତାୟ୍, ଏ ପରାନ୍ନା, ଗୋଗୋୟ୍ ବର୍ସେଙ୍ ଆସନ୍ ଜନ୍ରୋମଞ୍ଜି ଆତର୍ତୁମ୍, ତିଆସନ୍ ଲୋଲୋନା, ଗାଆ, ଜୋମା, ସର୍ଡାନା!’
20 “அப்பொழுது இறைவன் அவனிடம், ‘மூடனே! இந்த இரவிலேயே உன் உயிர் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும். அப்பொழுது, நீ உனக்கென்று சேமித்து வைத்தவைகள் யாருக்கு சொந்தமாகும்?’ என்று கேட்டார்.
ବନ୍ଡ ଇସ୍ୱରନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବରେନ୍, ‘ଏ ଏର୍ବୁଡ୍ଡି, ଲଙେ ଆ ତଗଲ୍ ଅମଙ୍ନମ୍ ସିଲଡ୍ ପରାନ୍ନାନମ୍ ପନାଙନ୍ ଡେତେ; ସିଲତ୍ତେ ଆମନ୍ ଇନିଜି ଇନିଜି ଆମନ୍ଡମ୍ ଆସନ୍ ଡକ୍କୋଏନ୍ ତି ଅଡ଼୍କୋନ୍ ଆନାଆତେ ଡେତେ?’”
21 “தனக்கென்று பொருட்களைக் குவித்து வைத்தும், இறைவனில் செல்வந்தனாய் இராதவனின் நிலைமை இவ்விதமாகவே இருக்கிறது” என்றார்.
ଜିସୁନ୍ ଆରି ବର୍ରନେ, “ଆନା ଆନିନ୍ଡମ୍ ଆସନ୍ ରନ୍ନାନ୍ ଡକ୍କୋତେ, ବନ୍ଡ ଇସ୍ୱରନ୍ ଆ ଗନିୟ୍ଗିୟ୍ଲୋଙ୍ ଆନିନ୍ ଗମାଙ୍ମର୍ ତଡ୍, ଆନିନ୍ ଆସନ୍ କେନ୍ ଅନ୍ତମ୍ ଡେତେ ।”
22 பின்பு இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவோம் என்று உங்கள் வாழ்வைக்குறித்தும் அல்லது எதை உடுப்போம் என உங்கள் உடலைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் உங்கள் உயிர் உணவைவிடவும், உங்கள் உடல் உடையைவிடவும் முக்கியமானது.
ଜିସୁନ୍ ଆ ଞଙ୍ନେମରଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ତିଆସନ୍ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଇନି ଏଜୋମ୍ତେ, ଏନ୍ନେଲେ ଇୟମ୍ଡାଲେ, ପରାନ୍ନାବେନ୍ ଆସନ୍, ଅଡ଼େ ଇନି ଏଜିଜିତନେ, ଏନ୍ନେଲେ ଇୟମ୍ଡାଲେ ଡଅଙ୍ବେନ୍ ଆସନ୍ ନିୟ୍ ଏଇଃୟମ୍ଡଙେ ।
23 ஏனெனில், வாழ்க்கை உண்பதிலும், உடுத்துவதிலும் மட்டுமல்ல; அதிலும் மேலான காரியங்களைக் கொண்டுள்ளது.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଜନୋମନ୍ ସିଲଡ୍ ପରାନ୍ନାନ୍ ଆରି ସିନ୍ରିନ୍ ସିଲଡ୍ ଡଅଙନ୍ ସୋଡ଼ା ।
24 காகங்களைக் கவனித்துப் பாருங்கள்: அவை விதைக்கிறதுமில்லை, அறுவடை செய்கிறதுமில்லை. அவற்றிற்கு களஞ்சிய அறையோ, பண்டகசாலையோ இல்லை; ஆனால், இறைவன் அவற்றிற்கு உணவு கொடுக்கிறார். பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ மதிப்பு வாய்ந்தவர்களாய் இருக்கிறீர்களே!
କାକାଞ୍ଜି ଆ ବର୍ନେ ଇୟମ୍ଲେ ଗିୟ୍ବା, ଆନିଞ୍ଜି ଅଃବ୍ବୁଡେଜି କି ଅଃଗଡେଜି, ଆରି ଆନିଞ୍ଜି ଆସନ୍ ଜନ୍ରୋମ୍ସିଂ ତଡ୍ କି ତନିଲ୍ ତଡ୍, ଆରି ଇସ୍ୱରନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଜନୋମନ୍ ତିୟ୍ତଜି; ଆମ୍ୱେଞ୍ଜି ଅନ୍ତିଡଞ୍ଜି ସିଲଡ୍ ଡିଅଙ୍ଗା ଆ ଗୋଗୋୟ୍ ସତଙ୍!
25 கவலைப்படுவதால், உங்களில் யார் தன் வாழ்நாளில் ஒருமணி நேரத்தைக் கூட்டுவான்?
ଆରି, ଅମଙ୍ଲୋଙ୍ବେନ୍ ସିଲଡ୍ ଆନା ଇୟମ୍ଡାଲେ ଅନମେଙନ୍ ଆସନ୍ ବସନ୍ତି ଅବ୍ଗୋଗୋୟ୍ଲେ ରପ୍ତିଏ?
26 இல்லையே! இந்தச் சிறிய காரியத்தையே உங்களால் செய்யமுடியாதிருக்கிறதே. அப்படியிருக்க, பெருங்காரியங்களைக் குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?
ତିଆସନ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ସନ୍ନା କାବ୍ବାଡ଼ାନ୍ ନିୟ୍ ଲୁମ୍ଲେ ଏଃର୍ରପ୍ତିଲୋ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆନ୍ନା କାବ୍ବାଡ଼ାନ୍ ଆସନ୍ ଇନିବା ଏଇଃୟମ୍ତେ?
27 “காட்டு மலர்கள் எப்படி வளர்கின்றன என்று கவனித்துப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்கிறதுமில்லை; ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப்போல் உடை உடுத்தியதில்லை.
ତାର୍ବାଞ୍ଜି ଆ ବର୍ନେ ଇୟମ୍ଲେ ଗିୟ୍ବା, ତିଆତେଜି ଏଙ୍ଗାଲେ ତାଡ଼େରନ୍ ଅଃତ୍ତବେଜି କି ଅଃବ୍ବୁବୁଡ୍ନେଜି; ଡେଲୋଜନଙ୍ଡେନ୍ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ସୋଲମନ୍ ରାଜାନ୍ ଆମଙ୍ କେନ୍ଆତେଜି ଅଡ଼୍କୋନ୍ ଡକୋଏନ୍ ଜନଙ୍, ଆନିନ୍ କେନ୍ ଅନ୍ତମ୍ ଅବୟ୍ ଜାକିଁୟ୍ ଅଃର୍ରଲନେ ।
28 விசுவாசக் குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு நெருப்பிலே எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே, இறைவன் இவ்வாறு உடுத்துவாரானால், உங்கள் பிதா உங்களுக்கு எவ்வளவு அதிகமாய் அவர் உங்களுக்கு உடுத்துவிப்பார்.
ବନ୍ଡ ଅଙ୍ଗା ଅଜିଙ୍ ପଡ଼ିଆଲୋଙନ୍ ଲଙେ ଡକୋ, ଆରି ବିଅଡ଼େଃ କୋଡ଼ାତୁଡ୍ଲୋଙନ୍ ପନିଡନ୍ ଡେତେ, ତି ଆଜିଙ୍ ଇସ୍ୱରନ୍ ଡିୟ୍ତେ ଆ ମନଙ୍ ଗବ୍ଡେଲ୍ତେ, ଏ ଅସୋୟ୍ ଡର୍ନେମର୍ଜି, ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଡିଅଙ୍ଗା ଆ ଗୋଗୋୟ୍ ସିନ୍ରିନ୍ ଅରଃ ତିୟ୍ବେନ୍!”
29 விசுவாசம் குறைந்தவர்களே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம்; என்று அவைகளிலேயே உங்கள் மனதைச் செலுத்தி, அவற்றைக்குறித்து கவலைப்படாதிருங்கள்.
“ଆରି, ଇନି ଏଜୋମ୍ତେ ଆରି ଇନି ଏଗାତେ ତିଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ସାୟ୍ଲେ ଏବୁଲ୍ଲେଡଙ୍ କି ଏଇଃୟମ୍ଡଙ୍ ।
30 ஏனெனில், இறைவனை அறியாதவர்கள் இவைகளையே தேடி ஓடுகிறார்கள். ஆனால் உங்கள் பிதாவோ, இவை எல்லாம் உங்களுக்குத் தேவை என அறிந்திருக்கிறார்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଏର୍ଡର୍ନେମରଞ୍ଜି ପୁର୍ତିଲୋଙନ୍ କେନ୍ଆତେ ସାୟ୍ଲେ ବୁଲ୍ଲେତଜି; ବନ୍ଡ କେନ୍ଆତେଜି ଅଡ଼୍କୋନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍ ସନାୟ୍ସାୟ୍ ତିଆତେ ଆପେୟ୍ବେନ୍ ଜନା ।
31 எனவே முதலாவதாக இறைவனுடைய அரசைத் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குகூடக் கொடுக்கப்படும்.
ଆର୍ପାୟ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଆ ରାଜ୍ୟନ୍ ସାୟ୍ବା, ଆରି କେନ୍ଆତେଜି ନିୟ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ତନିୟନ୍ ଡେତେ ।”
32 “சிறு மந்தையே, பயப்படாதே. ஏனெனில், உங்கள் பிதா தமது அரசை உங்களுக்குக் கொடுக்கப் பிரியமாய் திட்டமிட்டிருக்கிறார்.
“ଏ ସନ୍ନା ଗୋସ୍ସା, ବତଙ୍ଡଙ୍ବେନ୍, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆପେୟ୍ବେନ୍ ତି ଆ ରାଜ୍ୟ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ଲଡୟ୍ତେ ।
33 உங்கள் உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடுங்கள். இவ்விதமாய் பழையதாய்ப் போகாத பணப்பைகளையும் உங்களுக்கென உண்டாக்கிக்கொள்ளுங்கள். குறையாத செல்வத்தையும் பரலோகத்தில் உங்களுக்கென ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே திருடர் நெருங்கி வருவதுமில்லை, பூச்சிகள் அவற்றை அழிப்பதுமில்லை.
ଆମ୍ୱେନ୍ଆତେ ଇନି ଡକୋ ତିଆତେ ତମ୍ଲେ ଡୋଲେୟ୍ମରଞ୍ଜିଆଡଙ୍ ତିୟ୍ବାଜି; ଅଙ୍ଗାତେ ଅଃନ୍ନଞିଡେ, ତିଅନ୍ତମ୍ ଆ ମୁନା ଆମ୍ୱେଞ୍ଜି ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଆସନ୍ ଅବ୍ଜାଡାବା; ଅଙ୍ଗାଲୋଙ୍ ରାଉମରନ୍ ଅଡମନ୍ ଇୟ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ ଆରି ବୋବ୍ବୋଡନ୍ ଅଃଜ୍ଜୋମେ, ତିଅନ୍ତମ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ରନ୍ନା ରୁଆଙ୍ଲୋଙନ୍ ତର୍ତୁମ୍ବା,
34 ஏனெனில், உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଙ୍ଗାଲୋଙ୍ ଜନ୍ରୋମ୍ବେନ୍ ଡକୋତେ, ମନ୍ନବେନ୍ ନିୟ୍ ତେତ୍ତେ ଡକୋତନେ ।”
35 “பணிசெய்வதற்கு ஆயத்தமாய், உங்கள் உடைகளை உடுத்திக்கொள்ளுங்கள். எரிந்து கொண்டிருக்கும்படி, உங்கள் விளக்குகளை ஏற்றி வையுங்கள்.
“କୁଣ୍ଡୁବ୍ବେନ୍ ଆରେଡ୍ଡୁବ୍ ଡକୋନେତୋ ଆରି ପିଙ୍କନ୍ ଆତର୍ତର୍ ଡକୋନେତୋ ।
36 திருமண விருந்திலிருந்து திரும்பிவரும் தங்கள் எஜமானுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேலைகாரர்களைப் போலிருங்கள். அப்படியிருந்தால்தான், எஜமான் வந்து கதவைத் தட்டும்போது, உடனே அவர்கள் கதவை அவனுக்காகத் திறக்க முடியும்.
ଆରି, ସାଉକାରନ୍ ବିବାନ୍ ସିଲଡ୍ ୟର୍ରନ୍ ସନଙନ୍ ଡେବାଡେବା ଅବ୍ତାଡ଼ନ୍ ଆନିନ୍ ଆସନ୍ ସନଙନ୍ ରୋରୋନ୍ ଆସନ୍ ଅଙ୍ଗା ମନ୍ରାଜି ଜଗେଲେ ଡକୋତଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଅନ୍ତମ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଡକୋନାବା ।
37 எஜமான் வரும்போது, அவனுடைய வேலைக்காரர் விழிப்பாயிருப்பதை அவன் கண்டால், அது அவர்களுக்கு நல்லது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எஜமான் உடையை உடுத்திக்கொண்டு, தன் வேலைக்காரர்களைச் சாப்பாட்டுப் பந்தியில் உட்காரச்செய்து, தானே வந்து அவர்களுக்குப் பணிசெய்வான்.
ସାଉକାରନ୍ ଜିର୍ରେ ଅଙ୍ଗା ଆ କମ୍ୱାରିମର୍ଜି ଆଜଗେଜି ଇୟ୍ତାୟ୍ ଗିଜେଜି ଆନିଞ୍ଜି ସନେନ୍ସେନ୍, ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ବର୍ତବେନ୍, ଆନିନ୍ ରେଡ୍ଡୁବ୍ଡାଲନ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ତଙ୍କୁମ୍ଡାଲେ ଆମଙ୍ବାଞ୍ଜି ଜିର୍ରେ ଇୟ୍ତାୟ୍ ରୋଜୋମେଜି ।
38 அந்த எஜமான் இரவு ஒன்பது மணிக்கு அல்லது நள்ளிரவு வந்தாலும், அவனுடைய வேலையாட்கள் ஆயத்தமாயிருப்பதை அவன் காண்பானானால், அது அவர்களுக்கு நல்லது.
ଆରି, ଆନିନ୍ ତୁଙାର୍ ତଗଲ୍ଇଂ ଅଡ଼େ କମ୍ସିମୋଲ୍ ବେଡ଼ାନ୍ ନିୟ୍ ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଏତ୍ତେଲେ ଇୟ୍ଲାୟ୍ ଗିଜେଜି ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ତି ଆ କମ୍ୱାରିମର୍ଜି ସନେନ୍ସେନ୍ ।
39 இதை விளங்கிக்கொள்ளுங்கள்: திருடன் எத்தனை மணிக்கு வருவான் என்று வீட்டின் சொந்தக்காரன் அறிந்திருந்தால், தன் வீட்டை திருடன் உடைத்து நுழையாதபடி பார்த்துக்கொள்வானே.
ବନ୍ଡ କେନ୍ଆତେ ଜନାବେନ୍ତୋ, ଅଙ୍ଗାବେଡ଼ା ରାଉମରନ୍ ଜିର୍ତାୟ୍, ତିଆତେ ଅସିଂମରନ୍ ଜନାଏନ୍ ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଆନିନ୍ ଆସିଙନ୍ ଆ ପରୁଆ ଅନ୍ନବ୍ପାଲ୍ପାଲେ ।
40 நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனெனில் மானிடமகனாகிய நான் நீங்கள் எதிர்பாராத நேரத்திலே வருவேன்” என்றார்.
ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍ ଅବ୍ଜାଡାଲନ୍ ଡକୋନାୟ୍ବା, ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଅଙ୍ଗାବେଡ଼ା ଆନିନ୍ ଜିର୍ତାୟ୍ ଗାମ୍ଲେ ଆମ୍ୱେନ୍ ଏଃନ୍ନବ୍ଡିସୟେ, ତି ଆ ବନେଡ଼ା ମନ୍ରା ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଜିର୍ତାୟ୍ ।”
41 அப்பொழுது பேதுரு அவரிடம், “ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குத் தான் சொல்கிறீரோ? அல்லது எல்லோருக்கும் சொல்கிறீரோ?” என்று கேட்டான்.
ସିଲତ୍ତେ ପିତ୍ରନ୍ ବର୍ରନେ, “ଏ ପ୍ରବୁ, ଆମନ୍ ଇନ୍ଲେଞ୍ଜିଆଡଙ୍ ତୁମ୍ ଅଡ଼େ ଅଡ଼୍କୋଞ୍ଜିଆଡଙ୍ କେନ୍ ଅନବ୍ଜଙ୍ବରନ୍ ବର୍ତଲେନ୍?”
42 கர்த்தர் அதற்கு மறுமொழியாக, “உண்மையும் ஞானமும் உள்ள நிர்வாகி யார்? அந்த எஜமான், அவனையே தன்னுடைய வேலைக்காரருக்கு ஏற்றவேளையில் உணவைப் பகிர்ந்து கொடுக்கும்படி, அவர்களுக்கு மேலாக வைப்பான்.
ପ୍ରବୁନ୍ ଗାମେନ୍, “ତିଆସନ୍ ଗିୟ୍ଲେ ଓୟୋଙନ୍, ଆ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ମନଙ୍ଡମ୍ ଗାଗାନେନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ସାଉକାରନ୍ ଅଙ୍ଗା ମନ୍ରାଆଡଙ୍ ତବ୍ନଙ୍ତେ, ତିଅନ୍ତମ୍ ଡର୍ନେଡମ୍ ଆରି ବୁଡ୍ଡିଡମ୍ ଗୁମୁସ୍ତାନ୍ ଆନା?
43 தனது எஜமான் திரும்பி வரும்போது, அவ்வாறே செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
ସାଉକାରନ୍ ୟର୍ରନ୍ ଅଙ୍ଗା କମ୍ୱାରିମର୍ ତିଅନ୍ତମ୍ ଆର୍ଲୁମ୍ତେନ୍ ଇୟ୍ତାୟ୍ ଗିଜେ, ଆନିନ୍ ସନେନ୍ସେନ୍ ।
44 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அந்த எஜமான் இந்த நிர்வாகியைத் தனது உடைமைகள் எல்லாவற்றிற்கும் பொறுப்பாக வைப்பான்.
ଞେନ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଆନିନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆନର୍ଜେନ୍ ଆ ତୋଣ୍ଡୋଲୋଙ୍ ତି କମ୍ୱାରିମରନ୍ଆଡଙ୍ ତବ୍ନଙ୍ତେ ।
45 ஆனால் அந்த நிர்வாகி, ‘என் எஜமான் வருவதற்கு நீண்டகாலம் ஆகிறதே’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, தன் பொறுப்பிலுள்ள வேலைக்காரர்களையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், சாப்பிட்டு, குடித்து, வெறிகொள்ளவும் தொடங்கினால்,
ବନ୍ଡ ତି ଆ କମ୍ୱାରିମର୍ ସାଉକାରଞେନ୍ ଆ ଜନିର୍ ଡିଙ୍ତେ ଗାମ୍ଲେ ଅବ୍ଡିସୟ୍ଲେ, କମ୍ୱାରିମରଞ୍ଜି ଡ କମ୍ୱାରିବଜଞ୍ଜିଆଡଙ୍ ତନିଡନ୍ ଆସନ୍ ଉତନେ ଆରି ଗାଲେ ଜୋମ୍ଲେ ଆ ବନ୍ନୁଲନ୍ ଡକୋତନେ,
46 அந்த வேலைக்காரனின் எஜமான் அவன் எதிர்பாராத ஒரு நாளிலும், அவன் அறிந்திராத வேளையிலும் வருவான். எஜமான் வந்து அவனைப் பயங்கரமான தண்டனைக்குள்ளாக்கி, உண்மையற்றவர்களுக்குரிய இடத்திலே அவனைத் தள்ளிவிடுவான்.
ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଅଙ୍ଗା ଡିନ୍ନା ଆନିନ୍ ଜଗେଲେ ଅଃଡ୍ଡକୋନେ ଆରି ଅଙ୍ଗାବେଡ଼ା ଆନିନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଜନାଏ, ତି ଆ ଡିନ୍ନା ଆରି ତି ଆ ବନେଡ଼ା ସାଉକାରନ୍ ଜିର୍ତାୟ୍, ଆରି ସାଉକାରନ୍ ଆନିନ୍ଆଡଙ୍ ବାଗୁ ଡେୟ୍ଡେୟ୍ ଅମ୍ମେଲେ, ଏର୍ଡର୍ନେମରଞ୍ଜି ଆମଙ୍ଲୋଙ୍ ମାୟ୍ତେ ।”
47 “வேலைக்காரன் தனது எஜமானின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமாகாமலும், தனது எஜமான் விரும்புவதை செய்யாமலும் இருந்தால், அவன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
“ଆରି ଅଙ୍ଗା କମ୍ୱାରିମର୍ ଆ ସାଉକାରନ୍ ଆ ଇସ୍ସୁମ୍ ଜନାଡାଲେ ଅଃନ୍ନବ୍ଜାଡାନେ ଆରି ସାଉକାରନ୍ ଆ ଇସ୍ସୁମ୍ ଅନ୍ତମ୍ କାବ୍ବାଡ଼ାନ୍ ଅଃଲ୍ଲୁମେ, ଆନିନ୍ ଗୋଗୋୟ୍ ତନିଡନ୍ ଞାଙ୍ତେ ।
48 ஆனால் எஜமானின் விருப்பத்தை அறியாதவனாய், தண்டனைக்குரிய காரியங்களைச் செய்கிறவனோ, சில அடிகளே அடிக்கப்படுவான். அதிகமாய் கொடுக்கப்பட்ட ஒவ்வொருவரிடத்திலிருந்தும் அதிகமாய்க் கேட்கப்படும்; அப்படியே அதிகம் கொடுக்கப்பட்டவனிடமிருந்து, இன்னும் அதிகமாய் கேட்கப்படும்.
ବନ୍ଡ ଆନା ଏର୍ଜନନାନ୍ ତନିଡ୍ଜୋମନ୍ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମ୍ତେ, ଆନିନ୍ ଅସୋୟ୍ ତନିଡନ୍ ଞାଙ୍ତେ । ଆନାଆଡଙ୍ ଗୋଗୋୟ୍ ଆତିୟ୍ତିୟ୍, ଆମଙନ୍ ସିଲଡ୍ ଗୋଗୋୟ୍ ବନେଡନ୍ ଡେତେ; ଆରି ମନ୍ରାଞ୍ଜି ଆନା ଆମଙ୍ ଗୋଗୋୟ୍ ସୋରୋପ୍ପାୟେଞ୍ଜି, ଆମଙନ୍ ସିଲଡ୍ ଗୋଗୋୟ୍ ଡାବ୍ବିତଜି ।”
49 “பூமியிலே நெருப்பைப்போட வந்தேன். அது இப்பொழுதே எரியத் தொடங்கியிருக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
“ଞେନ୍ ପୁର୍ତିଲୋଙନ୍ ତଗୋନ୍ ସନେଡନ୍ ଆସନ୍ ଇୟ୍ଲାୟ୍, ତିଆତେ ନମି ଡୁଡୁଏନ୍ନି ଡେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଞେନ୍ ଆରି ଇନି ଅଲ୍ସାଜିଁୟ୍?
50 ஆனால், நான் கட்டாயமாக பெறவேண்டிய திருமுழுக்கு ஒன்று இருக்கிறது. அது நிறைவேறும்வரை, நான் எவ்வளவு மனக்கஷ்டத்திற்கு உள்ளாகியிருக்கிறேன்.
ବନ୍ଡ ଞେନ୍ ଅବୟ୍ ତବ୍ବୁବ୍ଡାଲୋଙନ୍ ତବ୍ବୁବ୍ଡାତନାୟ୍; ଆରି ତିଆତେ ଅଣ୍ଡ୍ରଙ୍ ସୁଜ୍ଜେଏନ୍ ଜାୟ୍ ଞେନ୍ ଏଙ୍ଗାଡାଲେ ଏର୍ବନ୍ତଙନ୍ ଡକୋନାୟ୍!
51 பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக நான் வந்தேன் என்று நீங்கள் எண்ணுகிறீர்களோ? இல்லை, நான் உங்களுக்குச் சொல்கிறேன், பிரிவினையை கொண்டுவரவே வந்தேன்.
ଞେନ୍ ପୁର୍ତିଲୋଙନ୍ ସୟୁନ୍ ପଙ୍ ପାଙ୍ଲାୟ୍ ଗାମ୍ଲେ ଆମ୍ୱେଞ୍ଜି ଏବ୍ଡିସୟ୍ତେ? ଇଜ୍ଜା ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଇଜ୍ଜା, ଆର୍ପାୟ୍ ତରଙ୍ଆନ୍ନା ଅନମ୍ମେନ୍ ଆସନ୍ ଇୟ୍ଲାୟ୍ ।
52 இப்போதிருந்தே, ஐந்து பேருள்ள ஒரு குடும்பத்திலே, ஒருவருக்கு எதிராய் ஒருவர் பிரிந்திருப்பார்கள். மூன்றுபேர் இரண்டு பேருக்கு எதிராகவும், இரண்டுபேர் மூன்றுபேருக்கு எதிராகவும் பிரிந்திருப்பார்கள்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ନମିନ୍ତାନ୍ ମିୟ୍ଲିନ୍ ମନ୍ଲୟ୍ ମନ୍ରା ଡକୋଏଞ୍ଜି, ବାଗୁ ମନ୍ରା ୟାଗି ମନ୍ରା ଆ ବିରୁଦଲୋଙ୍, ଆରି ୟାଗି ମନ୍ରା ବାଗୁ ମନ୍ରା ଆ ବିରୁଦଲୋଙ୍ ତରଙ୍ଆନ୍ନା ଡେତଜି ।
53 தகப்பனுக்கு எதிராக மகனும், மகனுக்கு எதிராக தகப்பனும், தாய்க்கு எதிராக மகளும், மகளுக்கு எதிராகத் தாயும், மருமகளுக்கு எதிராக மாமியாரும், மாமியாருக்கு எதிராக மருமகளும் பிரிந்திருப்பார்கள்” என்றார்.
ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍ ଆପେୟନ୍, ଆପେୟନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍ ଡାଙ୍ଗଡ଼ାଅନନ୍, ଡାଙ୍ଗଡ଼ିଅନନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍ ଅୟୋଙନ୍, ଅୟୋଙନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍ ଡାଙ୍ଗଡ଼ିଅନନ୍, କଉନନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍ କିନାରନ୍, କିନାରନ୍ ଆ ବିରୁଦଲୋଙ୍ କଉନନ୍ ତରଙ୍ଆନ୍ନା ଡେତଜି ।”
54 மேலும் இயேசு கூடியிருந்த மக்களிடம் சொன்னதாவது: “மேற்கிலிருந்து ஒரு மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, நீங்கள் உடனே, ‘இதோ மழை பெய்யப் போகிறது’ என்கிறீர்கள், அப்படியே மழையும் பெய்கிறது.
ଜିସୁନ୍ ଆରି ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ବରେଞ୍ଜି, “ବରୁବ୍ୟୋଙ୍ଗଡ୍ ମେଗନ୍ ଡୋଲନ୍ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଗିୟ୍ଲୋଙ୍ ଗିୟ୍ଲେ ସିଲତ୍ତେମା ତରୁବନ୍ ଅଡ଼ୋତାୟ୍ ଏଗାମ୍ତେ, ଆରି ଏତ୍ତେଲେମା ଗଡେଲ୍ତେ ।
55 தென்காற்று வீசும்போது, ‘இதோ வெப்ப காலம் வரப்போகிறது’ என்கிறீர்கள். அப்படியே அது வெப்பமாய் இருக்கிறது.
ଆରି ଅର୍ଜଡ଼ୋମ୍ଗଡ୍ ରିଙ୍ଗେନ୍ ଇଡେନ୍ ଡେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଗିୟ୍ଲୋଙ୍ ଗିୟ୍ଲେ ଗୋଗୋୟ୍ ଡାଗାତେ ଏଗାମ୍ତେ ଆରି ଏତ୍ତେଲେମା ଗଡେଲ୍ତେ ।
56 வேஷக்காரர்களே! பூமியின் தோற்றத்திற்கும், ஆகாயத்தின் தோற்றத்திற்கும் விளக்கம் அளிக்க அறிந்திருக்கிறீர்களே. ஆனால் தற்போதுள்ள இந்த காலத்தையோ, நீங்கள் அறியாமல் இருப்பது எப்படி?
ଏ ଇସ୍କତ୍ତାମର୍ଜି, ଆମ୍ୱେଞ୍ଜି ରୁଆଙନ୍ ଡ ପୁର୍ତିନ୍ ଆରମ୍ମଡ୍ଜି ରପ୍ତି ଏଜନାତେ ବନ୍ଡ ନମିଜି ଆରମ୍ମଡ୍ଜି ଅଡ଼୍କୋନ୍ ଏଙ୍ଗାଡାଲେ ରପ୍ତି ଏଃଜ୍ଜନାଏ?”
57 “சரியானது எது என்று உங்களையே நீங்கள் நிதானிக்காமல் இருக்கிறீர்களே, ஏன்?
“ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି ରମ୍ମଙ୍ ରମ୍ମଙ୍ ଇନିବା ଆଜାଡ଼ି ପନ୍ସୁଆତିନ୍ ଏଃଲ୍ଲୁମେ?
58 நீங்கள் உங்களது பகைவருடன் நீதிபதியிடம் போகும்போது, வழியிலேயே உங்கள் வழக்கைத் தீர்த்துக்கொள்ள முயற்சிசெய்; இல்லையெனில் அவன் உங்களை நீதிபதிக்கு முன்பாக இழுத்துச் செல்லக்கூடும். நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, அதிகாரி உங்களைச் சிறையிலே போடக்கூடும்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ବନେରାବେନ୍ ସରିନ୍ ପନ୍ସୁଆତିମରନ୍ ଆ ମୁକ୍କାବା ଏଜିରେନ୍ ଆଡିଡ୍ ତଙର୍ଲୋଙନ୍ ଆନିନ୍ ସରିନ୍ ମାୟ୍ମାୟ୍ନାବା, ଅସମୟ୍ ଆନିନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ପନ୍ସୁଆତିନ୍ ଆସନ୍ ପନ୍ସୁଆତିମରନ୍ ଆମଙ୍ ଡିଙ୍ଲେ ଓରୋଙ୍ତବେନ୍, ଆରି ପନ୍ସୁଆତିମରନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ସିପ୍ପାୟଞ୍ଜି ଆସିଲୋଙ୍ ସୋରୋପ୍ପାୟ୍ତବେନ୍, ଆରି ସିପ୍ପାୟନ୍ ଆମ୍ୱେନ୍ଆଡଙ୍ ବଣ୍ଡିସିଂଲୋଙନ୍ ପିଡ୍ତବେନ୍ ।
59 உங்களிடத்திலிருக்கும் கடைசிக் காசையும் செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வரமாட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”
ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ବର୍ତବେନ୍, ଆତନିକ୍କି ଡାବ୍ବୋନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଏସୁଜ୍ଜାୟ୍ନେନ୍ ଜାୟ୍ ତେତ୍ତେ ସିଲଡ୍ ଏଙ୍ଗାଲେଜନଙ୍ ଡୁଙ୍ଲନ୍ ଜିର୍ରେ ଏଃର୍ରପ୍ତିଆୟ୍ ।”