< லூக்கா 11 >

1 ஒரு நாள் இயேசு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மன்றாடிக்கொண்டிருந்தார். அவர் மன்றாடி முடித்தபோது, அவருடைய சீடர்களில் ஒருவன் அவரிடம், “ஆண்டவரே, யோவான் தனது சீடருக்கு மன்றாடப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்கு மன்றாடப் போதியும்” என்றான்.
Na rĩrĩ, mũthenya ũmwe Jesũ aarĩ handũ akĩhooya. Rĩrĩa aarĩkirie kũhooya, mũrutwo ũmwe wake akĩmwĩra atĩrĩ, “Mwathani, tũrute kũhooya o ta ũrĩa Johana aarutire arutwo ake.”
2 அப்பொழுது இயேசு அவர்களிடம், “நீங்கள் இப்படியாக மன்றாடுங்கள், “‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உமது பெயர் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய அரசு வருவதாக. உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலும் செய்யப்படுவதாக.
Nake Jesũ akĩmeera atĩrĩ, “Rĩrĩa mũkũhooya, ugagai atĩrĩ: “‘Ithe witũ (ũrĩ Igũrũ), rĩĩtwa rĩaku nĩrĩamũrwo, ũthamaki waku nĩũũke. (Ũrĩa wendete nĩwĩkagwo gũkũ thĩ, o ta ũrĩa gwĩkagwo kũu igũrũ.)
3 எங்கள் அன்றாட ஆகாரத்தை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.
Tũheage o mũthenya irio ciitũ cia gũtũigana.
4 எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும். நாங்களும் எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களுக்கு மன்னிக்கிறோமே. எங்களைச் சோதனைக்கு உட்படப்பண்ணாமல். எங்களைத் தீமையிலிருந்து விடுவியும்,’” என்றார்.
Na ũtũrekere mehia maitũ, o ta ũrĩa o na ithuĩ tũrekagĩra arĩa othe matwĩhagĩria. Na ndũgatũtware magerio-inĩ (no kũhonokia ũtũhonokagie ũũru-inĩ).’”
5 அதற்குப் பின்பு இயேசு அவர்களிடம் சொன்னதாவது, “உங்களில் ஒருவனுக்கு ஒரு நண்பன் இருக்கிறான் என வைத்துக்கொள்வோம். இவன் தன் நண்பனிடம் நள்ளிரவில் போய், ‘நண்பனே, எனக்கு மூன்று அப்பங்களைக் கடனாகக் கொடு.
Agĩcooka akĩmeera atĩrĩ, “Mũndũ ũmwe wanyu angĩkorwo arĩ na mũrata nake athiĩ gwake ũtukũ gatagatĩ amwĩre atĩrĩ, ‘Mũrata wakwa, he mĩgate ĩtatũ,
6 பயணம் செய்துகொண்டிருக்கும் எனது நண்பன் ஒருவன், என் வீட்டிற்கு வந்திருக்கிறான். அவனுக்கு உணவு கொடுக்க என்னிடம் ஒன்றும் இல்லை’ என்று சொன்னால்,
nĩgũkorwo ndĩ na mũrata wakwa wanjeerera, na ndirĩ na kĩndũ gĩa kũmũhe arĩe.’
7 அப்பொழுது உள்ளே இருக்கிற அவன், தன் நண்பனுக்கு மறுமொழியாக, ‘என்னைத் தொந்தரவு செய்யாதே. கதவு ஏற்கெனவே பூட்டப்பட்டுவிட்டது. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். என்னால் எழுந்து, எதையும் உனக்குக் கொடுக்க முடியாது’ என்பானோ?
“Nake mũndũ ũcio ũrĩ nyũmba thĩinĩ amũcookerie atĩrĩ, ‘Tiga gũũthĩĩnia. Nĩndĩkĩtie kũhinga mũrango na tũrĩ toro hamwe na ciana ciakwa. Ndingĩhota gũũkĩra ngũhe mĩgate.’
8 நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் தன்னுடைய நண்பனாய் இருப்பதன் நிமித்தம் எழுந்து அப்பத்தைக் கொடுக்காவிட்டாலும், வெட்கப்படாமல் அவன் கேட்டுக்கொண்டிருப்பதன் நிமித்தமாவது எழுந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான்.
Ngũmwĩra atĩrĩ, o na angĩkorwo ndangĩũkĩra amũhe mĩgate ĩyo nĩ ũndũ wa ũrata-rĩ, no nĩ ũndũ wa ũrĩa amũringĩrĩirie-rĩ, mũndũ ũcio nĩegũũkĩra amũhe kĩrĩa gĩothe abatairio nĩkĩo.”
9 “ஆகவே, நான் உங்களுக்குச் சொல்கிறதாவது: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், கண்டுகொள்வீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது கதவு உங்களுக்குத் திறக்கப்படும்.
“Nĩ ũndũ ũcio ngũmwĩra atĩrĩ: Hooyai na nĩmũkũheo; mathaai na nĩmũkuona; ringaringai mũrango na nĩmũkũhingũrĩrwo.
10 ஏனெனில், கேட்கிற ஒவ்வொருவனும் பெற்றுக்கொள்கிறான்; தேடுகிறவர்கள் கண்டடைகின்றனர்; தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படுகிறது.
Nĩgũkorwo ũrĩa wothe ũhooyaga nĩaheagwo; na ũrĩa ũmaathaga nĩonaga; na ũrĩa ũringaringaga mũrango nĩahingũragĩrwo.
11 “உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடம் மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்?
“Nĩ mũciari ũrĩkũ thĩinĩ wanyu ũngĩĩtio thamaki nĩ mwana wake, nake amũhe nyoka?
12 அல்லது அவன் ஒரு முட்டையைக் கேட்டால், யாராவது அவனுக்குத் தேளைக் கொடுப்பானா?
Kana eetio itumbĩ amũhe kangʼaurũ?
13 தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருக்க, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, பரிசுத்த ஆவியானவரைக் கொடுப்பது எவ்வளவு நிச்சயம்!”
Angĩkorwo inyuĩ, o na mũrĩ ooru, nĩmũũĩ kũhe ciana cianyu iheo njega-rĩ, Ithe wanyu ũrĩa ũrĩ Igũrũ githĩ ndarĩkĩragĩrĩria kũhe Roho Mũtheru kũrĩ arĩa mamũhooyaga!”
14 ஒரு நாள், ஊமையாய் இருந்த ஒருவனிடமிருந்து இயேசு பிசாசை துரத்தினார். பிசாசு பிடித்தவனிலிருந்து பிசாசு வெளியேறியபோது, ஊமையாயிருந்தவன் பேசத் தொடங்கினான். கூடியிருந்த மக்கள் அதைக்கண்டு வியப்படைந்தார்கள்.
Na rĩrĩ, Jesũ nĩaingataga ndaimono yume thĩinĩ wa mũndũ ũtaaragia. Rĩrĩa ndaimono ĩyo yoimire, mũndũ ũcio ũtaaragia akĩaria, nakĩo kĩrĩndĩ kĩa andũ gĩkĩgega.
15 ஆனால் அவர்களில் சிலர், “பிசாசுகளின் தலைவனாகிய பெயல்செபூலினாலேயே இவன் பிசாசுகளைத் துரத்துகிறான்” என்றார்கள்.
No amwe ao makiuga atĩrĩ, “Aingataga ndaimono na hinya wa Beelizebuli ũrĩa mũnene wa ndaimono.”
16 வேறுசிலர் வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று கேட்டு, அவரைச் சோதித்தார்கள்.
Nao andũ angĩ makĩmũgeria, makĩmũũria amaringĩre kĩama kiumĩte igũrũ.
17 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து, அவர்களுக்குச் சொன்னதாவது: “தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கிற எந்த அரசும் பாழாய்ப்போகும். தனக்குத்தானே விரோதமாய் பிளவுபட்டிருக்கிற எந்தக் குடும்பமும் விழுந்துபோகும்.
Jesũ nĩamenyire ũrĩa meciiragia, nake akĩmeera atĩrĩ: “Ũthamaki o wothe ũngĩgayũkana ũũkanĩrĩre guo mwene no ũharagane, nayo nyũmba ĩngĩgayũkana yũkanĩrĩre yo nyene no ĩgwe.
18 சாத்தான் தனக்குத்தானே விரோதமாய்ப் பிளவுபட்டால், எப்படி அவனுடைய அரசு நிலைநிற்கும்? நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறேன் என்று நீங்கள் சொல்வதனாலேயே நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன்.
Angĩkorwo Shaitani nĩagayũkanĩte akeyũkĩrĩra we mwene-rĩ, ũthamaki wake ũngĩkĩĩhaanda atĩa? Ndoiga ũguo tondũ mũroiga atĩ niĩ nyingataga ndaimono na hinya wa Beelizebuli.
19 நான் பெயல்செபூலைக் கொண்டு பிசாசுகளைத் துரத்தினால், உங்களைப் பின்பற்றுகிறவர்கள் யாரைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறார்கள்? அப்படியானால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாய் இருப்பார்கள்.
Ningĩ angĩkorwo niĩ nyingataga ndaimono na hinya wa Beelizebuli-rĩ, arũmĩrĩri anyu maingataga ndaimono na hinya wa ũ? Nĩ ũndũ ũcio-rĩ, acio nĩo makaamũtuĩra ciira.
20 ஆனால், நான் பிசாசுகளை இறைவனுடைய விரலினால் துரத்துகிறேன் என்றால், இறைவனுடைய அரசு உங்களிடம் வந்துள்ளது.
Na rĩrĩ, ingĩkorwo nyingataga ndaimono na hinya wa kĩara kĩa Ngai-rĩ, ũthamaki wa Ngai nĩũũkĩte kũrĩ inyuĩ.
21 “ஒரு பலமுள்ளவன் ஆயுதம் தாங்கியவனாய் தன் வீட்டைக் காவல் காக்கும்போது, அவனுடைய உடைமைகள் பாதுகாப்பாய் இருக்கும்.
“Rĩrĩa mũndũ njamba oya indo ciake ciothe cia mbaara, arangĩre nyũmba yake mwene, indo ciake ciikaraga irĩ ngitĩre.
22 இவனைப் பார்க்கிலும் பலமுள்ள வேறொருவன் வந்து இவனைத் தாக்கி மேற்கொள்ளும்போது, அவன் சார்ந்திருந்த எல்லா ஆயுதங்களையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருட்களையும் பங்கிட்டுக் கொள்வான்.
No rĩrĩ, mũndũ ũngĩ ũrĩ na hinya kũmũkĩra angĩmũtharĩkĩra amũtoorie, nĩamũtunyaga indo ciake cia mbaara iria ehokete, na akagaĩra andũ indo iria akoragwo atahĩte.
23 “என்னோடே இராதவன் எனக்கு எதிராக இருக்கிறான். என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான்.
“Mũndũ ũrĩa ũtarĩ hamwe na niĩ, ũcio nĩ thũ yakwa, na ũrĩa ũtacookanagĩrĩria hamwe na niĩ, ũcio nĩ kũhurunja ahurunjaga.
24 “தீய ஆவி ஒரு மனிதனைவிட்டு வெளியேறும்போது, அது வறண்ட இடங்களில் ஓய்வைத் தேடிப்போகிறது, ஆனாலும் அது அந்த ஓய்வைக் கண்டடையாததால், ‘நான் முன்பு விட்டுவந்த வீட்டிற்கே திரும்பவும் போவேன்’ என்று சொல்லும்.
“Na rĩrĩ, hĩndĩ ĩrĩa ngoma thũku yoima thĩinĩ wa mũndũ, ĩtuĩkanagĩria werũ-inĩ ĩgĩcaria ũhurũko na ĩkawaga. Hĩndĩ ĩyo ĩkoiga atĩrĩ, ‘Nĩngũcooka nyũmba ĩrĩa ndoimire.’
25 அது அந்த வீட்டிற்குத் திரும்பி வரும்பொழுது, அந்த வீடு கூட்டிச் சுத்தப்படுத்தப்பட்டு, ஒழுங்காக இருப்பதைக் காணும்.
Na yacooka ĩgakora nyũmba ĩyo ĩrĩ haate, ĩgathondekwo wega.
26 அப்பொழுது அந்தத் தீய ஆவி போய், தன்னைப் பார்க்கிலும் பொல்லாத ஏழு தீய ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து அவை அங்கேபோய் வசிக்கின்றன. அதனால் அந்த மனிதனின் இறுதி நிலைமை ஆரம்ப நிலைமையைவிட மோசமானதாகும்.”
Hĩndĩ ĩyo ngoma ĩyo thũku ĩkagĩĩra ngoma ingĩ mũgwanja thũku makĩria mayo, igatoonya, igaikara kuo. Naguo mũikarĩre wa mũndũ ũcio ũgathũka gũkĩra wa mbere.”
27 இயேசு இந்தக் காரியங்களைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து ஒரு பெண் குரலெழுப்பி, “உம்மைப் பெற்றெடுத்துப் பாலூட்டிய தாய் ஆசீர்வதிக்கப்பட்டவள்” என்றாள்.
Rĩrĩa Jesũ aaragia maũndũ maya-rĩ, mũndũ-wa-nja warĩ gatagatĩ-inĩ ga kĩrĩndĩ akĩanĩrĩra na mũgambo mũnene, akiuga atĩrĩ, “Kũrathimwo nĩ maitũguo ũrĩa wagũciarire na agĩkuongithia.”
28 அவர் அதற்குப் பதிலாக, “ஆம்; ஆனால், இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படிகிறவர்களே, அதிலும் மேலாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
Nake Jesũ agĩcookia atĩrĩ, “Kũrathimwo nĩ arĩa maiguaga kiugo kĩa Ngai na magagĩathĩkĩra.”
29 மக்கள் இன்னும் அதிகமாய்க் கூடிவந்தபோது, இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “இவர்கள் ஒரு கொடிய தலைமுறையினர். இவர்கள் ஒரு அற்புத அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனால், இவர்களுக்கு யோனாவின் அடையாளத்தைத் தவிர, வேறு எதுவும் கொடுக்கப்படுவதில்லை.
Na rĩrĩa kĩrĩndĩ kĩa andũ kĩongererekire-rĩ, Jesũ akiuga atĩrĩ, “Rũrũ nĩ rũciaro rwaganu. Rũũragia rũringĩrwo kĩama, no gũtirĩ kĩama rũkaringĩrwo tiga o kĩrĩa kĩaringĩirwo Jona.
30 நினிவே பட்டணத்தைச் சேர்ந்தவர்களுக்கு யோனா அடையாளமாய் இருந்ததுபோல, இந்தத் தலைமுறையினருக்கு மானிடமகனாகிய நானும் அடையாளமாய் இருப்பேன்.
Nĩgũkorwo o ta ũrĩa Jona aarĩ kĩmenyithia kũrĩ andũ a Nineve, ũguo noguo Mũrũ wa Mũndũ egũkorwo arĩ kĩmenyithia kũrĩ rũciaro rũrũ.
31 நியாயத்தீர்ப்பின்போது, தென்நாட்டு அரசியும்கூட இந்தத் தலைமுறை மக்களோடே எழுந்து, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். ஏனெனில், அவள் பூமியின் கடைமுனையிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கும்படி வந்தாளே. ஆனால் சாலொமோனைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார்.
Mũtumia-mũthamaki ũrĩa wa mwena wa Gũthini nĩakarũgama hĩndĩ ya ciira hamwe na andũ a rũciaro rũrũ arũtuĩre ciira, nĩgũkorwo oimire ituri cia thĩ oke athikĩrĩrie ũũgĩ wa Solomoni, na rĩu ũmwe mũnene gũkĩra Solomoni arĩ haha.
32 நியாயத்தீர்ப்பின்போது நினிவே பட்டணத்து மனிதரும், இந்தத் தலைமுறையினரோடு எழுந்து, இவர்கள்மீது குற்றம் சுமத்துவார்கள்; ஏனெனில், அவர்கள் யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு மனந்திரும்பினார்கள். ஆனால் இப்பொழுதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்” என்றார்.
Andũ a Nineve nĩmakarũgama hĩndĩ ya ciira hamwe na rũciaro rũrũ marũtuĩre ciira; nĩgũkorwo nĩmeririre maahunjĩirio nĩ Jona, na rĩu ũmwe mũnene gũkĩra Jona arĩ haha.
33 “யாரும் விளக்கைக் கொளுத்தி, அதை மறைந்திருக்கும்படி ஒரு இடத்திலோ, அல்லது ஒரு பாத்திரத்தால் மூடியோ வைப்பதில்லை. ஆனால் உள்ளே வருகிறவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி, அதை விளக்குத்தண்டின் மேல் வைப்பார்கள்.
“Gũtirĩ mũndũ ũgwatagia tawa agacooka akaũiga handũ ũtangĩoneka kana akaũiga rungu rwa irebe, no aũigaga handũ igũrũ nĩguo arĩa megũtoonya nyũmba mathererwo nĩ ũtheri.
34 உன்னுடைய கண் உன் உடலின் விளக்காய் இருக்கிறது. உனது கண்கள் நல்லதாய் இருக்கும்போது, உன் முழு உடலும் வெளிச்சம் நிறைந்ததாய் இருக்கும். ஆனால் அவை கெட்டதாய் இருந்தால், உன் உடலும் இருள் நிறைந்ததாய் இருக்கும்.
Riitho rĩaku nĩrĩo tawa wa mwĩrĩ waku. Rĩrĩa maitho maku marĩ mega, mwĩrĩ waku wothe o naguo ũkoragwo ũiyũrĩte ũtheri. No rĩrĩa matarĩ mega-rĩ, mwĩrĩ waku o naguo ũkoragwo ũiyũrĩte nduma.
35 ஆகவே, உனக்குள்ளே இருக்கும் வெளிச்சம் இருள் அடையாதபடி பார்த்துக்கொள்.
Hakĩrĩ ũguo-rĩ, menyerera ũtheri ũrĩa ũrĩ thĩinĩ waku ndũgatuĩke nduma.
36 உன் முழு உடலும் வெளிச்சம் நிறைந்ததாய் இருந்து, அதன் ஒரு பகுதியும் இருள் அடையாதிருக்குமானால், விளக்கின் வெளிச்சம் உங்களில் பிரகாசிப்பது போல், உனது முழு உடலும் வெளிச்சம் உடையதாய் இருக்கும்” என்றார்.
Nĩ ũndũ ũcio-rĩ, mwĩrĩ waku wothe ũngĩiyũrwo nĩ ũtheri, na ndũrĩ handũ harĩ nduma, nĩũrĩtheragĩrwo nĩ ũtheri biũ, o ta ũrĩa ũtheri wa tawa ũkũmũrĩkagĩra.”
37 இயேசு பேசி முடித்தபோது, பரிசேயன் ஒருவன் இயேசுவைத் தன்னுடன் உணவு சாப்பிடவரும்படி அழைத்தான்; அப்படியே அவர் அவனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பாட்டுப் பந்தியில் உட்கார்ந்தார்.
Hĩndĩ ĩrĩa Jesũ aarĩkirie kwaria, Mũfarisai ũmwe akĩmũnyiita ũgeni gwake makarĩanĩre; nĩ ũndũ ũcio agĩthiĩ, agĩikara metha-inĩ.
38 சாப்பிடுவதற்கு முன்பு, இயேசு தன் கையைக் கழுவாததைக் கவனித்த பரிசேயன் ஆச்சரியம் அடைந்தான்.
No Mũfarisai ũcio ona ũguo akĩgega nĩ ũndũ Jesũ ndaambire gwĩthamba moko atanarĩa irio.
39 அப்பொழுது கர்த்தர் அவனிடம் சொன்னதாவது, “பரிசேயரே, நீங்களோ போஜனபாத்திரத்தின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்கிறீர்கள். ஆனால், உங்களுடைய உட்புறமோ பேராசைகளினாலும், கொடுமைகளினாலும் நிறைந்திருக்கிறது.
Nake Mwathani akĩmwĩra atĩrĩ, “Inyuĩ Afarisai mũthambagia gĩkombe na thaani mwena wa na igũrũ, no thĩinĩ wanyu mũiyũrĩtwo nĩ ũkoroku na waganu.
40 மூடர்களே! வெளிப்புறத்தை உண்டாக்கியவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ?
Inyuĩ irimũ ici! Githĩ ũrĩa wombire mwena wa na nja to we wombire mwena wa na thĩinĩ?
41 பாத்திரத்தின் உள்ளே இருப்பதை ஏழைகளுக்குக் கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கு எல்லாம் சுத்தமாயிருக்கும்.
No rĩrĩ, heagai athĩĩni kĩrĩa kĩrĩ thĩinĩ wa thaani, na hĩndĩ ĩyo indo ciothe nĩigũtuĩka theru harĩ inyuĩ.”
42 “பரிசேயரே உங்களுக்கு ஐயோ, ஏனெனில் நீங்கள் உங்களுடைய புதினா கீரையிலும், கறிவேப்பிலையிலும், தோட்டத்தின் மரக்கறிவகையிலும் பத்திலொன்றை இறைவனுக்குக் கொடுக்கிறீர்கள். ஆனால் நீதி செய்வதையும், இறைவனிடம் அன்பு கூறுவதையும், அலட்சியம் செய்கிறீர்கள். இதையே, நீங்கள் முதலில் செய்திருக்கவேண்டும். முன்பு செய்ததையும் கைவிடக்கூடாது.
“Kaĩ mũrĩ na haaro inyuĩ Afarisai-ĩ! Tondũ mũrutagĩra Ngai gĩcunjĩ gĩa ikũmi gĩa terere, na togotia na nyeni cia mĩthemba yothe no mũkaaga kũrũmbũiya kĩhooto na wendani wa Ngai. Mwaagĩrĩirwo nĩ gwĩkaga maũndũ macio mũtegũtiganĩria macio mangĩ ma mbere.
43 “பரிசேயரே உங்களுக்கு ஐயோ! ஏனெனில், நீங்கள் ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இருக்கைகளையும், சந்தைகூடும் இடங்களில் வாழ்த்துக்களையும் பெற விரும்புகிறீர்கள்.
“Kaĩ mũrĩ na haaro inyuĩ Afarisai-ĩ! Tondũ mwendaga gũikarĩra itĩ iria cia mbere thunagogi-inĩ na mũgeithagio mũrĩ ndũnyũ-inĩ.
44 “உங்களுக்கு ஐயோ! ஏனெனில், நீங்கள் அடையாளச்சின்னம் இல்லாமலே, மூடப்பட்ட சவக்குழிகளைப் போல் இருக்கிறீர்கள். அதனால், மனிதர்கள் அது என்ன என்பதை அறியாமல், அதன்மேல் நடந்து போகிறார்கள்.”
“Kaĩ mũrĩ na haaro-ĩ, tondũ mũtariĩ ta mbĩrĩra itarĩ rũũri iria andũ mageragĩra igũrũ rĩacio matekũmenya.”
45 மோசேயின் சட்ட அறிஞரில் ஒருவன் அவரிடம், “போதகரே, நீர் இவற்றைச் சொல்லுகிறபோது, எங்களையும் அவமானப்படுத்துகிறீர்” என்றான்.
Mũrutani ũmwe wa Watho akĩmũcookeria, akĩmwĩra atĩrĩ, “Mũrutani, rĩrĩa ũkwaria maũndũ macio-rĩ, nĩũratũruma o na ithuĩ.”
46 அதற்கு இயேசு, “மோசேயின் சட்ட அறிஞர்களே, உங்களுக்கு ஐயோ! ஏனெனில், மக்களால் சுமக்க முடியாத சமயச்சடங்குகளை நீங்கள் அவர்கள்மேல் சுமத்துகிறீர்கள். நீங்களோ, அவர்களுக்கு உதவி செய்வதற்காக உங்கள் ஒரு விரலைக்கூட அசைப்பதில்லை.
Nake Jesũ akĩmũcookeria atĩrĩ, “O na inyuĩ arutani a Watho kaĩ mũrĩ na haaro-ĩ! Tondũ mũkuuithagia andũ mĩrigo mĩritũ ĩrĩa matangĩhota gũkuua, na inyuĩ ene mũtingĩmĩhutia o na kaara kamwe mũmateithie.
47 “உங்களுக்கு ஐயோ! ஏனெனில், நீங்கள் இறைவாக்கினர்களுக்காக கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். அவர்களைக் கொலைசெய்தவர்கள், உங்கள் முற்பிதாக்களே.
“Kaĩ mũrĩ na haaro-ĩ! Tondũ mwakagĩra anabii mbĩrĩra, o arĩa mooragirwo nĩ maithe manyu ma tene.
48 உங்கள் முற்பிதாக்கள் செய்ததை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று இவ்விதமாய்ச் சாட்சி கொடுக்கிறீர்கள்; அவர்களோ, இறைவாக்கினரைக் கொன்றார்கள். நீங்களோ, அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள்.
Nĩ ũndũ ũcio mũgakĩruta ũira atĩ nĩmwĩtĩkanĩtie na ũrĩa maithe manyu meekire; atĩ nĩo mooragire anabii, na inyuĩ mũkamaakĩra mbĩrĩra.
49 இதன் காரணமாகவே, இறைவன் தம்முடைய ஞானத்தின்படி சொன்னதாவது, ‘நான் அவர்களிடம் இறைவாக்கினரையும், அப்போஸ்தலரையும் அனுப்புவேன். அவர்களில் சிலரை, இவர்கள் கொலைசெய்வார்கள். மற்றவர்களையோ இவர்கள் துன்புறுத்துவார்கள்’ என்றார்.
Tondũ wa ũguo ũũgĩ wa Ngai uugĩte atĩrĩ, ‘Nĩngamatũmĩra anabii na atũmwo, moorage amwe ao na manyariire arĩa angĩ.’
50 ஆகையால், உலகம் தொடங்கியதிலிருந்து இறைவாக்கினர் அனைவருடைய சிந்தப்பட்ட இரத்தத்திற்கும், இந்தத் தலைமுறையினரிடமே கணக்குக் கேட்கப்படும்.
Nĩ ũndũ ũcio rũciaro rũrũ nĩrũgaciirithĩrio thakame ya anabii othe ĩrĩa yanaitwo kuuma o kĩambĩrĩria gĩa thĩ,
51 ஆபேலுடைய இரத்தம் முதல், ஆலயத்தில் பலிபீடத்திற்கும் பரிசுத்த இடத்திற்கும் இடையே கொலைசெய்யப்பட்ட சகரியாவின் இரத்தம் வரைக்கும், இவர்களிடமே கணக்குக் கேட்கப்படும். ஆம், இதை நான் உங்களுக்குச் சொல்கிறேன், இந்தத் தலைமுறையினரிடமே இவையெல்லாவற்றிற்கும் கணக்குக் கேட்கப்படும்.
kuuma thakame ya Habili nginya thakame ya Zekaria ũrĩa woragĩirwo gatagatĩ-inĩ ga kĩgongona na handũ harĩa hatheru. Ĩĩ nĩguo, ngũmwĩra atĩrĩ, rũciaro rũrũ nĩrũkaherithĩrio thakame ĩyo.
52 “மோசேயின் சட்ட அறிஞரே உங்களுக்கு ஐயோ, அறிவிற்குரிய சாவியை மக்களிடமிருந்து நீங்கள் எடுத்துப்போட்டீர்கள். அதற்குள் நீங்களும் செல்வதில்லை. செல்கிறவர்களையும் தடைசெய்து விடுகிறீர்கள்” என்றார்.
“Kaĩ mũrĩ na haaro inyuĩ arutani a watho-ĩ! Tondũ nĩmweheretie kĩhingũro kĩa ũmenyo. Inyuĩ ene mũtiigana gũtoonya, na arĩa marenda gũtoonya mũkamagiria.”
53 இயேசு அங்கிருந்து புறப்படும்போது பரிசேயரும் மோசேயின் சட்ட ஆசிரியரும் அவரைக் கடுமையாக எதிர்க்கவும், பல கேள்விகளைக் கேட்டுத் தாக்கவும் தொடங்கினார்கள்.
Jesũ aarĩkia kuuma kũu, Afarisai na arutani a watho makĩambĩrĩria kũmũkararia marĩ na ũũru mũno na kũmũũgita na kũmũũria ciũria nĩguo aarie maũndũ maingĩ,
54 அவருடைய வார்த்தைகளிலிருந்தே, இயேசுவைக் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் தருணம் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
makĩgeria kũmũtega maigue kana nĩ harĩ ũndũ mũũrũ angĩaria.

< லூக்கா 11 >