< லூக்கா 10 >

1 இதற்குப் பின்பு கர்த்தர், வேறு எழுபத்திரண்டுபேரை நியமித்தார். அவர்களை, அவர் தாம் போகவிருந்த ஒவ்வொரு பட்டணத்திற்கும், இடத்திற்கும் தமக்கு முன்னே இரண்டிரண்டுபேராக அனுப்பினார்.
ထိုနောက်မှ သခင် ဘုရားသည် အခြား သောတပည့်တော်ခုနစ်ကျိပ် တို့ကို ခန့်ထား တော်မူ၍ ၊ ကိုယ်တိုင်ကြွ လေအံ့သောမြို့ ရွာအရပ်ရပ် တို့သို့ ရှေ့ တော်၌ နှစ် ယောက်စီ နှစ် ယောက်စီ စေလွှတ် တော်မူ၏။
2 இயேசு அவர்களிடம் சொன்னதாவது: “அறுவடை மிகுதியாய் இருக்கிறது, ஆனால் வேலையாட்களோ கொஞ்சமாய் இருக்கிறார்கள். ஆகையால் அறுவடையின் ஆண்டவரிடம், தமது அறுவடைக்கு வேண்டிய வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள்.
သူ တို့အား မိန့် တော်မူသည်ကား၊ စပါး ရိတ်စရာများစွာ ရှိ၏။ ရိတ် သောသူ တို့သည်နည်း ကြ၏။ ထိုကြောင့် လုပ်ဆောင် သောသူတို့ကို စပါး ရိတ်စေခြင်းငှာစပါးရှင် စေလွှတ် တော်မူမည်အကြောင်း ဆုတောင်း ကြလော့။
3 புறப்பட்டுப் போங்கள்! ஓநாய்களுக்குள்ளே ஆட்டுக்குட்டிகளை அனுப்புகிறதுபோல, நான் உங்களை அனுப்புகிறேன்.
သင်တို့သွား လေသည်အရာမှာ၊ တောခွေး စုထဲ သို့ သိုးသငယ် တို့ကို စေလွှတ်သကဲ့သို့ သင် တို့ကို ငါစေလွှတ် ၏။
4 நீங்கள் பணப்பையையோ, பயணப்பையையோ, இன்னொரு ஜோடி பாதரட்சைகளையோ கொண்டுபோக வேண்டாம்; வழியில் எவருக்கும் வாழ்த்துச் சொல்லவும் வேண்டாம்.
ငွေအိတ် ၊ လွယ်အိတ် ၊ ခြေနင်း တို့ကို မ ဆောင် ကြနှင့်။ လမ်း ၌ သွား စဉ် တွင ်အဘယ် သူ ကိုမျှ နှုတ် မ ဆက်ကြနှင့်။
5 “நீங்கள் எந்த வீட்டுக்குச் சென்றாலும், ‘இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாக’ என்று முதலில் சொல்லுங்கள்.
မည်သည့် အိမ် သို့ ဝင် သောအခါ ၊ ဤ အိမ် ၌ မင်္ဂလာ ဖြစ်ပါစေသောဟု ရှေးဦးစွာ ပြော ကြလော့။
6 சமாதானத்திற்குரியவன் அங்கு இருந்தால், உங்களுடைய சமாதானம் அவனில் தங்கும்; இல்லையெனில், அது உங்களிடம் திரும்பிவரும்.
ထို အိမ်၌မင်္ဂလာ သား ရှိ လျှင် ၊ သင် တို့မြွက်သော မင်္ဂလာ သည်တည် လိမ့်မည်။
7 நீங்கள் அந்த வீட்டிலேயே தங்கி, அவர்கள் உங்களுக்குக் கொடுப்பதைச் சாப்பிட்டு குடியுங்கள். வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான். நீங்கள் வீட்டிற்கு வீடு, மாறிமாறிச் செல்லவேண்டாம்.
သို့မဟုတ် သင် တို့ထံသို့ ပြန်လာ လိမ့်မည်။ ထိုအိမ် နေ ၍ အစား အသောက် စီရင် ရာ ကို စား သောက် ကြ လော့။ အကြောင်းမူကား ၊ လုပ်ဆောင် သောသူသည်အခ ကိုခံထိုက် ပေ၏။ တအိမ် မှ တအိမ် သို့ လှည့်လည် ၍ မ သွားကြနှင့်။
8 “நீங்கள் ஒரு பட்டணத்திற்குள் செல்லும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்பட்டால், அங்கு உங்களுக்குக் கொடுக்கப்படும் உணவைச் சாப்பிடுங்கள்.
အကြင် မြို့ သို့ သင်တို့ဝင် ၍ မြို့သားတို့သည်လက်ခံ ၏။ ထိုမြို့၌သင် တို့ရှေ့ မှာထည့်သမျှကို စား ကြလော့။
9 அங்குள்ள நோயாளிகளை குணமாக்குங்கள். ‘இறைவனுடைய அரசு உங்களுக்கு சமீபித்திருக்கிறது’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
လူနာ များကို ချမ်းသာ ပေးကြလော့။ ဘုရားသခင် ၏နိုင်ငံ တော်သည် သင် တို့၌ တည်ထောင် သော အချိန်နီး ပြီဟု သူ တို့အား ဟောပြော ကြလော့။
10 ஆனால், நீங்கள் யாதொரு பட்டணத்திற்கு போகும்போது, அங்கு நீங்கள் வரவேற்கப்படாவிட்டால், அதன் வீதிகளில் சென்று அவர்களிடம்,
၁၀အကြင်မြို့ သို့ ဝင် ၍ မြို့သားတို့သည်လက် မ ခံအံ့၊ ထိုမြို့ ၏လမ်း သို့ ထွက် ပြီးလျှင်၊ ငါ တို့၌ကပ် သော သင် တို့မြို့ ၏ မြေမှုန့် ကို ငါတို့ခါ လိုက်၏။
11 ‘எங்கள் கால்களில் ஒட்டியிருக்கும் உங்கள் பட்டணத்தின் தூசியைக்கூட உங்களுக்கெதிராய் உதறிப் போடுகிறோம். ஆனால்: இறைவனுடைய அரசு உங்களுக்கு சமீபித்திருக்கிறது’ என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்.
၁၁သို့သော်လည်း ဘုရားသခင် ၏နိုင်ငံ တော်သည် သင်တို့၏အနီး သို့ရောက်ကြောင်း ကို သိမှတ် ကြဟု သူတို့အား ပြော ကြလော့။
12 நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு கிடைக்கும் தண்டனை, சோதோம் பட்டணத்திற்கு கிடைக்கும் தண்டனையிலும் அதிகமாயிருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
၁၂ငါဆို သည်ကား၊ နောက်ဆုံးသော နေ့၌ ထို မြို့ သည် သောဒုံ မြို့ထက် သာ၍ ခံရလတံ့။
13 “கோராசினே! உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள்; துக்கவுடை உடுத்தி, சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள்.
၁၃အိုခေါရာဇိန် မြို့၊ သင် သည်အမင်္ဂလာ ရှိ၏။ အိုဗက်ဇဲဒ မြို့၊ သင် သည်အမင်္ဂလာ ရှိ၏။ အကြောင်းမူကား ၊ သင် တို့တွင် ပြ သောတန်ခိုး ကို တုရု မြို့နှင့် ဇိဒုန် မြို့တို့တွင် ပြ ဘူးလျှင် ၊ ထိုမြို့တို့သည် ရှေး ကာလ၌ လျှော်တေ အဝတ်ကိုဝတ်၍ ၊ ပြာ ထဲမှာထိုင် လျက် နောင်တရ ကြလိမ့်မည်။
14 ஆனால், நியாயத்தீர்ப்பின்போது உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை, தீரு, சீதோன் பட்டணத்தினருக்கு கிடைக்கும் தண்டனையிலும் அதிகமாயிருக்கும்.
၁၄တရားဆုံးဖြတ် တော်မူသောအခါ သင် တို့သည်တုရု မြို့နှင့် ဇိဒုန် မြို့ထက် သာ၍ ခံရကြလတံ့။
15 கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். (Hadēs g86)
၁၅အိုကပေရနောင် မြို့၊ သင် သည် မိုဃ်း ကောင်းကင်တိုင်အောင် မြှောက်စား ခြင်းကို ခံရသော်လည်း၊ မရဏာ နိုင်ငံတိုင်အောင် နှိမ့်ချ ခြင်းကို ခံရလတံ့။ (Hadēs g86)
16 “உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான்; உங்களைப் புறக்கணிக்கிறவன் என்னைப் புறக்கணிக்கிறான்; என்னைப் புறக்கணிக்கிறவன் என்னை அனுப்பியவரை புறக்கணிக்கிறான்” என்றார்.
၁၆သင် တို့၏စကားကို နားထောင် သောသူ သည် ငါ့ စကားကို နားထောင် ၏။ သင် တို့ကို ပယ် သောသူ သည် ငါ့ ကိုပယ် ၏။ ငါ့ ကိုပယ် သောသူ သည် ငါ့ ကို စေလွှတ် တော်မူသောသူ ကို ပယ် သည် ဟု မိန့်တော်မူ၏။
17 அந்த எழுபத்திரண்டு பேரும் அப்படியே போய், சந்தோஷத்துடனே திரும்பிவந்து, “ஆண்டவரே, உமது பெயரில் பிசாசுகளும் எங்களுக்குப் கீழ்ப்படிகின்றன” என்றார்கள்.
၁၇ထိုခုနစ်ကျိပ် သော တပည့်တော်တို့သည် ဝမ်းမြောက် သောစိတ်နှင့် ပြန်လာ ၍ ၊ သခင် ၊ ကိုယ်တော် ၏ နာမ အားဖြင့် အကျွန်ုပ် တို့သည် နတ်ဆိုး ကိုပင် နိုင် ပါသည်ဟု လျှောက် ကြ၏။
18 இயேசு அதற்கு மறுமொழியாக, “ஆம்; சாத்தான் வானத்திலிருந்து மின்னலைப்போல் விழுகிறதை, நான் கண்டேன்.
၁၈ယေရှုကလည်း ၊ စာတန် သည် လျှပ်စစ် ကဲ့သို့ ကောင်းကင် မှ ကျ သည်ကို ငါမြင် ပြီ။
19 பாம்புகளையும், தேள்களையும் மிதிப்பதற்கும், பகைவனுடைய எல்லா வல்லமையையும் மேற்கொள்வதற்கும், நான் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன்; எதுவுமே உங்களுக்குத் தீங்கு விளைவிக்காது.
၁၉သင် တို့သည် မြွေ ၊ ကင်းမြီးကောက် တို့ကို နိုင် ရသောအခွင့် နှင့် ရန်သူ များ ကို နိုင်ရ သော အခွင့် တန်ခိုးကို ငါပေး ၏။ သင် တို့ကို အဘယ် ဘေးမျှ မ ညှဉ်းဆဲ ရ။
20 ஆனால், தீய ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதைக் குறித்து மகிழ்ச்சியடைய வேண்டாம். உங்கள் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டதைக் குறித்தே மகிழ்ச்சியடையுங்கள்” என்றார்.
၂၀သို့သော်လည်း နတ်ဆိုး ကို နိုင် ရသောကြောင့် သာ ဝမ်းမြောက် ခြင်းမ ရှိကြနှင့်၊ သင် တို့၏ နာမည် များ သည် ကောင်းကင် စာရင်း ၌ ဝင်သည်ကို ဝမ်းမြောက် ခြင်းရှိကြလော့ ဟု မိန့် တော်မူ၏။
21 அவ்வேளையில் இயேசு, பரிசுத்த ஆவியானவரின் சந்தோஷத்தால் நிறைந்தவராய், “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, சிறுபிள்ளைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது.
၂၁ထို အခါ ယေရှုသည် ဝမ်းမြောက် တော်မူခြင်း စိတ် ရှိသဖြင့်၊ ကောင်းကင် နှင့် မြေကြီး ကို အစိုးရ တော်မူ သော အဘ ၊ ကိုယ်တော် သည် ပညာ အလိမ္မာ နှင့် ပြည့်စုံသောသူတို့အား ဤအရာ များကို ထိမ်ဝှက် ကွယ်ထားလျက် သူငယ် တို့အားဖော်ပြ တော်မူသည်ဖြစ်၍ ၊ ကျေးဇူးတော်ကို အကျွန်ုပ်ချီးမွမ်း ပါ၏။ ထိုသို့ အလို တော် ရှိ သောကြောင့် မှန် ပါ၏။ အဘ ။
22 “என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதாவைத் தவிர வேறொருவனும் மகனை இன்னாரென்று அறியான். மகனைத் தவிர வேறொருவனும் பிதா யாரென்றும் அறியான். யாருக்கெல்லாம் பிதாவை வெளிப்படுத்த மகன் தெரிந்துகொள்கிறாரோ, அவர்களைத்தவிர, வேறொருவரும் பிதா இன்னாரென்று அறியார்கள்” என்றார்.
၂၂ငါ့ ခမည်းတော် သည် ခပ်သိမ်း သောအရာတို့ကို ငါ ၌အပ် တော်မူပြီ။ သား တော်ကား အဘယ်သူ ဖြစ် သည်ကို ခမည်းတော် မှတစ်ပါး အဘယ်သူ မျှမသိ ။ ခမည်းတော် ကားအဘယ်သူ ဖြစ် တော်မူသည်ကို၊ သား တော်နှင့် သား တော်သည် လင်း စေလို သောသူ မှတစ်ပါး အဘယ်သူ မျှမသိ ဟု မိန့် တော်မူ၏။
23 பின்பு அவர் தமது சீடர்களின் பக்கமாய்த் திரும்பிப்பார்த்து, தனிப்பட்ட விதத்தில் அவர்களுக்குச் சொன்னதாவது: “நீங்கள் காண்பவற்றைக் காணும் கண்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை.
၂၃ထိုအခါ တပည့် တော်တို့ကိုလှည့်ကြည့် ၍၊ ယခုမြင် သမျှသောအရာ တို့ကို သင်တို့မြင် သောကြောင့် သင် တို့မျက်စိ သည်မင်္ဂလာ ရှိ၏။
24 நான் உங்களுக்குச் சொல்கிறேன், பல இறைவாக்கினர்களும், அரசர்களும் நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பியும் அவர்கள் அதைக் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றை அவர்கள் கேட்க விரும்பியும் அவர்கள் அதைக் கேட்கவில்லை.”
၂၄ငါဆို သည်ကား၊ သင် တို့မြင် ရသောအရာ တို့ကို ပရောဖက် များ နှင့် ရှင်ဘုရင် များတို့သည် မြင် ခြင်းငှာအလိုရှိ သော်လည်း မ မြင် ရကြ။ သင်တို့ ကြား ရသောအရာ တို့ကို ကြား ခြင်းငှာအလိုရှိသော်လည်း မ ကြား ရကြ ဟု တပည့်တော်တို့အားသာ မိန့် တော်မူ၏။
25 அப்பொழுது ஒரு மோசேயின் சட்ட நிபுணன் இயேசுவைச் சோதிக்கும்படி எழுந்து நின்று அவரிடம், “போதகரே, நித்திய வாழ்வைப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios g166)
၂၅တရံရောအခါကျမ်းတတ် တစ် ယောက်သည်ထ ၍ ၊ အရှင် ဘုရား၊ ထာဝရ အသက် ကို အမွေ ခံရအံ့သောငှာအကျွန်ုပ်သည် အဘယ် အမှုကို ပြု ရပါမည်နည်းဟု ကိုယ်တော် ကို စုံစမ်းနှောင့်ရှက် ခြင်းငှာမေးလျှောက် သော်၊ (aiōnios g166)
26 அதற்கு அவர், “மோசேயின் சட்டத்தில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீ வாசித்திருக்கிறது என்ன?” என்று கேட்டார்.
၂၆ကိုယ်တော်က၊ ပညတ္တိ ကျမ်း၌ အဘယ်သို့ လာ သနည်း။ သင်သည်အဘယ်သို့ ဘတ် သနည်း ဟု မေး တော်မူလျှင် ၊
27 அதற்கு அவன், “‘உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு பெலத்தோடும், உன் முழு மனதோடும் அன்பு செலுத்தவேண்டும்’; அத்துடன், ‘உன்னில் நீ அன்பாய் இருப்பதுபோல், உன் அயலானிலும் அன்பாய் இரு என்பதே.’” எனப் பதிலளித்தான்.
၂၇ထိုသူက၊ သင် ၏ဘုရားသခင် ထာဝရ ဘုရားကို စိတ် နှလုံး အကြွင်းမဲ့ ၊ အစွမ်း သတ္တိရှိသမျှ ၊ ဉာဏ် ရှိသမျှ နှင့် ချစ် လော့။ ကိုယ် နှင့် စပ်ဆိုင် သောသူ ကို ကိုယ် နှင့်အမျှ ချစ်လော့ဟု ပြန်လျှောက် လေ၏။
28 அப்பொழுது இயேசு அவனிடம், “நீ சரியாகப் பதில் சொன்னாய். அப்படியே செய். அப்பொழுது நீ வாழ்வடைவாய்” என்றார்.
၂၈ကိုယ်တော်ကလည်း ၊ သင်၏စကား သည် မှန် ပေ၏။ ထိုသို့ ပြု လျှင် အသက် ကိုရမည် ဟု မိန့် တော်မူ၏။
29 ஆனால் அவனோ, தன்னை நீதிமானாய் காட்ட விரும்பி இயேசுவிடம், “என் அயலான் யார்?” என்று கேட்டான்.
၂၉ထိုသူကလည်း ၊ အဘယ်သူ သည် အကျွန်ုပ် နှင့် စပ်ဆိုင် သောသူဖြစ် ပါသနည်းဟု မိမိ အပြစ် မရှိဟန်ပြုလို သောစိတ်နှင့် ယေရှု ကို လျှောက် ပြန်သော်။
30 அதற்கு இயேசு அவனிடம்: “யூதன் ஒருவன் எருசலேமிலிருந்து, எரிகோவுக்குப் போய்க்கொண்டிருந்தான். அப்பொழுது அவன், கள்வர்களின் கையில் அகப்பட்டான். அவர்கள் அவனுடைய உடைகளைப் பறித்துக்கொண்டு, அவனை அடித்து, குற்றுயிராய்ப் போட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.
၃၀ယေရှု က၊ လူ တစ် ယောက်သည် ယေရုရှလင် မြို့မှ ယေရိခေါ မြို့သို့ သွား ရာတွင် ဓားပြ နှင့် တွေ့ကြုံ လေ ၏။ ဓားပြ တို့သည် ထိုသူ ၏အဝတ်ကိုချွတ် ၍ နာကျင် စွာရိုက်နှက် ပြီးမှသေလုမတတ် ရှိသောအခါ ပစ်ထား ၍ သွား ကြ၏။
31 ஒரு ஆசாரியன் அதே வழியாய் போய்க்கொண்டிருந்தான், அவன் காயப்பட்டவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான்.
၃၁ထို လမ်း သို့ ယဇ် ပုရောဟိတ်တစ် ယောက်သည် အမှတ်တမဲ့ သွား ၍ ထိုလူနာ ကိုမြင် လျှင် လွှဲရှောင် ၍ သွား လေ၏။
32 அப்படியே ஒரு லேவியனும் அவ்விடத்திற்கு வந்து, அவனைக் கண்டபோது, மறுபக்கமாய் அவனைவிட்டு விலகிச்சென்றான்.
၃၂ထိုနည်းတူ လေဝိ လူတစ်ယောက်သည် ထိုအရပ် သို့ ရောက် သောအခါ ၊ လာ ၍ ကြည့် မြင်လျှင် လွဲရှောင် ၍ သွားလေ၏။
33 ஆனால், அவ்வழியாய்ப் பயணம் செய்துகொண்டிருந்த சமாரியன் ஒருவன் அந்த மனிதன் கிடந்த இடத்துக்கு வந்து அவனைக் கண்டபோது அவன்மேல் அனுதாபம் கொண்டான்.
၃၃ရှမာရိ လူတစ် ယောက်သည် ခရီးသွား ရာတွင် ထိုလူနာ ရှိရာသို့ ရောက် ၍ မြင် သောအခါ၊ ကရုဏာ စိတ် ရှိသည်နှင့်၊
34 அந்த மனிதனிடம் அவன் போய், அவனுடைய காயங்களில் எண்ணெயும், திராட்சை இரசமும் ஊற்றிக் கட்டினான். பின்பு அவனைத் தனது சொந்தக் கழுதையின்மேல் ஏற்றி, ஒரு சத்திரத்திற்குக் கொண்டுபோய், அங்கு அவனைப் பராமரித்தான்.
၃၄ချဉ်းကပ် ၍ သူ ၏အနာ များကို ဆီ နှင့် စပျစ်ရည် ထည့် လျက် အဝတ်နှင့်စည်း ပြီးလျှင်၊ မိမိ တိရစ္ဆာန် ပေါ်မှာ တင် ၍ စရပ် တစ်ခုသို့ ဆောင်သွား ပြုစု လေ၏။
35 மறுநாள், அவன் இரண்டு வெள்ளிக்காசை சத்திரத்தின் உரிமையாளனிடம் கொடுத்து அவனிடம், ‘இவனைப் பராமரித்துக்கொள். நான் திரும்பி வருகிறபோது, நீ அதிகமாய் ஏதாவது செலவு செய்திருந்தால், அதை நான் உனக்குக் கொடுப்பேன்’ என்றான்.”
၃၅နက်ဖြန် နေ့၌ ထွက်သွား သောအခါ ၊ ဒေနာရိ နှစ် ပြားကိုထုတ်၍ စရပ်ရှင် အား ပေးလျက် ၊ ဤသူ ကို ကြည့်ရှုပြုစု ပါ။ ကုန် သမျှ ကိုငါ ပြန်လာ သောအခါ ဆပ်ပေး မည်ဟုဆို ၏။ သင် သည်အဘယ်သို့ထင် သနည်း။
36 இயேசு இந்த உவமையைச் சொல்லி முடித்தபின், “இந்த மூன்று பேரிலும், கள்வர் கையில் அகப்பட்ட அவனுக்கு, யார் அயலானாய் இருந்தான் என்று நீ நினைக்கிறாய்?” என்று கேட்டார்.
၃၆ထို သူသုံး ယောက်တို့တွင် အဘယ်သူ သည် ဓားပြ လက်သို့ရောက် သောသူ နှင့် စပ်ဆိုင် သောသူ ဖြစ် သနည်း ဟု ပြန်၍မေး တော်မူလျှင်၊
37 அதற்கு மோசேயின் சட்ட நிபுணன், “அவன்மேல் இரக்கம் காட்டியவனே” என்றான். அப்பொழுது இயேசு அவனிடம், “நீயும் போய் அப்படியே செய்” என்றார்.
၃၇ကျမ်းတတ်ကလည်း ၊ လူနာ ကိုသနား သောသူ သည် စပ်ဆိုင်သောသူဖြစ်ပါ၏ဟုလျှောက် သော် ယေရှု က သင် သည်သွား ၍ ထိုနည်းတူ ပြု လော့ ဟု မိန့် တော်မူ၏။
38 பின்பு இயேசுவும் அவருடைய சீடர்களும், தொடர்ந்து சென்றுகொண்டிருக்கையில், ஒரு கிராமத்திற்கு வந்தார்கள். அங்கே மார்த்தாள் என்னும் பெயருடைய ஒரு பெண், அவரைத் தன் வீட்டில் ஏற்றுக்கொண்டாள்.
၃၈ယေရှု သည် တပည့် တော်တို့နှင့် ခရီးသွား ကြစဉ် ရွာ တ ရွာသို့ ဝင် သော်၊ မာသ အမည် ရှိသော မိန်းမ တစ်ဦး သည် မိမိအိမ်၌ ကိုယ်တော် ကိုဧည့်ခံ လေ၏။
39 அவளுக்கு மரியாள் என்னும் பெயருடைய ஒரு சகோதரி இருந்தாள். மரியாள் கர்த்தருடைய பாதத்தின் அருகே உட்கார்ந்து, அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தாள்.
၃၉ထိုမိန်းမ ၌ မာရိ အမည် ရှိသော ညီမ တစ်ယောက်ရှိ ၏။ ထို မာရိသည် ယေရှု ၏ခြေ တော်ရင်း၌ ထိုင် ၍ စကား တော်ကို နားထောင် လျက်နေ၏။
40 ஆனால் மார்த்தாளோ, வீட்டில் செய்யவேண்டிய எல்லா ஆயத்தங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள். அவள் இயேசுவிடம் வந்து, “ஆண்டவரே, என் சகோதரி எல்லா வேலையையும் என்னிடம் விட்டுவிட்டு இங்கு இருப்பதைப்பற்றி உமக்கு கவலை இல்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும்” என்றாள்.
၄၀မာသ မူကား ၊ လုပ်ကျွေး ခြင်းအမှုများ ၌ စိတ်ပူပန် ခြင်းရှိသဖြင့် အထံတော်သို့ချဉ်းကပ် ၍ ၊ သခင် ၊ ကျွန်မ ၏ညီမ သည်၊ ကျွန်မ တစ်ယောက်တည်း လုပ်ကျွေး စေခြင်းငှာကျွန်မပစ်ထား သည်အရာကို လျစ်လျူ သော စိတ်ရှိတော်မူသလော။ သူ သည် ကျွန်မ ကို ကူညီ မည့်အကြောင်း အမိန့် ရှိတော်မူပါဟု လျှောက် သော်၊
41 அதற்குக் கர்த்தர், “மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேகக் காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டு, குழம்பி இருக்கிறாய்.
၄၁ယေရှု က၊ မာသ ၊ မာသ ၊ သင်သည် များစွာ သော အမှုတို့၌ စိုးရိမ် ၍ နှောင့်ရှက် ခြင်းကို ခံရ၏။ လို သော အရာတစ်ခု တည်းရှိ ၏။
42 ஆனால், அவசியமானது ஒன்றே. மரியாள் அந்த சிறந்ததைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள், அது அவளிடமிருந்து எடுக்கப்படாது” என்றார்.
၄၂မာရိ မူကား ၊ ကောင်း သောအဘို့ ကို ရွေးယူ ပြီ။ ထို အဘို့ကို အဘယ်သူမျှ မ နှုတ် မယူရာ ဟု မိန့် တော်မူ၏။

< லூக்கா 10 >