< லூக்கா 1 >
1 மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின் விவரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் முன்வந்தார்கள்.
ପ୍ରଥମତୋ ଯେ ସାକ୍ଷିଣୋ ୱାକ୍ୟପ୍ରଚାରକାଶ୍ଚାସନ୍ ତେଽସ୍ମାକଂ ମଧ୍ୟେ ଯଦ୍ୟତ୍ ସପ୍ରମାଣଂ ୱାକ୍ୟମର୍ପଯନ୍ତି ସ୍ମ
2 துவக்கத்திலிருந்து கண்கண்ட சாட்சிகளாகவும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியர்களாகவும் இருந்த அவர்கள், எங்களுக்குக் கொடுக்கப்பட்டபடியே எழுதினார்கள்.
ତଦନୁସାରତୋଽନ୍ୟେପି ବହୱସ୍ତଦ୍ୱୃତ୍ତାନ୍ତଂ ରଚଯିତୁଂ ପ୍ରୱୃତ୍ତାଃ|
3 நானும் உமக்கு அவற்றை ஒழுங்காக எழுதுவதற்குத் தீர்மானித்தேன். துவக்கத்திலிருந்து நடந்த எல்லாவற்றையும் கவனமாய் விசாரித்தறிந்து, இதை எழுதுகிறேன்.
ଅତଏୱ ହେ ମହାମହିମଥିଯଫିଲ୍ ତ୍ୱଂ ଯା ଯାଃ କଥା ଅଶିକ୍ଷ୍ୟଥାସ୍ତାସାଂ ଦୃଢପ୍ରମାଣାନି ଯଥା ପ୍ରାପ୍ନୋଷି
4 இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விஷயங்கள் நிச்சயமாக உண்மையானவை என்பதை நீர் அறிந்துகொள்ளலாம்.
ତଦର୍ଥଂ ପ୍ରଥମମାରଭ୍ୟ ତାନି ସର୍ୱ୍ୱାଣି ଜ୍ଞାତ୍ୱାହମପି ଅନୁକ୍ରମାତ୍ ସର୍ୱ୍ୱୱୃତ୍ତାନ୍ତାନ୍ ତୁଭ୍ୟଂ ଲେଖିତୁଂ ମତିମକାର୍ଷମ୍|
5 ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், சகரியா என்னும் பெயருடைய ஒரு ஆசாரியன் இருந்தான். இவன் அபியாவின் ஆசாரியப் பிரிவைச் சேர்ந்தவன். இவனுடைய மனைவி எலிசபெத்தும், ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியைச் சேர்ந்தவள்.
ଯିହୂଦାଦେଶୀଯହେରୋଦ୍ନାମକେ ରାଜତ୍ୱଂ କୁର୍ୱ୍ୱତି ଅବୀଯଯାଜକସ୍ୟ ପର୍ୟ୍ୟାଯାଧିକାରୀ ସିଖରିଯନାମକ ଏକୋ ଯାଜକୋ ହାରୋଣୱଂଶୋଦ୍ଭୱା ଇଲୀଶେୱାଖ୍ୟା
6 அவர்கள் இருவரும் இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள். மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டார்கள்.
ତସ୍ୟ ଜାଯା ଦ୍ୱାୱିମୌ ନିର୍ଦୋଷୌ ପ୍ରଭୋଃ ସର୍ୱ୍ୱାଜ୍ଞା ୱ୍ୟୱସ୍ଥାଶ୍ଚ ସଂମନ୍ୟ ଈଶ୍ୱରଦୃଷ୍ଟୌ ଧାର୍ମ୍ମିକାୱାସ୍ତାମ୍|
7 ஆனாலும் எலிசபெத் மலடியாக இருந்ததினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; அவர்கள் இருவரும், இப்பொழுது வயது சென்றவர்களாய் இருந்தார்கள்.
ତଯୋଃ ସନ୍ତାନ ଏକୋପି ନାସୀତ୍, ଯତ ଇଲୀଶେୱା ବନ୍ଧ୍ୟା ତୌ ଦ୍ୱାୱେୱ ୱୃଦ୍ଧାୱଭୱତାମ୍|
8 ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் பணிபுரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக ஆசாரியப் பணியைச் செய்தான்.
ଯଦା ସ୍ୱପର୍ୟ୍ୟାନୁକ୍ରମେଣ ସିଖରିଯ ଈଶ୍ୱାସ୍ୟ ସମକ୍ଷଂ ଯାଜକୀଯଂ କର୍ମ୍ମ କରୋତି
9 ஒரு நாள் ஆசாரியர்களின் வழக்கத்தின்படி கடமைகளைச் செய்வதற்கு சீட்டு போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் போய் தூபங்காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டான்.
ତଦା ଯଜ୍ଞସ୍ୟ ଦିନପରିପାଯ୍ୟା ପରମେଶ୍ୱରସ୍ୟ ମନ୍ଦିରେ ପ୍ରୱେଶକାଲେ ଧୂପଜ୍ୱାଲନଂ କର୍ମ୍ମ ତସ୍ୟ କରଣୀଯମାସୀତ୍|
10 தூபங்காட்டும் வேளை வந்தபோது வழிபாட்டிற்கு கூடிவந்த மக்கள் வெளியே மன்றாடிக்கொண்டிருந்தார்கள்.
ତଦ୍ଧୂପଜ୍ୱାଲନକାଲେ ଲୋକନିୱହେ ପ୍ରାର୍ଥନାଂ କର୍ତୁଂ ବହିସ୍ତିଷ୍ଠତି
11 அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான்.
ସତି ସିଖରିଯୋ ଯସ୍ୟାଂ ୱେଦ୍ୟାଂ ଧୂପଂ ଜ୍ୱାଲଯତି ତଦ୍ଦକ୍ଷିଣପାର୍ଶ୍ୱେ ପରମେଶ୍ୱରସ୍ୟ ଦୂତ ଏକ ଉପସ୍ଥିତୋ ଦର୍ଶନଂ ଦଦୌ|
12 சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான்.
ତଂ ଦୃଷ୍ଟ୍ୱା ସିଖରିଯ ଉଦ୍ୱିୱିଜେ ଶଶଙ୍କେ ଚ|
13 அந்தத் தூதனோ அவனைப் பார்த்து: “சகரியாவே, பயப்படாதே; உனது மன்றாட்டு கேட்கப்பட்டது. உனது மனைவி எலிசபெத் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், நீ அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்.
ତଦା ସ ଦୂତସ୍ତଂ ବଭାଷେ ହେ ସିଖରିଯ ମା ଭୈସ୍ତୱ ପ୍ରାର୍ଥନା ଗ୍ରାହ୍ୟା ଜାତା ତୱ ଭାର୍ୟ୍ୟା ଇଲୀଶେୱା ପୁତ୍ରଂ ପ୍ରସୋଷ୍ୟତେ ତସ୍ୟ ନାମ ଯୋହନ୍ ଇତି କରିଷ୍ୟସି|
14 அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்;
କିଞ୍ଚ ତ୍ୱଂ ସାନନ୍ଦଃ ସହର୍ଷଶ୍ଚ ଭୱିଷ୍ୟସି ତସ୍ୟ ଜନ୍ମନି ବହୱ ଆନନ୍ଦିଷ୍ୟନ୍ତି ଚ|
15 அவன் கர்த்தருடைய பார்வையில் பெரியவனாயிருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை இரசத்தையோ, மதுபானத்தையோ அருந்த மாட்டான், அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவான்.
ଯତୋ ହେତୋଃ ସ ପରମେଶ୍ୱରସ୍ୟ ଗୋଚରେ ମହାନ୍ ଭୱିଷ୍ୟତି ତଥା ଦ୍ରାକ୍ଷାରସଂ ସୁରାଂ ୱା କିମପି ନ ପାସ୍ୟତି, ଅପରଂ ଜନ୍ମାରଭ୍ୟ ପୱିତ୍ରେଣାତ୍ମନା ପରିପୂର୍ଣଃ
16 அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பவும் கொண்டுவருவான்.
ସନ୍ ଇସ୍ରାଯେଲ୍ୱଂଶୀଯାନ୍ ଅନେକାନ୍ ପ୍ରଭୋଃ ପରମେଶ୍ୱରସ୍ୟ ମାର୍ଗମାନେଷ୍ୟତି|
17 அவன் எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் கர்த்தருக்கு முன்பாகப் போவான்; தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகள் பக்கமாகத் திருப்புவான், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக முன்னேற்பாடு செய்திருக்கிற மக்களை அவன் ஆயத்தம் செய்வான்” என்றான்.
ସନ୍ତାନାନ୍ ପ୍ରତି ପିତୃଣାଂ ମନାଂସି ଧର୍ମ୍ମଜ୍ଞାନଂ ପ୍ରତ୍ୟନାଜ୍ଞାଗ୍ରାହିଣଶ୍ଚ ପରାୱର୍ତ୍ତଯିତୁଂ, ପ୍ରଭୋଃ ପରମେଶ୍ୱରସ୍ୟ ସେୱାର୍ଥମ୍ ଏକାଂ ସଜ୍ଜିତଜାତିଂ ୱିଧାତୁଞ୍ଚ ସ ଏଲିଯରୂପାତ୍ମଶକ୍ତିପ୍ରାପ୍ତସ୍ତସ୍ୟାଗ୍ରେ ଗମିଷ୍ୟତି|
18 அப்பொழுது சகரியா அந்தத் தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் கிழவனாய் இருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாய் இருக்கிறாளே” என்றான்.
ତଦା ସିଖରିଯୋ ଦୂତମୱାଦୀତ୍ କଥମେତଦ୍ ୱେତ୍ସ୍ୟାମି? ଯତୋହଂ ୱୃଦ୍ଧୋ ମମ ଭାର୍ୟ୍ୟା ଚ ୱୃଦ୍ଧା|
19 அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் சமுகத்தில் நிற்கின்ற காபிரியேல்; உன்னுடன் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உனக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்.
ତତୋ ଦୂତଃ ପ୍ରତ୍ୟୁୱାଚ ପଶ୍ୟେଶ୍ୱରସ୍ୟ ସାକ୍ଷାଦ୍ୱର୍ତ୍ତୀ ଜିବ୍ରାଯେଲ୍ନାମା ଦୂତୋହଂ ତ୍ୱଯା ସହ କଥାଂ ଗଦିତୁଂ ତୁଭ୍ୟମିମାଂ ଶୁଭୱାର୍ତ୍ତାଂ ଦାତୁଞ୍ଚ ପ୍ରେଷିତଃ|
20 நீயோ எனது வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இவை நிகழும் நாள்வரைக்கும் நீ பேச முடியாமல் ஊமையாயிருப்பாய்; நான் சொன்னவையோ நியமித்த காலத்தில் நிறைவேறும்” என்றான்.
କିନ୍ତୁ ମଦୀଯଂ ୱାକ୍ୟଂ କାଲେ ଫଲିଷ୍ୟତି ତତ୍ ତ୍ୱଯା ନ ପ୍ରତୀତମ୍ ଅତଃ କାରଣାଦ୍ ଯାୱଦେୱ ତାନି ନ ସେତ୍ସ୍ୟନ୍ତି ତାୱତ୍ ତ୍ୱଂ ୱକ୍ତୁଂମଶକ୍ତୋ ମୂକୋ ଭୱ|
21 அதேவேளையில், சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள், அவன் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கிறான் என யோசிக்கத் தொடங்கினார்கள்.
ତଦାନୀଂ ଯେ ଯେ ଲୋକାଃ ସିଖରିଯମପୈକ୍ଷନ୍ତ ତେ ମଧ୍ୟେମନ୍ଦିରଂ ତସ୍ୟ ବହୁୱିଲମ୍ବାଦ୍ ଆଶ୍ଚର୍ୟ୍ୟଂ ମେନିରେ|
22 அவன் வெளியே வந்தபோது, அவர்களோடு பேச அவனால் முடியவில்லை. அவன் அவர்களுக்கு சைகை காட்டியதால், அவன் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறான் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவன் பேசமுடியாதவனாகவே இருந்தான்.
ସ ବହିରାଗତୋ ଯଦା କିମପି ୱାକ୍ୟଂ ୱକ୍ତୁମଶକ୍ତଃ ସଙ୍କେତଂ କୃତ୍ୱା ନିଃଶବ୍ଦସ୍ତସ୍ୟୌ ତଦା ମଧ୍ୟେମନ୍ଦିରଂ କସ୍ୟଚିଦ୍ ଦର୍ଶନଂ ତେନ ପ୍ରାପ୍ତମ୍ ଇତି ସର୍ୱ୍ୱେ ବୁବୁଧିରେ|
23 அவனது பணிசெய்யும் காலம் முடிவடைந்தபோது, அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
ଅନନ୍ତରଂ ତସ୍ୟ ସେୱନପର୍ୟ୍ୟାଯେ ସମ୍ପୂର୍ଣେ ସତି ସ ନିଜଗେହଂ ଜଗାମ|
24 இந்த நாட்களுக்குப்பின் அவன் மனைவி எலிசபெத் கருத்தரித்தாள், அவள் ஐந்து மாதங்களாக பிறர் கண்களில் படாதிருந்தாள்.
କତିପଯଦିନେଷୁ ଗତେଷୁ ତସ୍ୟ ଭାର୍ୟ୍ୟା ଇଲୀଶେୱା ଗର୍ବ୍ଭୱତୀ ବଭୂୱ
25 அப்பொழுது அவள், “கர்த்தரே இதைச் செய்தார், இந்த நாட்களில் அவர் எனக்குத் தயவுகாட்டி, என் மக்களிடையே எனக்கிருந்த அவமானத்தை நீக்கிவிட்டார்” என்றாள்.
ପଶ୍ଚାତ୍ ସା ପଞ୍ଚମାସାନ୍ ସଂଗୋପ୍ୟାକଥଯତ୍ ଲୋକାନାଂ ସମକ୍ଷଂ ମମାପମାନଂ ଖଣ୍ଡଯିତୁଂ ପରମେଶ୍ୱରୋ ମଯି ଦୃଷ୍ଟିଂ ପାତଯିତ୍ୱା କର୍ମ୍ମେଦୃଶଂ କୃତୱାନ୍|
26 ஆறாம் மாதத்தில், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஒரு பட்டணத்திற்கு இறைவன் காபிரியேல் தூதனை,
ଅପରଞ୍ଚ ତସ୍ୟା ଗର୍ବ୍ଭସ୍ୟ ଷଷ୍ଠେ ମାସେ ଜାତେ ଗାଲୀଲ୍ପ୍ରଦେଶୀଯନାସରତ୍ପୁରେ
27 ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்; அவள் தாவீதின் சந்ததியானாகிய யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள்.
ଦାଯୂଦୋ ୱଂଶୀଯାଯ ଯୂଷଫ୍ନାମ୍ନେ ପୁରୁଷାଯ ଯା ମରିଯମ୍ନାମକୁମାରୀ ୱାଗ୍ଦତ୍ତାସୀତ୍ ତସ୍ୟାଃ ସମୀପଂ ଜିବ୍ରାଯେଲ୍ ଦୂତ ଈଶ୍ୱରେଣ ପ୍ରହିତଃ|
28 கர்த்தருடைய தூதன் அவளிடம் போய், “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்” என்றான்.
ସ ଗତ୍ୱା ଜଗାଦ ହେ ଈଶ୍ୱରାନୁଗୃହୀତକନ୍ୟେ ତୱ ଶୁଭଂ ଭୂଯାତ୍ ପ୍ରଭୁଃ ପରମେଶ୍ୱରସ୍ତୱ ସହାଯୋସ୍ତି ନାରୀଣାଂ ମଧ୍ୟେ ତ୍ୱମେୱ ଧନ୍ୟା|
29 தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்து, இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள்.
ତଦାନୀଂ ସା ତଂ ଦୃଷ୍ଟ୍ୱା ତସ୍ୟ ୱାକ୍ୟତ ଉଦ୍ୱିଜ୍ୟ କୀଦୃଶଂ ଭାଷଣମିଦମ୍ ଇତି ମନସା ଚିନ୍ତଯାମାସ|
30 ஆனால் அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய்.
ତତୋ ଦୂତୋଽୱଦତ୍ ହେ ମରିଯମ୍ ଭଯଂ ମାକାର୍ଷୀଃ, ତ୍ୱଯି ପରମେଶ୍ୱରସ୍ୟାନୁଗ୍ରହୋସ୍ତି|
31 நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும்.
ପଶ୍ୟ ତ୍ୱଂ ଗର୍ବ୍ଭଂ ଧୃତ୍ୱା ପୁତ୍ରଂ ପ୍ରସୋଷ୍ୟସେ ତସ୍ୟ ନାମ ଯୀଶୁରିତି କରିଷ୍ୟସି|
32 அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார்.
ସ ମହାନ୍ ଭୱିଷ୍ୟତି ତଥା ସର୍ୱ୍ୱେଭ୍ୟଃ ଶ୍ରେଷ୍ଠସ୍ୟ ପୁତ୍ର ଇତି ଖ୍ୟାସ୍ୟତି; ଅପରଂ ପ୍ରଭୁଃ ପରମେଶ୍ୱରସ୍ତସ୍ୟ ପିତୁର୍ଦାଯୂଦଃ ସିଂହାସନଂ ତସ୍ମୈ ଦାସ୍ୟତି;
33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். (aiōn )
ତଥା ସ ଯାକୂବୋ ୱଂଶୋପରି ସର୍ୱ୍ୱଦା ରାଜତ୍ୱଂ କରିଷ୍ୟତି, ତସ୍ୟ ରାଜତ୍ୱସ୍ୟାନ୍ତୋ ନ ଭୱିଷ୍ୟତି| (aiōn )
34 அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள்.
ତଦା ମରିଯମ୍ ତଂ ଦୂତଂ ବଭାଷେ ନାହଂ ପୁରୁଷସଙ୍ଗଂ କରୋମି ତର୍ହି କଥମେତତ୍ ସମ୍ଭୱିଷ୍ୟତି?
35 அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார்.
ତତୋ ଦୂତୋଽକଥଯତ୍ ପୱିତ୍ର ଆତ୍ମା ତ୍ୱାମାଶ୍ରାଯିଷ୍ୟତି ତଥା ସର୍ୱ୍ୱଶ୍ରେଷ୍ଠସ୍ୟ ଶକ୍ତିସ୍ତୱୋପରି ଛାଯାଂ କରିଷ୍ୟତି ତତୋ ହେତୋସ୍ତୱ ଗର୍ବ୍ଭାଦ୍ ଯଃ ପୱିତ୍ରବାଲକୋ ଜନିଷ୍ୟତେ ସ ଈଶ୍ୱରପୁତ୍ର ଇତି ଖ୍ୟାତିଂ ପ୍ରାପ୍ସ୍ୟତି|
36 உனது உறவினராகிய எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கிறாள். மலடி எனப்பட்டவள் இப்பொழுது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன.
ଅପରଞ୍ଚ ପଶ୍ୟ ତୱ ଜ୍ଞାତିରିଲୀଶେୱା ଯାଂ ସର୍ୱ୍ୱେ ବନ୍ଧ୍ୟାମୱଦନ୍ ଇଦାନୀଂ ସା ୱାର୍ଦ୍ଧକ୍ୟେ ସନ୍ତାନମେକଂ ଗର୍ବ୍ଭେଽଧାରଯତ୍ ତସ୍ୟ ଷଷ୍ଠମାସୋଭୂତ୍|
37 இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை” என்றான்.
କିମପି କର୍ମ୍ମ ନାସାଧ୍ୟମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ|
38 அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான்.
ତଦା ମରିଯମ୍ ଜଗାଦ, ପଶ୍ୟ ପ୍ରଭେରହଂ ଦାସୀ ମହ୍ୟଂ ତୱ ୱାକ୍ୟାନୁସାରେଣ ସର୍ୱ୍ୱମେତଦ୍ ଘଟତାମ୍; ଅନନତରଂ ଦୂତସ୍ତସ୍ୟାଃ ସମୀପାତ୍ ପ୍ରତସ୍ଥେ|
39 அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு விரைவாகப் போனாள்;
ଅଥ କତିପଯଦିନାତ୍ ପରଂ ମରିଯମ୍ ତସ୍ମାତ୍ ପର୍ୱ୍ୱତମଯପ୍ରଦେଶୀଯଯିହୂଦାଯା ନଗରମେକଂ ଶୀଘ୍ରଂ ଗତ୍ୱା
40 அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் போய், எலிசபெத்தை வாழ்த்தினாள்.
ସିଖରିଯଯାଜକସ୍ୟ ଗୃହଂ ପ୍ରୱିଶ୍ୟ ତସ୍ୟ ଜାଯାମ୍ ଇଲୀଶେୱାଂ ସମ୍ବୋଧ୍ୟାୱଦତ୍|
41 மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய கருப்பையில் இருந்த குழந்தை துள்ளியது. அப்பொழுது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
ତତୋ ମରିଯମଃ ସମ୍ବୋଧନୱାକ୍ୟେ ଇଲୀଶେୱାଯାଃ କର୍ଣଯୋଃ ପ୍ରୱିଷ୍ଟମାତ୍ରେ ସତି ତସ୍ୟା ଗର୍ବ୍ଭସ୍ଥବାଲକୋ ନନର୍ତ୍ତ| ତତ ଇଲୀଶେୱା ପୱିତ୍ରେଣାତ୍ମନା ପରିପୂର୍ଣା ସତୀ
42 உரத்த குரலில் சொன்னதாவது: “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப்போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது!
ପ୍ରୋଚ୍ଚୈର୍ଗଦିତୁମାରେଭେ, ଯୋଷିତାଂ ମଧ୍ୟେ ତ୍ୱମେୱ ଧନ୍ୟା, ତୱ ଗର୍ବ୍ଭସ୍ଥଃ ଶିଶୁଶ୍ଚ ଧନ୍ୟଃ|
43 என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன்.
ତ୍ୱଂ ପ୍ରଭୋର୍ମାତା, ମମ ନିୱେଶନେ ତ୍ୱଯା ଚରଣାୱର୍ପିତୌ, ମମାଦ୍ୟ ସୌଭାଗ୍ୟମେତତ୍|
44 உனது வாழ்த்துதலின் சத்தம் எனது காதில்பட்டதுமே, எனது கருப்பையில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று.
ପଶ୍ୟ ତୱ ୱାକ୍ୟେ ମମ କର୍ଣଯୋଃ ପ୍ରୱିଷ୍ଟମାତ୍ରେ ସତି ମମୋଦରସ୍ଥଃ ଶିଶୁରାନନ୍ଦାନ୍ ନନର୍ତ୍ତ|
45 கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள்.
ଯା ସ୍ତ୍ରୀ ୱ୍ୟଶ୍ୱସୀତ୍ ସା ଧନ୍ୟା, ଯତୋ ହେତୋସ୍ତାଂ ପ୍ରତି ପରମେଶ୍ୱରୋକ୍ତଂ ୱାକ୍ୟଂ ସର୍ୱ୍ୱଂ ସିଦ୍ଧଂ ଭୱିଷ୍ୟତି|
46 அப்பொழுது மரியாள் சொன்னதாவது: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
ତଦାନୀଂ ମରିଯମ୍ ଜଗାଦ| ଧନ୍ୟୱାଦଂ ପରେଶସ୍ୟ କରୋତି ମାମକଂ ମନଃ|
47 என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.
ମମାତ୍ମା ତାରକେଶେ ଚ ସମୁଲ୍ଲାସଂ ପ୍ରଗଚ୍ଛତି|
48 ஏனெனில், அவர் தமது அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார். இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்;
ଅକରୋତ୍ ସ ପ୍ରଭୁ ର୍ଦୁଷ୍ଟିଂ ସ୍ୱଦାସ୍ୟା ଦୁର୍ଗତିଂ ପ୍ରତି| ପଶ୍ୟାଦ୍ୟାରଭ୍ୟ ମାଂ ଧନ୍ୟାଂ ୱକ୍ଷ୍ୟନ୍ତି ପୁରୁଷାଃ ସଦା|
49 வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்; பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.
ଯଃ ସର୍ୱ୍ୱଶକ୍ତିମାନ୍ ଯସ୍ୟ ନାମାପି ଚ ପୱିତ୍ରକଂ| ସ ଏୱ ସୁମହତ୍କର୍ମ୍ମ କୃତୱାନ୍ ମନ୍ନିମିତ୍ତକଂ|
50 அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காண்பிக்கிறார்.
ଯେ ବିଭ୍ୟତି ଜନାସ୍ତସ୍ମାତ୍ ତେଷାଂ ସନ୍ତାନପଂକ୍ତିଷୁ| ଅନୁକମ୍ପା ତଦୀଯା ଚ ସର୍ୱ୍ୱଦୈୱ ସୁତିଷ୍ଠତି|
51 அவர் தமது புயத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்; தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை அவர் சிதறடித்தார்.
ସ୍ୱବାହୁବଲତସ୍ତେନ ପ୍ରାକାଶ୍ୟତ ପରାକ୍ରମଃ| ମନଃକୁମନ୍ତ୍ରଣାସାର୍ଦ୍ଧଂ ୱିକୀର୍ୟ୍ୟନ୍ତେଽଭିମାନିନଃ|
52 ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார். ஆனால், தாழ்மையானவர்களையோ அவர் உயர்த்தினார்.
ସିଂହାସନଗତାଲ୍ଲୋକାନ୍ ବଲିନଶ୍ଚାୱରୋହ୍ୟ ସଃ| ପଦେଷୂଚ୍ଚେଷୁ ଲୋକାଂସ୍ତୁ କ୍ଷୁଦ୍ରାନ୍ ସଂସ୍ଥାପଯତ୍ୟପି|
53 அவர் பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார். ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார்.
କ୍ଷୁଧିତାନ୍ ମାନୱାନ୍ ଦ୍ରୱ୍ୟୈରୁତ୍ତମୈଃ ପରିତର୍ପ୍ୟ ସଃ| ସକଲାନ୍ ଧନିନୋ ଲୋକାନ୍ ୱିସୃଜେଦ୍ ରିକ୍ତହସ୍ତକାନ୍|
54 அவர் தமது வேலைக்காரனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார்.
ଇବ୍ରାହୀମି ଚ ତଦ୍ୱଂଶେ ଯା ଦଯାସ୍ତି ସଦୈୱ ତାଂ| ସ୍ମୃତ୍ୱା ପୁରା ପିତୃଣାଂ ନୋ ଯଥା ସାକ୍ଷାତ୍ ପ୍ରତିଶ୍ରୁତଂ| (aiōn )
55 நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். (aiōn )
ଇସ୍ରାଯେଲ୍ସେୱକସ୍ତେନ ତଥୋପକ୍ରିଯତେ ସ୍ୱଯଂ||
56 மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதற்குப் பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள்.
ଅନନ୍ତରଂ ମରିଯମ୍ ପ୍ରାଯେଣ ମାସତ୍ରଯମ୍ ଇଲୀଶେୱଯା ସହୋଷିତ୍ୱା ୱ୍ୟାଘୁଯ୍ୟ ନିଜନିୱେଶନଂ ଯଯୌ|
57 எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள்.
ତଦନନ୍ତରମ୍ ଇଲୀଶେୱାଯାଃ ପ୍ରସୱକାଲ ଉପସ୍ଥିତେ ସତି ସା ପୁତ୍ରଂ ପ୍ରାସୋଷ୍ଟ|
58 அவளுடைய அயலவர்களும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன்கூட மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ତତଃ ପରମେଶ୍ୱରସ୍ତସ୍ୟାଂ ମହାନୁଗ୍ରହଂ କୃତୱାନ୍ ଏତତ୍ ଶ୍ରୁତ୍ୱା ସମୀପୱାସିନଃ କୁଟୁମ୍ବାଶ୍ଚାଗତ୍ୟ ତଯା ସହ ମୁମୁଦିରେ|
59 அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள்.
ତଥାଷ୍ଟମେ ଦିନେ ତେ ବାଲକସ୍ୟ ତ୍ୱଚଂ ଛେତ୍ତୁମ୍ ଏତ୍ୟ ତସ୍ୟ ପିତୃନାମାନୁରୂପଂ ତନ୍ନାମ ସିଖରିଯ ଇତି କର୍ତ୍ତୁମୀଷୁଃ|
60 ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள்.
କିନ୍ତୁ ତସ୍ୟ ମାତାକଥଯତ୍ ତନ୍ନ, ନାମାସ୍ୟ ଯୋହନ୍ ଇତି କର୍ତ୍ତୱ୍ୟମ୍|
61 அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள்.
ତଦା ତେ ୱ୍ୟାହରନ୍ ତୱ ୱଂଶମଧ୍ୟେ ନାମେଦୃଶଂ କସ୍ୟାପି ନାସ୍ତି|
62 அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள்.
ତତଃ ପରଂ ତସ୍ୟ ପିତରଂ ସିଖରିଯଂ ପ୍ରତି ସଙ୍କେତ୍ୟ ପପ୍ରଚ୍ଛୁଃ ଶିଶୋଃ କିଂ ନାମ କାରିଷ୍ୟତେ?
63 அவன் ஒரு கற்பலகையைக் கேட்டுவாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினான்.
ତତଃ ସ ଫଲକମେକଂ ଯାଚିତ୍ୱା ଲିଲେଖ ତସ୍ୟ ନାମ ଯୋହନ୍ ଭୱିଷ୍ୟତି| ତସ୍ମାତ୍ ସର୍ୱ୍ୱେ ଆଶ୍ଚର୍ୟ୍ୟଂ ମେନିରେ|
64 உடனே அவனது வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் இறைவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான்.
ତତ୍କ୍ଷଣଂ ସିଖରିଯସ୍ୟ ଜିହ୍ୱାଜାଡ୍ୟେଽପଗତେ ସ ମୁଖଂ ୱ୍ୟାଦାଯ ସ୍ପଷ୍ଟୱର୍ଣମୁଚ୍ଚାର୍ୟ୍ୟ ଈଶ୍ୱରସ୍ୟ ଗୁଣାନୁୱାଦଂ ଚକାର|
65 அயலவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தக் காரியங்களைக்குறித்து, யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள்.
ତସ୍ମାଚ୍ଚତୁର୍ଦିକ୍ସ୍ଥାଃ ସମୀପୱାସିଲୋକା ଭୀତା ଏୱମେତାଃ ସର୍ୱ୍ୱାଃ କଥା ଯିହୂଦାଯାଃ ପର୍ୱ୍ୱତମଯପ୍ରଦେଶସ୍ୟ ସର୍ୱ୍ୱତ୍ର ପ୍ରଚାରିତାଃ|
66 இதைக் கேள்விப்பட்ட எல்லோரும் வியப்படைந்து, “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்றார்கள் கர்த்தருடைய கரம் அந்த பிள்ளையோடு இருந்தது.
ତସ୍ମାତ୍ ଶ୍ରୋତାରୋ ମନଃସୁ ସ୍ଥାପଯିତ୍ୱା କଥଯାମ୍ବଭୂୱୁଃ କୀଦୃଶୋଯଂ ବାଲୋ ଭୱିଷ୍ୟତି? ଅଥ ପରମେଶ୍ୱରସ୍ତସ୍ୟ ସହାଯୋଭୂତ୍|
67 அந்தப் பிள்ளையின் தகப்பனான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது:
ତଦା ଯୋହନଃ ପିତା ସିଖରିଯଃ ପୱିତ୍ରେଣାତ୍ମନା ପରିପୂର୍ଣଃ ସନ୍ ଏତାଦୃଶଂ ଭୱିଷ୍ୟଦ୍ୱାକ୍ୟଂ କଥଯାମାସ|
68 “இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக, அவர் வந்து தம்முடைய மக்களை மீட்டுக்கொண்டார்.
ଇସ୍ରାଯେଲଃ ପ୍ରଭୁ ର୍ୟସ୍ତୁ ସ ଧନ୍ୟଃ ପରମେଶ୍ୱରଃ| ଅନୁଗୃହ୍ୟ ନିଜାଲ୍ଲୋକାନ୍ ସ ଏୱ ପରିମୋଚଯେତ୍|
69 அவர் தமது தாசனாகிய தாவீதின் வம்சத்திலிருந்து, நாம் இரட்சிப்பு அடைவதற்கான இரட்சணியக்கொம்பை எழுப்பியிருக்கிறார்.
ୱିପକ୍ଷଜନହସ୍ତେଭ୍ୟୋ ଯଥା ମୋଚ୍ୟାମହେ ୱଯଂ| ଯାୱଜ୍ଜୀୱଞ୍ଚ ଧର୍ମ୍ମେଣ ସାରଲ୍ୟେନ ଚ ନିର୍ଭଯାଃ|
70 அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். (aiōn )
ସେୱାମହୈ ତମେୱୈକମ୍ ଏତତ୍କାରଣମେୱ ଚ| ସ୍ୱକୀଯଂ ସୁପୱିତ୍ରଞ୍ଚ ସଂସ୍ମୃତ୍ୟ ନିଯମଂ ସଦା|
71 நம்முடைய பகைவரிடமிருந்தும், நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும் நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும்,
କୃପଯା ପୁରୁଷାନ୍ ପୂର୍ୱ୍ୱାନ୍ ନିକଷାର୍ଥାତ୍ତୁ ନଃ ପିତୁଃ| ଇବ୍ରାହୀମଃ ସମୀପେ ଯଂ ଶପଥଂ କୃତୱାନ୍ ପୁରା|
72 அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நம்முடைய தந்தையருக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருந்தார்.
ତମେୱ ସଫଲଂ କର୍ତ୍ତଂ ତଥା ଶତ୍ରୁଗଣସ୍ୟ ଚ| ଋତୀଯାକାରିଣଶ୍ଚୈୱ କରେଭ୍ୟୋ ରକ୍ଷଣାଯ ନଃ|
73 அவர் நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டு:
ସୃଷ୍ଟେଃ ପ୍ରଥମତଃ ସ୍ୱୀଯୈଃ ପୱିତ୍ରୈ ର୍ଭାୱିୱାଦିଭିଃ| (aiōn )
74 நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, நமது நாட்களெல்லாம் பயமின்றிப் பணிசெய்யும்படி,
ଯଥୋକ୍ତୱାନ୍ ତଥା ସ୍ୱସ୍ୟ ଦାଯୂଦଃ ସେୱକସ୍ୟ ତୁ|
75 பரிசுத்தத்திலும் நீதியிலும் அவருக்கு முன்பாக என்றும் வாக்குக் கொடுத்திருந்தார்.
ୱଂଶେ ତ୍ରାତାରମେକଂ ସ ସମୁତ୍ପାଦିତୱାନ୍ ସ୍ୱଯମ୍|
76 “என் பிள்ளையே, நீயோ, உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, அவருக்கு முன்பாகப் போவாய்.
ଅତୋ ହେ ବାଲକ ତ୍ୱନ୍ତୁ ସର୍ୱ୍ୱେଭ୍ୟଃ ଶ୍ରେଷ୍ଠ ଏୱ ଯଃ| ତସ୍ୟୈୱ ଭାୱିୱାଦୀତି ପ୍ରୱିଖ୍ୟାତୋ ଭୱିଷ୍ୟସି| ଅସ୍ମାକଂ ଚରଣାନ୍ କ୍ଷେମେ ମାର୍ଗେ ଚାଲଯିତୁଂ ସଦା| ଏୱଂ ଧ୍ୱାନ୍ତେଽର୍ଥତୋ ମୃତ୍ୟୋଶ୍ଛାଯାଯାଂ ଯେ ତୁ ମାନୱାଃ|
77 நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தின் நிமித்தம் அவருடைய மக்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலமாய், இரட்சிப்பின் அறிவைக் கொடுப்பாய்.
ଉପୱିଷ୍ଟାସ୍ତୁ ତାନେୱ ପ୍ରକାଶଯିତୁମେୱ ହି| କୃତ୍ୱା ମହାନୁକମ୍ପାଂ ହି ଯାମେୱ ପରମେଶ୍ୱରଃ|
78 இருளில் வாழ்கிறவர்களுக்கும் மரண இருளில் இருக்கிறவர்களுக்கும் ஒளியைத் தருவதற்கும்,
ଊର୍ଦ୍ୱ୍ୱାତ୍ ସୂର୍ୟ୍ୟମୁଦାଯ୍ୟୈୱାସ୍ମଭ୍ୟଂ ପ୍ରାଦାତ୍ତୁ ଦର୍ଶନଂ| ତଯାନୁକମ୍ପଯା ସ୍ୱସ୍ୟ ଲୋକାନାଂ ପାପମୋଚନେ|
79 நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்துவதற்கும், பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.”
ପରିତ୍ରାଣସ୍ୟ ତେଭ୍ୟୋ ହି ଜ୍ଞାନୱିଶ୍ରାଣନାଯ ଚ| ପ୍ରଭୋ ର୍ମାର୍ଗଂ ପରିଷ୍କର୍ତ୍ତୁଂ ତସ୍ୟାଗ୍ରାଯୀ ଭୱିଷ୍ୟସି||
80 அந்தப் பிள்ளை வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தது; அவன் வெளியரங்கமாக இஸ்ரயேலரின்முன் வரும் காலம்வரைக்கும் பாலைவனத்தில் வாழ்ந்தான்.
ଅଥ ବାଲକଃ ଶରୀରେଣ ବୁଦ୍ଧ୍ୟା ଚ ୱର୍ଦ୍ଧିତୁମାରେଭେ; ଅପରଞ୍ଚ ସ ଇସ୍ରାଯେଲୋ ୱଂଶୀଯଲୋକାନାଂ ସମୀପେ ଯାୱନ୍ନ ପ୍ରକଟୀଭୂତସ୍ତାସ୍ତାୱତ୍ ପ୍ରାନ୍ତରେ ନ୍ୟୱସତ୍|