< லூக்கா 1 >

1 மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின் விவரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் முன்வந்தார்கள்.
ଏ ତିଅପିଲସ୍‌, ଜୁୟ୍‌ ଲକ୍‌ମଃନ୍ ଅଃମାର୍‌ ବିତ୍ରେ ଗଃଟିଜାୟ୍‌ରିଲା ଗଃଟ୍‍ଣା ମଃନାର୍‌ କଃତେକ୍‌ କଃତାମଃନ୍‌ ଟିକ୍‌କଃରି ଲେକୁକ୍‌ ମଃନ୍ କଃଲାୟ୍‌,
2 துவக்கத்திலிருந்து கண்கண்ட சாட்சிகளாகவும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியர்களாகவும் இருந்த அவர்கள், எங்களுக்குக் கொடுக்கப்பட்டபடியே எழுதினார்கள்.
ସେରି ନିଜାର୍‌ ଆକାୟ୍‌ ଦଃକି ରିଲାର୍‌ ଜାଗୁଆଳି ଆର୍‌ ନିକ କବୁର୍‌ ପର୍ଚାର୍‌ କଃର୍ତା ଲକ୍‌ମଃନ୍ ଅଃମିମଃନ୍‌କ୍‌ ଜାଣାୟ୍‌ଲା ହଃର୍କାରେ,
3 நானும் உமக்கு அவற்றை ஒழுங்காக எழுதுவதற்குத் தீர்மானித்தேன். துவக்கத்திலிருந்து நடந்த எல்லாவற்றையும் கவனமாய் விசாரித்தறிந்து, இதை எழுதுகிறேன்.
ଏ ମାୟ୍‌ନାର୍‌ ତିଅପିଲ ମୁଳେ ହୁଣି ସଃବୁ କଃତା ଗଟେକ୍‌ ଗଟେକ୍‌ କଃରି ମିସାୟ୍‌ ଆଗେହୁଣି ଅୟ୍‌ ଆସ୍ତା କଃତାମଃନ୍‌ ତର୍‌ ଗିନେ ଲେକୁକ୍‌ ମୁଁୟ୍‌ ହେଁ ଟିକ୍‌ ବଃଲି ମଃନେ ବାବ୍‌ଲେ ।
4 இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விஷயங்கள் நிச்சயமாக உண்மையானவை என்பதை நீர் அறிந்துகொள்ளலாம்.
ଜଃନ୍‌କଃରି ଜୁୟ୍‌ ଜୁୟ୍‌ ସଃବୁ କଃତା ସିକି ଆଚ୍‌ସି ସେ ସଃବୁ କଃତାକ୍‌ ବାୟ୍‌ଦ୍‌ରେ ଜାଣୁ ହାର୍ସି ।
5 ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், சகரியா என்னும் பெயருடைய ஒரு ஆசாரியன் இருந்தான். இவன் அபியாவின் ஆசாரியப் பிரிவைச் சேர்ந்தவன். இவனுடைய மனைவி எலிசபெத்தும், ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியைச் சேர்ந்தவள்.
ହେରଦ୍‌ ଜିଉଦା ଦେସାର୍‌ ରଃଜା ରିଲା ବଃଳ୍‌ ଅବିୟ ଜାଜକ୍‌ ଦଃଳାର୍‌ ଜିକରିଅ ନାଉଁଆର୍‌ ଗଟେକ୍‌ ଜାଜକ୍‌ ରିଲା; ତାର୍‌ ଡକୁର୍ସିର୍‌ ନାଉଁ ଏଲିସାବେତ୍‌, ସେ ହାରଣ୍‌ ଜାଜକ୍‌ ବଃଉଁସାର୍‌ ରିଲି ।
6 அவர்கள் இருவரும் இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள். மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டார்கள்.
ସେମଃନ୍ ଦୁୟ୍‌ ଲକ୍‌ ହେଁ ଇସ୍ୱରାର୍‌ ସଃବୁ ନିୟମ୍‌ ଆର୍‌ ବିଦି ମାନ୍‌ତି ରିଲାୟ୍‌ ଆର୍‌ ମାପ୍ରୁର୍‌ ଆକାୟ୍‌ ଦଃର୍ମି ଲକ୍‌ ଅୟ୍‌ରିଲାୟ୍‌ ।
7 ஆனாலும் எலிசபெத் மலடியாக இருந்ததினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; அவர்கள் இருவரும், இப்பொழுது வயது சென்றவர்களாய் இருந்தார்கள்.
ମଃତର୍‌ ସେମଃନାର୍‌ ହିଲାମଃନ୍‌ ନଃରିଲାୟ୍‌, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଏଲିସାବେତ୍‌ ବାଞ୍ଜି ରିଲି, ଆରେକ୍‌ ସେ ଦୁୟ୍‌ ଲକ୍‌ ବୁଡାବୁଡି ଅୟ୍‌ରିଲାୟ୍‌ ।
8 ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் பணிபுரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக ஆசாரியப் பணியைச் செய்தான்.
ଜିକରିଅ ଅଃହ୍‌ଣାର୍‌ ଦଃଳାର୍‌ ହାଳୁ ହଃର୍କାରେ ଇସ୍ୱରାର୍‌ ମନ୍ଦିର୍‌ ଲଃଗେ ଜାୟ୍‌ ଜାଜକ୍‌ କାମ୍‌ କଃର୍ତି ରିଲା ବଃଳ୍‌,
9 ஒரு நாள் ஆசாரியர்களின் வழக்கத்தின்படி கடமைகளைச் செய்வதற்கு சீட்டு போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் போய் தூபங்காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டான்.
ଜାଜକ୍‌ କାମାର୍‌ ବିଦି ହଃର୍କାରେ କେଳି ବାଚିକଃରି ତାକ୍‌ ମାପ୍ରୁର୍‌ ମନ୍ଦିର୍‌ ବିତ୍ରେ ହୁରି କଃରି ଦୁହ୍‌ଣି ହଡାଉଁକ୍‌ ହଃଳ୍‌ଲି ।
10 தூபங்காட்டும் வேளை வந்தபோது வழிபாட்டிற்கு கூடிவந்த மக்கள் வெளியே மன்றாடிக்கொண்டிருந்தார்கள்.
ଆର୍‌ ସେ ଦୁହ୍‌ଣି ହଡାଉତା ବଃଳ୍‌ ସଃର୍ନେ ଲକ୍‌ମଃନ୍ଦା ହଃଦାୟ୍‌ ପାର୍ତ୍‌ନା କଃର୍ତି ରିଲାୟ୍‌ ।
11 அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான்.
ସଃଡେବଃଳ୍‌ ମାପ୍ରୁର୍‌ ଗଟେକ୍‌ ଦୁତ୍‌ ଦୁହ୍‌ଣି ହଡାଉତା ବେଦିର୍‌ କାତା ବାଟ୍ୟା ଆସି ଟିଆ ଅୟ୍‌ ତାକ୍‌ ଦଃକାୟ୍‌ ଅୟ୍‌ଲା ।
12 சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான்.
ଜିକରିଅ ତାକ୍‌ ଦଃକି, କାବା ଅୟ୍‌ଲା ଆର୍‌ ଡିରି ଗଃଲା ।
13 அந்தத் தூதனோ அவனைப் பார்த்து: “சகரியாவே, பயப்படாதே; உனது மன்றாட்டு கேட்கப்பட்டது. உனது மனைவி எலிசபெத் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், நீ அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்.
ମଃତର୍‌ ଦୁତ୍‌ ତାକ୍‌ କୟ୍‌ଲା, “ଜିକରିଅ, ଡିର୍‌ ନାୟ୍‌, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ତର୍‌ ପାର୍ତନା ଇସ୍ୱର୍‌ ସୁଣି ଆଚେ, ଆର୍‌ ତର୍‌ ଡକୁର୍ଦି ଏଲିସାବେତ୍‌ ତର୍‌ ଗିନେ ଗଟେକ୍‌ ହିଲା ଜଃଲମ୍‌ କଃରେଦ୍‌, ଆର୍‌ ତୁୟ୍‌ ତାର୍‌ ନାଉଁ ଜହନ୍‌ ସଃଙ୍ଗାଉସି ।
14 அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்;
ତାର୍‌ ଗିନେ ତୁମିମଃନ୍ ବଃଡେ ସଃର୍ଦା କଃରାସ୍‌, ଆର୍‌ ବିନ୍ ସଃବୁ ଲକ୍‌ମଃନ୍ ହେଁ ତାର୍‌ ଜଃଲମେ ସଃର୍ଦା କଃର୍ତି ।
15 அவன் கர்த்தருடைய பார்வையில் பெரியவனாயிருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை இரசத்தையோ, மதுபானத்தையோ அருந்த மாட்டான், அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவான்.
ଜଃନ୍‌କଃରି ସେ ମାପ୍ରୁର୍‌ ଲଃଗେ ଗଟେକ୍‌ ବଃଡ୍ ଲକ୍‌ ଅୟ୍‌ଦ୍‌, ସେ କଃବେ ହେଁ ଅଙ୍ଗୁର୍‌ ରଃସ୍‌ କି ଲଃନ୍ଦାମଃଦ୍‌ ନଃକାୟ୍‌, ଆର୍‌ ସେ ଆୟ୍‌ସିର୍‌ ହେଟେ ହୁଣି ହେଁ ପବିତ୍ର ଆତ୍ମାୟ୍‌ ହୁର୍ନ୍‌ ଅୟ୍‌ଦ୍‌ ।
16 அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பவும் கொண்டுவருவான்.
ଆର୍‌ ସେ ଇସ୍ରାଏଲ୍‌ ଜାତିର୍‌ କଃତେକ୍‌ ଲକ୍‌ମଃନ୍‌କେ ସେମଃନାର୍‌ ସଃର୍ଗାର୍‌ ମାପ୍ରୁ ଇସ୍ୱରାର୍‌ ହାକ୍‌ ଲେଉଟାୟ୍‌ ଆଣେଦ୍‌ ।
17 அவன் எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் கர்த்தருக்கு முன்பாகப் போவான்; தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகள் பக்கமாகத் திருப்புவான், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக முன்னேற்பாடு செய்திருக்கிற மக்களை அவன் ஆயத்தம் செய்வான்” என்றான்.
ଉବାସି ଆୟ୍‌ସିମଃନାର୍‌ ମଃନ୍‌, ହିଲାମଃନାର୍‌ ଗିନେ ଆର୍‌ ଅମାନ୍ୟାମଃନ୍‌କେ ଦଃର୍ମି ଲକ୍‌ମଃନାର୍‌ ଗ୍ୟାନ୍ ସଃଙ୍ଗ୍ ମାନୁକ୍‌ ଲେଉଟାଉଁକ୍‌ ଆର୍‌ ମାପ୍ରୁର୍‌ ଗିନେ ଲକ୍‌ମଃନ୍‌କେ ତିଆର୍‌ କଃରୁକେ ଏଲିୟର୍‌ ଆତ୍ମା ଆର୍‌ ସଃକାତ୍‌ ସଃଙ୍ଗ୍ ତାର୍‌ ଆଗେ ଇଣ୍ଡେଦ୍‌ ।”
18 அப்பொழுது சகரியா அந்தத் தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் கிழவனாய் இருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாய் இருக்கிறாளே” என்றான்.
ଇତାର୍‌ ଗିନେ ଜିକରିଅ ଦୁତ୍‌କେ ହଃଚାର୍ଲା, “ଇରି ଗଃଟେଦ୍‌ ବଃଲି ମୁଁୟ୍‌ କଃନ୍‌କଃରି ଜାଣିନ୍ଦ୍? କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ମୁଁୟ୍‌ ତ ବୁଡା ଅୟ୍‌ଲେବେ ଆର୍‌ ମର୍‌ ବୁଡିର୍‌ ବଃୟ୍‌ସ୍‌ ହେଁ ଅଃଦିକ୍‌ ଅୟ୍‌ଲିନି ।”
19 அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் சமுகத்தில் நிற்கின்ற காபிரியேல்; உன்னுடன் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உனக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்.
ଦୁତ୍‌ ତାକ୍‌ ଉତୁର୍‌ ଦିଲା, “ମୁଁୟ୍‌ ଗାବ୍ରିଏଲ୍‌, ମୁଁୟ୍‌ ଇସ୍ୱରାର୍‌ ଲଃଗେ ଟିଅଉତା ଦୁତ୍‌, ଆର୍‌ ତକେ ଇ କଃତା କଃଉଁକେ ଆର୍‌ ଇ ସଃର୍ଦାର୍‌ କବୁର୍‌ ପର୍ଚାର୍‌ କଃରୁକେ ମାପ୍ରୁ ମକ୍‌ ହଟାୟ୍‌ଲା ଆଚେ ।
20 நீயோ எனது வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இவை நிகழும் நாள்வரைக்கும் நீ பேச முடியாமல் ஊமையாயிருப்பாய்; நான் சொன்னவையோ நியமித்த காலத்தில் நிறைவேறும்” என்றான்.
ଦଃକ୍‌ ଇସଃବୁ ନଃଗଟ୍‌ତା ଦିନ୍ ହଃତେକ୍‌ ତୁୟ୍‌ ଗୁଲା ଅୟ୍‌ କଃତା କଃଉ ନଃହାର୍‌ସି, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ମର୍‌ ଜୁୟ୍‌ ସଃବୁ କଃତା ଟିକ୍‌ ବେଳାୟ୍‌ ହୁରୁଣ୍ ଅୟ୍‌ଦ୍‌, ଇସଃବୁ କଃତାକ୍‌ ତୁୟ୍‌ ସଃତ୍‌ ନଃକେଲିସ୍‌ ।”
21 அதேவேளையில், சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள், அவன் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கிறான் என யோசிக்கத் தொடங்கினார்கள்.
ଇ ବିତ୍ରେ ଲକ୍‌ମଃନ୍ ଜିକରିଅକେ ହଃଦାୟ୍‌ ଜାଗିରିଲାୟ୍‌, ଆର୍‌ ମନ୍ଦିର୍‌ ବିତ୍ରେ ସେ ବୁତେକ୍‌ଗଃଳି ରିଲାଲାଗି ସେମଃନ୍ କାବା ଅଃଉତିରିଲାୟ୍‌ ।
22 அவன் வெளியே வந்தபோது, அவர்களோடு பேச அவனால் முடியவில்லை. அவன் அவர்களுக்கு சைகை காட்டியதால், அவன் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறான் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவன் பேசமுடியாதவனாகவே இருந்தான்.
ମଃତର୍‌ ସେ ବାରାୟ୍‌ ଆସି ସେମଃନ୍‌କେ ଟଣ୍ଡ୍ ଅଃଉଁକେ ନଃହାର୍‌ଲା, ଇତାକ୍‌ ସେ ମନ୍ଦିର୍‌ ବିତ୍ରେ ଦଃର୍ସନ୍‌ ହାଇଆଚେ ବଃଲି ସେମଃନ୍ ଜାଣ୍‌ଲାୟ୍‌ ଆର୍‌ ସେ ସେମଃନ୍‌କେ ଆତ୍‌ସଃଗ୍ୟା କଃରୁକେ ଦଃର୍ଲା, ଆର୍‌ ଗୁଲା ଅୟ୍‌ ରିଲା ।
23 அவனது பணிசெய்யும் காலம் முடிவடைந்தபோது, அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
ତାର୍‌ହଃଚେ ତାର୍‌ ସେବା କଃର୍ତା ହାଳୁ ଦିନ୍ ସଃବୁ ସଃର୍ଲାକ୍‌, ସେ ନିଜାର୍‌ ଗଃରେ ବାଉଳି ଗଃଲା ।
24 இந்த நாட்களுக்குப்பின் அவன் மனைவி எலிசபெத் கருத்தரித்தாள், அவள் ஐந்து மாதங்களாக பிறர் கண்களில் படாதிருந்தாள்.
କଃତି ଦିନ୍ ଗଃଲା ହଃଚେ ତାର୍‌ ଡକୁର୍ସି ଏଲିସାବେତ୍‌ ଆଙ୍ଗେ ଅୟ୍‌ଲି, ଆର୍‌ ସେ ହାଁଚ୍ ମାସ୍‌ ହଃତେକ୍‌ ସେ କଃତା କାକେ ହେଁ ନଃକୟ୍‌ଲି ।
25 அப்பொழுது அவள், “கர்த்தரே இதைச் செய்தார், இந்த நாட்களில் அவர் எனக்குத் தயவுகாட்டி, என் மக்களிடையே எனக்கிருந்த அவமானத்தை நீக்கிவிட்டார்” என்றாள்.
ଆର୍‌ ମଃନେ ମଃନେ କୟ୍‌ଲି, “ଲକ୍‌ମଃନାର୍‌ ଲିନ୍ଦା ମର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଦୁର୍‌ କଃରୁକେ ମାପ୍ରୁ ମର୍‌ ଉହ୍ରେ ଦଃୟା କଃରି ମକ୍‌ ଇରଃକମ୍‌ କଃଲା ଆଚେ ।”
26 ஆறாம் மாதத்தில், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஒரு பட்டணத்திற்கு இறைவன் காபிரியேல் தூதனை,
ଏଲିସାବେତ୍‌ ଆଙ୍ଗେ ଅୟ୍‌ ଚଅ ମାସ୍‌ ଅୟ୍‌ଲା ହଃଚେ, ଗାବ୍ରିଏଲ୍‌ ଦୁତ୍‌ ଇସ୍ୱର୍‌ ଲଃଗେହୁଣି ଗାଲିଲି ରାଜିର୍‌ ନାଜରିତ୍‌ ନାଉଁଆର୍‌ ଗଃଳେ ଗଟେକ୍‌ ଦଃଙ୍ଗ୍‌ଳି ଟକିର୍‌ ଚଃମେ ଆୟ୍‌ଲା ।
27 ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்; அவள் தாவீதின் சந்ததியானாகிய யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள்.
ସେ ଦଃଙ୍ଗ୍‌ଳି ଟକିକେ ଦାଉଦ୍‌ ବଃଉଁସାର୍‌ ଜସେପ୍ ନାଉଁଆର୍‌ ଗଟେକ୍‌ ମାନାୟ୍‌ ସଃଙ୍ଗ୍ ବିବା ଅଃଉଁକେ ମାଗ୍‌ଣି କଃରି ରିଲାୟ୍‌, ସେ ଦଃଙ୍ଗ୍‌ଳି ଟକିର୍‌ ନାଉଁ ମରିୟମ୍‌ ।
28 கர்த்தருடைய தூதன் அவளிடம் போய், “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்” என்றான்.
ସେ ଦୁତ୍‌ ଗଃରେ ହୁରି ତାର୍‌ ଲଃଗେ ଆସି କୟ୍‌ଲା, “ଏ ଦଃୟାର୍‌ ଜୟ୍‌ଗ୍‌ ଟକି, ତର୍‌ ସୁସ୍ତା ଅଃଉଅ, ମାପ୍ରୁ ତର୍‌ ସଃଙ୍ଗ୍ ଆଚେ ।”
29 தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்து, இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள்.
ମଃତର୍‌ ମରିୟମ୍‌ ଇ କଃତାକ୍‌ ସୁଣି ଜଃବର୍‌ କାବା ଅୟ୍‌ଲି ଆର୍‌ ଇ କଃତାର୍‌ ବାବ୍‌ କାୟ୍‌ରି ବଃଲି ମଃନେ ମଃନେ ବାବୁକ୍‌ ଦଃର୍ଲି ।
30 ஆனால் அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய்.
ସେତାର୍‌ ଗିନେ ଦୁତ୍‌ ତାକ୍‌ କୟ୍‌ଲା, “ଏ ମରିୟମ୍‌, ଡିର୍‌ ନାୟ୍‌, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଇସ୍ୱର୍‌ ତକେ ଦଃୟା କଃରି ଆଚେ ।
31 நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும்.
ଆର୍‌ ଦଃକ୍‌, ତୁୟ୍‌ ଆଙ୍ଗେ ଅୟ୍‌କଃରି ଗଟେକ୍‌ ହିଲା ଜଃଲମ୍‌ କଃର୍ସି, ଆର୍‌ ତାର୍‌ ନାଉଁ ଜିସୁ ବଃଲି ଦିଆସ୍‌ ।
32 அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார்.
ସେ ସଃବ୍‌କେ ଉଟ୍ୟା ଅୟ୍‌ଦ୍‌, ଆର୍‌ ସେ ସଃବ୍‌କେ ବଃଡ୍ ମାପ୍ରୁର୍‌ ହୟ୍‌ସି ବଃଲି ଡାକେ ହୁଟେଦ୍‌; ଆର୍‌ ଇସ୍ୱର୍‌ ତାକ୍‌ ତାର୍‌ ଦାଦିବାବୁ ଦାଉଦାର୍‌ ହର୍‌ ସିଙ୍ଗାସଣ୍‌ ଦଃୟ୍‌ଦ୍‌ ।
33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். (aiōn g165)
ସେ ଜାକୁବକ୍‌ ବଃଉଁସ୍‌ ଉହ୍ରେ ଜୁଗେଜୁଗେ ରାଜ୍‌ କଃରେଦ୍‌, ଆର୍‌ ତାର୍‌ ରାଇଜ୍‌ କଃବେ ସେସ୍‌ ନହୟ୍‌ ।” (aiōn g165)
34 அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள்.
ମଃତର୍‌ ମରିୟମ୍‌ ଦୁତ୍‌କେ କୟ୍‌ଲି, “ଇରି କଃନ୍‌କଃରି ଅୟ୍‌ଦ୍‌? ମୁଁୟ୍‌ ତ କୁୟ୍‌ ଅଃଣ୍ଡ୍ରାକେ ହେଁ ନଃଜାଣି ।”
35 அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார்.
ଦୁତ୍‌ ତାକ୍‌ ଉତୁର୍‌ ଦିଲା, “ପବିତ୍ର ଆତ୍ମା ତର୍‌ ଉହ୍ରେ ଉତ୍ରେଦ୍‌ ଆର୍‌ ସଃବ୍‌କେ ଉଟ୍ୟା ଇସ୍ୱର୍‌ ସଃକ୍ତି ତକେ ଦଃରେଦ୍‌, ଆର୍‌ ସେତାର୍‌ଗିନେ ଜୁୟ୍‌ ହିଲା ଜଃଲମ୍‌ ଅୟ୍‌ଦ୍‌, ସେ ପବିତ୍ର ଆର୍‌ ସେ ମାପ୍ରୁର୍‌ ହୟ୍‌ସି ବଃଲାୟ୍‌ ଅୟ୍‌ଦ୍‌ ।
36 உனது உறவினராகிய எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கிறாள். மலடி எனப்பட்டவள் இப்பொழுது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன.
ଆରେକ୍‌ ଦଃକ୍‌, ତର୍‌ ନିଜାର୍‌ ଲକ୍‌ ଏଲିସାବେତ୍‌ ହେଁ ବୁଡି ବଃଇଁସେ ଗଟେକ୍‌ ହିଲାକ୍‌ ହେଟେ ଦଃରିଆଚେ । ଜେ ବାଞ୍ଜି ବଃଲି ଡାକେ ହୁଟିରିଲି, ତାକ୍‌ ଅଃବେ ଆଙ୍ଗେ ଅୟ୍‌କଃରି ଚଅ ମାସ୍‌ ଅୟ୍‌ଲିନି ।
37 இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை” என்றான்.
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଇସ୍ୱରାର୍‌ କୟ୍‌ଲା ଟଣ୍ଡାର୍‌ କଃତା କଃବେ ହେଁ ନଃହିଟେ ।”
38 அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான்.
ଆର୍‌ ମରିୟମ୍‌ କୟ୍‌ଲି, “ଦଃକ୍‌, ମୁଁୟ୍‌ ତ ମାପ୍ରୁର୍‌ ଗଟେକ୍‌ ଗତିଦଃଙ୍ଗ୍‌ଳି; ତୁୟ୍‌ କୟ୍‌ଲା କଃତା ହର୍‌ ମର୍‌ ଜିବନେ ଗଃଟ ।” ତାର୍‌ହଃଚେ ଦୁତ୍‌ ତାର୍‌ ଚଃମେହୁଣି ବାରାୟ୍‌ ଗଃଲା ।
39 அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு விரைவாகப் போனாள்;
ସଃଡେବଃଳ୍‌ ମରିୟମ୍‌ ଉଟିକଃରି ଡଙ୍ଗୁର୍‌ ହଲି ତଃୟ୍‌ ରିଲା ଜିଉଦା ରାଜିର୍‌ ଗଟେକ୍‌ ଗଃଳେ ସେଦାହ୍ରେ ଗଃଲି ।
40 அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் போய், எலிசபெத்தை வாழ்த்தினாள்.
ଆରେକ୍‌ ଜିକରିଅର୍‌ ଗଃର୍‌ ବିତ୍ରେ ହୁରି ଏଲିସାବେତ୍‌କେ ଜୁଆର୍‌ କଃଲି ।
41 மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய கருப்பையில் இருந்த குழந்தை துள்ளியது. அப்பொழுது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
ଆର୍‌ ଏଲିସାବେତ୍‌ ମରିୟମାର୍‌ ଜୁଆର୍‌ ସୁଣ୍‌ଲା ଦାହ୍ରେ ଏଲିସାବେତାର୍‌ ହେଟେ ରିଲା ହିଲା ନାଚୁକ୍‌ ଦଃର୍ଲା, ଆର୍‌ ଏଲିସାବେତ୍‌ ପବିତ୍ର ଆତ୍ମାୟ୍‌ ହୁର୍ନ୍‌ ଅୟ୍‌,
42 உரத்த குரலில் சொன்னதாவது: “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப்போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது!
ଜଃବର୍‌ ଟଣ୍ଡ୍ ଅୟ୍‌ କୟ୍‌ଲି, “ସଃବୁ ମାୟ୍‌ଜିମଃନାର୍‌ ବିତ୍ରେ ତର୍‌ ବାୟ୍‌ଗ୍‌, ଆର୍‌ ବାୟ୍‌ଗ୍‌ ତର୍‌ ଗଃର୍ବାର୍‌ ହଃଳ୍‌ ।
43 என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன்.
ଆର୍‌ ମର୍‌ ମାପ୍ରୁର୍‌ ଆୟ୍‌ସି ମକ୍‌ ଦଃକୁକ୍‌ ଆସେଦ୍‌, ମର୍‌ ଅଃଡେକ୍‌ ନିକ ବାୟ୍‌ଗ୍‌ କୁୟ୍‌ତି ହୁଣି ଅୟ୍‌ଲି ।
44 உனது வாழ்த்துதலின் சத்தம் எனது காதில்பட்டதுமே, எனது கருப்பையில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று.
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଦଃକ୍‌, ତର୍‌ କଃତା ସୁଣ୍‌ଲା ଦାହ୍ରେ ମର୍‌ ହେଟେ ରିଲା ହିଲା ନାଚି ଉଟ୍‌ଲା ।
45 கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள்.
ଜେ ବିସ୍ୱାସ୍‌ କଃଲି, ତାର୍‌ ବାୟ୍‌ଗ୍‌, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ମାପ୍ରୁର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ତାକ୍‌ ଜୁୟ୍‌ ଜୁୟ୍‌ରି କଃଉଆ ଅୟ୍‌ଆଚେ, ସେ ସଃବୁ କଃତା ହୁରୁଣ୍ ଅୟ୍‌ଦ୍‌ ।”
46 அப்பொழுது மரியாள் சொன்னதாவது: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
ଆର୍‌ ମରିୟମ୍‌ କୟ୍‌ଲି, “ମର୍‌ ହଃରାଣ୍ ମାପ୍ରୁର୍‌ ଦନ୍ୟବାଦ୍‌ କଃରୁଲି;
47 என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.
ଆରେକ୍‌ ମର୍‌ ଆତ୍ମା ମର୍‌ ମୁକ୍ଳାଉତା ଇସ୍ୱର୍‌ ମାପ୍ରୁର୍‌ ଲଃଗେ ଅଃନାୟ୍‌ ସଃର୍ଦା କଃରୁଲି,
48 ஏனெனில், அவர் தமது அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார். இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்;
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ମାପ୍ରୁ ଅଃହ୍‌ଣାର୍‌ ଗତିଦଃଙ୍ଗ୍‌ଳିର୍‌ ଗଃରିବ୍‌ଅଃବୁସ୍ତା ଦଃକିଆଚେ, ଆର୍‌ ଦଃକ୍‌, ଅଃବେହୁଣି ଜୁଗ୍ ଜୁଗ୍ ହଃତେକ୍‌ ସଃବୁ ଲକ୍‌ମଃନ୍ ମର୍‌ ବାୟ୍‌ଗ୍‌ ବଃଲି କଃଉତି ।
49 வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்; பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଅଃନାୟ୍‌ ବଃଡ୍ ସଃକାତିଆ ମାପ୍ରୁ, ସେ ମର୍‌ ଗିନେ ଅଃନାୟ୍‌ ବଃଡ୍ କାମ୍‌ କଃରି ଆଚେ । ତାର୍‌ ନାଉଁ ପବିତ୍ର;
50 அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காண்பிக்கிறார்.
ଆର୍‌ ତାକ୍‌ ମାନ୍‌ତି କଃର୍ତା ଲକ୍‌ମଃନାର୍‌ ଗିନେ ତାର୍‌ ଦଃୟା ଜୁଗେ ଜୁଗେ ରଃୟ୍‌ଦ୍‌ ।
51 அவர் தமது புயத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்; தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை அவர் சிதறடித்தார்.
ସେ ଅଃହ୍‌ଣାର୍‌ ଡେଣାର୍‌ ବଃଳ୍‌ସଃକାତ୍‌ ଦଃକାୟ୍‌ଆଚେ, ଆର୍‌ ଆକାରିମଃନ୍‌କେ ସେମଃନାର୍‌ ମଃନ୍‌ ବିତ୍ରାର୍‌ ବାବ୍‌ନାକେ ଜଃତ୍‌କଃତ୍‌ କଃରିଆଚେ ।
52 ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார். ஆனால், தாழ்மையானவர்களையோ அவர் உயர்த்தினார்.
ସେ ବଃଳ୍‌ସଃକାତ୍‌ ରିଲା ରଃଜାମଃନ୍‌କେ ସିଙ୍ଗାସଣ୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଉତ୍ରାୟ୍‌ ଆଚେ, ଆର୍‌ ଇନସ୍ତା ଲକ୍‌ମଃନ୍‌କେ ବଃଡ୍ କଃରିଆଚେ ।
53 அவர் பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார். ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார்.
ସେ ବୁକେ ରିଲା ଲକ୍‌କେ ନିକ ନିକ କାଦି ହେଟ୍‌ ହୁର୍ନେ କାଳାୟ୍‌ ଆଚେ; ଆର୍‌ ମାଜନ୍ ଲକ୍‌ମଃନ୍‌କେ ଚୁଚା ଆତେ ହଃଟାୟ୍‌ଲା ଆଚେ ।
54 அவர் தமது வேலைக்காரனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார்.
ଅଃମାର୍‌ ହୁର୍ବାର୍‌ ଦାଦିବାବୁମଃନାର୍‌ ସଃଙ୍ଗ୍ କଃରିରିଲା ସଃୟ୍‌ତ୍‌ ହୁରୁଣ୍ କଃରି ତାର୍‌ ଦଃଙ୍ଗ୍‌ଳା ଇସ୍ରାଏଲ୍‌କେ ଉହ୍‌କାର୍‌ କଃରୁକେ ଆସିଆଚେ; ଆର୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ ଆର୍‌ ଦଃର୍ମି ଅବ୍ରାହାମ୍‌ ଆର୍‌ ତାର୍‌ ହୟ୍‌ସି ମଃନାର୍‌ ଗିନେ,
55 நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். (aiōn g165)
ସେ ଜୁଗେଜୁଗେ ଅବ୍ରାହାମ୍‌ ଆର୍‌ ତାର୍‌ ସଃବୁ ବଂସାର୍‌ ଲକ୍‌ମଃନ୍‌କେ ଦଃୟା କଃରୁକେ ହାସ୍ରି ନଃକେରେ ।” (aiōn g165)
56 மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதற்குப் பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள்.
ଆର୍‌ ମରିୟମ୍‌ ହାକାହାକି ତିନି ମାସ୍‌ ହଃତେକ୍‌ ଏଲିସାବେତ୍‌ ସଃଙ୍ଗ୍ ରିଲି ଆର୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ ଗଃରେ ବାଉଳି ଗଃଲି ।
57 எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள்.
ତାର୍‌ହଃଚେ ଏଲିସାବେତ୍‌ ହିଲା ଜଃଲମ୍‌ କଃର୍ତା ବେଳା ଆୟ୍‌ଲାକ୍‌, ସେ ଗଟେକ୍‌ ହିଲା ଜଃଲମ୍‌ କଃଲି ।
58 அவளுடைய அயலவர்களும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன்கூட மகிழ்ச்சி அடைந்தார்கள்.
ଆର୍‌ ମାପ୍ରୁ ତାର୍‌ ସଃଙ୍ଗ୍ କଃତେକ୍‌ ବଃଡ୍ ଦଃର୍ମ୍‌ କଃରିଆଚେ, ଇ କଃତା ସୁଣି ତାର୍‌ ହାକି ହଃଳ୍‌ସା ଲକ୍‌ ଆର୍‌ ତାର୍‌ ନିଜାର୍‌ ଲକ୍‌ମଃନ୍ ସଃର୍ଦା କଃରୁକେ ଦଃର୍ଲାୟ୍‌ ।
59 அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள்.
ଜଃଡେବଃଳ୍‌ ହିଲା ଜଃଲମ୍‌ ଅୟ୍‌କଃରି ଆଟ୍‌ଦିନ୍ ଅୟ୍‌ଲି, ତାକାର୍‌ ରିତିବିଦି ହଃର୍କାରେ ସେ ହିଲାକ୍‌ ସୁନତ୍‌ କଃରୁକେ ନିଲାୟ୍‌, ଆର୍‌ ତାର୍‌ ଉବାସିର୍‌ ନାଉଁ ହଃର୍କାରେ ତାର୍‌ ନାଉଁ ଜିକରିଅ ବଃଲି ସଃଙ୍ଗାଉଁକ୍‌ ମଃନ୍ କଃଲାୟ୍‌ ।
60 ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள்.
ମଃତର୍‌ ତାର୍‌ ଆୟ୍‌ସି ଉତୁର୍‌ ଦିଲି, “ନାୟ୍‌, ତାର୍‌ ନାଉଁ ଜହନ୍‌ ଅୟ୍‌ଦ୍‌ ।”
61 அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள்.
ସେମଃନ୍ ତାକ୍‌ କୟ୍‌ଲାୟ୍‌, “ତୁମାର୍‌ ନିଜାର୍‌ ବଃଉଁସାର୍‌ ଲକ୍‌ମଃନାର୍‌ ବିତ୍ରେ ଇବାନ୍ୟା ନାଉଁ ତ କାର୍‌ ହେଁ ନାୟ୍‌ ।”
62 அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள்.
ତାର୍‌ହଃଚେ କାୟ୍‌ ନାଉଁ ଦିଆଅୟ୍‌ଦ୍‌ ବଃଲି ତାର୍‌ ଉବାସି ମଃନ୍‌କଃରୁଲା, ସେରି ସେମଃନ୍ ତାର୍‌ ଉବାସିକ୍‌ ଆତ୍‌ସଃଗ୍ୟା କଃରି ହଃଚାରୁକ୍‌ ଦଃର୍ଲାୟ୍‌ ।
63 அவன் ஒரு கற்பலகையைக் கேட்டுவாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினான்.
ସେତାର୍‌ ଗିନେ ଜିକରିଅ ଗଟେକ୍‌ ଲେକଃତା ହାଟା ମାଗ୍‌ଲା, ଆର୍‌ “ତାର୍‌ ନାଉଁ ଜହନ୍‌,” ବଃଲି ଲେକ୍‌ଲା । ଇତାର୍‌ ଗିନେ ସଃବୁଲକ୍‌ କାବା ଅୟ୍‌ଲାୟ୍‌ ।
64 உடனே அவனது வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் இறைவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான்.
ଆର୍‌ ସେଦାହ୍ରେ ତାର୍‌ ଟଣ୍ଡ୍ ହୁଟ୍‌ଲି ଆର୍‌ ଜିବ୍‌ ଇଟ୍‌ଲି ଲାଗି ଆରେକ୍‌ ଗଟ୍‌ତର୍‌ କଃତା ଅଃଉଁକେ ଦଃର୍ଲା ଆର୍‌ ଇସ୍ୱରାର୍‌ ଗୁଣ୍ କଃଉଁକେ ଦଃର୍ଲା ।
65 அயலவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தக் காரியங்களைக்குறித்து, யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள்.
ତାର୍‌ ହାକିହଃଳ୍‌ସାର୍‌ ସଃବୁ ଲକ୍‌ମଃନ୍ ଡିରି ଗଃଲାୟ୍‌, ଆର୍‌ ଇସଃବୁ କଃତା ଜିଉଦା ଦେସାର୍‌ ଡଙ୍ଗୁର୍‌ ହଲିର୍‌ ସଃବୁ ଗଃଳେ ଆର୍‌ ଗାଉଁଏମଃନ୍‌ ଲକ୍‌ମଃନ୍ କଃଉଆକଇ ଅୟ୍‌ଲାୟ୍‌ ।
66 இதைக் கேள்விப்பட்ட எல்லோரும் வியப்படைந்து, “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்றார்கள் கர்த்தருடைய கரம் அந்த பிள்ளையோடு இருந்தது.
ଆରେକ୍‌ ସୁଣ୍‌ଲା ସଃବୁ ଲକ୍‌ମଃନ୍ ସେସଃବୁ ନିଜାର୍‌ ନିଜାର୍‌ ମଃନ୍‌ ବିତ୍ରେ ଦଃରି କୟ୍‌ଲାୟ୍‌, “ଇ ହିଲା ତଃବେ କାୟ୍‌ରି ଅୟ୍‌ଦ୍‌?” କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ମାପ୍ରୁର୍‌ ଆତ୍‌ ତାର୍‌ ଉହ୍ରେ ଆଚେ ।
67 அந்தப் பிள்ளையின் தகப்பனான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது:
ଆର୍‌ ଜହନାର୍‌ ଉବାସି ଜିକରିଅ ପବିତ୍ର ଆତ୍ମାୟ୍‌ ହୁର୍ନ୍‌ ଅୟ୍‌ ଇ ବାବ୍‌ବାଣି କୟ୍‌ଲା-
68 “இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக, அவர் வந்து தம்முடைய மக்களை மீட்டுக்கொண்டார்.
“ଦନ୍ୟ ମାପ୍ରୁ, ଇସ୍ରାଏଲାର୍‌ ଇସ୍ୱର୍‌, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ସେ ତାକାର୍‌ ଲକ୍‌ମଃନ୍‌କେ ଦଃୟା କଃରି ମୁକ୍ତିଦେଉଁକେ ଆସିଆଚେ ।
69 அவர் தமது தாசனாகிய தாவீதின் வம்சத்திலிருந்து, நாம் இரட்சிப்பு அடைவதற்கான இரட்சணியக்கொம்பை எழுப்பியிருக்கிறார்.
ସେ ଅଃମିମଃନାର୍‌ ମୁକ୍ତିକାରି ସେ ନିଜାର୍‌ ଦଃଙ୍ଗ୍‌ଳା ଦାଉଦ୍‌ ବଃଉଁସାର୍‌, ଗଟେକ୍‌ ବପୁକାରି ମୁକ୍ଳାଉତା ଲକ୍‌କେ ଅଃମିମଃନ୍‌କ୍‌ ଦିଲା ଆଚେ ।
70 அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். (aiōn g165)
ଆଗେହୁର୍ବେ ହୁଣି ମାପ୍ରୁ ତାର୍‌ ପବିତ୍ର ବାବ୍‌ବାଦିମଃନାର୍‌ ଟଣ୍ଡେ ଜାୟ୍‌ ବଃଲି କୟ୍‌ ରିଲା । (aiōn g165)
71 நம்முடைய பகைவரிடமிருந்தும், நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும் நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும்,
ସେବାନ୍ୟା ଅଃମାର୍‌ ସଃତ୍ରୁମଃନାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଆର୍‌ ଅଃମିକ୍‌ ଇନସ୍ତା କଃର୍ତା ସଃବୁଲକାର୍‌ ଆତେ ହୁଣି ଅଃମିକ୍‌ ମୁକ୍ତି କଃରିଆଚେ ଆଚେ ।
72 அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நம்முடைய தந்தையருக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருந்தார்.
ଜଃନ୍‌କଃରି ସେ ଅଃମାର୍‌ ହୁର୍ବାର୍‌ ନିର୍ମୁଳ୍‌ ଦାଦିବାବୁମଃନ୍‌କେ ଦଃୟା ଦଃକାୟ୍‌ଦ୍‌, ଆର୍‌ ସେମଃନାର୍‌ ପବିତ୍ର ବିଦି ଏତାଉଁକେ,
73 அவர் நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டு:
ଆର୍‌ ଅଃମାର୍‌ ଉବା ଅବ୍ରାହାମାର୍‌ ଲଃଗେ ଜୁୟ୍‌ ହଃର୍ମାଣ୍‌ କଃରି ରିଲା, ଅଃହ୍‌ଣାର୍‌ ସେ ପବିତ୍ର ବିଦି ଏତାୟ୍‌ଦ୍‌,
74 நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, நமது நாட்களெல்லாம் பயமின்றிப் பணிசெய்யும்படி,
ଆରେକ୍‌ ଜଃନ୍‌କଃରି ଅଃମି ସଃତ୍ରୁମଃନାର୍‌ ଆତେ ହୁଣି ଅଃମିକ୍‌ ରଃକ୍ୟା ହାୟ୍‌, ନଃଡିର୍‌ତେ ଜୁଗ୍‌ଜୁଗ୍ ହଃତେକ୍‌ ତାର୍‌ ସେବା କଃରୁନ୍ଦ୍‌,
75 பரிசுத்தத்திலும் நீதியிலும் அவருக்கு முன்பாக என்றும் வாக்குக் கொடுத்திருந்தார்.
ଜିବନ୍‌ କାଳେ ଅଃମିମଃନ୍‌ ପବିତ୍ର ଆର୍‌ ଦଃର୍ମେ ଜିବନ୍‌ କାଟୁଆଁ ଇରି ଇସ୍ୱରାର୍‌ ଇଚା ।”
76 “என் பிள்ளையே, நீயோ, உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, அவருக்கு முன்பாகப் போவாய்.
“ଆର୍‌ ଏ ମର୍‌ ହିଲା, ତୁୟ୍‌ ସଃବ୍‌କେ ଉଟ୍ୟା ଇସ୍ୱରାର୍‌ ଗଟେକ୍‌ ବାବ୍‌ବାଦି ବଃଲି ଡାକେ ହୁଟ୍‌ସି, ତୁୟ୍‌ ମାପ୍ରୁର୍‌ ଗଟେକ୍‌ ଆଗ୍‌ତୁର୍‌ କବୁର୍‌କାରିଆ ହର୍‌, ତାର୍‌ ଗିନେ ତାର୍‌ ବାଟ ତିଆର୍‌ କଃର୍ସି ।
77 நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தின் நிமித்தம் அவருடைய மக்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலமாய், இரட்சிப்பின் அறிவைக் கொடுப்பாய்.
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଅଃନ୍ଦାରେ ଆର୍‌ ମଃରୁକ୍‌ ବଃସିରିଲା ଲକ୍‌କେ ହାହେ ହୁଣି ମୁକ୍ତି ଦେଉଁକେ,
78 இருளில் வாழ்கிறவர்களுக்கும் மரண இருளில் இருக்கிறவர்களுக்கும் ஒளியைத் தருவதற்கும்,
ଆରେକ୍‌ ଅଃମାର୍‌ ଇସ୍ୱର୍‌ ମାପ୍ରୁ ଦଃୟାକାରି ଆର୍‌ କଃଉଁଣା ମଃନାର୍‌, ସେ ଅଃମାର୍‌ ଗିନେ ମୁକୁଳ୍‌ତା ସଃକ୍ତି ଉଦାୟ୍‌ଦ୍‌ ।
79 நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்துவதற்கும், பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.”
ସେ ଲାଡାର୍‌ ଦଃୟା ଗିନେ ଇସ୍ୱରାର୍‌ ଲକ୍‌ମଃନ୍‌କେ ସେମଃନାର୍‌ ହାହ୍‌ କେମା ସଃଙ୍ଗ୍ ମୁକୁଳ୍‌ତା ସୁସ୍ତାର୍‌ ଗିଆନ୍‌ ଦେଉଁକେ, ତୁୟ୍‌ ତାକାର୍‌ ବାଟ ତିଆର୍‌ କଃରୁକେ ତାକାର୍‌ ଆଗେ ଇଣ୍ଡ୍‌ସି ।”
80 அந்தப் பிள்ளை வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தது; அவன் வெளியரங்கமாக இஸ்ரயேலரின்முன் வரும் காலம்வரைக்கும் பாலைவனத்தில் வாழ்ந்தான்.
ଆରେକ୍‌ ସେ ହିଲା ଗଃଗାଳ୍‌ ଆର୍‌ ପବିତ୍ର ଆତ୍ମାୟ୍‌ ବାଡୁକେ ଦଃର୍ଲା, ଆର୍‌ ସେ ଇସ୍ରାଏଲ୍‌ ମଃନାର୍‌ ଲଃଗେ ଦଃକାୟ୍‌ ନଃଉତା ହଃତେକ୍‌ ଲକ୍‌ବାକ୍‌ ନୟ୍‌ଲା ସୁକ୍‌ଲା ବଃଟାୟ୍‌ ରେତିରିଲା ।

< லூக்கா 1 >