< லேவியராகமம் 1 >

1 யெகோவா சபைக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனுடன் பேசினார்.
Вә Пәрвәрдигар Мусани чақирип җамаәт чедиридин униңға сөз қилип мундақ деди: —
2 “நீ இஸ்ரயேலருடன் பேசிச் சொல்லவேண்டியதாவது: ‘உங்களில் யாராவது யெகோவாவுக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவரும்போது, ஆட்டு மந்தையிலிருந்தோ, மாட்டு மந்தையிலிருந்தோ ஒரு மிருகத்தை உங்கள் காணிக்கையாகக் கொண்டுவாருங்கள்.
Сән Исраилларға сөз қилип уларға мундақ дегин: — Әгәр силәрдин бириңлар Пәрвәрдигарниң алдиға бир қурбанлиқни сунмақчи болсаңлар, қурбанлиғиңларни чарпайлардин, йәни кала яки ушшақ маллардин сунушуңлар керәк.
3 “‘அக்காணிக்கை மாட்டு மந்தையிலிருந்து கொடுக்கப்படும் தகன காணிக்கையானால், அவன் குறைபாடற்ற ஒரு காளையை காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். அது யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்படும்படி, அவன் அதைச் சபைக்கூடார வாசலில் கொண்டுவந்து ஒப்படைக்கவேண்டும்.
Әгәр униң сунидиғини калилардин көйдүрмә қурбанлиқ болса, ундақта у беҗирим әркәк һайванни кәлтүрсун; униң Пәрвәрдигарниң алдида қобул болуши үчүн уни җамаәт чедириниң кириш ағзиниң алдида сунсун.
4 அவன் அந்த தகன காணிக்கை மிருகத்தின் தலையின்மேல் தன் கையை வைக்கவேண்டும். அது அவனுடைய பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கு அவன் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படும்.
У қолини көйдүрмә қурбанлиқниң бешиға қойсун; шуниң билән қурбанлиқ униң орниға кафарәт болушқа қобул қилиниду.
5 யெகோவாவின் முன்னிலையில் அவன் அந்த இளங்காளையை வெட்டிக் கொல்லவேண்டும். ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள் அந்தக் காளையின் இரத்தத்தைக் கொண்டுவந்து, சபைக்கூடார வாசலில் இருக்கும் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிக்கவேண்டும்.
Андин у Пәрвәрдигарниң һозурида буқини боғузлисун; каһинлар болған Һарунниң оғуллири қенини кәлтүрүп, җамаәт чедириниң кириш ағзидики қурбангаһниң үсти қисминиң әтрапиға сәпсун.
6 பின்பு அந்தக் காணிக்கையைக் கொண்டுவந்தவன், தகன காணிக்கை மிருகத்தைத் தோலுரித்துத் துண்டுகளாக வெட்டவேண்டும்.
Андин [қурбанлиқ қилғучи] көйдүрмә қурбанлиқ қилинған һайванниң терисини союп, тенини парчилисун
7 ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள், பலிபீடத்தின்மேல் நெருப்பை மூட்டி, அந்த நெருப்பின்மேல் விறகுகளை அடுக்கவேண்டும்.
вә Һарун каһинниң оғуллири қурбангаһта от қалап отниң үстигә отунларни тизсун.
8 அதன்பின் ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள் அந்தத் துண்டுகளை, தலையும் கொழுப்பும் உட்பட பலிபீடத்தில் எரிகின்ற விறகுகளின்மேல் அடுக்கவேண்டும்.
Андин каһинлар болған Һарунниң оғуллири гөш парчилирини, беши вә мейи билән қошуп, қурбангаһдики отниң үстидики отунниң үстигә тәртип билән тизип қойсун.
9 ஆகிலும், உள்ளுறுப்புகளையும், கால்களையும் காணிக்கையைக் கொண்டுவந்தவன் தண்ணீரால் கழுவவேண்டும். ஆசாரியர், அவையெல்லாவற்றையும் பலிபீடத்தின்மேல் எரித்துவிடவேண்டும். இது ஒரு தகன காணிக்கை. இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
Лекин униң ич-қарни билән пачақлирини [қурбанлиқ сунғучи] суда жуйсун; андин каһин һәммисини елип келип қурбангаһниң үстидә көйдүрсун. Бу от арқилиқ сунулидиған қурбанлиқ һесавида, Пәрвәрдигарға хушбуй чиқирилидиған көйдүрмә қурбанлиқ болиду.
10 “‘அந்தக் காணிக்கை செம்மறியாட்டு மந்தையிலிருந்தோ, வெள்ளாட்டு மந்தையிலிருந்தோ எடுக்கப்படும் தகன காணிக்கையாக இருந்தால், அவன் குறைபாடற்ற ஒரு கடாவைச் செலுத்தவேண்டும்.
Әгәр у көйдүрмә қурбанлиқ қилиш үчүн ушшақ маллардин қой я өшкә қурбанлиқ қилай десә, ундақда у беҗирим болған бир әркикини кәлтүрсун.
11 அவன் அதைப் பலிபீடத்தின் வடக்குப் பக்கத்தில் யெகோவாவுக்கு முன்பாக வெட்டிக் கொல்லவேண்டும். அதன் இரத்தத்தை ஆரோனின் மகன்களான ஆசாரியர்கள், பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளிப்பார்கள்.
У уни қурбангаһниң шимал тәрипидә Пәрвәрдигарниң һозурида боғузлисун. Андин каһинлар болған Һарунниң оғуллири қенини елип, қурбангаһниң үсти қисминиң әтрапиға сәпсун.
12 அவன் அதைத் துண்டுகளாக வெட்டவேண்டும். அந்தத் துண்டங்களை தலையும், கொழுப்பும் உட்பட பலிபீடத்தில் எரிகின்ற விறகுகளின்மேல் ஆசாரியர் அடுக்கவேண்டும்.
[қурбанлиқ қилғучи] болса гөшни парчилап, беши билән мейини кесип айрисун. Андин каһин буларни елип қурбангаһтики отниң үстидики отунниң үстидә тәртип бойичә тизип қойсун.
13 காணிக்கை கொண்டுவந்தவன் அதன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் தண்ணீரால் கழுவவேண்டும். ஆசாரியர் அவற்றையெல்லாம் கொண்டுவந்து, பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். இது ஒரு தகன காணிக்கை; இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
Лекин униң ич-қарни билән пачақларни [қурбанлиқ сунғучи] суда жуйсун; андин каһин һәммисини елип келип қурбангаһниң үстидә көйдүрсун. Бу от арқилиқ сунулидиған қурбанлиқ һесавида, Пәрвәрдигарға хушбуй чиқирилидиған көйдүрмә қурбанлиқ болиду.
14 “‘யெகோவாவுக்கான தகன காணிக்கை பறவைகளானால், அவன் ஒரு புறாவையோ அல்லது ஒரு மாடப்புறாக் குஞ்சையோ செலுத்தவேண்டும்.
Әгәр [қурбанлиқ қилғучи] Пәрвәрдигарға атап учар-қанатлардин көйдүрмә қурбанлиқ қилай десә, ундақта у пахтәкләрдин яки кәптәр балилиридин қурбанлиқ кәлтүрсун.
15 ஆசாரியர் அப்பறவையைப் பலிபீடத்திற்குக் கொண்டுவந்து, அதன் தலையைத் திருகி, அதைப் பலிபீடத்தில் எரிக்கவேண்டும். அதன் இரத்தம் பலிபீடத்தின் ஒரு பக்கத்தில் வடியவிடவேண்டும்.
Каһин уни қурбангаһниң йениға елип келип, бешини толғап үзүп уни қурбангаһниң үстидә көйдүрсун; униң қени сиқилип қурбангаһниң темиға сүртүлсун.
16 அவன் அதன் இரைப்பையையும் அதற்குள் இருப்பதையும் அகற்றி, பலிபீடத்தின் கிழக்குப் பக்கத்தில் சாம்பல் இருக்கும் இடத்தில் எறியவேண்டும்.
Лекин ташлиғини пәйлири билән қошуп қурбангаһниң шәриқ тәрипидики күллүккә ташливәтсун;
17 அதன்பின் ஆசாரியர் அதை முற்றிலும் பிளக்காமல், சிறகுகளைப் பிடித்துக் கிழித்து, அதைப் பலிபீடத்தின் நெருப்பின் மேலுள்ள விறகுகளின்மேல் போட்டு எரிக்கவேண்டும். இது ஒரு தகன காணிக்கை, இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக, நெருப்பினால் செலுத்தப்படும் ஒரு காணிக்கை.
у қурбанлиқни икки қанитиниң оттурисидин ярсун, бирақ уни икки парчә қиливәтмисун. Андин каһин буни елип қурбангаһдики отниң үстидики отунниң үстигә қоюп көйдүрсун; бу от арқилиқ сунулидиған қурбанлиқ һесавида, Пәрвәрдигарға хушбуй чиқирилидиған көйдүрмә қурбанлиқ болиду.

< லேவியராகமம் 1 >