< லேவியராகமம் 9 >

1 மோசே எட்டாம் நாளில் ஆரோனையும் அவன் மகன்களையும், இஸ்ரயேலின் சபைத்தலைவர்களையும் அழைத்தான்.
És lőn a nyolczadik napon, hogy szólítá Mózes Áront és az ő fiait, és Izráelnek véneit.
2 அவன் ஆரோனிடம், “நீ உன்னுடைய பாவநிவாரண காணிக்கைக்காக ஒரு குறைபாடற்ற இளங்காளையையும், உன்னுடைய தகன காணிக்கைக்காக குறைபாடற்ற ஒரு ஆட்டுக் கடாவையும் எடுத்து, அவற்றை யெகோவாவுக்கு முன்பாக கொண்டுவா.
És monda Áronnak: Végy egy borjút, fiatal bikát bűnért való áldozatul, és egy kost egészen égőáldozatul, épek legyenek, és vidd az Úr elé.
3 பின்பு இஸ்ரயேலரிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘பாவநிவாரண காணிக்கைக்காக வெள்ளாட்டுக்கடாவையும், தகன காணிக்கைக்காக கன்றுக்குட்டியையும், ஒரு செம்மறியாட்டுக் குட்டியையும் எடுத்துக்கொள்ளுங்கள்; அவை இரண்டும் குறைபாடற்றதாயும், ஒரு வயதுடையதாயும் இருக்கவேண்டும்.
Szólj Izráel fiainak is, mondván: Vegyetek egy kecskebakot bűnért való áldozatul, és egy esztendős borjút és bárányt, épek legyenek, egészen égőáldozatul.
4 சமாதான காணிக்கைக்காக ஒரு மாட்டையும், ஒரு செம்மறியாட்டுக் கடாவையும், எண்ணெய் கலந்து பிசைந்த தானியக் காணிக்கையுடன் யெகோவாவுக்கு முன்பாகச் செலுத்தும்படி கொண்டுவாருங்கள். ஏனெனில் இன்று யெகோவா உங்களுக்குக் காட்சியளிப்பார்’ என்று சொல்” என்றான்.
És egy ökröt és egy kost hálaáldozatul, hogy megáldozzátok az Úr előtt, és olajjal elegyített ételáldozatot; mert ma az Úr megjelenik néktek.
5 அவர்கள் மோசே கட்டளையிட்ட பொருட்களை சபைக் கூடாரத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் அனைவரும் நெருங்கிவந்து, யெகோவா முன்னிலையில் நின்றார்கள்.
Elvivék azért, a miket Mózes parancsolt vala, a gyülekezet sátora elé, és odajárula az egész gyülekezet, és megálla ott az Úr előtt.
6 அப்பொழுது மோசே, “யெகோவாவின் மகிமை உங்களுக்குத் தோன்றும்படி, நீங்கள் செய்யவேண்டுமென யெகோவா கட்டளையிட்டது இதுவே” என்றான்.
És monda Mózes: Ez a dolog, a melyet az Úr parancsolt, cselekedjétek meg; és megjelenik néktek az Úr dicsősége.
7 மோசே ஆரோனிடம், “நீ பலிபீடத்தின் அருகில் வந்து பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும் பலியிட்டு, உனக்காகவும், மக்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். மக்களுக்கான காணிக்கையைப் பலியிட்டு, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். யெகோவா கட்டளையிட்டபடியே இவற்றைச் செய்” என்றான்.
Áronnak pedig monda Mózes: Járulj az oltárhoz, és készítsd el a te bűnért való áldozatodat és egészen égőáldozatodat, és végezz engesztelést magadért és a népért. Készítsd el a nép áldozatát is, és végezz engesztelést érettök is, a mint megparancsolta az Úr.
8 அப்படியே ஆரோன் பலிபீடத்திற்கு வந்து, தனது பாவநிவாரண காணிக்கையாக கன்றுக்குட்டியை வெட்டிக்கொன்றான்.
Járula azért Áron az oltárhoz, és megölé a borjút, a mely az övé, bűnért való áldozatul.
9 ஆரோனுடைய மகன்கள் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள். ஆரோன் தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளில் பூசினான். மீதமுள்ள இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றினான்.
Áron fiai pedig odavivék ő hozzá a vért, és ő bemártá az újját a vérbe, és tőn abból az oltár szarvaira, a többi vért pedig kiönté az oltár aljához.
10 பாவநிவாரண காணிக்கை மிருகத்தின் கொழுப்பையும், சிறுநீரகங்களையும், ஈரலை மூடியுள்ள கொழுப்பையும் பலிபீடத்தில் அவன் எரித்தான். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே இது செய்யப்பட்டது.
A kövérjét pedig és a veséket és a máj hártyáját elfüstölögteté a bűnért való áldozatból az oltáron, a mint az Úr parancsolta vala Mózesnek.
11 இறைச்சியையும், தோலையும் முகாமுக்கு வெளியே எரித்தான்.
A húst pedig és a bőrt tűzzel égeté meg a táboron kivül.
12 அதன்பின் தகன காணிக்கை மிருகத்தை அவன் வெட்டிக்கொன்றான். ஆரோனின் மகன்கள் இரத்தத்தை அவனிடம் கொடுத்தார்கள். அவன் அதை பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான்.
Azután megölé az egészen égőáldozatot, Áron fiai pedig odavivék ő hozzá a vért, és ő elhinté azt az oltáron köröskörül.
13 அவர்கள் தகன காணிக்கையை, தலை உட்பட துண்டம் துண்டமாக அவனிடம் கொடுத்தார்கள். அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் எரித்தான்.
Az egészen égőáldozatot is odavivék hozzá darabonként, a fejével együtt, és elfüstölögteté az oltáron.
14 அவன் உள்ளுறுப்புகளையும், கால்களையும் கழுவி அவற்றைப் பலிபீடத்தில் இருந்த தகன காணிக்கையின்மேல் வைத்து எரித்தான்.
És megmosá a belet és a lábszárakat, és elfüstölögteté az oltáron az egészen égőáldozattal egybe.
15 பின்பு ஆரோன், மக்களுக்கான காணிக்கையைக் கொண்டுவந்தான். அவன் மக்களுக்கான பாவநிவாரண காணிக்கையான வெள்ளாட்டை எடுத்து, அதை வெட்டிக்கொன்று, முன்பு பலியிட்ட மிருகத்தைப்போலவே பாவநிவாரண காணிக்கையாக அதைச் செலுத்தினான்.
Azután megáldozá a nép áldozatát; vevé ugyanis a bűnért való áldozat bakját, a mely a népé, és megölé azt, és megáldozá azt bűnért való áldozatul, mint az előbbit.
16 அவன் தகனகாணிக்கையைக் கொண்டுவந்து, விதிக்கப்பட்டிருந்த முறைப்படியே அதைச் செலுத்தினான்.
Azután előhozá az egészen égőáldozatot, és elkészíté azt szokás szerint.
17 அத்துடன் அவன் தானியக் காணிக்கையையும் கொண்டுவந்து, அதில் ஒரு கைநிறைய எடுத்து, காலையில் செலுத்திய தகன காணிக்கையுடன் அதையும் பலிபீடத்தின்மேல் எரித்தான்.
Előhozá az ételáldozatot is, és vőn abból egy teli marokkal, és elfüstölögteté az oltáron a reggeli egészen égőáldozaton kivül.
18 பின்பு அவன் மக்களுக்கான சமாதான காணிக்கையாக, மாட்டையும், செம்மறியாட்டுக் கடாவையும் வெட்டிக்கொன்றான். ஆரோனின் மகன்கள் இரத்தத்தை அவனிடம் கொடுத்தார்கள். அவன் அதைப் பலிபீடத்தின் எல்லா பக்கங்களிலும் தெளித்தான்.
Azután megölé az ökröt és a kost hálaadó áldozatul a népért, és Áron fiai odavivék ő hozzá a vért, és elhinté azt az oltáron köröskörül.
19 ஆரோனின் மகன்கள் மாட்டினுடைய, செம்மறியாட்டுக் கடாவினுடைய கொழுப்பான பாகங்களை, அதாவது கொழுத்த வால், கொழுப்புப்படை, சிறுநீரகங்கள், ஈரலை மூடியுள்ள கொழுப்பு ஆகியவற்றை எடுத்து,
Az ökörből és a kosból való kövérségeket pedig, a farkat, a béltakarót, a veséket és a máj hártyáját;
20 மிருகங்களின் நெஞ்சுப்பகுதியில் வைத்தார்கள். பின்பு ஆரோன் அந்தக் கொழுப்பை பலிபீடத்தின்மேல் எரித்தான்.
Odahelyezték e kövérségeket a szegyekre, és elfüstölögteté e kövérségeket az oltáron.
21 நெஞ்சுப்பகுதிகளையும், வலது தொடையையும் ஆரோன், மோசே கட்டளையிட்டபடி யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டினான்.
De a szegyeket és a jobb lapoczkát meglóbálá Áron az Úr előtt, a mint parancsolta vala Mózes.
22 அதன்பின் ஆரோன் மக்களை நோக்கி தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தான். பாவநிவாரண காணிக்கையையும், தகன காணிக்கையையும், சமாதான காணிக்கையையும் பலியிட்டு முடித்துக் கீழே இறங்கினான்.
Azután felemelé kezeit Áron a népre, és megáldá azt és leszálla, miután elvégezte vala a bűnért való áldozatot, az egészen égőáldozatot és a hálaáldozatot.
23 அதன்பின் மோசேயும் ஆரோனும் சபைக் கூடாரத்திற்குள்ளே போனார்கள். அவர்கள் வெளியே வந்து, மக்களை ஆசீர்வதித்தபொழுது, யெகோவாவினுடைய மகிமை மக்கள் அனைவருக்கும் முன் தோன்றியது.
És beméne Mózes és Áron a gyülekezetnek sátorába, azután kijövének és megáldák a népet, az Úrnak dicsősége pedig megjelenék az egész népnek.
24 யெகோவாவிடமிருந்து நெருப்பு புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த தகன காணிக்கையையும், கொழுப்பான பாகங்களையும் பட்சித்தது. மக்கள் அனைவரும் அதைக் கண்டபோது, மகிழ்ச்சியினால் ஆர்ப்பரித்து, முகங்குப்புற விழுந்தார்கள்.
Tűz jöve ugyanis ki az Úr elől, és megemészté az oltáron az égőáldozatot és a kövérségeket. És látá ezt az egész nép, és ujjongának és arczra esének.

< லேவியராகமம் 9 >