< நியாயாதிபதிகள் 9 >
1 யெருபாகாலின் மகன் அபிமெலேக்கு சீகேமிலுள்ள தன் தாயின் சகோதரர்களிடத்திற்குப் போனான். அங்கே அவர்களிடமும் தன் தாயின் வம்சத்தார் எல்லோரிடமும்,
၁ယေရုဗ္ဗာလ သား အဘိမလက် သည် ရှေခင် မြို့သို့ သွား ၍ ဦးရီး များ၊ အမိ ၏အဆွေအမျိုး များအပေါင်း တို့နှင့် နှုတ်ဆက် လျက်၊
2 “நீங்கள் சீகேமின் குடியிருப்பாளர்களிடம், ‘உங்களை யெருபாகாலின் எழுபது மகன்களும் ஆட்சி செய்வதோ, அல்லது ஒருவன் மாத்திரம் ஆட்சி செய்வதோ உங்களுக்கு எது சிறந்தது?’ என்று கேளுங்கள், நான் உங்களின் இரத்தமும் சதையுமானவன் என்பதையும் நினைத்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னான்.
၂ယေရုဗ္ဗာလ သား ခုနစ်ဆယ် တို့သည် သင် တို့ကို အုပ်စိုး ကောင်း သလော။ သား တယောက် တည်း အုပ်စိုး ကောင်းသလော။ ငါ သည် သင် တို့၏ အရိုး အသား စစ်ဖြစ်ကြောင်း ကို မ မေ့ကြနှင့်ဟု ရှေခင် မြို့သား အပေါင်းတို့အား ပြော ရမည်အကြောင်းကို တိုင်ပင်လေ၏။
3 அப்படியே அவன் தாயின் சகோதரர்கள் சீகேமிலிருக்கிற எல்லா பெரிய மனிதர்களும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது, “அவன் நம்முடைய சகோதரன்” என்று அவர்கள் சொன்னதினால், அவர்களும் அபிமெலேக்கைப் பின்பற்றினார்கள்.
၃ထို စကား ကို ဦးရီး တို့သည် ရှေခင် မြို့သား တို့အား အကုန်အစင် ပြန်ပြော ၍၊ သူတို့က၊ အဘိမလက် သည် ငါ တို့ညီအစ်ကို ဖြစ်သည်ဟုဆို လျှက် သူ့နောက် သို့ လိုက်ချင်သောစိတ် နူးညွတ် သဖြင့်၊
4 அப்பொழுது அவர்கள் பாகால் பேரீத்தின் கோயிலிலிருந்து எழுபது சேக்கல் நிறையுள்ள வெள்ளியை அவனுக்குக் கொடுத்தார்கள். அபிமெலேக்கு அப்பணத்தைக் கொண்டு முன்யோசனையற்ற முரட்டுத் துணிச்சலுள்ளவர்களைக் கூலிக்கு அமர்த்தினான். அவர்கள் அவனைப் பின்பற்றினர்.
၄ငွေ ခုနစ်ဆယ် ကို ဗာလဗေရိတ် အိမ် မှ ထုတ် ၍ပေးလျှင် ၊ အဘိမလက် သည် လျှပ်ပေါ် သောသူတို့ကို ထိုငွေ နှင့် ငှါး ၍ အမှု ကို ထမ်းစေ၏။
5 அவன் ஒப்ராவிலுள்ள தனது தந்தையின் வீட்டிற்குப்போய், அங்கே யெருபாகாலின் மகன்களான தனது சகோதரர்கள் எழுபதுபேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்தான்; ஆனால் யெருபாகாலின் இளையமகன் யோதாம் ஒளிந்த்திருந்து தப்பித்துக்கொண்டான்.
၅တဖန် ဩဖရ မြို့၌ ရှိသောမိမိ အဘ အိမ် သို့ သွား ၍ ၊ မိမိ ညီအစ်ကို ယေရုဗ္ဗာလ သား ခုနစ်ဆယ် တို့ကို ကျောက် တခု ပေါ် မှာ သတ် လေ၏။ သို့ရာတွင် ၊ ယေရုဗ္ဗာလ သား အငယ်ဆုံး ယောသံ သည် ပုန်းရှောင် ၍ နေသောကြောင့် ကျန်ရစ် သတည်း။
6 அப்பொழுது சீகேமிலும், பெத் மிலோவிலுமுள்ள எல்லா குடிகளும் சீகேமின் தூணின் அருகேயுள்ள பெரிய மரத்தினடியில் அபிமெலேக்கை அரசனாக முடிசூட்டுவதற்காக ஒன்றுகூடி வந்தார்கள்.
၆ရှေခင် မြို့သား အပေါင်း တို့နှင့် မိလ္လော အဆွေအမျိုးအပေါင်း တို့သည် ရှေခင် မြို့တွင် ရှိသောအထိမ်းအမှတ် သပိတ် ပင်အနား မှာ စည်းဝေး ၍ အဘိမလက် ကို ရှင်ဘုရင် အရာ၌ ခန့် ထားကြ၏။
7 இதை யோதாம் கேள்விப்பட்டபோது, அவன் கெரிசீம் மலையுச்சியில் ஏறி அவர்களைச் சத்தமிட்டுக் கூப்பிட்டு, “சீகேமின் குடிகளே எனக்குச் செவிகொடுங்கள்; அப்பொழுது இறைவன் உங்களுக்குச் செவிகொடுப்பார்.
၇ထိုအမှုကို ယောသံ သည် ကြား သိသောအခါ ၊ ဂေရဇိမ် တောင် သို့ သွား ၍ ၊ တောင်ပေါ် မှာ ရပ် လျက် အသံ ကို လွှင့် ၍ ကြွေးကြော် လေသည်မှာ၊ အိုရှေခင် မြို့သား တို့၊ သင် တို့စကားကို ဘုရား သခင်နားထောင် တော်မူမည်အကြောင်း ၊ ငါ့ စကားကို နားထောင် ကြလော့။
8 ஒரு நாள் மரங்களெல்லாம் தங்களுக்குள் ஒரு அரசனை நியமிக்கப் போயின. அதன்படி அவை ஒலிவமரத்தைப் பார்த்து, ‘நீ எங்கள் அரசனாயிரு’ என்றன.
၈သစ်ပင် တို့သည် မိမိ တို့ကို အုပ်စိုးရသောရှင်ဘုရင် ကို ခန့်ထားလျက် ဘိသိက် ပေးခြင်းငှါ ထွက်သွား ၍ ၊ အကျွန်ုပ် တို့ကို အုပ်စိုး တော်မူပါဟု သံလွင် ပင်အား လျှောက် ကြလျှင်၊
9 “ஆனால் ஒலிவ மரமோ, ‘தெய்வங்களையும், மனிதர்களையும் கனம்பண்ணப் பயன்படுத்தும் என் எண்ணெயை விட்டு மரங்களுக்கு மேலாக அசைவாடுவேனோ?’ என்று கேட்டது.
၉သံလွင် ပင်က၊ ဘုရား အသရေ ၊ လူ အသရေကို ပြုစုစရာ ငါ့ အဆီ အပြားကို ငါသည် စွန့် ၍ သစ်ပင် တို့ အပေါ် မှာ လွှမ်းမိုးရမည်လောဟု ဆို ၏။
10 “பின் மரங்கள் அத்திமரத்திடம், ‘நீ வந்து எங்களுக்கு அரசனாயிரு’ என்றன.
၁၀တဖန် သင်္ဘောသဖန်း ပင်အား ၊ ကိုယ်တော် ကြွ ၍ အကျွန်ုပ် တို့ကို အုပ်စိုး တော်မူပါဟု သစ်ပင် တို့သည် လျှောက် ကြလျှင်၊
11 “ஆனால் அத்திமரமோ, ‘நான் என் சிறந்த ருசியான பழங்களை விட்டு மரங்களுக்கு மேலாக நின்று அசைவாடுவேனோ?’ என்றது.
၁၁သင်္ဘောသဖန်း ပင်က၊ ငါ ၌ ချို သော အရသာနှင့် ကောင်း သောအသီး ကို ငါသည် စွန့် ၍ သစ်ပင် တို့ အပေါ် မှာ လွှမ်းမိုးရမည်လောဟု ဆို ၏။
12 “அப்பொழுது மரங்கள் திராட்சை செடியிடம், ‘நீ வந்து எங்களுக்கு அரசனாயிரு’ என்றன.
၁၂တဖန် စပျစ် ပင်အား ကိုယ်တော် ကြွ ၍ အကျွန်ုပ် တို့ကို အုပ်စိုး တော်မူပါဟု သစ်ပင် တို့သည် လျှောက် ကြလျှင်၊
13 “ஆனால் திராட்சைச்செடி, ‘தெய்வங்களையும், மனிதர்களையும் உற்சாகமூட்டும் என் இரசத்தைவிட்டு உங்கள் மேலாக நின்று அசைவாடுவேனோ?’ என்றது.
၁၃စပျစ် ပင်က၊ ဘုရား ၏စိတ်နှင့် လူ ၏စိတ်ကို ရွှင်လန်း စေသော ငါ့ စပျစ်ရည် ကို ငါသည် စွန့် ၍ သစ်ပင် တို့ အပေါ် မှာ လွှမ်းမိုးရမည်လောဟု ဆို ၏။
14 “கடைசியாக எல்லா மரங்களும் சேர்ந்து முட்செடியிடம், ‘நீ வந்து எங்கள் அரசனாயிரு’ என்றன.
၁၄တဖန် ဆူးလေ ပင်အား ကိုယ်တော် ကြွ ၍ အကျွန်ုပ် တို့ကို အုပ်စိုး တော်မူပါဟု သစ်ပင် အပေါင်း တို့သည် လျှောက် ကြလျှင်၊
15 “அதற்கு முட்செடி மரங்களிடம், ‘நீங்கள் என்னை அரசனாக அபிஷேகம் பண்ணுவது உண்மையானால், எல்லோரும் வந்து என் நிழலில் அடைக்கலம் புகுந்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து நெருப்பு வந்து லெபனோனின் கேதுரு மரங்களை எரிக்கட்டும்’ என்றது.
၁၅ဆူးလေ ပင်က၊ သင်တို့သည် ငါ့ ကို သင် တို့၏ ရှင်ဘုရင် ဖြစ်စေခြင်းငှါခန့်ထား၍ ဧကန်အမှန် ဘိသိက် ပေးလိုလျှင် ၊ လာ ကြ၊ ငါ့ အရိပ် ကို ခိုလှုံ ကြ။ သို့မဟုတ် ဆူးလေ ပင်ထဲက မီး ထွက် ၍ လေဗနုန် အာရစ် ပင်တို့ကို လောင် လိမ့်မည်ဟု သစ်ပင် တို့အား ပြန်ပြော ၏။
16 “இப்பொழுதும் நீங்கள் அபிமெலேக்கை அரசனாக்கியபோது, உண்மையாகவும், நேர்மையாகவும் செயல்பட்டீர்களோ? யெருபாகாலுக்கும் அவனுடைய குடும்பத்தாருக்கும் நீங்கள் செய்தது சரியானதா? நீங்கள் எனது தகப்பனுக்கு கொடுக்கவேண்டிய மதிப்பை கொடுத்தீர்களா?
၁၆ယခု မှာ သင်တို့သည် အဘိမလက် ကို ရှင်ဘုရင်အရာ၌ ခန့်ထားသောအားဖြင့် သစ္စာတရားကို စောင့်၍၊ ယေရုဗ္ဗာလ နှင့် သူ ၏အမျိုးအနွယ် အား ကောင်းမွန် စွာ ပြု ကြပြီလော။ ယေရုဗ္ဗာလသည် ကျေးဇူးပြု၍ ခံထိုက်သည်အတိုင်း သူ့အား ကျေးဇူးဆပ်ကြပြီလော။
17 எனது தகப்பன் உங்களுக்காகச் சண்டையிட்டு, தனது உயிரையும் பொருட்படுத்தாமல், மீதியானியரின் கையிலிருந்து உங்களை விடுவித்துக்கொண்டார் என்பதை நினைத்துப் பாருங்கள்.
၁၇ငါ့ အဘ သည် သင် တို့အဘို့ စစ်တိုက် ၍ ကိုယ် အသက် ကို စွန့်စား လျက်၊ သင် တို့ကို မိဒျန် အမျိုးလက် မှ ကယ်နှုတ် လေပြီ။
18 ஆனால் இன்று நீங்களோ எனது தகப்பனின் குடும்பத்திற்கு எதிராகக் கலகம்செய்து, அவரது மகன்கள் எழுபதுபேரையும் ஒரு கல்லின்மேல் கொலைசெய்தீர்கள். அவரது அடிமைப்பெண்ணின் மகன் அபிமெலேக்கை, உங்கள் சகோதரனாகையால் சீகேமின் குடிகளுக்கு மேலாக அரசனாக்கியிருக்கிறீர்கள்.
၁၈သင်တို့သည် ငါ့ အဘ ၏အဆွေအမျိုး တစ်ဘက်၌ ယနေ့ ထ ၍ သူ ၏သား ခုနစ်ဆယ် တို့ကို ကျောက် တခု ပေါ် မှာ သတ် ပြီးလျှင် ၊ သူ ၏ကျွန်မ တွင် မြင်သော သား အဘိမလက် သည် သင် တို့ညီအစ်ကို ဖြစ်သောကြောင့် ၊ သူ့ ကို ရှေခင် မြို့သား တို့၏ ရှင်ဘုရင် ခန့်ထားကြပြီတကား။
19 நீங்களோ யெருபாகாலுடனும் அவனின் குடும்பத்துடனும் நேர்மையாகவும், உண்மையாகவும் இன்று நடந்திருந்தால், உங்களுக்காக அபிமெலேக்கு உங்கள் மகிழ்ச்சியாயிருக்கட்டும். நீங்களும் அவனின் மகிழ்ச்சியாய் இருங்கள்.
၁၉ယခုမှာ သင်တို့သည် ယေရုဗ္ဗာလ နှင့် သူ ၏အမျိုးအနွယ် အား သစ္စာတရား အတိုင်း ယနေ့ ပြု ပြီးလျှင် ၊ အဘိမလက် ကို အမှီပြု ၍ ဝမ်းမြောက် ကြလော့။ အဘိမလက် သည်လည်း သင် တို့ကို အမှီပြု ၍ ဝမ်းမြောက် ပါစေ။
20 அப்படியில்லையானால் அபிமெலேக்கிலிருந்து நெருப்பு எழும்பி உங்களையும், சீகேமின் குடிகளையும் பெத் மிலோனின் குடிகளையும் எரித்துப்போடட்டும். உங்களிலிருந்தும், சீகேமின் குடிகளிலிருந்தும், பெத்மில்லோன் குடிகளிலிருந்தும் நெருப்பு எழும்பி, அபிமெலேக்கையும் எரித்துப்போடட்டும்” என்று சொல்லி முடித்தான்.
၂၀သို့မဟုတ် လျှင် အဘိမလက် ထဲက မီး ထွက် ၍ ၊ ရှေခင် မြို့သား နှင့် မိလ္လော အဆွေအမျိုးကိုလောင် ပါစေ။ ရှေခင် မြို့သား နှင့် မိလ္လော အဆွေအမျိုးထဲက မီး ထွက် ၍ အဘိမလက် ကို လောင် ပါစေဟု ကြွေးကြော်ပြီးမှ၊
21 அவற்றைச் சொன்னபின்பு யோதாம் தன் சகோதரன் அபிமெலேக்கிற்கு பயந்ததினால் தான் இருந்த இடத்தைவிட்டு பேயேர் என்னும் இடத்திற்குத் தப்பி ஓடி அங்கே இருந்தான்.
၂၁အလျင်အမြန်ပြေး ၍ အစ်ကို အဘိမလက် ကို ကြောက်သောကြောင့် ဗေရ မြို့သို့ သွား ၍ နေ လေ၏။
22 அபிமெலேக்கு இஸ்ரயேலை மூன்று வருடங்கள் அரசாண்டான்.
၂၂အဘိမလက် သည် ဣသရေလ အမျိုးကို အုပ်စိုး ၍ သုံး နှစ် စေ့သောအခါ၊
23 அதன்பின்பு இறைவன் அபிமெலேக்கிற்கும், சீகேமின் குடிகளுக்கும் இடையில் ஒரு பொல்லாத ஆவியை அனுப்பினார். அப்பொழுது சீகேமின் குடிகள் அபிமெலேக்கிற்கு எதிராகத் துரோகமாய் நடந்தார்கள்.
၂၃ဘုရား သခင်သည် အဘိမလက် နှင့် ရှေခင် မြို့သား စပ်ကြား မှာ ဆိုး သောဝိညာဉ် ကို စေလွှတ် တော်မူ၍ ၊ ရှေခင် မြို့သား တို့သည် အဘိမလက် ၏သစ္စာကို ဖျက် ကြ၏။
24 யெருபாகாலின் எழுபது மகன்களான தனது சகோதரர்களின் இரத்தத்தை சிந்தி, அவர்களுக்கு எதிராக அபிமெலேக் செய்த குற்றத்திற்காக அவனைப் பழிவாங்குவதற்காகவே இறைவன் இதைச் செய்தார். சீகேமின் குடிகள் அவனுடைய சகோதரர்களைக் கொலைசெய்ய உதவிசெய்ததற்காக அவர்கள்மேலும் இறைவன் இதைச் செய்தார்.
၂၄အကြောင်းမူကား၊ ယေရုဗ္ဗာလ ၏ သား ခုနစ်ဆယ် တို့၌ ကြမ်းတမ်းစွာပြု၍ သတ်မိသောအပြစ်သည် သူတို့ကိုသတ်သောသူ တို့ ညီအစ်ကို အဘိမလက် အပေါ် သို့၎င်း၊ ညီအစ်ကို များကိုသတ် သောအမှု၌ ဝိုင်း၍ လက်ခံသော ရှေခင် မြို့သား တို့အပေါ် သို့၎င်း ရောက် ရမည်အကြောင်းတည်း။
25 அபிமெலேக்கை எதிர்த்து மலையுச்சியில் பதுங்கியிருந்து அவ்வழியே போவோரைக் கொள்ளையிடுவதற்காக சீகேமின் குடிகள் மனிதரை ஏற்படுத்தினர். இது அபிமெலேக்கிற்கு அறிவிக்கப்பட்டது.
၂၅ရှေခင် မြို့သား တို့သည် အဘိမလက်ကို ချောင်းမြောင်း စေခြင်းငှါ၊ လူတို့ကို တောင် ထိပ် ပေါ် မှာထား ၍ ထိုသူတို့သည် ခရီး သွား သောသူ အပေါင်း တို့၏ ဥစ္စာကို လု ယူကြ၏။ ထိုသတင်းကိုလည်း၊ အဘိမလက် သည်ကြား ၏။
26 இப்பொழுது ஏபேத்தின் மகன் காகால் தனது சகோதரர்களுடன் சீகேமுக்குப் போனான். சீகேமின் குடிகள் அவனில் நம்பிக்கை வைத்தனர்.
၂၆ဧဗက် ၏သား ဂါလ သည် မိမိ ညီအစ်ကို တို့နှင့်အတူ ရှေခင် မြို့ဘက်သို့ ဝင် ၍ ရှေခင် မြို့သား တို့သည် သူ့ ကို ကိုးစား ကြ၏။
27 அங்கிருந்து அவர்கள் திராட்சைத் தோட்டங்களுக்குப் போய் பழங்களைச் சேர்த்து அதை மிதித்துப் பிழிந்தனர். பின்பு அவர்கள் தங்களுடைய தெய்வத்தின் கோயிலில் பண்டிகை கொண்டாடினர். அவர்கள் உண்டு குடிக்கையில் அபிமெலேக்கைச் சபித்தனர்.
၂၇ဥယျာဉ် ၌ လည် လျက် စပျစ်သီး ကို သိမ်း ယူလျက် ပျော်မွေ့ ခြင်းကို ပြု သဖြင့် ၊ မိမိ တို့ ဘုရား ၏ကျောင်း သို့သွား ၍ အဘိမလက် ကို ကျိန်ဆဲ ကြ၏။
28 ஏபேத்தின் மகன் காகால் அவர்களிடம், “அபிமெலேக் யார்? சீகேமியரான நாம் யார்? சீகேமியர்களாகிய நாம் அபிமெலேக்கிற்கு ஏன் கீழ்ப்பட்டிருக்க வேண்டும்? இவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய உதவியாளன் அல்லவா? சீகேமின் தகப்பனான ஏமோரின் மனிதர்களுக்குப் பணிசெய்யுங்கள். நாம் எதற்காக அபிமெலேக்கிற்கு பணிசெய்ய வேண்டும்?
၂၈ဧဗက် ၏သား ဂါလ ကလည်း ၊ ငါတို့သည် အဘိမလက် အမှု ကို စောင့်ရမည်အကြောင်း ၊ အဘိမလက် ကားအဘယ်သူ နည်း၊ ရှေခင် ကား အဘယ်သူ နည်း။ အဘိမလက်သည် ယေရုဗ္ဗာလ သား မဟုတ် လော။ ဇေဗုလ သည် သူ ၏အမှုထမ်း မဟုတ်လော။ ရှေခင် အဘ ဟာမော် လူ တို့၏ အမှု ကို ထမ်းကြလော့။ အဘိမလက် အမှု ကို အဘယ်ကြောင့် ထမ်းရမည်နည်း။
29 இந்த மனிதர் மட்டும் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்பட்டிருப்பார்களாயின் நான் அபிமெலேக்கை அழித்துவிடுவேன். நான் அபிமெலேக்கிடம், ‘உனது படையை திரட்டிக்கொண்டு போருக்கு வா’ என்று சொல்வேன்” என்றான்.
၂၉ဤ လူ တို့သည် ငါ့ လက် သို့ ရောက် ပါစေသော။ သို့ဖြစ်လျှင် အဘိမလက် ကို ငါပယ် မည်ဟူ၍၎င်း၊ အဘိမလက် အား သင် ၏ ဗိုလ်ခြေ တို့ကို ပြင်ဆင် ၍ လာ တော့ဟူ၍၎င်း ဆို ၏။
30 ஏபேத்தின் மகன் காகால் சொன்னதைக் கேட்ட பட்டணத்தின் ஆளுநரான சேபூல் மிகவும் கோபமடைந்தான்.
၃၀ဧဗက် ၏သား ဂါလ စကား ကို မြို့ အုပ် ဇေဗုလ ကြား သောအခါ အမျက် ထွက် ၍၊
31 எனவே அவன் இரகசியமாக அபிமெலேக்கிற்கு தூதுவரை அனுப்பி, “ஏபேத்தின் மகன் காகால் தன் சகோதரர்களுடன் சீகேமுக்கு வந்து பட்டணத்து மக்களை உனக்கு எதிராக தூண்டிவிடுகிறான்.
၃၁ပရိယာယ်အားဖြင့်အဘိမလက် ထံ သို့စေလွှတ် လျက်၊ ဧဗက် ၏သား ဂါလ သည် မိမိ ညီအစ်ကို တို့နှင့်အတူ ရှေခင် မြို့သို့ လာ ၍ ကိုယ်တော် တစ်ဘက် ၌ မြို့ ကို ပြင်ဆင် ကြပါ၏။
32 எனவே நீயும் உன் மனிதர்களும் இரவுவேளையில் வந்து வயல்வெளிகளில் பதுங்கிக் காத்திருக்கவேண்டும்.
၃၂သို့ဖြစ်၍ ညဉ့် အခါ ကိုယ်တော် သည် ပါ သော သူ တို့နှင့်တကွ ထ ၍ ၊ တော ၌ ချောင်းမြောင်း လျက် နေတော်မူပါ။
33 காலையில் சூரியன் உதிக்கும் நேரம் பட்டணத்தை நோக்கி முன்னேறுங்கள். காகாலும் அவனுடைய மனிதர்களும் உனக்கெதிராக வெளியே வரும்போது, உன் கையால், செய்ய முடியுமானதை செய்” என்று சொல்லச் சொன்னான்.
၃၃နံနက် စောစောနေ ထွက်စကထ ၍ မြို့ ကို တိုက် တော်မူပါ။ ဂါလ သည် သူ ၌ ပါသော လူ တို့နှင့်တကွ ဆီး ၍ ကြိုသောအခါ ၊ အဆင်သင့်သည်အတိုင်း ပြု တော်မူပါဟု ကြား လျှောက်လေ၏။
34 அவ்வாறே அபிமெலேக்கு அன்றிரவு தனது படைகளுடன் புறப்பட்டுபோய், சீகேமுக்கு அருகில் சென்று நான்கு பிரிவுகளாக நிலைகொண்டு மறைந்திருந்தான்.
၃၄အဘိမလက် သည် သူ ၌ ပါသမျှ သော လူ တို့နှင့်တကွ ညဉ့် အခါ ထ ၍ တပ် လေး တပ်ခွဲပြီးလျှင်၊ ရှေခင် မြို့ကို ချောင်းမြောင်း လျက်နေကြ၏။
35 ஏபேத்தின் மகன் காகால் வெளியே போய் பட்டணத்தின் நுழைவாசலில் வந்து நின்றான்; அப்பொழுது அபிமெலேக்கும் அவனுடைய வீரர்களும் தாங்கள் மறைந்திருந்த இடங்களிலிருந்து வெளியே வந்தார்கள்.
၃၅ဧဗက် ၏သား ဂါလ သည် ထွက် ၍ မြို့ တံခါး ဝ ၌ ရပ် လျှင် ၊ အဘိမလက် သည် မိမိ ၌ ပါသော သူ တို့ နှင့်တကွ ချောင်းမြောင်း ရာမှ ထ ကြ၏။
36 காகால் அவர்களைக் கண்டபோது சேபூலிடம், “அதோ பார், மலையின் உச்சியிலிருந்து மக்கள் இறங்கி வருகிறார்கள்” என்றான். அதற்கு சேபூல், “நீ மலைகளின் நிழல்களை மனிதன் என்று தவறாக நினைக்கிறாய்” என்றான்.
၃၆ဂါလ သည် ထိုလူ တို့ကို မြင် လျှင် ၊ တောင် ပေါ်မှ လူ များ ဆင်း လာကြသည်ဟု ဇေဗုလ အား ဆို သော် ၊ ဇေဗုလ က တောင် အရိပ် သည် လူ ကဲ့သို့ ထင် သည်ဟု ပြန်ပြော ၏။
37 ஆனால் காகால் திரும்பவும், “அதோ பார், நாட்டின் நடுவில் உயர்ந்த பகுதியிலிருந்து மக்கள் இறங்கி வருகிறார்கள். அதோடு குறிசொல்வோரின் ஒரு பிரிவு கர்வாலி மரப்பாதையிலிருந்து வருகிறது” என்றான்.
၃၇တဖန် ဂါလ က၊ ကြည့် ပါ။ လူ အချို့တို့သည် တောင်ရိုးပေါ်မှ ဆင်း လာကြ၏။ အချို့တို့သည် မောနေနိမ် သပိတ် တောလမ်း ဖြင့် လာ ကြ၏ဟု ပြောဆို လျှင်၊
38 அப்பொழுது சேபூல் அவனிடம், “இப்பொழுது நீ பெரிய கதை அளந்தாயே, அது எங்கே? அபிமெலேக் யார்? நாம் ஏன் அவனுக்குக் கீழ்ப்பட்டிருக்க வேண்டும் என்று நீ இழிவாகப் பேசிய மனிதர்கள் இவர்களல்லவா. புறப்பட்டுப்போய் அவர்களுடன் சண்டையிடு” என்றான்.
၃၈ဇေဗုလ က၊ ငါတို့သည် အဘိမလက် အမှု ကို ထမ်းရမည်အကြောင်း ၊ အဘိမလက် သည် အဘယ်သူ နည်းဟု သင်ဆို သော နှုတ် သည် ယခု အဘယ်မှာ ရှိသနည်း။ ထို လူ တို့သည် သင်မထီမဲ့မြင် ပြုသောသူမဟုတ် လော။ ထွက် ၍ သူ တို့ကို စစ်တိုက် ပါလော့ဟု ဆို သော်၊
39 காகால் சீகேமின் குடிகளுடன் சென்று அபிமெலேக்குடன் சண்டையிட்டான்.
၃၉ဂါလ သည် ရှေခင် မြို့သား တို့ရှေ့ မှာ ထွက် ၍ အဘိမလက် ကို တိုက် လေ၏။
40 அபிமெலேக்கு அவனைத் துரத்தினான்; அநேகர் ஓடிப்போகையில் பட்டணத்தின் வாசல்வரை காயமுற்று விழுந்தார்கள்.
၄၀အဘိမလက် လိုက် ၍ ဂါလပြေး သဖြင့် များ သောသူတို့သည် မြို့တံခါး ဝ တိုင်အောင် အထိအခိုက် ခံလျက် လဲ ၍ သေကြ၏။
41 அபிமெலேக்கு அருமாவிலே தங்கியிருந்தான். சேபூல், காகாலையும் அவன் சகோதரர்களையும் சீகேமிலிருந்து வெளியே துரத்திவிட்டான்.
၄၁အဘိမလက် သည် အရုမ မြို့မှာ နေ ၍ ဇေဗုလ သည် ဂါလ နှင့် သူ ၏ညီအစ်ကို တို့ကို ရှေခင် မြို့၌ မနေ စေခြင်းငှါနှင်ထုတ် လေ၏။
42 அடுத்தநாள் சீகேமின் குடிகள் வயல்களுக்குப் போனார்கள். இது அபிமெலேக்கிற்கு அறிவிக்கப்பட்டது.
၄၂နက်ဖြန် နေ့၌ လူ များတို့သည် မြို့ ပြင်သို့ ထွက် မည်အကြောင်း ကို အဘိမလက် သည် ကြား လျှင်၊
43 எனவே அவன் தனது மக்களை மூன்று பிரிவுகளாகப் பிரித்து வயல்களில் மறைந்திருக்கச் செய்தான். பட்டணத்திலிருந்து மக்கள் வெளியே வருவதை அவன் கண்டதும், அவன் அவர்களைத் தாக்குவதற்கு எழுந்தான்.
၄၃မိမိလူ တို့ကို သုံး စု ခွဲ ၍ တော ၌ ချောင်းမြောင်း လျက် နေသဖြင့် ၊ မြို့ သားတို့သည် ထွက် လာကြသောအခါ ထ ၍ လုပ်ကြံ လေ၏။
44 அபிமெலேக்கும், அவனுடன் இருந்த பிரிவினரும் தாங்கள் இருந்த இடத்திலிருந்து முன்னேறி பட்டணத்தின் நுழைவாசலுக்குள் விரைந்து சென்றார்கள். மற்ற இரு பிரிவினரும் வயல்களில் இருந்தவர்களின்மேல் பாய்ந்து அவர்களை அடித்து வீழ்த்தினார்கள்.
၄၄အဘိမလက် သည် မိမိ လူတစု နှင့် မြို့ တံခါး ဝ သို့ ပြေး တက်၍ စောင့် နေ၏။ အခြားသော လူနှစ် စု တို့သည် တော ၌ ရှိသောလူတို့ဆီသို့ ပြေး ၍ သတ် ကြ၏။
45 அபிமெலேக்கு அந்த நாள்முழுவதும் பட்டணத்திற்கெதிரான தனது தாக்குதலைக் கடுமையாக்கி அந்தப் பட்டணத்தைப் பிடித்து, அங்குள்ள மக்களைக் கொலைசெய்தான். பின் அப்பட்டணத்தை அழித்து அதிலே உப்புத் தூவினான்.
၄၅အဘိမလက် သည် တနေ့လုံး မြို့ ကို တိုက် ၍ ရ သောအခါ ၊ မြို့ ၌ တွေ့သောသူ တို့ကိုသတ် ပြီးလျှင် မြို့ရိုး ကိုဖြိုဖျက် ၍ မြို့ ရာကို ဆား နှင့် ကြဲဖြန့် လေ၏။
46 சீகேமின் கோபுரத்தில் இருந்த குடிமக்கள் இவற்றைக் கேள்விப்பட்டவுடன், “ஏல் பெரீத்” கோவில்களின் அரண்களுக்குள் போனார்கள்.
၄၆ထိုသိတင်းကို ရှေခင်ရဲတိုက်သား အပေါင်း တို့သည် ကြား လျှင် ၊ ဗေရိတ်ဘုရား ၏ ကျောင်း ၌ ခိုင်ခံ့ သော အခန်းထဲမှာ စုဝေး ကြ၏။
47 இவர்கள் எல்லோரும் கோவிலுக்குள் கூடியிருக்கிறார்கள் என்று அபிமெலேக்கு கேள்விப்பட்டான்.
၄၇ရှေခင်ရဲတိုက်သား အပေါင်း တို့သည် စုဝေး ကြောင်း ကို အဘိမလက် သည် ကြား လတ်သော်၊
48 அப்பொழுது அபிமெலேக்கும் அவனுடைய மனிதர்களும் சல்மோன் மலைக்கு ஏறிப்போனார்கள். அங்கே அபிமெலேக்கு கோடரியை எடுத்து மரத்தின் சில கிளைகளை வெட்டி, தனது தோளின்மேல் வைத்துக்கொண்டான். பின் அவனோடிருந்த மனிதர்களிடம், “நான் செய்வதைப்போல் நீங்களும் விரைவாகச் செய்யுங்கள்” என்றான்.
၄၈ကိုယ်တိုင် မှစ၍ပါသော သူ အပေါင်း တို့သည် ဇလမုန် တောင် သို့ သွား ပြီးလျှင် ၊ အဘိမလက် သည် ပုဆိန် နှင့် သစ်ခက် ကို ခုတ် ၍ မိမိ ပုခုံး ပေါ် မှာ တင် ထမ်း လျက် ၊ ငါပြု သည်ကို သင်တို့မြင် သည်အတိုင်း အလျင်အမြန် ပြု ကြလော့ဟု လိုက်သောသူ တို့အား ဆို လျှင်၊
49 எனவே எல்லா மனிதர்களும் கிளைகளை வெட்டிக்கொண்டு அபிமெலேக்கைப் பின்பற்றிச் சென்றார்கள். அவர்கள் அந்தக் கிளைகளை அரணைச் சுற்றி அடுக்கிவைத்து, மக்கள் உள்ளே இருக்கத்தக்கதாகத் நெருப்பிட்டுக் கொளுத்தினார்கள். எனவே சீகேமின் கோபுரத்திற்குள் இருந்த கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்களும் பெண்களும் செத்துப் போனார்கள்.
၄၉သူ၏လူ အပေါင်း တို့သည် ထိုအတူ အသီးအသီး သစ်ခက် တို့ကို ခုတ် ၍ အဘိမလက် နောက် သို့ လိုက် လျက် ခိုင်ခံ့ သောအခန်းကို မီးရှို့ ကြ၏။ ထိုသို့ ရှေခင်ရဲတိုက်သား အပေါင်း တို့နှင့်အတူ တထောင် သော ယောက်ျား မိန်းမ တို့သည် သေ ကြကုန်၏။
50 அதன்பின் அபிமெலேக்கு தேபேஸ் பட்டணத்திற்குப் போய் அதை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்.
၅၀ထိုနောက်မှ အဘိမလက် သည် သေဗက် မြို့သို့ သွား ၍ တပ်ချ ပြီးလျှင် တိုက် ယူလေ၏။
51 ஆயினும் பட்டணத்திற்குள்ளே ஒரு பலமான கோபுரம் இருந்தது. அந்த பட்டணத்திலிருந்த ஆண்களும், பெண்களுமாக எல்லா மக்களும் அந்த கோபுரத்துக்குள்ளே தப்பி ஓடினார்கள்.
၅၁သို့ရာတွင် မြို့ ထဲမှာ ခိုင်ခံ့ သော ရဲတိုက် တခုရှိ ၍ ၊ မြို့ သား ယောက်ျား မိန်းမ အပေါင်း တို့သည် ထို ရဲတိုက်ထဲ သို့ ပြေး ဝင်ကြ၏။ တံခါးကိုလည်း ပိတ် ထား၍ ရဲတိုက် အပေါ် သို့ တက် ကြ၏။
52 அவர்கள் தாங்கள் உள்ளே சென்று கதவைப் பூட்டிக்கொண்டு, அந்த கோபுரத்தின் கூரையிலே ஏறினார்கள். அபிமெலேக்கு கோபுரத்துக்குச் சென்று அதைத் தாக்கினான். அவன் அந்த கோபுரத்திற்கு நெருப்பு மூட்டுவதற்காக அதற்கு அருகில் வந்தான்.
၅၂အဘိမလက် သည် ရဲတိုက် ကို လာ ၍ တိုက် လျက်၊ ရဲတိုက် တံခါး ကို မီး ရှို့ ခြင်းငှါ ချဉ်းကပ် သောအခါ၊
53 அப்பொழுது மேலே இருந்த ஒரு பெண் திரிகைக்கல்லை அவனுடைய தலைக்குமேல் எறிய அவனுடைய மண்டையோடு வெடித்தது.
၅၃မိန်းမ တယောက် သည် ကြိတ်ဆုံ ကျောက်တဖဲ့ ကို အဘိမလက် ခေါင်း ပေါ် သို့ ပစ်ချ ၍ ဦးခေါင်းခွံ ပေါက် ကွဲလေ၏။
54 அப்பொழுது அபிமெலேக்கு தன் ஆயுததாரியை அவசரமாக அழைத்து, “உனது வாளை எடுத்து என்னைக் கொன்றுவிடு. ‘ஒரு பெண் அவனைக் கொன்றாள்’ என்று எப்பொழுதும் யாரும் சொல்லக்கூடாது” என்றான். எனவே அந்த வேலைக்காரன் அவனை வாளால் ஊடுருவக் குத்தினான். அப்பொழுது அவன் இறந்தான்.
၅၄သူသည် လက်နက် ကိုင် လုလင် ကို အလျင်အမြန် ခေါ် ၍ မိန်းမ သည် အဘိမလက် ကိုသတ် သည်ဟု ပြော စရာမ ရှိစေခြင်းငှါ၊ သင့် ထား ကို ထုတ် ၍ ငါ့ ကိုသတ် လော့ဟု ဆို သည်အတိုင်း ၊ လုလင် သည် ထိုး ၍ အဘိမလက် သေ လေ၏။
55 அபிமெலேக்கு இறந்துபோனதை அறிந்த இஸ்ரயேலர் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.
၅၅အဘိမလက် သေ ကြောင်း ကို ဣသရေလ လူ တို့သည် သိမြင် လျှင် ၊ အသီးအသီး မိမိ တို့နေရာ သို့ ပြန် သွားကြ၏။
56 அபிமெலேக்குத் தன் எழுபது சகோதரர்களைக் கொன்று தன் தந்தைக்குச் செய்த கொடிய செயலுக்காக, இறைவன் இவ்வாறு அவனைத் தண்டித்தார்.
၅၆ထိုသို့ အဘိမလက် သည် မိမိ ညီအစ်ကို ခုနစ်ဆယ် တို့ကိုသတ် ၍ ပြု မိသော ဒုစရိုက် အပြစ်ကို ဘုရား သခင်ဆပ် ပေးတော်မူ၏။
57 சீகேம் மனிதர் செய்த கொடுமைகளுக்காக இறைவன் அவர்களையும் தண்டித்தார். யெருபாகாலின் மகன் யோதாமின் சாபம் அவர்கள்மேல் வந்தது.
၅၇ရှေခင် မြို့သား ပြုသောဒုစရိုက် အပြစ်ကိုလည်း သူ တို့ခေါင်း ပေါ် သို့ ဘုရား သခင်ရောက် စေတော်မူသဖြင့် ၊ ယေရုဗ္ဗာလ သား ယောသံ ကျိန် သော စကားအတိုင်း သူ တို့သည် ခံရ ကြ၏။