< யூதா 1 >

1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், யாக்கோபின் சகோதரனுமான யூதா, பிதாவாகிய இறைவனின் அன்புக்குரியவர்களும், இயேசுகிறிஸ்துவின் பாதுகாப்பில் இருக்கிறவர்களுமான அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது:
ମୁୟ୍‌ଁ ଜିଉଦା, ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍‌ ଗଟେକ୍‌ ଗତିଦଃଙ୍ଗ୍‌ଳା ଆର୍‌ ଜାକୁବର୍‌ ବାୟ୍‌ସି ଜୁୟ୍‌ ଲକ୍‌ମଃନ୍‌କେ ମାପ୍ରୁ କୁଦିଆଚେ ଉବା ଇସ୍ୱରାର୍‌ ଲାଡାର୍‌ ଲକ୍‌ ଆରେକ୍‌ ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍‌ ଗିନେ ରଃକ୍ୟାହାୟ୍‌ଲାର୍‌ ସେମଃନାର୍‌ ହାକ୍‌ ଚିଟି ଲେକୁଲେ ।
2 இரக்கமும், சமாதானமும், அன்பும் உங்களிடம் நிறைவாய் பெருகுவதாக.
ଇସ୍ୱରାର୍‌ ଦଃୟା, ସୁସ୍ତା ଆର୍‌ ଲାଡ୍‌ ହୁର୍ନ୍‌କଃରି ତୁମାର୍‌ ଉହ୍ରେ ଅଃଉଅ ।
3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுமென நான் ஆவலாய் இருந்தேன். ஆனால் இந்த விசுவாசத்தின் சத்தியத்தைக் காத்துக்கொள்ளப் போராடும்படி உங்களுக்கு எழுதி உங்களை ஊக்குவிக்க வேண்டியதே இப்பொழுது அவசியம் என்று உணர்ந்தேன். இந்த விசுவாசத்தை இறைவன் என்றென்றைக்குமென ஒரே முறையாய் பரிசுத்தவான்களிடம் ஒப்புக்கொடுத்திருந்தார்.
ଏ ଲାଡାର୍‌ ମଃନ୍ ମୁଁୟ୍‌ ତୁମାର୍‌ ହାକ୍‌ ଅଃମିମଃନାର୍‌ ସଃବୁଲକ୍‌ ହାୟ୍‌ ରିଲା ମୁକ୍ତି ବିସୟେ ତୁମିମଃନାର୍‌ ହାକ୍‌ ଲେକୁକ୍‌ ବଃଡେ ଜଃତୁନ୍ ଅୟ୍‌ ଦଃର୍ମିମଃନାର୍‌ ହାକ୍‌ ଗଟେକ୍‌ତର୍‌ ସଃହ୍ରିଦିଲା ବିସ୍ୱାସ୍‌ ଗିନେ ମଃନ୍ ହଃରାଣ୍‌ ସଃଙ୍ଗ୍ ଜୁଜ୍‌ କଃରୁକେ ତୁମିମଃନ୍ କେ ସାସ୍‌ ଦେଉଁକେ ଲେକୁକ୍‌ ମଃନ୍‌କଃଲେ ।
4 சிலர் திருட்டுத்தனமாக உங்கள் மத்தியிலே நுழைந்து இருக்கிறபடியினாலேயே நான் இப்படி எழுதுகிறேன். அவர்களுடைய அழிவு முற்காலத்திலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்கள் இறை பக்தியற்றவர்கள். அவர்கள் நமது இறைவனுடைய கிருபையை ஒழுக்கக்கேடாய் நடப்பதற்கான அனுமதியாக எடுத்துக்கொள்கிறார்கள். அவர்கள் நம்முடைய ஒரே ஆண்டவரும் கர்த்தருமாய் இருக்கிற இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கிறார்கள்.
କାୟଃତାକ୍‌ବଃଲେକ୍‌ ହୁର୍ବାର୍‌ ସାସ୍ତରେମଃନ୍ ଡଃଣ୍ଡାର୍‌ ଜୟ୍‌ଗ୍‌ ବଃଲି ଲେକା ଅୟ୍‌ରିଲା କଃତେକ୍‌ ଲକ୍‌ ତୁମିମଃନାର୍‌ ବିତ୍ରେ ଲୁକ୍‌ଣେ ଆସି ଆଚ୍‌ତି, ସେମଃନ୍ ଅଃଦଃର୍ମି, ଅଃମିମଃନାର୍‌ ଇସ୍ୱରାର୍‌ ଦଃୟାକ୍‌ ଉଲ୍‌ଟା ବାବେ କଃରାବ୍‌ ଇଚାୟ୍‌ ବେବାର୍‌ କଃର୍ତି ଆରେକ୍‌ ଅଃମିମଃନାର୍‌ ଗଟେକ୍‌ ବଃଲି ସାଉକାର୍‌ ଆର୍‌ ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟକେ ନଃମାନ୍‌ତି ।
5 இதையெல்லாம் நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள். ஆனால் கர்த்தர் தமது மக்களை எகிப்திலிருந்து விடுவித்து, பின்பு விசுவாசிக்காதவர்களை அழித்தார் என்பதை உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறேன்.
ଅୟ୍‌ଲେକ୍‌ ହେଁ ତୁମିମ୍‌ମନ୍ ସଃବୁ କଃତା ନିକକଃରି ଜାଣି ଆଚାସ୍‌ ତଃବେ ହେଁ ମୁଁୟ୍‌ ତୁମିମଃନ୍‌କେ ଏତାୟ୍‌ ଦେଉଁକ୍‌ ମଃନ୍ କଃରୁଲେ ଜେ, ମାପ୍ରୁ ମିସର୍‌ ଦେସେ ହୁଣି ଲକ୍‌ମଃନ୍‌କେ ମୁକ୍ଳାୟ୍‌ଲା, ଆର୍‌ ଜୁୟ୍‌ ଲକ୍‌ମଃନ୍ ସଃତ୍‌ ନକେଲାୟ୍‌, ସେମଃନ୍‌କେ ନାସ୍‌ କଃଲା ।
6 இன்னும் தங்களுடைய அதிகாரமான நிலைமையில் நிலைத்திராமல், தங்களுடைய குடியிருப்பை கைவிட்ட இறைத்தூதர்களையும் நினைவுகொள்ளுங்கள். இறைவன் அவர்களை நித்தியமான சங்கிலிகளால் கட்டி, காரிருளில் அடைத்து வைத்திருக்கிறார். அந்த மாபெரும் நாளில், அவர்களுக்குத் தீர்ப்புக் கொடுப்பதற்காக, அவர்களை இப்படி வைத்திருக்கிறார். (aïdios g126)
ଆରେକ୍‌ ସଃର୍ଗାର୍‌ ଜୁୟ୍‌ ଦୁତ୍‌ମଃନ୍ ଅଃହ୍‌ଣା ଅଃହ୍‌ଣାର୍‌ ବଃଡ୍‌ ହଃଦେ ନଃରେୟ୍‌ ନିଜାର୍‌ ନିଜାର୍‌ ବାସାକ୍‌ର୍ତା ଟାଣ୍ ଚାଡ୍‌ଲାୟ୍‌ ସେମଃନ୍‌କେ ମାପ୍ରୁ ବଃଡ୍‌ ବିଚାର୍‌ ଦିନ୍ ହଃତେକ୍‌ ସଃବୁ ଦିନାର୍‌ ବାନ୍ଦୁଣେ ବାନ୍ଦିକଃରି ଅଃନ୍ଦାର୍‌ ଟାଣେ ସଃଙ୍ଗାୟ୍‌ ଆଚେ । (aïdios g126)
7 அதுபோலவே சோதோம், கொமோரா பட்டணங்களையும், அவைகளைச் சுற்றியிருந்த பட்டணங்களையும் சேர்ந்தவர்கள் ஒழுக்கக்கேடான பாலுறவுகளுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். அவர்கள் இயல்புக்கு மாறான பாலுறவுகளிலும் ஈடுபட்டார்கள். அவர்கள் நித்திய நெருப்பின் தண்டனைக்கு உட்பட்டு, வேதனைப்படப் போகிறவர்களின் முன்னுதாரணமாய் இருக்கிறார்கள். (aiōnios g166)
ସେନ୍‌କାର୍‌ ସଦମ୍‌ ଆରେକ୍‌ ଗମ୍‌ରା ଆର୍‌ ସେମଃନାର୍‌ ଚାରିବାଟାର୍‌ ଗଃଳାର୍‌ ଲକ୍‌ମଃନ୍ ଦାରି ଆର୍‌ କଃରାବ୍‌ କାମ୍‌ କଃଲାକ୍‌ ସଃବୁ ଦିନାର୍‌ ଜୟେ ଦଃଣ୍ଡ୍‍ବୟ୍‌ଗ୍‌ କଃରି ଦଃକ୍‌ଲା ହର୍‌ ଅୟ୍‌ ଆଚ୍‌ତି । (aiōnios g166)
8 அதேவிதமாகவே இந்தக் கனவுக்காரர் தங்கள் உடல்களைக் கனவீனப்படுத்துகிறார்கள்; அதிகாரத்தை உதாசீனம் செய்கிறார்கள்; மாட்சிமையான இறைத்தூதரைத் தூஷிக்கிறார்கள்.
ସେରଃକମ୍‌ ଅୟ୍‌ଲେକ୍‌ ହେଁ ଚଃହ୍ନେ ଦଃକୁମଃନ୍ ହେଁ ସେ ହର୍‌ ଗଃଗାଳ୍‌କେ, ବିଟାଳ୍‌ କଃର୍ତି, ସେମଃନ୍ ମାପ୍ରୁ ଚାଲାଉତାର୍‌ ଅମାନ୍ୟା କଃର୍ତି ଆର୍‌ ଜଃଜ୍‌ମାନାର୍‌ ସଃର୍ଗ୍‌ ଦୁତ୍‌ମଃନ୍‌କେ ଲିନ୍ଦାକଃର୍ତି ।
9 ஆனால் தலைமை இறைத்தூதனான மிகாயேல்கூட, மோசேயின் உடலைக் குறித்து பிசாசுடன் வாக்குவாதம் செய்தபோது, அவனுக்கு எதிராக அவதூறான ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவரத் துணியவில்லை. அவன் பிசாசிடம், “கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக” என்று மட்டுமே சொன்னான்.
ମଃତର୍‌ ସଃର୍ଗାର୍‌ ମୁଳ୍‌ ଦୁତ୍‌ ମିକାଏଲ୍‌ ମସାର୍‌ ମଃଲା ଗଃଗାଳ୍‌ ବିସୟେ ସୟ୍‌ତାନ୍ ସଃଙ୍ଗ୍ ଦଃରାମ୍‌ସ୍କା ବଃଳ୍‌ ଲିନ୍ଦା କଃରି ତାର୍‌ ବିଚାର୍‌ କଃରୁକେ ସାସ୍‌ କଃରିନଃରିଲା ମଃତର୍‌ ଅଃତେକ୍‌ କୟ୍‌ଲା ମାପ୍ରୁ ତଃକ୍‌ ଦଃକାଦେଉଅ ।
10 ஆனால் இவர்களோ, தாங்கள் விளங்கிக்கொள்ளாத எல்லாவற்றிற்கும் எதிராக அவதூறாய்ப் பேசுகிறார்கள். பகுத்தறிவற்ற மிருகங்களைப்போல, தங்களுடைய இயல்பினால் அறிந்துகொள்வதையே செய்கிறார்கள், அவற்றினாலேயே அழிந்தும் போகிறார்கள்.
ମଃତର୍‌ ଇ ଲକ୍‌ମଃନ୍ ଜୁୟ୍‌ ସଃବୁ କଃତା ନଃଜାଣ୍‌ତି ସେସଃବୁର୍‌ ଲିନ୍ଦା କଃର୍ତି, ଆରେକ୍‌ ଗିଆନ୍ ନଃୟ୍‌ଲା ହସୁ ହର୍‌ ଜାୟ୍‌ଜାୟ୍‌ରି ଅଃଳକ୍‌ ବୁଜ୍‌ତି, ସେତାର୍‌ ଗିନେ ନାସ୍‌ ଅଃଉତି ।
11 இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனின் வழியில் நடக்கிறார்கள்; ஆதாயத்திற்காக பிலேயாமின் தவறைத் தாங்களும் செய்ய விரைகிறார்கள். கோராகைப்போல கலகம்பண்ணி, அழிந்துபோகப் போகிறார்கள்.
ଚି, ସେମଃନ୍ ଦଃଣ୍ଡାର୍‌ ଜୟ୍‌ଗ୍‌, କାୟଃତାକ୍‌ବଃଲେକ୍‌ ସେମଃନ୍ କଇନାର୍‌ ବାଟେ ଗଃଳାୟ୍‌ ଆଚ୍‌ତି, ଡାବୁ ଲ୍‌ବାର୍‌ ଗିନେ ବିଲିଆମାର୍‌ ହର୍‌ ବୁଲ୍‌କି ଆଚ୍‌ତି ଆର୍‌ କରହ ରଃକମ୍‌ ବିରଦ୍‌ କଃରି ସେମଃନ୍ ନାସ୍‌ ଅୟ୍‌ ଆଚ୍‌ତି ।
12 இவர்கள் உங்களுடன் அன்பின் விருந்துகளில் எந்தப் பயமுமின்றி கலந்துகொண்டு, அவற்றைக் கறைப்படுத்துகிறார்கள். இவர்கள் தங்கள் சுயநலனை மட்டுமே தேடுகிற மேய்ப்பர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் காற்றில் அடிபட்டுப்போகும் மழையற்ற மேகங்கள்; இவர்கள் பருவகாலத்திலும் கனிகொடாத, வேரோடு பிடுங்கப்பட்ட, இரண்டுமுறை செத்த மரங்கள்.
ସେମଃନ୍ ନିଲାଜ୍‌ ହାଣେ ତୁମାର୍‌ ସଃଙ୍ଗ୍ କାଉଆ ହିଉଆ କଃରି ତୁମିମଃନାର୍‌ ଲାଡାର୍‌ ବଜିର୍‌ ବାଗ୍‌ହାଉ ହର୍‌ ଅଃଉତି, ସେମଃନ୍ ଅଃହ୍‌ଣାର୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ ହେଟ୍‌ ହୁରାଉତି, ସେମଃନ୍ ହଃବନେ ଉଡ୍‌ତା ହାଣି ନୟ୍‌ଲା ମେଗ୍ ହର୍‌; ସେମଃନ୍ ଦୁୟ୍‌ତର୍‌ ମଃଲାର୍‌ ଚେରେ ହୁଣି ଉଟ୍‌କି ଅୟ୍‌ଲା ବଃଦ ଦଃସ୍ରା ମାସାର୍‌ ହଃଳ୍‌ ନୟ୍‌ଲା ଗଃଚ୍ ହର୍‌ ।
13 இவர்கள் கடலின் கட்டுக்கடங்காத அலைகள்; இவர்கள் வெட்கக்கேடான செயல்களை அலைகளின் நுரையைப்போல் கக்குகிறார்கள். இவர்கள் வழிவிலகி அலைகின்ற நட்சத்திரங்கள்; காரிருளே இவர்களுக்கென்று என்றென்றைக்குமென நியமிக்கப்பட்டிருக்கிறது. (aiōn g165)
ସେମଃନ୍ ଅଃହ୍‌ଣା ଅଃହ୍‌ଣାର୍‌ ଲାଜ୍‌ ହର୍‌ ହେହୁଲ୍‌ ବାନ୍ୟା ଉକାଳ୍‌ତା ସଃମ୍‌ନ୍ଦାର୍‌ ତିର୍‌ ନୟ୍‌ଲା ଉଲାଳ୍‌ ହର୍‌, ସେମଃନ୍ ଏଣେ ତେଣେ ବୁଲ୍‌ତା ତାରା ହର୍‌ । ସେମଃନାର୍‌ ଗିନେ ବଃଡେ ଅଃନ୍ଦାର୍‌ ଟାଣ୍ ସଃବୁ ଦିନାର୍‌ ଗିନେ ସଃଙ୍ଗାଜାୟ୍‌ ଆଚେ । (aiōn g165)
14 ஆதாமிலிருந்து ஏழாவது தலைமுறையில் வந்த ஏனோக்கு இவர்களைக்குறித்து இறைவாக்குரைத்தான்: “பாருங்கள், கர்த்தர் தமது ஆயிரம் ஆயிரமான பரிசுத்தர்களுடன் வருகிறார்.
ଆଦମାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ସାତ୍‌ କୁଳ୍‌ବଃଉଁସ୍‌ ଜେ ହନକ୍‌ ସେ ହେଁ ସେମଃନାର୍‌ ବିସୟେ ବାବ୍‌ବାଣି ପର୍ଚାର୍‌ କଃରି କୟ୍‌ରିଲା ମାପ୍ରୁ ଅଃଜାର୍‌ ଅଃଜାର୍‌ ସଃର୍ଗାର୍‌ ପବିତ୍ର ଦୁତ୍‌ମଃନାର୍‌ ସଃଙ୍ଗ୍ ।
15 அவர் உலக மக்கள் எல்லோருக்கும் நியாயத்தீர்ப்பைக் கொடுக்க வருகிறார். இறை பக்தியற்றவர்கள் தீய வழிகளில் செய்த அநேக செயல்களுக்காகவும், இறை பக்தியற்றவர்கள் இறைவனுக்கெதிராகப் பேசிய ஏளனமான வார்த்தைகளுக்காகவும், அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பதற்காகவும் அவர் வருகிறார்.”
ଦଃକା ମାପ୍ରୁ ସଃବ୍‌କାର୍‌ ବିଚାର୍‌ କଃରୁକେ, ଆରେକ୍‌ ଅଃଦଃର୍ମି ଲକ୍‌ମଃନ୍ ସଃବୁ ନିଜାର୍‌ ନିଜାର୍‌ ଜିବନ୍‌ କାଟ୍‌ତାବଃଳ୍‌ ଅଃଦଃର୍ମେ ଜୁୟ୍‌ସଃବୁ ଅଃଦଃର୍ମ୍‌ କାମ୍‌ କଃରି ଆଚ୍‌ତି ଆର୍‌ ଅଃଦଃର୍ମି ହାହିମଃନ୍ ତାର୍‌ ବିରଦେ ଜୁୟ୍‌ସଃବୁ ଲିନ୍ଦା କଃତା କୟ୍‌ ଆଚ୍‌ତି ସେସଃବୁ ସେମଃନ୍‌କେ ଦସିକଃରି ଡଃଣ୍ଡ୍‌ ଦେଉଁକେ ।
16 இவர்கள் முறுமுறுக்கிறவர்களும் மற்றவர்களில் குற்றம் கண்டுபிடிக்கிறவர்களுமாய் இருக்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய தீய ஆசைகளின்படியே நடக்கிறார்கள். அவர்கள் தங்களைக்குறித்து பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள். தங்களுடைய சுயநலன் கருதி, மற்றவர்களுக்கு முகஸ்துதி செய்கிறார்கள்.
ଏ ଲକ୍‌ମଃନ୍ ସଃବୁବଃଳ୍‌ ଗାଣେଞ୍ଜ୍‌କାରି ସେମଃନ୍ ଅଃହ୍‌ଣା ଅଃହ୍‌ଣାର୍‌ ଅବୁସ୍ତାୟ୍‌ ସଃର୍ଦା ନାୟ୍‌ ଆର୍‌ ନିଜାର୍‌ ନିଜାର୍‌ କଃରାବ୍‌ ଇଚାୟ୍‌ ଚାଲ୍‌ତି; ସେମଃନାର୍‌ ଟଣ୍ଡ୍ ବଃଡ୍‌ବଃଡ୍ କଃତା କୟ୍‌ଦ୍‌ ଆର୍‌ ସେମଃନ୍ ନିଜାର୍‌ ଲାବ୍‌ ଗିନେ ବିନ୍ ଲକେ ମୁଏଁ ମୁଏଁ ହଃକା ନିକ ବଃଲି କଃଉତି ।
17 ஆனால் அன்பான நண்பரே, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர் முன்னறிவித்தவைகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
ମଃତର୍‌ ଏ ଲାଡାର୍‌ମଃନ୍ ଅଃମିମଃନାର୍‌ ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟର ପେରିତ୍‌ମଃନ୍‌ ହୁର୍ବେ ଜୁୟ୍‌ସଃବୁ କଃତା କୟ୍‌ଆଚ୍‌ତି ସେରି ସଃବୁ ଏତାଉଆ;
18 கடைசிக் காலங்களில், “ஏளனம் செய்கிறவர்கள் வருவார்கள் என்றும், அவர்கள் இறை பக்தியற்ற தங்கள் தீய ஆசைகளின்படியே நடப்பார்கள் என்றும்” அவர்கள் உங்களுக்குச் சொல்லியிருந்தார்களே.
ସେମଃନ୍ କଃନ୍‌କଃରି ତୁମିମଃନ୍‌କେ କଃଉତି ରିଲାୟ୍‌, ସେସ୍‌କାଳେ ନିଜାର୍‌ ନିଜାର୍‌ କଃରାବ୍‌ ଇଚାୟ୍‌ ଚାଲ୍‌ତା ଇସ୍ୱର୍‌ ବିରଦି ଲକ୍‌ମଃନ୍ ବାରାୟ୍‌ ତୁମିମଃନ୍‌କେ ଗେଙ୍ଗ୍ରାଉତି ।
19 இந்த ஏளனக்காரர் உங்களைப் பிரிவினைக்கு உள்ளாக்குகிறார்கள். இவர்கள் மனித இயல்பின் உணர்ச்சிகளைப் பின்பற்றுபவர்கள். இவர்களில் பரிசுத்த ஆவியானவர் குடியிருப்பதில்லை.
ଏ ଲକ୍‌ମଃନ୍ ଦଃଳ୍‌ ବାଗ୍‌ବାଗ୍ କଃର୍ତି । ସେମଃନ୍ ଜଃଗତାର୍‌ ମଃନ୍ କଃର୍ତି, ଆର୍‌ ସେମଃନ୍ ଇସ୍ୱରାର୍‌ ଆତ୍ମା ନୟ୍‌ଲାର୍‌ ।
20 ஆனால் அன்பானவர்களே, நீங்களோ உங்களது மகா பரிசுத்தமான விசுவாசத்தில் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவியானவரில் ஜெபம் பண்ணுங்கள்.
ମଃତର୍‌ ଏ ଲାଡାର୍‌ ବାୟ୍‌ବେଣିମଃନ୍, ତୁମିମଃନ୍ ଅଃହ୍‌ଣାମଃନାର୍‌ ବଃଡେ ପବିତ୍ର ବିସ୍ୱାସ୍‌ ଉହ୍ରେ ଦଃର୍ମ୍‌ ଜିବନ୍ ହର୍‌ ଗଃର୍‌ ବାନ୍ଦା, ପବିତ୍ର ଆତ୍ମାୟ୍‌ ପାର୍ତ୍‌ନା କଃରା ।
21 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இரக்கம், உங்களை நித்திய வாழ்வுக்குக் கொண்டுவரும்வரை, நீங்கள் காத்திருக்கும்போது, இறைவனின் அன்பில் நிலைத்திருங்கள். (aiōnios g166)
ଆର୍‌ ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟାର୍‌ ଦଃୟାୟ୍‌ ଅଃମ୍ବର୍‌ ଜିବନ୍ ହାଉତା ହାୟ୍‌ଁ ଜାଗୁ ଜାଗୁ ଇସ୍ୱରାର୍‌ ଲାଡେ ତିର୍‌ ରିଆ । (aiōnios g166)
22 நம்பத் தயங்குவோரிடம் இரக்கமாயிருங்கள்.
ଜୁୟ୍‌ ଲକ୍‌ମଃନ୍ ଅଃହ୍ରାତ୍‌ ତଃୟ୍‌ ହଃଳ୍‌ତି, ସେମଃନାର୍‌ ମଃନ୍‌ ବିତ୍ରେ ବିସ୍ୱାସ୍‌ ଦଃକାଉଆ ।
23 மற்றவர்களை தண்டனைத் தீர்ப்பின் நெருப்பிலிருந்து இழுத்து எடுத்துக் காப்பாற்றுங்கள். மற்றவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள்; ஆனால், அப்போது எச்சரிக்கையாயிருங்கள். அவர்களுடைய உடைகளும்கூட மாம்சத்தால் கறைபட்டிருக்கின்றன. எனவே, அவற்றையும் வெறுத்துத் தள்ளிவிடுங்கள்.
ବୁଲ୍‌ତଃୟ୍‌ ହଃଳି ନାସ୍‌ ଅଃଉଁକେ ଜାତିରିଲା ଲକ୍‌ମଃନ୍‌କେ ଜୟେହୁଣି ବଚାଉଆ । ଆରେକ୍‌ କଃତେକ୍‌ ଲକାର୍‌ ହାହ୍‌ କାମେ ମାଟି କାୟ୍‌ଲା ହଃଚ୍ୟାକେ ହେଁ ଗିଣ୍ କଃରା, ମଃତର୍‌ ଡିରାର୍‌ ସଃଙ୍ଗ୍ ସେମଃନ୍‌କେ ଦଃୟା ଦଃକାଉଆ ।
24 விழுந்துபோகாதபடி உங்களைக் காக்க வல்லவராயிருக்கிறவரும், உங்களைக் குற்றமற்றவர்களாய் தமது மகிமையின் முன்பாக மகிழ்ச்சியுடன் நிறுத்த வல்லவராய் இருக்கிறவருமான
ଜେ ତୁମିକେ ଅଦୁର୍ଲାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ବଚାଉଁକ୍‌ ଆର୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ ଜଃଜ୍‌ମାନାର୍‌ ମୁଏଁ ନିର୍ଦସି ଆର୍‌ ସଃର୍ଦା କଃରି ଟିଆ କଃରୁକେ ସଃକ୍ତି ଆଚେ ।
25 நமது இரட்சகராகிய ஒரே இறைவனுக்கு, நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாக மகிமையும், மாட்சிமையும், வல்லமையும், அதிகாரமும் உண்டாவதாக. யுகங்களுக்கு முன்பும், இப்பொழுதும் என்றென்றும், அவருக்கே உண்டாவதாக. ஆமென். (aiōn g165)
ଅଃମିମଃନାର୍‌ ସେ ଗଟେକ୍‌ ମଃତର୍‌ ମୁକ୍ତିକଃର୍ତା ଇସ୍ୱରାର୍‌ ଜଃଜ୍‌ମାନ୍, ଉଜାଳ୍‌, ସଃକାତ୍‌ ଆର୍‌ ଅଃଦିକାର୍‌ ଅଃମାର୍‌ ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍‌ ଦଃୟ୍‌ ଜାର୍‌ ଆରୁମ୍‌ ନୟ୍‌ଲା କାଳେ ହୁଣି ଅଃବେ ଆର୍‌ ଜୁଗେଜୁଗେ ତାର୍‌ ଆମେନ୍‌ । (aiōn g165)

< யூதா 1 >