< யோவான் 1 >
1 ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை இறைவனுடன் இருந்தது, அந்த வார்த்தை இறைவனாயிருந்தது.
ⲁ̅ϩⲛ ⲧⲉϩⲟⲩⲉⲓⲧⲉ ⲛⲉϥϣⲟⲟⲡ ⲛϭⲓ ⲡϣⲁϫⲉ ⲁⲩⲱ ⲡϣⲁϫⲉ ⲛⲉϥϣⲟⲟⲡ ⲛⲛⲁϩⲣⲛ ⲡⲛⲟⲩⲧⲉ ⲁⲩⲱ ⲛⲉⲩⲛⲟⲩⲧⲉ ⲡⲉ ⲡϣⲁϫⲉ
2 அந்த வார்த்தையானவர் ஆரம்பத்திலேயே இறைவனோடு இருந்தார்.
ⲃ̅ⲡⲁⲓ ϩⲛ ⲧⲉϩⲟⲩⲉⲓⲧⲉ ⲛⲉϥϣⲟⲟⲡ ϩⲁⲧⲙ ⲡⲛⲟⲩⲧⲉ
3 அந்த வார்த்தையானவர் மூலமாகவே எல்லாம் படைக்கப்பட்டன; படைக்கப்பட்டிருப்பவைகளில் எதுவுமே அவரில்லாமல் படைக்கப்படவில்லை.
ⲅ̅ⲛⲧⲁ ⲡⲧⲏⲣϥ ϣⲱⲡⲉ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧϥ ⲁⲩⲱ ⲁϫⲛⲧϥ ⲙⲡⲉ ⲗⲁⲁⲩ ϣⲱⲡⲉ ⲡⲉⲛⲧⲁϥϣⲱⲡⲉ
4 அவரில் ஜீவன் இருந்தது; அந்த ஜீவனே எல்லா மனிதருக்கும் வெளிச்சமாயிருந்தது.
ⲇ̅ϩⲣⲁⲓ ⲛϩⲏⲧϥ ⲡⲉ ⲡⲱⲛϩ ⲁⲩⲱ ⲡⲱⲛϩ ⲡⲉ ⲡⲟⲩⲟⲓⲛ ⲛⲣⲣⲱⲙⲉ
5 அந்த வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கிறது, ஆனால் இருள் அதை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை.
ⲉ̅ⲁⲩⲱ ⲡⲟⲩⲟⲓⲛ ϥⲣ ⲟⲩⲟⲓⲛ ϩⲙ ⲡⲕⲁⲕⲉ ⲁⲩⲱ ⲙⲡⲉ ⲡⲕⲁⲕⲉ ⲧⲁϩⲟϥ
6 இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான்; அவனுடைய பெயர் யோவான்.
ⲋ̅ⲁϥϣⲱⲡⲉ ⲛϭⲓ ⲟⲩⲣⲱⲙⲉ ⲉⲁⲩⲧⲛⲛⲟⲟⲩϥ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ ⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲡⲉ ⲓⲱϩⲁⲛⲛⲏⲥ
7 தன் மூலமாய் எல்லா மக்களும் விசுவாசிக்கும்படியாகவே அந்த வெளிச்சத்தைக் குறித்து சாட்சி கொடுக்கும் ஒரு சாட்சியாகவே அந்த யோவான் வந்தான்.
ⲍ̅ⲡⲁⲓ ⲁϥⲉⲓ ⲉⲩⲙⲛⲧⲙⲛⲧⲣⲉ ϫⲉ ⲉϥⲉⲣ ⲙⲛⲧⲣⲉ ⲉⲧⲃⲉ ⲡⲟⲩⲟⲉⲓⲛ ϫⲉⲕⲁⲥ ⲉⲣⲉⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧϥ
8 அவன் வெளிச்சமாய் இருக்கவில்லை; அவனோ அந்த வெளிச்சத்திற்கான ஒரு சாட்சியாக மாத்திரமே வந்தான்.
ⲏ̅ⲛⲉ ⲡⲉⲧⲙⲙⲁⲩ ⲁⲛ ⲡⲉ ⲡⲟⲩⲟⲓⲛ ⲁⲗⲗⲁ ϫⲉⲕⲁⲥ ⲛⲧⲟϥ ⲉϥⲉⲣ ⲙⲛⲧⲣⲉ ⲉⲧⲃⲉ ⲡⲟⲩⲟⲓⲛ
9 உலகத்திற்குள் வந்து ஒவ்வொரு மனிதனுக்கும் வெளிச்சத்தைக் கொடுத்த வெளிச்சமே அந்த உண்மையான வெளிச்சம்.
ⲑ̅ⲡⲟⲩⲟⲓⲛ ⲙⲙⲉⲉ ⲉⲧⲣ ⲟⲩⲟⲓⲛ ⲉⲣⲱⲙⲉ ⲛⲓⲙ ⲡⲉ ⲉϥⲛⲏⲩ ⲉⲡⲕⲟⲥⲙⲟⲥ
10 அந்த வார்த்தையானவர் உலகத்தில் இருந்தார். உலகம் அவர் மூலமாய் படைக்கப்பட்டிருந்தும், உலகமோ அவரை இன்னார் என்று அறிந்துகொள்ளவில்லை.
ⲓ̅ⲛⲉϥϩⲙ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲡⲉ ⲁⲩⲱ ⲛⲧⲁⲡⲕⲟⲥⲙⲟⲥ ϣⲱⲡⲉ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲟⲟⲧϥ ⲁⲩⲱ ⲙⲡⲉ ⲡⲕⲟⲥⲙⲟⲥ ⲥⲟⲩⲱⲛϥ
11 அவர் தமக்குரிய இடத்திற்கே வந்தார். ஆனால் அவருடைய சொந்த மக்களோ, அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
ⲓ̅ⲁ̅ⲁϥⲓ ϣⲁ ⲛⲉⲧⲉ ⲛⲟⲩϥ ⲛⲉ ⲁⲩⲱ ⲙⲡⲉ ⲛⲉⲧⲉ ⲛⲟⲩϥ ⲛⲉ ϫⲓⲧϥ
12 ஆனால் அவர் தம்மை ஏற்றுக்கொண்டு தம்முடைய பெயரில் விசுவாசம் வைத்த அனைவருக்கும், இறைவனுடைய பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார்.
ⲓ̅ⲃ̅ⲛⲉⲛⲧⲁⲩϫⲓⲧϥ ⲇⲉ ⲁϥϯ ⲛⲁⲩ ⲛⲧⲉⲝⲟⲩⲥⲓⲁ ⲉⲧⲣⲉⲩϣⲱⲡⲉ ⲛϣⲏⲣⲉ ⲛⲧⲉ ⲡⲛⲟⲩⲧⲉ ⲛⲉⲧⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲡⲉϥⲣⲁⲛ
13 இப்பிள்ளைகள் இரத்த உறவினாலோ, மனித தீர்மானத்தினாலோ, புருஷனுடைய விருப்பத்தினாலோ உண்டானவர்கள் அல்ல. மாறாக இவர்கள் இறைவனால் பிறப்பிக்கப்பட்டவர்கள்.
ⲓ̅ⲅ̅ⲛⲁⲓ ⲉⲛϩⲉⲛⲉⲃⲟⲗ ⲁⲛ ⲛⲉ ⲛⲟⲩⲱϣ ⲛⲥⲛⲟϥ ϩⲓ ⲥⲁⲣⲝ ⲟⲩⲇⲉ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲟⲩⲱϣ ⲛⲣⲣⲱⲙⲉ ⲁⲗⲗⲁ ⲛⲧⲁⲩϫⲡⲟⲟⲩ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲛⲟⲩⲧⲉ
14 வார்த்தையானவரே மனித உடல் எடுத்து நம்மிடையே வாழ்ந்தார். நாங்கள் அவருடைய மகிமையைக் கண்டோம். பிதாவின் ஒரே மகனுக்குரிய அந்த மகிமையைக் கண்டோம். அந்த வார்த்தையானவர் கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் பிதாவிடமிருந்து வந்தவர்.
ⲓ̅ⲇ̅ⲁⲩⲱ ⲡϣⲁϫⲉ ⲁϥⲣ ⲥⲁⲣⲝ ⲁϥⲟⲩⲱϩ ⲛⲙⲙⲁⲛ ⲁⲩⲱ ⲁⲛⲛⲁⲩ ⲉⲡⲉϥⲉⲟⲟⲩ ⲛⲑⲉ ⲙⲡⲉⲟⲟⲩ ⲛⲟⲩϣⲏⲣⲉ ⲛⲟⲩⲱⲧ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ ⲡⲉϥⲉⲓⲱⲧ ⲉϥϫⲏⲕ ⲉⲃⲟⲗ ⲛⲭⲁⲣⲓⲥ ϩⲓ ⲙⲉ
15 யோவான் அவரைக்குறித்து சாட்சி கொடுத்து: “எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். ஏனெனில், ‘அவர் எனக்கு முன்னிருந்தவர் என்று இவரைக் குறித்தே நான் சொன்னேன்’ என அவன் சத்தமிட்டுச் சொன்னான்.”
ⲓ̅ⲉ̅ⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ϥⲣ ⲙⲛⲧⲣⲉ ⲉⲧⲃⲏⲏⲧϥ ⲁⲩⲱ ϥⲁϣⲕⲁⲕ ⲉⲃⲟⲗ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡⲁⲓ ⲡⲉ ⲛⲡⲧⲁⲓϫⲟⲟⲥ ⲉⲧⲃⲏⲏⲧϥ ϫⲉ ⲡⲉⲧⲛⲏⲩ ⲙⲛⲛⲥⲱⲉⲓ ⲁϥϣⲱⲡⲉ ϩⲁ ⲧⲁϩⲏ ϫⲉ ⲛⲉϥⲟ ⲛϣⲟⲣⲡ ⲉⲣⲟⲓ ⲡⲉ
16 அவருடைய நிறைவிலிருந்து, நாம் எல்லோரும் கிருபையின்மேல் கிருபையை பெற்றிருக்கிறோம்.
ⲓ̅ⲋ̅ϫⲉ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲉϥϫⲱⲕ ⲁⲛⲟⲛ ⲧⲏⲣⲛ ⲛⲧⲁⲛϫⲓ ⲛⲟⲩⲱⲛϩ ⲁⲩⲱ ⲟⲩⲭⲁⲣⲓⲥ ⲉⲡⲙⲁ ⲛⲟⲩⲭⲁⲣⲓⲥ
17 ஏனெனில் சட்டம் மோசேயின் மூலமாய் கொடுக்கப்பட்டது; கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வந்தது.
ⲓ̅ⲍ̅ϫⲉ ⲡⲛⲟⲙⲟⲥ ⲛⲧⲁⲩⲧⲁⲁϥ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲙ ⲙⲱⲩⲥⲏⲥ ⲧⲉⲭⲁⲣⲓⲥ ϩⲱⲱⲥ ⲁⲩⲱ ⲧⲙⲉ ⲛⲧⲁⲥϣⲱⲡⲉ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲛ ⲓⲥ ⲡⲉⲭⲥ
18 இறைவனை எவருமே ஒருபோதும் கண்டதில்லை. பிதாவாகிய இறைவனின் இருதயத்தின் அருகில் இருக்கின்ற அவருடைய ஒரே மகனும் தாமே இறைவனுமாயிருக்கிறவர் பிதாவை வெளிப்படுத்தினார்.
ⲓ̅ⲏ̅ⲡⲛⲟⲩⲧⲉ ⲙⲡⲉ ⲗⲁⲁⲩ ⲛⲁⲩ ⲉⲣⲟϥ ⲉⲛⲉϩ ⲡⲛⲟⲩⲧⲉ ⲡϣⲏⲣⲉ ⲛⲟⲩⲱⲧ ⲡⲉⲧϣⲟⲟⲡ ϩⲛ ⲕⲟⲩⲛϥ ⲙⲡⲉϥⲉⲓⲱⲧ ⲡⲉⲧⲙⲙⲁⲩ ⲡⲉ ⲛⲧⲁϥϣⲁϫⲉ ⲉⲣⲟϥ
19 எருசலேமைச் சேர்ந்த யூத தலைவர்கள் யோவான் யார் என்று விசாரித்து அறியும்படி, ஆசாரியர்களையும் லேவியரையும் அவனிடத்தில் அனுப்பினார்கள்; அப்பொழுது அவன் கொடுத்த சாட்சி இதுவே:
ⲓ̅ⲑ̅ⲁⲩⲱ ⲧⲁⲓ ⲧⲉ ⲧⲙⲛⲧⲙⲛⲧⲣⲉ ⲛⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲛⲧⲉⲣⲉⲛⲓⲟⲩⲇⲁⲓ ⲧⲛⲛⲟⲟⲩ ϣⲁⲣⲟϥ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲑⲓⲉⲣⲟⲩⲥⲁⲗⲏⲙ ⲛϩⲉⲛⲟⲩⲏⲏⲃ ⲙⲛ ϩⲉⲛⲗⲉⲩⲉⲓⲧⲏⲥ ϫⲉⲕⲁⲥ ⲉⲩⲉϫⲛⲟⲩϥ ϫⲉ ⲛⲧⲕ ⲛⲓⲙ
20 “நான் கிறிஸ்து அல்ல” என்று ஒளிவுமறைவின்றி மறுக்காமல், அறிக்கை செய்தான்.
ⲕ̅ⲁⲩⲱ ⲁϥϩⲟⲙⲟⲗⲟⲅⲓ ⲁⲩⲱ ⲙⲡ︦ϥⲁⲣⲛⲁ ϫⲉ ⲁⲛⲟⲕ ⲁⲛ ⲡⲉ ⲡⲉⲭⲥ
21 அப்பொழுது அவர்கள் யோவானிடம், “அப்படியானால் நீர் யார்? நீர் எலியாவா?” என்றார்கள். அதற்கு அவன், “நான் எலியாவும் அல்ல” என்றான். தொடர்ந்து அவர்கள், “நீர் வரவேண்டிய இறைவாக்கினரா?” என்று கேட்டார்கள். அதற்கும் அவன், “இல்லை” என்றான்.
ⲕ̅ⲁ̅ⲁⲩϫⲛⲟⲩϥ ⲇⲉ ϫⲉ ⲛⲧⲟⲕ ⲡⲉ ϩⲏⲗⲓⲁⲥ ⲁⲩⲱ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲛⲁⲛⲟⲕ ⲁⲛ ⲡⲉ ⲛⲧⲟⲕ ⲡⲉ ⲡⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲁⲩⲱ ⲁϥⲟⲩⲱϣⲃ ⲙⲙⲟⲛ
22 இறுதியாக அவர்கள், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் போய்ச் சொல்லும்படி நீர் ஒரு பதிலைச் சொல்லும். நீர் உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர்?” என்று கேட்டார்கள்.
ⲕ̅ⲃ̅ⲡⲉϫⲁⲩ ϫⲉ ⲛⲧⲟⲕ ϭⲉ ⲛⲧⲕ ⲛⲓⲙ ϫⲉⲕⲁⲥ ⲉⲛⲉϫⲓ ⲡⲟⲩⲱ ⲛⲛⲉⲛⲧⲁⲩⲧⲁⲟⲩⲟⲛ ⲉⲕϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲟⲩ ⲉⲧⲃⲏⲏⲧⲕ
23 யோவான் அதற்கு, இறைவாக்கினன் ஏசாயா கூறியிருந்த வார்த்தைகள் மூலம் பதிலளித்து, “கர்த்தருக்கு வழியை நேராக்குங்கள் என்று பாலைவனத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தம் நானே” என்றான்.
ⲕ̅ⲅ̅ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲁⲛⲟⲕ ⲧⲉ ⲧⲉⲥⲙⲏ ⲙⲡⲉⲧⲱϣ ⲉⲃⲟⲗ ϩⲓ ⲡϫⲁⲓⲉ ϫⲉ ⲥⲟⲟⲩⲧⲛ ⲛⲧⲉϩⲓⲏ ⲙⲡϫⲟⲉⲓⲥ ⲕⲁⲧⲁ ⲑⲉ ⲉⲛⲧⲁϥϫⲟⲟⲥ ⲛϭⲓ ⲏⲥⲁⲓⲁⲥ ⲡⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ
24 பரிசேயர்களால் அனுப்பப்பட்ட சிலர்
ⲕ̅ⲇ̅ⲁⲩⲱ ⲁⲩⲧⲛⲛⲉⲩ ϩⲟⲓⲛⲉ ϣⲁⲣⲟϥ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲛⲉⲫⲁⲣⲓⲥⲁⲓⲟⲥ
25 யோவானிடம், “நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, வரவேண்டிய இறைவாக்கினருமல்ல என்றால், ஏன் நீர் திருமுழுக்கு கொடுக்கிறீர்?” என்று கேட்டார்கள்.
ⲕ̅ⲉ̅ⲁⲩϫⲛⲟⲩϥ ϫⲉ ⲉⲧⲃⲉ ⲟⲩ ϭⲉ ⲕⲃⲁⲡⲧⲓⲍⲉ ⲉϣϫⲉ ⲛⲧⲟⲕ ⲁⲛ ⲡⲉ ⲡⲉⲭⲥ ⲟⲩⲇⲉ ϩⲏⲗⲉⲓⲁⲥ ⲟⲩⲇⲉ ⲡⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ
26 யோவான் அதற்குப் பதிலாக, “நான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கிறேன். ஆனால் உங்கள் நடுவில் ஒருவர் நிற்கிறார். நீங்களோ அவரை அறியாதிருக்கிறீர்கள்.
ⲕ̅ⲋ̅ⲁⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲟⲩⲱϣⲃ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁⲩ ϫⲉ ⲁⲛⲟⲕ ⲉⲓⲃⲁⲡⲧⲓⲍⲉ ⲙⲙⲱⲧⲛ ϩⲛ ⲟⲩⲙⲟⲟⲩ ϥⲁϩⲉ ⲇⲉ ⲉⲣⲁⲧϥ ϩⲛ ⲧⲉⲧⲛⲙⲏⲧⲉ ⲡⲁⲓ ⲉⲛⲧⲉⲧⲛⲥⲟⲟⲩⲛ ⲙⲙⲟϥ ⲁⲛ
27 அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிற ஒரு அடிமையாக இருக்கவும் நான் தகுதியற்றவன்” என்றான்.
ⲕ̅ⲍ̅ⲡⲉⲧⲛⲏⲩ ⲙⲛⲛⲥⲱⲉⲓ ⲡⲁⲓ ⲉⲛϯⲙⲡϣⲁ ⲁⲛ ⲛⲃⲱⲗ ⲉⲃⲟⲗ ⲙⲡⲙⲟⲩⲥ ⲙⲡⲉϥⲧⲟⲟⲩⲉ
28 இவை எல்லாம் யோர்தானின் அக்கரையிலிருந்த பெத்தானியா என்ற கிராமத்தில் நடைபெற்றது. அங்குதான் யோவான் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான்.
ⲕ̅ⲏ̅ⲛⲁⲓ ⲁⲩϣⲱⲡⲉ ϩⲛ ⲃⲏⲑⲁⲣⲁⲃⲁ ⲙⲡⲓⲕⲣⲟ ⲙⲡⲓⲟⲣⲇⲁⲛⲏⲥ ⲙⲡⲁ ⲉⲛⲉⲣⲉ ⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲃⲁⲡⲧⲓⲍⲉ ⲛϩⲏⲧϥ
29 மறுநாளிலே இயேசு தன்னிடம் வருவதை யோவான் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனின் ஆட்டுக்குட்டி! இவரே உலகத்தின் பாவத்தை நீக்குகிறவர்.
ⲕ̅ⲑ̅ⲙⲡⲉϥⲣⲁⲥⲧⲉ ⲁϥⲛⲁⲩ ⲉⲓⲥ ⲉϥⲛⲏⲩ ϣⲁⲣⲟϥ ⲁⲩⲱ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲉⲓⲥ ⲡⲉϩⲓⲉⲓⲃ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲡⲉⲧⲛⲁϥⲓ ⲙⲡⲛⲟⲃⲉ ⲙⲡⲕⲟⲥⲙⲟⲥ
30 ‘எனக்குப்பின் வருகிறவர் என்னிலும் மேன்மையானவராய் இருக்கிறார். அவர் எனக்கு முன்னமே இருந்தார்’ என்று நான் இவரைக் குறித்தே சொன்னேன்.
ⲗ̅ⲡⲁⲓ ⲡⲉ ⲛⲧⲁⲓϫⲟⲟⲥ ⲉⲧⲃⲏⲏⲧϥ ϫⲉ ⲟⲩⲛ ⲟⲩⲣⲱⲙⲉ ⲛⲏⲩ ϩⲓ ⲡⲁϩⲟⲩ ⲙⲙⲟⲟⲓ ⲉⲁϥϣⲱⲡⲉ ϩⲁ ⲧⲁϩⲏ ϫⲉ ⲛⲉϥⲟ ⲛϣⲟⲣⲡ ⲉⲣⲟⲓ ⲡⲉ
31 நானும் அவரை அறியாதிருந்தேன். அவரை இஸ்ரயேலருக்கு வெளிப்படுத்தவே, நான் வந்து தண்ணீரில் திருமுழுக்கு கொடுத்தேன்” என்றான்.
ⲗ̅ⲁ̅ⲁⲛⲟⲕ ϩⲱ ⲛⲉⲓⲥⲟⲟⲩⲛ ⲙⲙⲟϥ ⲁⲛ ⲡⲉ ⲁⲗⲗⲁ ϫⲉⲕⲁⲥ ⲉϥⲉⲟⲩⲱⲛϩ ⲉⲃⲟⲗ ⲙⲡⲓⲥⲣⲁⲏⲗ ⲉⲧⲃⲉ ⲡⲁⲓ ⲁⲓⲉⲓ ⲁⲛⲟⲕ ⲉⲓⲃⲁⲡⲧⲓⲍⲉ ϩⲛ ⲟⲩⲙⲟⲟⲩ
32 பின்பு யோவான் இந்த சாட்சியை சொன்னான்: “பரலோகத்திலிருந்து ஆவியானவர் ஒரு புறாவைப்போல் தம்மேல் இறங்கி, இயேசுவின்மேல் அமர்வதைக் கண்டேன்.
ⲗ̅ⲃ̅ⲁⲩⲱ ⲁϥⲣ ⲙⲛⲧⲣⲉ ⲛϭⲓ ⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲁⲉⲓⲛⲁⲩ ⲉⲡⲉⲡⲛⲁ ⲉϥⲛⲏⲩ ⲉⲡⲉⲥⲏⲧ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲧⲡⲉ ⲛⲑⲉ ⲛⲟⲩϭⲣⲟⲟⲙⲡⲉ ⲁⲩⲱ ⲁϥⲟⲩⲱϩ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲱϥ
33 தண்ணீரினால் திருமுழுக்கு கொடுக்கும்படி என்னை அனுப்பினவர் எனக்குச் சொல்லியிருக்காவிட்டால், நானும் அவரை அறிந்திருக்கமாட்டேன். என்னை அனுப்பினவரோ, ‘பரிசுத்த ஆவியானவர் இறங்கி யார்மீது தங்குவதை நீ காண்கிறாயோ, அவரே பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு கொடுக்கிறவர்’ என்று சொல்லியிருந்தார்.
ⲗ̅ⲅ̅ⲁⲛⲟⲕ ϩⲱ ⲛⲉⲓⲥⲟⲟⲩⲛ ⲙⲙⲟϥ ⲁⲛ ⲡⲉ ⲁⲗⲗⲁ ⲡⲉⲛⲧⲁϥⲧⲛⲛⲟⲟⲩⲧ ⲉⲃⲁⲡⲧⲓⲍⲉ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲙⲟⲟⲩ ⲡⲉⲧⲙⲙⲁⲩ ⲡⲉ ⲛⲧⲁϥϫⲟⲟⲥ ⲛⲁⲓ ϫⲉ ⲡⲉⲧⲕⲛⲁⲛⲁⲩ ⲉⲡⲉⲡⲛⲁ ⲉϥⲛⲏⲩ ⲉⲡⲉⲥⲏⲧ ⲉϥϭⲉⲉⲧ ⲉϩⲣⲁⲓ ⲉϫⲱϥ ⲡⲁⲓ ⲡⲉⲧⲛⲁⲃⲁⲡⲧⲓⲍⲉ ϩⲛ ⲟⲩⲡⲛⲁ ⲉϥⲟⲩⲁⲁⲃ ⲙⲛ ⲟⲩⲕⲱϩⲧ
34 இதை நான் கண்டேன். இவரே இறைவனின் மகன் என்று சாட்சி கூறுகிறேன்” என்றான்.
ⲗ̅ⲇ̅ⲁⲩⲱ ⲁⲛⲟⲕ ⲁⲓⲛⲁⲩ ⲁⲩⲱ ⲁⲓⲣ ⲙⲛⲧⲣⲉ ϫⲉ ⲡⲁⲓ ⲡⲉ ⲡⲥⲱⲧⲡ ⲛϣⲏⲣⲉ ⲛⲧⲉ ⲡⲛⲟⲩⲧⲉ
35 மறுநாளிலே மீண்டும் யோவான் தன்னுடைய சீடர்களில் இரண்டு பேருடன் அங்கு நின்றுகொண்டிருந்தான்.
ⲗ̅ⲉ̅ⲙⲡⲉϥⲣⲁⲥⲧⲉ ⲟⲛ ⲛⲉⲣⲉⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲁϩⲉⲣⲁⲧϥ ⲁⲩⲱ ⲥⲛⲁⲩ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ
36 இயேசு அவ்வழியாய் கடந்துபோகிறதை அவன் கண்டு, “இதோ பாருங்கள், இறைவனுடைய ஆட்டுக்குட்டி!” என்றான்.
ⲗ̅ⲋ̅ⲁⲩⲱ ⲛⲧⲉⲣⲉϥϭⲱϣⲧ ⲛⲥⲁ ⲓⲥ ⲉϥⲙⲟⲟϣⲉ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲉⲓⲥ ⲡⲉⲭⲥ ⲡⲉϩⲓⲉⲓⲃ ⲙⲡⲛⲟⲩⲧⲉ
37 அந்த இரண்டு சீடர்களும் அவன் இப்படிச் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்கள்.
ⲗ̅ⲍ̅ⲁⲡⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲥⲛⲁⲩ ⲥⲱⲧⲙ ⲉⲣⲟϥ ⲉϥϣⲁϫⲉ ⲁⲩⲱ ⲁⲩⲟⲩⲁϩⲟⲩ ⲛⲥⲁ ⲓⲥ
38 இயேசு திரும்பிப்பார்த்து, அவர்கள் தம்மைப் பின்பற்றி வருகிறதைக் கண்டு, “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று அவர்களிடம் கேட்டார். அதற்கு அவர்கள், “போதகரே, நீர் எங்கே தங்கியிருக்கிறீர்?” என்று கேட்டார்கள்.
ⲗ̅ⲏ̅ⲛⲧⲉⲣⲉϥⲕⲟⲧϥ ⲇⲉ ⲛϭⲓ ⲓⲥ ⲁϥⲛⲁⲩ ⲉⲣⲟⲟⲩ ⲉⲩⲟⲩⲏϩ ⲛⲥⲱϥ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲉⲧⲉⲧⲛϣⲓⲛⲉ ⲛⲥⲁ ⲟⲩ ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ ϫⲉ ϩⲣⲁⲃⲃⲉⲓ ⲡⲉϣⲁⲩⲟⲩⲁϩⲙⲉϩ ϫⲉ ⲡⲥⲁϩ ⲉⲕⲟⲩⲏϩ ⲧⲱⲛ
39 இயேசு அவர்களுக்குப் பதிலாக, “வந்து, நீங்களே பாருங்கள்” என்றார். எனவே அவர்கள் அவருடன் போய், இயேசு தங்கும் இடத்தைக் கண்டு, அந்த நாளை அவருடன் கழித்தார்கள். அப்பொழுது நேரம் பிற்பகல் நான்கு மணியாயிருந்தது.
ⲗ̅ⲑ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ ϫⲉ ⲁⲙⲏⲉⲓⲧⲛ ⲁⲩⲱ ⲧⲉⲧⲛⲁⲛⲁⲩ ⲁⲩⲉⲓ ϭⲉ ⲁⲩⲛⲁⲩ ϫⲉ ⲉϥⲟⲩⲏϩ ⲧⲱⲛ ⲁⲩⲱ ⲁⲩϣⲱⲡⲉ ϩⲁϩⲧⲏϥ ⲙⲡⲉϩⲟⲟⲩ ⲉⲧⲙⲙⲁⲩ ⲛⲉⲡⲛⲁⲩ ⲛϫⲡ ⲙⲏⲧⲉ ⲡⲉ
40 யோவான் சொன்னதைக் கேட்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்ற அந்த இருவரில் ஒருவனின் பெயர் அந்திரேயா; இவன் சீமோன் பேதுருவின் சகோதரன்.
ⲙ̅ⲁⲛⲇⲣⲉⲁⲥ ⲡⲥⲟⲛ ⲛⲥⲓⲙⲱⲛ ⲡⲉⲧⲣⲟⲥ ⲛⲉⲟⲩⲁ ⲡⲉ ⲉⲃⲟⲗ ϩⲙ ⲡⲉⲥⲛⲁⲩ ⲉⲛⲧⲁⲩⲥⲱⲧⲙ ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲛ ⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲁⲩⲱ ⲁⲩⲟⲩⲁϩⲟⲩ ⲛⲥⲱϥ
41 அந்திரேயா போய், முதலில் தன் சகோதரன் சீமோனைக் கண்டு அவனிடம், “நாங்கள் மேசியாவைக் கண்டோம்” என்று சொன்னான். மேசியா என்பதற்கு கிறிஸ்து என்று அர்த்தம்.
ⲙ̅ⲁ̅ⲡⲁⲓ ⲁϥϩⲉ ⲉⲡⲉϥⲥⲟⲛ ⲥⲓⲙⲱⲛ ⲛϣⲟⲣⲡ ⲁⲩⲱ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲁⲛϩⲉ ⲉⲙⲉⲥⲥⲓⲁⲥ ⲡⲉϣⲁⲩⲟⲩⲁϩⲙⲉϥ ϫⲉ ⲡⲉⲭⲥ
42 அவன் சீமோனை இயேசுவினிடத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “யோவானின் மகனாகிய சீமோனே, நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். கேபா என்றால் கற்பாறை என்று பொருள்படும். அது கிரேக்க மொழியிலே பேதுரு எனப்படும்.
ⲙ̅ⲃ̅ⲁⲩⲱ ⲁϥⲛⲧϥ ⲉⲣⲁⲧϥ ⲛⲓⲥ ⲓⲥ ⲇⲉ ⲛⲧⲉⲣⲉϥϭⲱϣⲧ ⲉϩⲟⲩⲛ ⲉϩⲣⲁϥ ⲡⲉϫⲁϥ ϫⲉ ⲛⲧⲟⲕ ⲡⲉ ⲥⲓⲙⲱⲛ ⲡϣⲏⲣⲉ ⲛⲓⲱϩⲁⲛⲛⲏⲥ ⲛⲧⲟⲕ ⲉⲩⲉⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟⲕ ϫⲉ ⲕⲏⲫⲁ ⲡⲉϣⲁⲩⲟⲩⲁϩⲙⲉϥ ϫⲉ ⲡⲉⲧⲣⲟⲥ
43 மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப் போகத் தீர்மானித்தார். அவர் பிலிப்புவைக் கண்டு அவனிடம், “என்னைப் பின்பற்று” என்றார்.
ⲙ̅ⲅ̅ⲙⲡⲉϥⲣⲁⲥⲧⲉ ⲁϥⲟⲩⲱϣ ⲉⲉⲓ ⲉⲃⲟⲗ ⲉⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ ⲁⲩⲱ ⲁϥϩⲉ ⲉⲫⲓⲗⲓⲡⲡⲟⲥ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ⲛϭⲓ ⲓⲥ ϫⲉ ⲟⲩⲁϩⲕ ⲛⲥⲱⲉⲓ
44 அந்திரேயாவையும் பேதுருவையும் போன்றே பிலிப்புவும் பெத்சாயிதா பட்டணத்தைச் சேர்ந்தவன்.
ⲙ̅ⲇ̅ⲫⲓⲗⲓⲡⲡⲟⲥ ⲇⲉ ⲛⲉⲩⲉⲃⲟⲗ ⲡⲉ ϩⲛ ⲃⲏⲇⲥⲁⲓⲇⲁ ⲧⲡⲟⲗⲓⲥ ⲛⲁⲛⲇⲣⲉⲁⲥ ⲙⲛ ⲡⲉⲧⲣⲟⲥ
45 பின்பு பிலிப்பு நாத்தான்யேலைக் கண்டு அவனிடம், “மோசே தமது சட்டத்தில் குறிப்பிட்டிருந்தவரை நாங்கள் கண்டோம். அவரைக் குறித்தே இறைவாக்கினர்களும் எழுதியிருக்கிறார்கள். நாசரேத் ஊரைச் சேர்ந்தவரும், யோசேப்பின் மகனுமான இயேசுவே அவர்” என்றான்.
ⲙ̅ⲉ̅ⲁⲫⲓⲗⲓⲡⲡⲟⲥ ϩⲉ ⲉⲛⲁⲑⲁⲛⲁⲏⲗ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲡⲉⲛⲧⲁⲙⲱⲩⲥⲏⲥ ⲥϩⲁⲓ ⲉⲧⲃⲏⲏⲧϥ ϩⲙ ⲡⲛⲟⲙⲟⲥ ⲁⲩⲱ ⲛⲉⲡⲣⲟⲫⲏⲧⲏⲥ ⲁⲛϩⲉ ⲉⲣⲟϥ ⲓⲥ ⲡϣⲏⲣⲉ ⲛⲓⲱⲥⲏⲫ ⲡⲉⲃⲟⲗ ϩⲛ ⲛⲁⲍⲁⲣⲉⲑ
46 நாத்தான்யேலோ அவனிடம், “நாசரேத்தா! அங்கிருந்து நன்மை ஏதும் வரக்கூடுமோ?” என்று கேட்டான். அதற்கு பிலிப்பு, “வா, வந்து பார்” என்றான்.
ⲙ̅ⲋ̅ⲡⲉϫⲉ ⲛⲁⲑⲁⲛⲁⲏⲗ ⲛⲁϥ ϫⲉ ⲉⲣⲉϣ ⲟⲩⲁⲅⲁⲑⲟⲛ ⲛⲁϣⲱⲡⲉ ⲉⲃⲟⲗ ϩⲛ ⲛⲁⲍⲁⲣⲉⲑ ⲡⲉϫⲉ ⲫⲓⲗⲓⲡⲡⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ⲁⲙⲟⲩ ⲛⲅ︦ⲛⲁⲩ
47 அப்படியே நாத்தான்யேலும், தன்னை நோக்கி வருவதை இயேசு கண்டு, அவனைக்குறித்து, “இவன் ஒரு உண்மையான இஸ்ரயேலன், கபடம் ஏதுமில்லாதவன்” என்றார்.
ⲙ̅ⲍ̅ⲁⲓⲥ ⲛⲁⲩ ⲉⲛⲁⲑⲁⲛⲁⲏⲗ ⲉϥⲛⲏⲩ ϣⲁⲣⲟϥ ⲁⲩⲱ ⲡⲉϫⲁϥ ⲉⲧⲃⲏⲏⲧϥ ϫⲉ ⲉⲓⲥ ⲟⲩⲓⲥⲣⲁⲏⲗⲉⲓⲧⲏⲥ ⲛⲁⲙⲉ ⲉⲙⲙⲛⲕⲣⲟϥ ⲛϩⲏⲧϥ
48 அப்பொழுது நாத்தான்யேல், “என்னை உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான். இயேசு அவனுக்கு மறுமொழியாக, “பிலிப்பு உன்னைக் கூப்பிடுமுன், நீ அத்திமரத்தின்கீழ் இருக்கும்போதே நான் உன்னைக் கண்டுகொண்டேன்” என்றார்.
ⲙ̅ⲏ̅ⲡⲉϫⲉ ⲛⲁⲑⲁⲛⲁⲏⲗ ⲛⲁϥ ϫⲉ ⲉⲕⲥⲟⲟⲩⲛ ⲙⲙⲟⲓ ⲧⲱⲛ ⲁϥⲟⲩⲱϣⲃ ⲛϭⲓ ⲓⲥ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲉⲙⲡⲁⲧⲉ ⲫⲓⲗⲓⲡⲡⲟⲥ ⲙⲟⲩⲧⲉ ⲉⲣⲟⲕ ⲛϩⲟⲩⲛ ϩⲁ ⲧⲃⲱ ⲛⲕⲛⲧⲉ ⲁⲓⲛⲁⲩ ⲉⲣⲟⲕ
49 அப்பொழுது நாத்தான்யேல், “போதகரே, நீரே இறைவனின் மகன்; நீரே இஸ்ரயேலின் அரசன்” என்று அறிவித்தான்.
ⲙ̅ⲑ̅ⲁⲛⲁⲑⲁⲛⲁⲏⲗ ⲟⲩⲱϣⲃ ⲛⲁϥ ϫⲉ ϩⲣⲁⲃⲃⲉⲓ ⲛⲧⲟⲕ ⲡⲉ ⲡϣⲏⲣⲉ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲛⲧⲟⲕ ⲡⲉ ⲡⲣⲣⲟ ⲙⲡⲓⲥⲣⲁⲏⲗ
50 அதற்கு இயேசு அவனிடம், “நான் அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று உனக்குச் சொன்னதினாலேயா நீ என்னை விசுவாசிக்கிறாய்? நீ இதைப் பார்க்கிலும் பெரிதான காரியங்களைக் காண்பாய்” என்றார்.
ⲛ̅ⲁⲓⲥ ⲟⲩⲱϣⲃ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ⲉⲃⲟⲗ ϫⲉ ⲁⲉⲓϫⲟⲟⲥ ⲛⲁⲕ ϫⲉ ⲁⲓⲛⲁⲩ ⲉⲣⲟⲕ ⲛϩⲟⲩⲛ ϩⲁ ⲧⲃⲱ ⲛⲕⲛⲧⲉ ⲁⲕⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲕⲛⲁⲛⲁⲩ ⲉⲛⲉⲧⲛⲁⲁⲁⲩ ⲉⲛⲁⲓ
51 அவர் தொடர்ந்து சொன்னதாவது, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், பரலோகம் திறந்திருக்கிறதையும், இறைவனுடைய தூதர்கள் மானிடமகனாகிய என்னிடத்திலிருந்து மேலே போவதையும், இறங்கி வருவதையும் நீங்கள் காண்பீர்கள்” என்றார்.
ⲛ̅ⲁ̅ⲁⲩⲱ ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ϫⲉ ϩⲁⲙⲏⲛ ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲧⲉⲧⲛⲁⲛⲁⲩ ⲉⲧⲡⲉ ⲉⲥⲟⲩⲏⲛ ⲁⲩⲱ ⲛⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲙⲡⲛⲟⲩⲧⲉ ⲉⲩⲛⲁ ⲉϩⲣⲁⲓ ⲁⲩⲱ ⲉⲩⲛⲏⲩ ⲉⲡⲉⲥⲏⲧ ⲉϫⲙ ⲡϣⲏⲣⲉ ⲙⲡⲣⲱⲙⲉ