< யோவான் 9 >
1 இயேசு நடந்துபோகையில், பிறந்ததிலிருந்தே பார்வைற்றவனாயிருந்த ஒருவனைக் கண்டார்.
ਤਤਃ ਪਰੰ ਯੀਸ਼ੁਰ੍ਗੱਛਨ੍ ਮਾਰ੍ਗਮਧ੍ਯੇ ਜਨ੍ਮਾਨ੍ਧੰ ਨਰਮ੍ ਅਪਸ਼੍ਯਤ੍|
2 அவருடைய சீடர்கள் அவரிடம், “போதகரே, இவன் பார்வையற்றவனாய் பிறந்தது யார் செய்த பாவத்தினால்? இவனுடைய பாவத்தினாலா? அல்லது இவனுடைய பெற்றோரின் பாவத்தினாலா?” என்று கேட்டார்கள்.
ਤਤਃ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਸ੍ਤਮ੍ ਅਪ੍ਰੁʼੱਛਨ੍ ਹੇ ਗੁਰੋ ਨਰੋਯੰ ਸ੍ਵਪਾਪੇਨ ਵਾ ਸ੍ਵਪਿਤ੍ਰਾਃ ਪਾਪੇਨਾਨ੍ਧੋ(ਅ)ਜਾਯਤ?
3 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “இவனுடைய பாவத்தினாலோ, இவனுடைய பெற்றோரின் பாவத்தினாலோ அல்ல. இவனுடைய வாழ்க்கையில் இறைவனுடைய செயல்கள் வெளிப்படும்படியாகவே இப்படி ஏற்பட்டிருக்கிறது.
ਤਤਃ ਸ ਪ੍ਰਤ੍ਯੁਦਿਤਵਾਨ੍ ਏਤਸ੍ਯ ਵਾਸ੍ਯ ਪਿਤ੍ਰੋਃ ਪਾਪਾਦ੍ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ੋਭੂਦ ਇਤਿ ਨਹਿ ਕਿਨ੍ਤ੍ਵਨੇਨ ਯਥੇਸ਼੍ਵਰਸ੍ਯ ਕਰ੍ੰਮ ਪ੍ਰਕਾਸ਼੍ਯਤੇ ਤੱਧੇਤੋਰੇਵ|
4 பகல் வேளையாய் இருக்கும்போதே, என்னை அனுப்பினவருடைய வேலையை நான் செய்யவேண்டும். இரவு வருகிறது, அப்பொழுது ஒருவராலும் வேலைசெய்யமுடியாது.
ਦਿਨੇ ਤਿਸ਼਼੍ਠਤਿ ਮਤ੍ਪ੍ਰੇਰਯਿਤੁਃ ਕਰ੍ੰਮ ਮਯਾ ਕਰ੍ੱਤਵ੍ਯੰ ਯਦਾ ਕਿਮਪਿ ਕਰ੍ੰਮ ਨ ਕ੍ਰਿਯਤੇ ਤਾਦ੍ਰੁʼਸ਼ੀ ਨਿਸ਼ਾਗੱਛਤਿ|
5 நான் உலகத்தில் இருக்கையில், நானே உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிறேன்” என்றார்.
ਅਹੰ ਯਾਵਤ੍ਕਾਲੰ ਜਗਤਿ ਤਿਸ਼਼੍ਠਾਮਿ ਤਾਵਤ੍ਕਾਲੰ ਜਗਤੋ ਜ੍ਯੋਤਿਃਸ੍ਵਰੂਪੋਸ੍ਮਿ|
6 இயேசு இவைகளைச் சொல்லியபின், தரையிலே துப்பி, உமிழ் நீரினால் சிறிதளவு சேறுண்டாக்கி, அவனுடைய கண்களிலே அதைப் பூசினார்.
ਇਤ੍ਯੁਕ੍ੱਤਾ ਭੂਮੌ ਨਿਸ਼਼੍ਠੀਵੰ ਨਿਕ੍ਸ਼਼ਿਪ੍ਯ ਤੇਨ ਪਙ੍ਕੰ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍
7 பின்பு இயேசு அவனிடம், “நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு” என்றார். சீலோவாம் என்பதன் அர்த்தம், “அனுப்பப்பட்டவன்” என்பதாகும். அவன் அப்படியே போய் கழுவி பார்வையடைந்து வீடு திரும்பினான்.
ਪਸ਼੍ਚਾਤ੍ ਤਤ੍ਪਙ੍ਕੇਨ ਤਸ੍ਯਾਨ੍ਧਸ੍ਯ ਨੇਤ੍ਰੇ ਪ੍ਰਲਿਪ੍ਯ ਤਮਿਤ੍ਯਾਦਿਸ਼ਤ੍ ਗਤ੍ਵਾ ਸ਼ਿਲੋਹੇ (ਅ)ਰ੍ਥਾਤ੍ ਪ੍ਰੇਰਿਤਨਾਮ੍ਨਿ ਸਰਸਿ ਸ੍ਨਾਹਿ| ਤਤੋਨ੍ਧੋ ਗਤ੍ਵਾ ਤਤ੍ਰਾਸ੍ਨਾਤ੍ ਤਤਃ ਪ੍ਰੰਨਚਕ੍ਸ਼਼ੁ ਰ੍ਭੂਤ੍ਵਾ ਵ੍ਯਾਘੁਟ੍ਯਾਗਾਤ੍|
8 அவனுடைய அயலவரும், முன்பு அவன் பிச்சை கேட்டுக்கொண்டிருந்ததைக் கண்டவர்களும், “இங்கே உட்கார்ந்திருந்து பிச்சை கேட்டவன் இவன் அல்லவா?” என்றார்கள்.
ਅਪਰਞ੍ਚ ਸਮੀਪਵਾਸਿਨੋ ਲੋਕਾ ਯੇ ਚ ਤੰ ਪੂਰ੍ੱਵਮਨ੍ਧਮ੍ ਅਪਸ਼੍ਯਨ੍ ਤੇ ਬਕ੍ੱਤੁਮ੍ ਆਰਭਨ੍ਤ ਯੋਨ੍ਧਲੋਕੋ ਵਰ੍ਤ੍ਮਨ੍ਯੁਪਵਿਸ਼੍ਯਾਭਿਕ੍ਸ਼਼ਤ ਸ ਏਵਾਯੰ ਜਨਃ ਕਿੰ ਨ ਭਵਤਿ?
9 சிலர், “இது அவன் தான்” என்றார்கள். இன்னும் சிலர், “இல்லை, இது அவனைப் போன்ற வேறொருவன்” என்றார்கள். ஆனால் அவனோ, “நான்தான் அவன்” என்றான்.
ਕੇਚਿਦਵਦਨ੍ ਸ ਏਵ ਕੇਚਿਦਵੋਚਨ੍ ਤਾਦ੍ਰੁʼਸ਼ੋ ਭਵਤਿ ਕਿਨ੍ਤੁ ਸ ਸ੍ਵਯਮਬ੍ਰਵੀਤ੍ ਸ ਏਵਾਹੰ ਭਵਾਮਿ|
10 அப்பொழுது அவர்கள் அவனிடம், “அப்படியானால் உனக்கு எப்படி பார்வை கிடைத்தது?” என்றார்கள்.
ਅਤਏਵ ਤੇ (ਅ)ਪ੍ਰੁʼੱਛਨ੍ ਤ੍ਵੰ ਕਥੰ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿੰ ਪਾਪ੍ਤਵਾਨ੍?
11 அதற்கு அவன், “இயேசு என்று அழைக்கப்படும் ஒருவர் சிறிதளவு சேறுண்டாக்கி, அதை என் கண்களில் பூசி, சீலோவாம் குளத்தில் போய் கழுவும்படி எனக்குச் சொன்னார். அப்படியே நான் போய் கழுவியபோது, என்னால் பார்க்கமுடிந்தது” என்றான்.
ਤਤਃ ਸੋਵਦਦ੍ ਯੀਸ਼ਨਾਮਕ ਏਕੋ ਜਨੋ ਮਮ ਨਯਨੇ ਪਙ੍ਕੇਨ ਪ੍ਰਲਿਪ੍ਯ ਇਤ੍ਯਾਜ੍ਞਾਪਯਤ੍ ਸ਼ਿਲੋਹਕਾਸਾਰੰ ਗਤ੍ਵਾ ਤਤ੍ਰ ਸ੍ਨਾਹਿ| ਤਤਸ੍ਤਤ੍ਰ ਗਤ੍ਵਾ ਮਯਿ ਸ੍ਨਾਤੇ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿਮਹੰ ਲਬ੍ਧਵਾਨ੍|
12 அப்பொழுது அவர்கள் அவனிடம், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது” என்றான்.
ਤਦਾ ਤੇ (ਅ)ਵਦਨ੍ ਸ ਪੁਮਾਨ੍ ਕੁਤ੍ਰ? ਤੇਨੋਕ੍ੱਤੰ ਨਾਹੰ ਜਾਨਾਮਿ|
13 பார்வையற்றவனாயிருந்தவனை மக்கள் பரிசேயரிடம் கொண்டுவந்தார்கள்.
ਅਪਰੰ ਤਸ੍ਮਿਨ੍ ਪੂਰ੍ੱਵਾਨ੍ਧੇ ਜਨੇ ਫਿਰੂਸ਼ਿਨਾਂ ਨਿਕਟਮ੍ ਆਨੀਤੇ ਸਤਿ ਫਿਰੂਸ਼ਿਨੋਪਿ ਤਮਪ੍ਰੁʼੱਛਨ੍ ਕਥੰ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿੰ ਪ੍ਰਾਪ੍ਤੋਸਿ?
14 இயேசு சேறுண்டாக்கி, அந்த மனிதனின் கண்களைத் திறந்த நாள் ஒரு ஓய்வுநாளாயிருந்தது.
ਤਤਃ ਸ ਕਥਿਤਵਾਨ੍ ਸ ਪਙ੍ਕੇਨ ਮਮ ਨੇਤ੍ਰੇ (ਅ)ਲਿਮ੍ਪਤ੍ ਪਸ਼੍ਚਾਦ੍ ਸ੍ਨਾਤ੍ਵਾ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿਮਲਭੇ|
15 எனவே பரிசேயரும் அவனிடம், “நீ எப்படிப் பார்வை பெற்றாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “அவர் எனது கண்களில் சேற்றைப் பூசினார். நான் அதைக் கழுவினேன். இப்பொழுது நான் பார்க்கிறேன்” என்றான்.
ਕਿਨ੍ਤੁ ਯੀਸ਼ੁ ਰ੍ਵਿਸ਼੍ਰਾਮਵਾਰੇ ਕਰ੍ੱਦਮੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਤਸ੍ਯ ਨਯਨੇ ਪ੍ਰਸੰਨੇ(ਅ)ਕਰੋਦ੍ ਇਤਿਕਾਰਣਾਤ੍ ਕਤਿਪਯਫਿਰੂਸ਼ਿਨੋ(ਅ)ਵਦਨ੍
16 அப்பொழுது பரிசேயரில் சிலர், “இவன் இறைவனிடமிருந்து வந்தவனல்ல. ஏனெனில் இவன் யூதரின் ஓய்வுநாளைக் கைக்கொள்ளவில்லையே” என்றார்கள். அதற்கு மற்றவர்கள், “பாவியான ஒருவனால் இப்படிப்பட்ட அடையாளங்களை எப்படிச் செய்யமுடியும்?” என்றார்கள். அதனால் அவர்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டது.
ਸ ਪੁਮਾਨ੍ ਈਸ਼੍ਵਰਾੰਨ ਯਤਃ ਸ ਵਿਸ਼੍ਰਾਮਵਾਰੰ ਨ ਮਨ੍ਯਤੇ| ਤਤੋਨ੍ਯੇ ਕੇਚਿਤ੍ ਪ੍ਰਤ੍ਯਵਦਨ੍ ਪਾਪੀ ਪੁਮਾਨ੍ ਕਿਮ੍ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ਮ੍ ਆਸ਼੍ਚਰ੍ੱਯੰ ਕਰ੍ੰਮ ਕਰ੍ੱਤੁੰ ਸ਼ਕ੍ਨੋਤਿ?
17 கடைசியாக அவர்கள் மீண்டும் அந்தக் பார்வையற்றவனைப் பார்த்து, “உனது கண்களைத் திறந்தவரைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “அவர் ஒரு இறைவாக்கினர்” என்றான்.
ਇੱਥੰ ਤੇਸ਼਼ਾਂ ਪਰਸ੍ਪਰੰ ਭਿੰਨਵਾਕ੍ਯਤ੍ਵਮ੍ ਅਭਵਤ੍| ਪਸ਼੍ਚਾਤ੍ ਤੇ ਪੁਨਰਪਿ ਤੰ ਪੂਰ੍ੱਵਾਨ੍ਧੰ ਮਾਨੁਸ਼਼ਮ੍ ਅਪ੍ਰਾਕ੍ਸ਼਼ੁਃ ਯੋ ਜਨਸ੍ਤਵ ਚਕ੍ਸ਼਼ੁਸ਼਼ੀ ਪ੍ਰਸੰਨੇ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍ ਤਸ੍ਮਿਨ੍ ਤ੍ਵੰ ਕਿੰ ਵਦਸਿ? ਸ ਉਕ੍ੱਤਵਾਨ੍ ਸ ਭਵਿਸ਼ਦ੍ਵਾਦੀ|
18 பார்வையற்றவனாயிருந்தவனுடைய பெற்றோரைக் கூப்பிட்டு விசாரிக்கும் வரைக்கும், அவன் பார்வையற்றவனாய் இருந்து பார்வை பெற்றான் என்று யூதர்கள் நம்பவில்லை.
ਸ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿਮ੍ ਆਪ੍ਤਵਾਨ੍ ਇਤਿ ਯਿਹੂਦੀਯਾਸ੍ਤਸ੍ਯ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿੰ ਪ੍ਰਾਪ੍ਤਸ੍ਯ ਜਨਸ੍ਯ ਪਿਤ੍ਰੋ ਰ੍ਮੁਖਾਦ੍ ਅਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਨ ਪ੍ਰਤ੍ਯਯਨ੍|
19 அவர்கள் அவனுடைய பெற்றோரிடம், “பார்வையற்றவனாய்ப் பிறந்தான் என்று நீங்கள் சொன்ன உங்கள் மகன் இவன்தானா? இவன் எப்படி இப்பொழுது பார்வையடைந்தான்?” என்று கேட்டார்கள்.
ਅਤਏਵ ਤੇ ਤਾਵਪ੍ਰੁʼੱਛਨ੍ ਯੁਵਯੋ ਰ੍ਯੰ ਪੁਤ੍ਰੰ ਜਨ੍ਮਾਨ੍ਧੰ ਵਦਥਃ ਸ ਕਿਮਯੰ? ਤਰ੍ਹੀਦਾਨੀਂ ਕਥੰ ਦ੍ਰਸ਼਼੍ਟੁੰ ਸ਼ਕ੍ਨੋਤਿ?
20 அதற்கு அவனுடைய பெற்றோர், “இவன் எங்கள் மகன் என்பதும், இவன் பார்வையற்றவனாய் பிறந்தான் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
ਤਤਸ੍ਤਸ੍ਯ ਪਿਤਰੌ ਪ੍ਰਤ੍ਯਵੋਚਤਾਮ੍ ਅਯਮ੍ ਆਵਯੋਃ ਪੁਤ੍ਰ ਆ ਜਨੇਰਨ੍ਧਸ਼੍ਚ ਤਦਪ੍ਯਾਵਾਂ ਜਾਨੀਵਃ
21 ஆனால் இவனால் இப்பொழுது எப்படிப் பார்க்க முடிகிறது என்பதோ, இவனுடைய கண்களைத் திறந்தது யார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனையே கேளுங்கள். அவன் வயது வந்தவனாய் இருக்கிறானே; அவனே தனக்காகப் பேசுவான்” என்றார்கள்.
ਕਿਨ੍ਤ੍ਵਧੁਨਾ ਕਥੰ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਿੰ ਪ੍ਰਾਪ੍ਤਵਾਨ੍ ਤਦਾਵਾਂ ਨ੍ ਜਾਨੀਵਃ ਕੋਸ੍ਯ ਚਕ੍ਸ਼਼ੁਸ਼਼ੀ ਪ੍ਰਸੰਨੇ ਕ੍ਰੁʼਤਵਾਨ੍ ਤਦਪਿ ਨ ਜਾਨੀਵ ਏਸ਼਼ ਵਯਃਪ੍ਰਾਪ੍ਤ ਏਨੰ ਪ੍ਰੁʼੱਛਤ ਸ੍ਵਕਥਾਂ ਸ੍ਵਯੰ ਵਕ੍ਸ਼਼੍ਯਤਿ|
22 அவனுடைய பெற்றோர் யூதத்தலைவர்களுக்கு பயந்தபடியினாலேயே இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவை யாராவது கிறிஸ்து என அங்கீகரித்தால், அவன் ஜெப ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தீர்மானித்திருந்தார்கள்.
ਯਿਹੂਦੀਯਾਨਾਂ ਭਯਾਤ੍ ਤਸ੍ਯ ਪਿਤਰੌ ਵਾਕ੍ਯਮਿਦਮ੍ ਅਵਦਤਾਂ ਯਤਃ ਕੋਪਿ ਮਨੁਸ਼਼੍ਯੋ ਯਦਿ ਯੀਸ਼ੁਮ੍ ਅਭਿਸ਼਼ਿਕ੍ਤੰ ਵਦਤਿ ਤਰ੍ਹਿ ਸ ਭਜਨਗ੍ਰੁʼਹਾਦ੍ ਦੂਰੀਕਾਰਿਸ਼਼੍ਯਤੇ ਯਿਹੂਦੀਯਾ ਇਤਿ ਮਨ੍ਤ੍ਰਣਾਮ੍ ਅਕੁਰ੍ੱਵਨ੍
23 அதனாலேயே அவனுடைய பெற்றோர், “அவன் வயது வந்தவன்; அவனையே கேளுங்கள்” என்று சொன்னார்கள்.
ਅਤਸ੍ਤਸ੍ਯ ਪਿਤਰੌ ਵ੍ਯਾਹਰਤਾਮ੍ ਏਸ਼਼ ਵਯਃਪ੍ਰਾਪ੍ਤ ਏਨੰ ਪ੍ਰੁʼੱਛਤ|
24 இரண்டாவது முறையும் அவர்கள் பார்வையற்றவனாயிருந்த அவனைக் கூப்பிட்டு, “நீ இறைவனுக்கு மகிமையைக் கொடு. அவன் ஒரு பாவி என்று எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.
ਤਦਾ ਤੇ ਪੁਨਸ਼੍ਚ ਤੰ ਪੂਰ੍ੱਵਾਨ੍ਧਮ੍ ਆਹੂਯ ਵ੍ਯਾਹਰਨ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਗੁਣਾਨ੍ ਵਦ ਏਸ਼਼ ਮਨੁਸ਼਼੍ਯਃ ਪਾਪੀਤਿ ਵਯੰ ਜਾਨੀਮਃ|
25 அதற்கு பார்வையற்றவனாயிருந்தவன், “அவர் ஒரு பாவியோ இல்லையோ, எனக்குத் தெரியாது. எனக்கு ஒன்றுமட்டும் தெரியும். நான் பார்வையற்றவனாயிருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்!” என்றான்.
ਤਦਾ ਸ ਉਕ੍ੱਤਵਾਨ੍ ਸ ਪਾਪੀ ਨ ਵੇਤਿ ਨਾਹੰ ਜਾਨੇ ਪੂਰ੍ਵਾਮਨ੍ਧ ਆਸਮਹਮ੍ ਅਧੁਨਾ ਪਸ਼੍ਯਾਮੀਤਿ ਮਾਤ੍ਰੰ ਜਾਨਾਮਿ|
26 அப்பொழுது அவர்கள் அவனிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? அவன் எப்படி உன் கண்களைத் திறந்தான்?” என்று கேட்டார்கள்.
ਤੇ ਪੁਨਰਪ੍ਰੁʼੱਛਨ੍ ਸ ਤ੍ਵਾਂ ਪ੍ਰਤਿ ਕਿਮਕਰੋਤ੍? ਕਥੰ ਨੇਤ੍ਰੇ ਪ੍ਰਸੰਨੇ (ਅ)ਕਰੋਤ੍?
27 அவன் அதற்குப் பதிலாக, “ஏற்கெனவே நான் உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை. மீண்டும் ஏன் அதைக் கேட்கிறீர்கள்? நீங்களும் அவருடைய சீடர்களாக விரும்புகிறீர்களோ?” என்று கேட்டான்.
ਤਤਃ ਸੋਵਾਦੀਦ੍ ਏਕਕ੍ਰੁʼਤ੍ਵੋਕਥਯੰ ਯੂਯੰ ਨ ਸ਼੍ਰੁʼਣੁਥ ਤਰ੍ਹਿ ਕੁਤਃ ਪੁਨਃ ਸ਼੍ਰੋਤੁਮ੍ ਇੱਛਥ? ਯੂਯਮਪਿ ਕਿੰ ਤਸ੍ਯ ਸ਼ਿਸ਼਼੍ਯਾ ਭਵਿਤੁਮ੍ ਇੱਛਥ?
28 அப்பொழுது அவர்கள் ஆத்திரத்துடன் அவனை அவமதித்துப் பேசி, “நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயின் சீடர்கள்.
ਤਦਾ ਤੇ ਤੰ ਤਿਰਸ੍ਕ੍ਰੁʼਤ੍ਯ ਵ੍ਯਾਹਰਨ੍ ਤ੍ਵੰ ਤਸ੍ਯ ਸ਼ਿਸ਼਼੍ਯੋ ਵਯੰ ਮੂਸਾਃ ਸ਼ਿਸ਼਼੍ਯਾਃ|
29 மோசேயுடன் இறைவன் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இவனைப் பற்றியோ, இவன் எங்கிருந்து வந்தான் என்றோ எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.
ਮੂਸਾਵਕ੍ਤ੍ਰੇਣੇਸ਼੍ਵਰੋ ਜਗਾਦ ਤੱਜਾਨੀਮਃ ਕਿਨ੍ਤ੍ਵੇਸ਼਼ ਕੁਤ੍ਰਤ੍ਯਲੋਕ ਇਤਿ ਨ ਜਾਨੀਮਃ|
30 அதற்கு அவன், “இது வியப்பாயிருக்கிறது! என் கண்களை அவரே திறந்தார். அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தார் என்று உங்களுக்குத் தெரியாது என்கிறீர்களே.
ਸੋਵਦਦ੍ ਏਸ਼਼ ਮਮ ਲੋਚਨੇ ਪ੍ਰਸੰਨੇ (ਅ)ਕਰੋਤ੍ ਤਥਾਪਿ ਕੁਤ੍ਰਤ੍ਯਲੋਕ ਇਤਿ ਯੂਯੰ ਨ ਜਾਨੀਥ ਏਤਦ੍ ਆਸ਼੍ਚਰ੍ੱਯੰ ਭਵਤਿ|
31 இறைவன் பாவிகளுக்குச் செவிகொடுப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். தமது சித்தத்தைச் செய்கிற இறை பக்தியுள்ளவருக்கே அவர் செவிகொடுக்கிறார்.
ਈਸ਼੍ਵਰਃ ਪਾਪਿਨਾਂ ਕਥਾਂ ਨ ਸ਼੍ਰੁʼਣੋਤਿ ਕਿਨ੍ਤੁ ਯੋ ਜਨਸ੍ਤਸ੍ਮਿਨ੍ ਭਕ੍ਤਿੰ ਕ੍ਰੁʼਤ੍ਵਾ ਤਦਿਸ਼਼੍ਟਕ੍ਰਿਯਾਂ ਕਰੋਤਿ ਤਸ੍ਯੈਵ ਕਥਾਂ ਸ਼੍ਰੁʼਣੋਤਿ ਏਤਦ੍ ਵਯੰ ਜਾਨੀਮਃ|
32 பிறந்ததிலிருந்தே பார்வையற்றவனாயிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டதை, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. (aiōn )
ਕੋਪਿ ਮਨੁਸ਼਼੍ਯੋ ਜਨ੍ਮਾਨ੍ਧਾਯ ਚਕ੍ਸ਼਼ੁਸ਼਼ੀ ਅਦਦਾਤ੍ ਜਗਦਾਰਮ੍ਭਾਦ੍ ਏਤਾਦ੍ਰੁʼਸ਼ੀਂ ਕਥਾਂ ਕੋਪਿ ਕਦਾਪਿ ਨਾਸ਼੍ਰੁʼਣੋਤ੍| (aiōn )
33 அவர் இறைவனிடமிருந்து வந்திராவிட்டால், அவரால் ஒன்றையுமே செய்திருக்க முடியாது” என்றான்.
ਅਸ੍ਮਾਦ੍ ਏਸ਼਼ ਮਨੁਸ਼਼੍ਯੋ ਯਦੀਸ਼੍ਵਰਾੰਨਾਜਾਯਤ ਤਰ੍ਹਿ ਕਿਞ੍ਚਿਦਪੀਦ੍ਰੁʼਸ਼ੰ ਕਰ੍ੰਮ ਕਰ੍ੱਤੁੰ ਨਾਸ਼ਕ੍ਨੋਤ੍|
34 அதற்கு அவர்கள், “பிறப்பிலேயே பாவத்தில் மூழ்கியிருந்த நீ எங்களுக்குப் போதிக்கத் துணிந்துவிட்டாயோ!” என்று சொல்லி அவனை வெளியே தள்ளிவிட்டார்கள்.
ਤੇ ਵ੍ਯਾਹਰਨ੍ ਤ੍ਵੰ ਪਾਪਾਦ੍ ਅਜਾਯਥਾਃ ਕਿਮਸ੍ਮਾਨ੍ ਤ੍ਵੰ ਸ਼ਿਕ੍ਸ਼਼ਯਸਿ? ਪਸ਼੍ਚਾੱਤੇ ਤੰ ਬਹਿਰਕੁਰ੍ੱਵਨ੍|
35 யூதத்தலைவர்கள் அவனை ஜெப ஆலயத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டார்கள் என்று இயேசு கேள்விப்பட்டார். இயேசு அவனைத் திரும்பவும் கண்டபோது, “நீ மானிடமகனை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார்.
ਤਦਨਨ੍ਤਰੰ ਯਿਹੂਦੀਯੈਃ ਸ ਬਹਿਰਕ੍ਰਿਯਤ ਯੀਸ਼ੁਰਿਤਿ ਵਾਰ੍ੱਤਾਂ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਤੰ ਸਾਕ੍ਸ਼਼ਾਤ੍ ਪ੍ਰਾਪ੍ਯ ਪ੍ਰੁʼਸ਼਼੍ਟਵਾਨ੍ ਈਸ਼੍ਵਰਸ੍ਯ ਪੁਤ੍ਰੇ ਤ੍ਵੰ ਵਿਸ਼੍ਵਸਿਸ਼਼ਿ?
36 அதற்கு அவன், “ஐயா, அவர் யார் என்று சொல்லும். அப்பொழுது நான் அவரை விசுவாசிக்கிறேன்” என்றான்.
ਤਦਾ ਸ ਪ੍ਰਤ੍ਯਵੋਚਤ੍ ਹੇ ਪ੍ਰਭੋ ਸ ਕੋ ਯਤ੍ ਤਸ੍ਮਿੰਨਹੰ ਵਿਸ਼੍ਵਸਿਮਿ?
37 அதற்கு இயேசு, “நீ அவரை இப்பொழுது பார்க்கிறாய்; உன்னோடு பேசிக்கொண்டிருக்கிற நானே அவர்” என்றார்.
ਤਤੋ ਯੀਸ਼ੁਃ ਕਥਿਤਵਾਨ੍ ਤ੍ਵੰ ਤੰ ਦ੍ਰੁʼਸ਼਼੍ਟਵਾਨ੍ ਤ੍ਵਯਾ ਸਾਕੰ ਯਃ ਕਥੰ ਕਥਯਤਿ ਸਏਵ ਸਃ|
38 அதற்கு அவன், “ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்” என்று சொல்லி, அவரை வழிபட்டான்.
ਤਦਾ ਹੇ ਪ੍ਰਭੋ ਵਿਸ਼੍ਵਸਿਮੀਤ੍ਯੁਕ੍ਤ੍ਵਾ ਸ ਤੰ ਪ੍ਰਣਾਮਤ੍|
39 அப்பொழுது இயேசு, “நியாயத்தீர்ப்பிற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். இதனால் பார்வையற்றவர்கள் காண்பார்கள். காண்கிறவர்கள் பார்வையற்றவராவார்கள்” என்றார்.
ਪਸ਼੍ਚਾਦ੍ ਯੀਸ਼ੁਃ ਕਥਿਤਵਾਨ੍ ਨਯਨਹੀਨਾ ਨਯਨਾਨਿ ਪ੍ਰਾਪ੍ਨੁਵਨ੍ਤਿ ਨਯਨਵਨ੍ਤਸ਼੍ਚਾਨ੍ਧਾ ਭਵਨ੍ਤੀਤ੍ਯਭਿਪ੍ਰਾਯੇਣ ਜਗਦਾਹਮ੍ ਆਗੱਛਮ੍|
40 அப்பொழுது இயேசுவுடன் இருந்த சில பரிசேயர்கள் இதைக் கேட்டு, “என்ன! நாங்களும் பார்வையற்றோர்களோ?” என்று கேட்டார்கள்.
ਏਤਤ੍ ਸ਼੍ਰੁਤ੍ਵਾ ਨਿਕਟਸ੍ਥਾਃ ਕਤਿਪਯਾਃ ਫਿਰੂਸ਼ਿਨੋ ਵ੍ਯਾਹਰਨ੍ ਵਯਮਪਿ ਕਿਮਨ੍ਧਾਃ?
41 அதற்கு இயேசு, “நீங்கள் பார்வையற்றவர்களாயிருந்தால், பாவத்தின் குற்றம் உங்களுக்கு இராது; ஆனால் உங்களால் பார்க்கமுடியும் என்று நீங்கள் சொல்கிறபடியால், குற்றம் உங்கள்மேல் இருக்கிறது” என்றார்.
ਤਦਾ ਯੀਸ਼ੁਰਵਾਦੀਦ੍ ਯਦ੍ਯਨ੍ਧਾ ਅਭਵਤ ਤਰ੍ਹਿ ਪਾਪਾਨਿ ਨਾਤਿਸ਼਼੍ਠਨ੍ ਕਿਨ੍ਤੁ ਪਸ਼੍ਯਾਮੀਤਿ ਵਾਕ੍ਯਵਦਨਾਦ੍ ਯੁਸ਼਼੍ਮਾਕੰ ਪਾਪਾਨਿ ਤਿਸ਼਼੍ਠਨ੍ਤਿ|