< யோவான் 8 >

1 இயேசுவோ ஒலிவமலைக்குச் சென்றார்.
Xeꞌ kꞌu ri Jesús pa ri juyubꞌ Olivos.
2 அதிகாலையிலே அவர் மீண்டும் ஆலய முற்றத்திற்கு வந்தார். மக்கள் எல்லோரும் அவரைச் சுற்றிக் கூடிவந்தனர். இயேசு அவர்களுக்கு போதிப்பதற்காக உட்கார்ந்தார்.
Are xsaqir chukabꞌ qꞌij, xopan chi junmul pa ri Templo. Konojel ri winaq xeqet rukꞌ, xtꞌuyiꞌk kꞌut, xuchapleꞌj uyaꞌik kꞌutuꞌn chike.
3 அப்பொழுது மோசேயின் சட்ட ஆசிரியரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அங்கு கொண்டுவந்தார்கள். அவர்கள் அவளை அங்கிருந்த எல்லோருக்கும் நடுவாக நிறுத்தினார்கள்.
Ri aꞌjtijabꞌ rech ri taqanik e kachiꞌl ri fariseos xkikꞌam bꞌik jun ixoq ri xkiriq pa mak kukꞌ achyabꞌ xeꞌkiya chikixoꞌl ri winaq
4 அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே பிடிக்கப்பட்டாள்.
Kꞌa te riꞌ xkibꞌij che ri Jesús: Ajtij, xriqitaj we ixoq riꞌ tajin kamakun kukꞌ achyabꞌ.
5 இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசேயின் சட்டத்தில் மோசே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நீர் என்ன சொல்கிறீர்?” என்றார்கள்.
Ri utaqanik ri Moisés kubꞌij chaqe chi keꞌqakamisaj che abꞌaj ri ixoqibꞌ ri jewaꞌ kakibꞌano. ¿Jas kabꞌij lal che?
6 இயேசுவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவரும்படி, ஒரு சூழ்ச்சியாக அவர்கள் இந்தக் கேள்வியை கேட்டார்கள். ஆனால் இயேசுவோ, குனிந்து தமது விரலினால் தரையிலே எழுதத் தொடங்கினார்.
Jewaꞌ xkibꞌij che rech kakikoj jun kꞌaꞌmabꞌal pa ubꞌe rech jeriꞌ kakimol umak. Ri Jesús kꞌut xchiqiꞌk, xuchapleꞌj tzꞌibꞌanem pa ri ulew.
7 அவர்கள் தொடர்ந்து அவரைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததினால், இயேசு நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, “உங்களில் யாராவது பாவமில்லாதவன் இருந்தால், அவன் முதலாவதாக இவள்மேல் கல்லெறியட்டும்” என்றார்.
Ri winaq xkichapleꞌj ubꞌanik kꞌotbꞌal chiꞌ che ri Jesús rumal riꞌ, xtakꞌiꞌk kꞌa te riꞌ xubꞌij chike: Ri maj umak chiꞌwe chukꞌyaqa ri nabꞌe abꞌaj.
8 இயேசு மீண்டும் குனிந்து தரையில் எழுதினார்.
Ri Jesús xchiqiꞌ chi junmul xuchapleꞌj chik tzꞌibꞌanem pa ri ulew.
9 அப்பொழுது, இதைக் கேட்டவர்களில், முதியோர் தொடங்கி சிறியோர் வரை ஒவ்வொருவராகப் போகத் தொடங்கினார்கள். இயேசு மட்டும் அங்கே இருந்தார். அந்தப் பெண்ணும் அங்கே நடுவே நின்றுகொண்டிருந்தாள்.
Are xkita ri xbꞌix chike xkichapleꞌj bꞌik elem pa jujunal, nabꞌe xebꞌe ri e riꞌjabꞌ, xaq xwi xekanaj kanoq ri Jesús rachiꞌl ri ixoq.
10 இயேசு நிமிர்ந்து அவளைப் பார்த்து, “மகளே, அவர்கள் எங்கே? ஒருவனும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கவில்லையோ?” என்று கேட்டார்.
Ri Jesús kꞌut xuta che ri ixoq: Ixoq, ¿jawjeꞌ e kꞌo wi ri kakiqꞌat tzij pa awiꞌ?
11 அதற்கு அவள், “இல்லை ஆண்டவரே” என்றாள். அப்பொழுது இயேசு அவளிடம், “நானும் உன்னை குற்றவாளியாகத் தீர்க்கமாட்டேன். இப்பொழுது நீ போகலாம், இனிப் பாவம் செய்யாதே” என்றார்.
Ri ixoq xubꞌij: Ajawxel, man e kꞌo ta chik. Ri Jesús xubꞌij che: Man kinqꞌat ta xuqujeꞌ tzij in pa awiꞌ. Jat, ma katmakun ta chik junmul.
12 மீண்டும் இயேசு மக்களுடன் பேசத்தொடங்கி, “நானே உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் ஒருபோதும் இருளில் நடக்கமாட்டான். ஜீவ வெளிச்சம் அவர்களுடன் இருக்கும்” என்றார்.
Ri Jesús junmul chik xubꞌij chike ri winaq: In in tunal ri katunan ri uwachulew. Ri kateriꞌ chwij man kabꞌin taj pa qꞌequꞌmal xane kukꞌamawaꞌj na ri tunal rech kꞌaslemal.
13 அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “இதோ பார், நீயே உன்னைக் குறித்த சாட்சி கொடுக்கிறாயே; உனது சாட்சி உண்மையல்ல” என்றார்கள்.
Ri fariseos xkibꞌij che ri Jesús: Xaq at kaqꞌalajisaj awibꞌ maj kutayij ri qꞌalajisanik ri kabꞌano.
14 இயேசு அதற்குப் பதிலாக, “நானே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தாலும், எனது சாட்சி உண்மையானதே. ஏனெனில் நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், நான் எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் நீங்களோ நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறியாதிருக்கிறீர்கள்.
Ri Jesús xubꞌij: Pune in kinqꞌalajisaj wibꞌ, qas saq ri nuqꞌalajisanik, jeriꞌ rumal wetaꞌm jawjeꞌ nupetik wi xuqujeꞌ jawjeꞌ kineꞌ wi. Ri ix kꞌut man iwetaꞌm taj jawjeꞌ nupetik xuqujeꞌ jawjeꞌ kineꞌ wi.
15 நீங்கள் மனிதருக்கேற்றபடி தீர்ப்புச் செய்கிறீர்கள்; நானோ ஒருவருக்கும் தீர்ப்புச் செய்வதில்லை.
Ri ix kiqꞌat tzij rukꞌ ri ichomabꞌal rech uwachulew, ri in man kinqꞌat taj tzij puꞌwiꞌ jun chik.
16 நான் தீர்ப்பு செய்தாலும், எனது தீர்ப்பு உண்மையானதாகவே இருக்கும். ஏனெனில் நான் தனியாக தீர்ப்பு கொடுப்பதில்லை. என்னை அனுப்பிய என் பிதாவும் என்னுடனேகூட இருக்கிறார்.
We kꞌu kinqꞌat tzij, ri nuqꞌatoj tzij qas sukꞌ wi, jeriꞌ rumal man kinbꞌan ta xaq pa we wi, xane wachiꞌl ri Tataxel ri xintaqow loq.
17 இரண்டு பேருடைய சாட்சி உண்மையானது என்று உங்கள் சொந்த சட்டத்திலே எழுதியிருக்கிறது.
Pa ri itaqanik kubꞌij chi we e kebꞌ winaq kebꞌanow ri qꞌalajisanik, qas tzij riꞌ ri kakibꞌij.
18 நான் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறேன்; என்னை அனுப்பிய பிதாவே எனது இரண்டாவது சாட்சியாயிருக்கிறார்” என்றார்.
In kinqꞌalajisaj wibꞌ xuqujeꞌ ri Tataxel ri xintaqow loq kuya qꞌalajisanik chwij in.
19 அப்பொழுது அவர்கள் அவரிடம், “உமது பிதா எங்கே?” என்றார்கள். அதற்கு இயேசு, “என்னையோ, என் பிதாவையோ நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் என்னை அறிந்தால், என் பிதாவையுங்கூட அறிந்திருப்பீர்கள்” என்றார்.
Ri fariseos xkita che ri Jesús: ¿Jawjeꞌ kꞌo wi ri atat? Ri Jesús xubꞌij chike: We ta iwetaꞌm in jachinaq iwetaꞌm xuqujeꞌ riꞌ jachin ri nuTat.
20 இயேசு ஆலயப் பகுதியில் போதிக்கும்போது, காணிக்கை போடுகிற இடத்தின் அருகே நின்று, இந்த வார்த்தைகளைப் பேசினார். ஆனால் ஒருவனும் அவரைக் கைதுசெய்யவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.
We jastaq riꞌ xubꞌij ri Jesús are tajin kuya kꞌutuꞌn pa ri kꞌolibꞌal jawjeꞌ kaya wi ri sipanik pa ri Templo. Maj kꞌu jun xchapowik jeriꞌ rumal majaꞌ kuriq ri uqꞌijal.
21 மீண்டும் இயேசு அவர்களிடம், “நான் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் பாவத்திலேயே சாவீர்கள். நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது” என்றார்.
Junmul chik ri Jesús xubꞌij chike: In kineꞌek, ri ix kꞌut kinitzukuj na pune jeriꞌ kixkam kꞌu pa taq ri imak. Man kixkwin taj kixeꞌek jawjeꞌ ri kineꞌ wi in.
22 அப்பொழுது யூதர்கள், “இவன் தற்கொலை செய்துகொள்ள போகிறானா? அதனால்தான், ‘நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று சொல்கிறானோ!” என்று கேட்டார்கள்.
Ri winaq aꞌj Israel xkibꞌij: ¿Teꞌq xa kuchomaj kukamisaj ribꞌ? ¿Wine rumal laꞌ kubꞌij chi: “Man kixkwin taj kixeꞌek jawjeꞌ ri kineꞌ wi”?
23 இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நீங்கள் கீழேயிருந்து வந்தவர்கள்; நான் மேலேயிருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள்; நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவன் அல்ல.
Ri Jesús xubꞌij: Ix ix aj waral choch ri uwachulew, in in rech chikaj. Ix ix ajuwachulew, ri in man in ajuwachulew taj.
24 நீங்கள் உங்கள் பாவங்களிலேயே சாவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள்” என்றார்.
Rumal riꞌ xinbꞌij chiꞌwe chi kixkam pa taq ri imak, jeriꞌ rumal man kikoj taj chi in ri kinbꞌij chiꞌwe kinuxik, rumal riꞌ kixkam pa ri imak.
25 அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நீர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு பதிலாக, “அதைத்தான் நான் தொடக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொல்கிறேனே” என்று இயேசு சொல்லி,
Ri winaq xkita che: ¿At jachin kꞌu ri at? Ri Jesús xubꞌij chike: Pa ri majibꞌal re xinbꞌij chiꞌwe in jachinaq.
26 “உங்களைப் பற்றிச் சொல்லவும், நியாயத்தீர்ப்பு அளிக்கவும் என்னிடம் அநேக காரியங்கள் இருக்கிறது. ஆனால் என்னை அனுப்பியவரிடமிருந்து கேட்டதை மட்டும் நான் உலகத்திற்கு அறிவிக்கிறேன். ஏனென்றால் என்னை அனுப்பியவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்” என்றார்.
Sibꞌalaj kꞌi jastaq na kinbꞌij chiꞌwe xuqujeꞌ kinqꞌat na tzij pa iwiꞌ rumal rech kiꞌ jastaq. Are kꞌu ri xintaqow loq qas kꞌo wi, ri ubꞌim chwe are kintzalij ubꞌixik chike ri winaq aꞌjuwachulew.
27 இயேசு பிதாவாகிய இறைவனைக் குறித்தே பேசுகிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
Ri winaq kꞌut man xkichomaj taj chi ri Jesús are tajin kutzijoj rij ri uTat.
28 எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் மானிடமகனாகிய என்னை உயர்த்திய பின்பு, நானே அவர் என்றும், எனது சுயமாக நான் ஒன்றும் செய்கிறதில்லையென்றும், பிதா எனக்கு போதித்தபடியே நான் இவற்றைச் சொல்கிறேன் என்றும் அறிந்துகொள்வீர்கள்.
Ri Jesús xutzꞌaqatisaj ubꞌixik chike: Are kawaꞌjilisax ri uKꞌojol ri Achi, kiwetaꞌmaj na chi ri in man kinkwin taj kinbꞌan ri jastaq xqa pa we wi, xane are kinbꞌan ri ukꞌutum ri Tataxel chinuwach.
29 என்னை அனுப்பிய பிதா என்னுடனே இருக்கிறார்; அவர் என்னைத் தனிமையாய் விட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பிரியமானதையே நான் எப்பொழுதும் செய்கிறேன்” என்றார்.
Kꞌo wukꞌ ri xintaqow loq, man in uyaꞌom ta kanoq nutukel, jeriꞌ rumal are kinbꞌan ri kaqaj choch.
30 அவர் இந்தக் காரியங்களைக் குறித்துச் சொன்னபோது, பலர் அவரில் விசுவாசம் வைத்தார்கள்.
Tajin katzijon na ri Jesús are xkichapleꞌj kojonem che e kꞌi winaq.
31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களிடம், “நீங்கள் எனது உபதேசத்தில் தொடர்ந்து நிலைத்திருந்தால், நீங்கள் உண்மையாகவே எனது சீடர்களாய் இருப்பீர்கள்.
Xubꞌij kꞌu ri Jesús chike ri winaq aꞌj Israel ri xekojon che: We qas kixjeqiꞌk pa ri nukꞌutuꞌn qas kixux riꞌ nutijoxelabꞌ.
32 அப்பொழுது நீங்கள் சத்தியத்தை அறிந்துகொள்வீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார்.
Kiwetaꞌmaj kꞌu na ri qas tzij, ri qas tzij kꞌut kubꞌan na chiꞌwe chi kixtzoqopitajik.
33 அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம். நாங்கள் ஒருபோதும் ஒருவருக்கும் அடிமைகளாய் இருந்ததில்லை. அப்படியிருக்க நாங்கள் விடுதலையாவோம் என்று நீர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள்.
Ri winaq aꞌj Israel xkibꞌij: Ri uj rijaꞌl ri Abraham, man ujuxinaq ta wi patanil rech jun chik. ¿Jas kꞌu che kabꞌij at chi kujtzoqopitaj na?
34 அதற்கு இயேசு பதிலாக, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாவம் செய்கிற ஒவ்வொருவரும் பாவத்திற்கு அடிமையாய் இருக்கிறார்கள்.
Ri Jesús xubꞌij: Qas tzij kinbꞌij chiꞌwe xapachin ri kamakunik, riꞌ patanil rech ri mak.
35 ஒரு அடிமைக்குக் குடும்பத்தில் நிரந்தர இடம் இருப்பதில்லை. ஆனால் மகனோ குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாயிருக்கிறான். (aiōn g165)
Jun patanijel man kakanaj ta kanoq amaqꞌel pa ri ja ri kapatanij wi, are kꞌu ri alkꞌwaꞌlaxel chi aj upaja wi. (aiōn g165)
36 ஆகவே இறைவனின் மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையாகவே விடுதலை பெறுவீர்கள்.
We qas are ri Alkꞌwaꞌlaxel kixtzoqopinik, qas kixtzoqopitaj wi na.
37 நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் என்னைக் கொல்வதற்கு ஆயத்தமாய் இருக்கிறீர்கள். ஏனெனில் எனது வார்த்தைக்கு உங்கள் உள்ளத்தில் இடமில்லை.
Wetaꞌm in chi ix rijaꞌl ri Abraham, pune jeriꞌ are kiwaj kinikamisaj rumal cher man kiwaj taj kikꞌamawaꞌj ri nutzij.
38 எனது பிதாவின் முன்னிலையில் கண்டவற்றையே நான் அறிவிக்கிறேன். ஆனால் நீங்களோ உங்கள் தகப்பனிடமிருந்து கேள்விப்பட்டதையே செய்கிறீர்கள்” என்றார்.
In are kintzijoj ri wilom rukꞌ ri nuTat, are kꞌu ri ix are kinbꞌan ri itom che ri itat.
39 அதற்கு அவர்கள், “ஆபிரகாமே எங்கள் தந்தை” என்றார்கள். இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளானால் ஆபிரகாம் செய்தவற்றையே நீங்களும் செய்வீர்கள்.
Ri winaq xkibꞌij: Are qatat uj ri Abraham. Ri Jesús xubꞌij chike: We ta qas ix ralkꞌwaꞌl ri Abraham, kibꞌan riꞌ jetaq ri xubꞌan areꞌ.
40 ஆனால் நீங்களோ, இறைவனிடம் கேட்டறிந்த சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனான என்னைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ஆபிரகாம் இப்படியான காரியங்களைச் செய்யவில்லையே.
Ix kꞌut are kiwaj kinikamisaj jeriꞌ rumal xintzijoj ri tunal chiꞌwe ri xuya chwe ri Dios. Ri Abraham man kubꞌan ta kꞌu riꞌ ri kichomaj ix ubꞌanik.
41 நீங்கள் உங்கள் சொந்தத் தகப்பன் செய்ததையே செய்கிறீர்கள்” என்றார். அதற்கு அவர்கள் அவரிடம், “நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை. இறைவன் ஒருவரே எங்களுக்கும் பிதா” என்றார்கள்.
Ri ix are kibꞌan ri uchak ri itat itzel. Ri winaq xkibꞌij: Uj, man uj ralkꞌwaꞌl ta mak. Xa jun qatat kꞌolik, are ri Dios.
42 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவன் உங்கள் பிதாவாக இருந்தால், நீங்கள் என்னிலும் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் இப்பொழுது இங்கே இருக்கின்ற நான் இறைவனிடமிருந்தே வந்தேன். நான் எனது சுயவிருப்பத்தின்படி வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.
Ri Jesús xubꞌij chike: We ta qas are itat ri Dios, kiniloqꞌaj riꞌ, jeriꞌ rumal in in petinaq che ri Dios xuqujeꞌ in kꞌo waral iwukꞌ. Man in petinaq taj xaq pa we wi, xane Areꞌ xintaqow loq.
43 நான் சொல்வது ஏன் உங்களுக்குத் தெளிவாய் இல்லை? நான் சொல்வதைக் கேட்க உங்களுக்கு மனதில்லாமல் இருக்கிறதினால்தானே.
¿Jas che man kichomaj taj ri kinbꞌij? Man kichomaj taj rumal man kikꞌamawaꞌj taj ri nutzij.
44 நீங்கள் உங்கள் தகப்பனான சாத்தானுக்கு உரியவர்கள். உங்கள் தகப்பனின் ஆசைகளைச் செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள். அவன் தொடக்கத்திலிருந்தே கொலைகாரனாய் இருக்கிறான். அவனிடம் சத்தியமில்லை. அதனால் அவன் சத்தியத்தில் நிலைத்திருப்பதில்லை. அவன் பொய் பேசும்போது தன் சொந்த மொழியையே பேசுகிறான். ஏனெனில் அவன் ஒரு பொய்யன், பொய்களின் தகப்பன்.
Ix ix rech ri itat ri Itzel, are kibꞌan ri urayibꞌal areꞌ. Kamisanel wi riꞌ areꞌ pa ri majibꞌal loq rech ronojel, man kꞌo taj pa ri tunal, jeriꞌ rumal man kꞌo ta tunal pa are. Are kubꞌan bꞌanoj tzij, kukꞌut ribꞌ chi xaq bꞌanal tzij. Ri itzel are utat ri bꞌanoj tzij.
45 இருந்தும் நானோ உங்களுக்கு சத்தியத்தை சொல்கிறபடியால், நீங்கள் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்.
Are kꞌu ri in man kinikoj taj pune are kinbꞌij chiꞌwe ri qas tzij.
46 நான் பாவம் செய்தேன் என்று என்னைக் குற்றம் சாட்டி நிரூபிக்க உங்களில் எவனால் முடியும்? நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொல்லியும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்?
¿Jachin chiꞌwe kakwin chukꞌutik chi in ajmak? We qas tzij ri kinbꞌij chiꞌwe, ¿jas kꞌu che kiwaj kinikamisaj?
47 யார் இறைவனுக்குரியவராய் இருக்கிறவர்கள், அவன் இறைவன் சொல்லும் வார்த்தையைக் கேட்கிறான். நீங்களோ இறைவனுக்குரியவர்கள் அல்லாதபடியினாலே, இறைவனுடைய வார்த்தையைக் கேளாமல் இருக்கிறீர்கள்” என்றார்.
Ri winaq ri rech ri Dios kutatabꞌej ri kubꞌij ri Dios. Ri ix kꞌut man kitatabꞌej taj rumal man ix rech taj ri Dios.
48 அப்பொழுது யூதத்தலைவர்கள் அவரிடம், “நீ ஒரு சமாரியன். நீ பிசாசு பிடித்தவன் என்று நாங்கள் சொன்னது சரியல்லவா?” என்றார்கள்.
Ri winaq aꞌj Israel xkibꞌij che ri Jesús: ¿La man kꞌyaqal ri kaqabꞌij chawe chi at, at jun achi aj Samaria, ri kꞌo jun itzel uxlabꞌal chawe?
49 அதற்கு இயேசு, “நான் பிசாசு பிடித்தவன் அல்ல. நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன். நீங்களோ என்னை அவமதிக்கிறீர்கள்.
Ri Jesús xubꞌij: Man kꞌo taj jun itzel uxlabꞌal chwe. Xaq xwi kinqꞌijilaꞌj ri nuTat, ri ix kꞌut xaq xwi kiwesaj nukꞌixibꞌal.
50 நான் எனது சுய மகிமையைத் தேடவில்லை; ஆனால் எனக்காக மகிமையைத் தேடுகிறவரும் நியாயந்தீர்க்கிறவரும் ஒருவர் இருக்கிறாரே.
Man are ta kintzukuj kinya nuqꞌij chibꞌil wibꞌ, xane kꞌo jun ri karaj kaya uqꞌij, are riꞌ ri Qꞌatal tzij.
51 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது எனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் மரணத்தைக் காணமாட்டார்கள்” என்றார். (aiōn g165)
Qas tzij kinbꞌij chiꞌwe, ri kubꞌan ri kubꞌij ri nutzij man kakam taj. (aiōn g165)
52 அப்பொழுது யூதத்தலைவர்கள், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்று இப்பொழுது நாங்கள் நன்றாய் தெரிந்துகொண்டோம். ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் நீயோ, யாராவது உனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் எவ்விதத்திலும் மரணத்தை அனுபவிப்பதில்லை என்று சொல்கிறாய். (aiōn g165)
Ri winaq aꞌj Israel xkibꞌij: Chanim qas kaqakojo chi qas kꞌo jun itzel uxlabꞌal chawe. Xkam ri Abraham, xekam xuqujeꞌ konojel ri e qꞌalajisal taj utzij ri Dios, ri at kꞌut kabꞌij chi we kakojon jun che ri atzij, man kakam taj. (aiōn g165)
53 நீ எங்கள் தகப்பன் ஆபிரகாமைப் பார்க்கிலும் பெரியவனோ? அவர் மரித்தார், அப்படியே இறைவாக்கினரும் மரித்தார்கள். நீ உன்னை யார் என்று எண்ணுகிறாய்?” என்று கேட்டார்கள்.
¿La at ta kꞌut at nabꞌyal cho ri qatat Abraham? Areꞌ xkamik, xekꞌam xuqujeꞌ konojel ri e qꞌalajisal taj utzij ri Dios. ¿Jachin kabꞌij at katuxik?
54 இயேசு அதற்கு மறுமொழியாக, “நானே என்னை மகிமைப்படுத்தினால், எனது மகிமை அர்த்தமற்றது. நீங்கள் உங்கள் இறைவன் என்று உரிமையோடு சொல்கிற, எனது பிதாவே என்னை மகிமைப்படுத்துகிறவர்.
Ri Jesús xubꞌij chike: Man kꞌo ta kutayij riꞌ we xaq in kinya nuqꞌij chibꞌil wibꞌ. Ri kayoꞌw nuqꞌij in are ri nuTat ri kibꞌij ix iDios che,
55 நீங்கள் அவரை அறியாதிருந்தாலும், நான் அவரை அறிந்திருக்கிறேன். நான் அவரை அறியவில்லை என்று சொன்னால், நானும் உங்களைப்போலவே ஒரு பொய்யனாய் இருப்பேன். ஆனால் நானோ அவரை அறிந்திருக்கிறேன். அவரின் வார்த்தையைக் கைக்கொள்கிறேன்.
pune man iwetaꞌm uwach. Ri in kꞌut wetaꞌm uwach. We kinbꞌij chiꞌwe chi man wetaꞌm taj uwach, in jun bꞌanal tzij riꞌ jetaq ri ix. Ri in kꞌut wetaꞌm uwach xuqujeꞌ kinbꞌan ri kubꞌij ri utzij.
56 உங்கள் முற்பிதாவான ஆபிரகாம் எனது நாளைக் காண்பதை எண்ணி மகிழ்ச்சி கொண்டிருந்தான்; அதைக்கண்டு அவன் சந்தோஷப்பட்டான்” என்றார்.
Ri itat Abraham sibꞌalaj xkiꞌkotik are xuchomaj chi karil na ri nuqꞌij, are xrilo sibꞌalaj xkiꞌkotik.
57 அப்பொழுது யூதத்தலைவர்கள் அவரிடம், “உனக்கோ இன்னும் ஐம்பது வயதாகவில்லை. நீ ஆபிரகாமைக் கண்டாயோ!” என்றார்கள்.
Ri winaq aꞌj Israel xkibꞌij che: Majaꞌ ne katzꞌaqat nikꞌaj ciento ajunabꞌ, ¿are ta kꞌu riꞌ kabꞌij chi xawil uwach ri Abraham?
58 அதற்கு இயேசு, “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்கிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னமே இருக்கிறவர் நானே” என்றார்.
Ri Jesús xubꞌij chike: Qas tzij kinbꞌij chiꞌwe: Are taq majaꞌ kakꞌojiꞌ ri Abraham, In Riꞌ.
59 இதைக் கேட்டவுடன் அவர்மேல் எறியும்படி அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் நடுவே கடந்து ஆலயப் பகுதியை விட்டு வெளியே போய்விட்டார்.
Xepe kꞌu ri winaq aꞌj Israel, xkisikꞌ abꞌaj rech kakikoj che ri Jesús. Ri Jesús kꞌut xrawaj ribꞌ, maj jun xilowik are xel bꞌik pa ri Templo.

< யோவான் 8 >