< யோவான் 8 >
1 இயேசுவோ ஒலிவமலைக்குச் சென்றார்.
ⲁ̅ⲒⲎⲤⲞⲨⲤ ⲆⲈ ⲀϤϢⲈ ⲚⲀϤ ⲈⲠⲒⲦⲰⲞⲨ ⲚⲦⲈⲚⲒϪⲰⲒⲦ
2 அதிகாலையிலே அவர் மீண்டும் ஆலய முற்றத்திற்கு வந்தார். மக்கள் எல்லோரும் அவரைச் சுற்றிக் கூடிவந்தனர். இயேசு அவர்களுக்கு போதிப்பதற்காக உட்கார்ந்தார்.
ⲃ̅ⲒⲦⲀ ⲀϤⲒ ⲚϨⲀⲚⲀⲦⲞⲞⲨⲒ ⲈⲠⲒⲈⲢⲪⲈⲒ ⲚⲒⲘⲎ ϢⲆⲈ ⲀⲨⲒ ϨⲀⲢⲞϤ ⲞⲨⲞϨ ⲀϤϨⲈⲘⲤⲒ ⲈϮⲤⲂⲰ ⲚⲰⲞⲨ
3 அப்பொழுது மோசேயின் சட்ட ஆசிரியரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அங்கு கொண்டுவந்தார்கள். அவர்கள் அவளை அங்கிருந்த எல்லோருக்கும் நடுவாக நிறுத்தினார்கள்.
ⲅ̅ⲚⲒⲀⲢⲬⲎⲈⲢⲈⲨⲤ ⲆⲈ ⲚⲈⲘ ⲚⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲀⲨⲒⲚⲒ ⲚⲀϤ ⲚⲞⲨⲤϨⲒⲘⲒ ⲀⲨϪⲈⲘⲤ ϦⲈⲚⲞⲨⲠⲞⲢⲚⲒⲀ ⲞⲨⲞϨ ⲀⲨⲦⲀϨⲞⲤ ⲈⲢⲀⲦⲤ ϦⲈⲚⲐⲘⲎϮ
4 அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே பிடிக்கப்பட்டாள்.
ⲇ̅ⲞⲨⲞϨ ⲠⲈϪⲰⲞⲨ ⲚⲀϤ ϪⲈ ⲪⲢⲈϤϮⲤⲂⲰ ⲦⲀⲒⲤϨⲒⲘⲒ ⲐⲀⲒ ⲀⲚϪⲈⲘⲤ ϦⲈⲚⲞⲨⲠⲞⲢⲚⲒⲀ
5 இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசேயின் சட்டத்தில் மோசே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நீர் என்ன சொல்கிறீர்?” என்றார்கள்.
ⲉ̅ⲞⲨⲞϨ ⲪⲚⲞⲘⲞⲤ ⲘⲘⲰⲨⲤⲎⲤ ⲞⲨⲀϨⲤⲀϨⲚⲒ ⲈϨⲒⲰⲚⲒ ⲈϪⲰⲤ ⲞⲨ ⲠⲈ ⲆⲈ ⲈⲦⲈⲔϪⲰ ⲘⲘⲞϤ ⲚⲐⲞⲔ
6 இயேசுவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவரும்படி, ஒரு சூழ்ச்சியாக அவர்கள் இந்தக் கேள்வியை கேட்டார்கள். ஆனால் இயேசுவோ, குனிந்து தமது விரலினால் தரையிலே எழுதத் தொடங்கினார்.
ⲋ̅ⲪⲀⲒ ⲆⲈ ⲀⲨϪⲰϤ ⲈⲨⲈⲢⲠⲒⲢⲀⲌⲒⲚ ⲘⲘⲞϤ ϨⲒⲚⲀ ⲚⲦⲞⲨϪⲈⲘ ⲖⲰⲒϪⲒ ϨⲒϪⲰϤ ⲒⲎⲤⲞⲨⲤ ⲆⲈ ⲀϤⲢⲒⲔⲒ ⲚⲚⲈϤⲂⲀⲖ ⲀϤⲤϦⲀⲒ ⲘⲠⲈϤⲦⲎⲂ ϨⲒϪⲈⲚ ⲠⲒⲔⲀϨⲒ
7 அவர்கள் தொடர்ந்து அவரைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததினால், இயேசு நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, “உங்களில் யாராவது பாவமில்லாதவன் இருந்தால், அவன் முதலாவதாக இவள்மேல் கல்லெறியட்டும்” என்றார்.
ⲍ̅ⲈⲦⲀⲨⲰⲤⲔ ⲆⲈ ⲘⲠⲈϤⲈⲢⲞⲨⲰ ⲀϤϤⲀⲒ ⲚⲦⲈϤⲀⲪⲈ ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲚⲒⲘ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ ⲀϬⲚⲈ ⲚⲞⲂⲒ ⲘⲀⲢⲈϤϨⲒⲰⲚⲒ ⲈϪⲰⲤ ⲚϢⲞⲢⲠ ⲚⲞⲨⲰⲚⲒ
8 இயேசு மீண்டும் குனிந்து தரையில் எழுதினார்.
ⲏ̅ⲦⲞⲦⲈ ⲀϤⲢⲈⲔ ϪⲰϤ ⲞⲨⲞϨ ⲀϤⲤϦⲀⲒ ϨⲒϪⲈⲚ ⲠⲔⲀϨⲒ
9 அப்பொழுது, இதைக் கேட்டவர்களில், முதியோர் தொடங்கி சிறியோர் வரை ஒவ்வொருவராகப் போகத் தொடங்கினார்கள். இயேசு மட்டும் அங்கே இருந்தார். அந்தப் பெண்ணும் அங்கே நடுவே நின்றுகொண்டிருந்தாள்.
ⲑ̅ⲈⲦⲀⲨⲤⲰⲦⲈⲘ ⲈⲪⲀⲒ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲞⲦϤ ⲞⲨⲞϨ ⲀⲨⲔⲀϮ ⲈⲠⲈϤⲤⲞϨⲒ ⲀⲨⲈⲢϨⲎⲦⲤ ⲚⲒ ⲈⲂⲞⲖ ⲪⲞⲨⲀⲒ ⲪⲞⲨⲀⲒ ϢⲀⲦⲞⲨⲒ ⲈⲂⲞⲖ ⲚϪⲈⲚⲒⲠⲢⲈⲤⲂⲨⲦⲈⲢⲞⲤ ⲚⲈⲘ ⲠⲞⲨⲘⲎϢ ⲞⲨⲞϨ ⲀϤⲤⲰϪⲠ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲘⲘⲀⲨⲀⲦϤ ⲚⲈⲘ ϮⲤϨⲒⲘⲒ ⲐⲎ ⲈⲚⲀⲤⲬⲎ ϦⲈⲚⲐⲘⲎϮ
10 இயேசு நிமிர்ந்து அவளைப் பார்த்து, “மகளே, அவர்கள் எங்கே? ஒருவனும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கவில்லையோ?” என்று கேட்டார்.
ⲓ̅ⲀⲒⲎⲤⲞⲨⲤ ϤⲀⲒ ⲚⲦⲈϤⲀⲪⲈ ⲠⲈϪⲀϤ ⲚⲀⲤ ϪⲈ ⲰϮⲤϨⲒⲘⲒ ⲀⲨⲐⲰⲚ ⲚⲎ ⲈⲦⲀⲨϮϨⲀⲠ ⲈⲢⲞ ⲘⲘⲞⲚ ⲞⲨⲀⲒ ⲈϤϮϨⲀⲠ ⲈⲢⲞ
11 அதற்கு அவள், “இல்லை ஆண்டவரே” என்றாள். அப்பொழுது இயேசு அவளிடம், “நானும் உன்னை குற்றவாளியாகத் தீர்க்கமாட்டேன். இப்பொழுது நீ போகலாம், இனிப் பாவம் செய்யாதே” என்றார்.
ⲓ̅ⲁ̅ⲠⲈϪⲀⲤ ⲚⲀϤ ϪⲈ ϮⲚⲀⲨ ⲀⲚ ⲈⲞⲨⲀⲒ ⲠⲀϬⲞⲒⲤ ⲠⲈϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲀⲤ ϪⲈ ⲞⲨⲆⲈ ⲀⲚⲞⲔ ⲈⲒϮϨⲀⲠ ⲈⲢⲞ ⲘⲀϢⲈ ⲚⲈⲒⲤϪⲈⲚ ϮⲚⲞⲨ ⲘⲠⲈⲢⲦⲀⲤⲐⲞ ⲈⲈⲢⲚⲞⲂⲒ ϪⲈ
12 மீண்டும் இயேசு மக்களுடன் பேசத்தொடங்கி, “நானே உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் ஒருபோதும் இருளில் நடக்கமாட்டான். ஜீவ வெளிச்சம் அவர்களுடன் இருக்கும்” என்றார்.
ⲓ̅ⲃ̅ⲠⲀⲖⲒⲚ ⲞⲚ ⲀϤⲤⲀϪⲒ ⲚⲈⲘⲰⲞⲨ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲠⲈ ⲪⲞⲨⲰⲒⲚⲒ ⲘⲠⲒⲔⲞⲤⲘⲞⲤ ⲪⲎ ⲈⲐⲚⲀⲘⲞϢⲒ ⲚⲤⲰⲒ ⲚⲚⲈϤⲘⲞϢⲒ ϦⲈⲚⲠⲒⲬⲀⲔⲒ ⲀⲖⲖⲀ ⲈϤⲈϬⲒ ⲘⲪⲞⲨⲰⲒⲚⲒ ⲚⲦⲈⲠⲰⲚϦ.
13 அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “இதோ பார், நீயே உன்னைக் குறித்த சாட்சி கொடுக்கிறாயே; உனது சாட்சி உண்மையல்ல” என்றார்கள்.
ⲓ̅ⲅ̅ⲠⲈϪⲈ ⲚⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲞⲨⲚ ⲚⲀϤ ϪⲈ ⲚⲐⲞⲔ ⲘⲘⲀⲨⲀⲦⲔ ⲈⲦⲈⲢⲘⲈⲐⲢⲈ ϦⲀⲢⲞⲔ ⲦⲈⲔⲘⲈⲦⲘⲈⲐⲢⲈ ⲞⲨⲘⲎⲒ ⲀⲚ ⲦⲈ.
14 இயேசு அதற்குப் பதிலாக, “நானே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தாலும், எனது சாட்சி உண்மையானதே. ஏனெனில் நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், நான் எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் நீங்களோ நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறியாதிருக்கிறீர்கள்.
ⲓ̅ⲇ̅ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲔⲀⲚ ⲈϢⲰⲠ ⲀⲚⲞⲔ ⲀⲒϢⲀⲚⲈⲢⲘⲈⲐⲢⲈ ϦⲀⲢⲞⲒ ⲞⲨⲘⲎⲒ ⲦⲈ ⲦⲀⲘⲈⲦⲘⲈⲐⲢⲈ ϪⲈ ϮⲈⲘⲒ ϪⲈ ⲈⲦⲀⲒⲒ ⲈⲂⲞⲖ ⲐⲰⲚ ⲞⲨⲞϨ ⲀⲒⲚⲀϢⲈ ⲚⲎⲒ ⲈⲐⲰⲚ ⲚⲐⲰⲦⲈⲚ ⲆⲈ ⲦⲈⲦⲈⲚⲈⲘⲒ ⲀⲚ ϪⲈ ⲈⲦⲀⲒⲒ ⲈⲂⲞⲖ ⲐⲰⲚ ⲒⲈ ⲀⲒⲚⲀϢⲈ ⲚⲎⲒ ⲈⲐⲰⲚ.
15 நீங்கள் மனிதருக்கேற்றபடி தீர்ப்புச் செய்கிறீர்கள்; நானோ ஒருவருக்கும் தீர்ப்புச் செய்வதில்லை.
ⲓ̅ⲉ̅ⲚⲐⲰⲦⲈⲚ ⲀⲢⲈⲦⲈⲚϮϨⲀⲠ ⲔⲀⲦⲀ ⲤⲀⲢⲜ ⲀⲚⲞⲔ ⲆⲈ ϮϮϨⲀⲠ ⲈϨⲖⲒ ⲀⲚ.
16 நான் தீர்ப்பு செய்தாலும், எனது தீர்ப்பு உண்மையானதாகவே இருக்கும். ஏனெனில் நான் தனியாக தீர்ப்பு கொடுப்பதில்லை. என்னை அனுப்பிய என் பிதாவும் என்னுடனேகூட இருக்கிறார்.
ⲓ̅ⲋ̅ⲞⲨⲞϨ ⲈϢⲰⲠ ⲀⲚⲞⲔ ⲀⲒϢⲀⲚϮϨⲀⲠ ⲠⲀϨⲀⲠ ⲀⲚⲞⲔ ⲞⲨⲘⲎⲒ ⲠⲈ ϪⲈ ⲚϮⲬⲎ ⲘⲘⲀⲨⲀⲦ ⲀⲚ ⲀⲖⲖⲀ ⲀⲚⲞⲔ ⲚⲈⲘ ⲪⲎ ⲈⲦⲀϤⲦⲀⲞⲨⲞⲒ ⲪⲒⲰⲦ.
17 இரண்டு பேருடைய சாட்சி உண்மையானது என்று உங்கள் சொந்த சட்டத்திலே எழுதியிருக்கிறது.
ⲓ̅ⲍ̅ⲞⲨⲞϨ ⲤⲤϦⲎⲞⲨⲦ ⲆⲈ ⲞⲚ ϦⲈⲚⲠⲈⲦⲈⲚⲚⲞⲘⲞⲤ ϪⲈ ⲐⲘⲈⲦⲘⲈⲐⲢⲈ ⲚⲢⲰⲘⲒ ⲂⲞⲨⲐⲘⲎⲒ ⲦⲈ.
18 நான் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறேன்; என்னை அனுப்பிய பிதாவே எனது இரண்டாவது சாட்சியாயிருக்கிறார்” என்றார்.
ⲓ̅ⲏ̅ⲀⲚⲞⲔ ϮⲈⲢⲘⲈⲐⲢⲈ ϦⲀⲢⲞⲒ ⲞⲨⲞϨ ϤⲈⲢⲘⲈⲐⲢⲈ ϦⲀⲢⲞⲒ ⲚϪⲈⲪⲒⲰⲦ ⲈⲦⲀϤⲦⲀⲞⲨⲞⲒ.
19 அப்பொழுது அவர்கள் அவரிடம், “உமது பிதா எங்கே?” என்றார்கள். அதற்கு இயேசு, “என்னையோ, என் பிதாவையோ நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் என்னை அறிந்தால், என் பிதாவையுங்கூட அறிந்திருப்பீர்கள்” என்றார்.
ⲓ̅ⲑ̅ⲚⲀⲨϪⲰ ⲞⲨⲚ ⲘⲘⲞⲤ ⲠⲈ ϪⲈ ⲀϤⲐⲰⲚ ⲠⲈⲔⲒⲰⲦ ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ϪⲈ ⲞⲨⲆⲈ ⲀⲚⲞⲔ ⲚⲦⲈⲦⲈⲚⲤⲰⲞⲨⲚ ⲘⲘⲞⲒ ⲀⲚ ⲞⲨⲆⲈ ⲠⲀⲔⲈⲒⲰⲦ ⲈⲚⲀⲢⲈⲦⲈⲚⲤⲰⲞⲨⲚ ⲘⲘⲞⲒ ⲚⲀⲢⲈⲦⲈⲚⲚⲀⲤⲞⲨⲈⲚ ⲠⲀⲔⲈⲒⲰⲦ.
20 இயேசு ஆலயப் பகுதியில் போதிக்கும்போது, காணிக்கை போடுகிற இடத்தின் அருகே நின்று, இந்த வார்த்தைகளைப் பேசினார். ஆனால் ஒருவனும் அவரைக் கைதுசெய்யவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.
ⲕ̅ⲚⲀⲒⲤⲀϪⲒ ⲀϤϪⲞⲦⲞⲨ ϦⲈⲚⲠⲒⲄⲀⲌⲞⲪⲨⲖⲀⲔⲒⲞⲚ ⲈϤϮⲤⲂⲰ ϦⲈⲚⲠⲒⲈⲢⲪⲈⲒ ⲞⲨⲞϨ ⲘⲠⲈ ϨⲖⲒ ϢⲀⲘⲞⲚⲒ ⲘⲘⲞϤ ϪⲈ ⲚⲈⲘⲠⲀⲦⲈⲤⲒ ⲚϪⲈⲦⲈϤⲞⲨⲚⲞⲨ.
21 மீண்டும் இயேசு அவர்களிடம், “நான் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் பாவத்திலேயே சாவீர்கள். நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது” என்றார்.
ⲕ̅ⲁ̅ⲠⲀⲖⲒⲚ ⲞⲚ ⲠⲈϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲀⲚⲞⲔ ϮⲚⲀϢⲈ ⲚⲎⲒ ⲞⲨⲞϨ ⲦⲈⲦⲈⲚⲚⲀⲔⲰϮ ⲚⲤⲰⲒ ⲞⲨⲞϨ ⲦⲈⲦⲈⲚⲚⲀϪⲈⲘⲦ ⲀⲚ ⲞⲨⲞϨ ⲦⲈⲦⲈⲚⲚⲀⲘⲞⲨ ϦⲈⲚⲚⲈⲦⲈⲚⲚⲞⲂⲒ ⲞⲨⲞϨ ⲠⲒⲘⲀ ⲀⲚⲞⲔ ⲈϮⲚⲀϢⲈ ⲚⲎⲒ ⲈⲢⲞϤ ⲘⲘⲞⲚ ϢϪⲞⲘ ⲘⲘⲰⲦⲈⲚ ⲈⲒ ⲈⲢⲞϤ.
22 அப்பொழுது யூதர்கள், “இவன் தற்கொலை செய்துகொள்ள போகிறானா? அதனால்தான், ‘நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று சொல்கிறானோ!” என்று கேட்டார்கள்.
ⲕ̅ⲃ̅ⲚⲀⲨϪⲰ ⲞⲨⲚ ⲘⲘⲞⲤ ⲠⲈ ⲚϪⲈⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ ϪⲈ ⲘⲎ ⲀϤⲚⲀϦⲞⲐⲂⲈϤ ⲘⲘⲀⲨⲀⲦϤ ϪⲈ ϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲠⲒⲘⲀ ⲀⲚⲞⲔ ⲈϮⲚⲀϢⲈ ⲚⲎⲒ ⲈⲢⲞϤ ⲚⲐⲰⲦⲈⲚ ⲦⲈⲦⲈⲚⲚⲀϢⲒ ⲈⲢⲞϤ ⲀⲚ.
23 இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நீங்கள் கீழேயிருந்து வந்தவர்கள்; நான் மேலேயிருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள்; நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவன் அல்ல.
ⲕ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲚⲀϤϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲞⲨ ⲠⲈ ϪⲈ ⲚⲐⲰⲦⲈⲚ ⲚⲐⲰⲦⲈⲚ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲈⲦⲈⲚϦⲢⲎⲒ ⲀⲚⲞⲔ ⲆⲈ ⲀⲚⲞⲔ ⲞⲨⲈⲂⲞⲖ ⲘⲠϢⲰⲒ ⲚⲐⲰⲦⲈⲚ ⲚⲐⲰⲦⲈⲚ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲒⲔⲞⲤⲘⲞⲤ ⲀⲚⲞⲔ ⲆⲈ ⲀⲚⲞⲔ ⲞⲨⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲀⲒⲔⲞⲤⲘⲞⲤ ⲀⲚ.
24 நீங்கள் உங்கள் பாவங்களிலேயே சாவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள்” என்றார்.
ⲕ̅ⲇ̅ⲀⲒϪⲞⲤ ⲞⲨⲚ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲦⲈⲦⲈⲚⲚⲀⲘⲞⲨ ϦⲈⲚⲚⲈⲦⲈⲚⲚⲞⲂⲒ ⲈϢⲰⲠ ⲄⲀⲢ ⲀⲢⲈⲦⲈⲚϢⲦⲈⲘⲚⲀϨϮ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲠⲈ ⲦⲈⲦⲈⲚⲚⲀⲘⲞⲨ ⲚϦⲢⲎⲒ ϦⲈⲚⲚⲈⲦⲈⲚⲚⲞⲂⲒ.
25 அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நீர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு பதிலாக, “அதைத்தான் நான் தொடக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொல்கிறேனே” என்று இயேசு சொல்லி,
ⲕ̅ⲉ̅ⲚⲀⲨϪⲰ ⲞⲨⲚ ⲘⲘⲞⲤ ⲚⲀϤ ⲠⲈ ϪⲈ ⲚⲐⲞⲔ ⲚⲒⲘ ⲠⲈϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲚϮⲀⲢⲬⲎ ⲀⲒⲈⲢ ⲠⲔⲈⲤⲀϪⲒ ⲚⲈⲘⲰⲦⲈⲚ
26 “உங்களைப் பற்றிச் சொல்லவும், நியாயத்தீர்ப்பு அளிக்கவும் என்னிடம் அநேக காரியங்கள் இருக்கிறது. ஆனால் என்னை அனுப்பியவரிடமிருந்து கேட்டதை மட்டும் நான் உலகத்திற்கு அறிவிக்கிறேன். ஏனென்றால் என்னை அனுப்பியவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்” என்றார்.
ⲕ̅ⲋ̅ⲞⲨⲞⲚϮ ⲞⲨⲘⲎϢ ⲈϪⲞⲦⲞⲨ ⲈⲐⲂⲈ ⲐⲎⲚⲞⲨ ⲞⲨⲞϨ ⲈϮϨⲀⲠ ⲀⲖⲖⲀ ⲪⲎ ⲈⲦⲀϤⲦⲀⲞⲨⲞⲒ ⲞⲨⲐⲘⲎⲒ ⲠⲈ ⲞⲨⲞϨ ⲀⲚⲞⲔ ϨⲰ ⲚⲎ ⲈⲦⲀⲒⲤⲞⲐⲘⲞⲨ ⲚⲦⲞⲦϤ ⲚⲀⲒ ϮⲤⲀϪⲒ ⲘⲘⲰⲞⲨ ϦⲈⲚⲠⲒⲔⲞⲤⲘⲞⲤ.
27 இயேசு பிதாவாகிய இறைவனைக் குறித்தே பேசுகிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
ⲕ̅ⲍ̅ⲘⲠⲞⲨⲈⲘⲒ ϪⲈ ⲚⲀϤⲤⲀϪⲒ ⲚⲈⲘⲰⲞⲨ ⲈⲐⲂⲈ ⲪⲒⲰⲦ.
28 எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் மானிடமகனாகிய என்னை உயர்த்திய பின்பு, நானே அவர் என்றும், எனது சுயமாக நான் ஒன்றும் செய்கிறதில்லையென்றும், பிதா எனக்கு போதித்தபடியே நான் இவற்றைச் சொல்கிறேன் என்றும் அறிந்துகொள்வீர்கள்.
ⲕ̅ⲏ̅ⲠⲈϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲈϢⲰⲠ ⲀⲢⲈⲦⲈⲚϢⲀⲚϬ ⲈⲤ ⲠϢⲎⲢⲒ ⲘⲪⲢⲰⲘⲒ ⲦⲞⲦⲈ ⲈⲢⲈⲦⲈⲚⲈⲘⲒ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲠⲈ ⲞⲨⲞϨ ϮⲈⲢ ϨⲖⲒ ⲀⲚ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲞⲦ ⲘⲘⲀⲨⲀⲦ ⲀⲖⲖⲀ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲈⲦⲀϤⲦⲤⲀⲂⲞⲒ ⲚϪⲈⲠⲀⲒⲰⲦ ⲚⲀⲒ ϮⲤⲀϪⲒ ⲘⲘⲰⲞⲨ.
29 என்னை அனுப்பிய பிதா என்னுடனே இருக்கிறார்; அவர் என்னைத் தனிமையாய் விட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பிரியமானதையே நான் எப்பொழுதும் செய்கிறேன்” என்றார்.
ⲕ̅ⲑ̅ⲞⲨⲞϨ ⲪⲎ ⲈⲦⲀϤⲦⲀⲞⲨⲞⲒ ϤⲬⲎ ⲚⲈⲘⲎⲒ ⲞⲨⲞϨ ⲘⲠⲈϤⲬⲀⲦ ⲘⲘⲀⲨⲀⲦ ϪⲈ ⲀⲚⲞⲔ ϮⲒⲢⲒ ⲚⲚⲎ ⲈⲐⲢⲀⲚⲀϤ ⲚⲤⲎⲞⲨ ⲚⲒⲂⲈⲚ.
30 அவர் இந்தக் காரியங்களைக் குறித்துச் சொன்னபோது, பலர் அவரில் விசுவாசம் வைத்தார்கள்.
ⲗ̅ⲚⲀⲒ ⲈϤϪⲰ ⲘⲘⲰⲞⲨ ϨⲀⲚⲘⲎϢ ⲀⲨⲚⲀϨϮ ⲈⲢⲞϤ.
31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களிடம், “நீங்கள் எனது உபதேசத்தில் தொடர்ந்து நிலைத்திருந்தால், நீங்கள் உண்மையாகவே எனது சீடர்களாய் இருப்பீர்கள்.
ⲗ̅ⲁ̅ⲚⲀϤϪⲰ ⲞⲨⲚ ⲘⲘⲞⲤ ⲠⲈ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ ⲈⲦⲀⲨⲚⲀϨϮ ⲈⲢⲞϤ ϪⲈ ⲈϢⲰⲠ ⲚⲐⲰⲦⲈⲚ ⲀⲢⲈⲦⲈⲚϢⲀⲚⲞϨⲒ ϦⲈⲚⲠⲀⲤⲀϪⲒ ⲦⲀⲪⲘⲎⲒ ⲚⲐⲰⲦⲈⲚ ⲚⲀⲘⲀⲐⲎⲦⲎⲤ
32 அப்பொழுது நீங்கள் சத்தியத்தை அறிந்துகொள்வீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார்.
ⲗ̅ⲃ̅ⲞⲨⲞϨ ⲈⲢⲈⲦⲈⲚⲈⲤⲞⲨⲈⲚ ⲐⲘⲎⲒ ⲞⲨⲞϨ ⲈⲢⲈ ⲐⲘⲎⲒ ⲈⲢ ⲐⲎⲚⲞⲨ ⲚⲢⲈⲘϨⲈ.
33 அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம். நாங்கள் ஒருபோதும் ஒருவருக்கும் அடிமைகளாய் இருந்ததில்லை. அப்படியிருக்க நாங்கள் விடுதலையாவோம் என்று நீர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள்.
ⲗ̅ⲅ̅ⲀⲨⲈⲢⲞⲨⲰ ⲈⲨϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲀϤ ϪⲈ ⲀⲚⲞⲚ ⲚⲀ ⲠⲤⲠⲈⲢⲘⲀ ⲚⲀⲂⲢⲀⲀⲘ ⲞⲨⲞϨ ⲘⲠⲈⲚⲈⲢⲂⲰⲔ ⲚϨⲖⲒ ⲈⲚⲈϨ ⲠⲰⲤ ⲚⲐⲞⲔ ⲔϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲈⲢⲈⲦⲈⲚⲈⲢⲢⲈⲘϨⲈ.
34 அதற்கு இயேசு பதிலாக, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாவம் செய்கிற ஒவ்வொருவரும் பாவத்திற்கு அடிமையாய் இருக்கிறார்கள்.
ⲗ̅ⲇ̅ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚⲰⲞⲨ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ϪⲈ ⲀⲘⲎⲚ ⲀⲘⲎⲚ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲒⲢⲒ ⲘⲪⲚⲞⲂⲒ ⲞⲨⲂⲰⲔ ⲚⲦⲈⲪⲚⲞⲂⲒ ⲠⲈ.
35 ஒரு அடிமைக்குக் குடும்பத்தில் நிரந்தர இடம் இருப்பதில்லை. ஆனால் மகனோ குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாயிருக்கிறான். (aiōn )
ⲗ̅ⲉ̅ⲠⲒⲂⲰⲔ ⲆⲈ ⲘⲠⲀϤⲞϨⲒ ϦⲈⲚⲠⲒⲎⲒ ϢⲀ ⲈⲚⲈϨ ⲠⲒϢⲎⲢⲒ ⲆⲈ ⲚⲐⲞϤ ϢⲀϤⲞϨⲒ ϢⲀ ⲈⲚⲈϨ. (aiōn )
36 ஆகவே இறைவனின் மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையாகவே விடுதலை பெறுவீர்கள்.
ⲗ̅ⲋ̅ⲈϢⲰⲠ ⲞⲨⲚ ⲀⲢⲈϢⲀⲚ ⲠⲒϢⲎⲢⲒ ⲈⲢ ⲐⲎⲚⲞⲨ ⲚⲢⲈⲘϨⲈ ⲞⲚⲦⲰⲤ ⲦⲈⲦⲈⲚⲚⲀⲈⲢⲢⲈⲘϨⲈ.
37 நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் என்னைக் கொல்வதற்கு ஆயத்தமாய் இருக்கிறீர்கள். ஏனெனில் எனது வார்த்தைக்கு உங்கள் உள்ளத்தில் இடமில்லை.
ⲗ̅ⲍ̅ϮⲈⲘⲒ ϪⲈ ⲚⲐⲰⲦⲈⲚ ⲚⲀ ⲠϪⲢⲞϪ ⲚⲀⲂⲢⲀⲀⲘ ⲀⲖⲖⲀ ⲦⲈⲦⲈⲚⲔⲰϮ ⲚⲤⲰⲒ ⲈϦⲞⲐⲂⲎⲦ ϪⲈ ⲠⲀⲤⲀϪⲒ ϢⲞⲠ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ ⲀⲚ.
38 எனது பிதாவின் முன்னிலையில் கண்டவற்றையே நான் அறிவிக்கிறேன். ஆனால் நீங்களோ உங்கள் தகப்பனிடமிருந்து கேள்விப்பட்டதையே செய்கிறீர்கள்” என்றார்.
ⲗ̅ⲏ̅ⲚⲎ ⲞⲨⲚ ⲀⲚⲞⲔ ⲈⲦⲀⲒⲚⲀⲨ ⲈⲢⲰⲞⲨ ⲚⲦⲞⲦϤ ⲘⲠⲀⲒⲰⲦ ⲚⲀⲒ ϮⲤⲀϪⲒ ⲘⲘⲰⲞⲨ ⲞⲨⲞϨ ⲚⲐⲰⲦⲈⲚ ⲚⲎ ⲈⲦⲀⲢⲈⲦⲈⲚⲤⲞⲐⲘⲞⲨ ⲚⲦⲞⲦϤ ⲘⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ⲦⲈⲦⲈⲚⲒⲢⲒ ⲘⲘⲰⲞⲨ.
39 அதற்கு அவர்கள், “ஆபிரகாமே எங்கள் தந்தை” என்றார்கள். இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளானால் ஆபிரகாம் செய்தவற்றையே நீங்களும் செய்வீர்கள்.
ⲗ̅ⲑ̅ⲀⲨⲈⲢⲞⲨⲰ ⲠⲈϪⲰⲞⲨ ⲚⲀϤ ϪⲈ ⲠⲈⲚⲒⲰⲦ ⲀⲂⲢⲀⲀⲘ ⲠⲈϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲈⲚⲈ ⲚⲐⲰⲦⲈⲚ ⲚⲈⲚϢⲎⲢⲒ ⲚⲀⲂⲢⲀⲀⲘ ⲠⲈ ⲚⲒϨⲂⲎⲞⲨⲒ ⲚⲦⲈⲀⲂⲢⲀⲀⲘ ⲚⲀⲢⲈⲦⲈⲚⲚⲀⲀⲒⲦⲞⲨ.
40 ஆனால் நீங்களோ, இறைவனிடம் கேட்டறிந்த சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனான என்னைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ஆபிரகாம் இப்படியான காரியங்களைச் செய்யவில்லையே.
ⲙ̅ϮⲚⲞⲨ ⲆⲈ ⲦⲈⲦⲈⲚⲔⲰϮ ⲚⲤⲰⲒ ⲈϦⲞⲐⲂⲎ ⲦⲞⲨⲢⲰⲘⲒ ⲈϤϪⲰ ⲚⲐⲘⲎⲒ ⲚⲰⲦⲈⲚ ⲐⲎ ⲈⲦⲀⲒⲤⲞⲐⲘⲈⲤ ⲚⲦⲞⲦϤ ⲘⲪⲚⲞⲨϮ ⲪⲀⲒ ⲘⲠⲈ ⲀⲂⲢⲀⲀⲘ ⲀⲒϤ.
41 நீங்கள் உங்கள் சொந்தத் தகப்பன் செய்ததையே செய்கிறீர்கள்” என்றார். அதற்கு அவர்கள் அவரிடம், “நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை. இறைவன் ஒருவரே எங்களுக்கும் பிதா” என்றார்கள்.
ⲙ̅ⲁ̅ⲚⲐⲰⲦⲈⲚ ⲦⲈⲦⲈⲚⲒⲢⲒ ⲚⲚⲒϨⲂⲎⲞⲨⲒ ⲚⲦⲈⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ⲠⲈϪⲰⲞⲨ ⲚⲀϤ ϪⲈ ⲀⲚⲞⲚ ϨⲀⲚϪⲪⲞ ⲀⲚ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲦⲠⲞⲢⲚⲒⲀ ⲞⲨⲒⲰⲦ ⲘⲘⲀⲨⲀⲦϤ ⲈⲦⲈⲚⲦⲀⲚ ⲪⲚⲞⲨϮ.
42 அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவன் உங்கள் பிதாவாக இருந்தால், நீங்கள் என்னிலும் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் இப்பொழுது இங்கே இருக்கின்ற நான் இறைவனிடமிருந்தே வந்தேன். நான் எனது சுயவிருப்பத்தின்படி வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.
ⲙ̅ⲃ̅ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ϪⲈ ⲈⲚⲈ ⲪⲚⲞⲨϮ ⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ⲠⲈ ⲚⲀⲢⲈⲦⲈⲚⲚⲀⲘⲈⲚⲢⲒⲦ ⲠⲈ ⲀⲚⲞⲔ ⲄⲀⲢ ⲈⲦⲀⲒⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲪⲚⲞⲨϮ ⲞⲨⲞϨ ⲀⲒⲒ ⲞⲨ ⲄⲀⲢ ⲚⲈⲦⲀⲒⲒ ⲀⲚ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲞⲦ ⲘⲘⲀⲨⲀⲦ ⲀⲖⲖⲀ ⲚⲐⲞϤ ⲠⲈⲦⲀϤⲦⲀⲞⲨⲞⲒ.
43 நான் சொல்வது ஏன் உங்களுக்குத் தெளிவாய் இல்லை? நான் சொல்வதைக் கேட்க உங்களுக்கு மனதில்லாமல் இருக்கிறதினால்தானே.
ⲙ̅ⲅ̅ⲈⲐⲂⲈⲞⲨ ⲦⲀϪⲒⲚⲤⲀϪⲒ ⲦⲈⲦⲈⲚⲤⲰⲞⲨⲚ ⲘⲘⲞⲤ ⲀⲚ ϪⲈ ⲘⲘⲞⲚ ϢϪⲞⲘ ⲘⲘⲰⲦⲈⲚ ⲈⲤⲰⲦⲈⲘ ⲈⲠⲀⲤⲀϪⲒ.
44 நீங்கள் உங்கள் தகப்பனான சாத்தானுக்கு உரியவர்கள். உங்கள் தகப்பனின் ஆசைகளைச் செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள். அவன் தொடக்கத்திலிருந்தே கொலைகாரனாய் இருக்கிறான். அவனிடம் சத்தியமில்லை. அதனால் அவன் சத்தியத்தில் நிலைத்திருப்பதில்லை. அவன் பொய் பேசும்போது தன் சொந்த மொழியையே பேசுகிறான். ஏனெனில் அவன் ஒரு பொய்யன், பொய்களின் தகப்பன்.
ⲙ̅ⲇ̅ⲚⲐⲰⲦⲈⲚ ⲚⲐⲰⲦⲈⲚ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ⲠⲒⲆⲒⲀⲂⲞⲖⲞⲤ ⲞⲨⲞϨ ⲚⲒⲈⲠⲒⲐⲨⲘⲒⲀ ⲚⲦⲈⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ⲦⲈⲦⲈⲚⲞⲨⲰϢ ⲈⲀⲒⲦⲞⲨ ⲪⲎ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲚⲈⲞⲨⲢⲈϤϦⲀⲦⲈⲂ ⲢⲰⲘⲒ ⲠⲈ ⲒⲤϪⲈⲚ ϨⲎ ⲞⲨⲞϨ ⲘⲠⲈϤⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ϦⲈⲚⲐⲘⲎⲒ ⲈⲚⲈϨ ϪⲈ ⲘⲘⲞⲚ ⲘⲈⲐⲘⲎⲒ ϢⲞⲠ ⲚϦⲎⲦϤ ⲈϢⲰⲠ ⲀϤϢⲀⲚⲤⲀϪⲒ ⲚϪⲈⲠⲒⲘⲈⲐⲚⲞⲨϪ ϢⲀϤⲤⲀϪⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲈⲦⲈⲚⲞⲨϤ ϪⲈ ⲞⲨⲤⲀⲘⲈⲐⲚⲞⲨϪ ⲠⲈ ⲚⲈⲘ ⲠⲈϤⲔⲈⲒⲰⲦ.
45 இருந்தும் நானோ உங்களுக்கு சத்தியத்தை சொல்கிறபடியால், நீங்கள் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்.
ⲙ̅ⲉ̅ⲀⲚⲞⲔ ⲆⲈ ϮϪⲰ ⲚⲐⲘⲎⲒ ⲚⲰⲦⲈⲚ ⲦⲈⲦⲈⲚⲚⲀϨϮ ⲈⲢⲞⲒ ⲀⲚ.
46 நான் பாவம் செய்தேன் என்று என்னைக் குற்றம் சாட்டி நிரூபிக்க உங்களில் எவனால் முடியும்? நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொல்லியும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்?
ⲙ̅ⲋ̅ⲚⲒⲘ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲐⲎⲚⲞⲨ ⲈⲐⲚⲀⲤⲞϨⲒ ⲘⲘⲞⲒ ⲈⲐⲂⲈ ⲞⲨⲚⲞⲂⲒ ⲒⲤϪⲈ ⲐⲘⲎⲒ ⲦⲈϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ⲒⲈ ⲈⲐⲂⲈⲞⲨ ⲚⲐⲰⲦⲈⲚ ⲦⲈⲦⲈⲚⲚⲀϨϮ ⲈⲢⲞⲒ ⲀⲚ.
47 யார் இறைவனுக்குரியவராய் இருக்கிறவர்கள், அவன் இறைவன் சொல்லும் வார்த்தையைக் கேட்கிறான். நீங்களோ இறைவனுக்குரியவர்கள் அல்லாதபடியினாலே, இறைவனுடைய வார்த்தையைக் கேளாமல் இருக்கிறீர்கள்” என்றார்.
ⲙ̅ⲍ̅ⲠⲒⲈⲂⲞⲖ ⲘⲪⲚⲞⲨϮ ⲚⲒⲤⲀϪⲒ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ϢⲀϤⲤⲰⲦⲈⲘ ⲈⲢⲰⲞⲨ ⲈⲐⲂⲈⲪⲀⲒ ⲚⲐⲰⲦⲈⲚ ⲦⲈⲦⲈⲚⲤⲰⲦⲈⲘ ⲀⲚ ϪⲈ ⲚⲐⲰⲦⲈⲚ ⲈⲂⲞⲖ ⲘⲪⲚⲞⲨϮ ⲀⲚ.
48 அப்பொழுது யூதத்தலைவர்கள் அவரிடம், “நீ ஒரு சமாரியன். நீ பிசாசு பிடித்தவன் என்று நாங்கள் சொன்னது சரியல்லவா?” என்றார்கள்.
ⲙ̅ⲏ̅ⲀⲨⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲰⲞⲨ ⲚⲀϤ ϪⲈ ⲔⲀⲖⲰⲤ ⲀⲚⲞⲚ ⲀⲚϪⲞⲤ ϪⲈ ⲚⲐⲞⲔ ⲞⲨⲤⲀⲘⲀⲢⲒⲦⲎⲤ ⲞⲨⲞϨ ⲞⲨⲞⲚ ⲞⲨⲆⲈⲘⲰⲚ ⲚⲈⲘⲀⲔ.
49 அதற்கு இயேசு, “நான் பிசாசு பிடித்தவன் அல்ல. நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன். நீங்களோ என்னை அவமதிக்கிறீர்கள்.
ⲙ̅ⲑ̅ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲞⲨⲞϨ ⲠⲈϪⲀϤ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲘⲘⲞⲚ ⲆⲈⲘⲰⲚ ⲚⲈⲘⲎⲒ ⲀⲖⲖⲀ ϮⲈⲢⲦⲒⲘⲀⲚ ⲘⲠⲀⲒⲰⲦ ⲞⲨⲞϨ ⲚⲐⲰⲦⲈⲚ ⲦⲈⲦⲈⲚϢⲰϢ ⲘⲘⲞⲒ.
50 நான் எனது சுய மகிமையைத் தேடவில்லை; ஆனால் எனக்காக மகிமையைத் தேடுகிறவரும் நியாயந்தீர்க்கிறவரும் ஒருவர் இருக்கிறாரே.
ⲛ̅ⲀⲚⲞⲔ ⲆⲈ ⲚⲀⲒⲔⲰϮ ⲚⲤⲀⲠⲀⲰⲞⲨ ⲘⲘⲀⲨⲀⲦ ⲀⲚ ϤϢⲞⲠ ⲚϪⲈⲪⲎ ⲈⲦⲔⲰϮ ⲞⲨⲞϨ ⲈⲦϮϨⲀⲠ.
51 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது எனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் மரணத்தைக் காணமாட்டார்கள்” என்றார். (aiōn )
ⲛ̅ⲁ̅ⲀⲘⲎⲚ ⲀⲘⲎⲚ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲈϢⲰⲠ ⲀⲢⲈϢⲀⲚ ⲞⲨⲀⲒ ⲀⲢⲈϨ ⲈⲠⲀⲤⲀϪⲒ ⲚⲚⲈϤⲚⲀⲨ ⲈⲪⲘⲞⲨ ϢⲀ ⲈⲚⲈϨ. (aiōn )
52 அப்பொழுது யூதத்தலைவர்கள், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்று இப்பொழுது நாங்கள் நன்றாய் தெரிந்துகொண்டோம். ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் நீயோ, யாராவது உனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் எவ்விதத்திலும் மரணத்தை அனுபவிப்பதில்லை என்று சொல்கிறாய். (aiōn )
ⲛ̅ⲃ̅ⲠⲈϪⲈ ⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ ϪⲈ ϮⲚⲞⲨ ⲀⲚⲈⲘⲒ ϪⲈ ⲞⲨⲞⲚ ⲞⲨⲆⲈⲘⲰⲚ ⲚⲈⲘⲀⲔ ⲀⲂⲢⲀⲀⲘ ⲀϤⲘⲞⲨ ⲚⲈⲘ ⲚⲒⲔⲈⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲞⲨⲞϨ ⲚⲐⲞⲔ ⲔϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲪⲎ ⲈⲐⲚⲀⲀⲢⲈϨ ⲈⲠⲀⲤⲀϪⲒ ⲚⲚⲈϤϪⲈⲘϮⲠⲒ ⲘⲪⲘⲞⲨ ϢⲀ ⲈⲚⲈϨ. (aiōn )
53 நீ எங்கள் தகப்பன் ஆபிரகாமைப் பார்க்கிலும் பெரியவனோ? அவர் மரித்தார், அப்படியே இறைவாக்கினரும் மரித்தார்கள். நீ உன்னை யார் என்று எண்ணுகிறாய்?” என்று கேட்டார்கள்.
ⲛ̅ⲅ̅ⲘⲎ ⲚⲐⲞⲔ ⲞⲨⲚⲒϢϮ ⲚⲐⲞⲔ ⲈⲠⲈⲚⲒⲰⲦ ⲀⲂⲢⲀⲀⲘ ⲪⲎ ⲈⲦⲀϤⲘⲞⲨ ⲞⲨⲞϨ ⲚⲒⲔⲈⲠⲢⲞⲪⲎ ⲦⲎⲤ ⲀⲨⲘⲞⲨ ⲀⲔⲒⲢⲒ ⲘⲘⲞⲔ ⲚⲚⲒⲘ.
54 இயேசு அதற்கு மறுமொழியாக, “நானே என்னை மகிமைப்படுத்தினால், எனது மகிமை அர்த்தமற்றது. நீங்கள் உங்கள் இறைவன் என்று உரிமையோடு சொல்கிற, எனது பிதாவே என்னை மகிமைப்படுத்துகிறவர்.
ⲛ̅ⲇ̅ⲀϤⲈⲢⲞⲨⲰ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲈϢⲰⲠ ⲀⲚⲞⲔ ⲀⲒϢⲀⲚϮⲰⲞⲨ ⲚⲎⲒ ⲘⲘⲀⲨⲀⲦ ⲠⲀⲰⲞⲨ ϨⲖⲒ ⲠⲈ ϤϢⲞⲠ ⲚϪⲈⲠⲀⲒⲰⲦ ⲈⲐⲚⲀϮⲰⲞⲨ ⲚⲎⲒ ⲪⲎ ⲚⲐⲰⲦⲈⲚ ⲈⲦⲈⲚϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲠⲈⲚⲚⲞⲨϮ ⲠⲈ
55 நீங்கள் அவரை அறியாதிருந்தாலும், நான் அவரை அறிந்திருக்கிறேன். நான் அவரை அறியவில்லை என்று சொன்னால், நானும் உங்களைப்போலவே ஒரு பொய்யனாய் இருப்பேன். ஆனால் நானோ அவரை அறிந்திருக்கிறேன். அவரின் வார்த்தையைக் கைக்கொள்கிறேன்.
ⲛ̅ⲉ̅ⲞⲨⲞϨ ⲘⲠⲈⲦⲈⲚⲤⲞⲨⲰⲚϤ ⲀⲚⲞⲔ ⲆⲈ ϮⲤⲰⲞⲨⲚ ⲘⲘⲞϤ ⲞⲨⲞϨ ⲈϢⲰⲠ ⲀⲒϢⲀⲚϪⲞⲤ ϪⲈ ϮⲤⲰⲞⲨⲚ ⲘⲘⲞϤ ⲀⲚ ⲈⲒⲈϢⲰⲠⲒ ⲈⲒⲞⲚⲒ ⲘⲘⲰⲦⲈⲚ ⲚⲤⲀⲘⲈⲐⲚⲞⲨϪ ⲀⲖⲖⲀ ϮⲤⲰⲞⲨⲚ ⲘⲘⲞϤ ⲞⲨⲞϨ ⲠⲈϤⲤⲀϪⲒ ϮⲀⲢⲈϨ ⲈⲢⲞϤ.
56 உங்கள் முற்பிதாவான ஆபிரகாம் எனது நாளைக் காண்பதை எண்ணி மகிழ்ச்சி கொண்டிருந்தான்; அதைக்கண்டு அவன் சந்தோஷப்பட்டான்” என்றார்.
ⲛ̅ⲋ̅ⲀⲂⲢⲀⲀⲘ ⲠⲈⲦⲈⲚⲒⲰⲦ ⲚⲀϤⲐⲈⲖⲎⲖ ⲠⲈ ⲈϤⲞⲨⲰϢ ⲈⲚⲀⲨ ⲈⲞⲨⲈϨⲞⲞⲨ ⲚⲦⲎⲒ ⲞⲨⲞϨ ⲀϤⲚⲀⲨ ⲀϤⲢⲀϢⲒ.
57 அப்பொழுது யூதத்தலைவர்கள் அவரிடம், “உனக்கோ இன்னும் ஐம்பது வயதாகவில்லை. நீ ஆபிரகாமைக் கண்டாயோ!” என்றார்கள்.
ⲛ̅ⲍ̅ⲠⲈϪⲈ ⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ ⲚⲀϤ ϪⲈ ⲘⲠⲀⲦⲈⲔⲈⲢ ⲚⲚⲢⲞⲘⲠⲒ ⲞⲨⲞϨ ⲀⲔⲚⲀⲨ ⲈⲀⲂⲢⲀⲀⲘ.
58 அதற்கு இயேசு, “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்கிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னமே இருக்கிறவர் நானே” என்றார்.
ⲛ̅ⲏ̅ⲠⲈϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲀⲘⲎⲚ ⲀⲘⲎⲚ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲘⲠⲀⲦⲈ ⲀⲂⲢⲀⲀⲘ ϢⲰⲠⲒ ⲀⲚⲞⲔ ⲠⲈ.
59 இதைக் கேட்டவுடன் அவர்மேல் எறியும்படி அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் நடுவே கடந்து ஆலயப் பகுதியை விட்டு வெளியே போய்விட்டார்.
ⲛ̅ⲑ̅ⲀⲨⲈⲖ ⲰⲚⲒ ⲞⲨⲚ ϨⲒⲚⲀ ⲚⲤⲈϨⲒⲞⲨⲒ ⲈϪⲰϤ ⲒⲎⲤⲞⲨⲤ ⲆⲈ ⲀϤⲬⲞⲠϤ ⲀϤⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲒⲈⲢⲪⲈⲒ ⲞⲨⲞϨ ⲀϤⲤⲒⲚⲒ ⲚⲀϤⲘⲞϢⲒ ϦⲈⲚⲦⲞⲨⲘⲎϮ ⲞⲨⲞϨ ⲚⲀϤⲤⲒⲚⲒⲰⲞⲨ.