< யோவான் 7 >

1 இவைகளுக்குப்பின், இயேசுவைக் கொலைசெய்வதற்கு யூதத்தலைவர்கள் வழி தேடிக்கொண்டிருந்ததால், அவர் யூதேயாவுக்குப் போக விரும்பாமல் கலிலேயாவிலேயே வெவ்வேறு இடங்களுக்குச் சென்றார்.
ততঃ পৰং যিহূদীযলোকাস্তং হন্তুং সমৈহন্ত তস্মাদ্ যীশু ৰ্যিহূদাপ্ৰদেশে পৰ্য্যটিতুং নেচ্ছন্ গালীল্ প্ৰদেশে পৰ্য্যটিতুং প্ৰাৰভত|
2 ஆனால் யூதரின் கூடாரப்பண்டிகைச் சமீபித்தபோது,
কিন্তু তস্মিন্ সমযে যিহূদীযানাং দূষ্যৱাসনামোৎসৱ উপস্থিতে
3 இயேசுவின் சகோதரர் அவரிடம், “நீர் இவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு யூதேயாவுக்குச் செல்லும். அப்பொழுதே நீர் செய்யும் கிரியைகளை உமது சீடர்கள் காண்பார்கள்.
তস্য ভ্ৰাতৰস্তম্ অৱদন্ যানি কৰ্ম্মাণি ৎৱযা ক্ৰিযন্তে তানি যথা তৱ শিষ্যাঃ পশ্যন্তি তদৰ্থং ৎৱমিতঃ স্থানাদ্ যিহূদীযদেশং ৱ্ৰজ|
4 பிரபலமடைய விரும்புகிற எவனும் இரகசியமாக செயல்படுவதில்லை. நீர் இந்தக் காரியங்களைச் செய்கிறதினால், உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தலாமே” என்றார்கள்.
যঃ কশ্চিৎ স্ৱযং প্ৰচিকাশিষতি স কদাপি গুপ্তং কৰ্ম্ম ন কৰোতি যদীদৃশং কৰ্ম্ম কৰোষি তৰ্হি জগতি নিজং পৰিচাযয|
5 ஏனெனில் இயேசுவின் சொந்தச் சகோதரர்கள்கூட அவரை விசுவாசிக்கவில்லை.
যতস্তস্য ভ্ৰাতৰোপি তং ন ৱিশ্ৱসন্তি|
6 எனவே இயேசு அவர்களிடம், “எனது நேரம் இன்னும் வரவில்லை; ஆனால் உங்களுக்கோ எந்த நேரமும் சரியானதே.
তদা যীশুস্তান্ অৱোচৎ মম সময ইদানীং নোপতিষ্ঠতি কিন্তু যুষ্মাকং সমযঃ সততম্ উপতিষ্ঠতি|
7 உலகம் உங்களை வெறுக்க முடியாது. உலகத்தின் செயல்கள் தீமையென்று நான் சாட்சிக் கொடுக்கிறதினால் உலகம் என்னை வெறுக்கிறது.
জগতো লোকা যুষ্মান্ ঋতীযিতুং ন শক্ৰুৱন্তি কিন্তু মামেৱ ঋতীযন্তে যতস্তেষাং কৰ্মাণি দুষ্টানি তত্ৰ সাক্ষ্যমিদম্ অহং দদামি|
8 இந்தப் பண்டிகைக்கு நீங்கள் போங்கள். நானோ இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை. ஏனெனில் எனக்கேற்ற நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.
অতএৱ যূযম্ উৎসৱেঽস্মিন্ যাত নাহম্ ইদানীম্ অস্মিন্নুৎসৱে যামি যতো মম সময ইদানীং ন সম্পূৰ্ণঃ|
9 இதைச் சொல்லிவிட்டு, இயேசு கலிலேயாவிலேயே தங்கியிருந்தார்.
ইতি ৱাক্যম্ উক্ত্ত্ৱা স গালীলি স্থিতৱান্
10 ஆனால் அவருடைய சகோதரர் பண்டிகைக்குப் போனபின் அவரும் வெளிப்படையாக அல்ல, இரகசியமாகவே சென்றார்.
১০কিন্তু তস্য ভ্ৰাতৃষু তত্ৰ প্ৰস্থিতেষু সৎসু সোঽপ্ৰকট উৎসৱম্ অগচ্ছৎ|
11 அந்தப் பண்டிகையிலே யூதர் இயேசுவைத் தேடிக்கொண்டு, “அவர் எங்கே?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
১১অনন্তৰম্ উৎসৱম্ উপস্থিতা যিহূদীযাস্তং মৃগযিৎৱাপৃচ্ছন্ স কুত্ৰ?
12 கூடியிருந்த மக்களுக்கிடையில் இயேசுவைக்குறித்து கருத்து வேறுபாடு இருந்தது. சிலர், “அவர் ஒரு நல்ல மனிதர்” என்றார்கள். மற்றவர்களோ, “அப்படியல்ல, அவன் மக்களை ஏமாற்றுகிறான்” என்றார்கள்.
১২ততো লোকানাং মধ্যে তস্মিন্ নানাৱিধা ৱিৱাদা ভৱিতুম্ আৰব্ধৱন্তঃ| কেচিদ্ অৱোচন্ স উত্তমঃ পুৰুষঃ কেচিদ্ অৱোচন্ ন তথা ৱৰং লোকানাং ভ্ৰমং জনযতি|
13 ஆனால், அவர்கள் யூதருக்குப் பயந்ததினால், ஒருவரும் அவரைப்பற்றி வெளிப்படையாக எதையும் பேசவில்லை.
১৩কিন্তু যিহূদীযানাং ভযাৎ কোপি তস্য পক্ষে স্পষ্টং নাকথযৎ|
14 பண்டிகை நாட்கள் முடிந்தபின்பு இயேசு ஆலய முற்றத்திற்கு போய், அங்கே போதிக்கத் தொடங்கினார்.
১৪ততঃ পৰম্ উৎসৱস্য মধ্যসমযে যীশু ৰ্মন্দিৰং গৎৱা সমুপদিশতি স্ম|
15 யூதர்களோ வியப்படைந்து, “படிக்காமலே இந்த மனிதனுக்கு இவ்வளவு அறிவு எப்படி வந்தது?” என்று கேட்டார்கள்.
১৫ততো যিহূদীযা লোকা আশ্চৰ্য্যং জ্ঞাৎৱাকথযন্ এষা মানুষো নাধীত্যা কথম্ এতাদৃশো ৱিদ্ৱানভূৎ?
16 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “எனது போதனை என்னுடையது அல்ல, அது என்னை அனுப்பின பிதாவிடமிருந்தே வருகிறது.
১৬তদা যীশুঃ প্ৰত্যৱোচদ্ উপদেশোযং ন মম কিন্তু যো মাং প্ৰেষিতৱান্ তস্য|
17 இறைவனுடைய சித்தத்தைச் செய்ய விரும்புகிறவன் எவனோ, அவன் எனது போதனை இறைவனிடமிருந்து வருகிறதா, அல்லது நான் என் சுயமாய் சொல்கிறேனா என்று அறிந்துகொள்வான்.
১৭যো জনো নিদেশং তস্য গ্ৰহীষ্যতি মমোপদেশো মত্তো ভৱতি কিম্ ঈশ্ৱৰাদ্ ভৱতি স গনস্তজ্জ্ঞাতুং শক্ষ্যতি|
18 தனது சுய சிந்தனையில் பேசுகிறவன் தனக்கே மகிமையைத் தேட முயற்சிக்கிறான். ஆனால் தம்மை அனுப்பியவரின் மகிமையைத் தேடுகிறவன் உண்மையுள்ளவனாய் இருக்கிறான்; அவனில் அநீதி எதுவுமில்லை.
১৮যো জনঃ স্ৱতঃ কথযতি স স্ৱীযং গৌৰৱম্ ঈহতে কিন্তু যঃ প্ৰেৰযিতু ৰ্গৌৰৱম্ ঈহতে স সত্যৱাদী তস্মিন্ কোপ্যধৰ্ম্মো নাস্তি|
19 மோசே உங்களுக்கு சட்டத்தைக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் மோசேயின் சட்டத்தைக் கைக்கொள்கிறதில்லை. நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்ய முயற்சிக்கிறீர்கள்?” என்றார்.
১৯মূসা যুষ্মভ্যং ৱ্যৱস্থাগ্ৰন্থং কিং নাদদাৎ? কিন্তু যুষ্মাকং কোপি তাং ৱ্যৱস্থাং ন সমাচৰতি| মাং হন্তুং কুতো যতধ্ৱে?
20 அப்பொழுது கூடியிருந்த கூட்டம், “நீ பிசாசு பிடித்தவன். யார் உன்னைக் கொலைசெய்ய முயற்சிக்கிறார்கள்?” என்றார்கள்.
২০তদা লোকা অৱদন্ ৎৱং ভূতগ্ৰস্তস্ত্ৱাং হন্তুং কো যততে?
21 இயேசு அவர்களிடம், “நான் ஒரு கிரியையை செய்தேன். அதனால் நீங்கள் எல்லோரும் வியப்படைந்திருக்கிறீர்கள்.
২১ততো যীশুৰৱোচদ্ একং কৰ্ম্ম মযাকাৰি তস্মাদ্ যূযং সৰ্ৱ্ৱ মহাশ্চৰ্য্যং মন্যধ্ৱে|
22 விருத்தசேதனத்தை மோசே உங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தான். நீங்கள் ஓய்வுநாளிலும் ஒரு பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்கிறீர்கள். உண்மையிலேயே விருத்தசேதனம் மோசேயினால் ஏற்படுத்தப்படவில்லை. நமது கோத்திரப் பிதாக்களினாலேயே ஏற்படுத்தப்பட்டது.
২২মূসা যুষ্মভ্যং ৎৱক্ছেদৱিধিং প্ৰদদৌ স মূসাতো ন জাতঃ কিন্তু পিতৃপুৰুষেভ্যো জাতঃ তেন ৱিশ্ৰামৱাৰেঽপি মানুষাণাং ৎৱক্ছেদং কুৰুথ|
23 மோசேயின் சட்டம் மீறப்படாதபடி ஒரு பிள்ளை ஓய்வுநாளில் விருத்தசேதனம் பண்ணப்படலாம் என்கிறீர்கள். அப்படியானால் ஓய்வுநாளிலே ஒருவனை முழுவதும் குணமாக்கிய என்மேல் ஏன் கோபம் கொள்கிறீர்கள்?
২৩অতএৱ ৱিশ্ৰামৱাৰে মনুষ্যাণাং ৎৱক্ছেদে কৃতে যদি মূসাৱ্যৱস্থামঙ্গনং ন ভৱতি তৰ্হি মযা ৱিশ্ৰামৱাৰে মানুষঃ সম্পূৰ্ণৰূপেণ স্ৱস্থোঽকাৰি তৎকাৰণাদ্ যূযং কিং মহ্যং কুপ্যথ?
24 வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பு செய்வதை நிறுத்துங்கள். நீதியாய் தீர்ப்பு செய்யுங்கள்” என்றார்.
২৪সপক্ষপাতং ৱিচাৰমকৃৎৱা ন্যায্যং ৱিচাৰং কুৰুত|
25 அப்பொழுது எருசலேமைச் சேர்ந்த மக்களில் சிலர், “இந்த மனிதனையல்லவா அவர்கள் கொலைசெய்ய முயற்சிக்கிறார்கள்?
২৫তদা যিৰূশালম্ নিৱাসিনঃ কতিপযজনা অকথযন্ ইমে যং হন্তুং চেষ্টন্তে স এৱাযং কিং ন?
26 இதோ இங்கே இவர் வெளிப்படையாகப் பேசுகிறார். அவர்கள் இவரை எதிர்த்து ஒரு வார்த்தையும் சொல்லாதிருக்கிறார்கள். ஒருவேளை அதிகாரத்தில் உள்ளவர்கள் இவர்தான் கிறிஸ்து என்று உண்மையாகவே அறிந்துகொண்டார்களோ?
২৬কিন্তু পশ্যত নিৰ্ভযঃ সন্ কথাং কথযতি তথাপি কিমপি অ ৱদন্ত্যেতে অযমেৱাভিষিক্ত্তো ভৱতীতি নিশ্চিতং কিমধিপতযো জানন্তি?
27 ஆனால் இந்த மனிதன் எங்கிருந்து வந்திருக்கிறான் என்று நமக்குத் தெரியும்; ஆனால் கிறிஸ்து வரும்போது, அவர் எங்கிருந்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாதே” என்று பேசத் தொடங்கினார்கள்.
২৭মনুজোযং কস্মাদাগমদ্ ইতি ৱযং জানোমঃ কিন্ত্ৱভিষিক্ত্ত আগতে স কস্মাদাগতৱান্ ইতি কোপি জ্ঞাতুং ন শক্ষ্যতি|
28 அப்பொழுது தொடர்ந்து ஆலய முற்றத்தில் போதித்துக்கொண்டிருந்த இயேசு, சத்தமாய் சொன்னதாவது, “ஆம்! நீங்கள் என்னை அறிவீர்கள். நான் எங்கே இருந்து வந்தேன் என்றும் உங்களுக்குத் தெரியும். நான் என் சுயவிருப்பத்தின்படி வரவில்லை. என்னை அனுப்பிய பிதா உண்மையுள்ளவர். நீங்களோ அவரை அறியவில்லை.
২৮তদা যীশু ৰ্মধ্যেমন্দিৰম্ উপদিশন্ উচ্চৈঃকাৰম্ উক্ত্তৱান্ যূযং কিং মাং জানীথ? কস্মাচ্চাগতোস্মি তদপি কিং জানীথ? নাহং স্ৱত আগতোস্মি কিন্তু যঃ সত্যৱাদী সএৱ মাং প্ৰেষিতৱান্ যূযং তং ন জানীথ|
29 நானோ பிதாவை அறிந்திருக்கிறேன். ஏனெனில் நான் அவரிடமிருந்து வந்திருக்கிறேன். அவரே என்னை அனுப்பினவர்” என்றார்.
২৯তমহং জানে তেনাহং প্ৰেৰিত অগতোস্মি|
30 அப்பொழுது அவர்கள் இயேசுவைக் கைதுசெய்ய முயன்றார்கள். ஆனால் ஒருவரும் அவர்மேல் கைவைக்கவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.
৩০তস্মাদ্ যিহূদীযাস্তং ধৰ্ত্তুম্ উদ্যতাস্তথাপি কোপি তস্য গাত্ৰে হস্তং নাৰ্পযদ্ যতো হেতোস্তদা তস্য সমযো নোপতিষ্ঠতি|
31 ஆனால் கூடியிருந்த மக்களில் பலர் இயேசுவின்மேல் விசுவாசம் வைத்தார்கள். அவர்கள், “கிறிஸ்து வரும்போது, இவர் செய்ததைப் பார்க்கிலும் அதிகமான அடையாளங்களை அவர் செய்வாரோ?” என்றார்கள்.
৩১কিন্তু বহৱো লোকাস্তস্মিন্ ৱিশ্ৱস্য কথিতৱান্তোঽভিষিক্ত্তপুৰুষ আগত্য মানুষস্যাস্য ক্ৰিযাভ্যঃ কিম্ অধিকা আশ্চৰ্য্যাঃ ক্ৰিযাঃ কৰিষ্যতি?
32 கூடியிருந்த மக்கள் இயேசுவைக்குறித்து இப்படிப்பட்ட காரியங்களை தங்களுக்குள் மெதுவாய் பேசிக்கொண்டதை பரிசேயர் கேட்டார்கள். எனவே தலைமை ஆசாரியர்களும் பரிசேயரும் இயேசுவைக் கைதுசெய்யும்படி, ஆலயக்காவலரை அனுப்பினார்கள்.
৩২ততঃ পৰং লোকাস্তস্মিন্ ইত্থং ৱিৱদন্তে ফিৰূশিনঃ প্ৰধানযাজকাঞ্চেতি শ্ৰুতৱন্তস্তং ধৃৎৱা নেতুং পদাতিগণং প্ৰেষযামাসুঃ|
33 அப்பொழுது இயேசு, “இன்னும் சிறிது காலமே நான் உங்களுடன் இருப்பேன். பின்பு என்னை அனுப்பிய பிதாவிடம் நான் போய்விடுவேன்.
৩৩ততো যীশুৰৱদদ্ অহম্ অল্পদিনানি যুষ্মাভিঃ সাৰ্দ্ধং স্থিৎৱা মৎপ্ৰেৰযিতুঃ সমীপং যাস্যামি|
34 நீங்களோ என்னைத் தேடுவீர்கள். ஆனால் என்னைக் காணமாட்டீர்கள். நான் இருக்கும் இடத்திற்கும் உங்களால் வரமுடியாது” என்றார்.
৩৪মাং মৃগযিষ্যধ্ৱে কিন্তূদ্দেশং ন লপ্স্যধ্ৱে ৰত্ৰ স্থাস্যামি তত্ৰ যূযং গন্তুং ন শক্ষ্যথ|
35 அப்பொழுது யூதத்தலைவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “நாம் கண்டுபிடிக்க முடியாதபடி, இவன் எங்குபோக இருக்கிறான்? “கிரேக்கருக்குள்ளே சிதறடிக்கப்பட்டிருக்கின்ற நம் மக்களிடம்போய், அங்கே கிரேக்கருக்குக் போதிக்க போகிறானா?
৩৫তদা যিহূদীযাঃ পৰস্পৰং ৱক্ত্তুমাৰেভিৰে অস্যোদ্দেশং ন প্ৰাপ্স্যাম এতাদৃশং কিং স্থানং যাস্যতি? ভিন্নদেশে ৱিকীৰ্ণানাং যিহূদীযানাং সন্নিধিম্ এষ গৎৱা তান্ উপদেক্ষ্যতি কিং?
36 ‘நீங்களோ என்னைத் தேடுவீர்கள், ஆனால் என்னைக் காணமாட்டீர்கள், நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று சொல்லுகிறானே. இதன் அர்த்தம் என்ன?” என்று பேசிக்கொண்டார்கள்.
৩৬নো চেৎ মাং গৱেষযিষ্যথ কিন্তূদ্দেশং ন প্ৰাপ্স্যথ এষ কোদৃশং ৱাক্যমিদং ৱদতি?
37 பண்டிகையின் கடைசி நாளான அந்தப் பெரிய நாளிலே, இயேசு எழுந்து நின்று சத்தமாய்ச் சொன்னதாவது: “யாராவது தாகமுள்ளவராய் இருந்தால், அவர்கள் என்னிடம் வந்து பானம்பண்ணட்டும்.
৩৭অনন্তৰম্ উৎসৱস্য চৰমেঽহনি অৰ্থাৎ প্ৰধানদিনে যীশুৰুত্তিষ্ঠন্ উচ্চৈঃকাৰম্ আহ্ৱযন্ উদিতৱান্ যদি কশ্চিৎ তৃষাৰ্ত্তো ভৱতি তৰ্হি মমান্তিকম্ আগত্য পিৱতু|
38 வேதவசனத்தில் சொல்லியிருக்கிறபடி, என்னை விசுவாசிக்கிறவர்களுடைய உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீர் நதியாய் பெருக்கெடுத்து ஓடும்” என்றார்.
৩৮যঃ কশ্চিন্মযি ৱিশ্ৱসিতি ধৰ্ম্মগ্ৰন্থস্য ৱচনানুসাৰেণ তস্যাভ্যন্তৰতোঽমৃততোযস্য স্ৰোতাংসি নিৰ্গমিষ্যন্তি|
39 தம்மில் விசுவாசமாய் இருக்கிறவர்கள் பின்னர் பெறப்போகும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்தே அவர் இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமையடையாது இருந்தபடியால், பரிசுத்த ஆவியானவர் இன்னும் கொடுக்கப்படவில்லை.
৩৯যে তস্মিন্ ৱিশ্ৱসন্তি ত আত্মানং প্ৰাপ্স্যন্তীত্যৰ্থে স ইদং ৱাক্যং ৱ্যাহৃতৱান্ এতৎকালং যাৱদ্ যীশু ৰ্ৱিভৱং ন প্ৰাপ্তস্তস্মাৎ পৱিত্ৰ আত্মা নাদীযত|
40 இயேசுவினுடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களில் சிலர், “உண்மையிலேயே இவர் வர இருக்கிற இறைவாக்கினனே” என்றார்கள்.
৪০এতাং ৱাণীং শ্ৰুৎৱা বহৱো লোকা অৱদন্ অযমেৱ নিশ্চিতং স ভৱিষ্যদ্ৱাদী|
41 வேறுசிலரோ, “இவரே கிறிஸ்து” என்றார்கள். ஆனால் இன்னும் சிலர், “கலிலேயாவிலிருந்து எப்படி கிறிஸ்து வருவார்?
৪১কেচিদ্ অকথযন্ এষএৱ সোভিষিক্ত্তঃ কিন্তু কেচিদ্ অৱদন্ সোভিষিক্ত্তঃ কিং গালীল্ প্ৰদেশে জনিষ্যতে?
42 கிறிஸ்து தாவீதின் குடும்பத்திலிருந்தும், தாவீது வாழ்ந்த பெத்லகேம் பட்டணத்தில் இருந்து வருவார் என்று வேதவசனம் சொல்லுகிறது அல்லவா?” என்றார்கள்.
৪২সোভিষিক্ত্তো দাযূদো ৱংশে দাযূদো জন্মস্থানে বৈৎলেহমি পত্তনে জনিষ্যতে ধৰ্ম্মগ্ৰন্থে কিমিত্থং লিখিতং নাস্তি?
43 இயேசுவின் நிமித்தம் இவ்விதமாய் மக்கள் கருத்து வேறுபட்டார்கள்.
৪৩ইত্থং তস্মিন্ লোকানাং ভিন্নৱাক্যতা জাতা|
44 சிலர் அவரைக் கைதுசெய்ய விரும்பினார்கள். ஆனால் ஒருவரும் அவர்மேல் கைவைக்கவில்லை.
৪৪কতিপযলোকাস্তং ধৰ্ত্তুম্ ঐচ্ছন্ তথাপি তদ্ৱপুষি কোপি হস্তং নাৰ্পযৎ|
45 பின்பு ஆலயக்காவலர், தலைமை ஆசாரியர்களிடமும் பரிசேயரிடமும் போனபோது, “நீங்கள் ஏன் அவனைப் பிடித்துக் கொண்டுவரவில்லை?” என்று கேட்டார்கள்.
৪৫অনন্তৰং পাদাতিগণে প্ৰধানযাজকানাং ফিৰূশিনাঞ্চ সমীপমাগতৱতি তে তান্ অপৃচ্ছন্ কুতো হেতোস্তং নানযত?
46 காவலர் அதற்கு மறுமொழியாக, “இந்த மனிதன் பேசியதுபோல் ஒருவனும் ஒருக்காலும் பேசியதில்லையே” என்றார்கள்.
৪৬তদা পদাতযঃ প্ৰত্যৱদন্ স মানৱ ইৱ কোপি কদাপি নোপাদিশৎ|
47 அப்பொழுது பரிசேயர் அவர்களிடம், “அவன் உங்களையும் ஏமாற்றி விட்டானா?
৪৭ততঃ ফিৰূশিনঃ প্ৰাৱোচন্ যূযমপি কিমভ্ৰামিষ্ট?
48 ஆளுநர்களில், அல்லது பரிசேயரைச் சேர்ந்த எவராவது இயேசுவை விசுவாசிக்கிறார்களா?
৪৮অধিপতীনাং ফিৰূশিনাঞ্চ কোপি কিং তস্মিন্ ৱ্যশ্ৱসীৎ?
49 இல்லையே! ஆனால் இந்த மக்களோ மோசேயின் சட்டத்தை அறியாதவர்கள். இவர்கள்மேல் சாபம் உண்டு” என்றார்கள்.
৪৯যে শাস্ত্ৰং ন জানন্তি ত ইমেঽধমলোকাএৱ শাপগ্ৰস্তাঃ|
50 முன்பு இயேசுவினிடம் போயிருந்தவனும், பரிசேயரைச் சேர்ந்தவனுமான நிக்கொதேமு அவர்களிடம்,
৫০তদা নিকদীমনামা তেষামেকো যঃ ক্ষণদাযাং যীশোঃ সন্নিধিম্ অগাৎ স উক্ত্তৱান্
51 “ஒருவன் என்ன செய்கிறான் என்று அறியும்படி முதலாவது அவனை விசாரிக்காமல், அவனுக்கு நமது மோசேயின் சட்டம் தண்டனைத்தீர்ப்பு கொடுக்கிறதா?” என்று கேட்டான்.
৫১তস্য ৱাক্যে ন শ্ৰুতে কৰ্ম্মণি চ ন ৱিদিতে ঽস্মাকং ৱ্যৱস্থা কিং কঞ্চন মনুজং দোষীকৰোতি?
52 அதற்கு அவர்கள் அவனிடம், “நீயும் கலிலேயாவைச் சேர்ந்தவனா? வேதவசனத்தை ஆராய்ந்து பார். அப்பொழுது கலிலேயாவிலிருந்து இறைவாக்கினர் யாரும் வருவதில்லை என்பதைக் கண்டுகொள்வாய்” என்றார்கள்.
৫২ততস্তে ৱ্যাহৰন্ ৎৱমপি কিং গালীলীযলোকঃ? ৱিৱিচ্য পশ্য গলীলি কোপি ভৱিষ্যদ্ৱাদী নোৎপদ্যতে|
53 பின்பு ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் வீட்டிற்குச் சென்றார்கள்.
৫৩ততঃ পৰং সৰ্ৱ্ৱে স্ৱং স্ৱং গৃহং গতাঃ কিন্তু যীশু ৰ্জৈতুননামানং শিলোচ্চযং গতৱান্|

< யோவான் 7 >