< யோவான் 5 >

1 இவைகளுக்குப் பின்பு, யூதர்களுடைய ஒரு பண்டிகைக்கு இயேசு எருசலேமுக்குச் சென்றார்.
ততঃ পরং যিহূদীযানাম্ উৎসৱ উপস্থিতে যীশু র্যিরূশালমং গতৱান্|
2 எருசலேமிலே ஆட்டு வாசலின் அருகே ஒரு குளம் இருந்தது. அது எபிரெய மொழியிலே பெதஸ்தா என்று அழைக்கப்பட்டது. அதைச் சுற்றி ஐந்து மண்டபங்கள் இருந்தன.
তস্মিন্নগরে মেষনাম্নো দ্ৱারস্য সমীপে ইব্রীযভাষযা বৈথেস্দা নাম্না পিষ্করিণী পঞ্চঘট্টযুক্তাসীৎ|
3 அங்கே பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதமுற்றோர் போன்ற அநேக நோயாளிகள் படுத்திருப்பது வழக்கம். அவர்கள் தண்ணீர் கலங்கும் வேளைக்காகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.
তস্যাস্তেষু ঘট্টেষু কিলালকম্পনম্ অপেক্ষ্য অন্ধখঞ্চশুষ্কাঙ্গাদযো বহৱো রোগিণঃ পতন্তস্তিষ্ঠন্তি স্ম|
4 சிலவேளைகளில் கர்த்தருடைய தூதன் ஒருவன் இறங்கிவந்து அந்தத் தண்ணீரைக் கலக்குவான். தண்ணீர் கலங்கிய உடனே அந்தக் குளத்தில் முதலாவது இறங்குபவன் என்ன வியாதியுடையவனாய் இருந்தாலும் அவன் சுகமடைவான்.
যতো ৱিশেষকালে তস্য সরসো ৱারি স্ৱর্গীযদূত এত্যাকম্পযৎ তৎকীলালকম্পনাৎ পরং যঃ কশ্চিদ্ রোগী প্রথমং পানীযমৱারোহৎ স এৱ তৎক্ষণাদ্ রোগমুক্তোঽভৱৎ|
5 அங்கிருந்த ஒருவன் முப்பத்தெட்டு வருடங்களாக நோயாளியாயிருந்தான்.
তদাষ্টাত্রিংশদ্ৱর্ষাণি যাৱদ্ রোগগ্রস্ত একজনস্তস্মিন্ স্থানে স্থিতৱান্|
6 இயேசு அவனைக் கண்டு, அங்கே அவன் அநேக காலமாக இந்நிலையில் கிடப்பதை அறிந்துகொண்டார். அவர் அவனிடம், “நீ சுகமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.
যীশুস্তং শযিতং দৃষ্ট্ৱা বহুকালিকরোগীতি জ্ঞাৎৱা ৱ্যাহৃতৱান্ ৎৱং কিং স্ৱস্থো বুভূষসি?
7 அதற்கு அந்த நோயுற்ற மனிதன், “ஐயா, தண்ணீர் கலக்கப்படும்போது, நான் குளத்தில் இறங்குவதற்கு எனக்கு உதவிசெய்ய ஒருவரும் இல்லை. நான் இறங்குவதற்கு முயற்சி செய்கையில், வேறொருவன் எனக்கு முன்பாகவே இறங்கி விடுகிறான்” என்றான்.
ততো রোগী কথিতৱান্ হে মহেচ্ছ যদা কীলালং কম্পতে তদা মাং পুষ্করিণীম্ অৱরোহযিতুং মম কোপি নাস্তি, তস্মান্ মম গমনকালে কশ্চিদন্যোঽগ্রো গৎৱা অৱরোহতি|
8 அப்பொழுது இயேசு அவனிடம், “எழுந்திரு! உன் படுக்கையை தூக்கிக்கொண்டு நட” என்றார்.
তদা যীশুরকথযদ্ উত্তিষ্ঠ, তৱ শয্যামুত্তোল্য গৃহীৎৱা যাহি|
9 உடனே அவன் குணமடைந்தான்; மேலும் தன் படுக்கையையும் எடுத்துக்கொண்டு நடந்துபோனான். இது நிகழ்ந்த நாள் யூதருடைய ஒரு ஓய்வுநாளாயிருந்தது.
স তৎক্ষণাৎ স্ৱস্থো ভূৎৱা শয্যামুত্তোল্যাদায গতৱান্ কিন্তু তদ্দিনং ৱিশ্রামৱারঃ|
10 எனவே யூதத்தலைவர்கள், குணமடைந்த அவனிடம், “இது ஓய்வுநாள்; நீ உனது படுக்கையை எடுத்துக்கொண்டு போவதை மோசேயின் சட்டம் தடைசெய்கிறது” என்றார்கள்.
১০তস্মাদ্ যিহূদীযাঃ স্ৱস্থং নরং ৱ্যাহরন্ অদ্য ৱিশ্রামৱারে শযনীযমাদায ন যাতৱ্যম্|
11 அவன் அதற்கு, “என்னைக் குணமாக்கியவர், ‘உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று எனக்குச் சொன்னார்” என்றான்.
১১ততঃ স প্রত্যৱোচদ্ যো মাং স্ৱস্থম্ অকার্ষীৎ শযনীযম্ উত্তোল্যাদায যাতুং মাং স এৱাদিশৎ|
12 எனவே அவர்கள் அவனிடம், “உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று உனக்குச் சொன்னது யார்?” என்று கேட்டார்கள்.
১২তদা তেঽপৃচ্ছন্ শযনীযম্ উত্তোল্যাদায যাতুং য আজ্ঞাপযৎ স কঃ?
13 சுகமடைந்தவனுக்கோ, தன்னை குணமாக்கினவர் யார் என்று தெரியாதிருந்தது. ஏனெனில் இயேசு அங்கு கூடியிருந்த மக்களிடையே போய் மறைந்துவிட்டார்.
১৩কিন্তু স ক ইতি স্ৱস্থীভূতো নাজানাদ্ যতস্তস্মিন্ স্থানে জনতাসত্ত্ৱাদ্ যীশুঃ স্থানান্তরম্ আগমৎ|
14 பின்பு இயேசு அவனை ஆலயத்தில் கண்டு அவனிடம், “பார், நீ சுகமடைந்திருக்கிறாயே. இனிமேல் பாவம் செய்யாதே. செய்தால் இதைவிட மோசமானது ஏதாவது உனக்கு நேரிடலாம்” என்றார்.
১৪ততঃ পরং যেশু র্মন্দিরে তং নরং সাক্ষাৎপ্রাপ্যাকথযৎ পশ্যেদানীম্ অনামযো জাতোসি যথাধিকা দুর্দশা ন ঘটতে তদ্ধেতোঃ পাপং কর্ম্ম পুনর্মাকার্ষীঃ|
15 அவன் பிறகு புறப்பட்டுப்போய் தன்னை குணமாக்கியது இயேசுவே என்று யூதருக்குச் சொன்னான்.
১৫ততঃ স গৎৱা যিহূদীযান্ অৱদদ্ যীশু র্মাম্ অরোগিণম্ অকার্ষীৎ|
16 இந்தக் காரியங்களை இயேசு ஓய்வுநாளிலே செய்தபடியால், யூதர் இயேசுவைத் துன்புறுத்தினார்கள்.
১৬ততো যীশু র্ৱিশ্রামৱারে কর্ম্মেদৃশং কৃতৱান্ ইতি হেতো র্যিহূদীযাস্তং তাডযিৎৱা হন্তুম্ অচেষ্টন্ত|
17 இயேசு அவர்களிடம், “இன்றுவரை என் பிதா ஓய்வில்லாமல் தன் வேலைகளைச் செய்கிறார்; நானும் வேலைசெய்கிறேன்” என்றார்.
১৭যীশুস্তানাখ্যৎ মম পিতা যৎ কার্য্যং করোতি তদনুরূপম্ অহমপি করোতি|
18 இயேசு ஓய்வுநாளின் முறைமையை மீறியது மட்டுமல்லாமல், இறைவனைத் தன்னுடைய சொந்தத் தந்தை என்றும் சொல்லி தன்னை இறைவனுக்குச் சமமாக்கினார் என்பதால், யூதர் அவரைக் கொலைசெய்ய இன்னும் அதிகமாய் முயற்சிசெய்தார்கள்.
১৮ততো যিহূদীযাস্তং হন্তুং পুনরযতন্ত যতো ৱিশ্রামৱারং নামন্যত তদেৱ কেৱলং ন অধিকন্তু ঈশ্ৱরং স্ৱপিতরং প্রোচ্য স্ৱমপীশ্ৱরতুল্যং কৃতৱান্|
19 இயேசு அவர்களுக்கு சொன்னது: “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், எவைகளையெல்லாம் பிதாவானர் செய்கிறதை மகன் காண்கிறாரோ, அவைகளையே அன்றி தாமாக வேறொன்றையும் செய்யமாட்டார்; பிதா எவைகளை செய்கிறாரோ அவைகளையே மகனும் செய்கிறார்.
১৯পশ্চাদ্ যীশুরৱদদ্ যুষ্মানহং যথার্থতরং ৱদামি পুত্রঃ পিতরং যদ্যৎ কর্ম্ম কুর্ৱ্ৱন্তং পশ্যতি তদতিরিক্তং স্ৱেচ্ছাতঃ কিমপি কর্ম্ম কর্ত্তুং ন শক্নোতি| পিতা যৎ করোতি পুত্রোপি তদেৱ করোতি|
20 ஏனெனில் பிதா மகனில் அன்பாயிருந்து, தாம் செய்வதையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார். ஆம், நீங்கள் வியப்படையும்படி பிதா இவற்றை விடவும் பெரிதான செயல்களைக் காண்பிப்பார்.
২০পিতা পুত্রে স্নেহং করোতি তস্মাৎ স্ৱযং যদ্যৎ কর্ম্ম করোতি তৎসর্ৱ্ৱং পুত্রং দর্শযতি; যথা চ যুষ্মাকং আশ্চর্য্যজ্ঞানং জনিষ্যতে তদর্থম্ ইতোপি মহাকর্ম্ম তং দর্শযিষ্যতি|
21 பிதா மரித்தவர்களை உயிருடன் எழுப்பி, அவர்களுக்கு ஜீவன் கொடுப்பது போலவே, மகனும் தமக்கு விருப்பமுள்ளவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கிறார்.
২১ৱস্তুতস্তু পিতা যথা প্রমিতান্ উত্থাপ্য সজিৱান্ করোতি তদ্ৱৎ পুত্রোপি যং যং ইচ্ছতি তং তং সজীৱং করোতি|
22 மேலும், பிதா ஒருவரையும் நியாயந்தீர்ப்பதில்லை. நியாயத்தீர்ப்பை கொடுக்கும் வேலை முழுவதையும் மகனிடமே ஒப்படைத்திருக்கிறார்.
২২সর্ৱ্ৱে পিতরং যথা সৎকুর্ৱ্ৱন্তি তথা পুত্রমপি সৎকারযিতুং পিতা স্ৱযং কস্যাপি ৱিচারমকৃৎৱা সর্ৱ্ৱৱিচারাণাং ভারং পুত্রে সমর্পিতৱান্|
23 எல்லா மனிதரும் பிதாவைக் கனம் பண்ணுவதுபோல, மகனையும் கனம்பண்ணும்படி இப்படிச் செய்தார். மகனுக்கு கனம் கொடாத எவனும், அவரை அனுப்பிய பிதாவுக்கும் கனம் கொடாதிருக்கிறான்.
২৩যঃ পুত্রং সৎ করোতি স তস্য প্রেরকমপি সৎ করোতি|
24 “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், என்னுடைய வார்த்தையைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவர்கள் யாரோ, அவர்கள் நித்திய ஜீவனைப் பெற்றுவிட்டார்கள். அவர்களுக்கு நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுவதில்லை; அவர்கள் மரணத்தைக் கடந்துசென்று ஜீவனுக்கு உட்பட்டிருக்கிறார்கள். (aiōnios g166)
২৪যুষ্মানাহং যথার্থতরং ৱদামি যো জনো মম ৱাক্যং শ্রুৎৱা মৎপ্রেরকে ৱিশ্ৱসিতি সোনন্তাযুঃ প্রাপ্নোতি কদাপি দণ্ডবাজনং ন ভৱতি নিধনাদুত্থায পরমাযুঃ প্রাপ্নোতি| (aiōnios g166)
25 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. இக்காலத்திலேயே மரித்தவர்கள் இறைவனுடைய மகனின் குரலைக் கேட்பார்கள்; அதைக் கேட்கிறவர்கள் ஜீவனைப் பெறுவார்கள்.
২৫অহং যুষ্মানতিযথার্থং ৱদামি যদা মৃতা ঈশ্ৱরপুত্রস্য নিনাদং শ্রোষ্যন্তি যে চ শ্রোষ্যন্তি তে সজীৱা ভৱিষ্যন্তি সময এতাদৃশ আযাতি ৱরম্ ইদানীমপ্যুপতিষ্ঠতি|
26 பிதா தம்மில்தாமே ஜீவனாய் இருப்பதுபோல, மகனும் தம்மில்தாமே நித்திய ஜீவனாய் இருக்கும்படி செய்கிறார்.
২৬পিতা যথা স্ৱযঞ্জীৱী তথা পুত্রায স্ৱযঞ্জীৱিৎৱাধিকারং দত্তৱান্|
27 நான் மானிடமகனாய் இருப்பதால், நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் அதிகாரத்தையும் பிதா அவருக்கே கொடுத்திருக்கிறார்.
২৭স মনুষ্যপুত্রঃ এতস্মাৎ কারণাৎ পিতা দণ্ডকরণাধিকারমপি তস্মিন্ সমর্পিতৱান্|
28 “இதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம். ஏனெனில் காலம் வருகிறது, கல்லறைகளில் இருக்கிறவர்கள் எல்லோரும் மானிடமகனுடைய குரலைக் கேட்டு, வெளியே வருவார்கள்.
২৮এতদর্থে যূযম্ আশ্চর্য্যং ন মন্যধ্ৱং যতো যস্মিন্ সমযে তস্য নিনাদং শ্রুৎৱা শ্মশানস্থাঃ সর্ৱ্ৱে বহিরাগমিষ্যন্তি সময এতাদৃশ উপস্থাস্যতি|
29 நல்ல செயல்களைச் செய்தவர்கள் ஜீவன் பெறும்படி எழுந்திருப்பார்கள். தீய செயல்களைச் செய்தவர்கள் தண்டனைத் தீர்ப்பைப் பெறும்படி எழுந்திருப்பார்கள்.
২৯তস্মাদ্ যে সৎকর্ম্মাণি কৃতৱন্তস্ত উত্থায আযুঃ প্রাপ্স্যন্তি যে চ কুকর্মাণি কৃতৱন্তস্ত উত্থায দণ্ডং প্রাপ্স্যন্তি|
30 சுயமாய் நான் எதையும் செய்ய முடியாதிருக்கிறேன்; பிதா சொல்கிறபடி மட்டுமே நான் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறேன். எனது நியாயத்தீர்ப்பு நீதியானது. ஏனெனில் நான் என் சித்தத்தை அல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தை நிறைவேற்றவே நாடுகிறேன்.
৩০অহং স্ৱযং কিমপি কর্ত্তুং ন শক্নোমি যথা শুণোমি তথা ৱিচারযামি মম ৱিচারঞ্চ ন্যায্যঃ যতোহং স্ৱীযাভীষ্টং নেহিৎৱা মৎপ্রেরযিতুঃ পিতুরিষ্টম্ ঈহে|
31 “என்னைப்பற்றி நானே சாட்சி கூறினால், எனது சாட்சி உண்மையற்றது.
৩১যদি স্ৱস্মিন্ স্ৱযং সাক্ষ্যং দদামি তর্হি তৎসাক্ষ্যম্ আগ্রাহ্যং ভৱতি;
32 எனக்காகச் சாட்சி கூறுகிற இன்னொருவர் இருக்கிறார். என்னைப்பற்றிய அவருடைய சாட்சி உண்மையானது என்று நான் அறிவேன்.
৩২কিন্তু মদর্থেঽপরো জনঃ সাক্ষ্যং দদাতি মদর্থে তস্য যৎ সাক্ষ্যং তৎ সত্যম্ এতদপ্যহং জানামি|
33 “நீங்கள் யோவானிடம் ஆட்களை அனுப்பினீர்கள். அவன் சத்தியத்திற்குச் சாட்சி கொடுத்தான்.
৩৩যুষ্মাভি র্যোহনং প্রতি লোকেষু প্রেরিতেষু স সত্যকথাযাং সাক্ষ্যমদদাৎ|
34 மனிதனுடைய சாட்சியை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்பதற்காக இதைச் சொல்லவில்லை; நீங்கள் இரட்சிக்கப்படும்படியாகவே நான் இதைச் சொல்கிறேன்.
৩৪মানুষাদহং সাক্ষ্যং নোপেক্ষে তথাপি যূযং যথা পরিত্রযধ্ৱে তদর্থম্ ইদং ৱাক্যং ৱদামি|
35 யோவான் எரிந்து வெளிச்சம் கொடுத்த ஒரு விளக்காய் இருந்தான். நீங்களும் அவனுடைய வெளிச்சத்தில் சொற்ப காலத்திற்கு மகிழ்ச்சியடைவதைத் தெரிந்துகொண்டீர்கள்.
৩৫যোহন্ দেদীপ্যমানো দীপ ইৱ তেজস্ৱী স্থিতৱান্ যূযম্ অল্পকালং তস্য দীপ্ত্যানন্দিতুং সমমন্যধ্ৱং|
36 “யோவான் கொடுத்த சாட்சியைப் பார்க்கிலும், அதிக மதிப்புள்ள சாட்சி எனக்கு இருக்கிறது. நான் செய்து முடிக்கும்படி பிதா எனக்கு ஒரு வேலையைக் கொடுத்திருக்கிறார். அதையே நான் செய்கிறேன். அந்த வேலையே பிதா என்னை அனுப்பினார் என்பதற்குச் சாட்சி கொடுக்கிறது.
৩৬কিন্তু তৎপ্রমাণাদপি মম গুরুতরং প্রমাণং ৱিদ্যতে পিতা মাং প্রেষ্য যদ্যৎ কর্ম্ম সমাপযিতুং শক্ত্তিমদদাৎ মযা কৃতং তত্তৎ কর্ম্ম মদর্থে প্রমাণং দদাতি|
37 என்னை அனுப்பிய பிதா தாமே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தார். நீங்கள் ஒருபோதும் அவருடைய குரலைக் கேட்டதுமில்லை, அவருடைய உருவத்தைக் கண்டதும் இல்லை,
৩৭যঃ পিতা মাং প্রেরিতৱান্ মোপি মদর্থে প্রমাণং দদাতি| তস্য ৱাক্যং যুষ্মাভিঃ কদাপি ন শ্রুতং তস্য রূপঞ্চ ন দৃষ্টং
38 அவருடைய வார்த்தை உங்களில் தங்கியிருப்பதும் இல்லை. ஏனெனில் நீங்கள் அவர் அனுப்பியவரை விசுவாசியாமல் இருக்கிறீர்கள்.
৩৮তস্য ৱাক্যঞ্চ যুষ্মাকম্ অন্তঃ কদাপি স্থানং নাপ্নোতি যতঃ স যং প্রেষিতৱান্ যূযং তস্মিন্ ন ৱিশ্ৱসিথ|
39 நீங்கள் வேதவசனங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்கள். ஏனெனில் அவற்றின் மூலமாய் நித்திய ஜீவனை உரிமையாக்கிக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறீர்கள். இந்த வேதவசனங்களே என்னைக்குறித்து சாட்சி கொடுக்கின்றன. (aiōnios g166)
৩৯ধর্ম্মপুস্তকানি যূযম্ আলোচযধ্ৱং তৈ র্ৱাক্যৈরনন্তাযুঃ প্রাপ্স্যাম ইতি যূযং বুধ্যধ্ৱে তদ্ধর্ম্মপুস্তকানি মদর্থে প্রমাণং দদতি| (aiōnios g166)
40 ஆனால் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி என்னிடம் வருவதற்கு உங்களுக்கு விருப்பமில்லை.
৪০তথাপি যূযং পরমাযুঃপ্রাপ্তযে মম সংনিধিম্ ন জিগমিষথ|
41 “மனிதரிடமிருந்து வரும் புகழ்ச்சியை நான் ஏற்றுக்கொள்கிறதில்லை.
৪১অহং মানুষেভ্যঃ সৎকারং ন গৃহ্লামি|
42 ஆனால் உங்களை எனக்குத் தெரியும். உங்கள் இருதயத்தில் இறைவனுக்கு அன்பு இல்லை என்பதை நான் அறிவேன்.
৪২অহং যুষ্মান্ জানামি; যুষ্মাকমন্তর ঈশ্ৱরপ্রেম নাস্তি|
43 நான் என் பிதாவின் பெயரில் வந்திருக்கிறேன். நீங்களோ என்னை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறீர்கள்; இன்னொருவன் தன் சொந்தப் பெயரில் வந்தால், நீங்கள் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
৪৩অহং নিজপিতু র্নাম্নাগতোস্মি তথাপি মাং ন গৃহ্লীথ কিন্তু কশ্চিদ্ যদি স্ৱনাম্না সমাগমিষ্যতি তর্হি তং গ্রহীষ্যথ|
44 நீங்களோ ஒருவரிடமிருந்து இன்னொருவர் புகழ்ச்சியை பெற்றுக்கொள்கிறீர்கள். ஆனால் ஒரே இறைவனாயிருக்கும் அவரிடமிருந்து வரும் புகழைத் தேட முயற்சியாமல் இருக்கிறீர்கள். இப்படியிருக்க நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
৪৪যূযম্ ঈশ্ৱরাৎ সৎকারং ন চিষ্টৎৱা কেৱলং পরস্পরং সৎকারম্ চেদ্ আদধ্ৱ্ৱে তর্হি কথং ৱিশ্ৱসিতুং শক্নুথ?
45 “பிதாவுக்கு முன் நான் உங்களைக் குற்றம் சாட்டுவேன் என்று நினைக்கவேண்டாம். நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் அந்த மோசேயே உங்களைக் குற்றம் சாட்டுவான்.
৪৫পুতুঃ সমীপেঽহং যুষ্মান্ অপৱদিষ্যামীতি মা চিন্তযত যস্মিন্, যস্মিন্ যুষ্মাকং ৱিশ্ৱসঃ সএৱ মূসা যুষ্মান্ অপৱদতি|
46 நீங்கள் மோசேயை விசுவாசித்தால், என்னையும் விசுவாசிப்பீர்கள். ஏனெனில் அவன் என்னைக் குறித்தே எழுதியிருக்கிறான்.
৪৬যদি যূযং তস্মিন্ ৱ্যশ্ৱসিষ্যত তর্হি ময্যপি ৱ্যশ্ৱসিষ্যত, যৎ স মযি লিখিতৱান্|
47 மோசே எழுதி வைத்திருப்பதையே நீங்கள் விசுவாசிக்கவில்லை. அப்படியிருக்க நான் சொல்வதை நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?” என்றார்.
৪৭ততো যদি তেন লিখিতৱানি ন প্রতিথ তর্হি মম ৱাক্যানি কথং প্রত্যেষ্যথ?

< யோவான் 5 >